Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    22
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    19163
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    38785
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/03/21 in all areas

  1. கேள்வி : ஐ நா வினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய உங்கள் பார்வை என்ன? போர்க்குற்றம் தொடர்பாகக் கடுமையான வாதப் பிரதிவாதங்களை அது ஏற்படுத்தியிருக்கிறதே? கே பி : நாம் ஒரு புதிய தசாப்த்தத்தினுள் வந்திருக்கிறோம். பழயவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் இனிப் பயனில்லை. அறிக்கையின்படி இரு பக்கத்தினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்த அறிக்கை மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. இந்த அறிக்கையே மிகவும் குழப்பகரமானது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நல்லிணக்க முயற்சிகளை முற்றாக தடம்புரள வைக்கக் கூடியது. எம்மைப் பொறுத்தவரை இந்த அறிக்கையினால் எவருக்குமே நண்மையேதும் கிடைக்கப்போவதில்லை. இது வெறுமனே தகவல் அறியும் முயற்சி என்றுதான் பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் வன்னிக்குச் சென்று இந்த அறிக்கை மூலம் யாராவது ஒரு குடும்பமாவது நண்மை அடைந்ததா என்று கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உண்மை. இவ்வறிக்கையினால் எவருக்குமே நண்மை கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் உட்பட முழு நாடுமே இந்த ஐ நா அறிக்கையினை முழுமனதோடு எதிர்க்கிறார்கள். நீங்கள் கள யதார்த்தத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும். பழையவற்றை நாம் கிளறுவதால் இன்னும் அழிவுகளே மிஞ்சும். போர் என்று வரும்போது யார் முதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதே முக்கியமானது. போரில் உண்மையும் கொல்லப்பட்டுவிடும். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் செய்ய முடியாது. போர் என்றால் மக்கள் இறப்பது இயல்பானது. போரில் நல்லபோர், கெட்ட போர் என்று வேறுபாடில்லை, போர் என்றால் போர், அவ்வளவுதான். இதில் ஒருவரையொருவர் குறைகூறுவதில் அர்த்தமில்லை. இரு தரப்பினரும் தமது எதிரியை அழிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். ஆகவே ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இப்படியே ஒவ்வொரு யுத்தத்திற்கும் ஐ நா அறிக்கை விட்டு நடவடிக்கை எடுப்பதென்றால், இது எப்போது முடியப்போகின்றது? என்னைப்பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது, மக்கள் இரண்டுவருடங்களைக் கடந்து வந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இந்த அறிக்கைகளில் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒருவேளை, தாம் அறிக்கையில் செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்களை உண்மையாகவே செய்தார்கள் என்றால், பின்னர் பார்க்கலாம். இந்தப்போரில், அரசாங்கம் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டது, புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், தோற்றுப்போன புலிகளின் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். நான் நேரடியாக சிங்கள மக்களுக்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றாலும் கூட புலிகளுக்கான ஆயுத முகவராகத் தொழிற்பட்டதனால், நானும் முன்னர் இயக்கத்தில் இருந்தவன் தான். ஆகவே, எமது நலன்பற்றி இந்த அறிக்கை ஏதாவது கூறுகிறதா? இல்லையே? மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால்ப் போதும். அவர்களைப்பொறுத்தவரை போர்க்குற்றம் என்பதோ , ஐ நா அறிக்கை என்பதோ தேவையற்றது. அவர்கள் இவ்வறிக்கையிலிருந்து நண்மை எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. வெறும் தகவல் அறியும் பணிக்காக வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? இந்த அறிக்கை, போரில் இப்படியான குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறதே, அதுபற்றி உங்களின் கருத்தென்ன என்று இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான், இதைத்தவிர இந்த அறிக்கைபற்றிப் பேச ஒன்றுமில்லை. கேள்வி : ஆகவே உங்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இன்று தேவையானது கல்வி, அபிவிருத்தி, மருத்துவ வசதிகள் என்பன மட்டும் தான் என்று தெரிகிறது, அப்படித்தானே? கே பி : நிச்சயமாக. போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் இன்னும் அல்லற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முன்னர் பல கசப்பான அனுபவங்கள் எமக்குக் கிடைத்திருக்கலாம். பல பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், பழைய விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைப் போன்றே, இனிமையான அனுபவங்களும் எமக்குக் கிடைக்கும். நாம் இந்த அனுபவங்களையெல்லாம் பாவித்து ஒற்றுமையாக ஒரு தீர்வினைக் காண சேர்ந்து இயங்கவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கேட்பது உணவும், உடையும், இருக்க வீடு, வேலைவாய்ப்பும் மட்டுமே. அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் வழங்க முடியும்.
