Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38778
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88006
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19157
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/10/21 in all areas

  1. மூலம் : சனல் 4 பிரத்தியேக செவ்வி : தமிழ்ப் புலிகளின் புதிய தலைவருடனான செவ்வி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு , இறுதி யுத்தத்தின்மூலம் இனப்போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இரு மாதங்களுக்குப் பின்னர் புலிகளியக்கத்தின் புதிய தலைவர் கே பி எனப்படும் குமரன் பத்க்மனாதன் இதுவரை காலமும் இல்லாதவகையில் வழங்கிய நேருக்கு நேர் செவ்வியின் விபரங்களை சனல் 4 வெளியிட்டிருக்கிறது இன்டர் போலின் அறிக்கைப்படி பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காகவும், வாழ்க்கைக்கும், உடல்நலத்திற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கும் என்று 54 வயதுடைய கே பி மீது தேடப்படும் நபர் எனும் பிடிவிராந்தினைப் பிறப்பித்திருக்கிறது. சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றும், செல்வராசா பத்மனதான் என்றும், குமரன் பத்மனாதன் என்றும் அல்லது பொதுவாக கே பி என்றும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுமார் 25 வருடங்களாக, உலகைச் சுற்றி வலம்வந்த இந்த கே பி 23 வேறுபட்ட கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பதுடன் , ஆயுதக் கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். தமிழ் போராளிக் குழுவிற்கு தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை சர்வதேசச் சந்தையிலிருந்து கொள்வனவு செய்து அனுப்பிவைத்தவர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் 2009 ஜூலை மாதத்திலிருந்து புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர். "புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற சிங்களப் பேரினவாதத்தின் பொய்ப்பரப்புரைகளையும் மீறி எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவது எமது சரித்திரக் கடமையாகும், எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை அயராது போராடுவோம்" என்று அறிக்கையினை வெளியிட்டவர். "உலகின் அனைத்துப் போராட்டங்களையும் போலவே, நாமும் எமது போராட்டத்தின் வழியினையும், திட்டங்களையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எமது விடுதலையினை வென்றெடுக்கத் தொடர்ந்து போராடுவோம்" என்றும் அவர் கூறுகிறார். சனல் 4 உடனான பிரத்தியேக செவ்வி வெளிவந்து ஓரிரு வாரங்களுக்குள் அவர் மலேசியாவில் ஆவணி 5 அன்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின்கீழ் கைதாகிறார். பல நாடுகளுக்கூடாக இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்ட சனல் 4 இன் பத்திரிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும், சர்வதேச பொலீஸ் சேவையினாலும் தொடர்ச்சியாகத் தேடப்பட்டு வந்த இந்த ரகசிய மனிதரை இலங்கைக்கு வெளியே ஒரு தென்னாசிய நாட்டில் நேருக்கு நேராக செவ்வி காணும் சந்தர்ப்பத்தினைப் பெற்றனர். இலங்கையின் பெரும்பான்மையினமான சிங்களவரின் கைகளில் அடக்குமுறைகளுக்கு உட்பட்ட சிறுபான்மைத் தமிழினம் இவ்வடக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு ஈழம் எனும் தாயகக் கனவினை நோக்கிப் போராடி வந்தனர். கடந்த மே மாதம் 2009 இல் புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டனர். இறுதி யுத்த கணங்களில் புலிகள் இயக்கத்தின் ஸ்த்தாபகரும், தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரரன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது வழிகாட்டலின் கீழ் பல தமிழ் அரசியல்வாதிகளும், மிதவாதத் தமிழ்த் தலைவர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறியப்படுகிறது. ஆகவே, பிரபாகரனினால் தனக்குப் பின்னர் இயக்கத்திற்குத் தலைமை தாங்க கே பி நியமிக்கப்படுகிறார். எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் - கே பி இறுதின்யுத்தத்தின் இறுதி நாட்களில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கின்றனர். செய்தியாளர் அலெக்ஸ் தொம்சனுக்கு கே பி தொலைபேசியூடாக அந்நாட்களில் வழங்கிய செவ்வியில், " நாம் இந்தப் போரை உடனடியாக நிறுத்த ஒத்துக்கொள்கிறோம், ஏனென்றால் எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர்" என்று கூறுகிறார். "நாம் எமது மக்களைக் கட்டாயப்படுத்தி எம்முடன் அழைத்துச் செல்லவில்லை. எம்முடன் சேர்ந்து பயணிக்கும் சிவிலியன்கள் அனைவருமே ஒன்றில் எமது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள். நாம் எவரையும் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கவில்லை. எம்மக்கள் இலங்கை ராணுவம் தமக்குப் பாதுகாப்பினைத் தரும் என்று சிறிதும் நம்பவில்லை. ஆகவேதான் அவர்கள் எம்முடன் இருக்க விரும்புகின்றனர்". "நாம் ஒருபோதுமே எம்மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தவில்லை. புலிகளுக்கும் ராணூவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் சிலவேளை சிலர் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை நாமே கொல்லவேண்டிய தேவை என்ன?" என்று அவர் மேலும் கூறுகிறார். செவ்வி தொடரும்.........
  2. கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் கபில ஹெந்தவிதாரன ஆகியோருடன் சேர்ந்து நாடகமாடி, இறுதியுத்தத்தில் புலிகளுக்கு ஆயுதப்பற்றாக்குறையினை செயற்கையாக ஏற்படுத்தி முற்றாக அழிக்கப்படுவதற்கும், போராட்டம் தோற்கடிக்கப்படுவதற்கும் காரணமாகவிருந்த கே பி, தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஆரம்பமுதலே தலைவரை விமர்சித்தும், அவரை திறமையற்ற மூடன் என்று பொருள்படவும் பேசி, போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே தேவையற்ற வேலை என்று தர்கித்திருந்தது நினைவிலிருக்கலாம். ஆனால், இதே துரோகி, தனது திட்டத்தின்படி நாடகமாடிக் கைதுசெய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் சனல் 4 இற்குக் கொடுத்த பேட்டியினை இங்கே இணைக்கிறேன். இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.
  3. அம்புட்டும்... எதிர்ப்பு சக்தி! 🤣 😂
  4. அருளுவான் ஆனைமுகத்தையன்
  5. Wikipedia எனக்கு எல்லாம் தெரியும்Facebook எனக்கு எல்லாரையும் தெரியும்Google என்கிட்டதான் எல்லாமே இருக்குInternet நான் இல்லைன்னா நீங்க மூணுபேரும் அம்பேல்தான்Electricity என்னடா அங்க சத்தம்?
  6. கில்லாடியப்பா நீ .........! 😂
  7. என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு .......! 💞
  8. கேள்வி : நீங்கள் 2002 இற்குப் பின் புலிகளிடமிருந்து விலகியிருந்த காலத்தில் அவர்கள் நக்ஸலைட் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கலாம் என்று கூறுகிறீர்களா? கே : அதன் பிறகு எனக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பு இருக்கவில்லை. 2009 இல் தாங்களாகவே வந்து எனது உதவியினைக் கோரும்வரை நான் விலகியே இருந்தேன். ஆனால் நான் விலகியிருந்த 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பெருமளவு தவறுகளைப் புலிகள் புரிந்திருந்தார்கள். அக்காலத்தில்த்தான் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஆயுத ரீதியிலான தொடர்புகள் ஏற்பட்டதாக எனது நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். புலிகளின் போராட்டம் தோற்றுப்போனதற்கு மாவோயிஸ்ட்டுக்களின் தொடர்பும் காரணம் என்றால் அது மிகையில்லை. கேள்வி : நீங்கள் கூறுவது உண்மைதானா? ஏனென்றால், மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய ராணூவத்தினரின் மீது நடத்தும் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கான பயிற்சியையும், பொருட்களையும் புலிகளே வழங்கினார்கள் என்று இந்திய புலநாய்வுத்துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ? கே பி : நானும் அதனைக் கேள்விப்பட்டேன். இது உண்மையாகக் கூட இருக்கலாம், உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய அதிகாரிகளிடம் இருந்தும், புலிகள் இயக்கத்தில் இன்னமும் இருந்த எனது முன்னாள் நண்பர்கள் மூலமும் இதனை நான் அறிந்துகொண்டேன். கேள்வி : வன்முறையினைப் பாவித்துப் போராடிய பயங்கரவாதிகளிடமிருந்து விலகி இன்று உங்களுக்கென்று ஒரு ஜனநாயகப் பாதையினைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் உதவப்போவதாகக் கூறிவருகிறீர்கள். வன்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகி, சமாதானத்துடன், சமரசமாக வாழ முயற்சிப்பதாகக் கூறுகிறீர்கள். எந்த வகையில் நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கு உதவுவதாக எண்ணியிருக்கிறீர்கள்? கே பி : மே மாதம் 2009 ற்குப் பின்னர் நான் வீட்டுக் காவலில் இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் தை 2009 இலிருந்தே போரினைத் தடுத்து நிறுத்தி பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முனைந்தேன். என்னால் முடிந்தவரை இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். ஆனால் துரதிஷ்ட்டவசமாக புலிகள் பிடிவாதமாக மறுத்து மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமானார்கள். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் எமது மக்கள் படும் அவலங்களைக் கேட்டிருக்கிறேன். அதனாலேயே, அவர்களுக்கு சமாதானமான முறையில் வாழ்க்கையினை மீளமைக்க நான் விரும்புகிறேன். புலிப் பயங்கரவாதிகளில் ஒருவனாக இருந்து, அம்மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அவலங்களுக்கும் நானும் ஒரு காரணம் எனும் வேதனையும், கழிவிரக்கமும் எனக்கு இன்றுவரை இருக்கிறது. ஆனால், போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் புதிய சகாப்த்தம் ஒன்றிற்குள் வந்திருக்கிறோம். இன்னொரு 100 வருடங்களுக்கு நாம் "ஈழம்" என்கிற கனவுபற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம், பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை ஒரு சிலர் இதுபற்றிப் பேசுவதில்லையா? அதுபோலத்தான் புலிகளின் "ஈழம்" எனும் வெற்றுக் கனவும். அவர்களோடு சேர்த்து அக்கனவும் அழிக்கப்பட்டபின்னரும் இன்னமும் சிலர் அதுபற்றிப் பேசிவருகிறார்கள். புலம்பெயர் நாடுகளின் தெருக்களில் காப்பியை அருந்திக்கொண்டு போராட்டம் , வன்முறை பற்றிப் பேசும் பிரிவினைவாதிகள் இன்னமும் இருக்கிறார்கள். அழிக்கப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கும் பேச்சுக்களை சில புலம்பெயர் தமிழர்கள் பேசிவருகிறார்கள். இந்த சிறிய பிரிவினைவாதக் குழு ஆதரவாளர்களுக்கு வேறு எதுவுமே செய்யமுடியாது, இப்படிப் பேசிப்பேசியே தமது காலத்தைக் கடத்திவிடுவார்கள். இவர்களுக்கு போராட்டமும், அவலமும் பணம்பார்க்கு வழி, ஆகவே அவர்கள் தொடர்ந்து இதுபற்றிப் பேசுவார்கள். நான் வைக்கோவிடமும் நெடுமாறனிடமும் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப்பேசுவதை நிறுத்துமாறு பலமுறை கேட்டுவிட்டேன், அவர்களோ கேட்பதாக இல்லை. அழிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசினால்த்தானே அவர்களுக்கு புலம்பெயர் பிரிவினைவாதிகளின் மாதச் சம்பளம் கிடைக்கும்? இதுதான் அவர்களின் பிரச்சினை. கேள்வி : தமிழ் மக்களின் அவலங்கள் பணம் பார்க்கும் ஒரு தொழில் என்று கூறுகிறீர்களா? கே பி : ஆம். அதனைபலமுறை நான் பார்த்திருக்கிறேன். 2005 அல்லது 2006 ஆம் ஆண்டுகளில் இயக்கத்திற்கு பணம் சேர்த்தவர்களின் ஆண்டு வருமானம் 300,000 டாலர்கள்வரை இருந்ததாகக் கூறப்பட்டது. கேள்வி : இதற்கான பணம் எங்கிருந்து வந்தது ? கே பி : வேறு எங்கிருந்து? எல்லாம் புலம்பெயர் தமிழர் கொடுக்கும் பணத்தில் இருந்துதான். ஆகவே, நான் இதனை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர்கள் வருமானத்திற்கு எங்கே போவார்கள்? நேற்றுக்கூட லண்டனில் ஒரு வீட்டிற்குச் சென்ற புலம்பெயர் பயங்கரவாதிகள் தாம் வன்னி தலைமைக் காரியாலயத்தில் இருந்து வந்ததாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புலிகளின் வன்னித் தலைமைக் காரியாலயம் இரண்டு வருடத்திற்கு முன்னரே அழித்து இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இன்றும் வன்னித் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருவதாகக் கூறி புலம்பெயர் தமிழரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு இது சிறிது சிறிதாகப் புரிந்துவிட்டது. அதனால் இவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கேள்வி : நீங்கள் உங்கள் கடந்தகால செயற்பாடுகளுக்குப் பிராயச்சித்தமாக சமாதான வழியில் சமரசம் செய்ய நினைக்கிறீர்கள். உங்களின் எதிர்காலக் கனவு என்ன? கே பி : நான் கடந்த 35 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவன். கடந்த இரு வருடங்களாக வீட்டுக் காவலில் இருப்பவன். சிலவேளை இன்னும் 10 வருடங்கள் வரை வீட்டுக் காவலில் நான் இருக்கலாம். எனது வாழ்க்கையில் இன்னும் அதிக வருடங்கள் வாழ எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. எனது மீதி வாழ்க்கையினையுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களுடன் கழிப்பதையே நான் விரும்புகிறேன். இவர்களுக்குப் பெற்றோரோ, அன்போ, கல்வி வசதியோ, அல்லது எதிர்காலமோ எதுவுமே இல்லை. ஆகவேதான் இச்சிறார்களுடன் எனது இறுதிவாழ்க்கையினைக் கழிக்க விரும்புகிறேன். வன்னியில் இருக்கும் இச்சிறுவர்களோடு எனது எதிர்காலத்தை கழிக்க அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சினைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அத்துடன், போரில் தமது பிள்ளைகளை இழந்து, ஆதரிப்பார் எவருமின்றி இருக்கும் வயதானோரையும் பராமரிக்க விரும்புகிறேன். அதேபோல, அங்கவீனமுற்றிருக்கும் பெண்பிள்ளைகளையும் பராமரிக்கும் நோக்கமும் இருக்கிறது.அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியினைப் பார்ப்பதே எனது கனவாகும்.