  2. இதை முந்திரிக் கொத்து என்று தமிழகத்தில் சொல்கிறார்கள். பொரிக்கும் போது மூன்று மூன்றாக (கொத்தாக ) போடுவதால் . தாயகத்தின் பயற்றம் பணியாரம் போல் ஆனால் நாம் எள்ளு சேர்ப்பதில்லை . பயற்றம் மாவாக சேர்ப்போம். அதிகம் எல்லோராலும் விரும்பும் பலகார வகைகளில் இதுவும் ஒன்று .
  3. "உலக வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால், கெரில்லா பாணியிலான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் சேகுவேராதான் என்பது உங்களுக்குப் புரியும். உலகமெங்கும் இந்த முறையிலான போராட்டம் பரப்பப்பட்டாலும்கூட, கியூபாவில் மட்டுமே இது சாத்தியமாகியது, கியூபாவில் மட்டுமே இது வெற்றியளித்தது. ஆனால், பல நாடுகளில் கெரில்லாப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தம்மை அழித்துக்கொண்டதுதான் மிச்சம், இலங்கையிலும் இதுதான் நடந்தது. பனிப்போர் இறுதிக்கட்டத்தினை அடைந்த காலத்திலேயே இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதிலும், இந்த ஆயுதபோராட்டம் இறுதியான காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போரினை முடித்துக்கொண்டு உலகம் ஒன்றாக இயங்க ஆரம்பித்தவேளையிலேயே நாம் போராட்டத்தினை ஆரம்பித்தோம். இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து பனிப்போர் முடிவுற்ற காலப்பகுதிவரை உலகம் முதலாளித்துவத்தையும், கம்மியூனிசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிந்து நின்றது. இக்காலத்தில்த்தான் புதிய நாடுகள் பல பிறந்தன. நாடுகள் பிரிக்கப்படுவதென்பது பனிப்போர் காலத்து நடைமுறையாகவிருந்தது. ஆனால், பனிப்போரின் பின்னரான புதிய உலக ஒழுங்கு முற்றிலுமாக வேறுபட்டது. போராட்டம் தோற்றதற்கு இதுவே முக்கிய காரணம்". "நீங்கள் எமது பிரச்சினையினைப் பார்த்தால், இந்தியா என்பது மிக முக்கிய நாடாக, எமது பெரியண்ணராக இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இந்தியாவின் ஆதரவு இல்லாமல் நாம் எதனையும் அடைந்துவிட முடியாது என்பது தெளிவு. இப்பிராந்தியத்தில் இந்தியாவே மிகவும் பலமான நாடு. ஆகவே இந்தியாவைப் பகைத்துக்கொண்டு புலிகள் போராடியது இன்னொரு தவறு. இதுவும் அவர்கள் தோற்றதற்கு இன்னொரு காரணம். போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் என்கிற வகையில், அவர்கள் தாயகத்தில் இருந்த மக்களின் ஆதரவினை இழந்துவிட்டார்கள். 35 வருடகால நீண்ட போராட்டம் மக்களுக்கு சலிப்பினையும், அழிவினையும் மட்டுமே பெற்றுக்கொடுத்தது. புலிகளின் போராட்டத்திற்கு மக்களே பாரிய விலையினைச் செலுத்தினார்கள். அம்மக்கள் புலிகளியக்கத்திலிருந்து தம்மை அப்புறப்படுத்தியமையும் போராட்டம் தோற்றதற்கு இன்னொரு காரணம். நான் மீண்டும் கூறுவது என்னவென்றால், புதிய உலக ஒழுங்கு பிரிவினைவாதக் கிளர்ச்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. 2006 இல் தமது போராட்டத்தினை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்று பிரபாகரன் வேண்டிக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், ஒரு நாடு கூட அவரின் வேண்டுகோளினை சட்டைசெய்து உதவிக்கு வரவில்லை. இதனாலேயே, சர்வதேசம் பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்னும் எனது வாதத்தினை முன்வைக்கிறேன். 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், சர்வதேசம் சமரசத்திற்கான வாய்ப்பொன்றினை எமக்குக் கொடுத்தது. பாலஸ்த்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்குக் கூட இவ்வகையான சந்தர்ப்பத்தினை சர்வதேசம் வழங்கியிருக்கவில்லை. ஆக, எந்த பிரிவினைவாத இயக்கத்திற்கும் கொடுக்காத சந்தர்ப்பத்தினை, சூழ்நிலையினை புலிகளுக்குக் கொடுத்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை சர்வதேசம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகள் இலங்கையில் சமாதானம் ஏற்படக் கடுமையாகப் பாடுபட்டன என்பது நீங்கள் அறியாதது அல்ல. ஆனால், புலிகள் இயக்கம் எந்த விட்டுக்கொடுப்பிற்கும், நெகிழ்ச்சித்தன்மைக்கும் தயாராக இல்லாமல், பிடிவாதமாக இருந்துவிட்டது. அவர்கள் கண்மூடித்தனமாக தமது பிரிவினைவாதப் போராட்டத்திலேயே ஆர்வம் கொண்டிருந்தனர். இறுதி யுத்தம் ஆரம்பித்த 2008 இல் , அமெரிக்க ஜனாதிபதி ஐநாவிலோ அல்லது ஐரோப்பிய யூனியனிலோ முன்வைத்த அறிக்கையில், புலிகளுக்கு நிதி செல்லும் அனைத்து வழிகளையும் முற்றாகத் தடுப்போம் என்று கூறியிருந்தார். சர்வதேசத்தினை மீறி எம்மால் தனியே நின்று வெல்ல முடியாதென்பது அப்போதாவது புரிந்திருக்க வேண்டும்".
  4. மாமியார் & மருமகள் இடையே மாப்பிள்ளை ........! 😂
  5. விரிவாக பதில் எழுத நேரம் இல்லை. எல்லா indices உம் மிகவும் உயர்ந்துள்ளது. அந்த trade இல் எனக்கு இழப்பும் இருக்கிறது. முக்கியமான கரிசனை பணவீக்கம். Dollar index உம் உயர்ந்துள்ளது. அனால் US treasury yield குறைந்துள்ளது. ஆனல் அனைத்து மத்திய வங்கிகளின் பார்வையும், பணவீக்கம் சுட்டி அதிகரிப்பு தற்கலிகமானது. ஆயினும், முக்கியமான பணவீக்க காப்பான தங்கம் குறைத்துள்ளது, resistance ஐ test செய்யும் நிலைக்கு அண்மையாக. போனக கிழமை ,இந்த கிழமை முக்கியம். சென்ற வாரம் - ECB policy அறிவிப்பு. இந்த கிழமை US Federal interest rate and gradual tapering of stimulus நாளை Bank of England இன் வட்டி வீதம் மற்றும் பாலிசி அறிவுப்பு. இவை இப்போதைய நிலவரம். அனால், மத்திய வங்கிகள் எப்போதோ உண்மையான பணவீக்க சுட்டியின் மிகவும் முக்கிய தரவான வீட்டின் விலை மற்றும் வாடை என்பவற்றை நீக்கி விட்டது. எனவே இப்போது இருக்கும் பணவீக்கம், அது வரப்போவது என்பது, வந்தால் கூட, எனக்கு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை, இதுவே, தேவையான நேரம் yield, inflation ஐ கையில் எடுக்கவும், yield விடவும் வசதியாக இருக்கிறது. ஆனால், தங்கம் டாலர் என்பவை, எதிர்மாறான விலை உறவு இருப்பதால் தான் தங்கத்தின் வில்ல;ஐ குறைகிறது இப்பொது. Ethereum விலை கூடியது Shiba Inu ஆல். ஏனெனில், Shiba Inu கைமாறும் போது ethereum எரிக்கப்படும் (விளக்கதுக்கு நேரம் இல்லை) . அப்படி எரிக்கப்படுவது, தற்கலிகமாக mining விட கூடி, சாதாரண supply & demand ஆல் ethereum கூடி இருக்கிறது.
  6. தீபாவளிக்கு அதிரசம் செய்யலாம் வாங்க . தாயகத்தில் சீனிப்பாணியாரம் என்று சொல்வார்கள்.
  7. 35 நாட்களில் கட்டிய தூய்மையான சுத்தமான மண்வீடு......கட்டுமானம் அருமையாய் இருக்கு.....! 👏 👍
  8. எள்ளுருண்டை செய்முறை நல்ல விளக்கமாய் இருக்கு.....! 👍 நன்றி சிவரதன்.....!
  9. நுணுக்கமான காய் வேலைகள்.....! 🌹

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.