  9. படித்தது.. ரசித்தது பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வையில் இருக்கிறதடா உலகின் அத்தனை பிரிவினைவாதமும்... அவள் பாதுகாப்பாய் வீடு திரும்பும் வரை உயிரற்ற உடலாய் காத்திருந்த நொடிகளில், செத்து பிழைக்கும் நான்.. தினம் தினம் அவளை பிரசவித்தேன்... இரு முறை தாய் வாசம் தெரியவேண்டுமெனில், பெண் பிள்ளை பெற்றெடுங்கள்... மகள்களின் நேசிப்பெனும் சிறையில் விடுதலை இல்லை ஆயுள் தண்டனை மட்டுமே... மகளில்லாத தந்தையர்களே, சகோதரியில்லாத ஆண் மகனே, எங்கேனும் தனியாய் பெண்ணைக் கண்டால் சுதந்திரமாய் செல்ல விடுங்கள்.. தந்தைகள் காத்திருக்கிறோம் அவள் வருகைக்காக...
  10. விரிவாக பதில் எழுத நேரம் இல்லை. எல்லா indices உம் மிகவும் உயர்ந்துள்ளது. அந்த trade இல் எனக்கு இழப்பும் இருக்கிறது. முக்கியமான கரிசனை பணவீக்கம். Dollar index உம் உயர்ந்துள்ளது. அனால் US treasury yield குறைந்துள்ளது. ஆனல் அனைத்து மத்திய வங்கிகளின் பார்வையும், பணவீக்கம் சுட்டி அதிகரிப்பு தற்கலிகமானது. ஆயினும், முக்கியமான பணவீக்க காப்பான தங்கம் குறைத்துள்ளது, resistance ஐ test செய்யும் நிலைக்கு அண்மையாக. போனக கிழமை ,இந்த கிழமை முக்கியம். சென்ற வாரம் - ECB policy அறிவிப்பு. இந்த கிழமை US Federal interest rate and gradual tapering of stimulus நாளை Bank of England இன் வட்டி வீதம் மற்றும் பாலிசி அறிவுப்பு. இவை இப்போதைய நிலவரம். அனால், மத்திய வங்கிகள் எப்போதோ உண்மையான பணவீக்க சுட்டியின் மிகவும் முக்கிய தரவான வீட்டின் விலை மற்றும் வாடை என்பவற்றை நீக்கி விட்டது. எனவே இப்போது இருக்கும் பணவீக்கம், அது வரப்போவது என்பது, வந்தால் கூட, எனக்கு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை, இதுவே, தேவையான நேரம் yield, inflation ஐ கையில் எடுக்கவும், yield விடவும் வசதியாக இருக்கிறது. ஆனால், தங்கம் டாலர் என்பவை, எதிர்மாறான விலை உறவு இருப்பதால் தான் தங்கத்தின் வில்ல;ஐ குறைகிறது இப்பொது. Ethereum விலை கூடியது Shiba Inu ஆல். ஏனெனில், Shiba Inu கைமாறும் போது ethereum எரிக்கப்படும் (விளக்கதுக்கு நேரம் இல்லை) . அப்படி எரிக்கப்படுவது, தற்கலிகமாக mining விட கூடி, சாதாரண supply & demand ஆல் ethereum கூடி இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.