Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    87997
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    20023
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/06/22 in all areas

  1. இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍
  2. பார்வை ஒன்றே போதுமே......... (12). அன்று வக்கீல் தவராசாவின் அலுவலகத்துக்கு கையில் பைலுடன் நிர்மலா வருகிறாள். அங்கு சித்ரா போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். பேசி முடித்ததும் போனை மேசையில் வைத்து விட்டு நிர்மலாவிடம் நலம் விசாரித்து விட்டு என்ன விடயம் நிர்மலா, ஒரு போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பன் என்கிறாள். நிர்மலாவும் பரவாயில்லை சித்ரா, இந்த ஒரு கேசில் உங்களின் ஆலோசனை தேவை என்று சொல்லி பைலை எடுத்து நீட்ட அதனுள் இருந்த பேப்பர்கள் சில கீழே விழுகின்றன. அடடா என்று நிர்மலாவுடன் சித்ராவும் குனிந்து அவற்றைப் பொறுக்குகின்றாள். அப்பொழுது சித்ராவின் ப்ளவுசுக்குள் இருந்து சங்கிலி டாலருடன் நழுவி கீழே தொங்குகிறது. அதைக் கவனித்த நிர்மலாவுக்கு அது தனது தந்தையின் செயின் போல் தோன்ற என்ன சித்ரா உங்களின் செயினும் டாலரும் அழகாய் இருக்கிறது, ஆனால் ஆண்களுடையது போல் இருக்கிறது என்ன. ஆமாம் நிர்மலா இது என் அப்பா நான் பட்டம் பெற்றபோது பரிசளித்தவர். ஓ ....அப்படியா நல்லாயிருக்கு என்று சொல்கிறாள். அப்படியே தற்செயலாக மேசைமேல் இருந்த போனைப் பார்த்ததும் அதுவும் தனது தந்தையுடையது போல் இருக்கவும் அங்கு அவளால் நிக்க முடியவில்லை. நீங்கள் இவற்றைப் பாருங்கள் நான் மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கிளம்ப, சித்ராவும் பரவாயில்லை நிர்மலா நானே கொண்டுவந்து தருகிறேன் என்றதும் சரி என்று சொல்லி உடனே கிளம்பி அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து நேராக தமையனின் அறைக்கு சென்று நடந்ததை சொல்கிறாள். உடனே ரவிதாசும் வா போய் விசாரிப்பம் என்று வெளிக்கிட அவனை நிர்மலா தடுத்து அவள் மாலை இங்கு வருகிறாள் அப்பொழுது பக்குவமாய் விசாரிக்கலாம் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று தோன்றுகின்றது. அன்று மாலை சித்ரா பைலுடன் அங்கு வரும்போது நிர்மலாவோடு ரவிதாசும் வரவேற்பறையில் அங்கிருந்தான். இருவரும் கோப்பி குடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவிடம் நீங்களும் ஒரு கோப்பி குடிக்கலாமே என்று சொல்ல சித்ராவும் வேண்டாம் நன்றி என்கிறாள். அப்போது நிர்மலா தமையனிடம் அண்ணா சித்ராவின் செயினைப் பாரேன் வித்தியாசமாக அழகாக இருக்கிறது என்கிறாள். ரவிதாசும் எங்கே பாப்போம் என்று அவன் ஜாடையாய் கேட்டு அவள் மார்பை நோக்க, ம்....இருங்கள் கழட்டித் தருகிறேன் என்று சித்ராவும் செயினைக் கழட்டி அவனிடம் தருகிறாள்.அதை கையில் வாங்கி நன்றாகப் பார்த்த ரவிதாஸ் நானும் இதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதை அவளிடம் தந்து விட்டு உங்களின் போன் நம்பரைத் தர முடியுமா எனக் கேட்கிறான். அவளும் அதுக்கென்ன என்று சொல்லி தனது போனால் அவனது நம்பரைக் கேட்டு அதுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைக்கிறாள். அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கைபேசியை நன்றாக உற்றுப் பார்க்கின்றனர். பின்பு பொதுவாக அவன் அவளை விசாரிப்பதுபோல் விசாரித்து அவளது இருப்பிடத்தையும் அறிந்து கொள்கிறான். அதன்பின் சித்ரா கிளம்பி செல்கிறாள். அப்போது நிர்மலா என்ன அண்ணா ஒன்றும் விசாரிக்காமல் அவளை அனுப்பி விட்டாய் என்று சொல்ல அதற்கு ரவிதாசும் இந்தப் பெண்ணைப் பார்த்தால் பொய்யானவள் போல் தெரியவில்லை, ஒருவேளை நமது அப்பா இவைகளை இவளது தந்தைக்கு விற்றிருக்கலாம். இவளின் தந்தையை சந்தித்தால் அப்பாவின் விபரம் தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல நிர்மலாவும் ஓம்...அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்கிறாள். நாளைக்கு நானே நேரில் சென்று இவர்களை நோட்டம் விடப்போகிறேன் என்கிறான். அடுத்தநாள் ரவிதாஸ் மிகவும் சாதாரண உடுப்பு அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சித்ராவினது வீட்டருகே சென்று நிறுத்தி விட்டு வேலியால் எட்டி எட்டி இவர்களது வீட்டை நோட்டம் விடுகிறான். அங்கே பட்டியில் மாடுகள் நிக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் முற்றத்தில் செல்லமாக முட்டி முட்டி விளையாடுகின்றன. அங்காலே வீட்டு விறாந்தையில் ஒருவர் இருக்கிறார்.மறுபுறம் திரும்பி அவர் இருப்பதாலும் தாடி மீசையுடன் இருப்பதாலும் அவனால் அந்த ஆளை மட்டுக்கட்ட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அவருக்கு தேனீர் குடுத்து விட்டு அவர் அதை அருந்தும் அழகை ரசிப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு அருகில் நிக்கிறாள். அவன் தனக்குள் நினைக்கிறான் இவர்கள் சித்ராவின் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று. ரவிதாசுக்கு அந்தப் பெண்மணியின் வசீகரமான சாந்தமான முகம்தான் தெரிகிறது. இன்னும் அவரைத் தெரிய வில்லை. அதனால் அங்கும் இங்குமாக நடந்து வேலியால் எட்டி எட்டி அவர் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது பேப்பர், பால் எல்லாம் வீடுகளுக்குப் போட்டு விட்டு சையிக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து தனது வீட்டருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ரவிதாசைக் கண்டு மறித்து அண்ணே நீங்கள் யார் வேலியால எட்டி எட்டி பார்க்கிறீங்கள். இதற்குமுன் உங்களை நான் இங்கு பார்த்ததில்லையே என்று கேட்க ரவிதாசும் அவசரத்துக்கு என்ன சொல்வதென்று யோசித்து சட்டென்று தம்பி நான் மாடு வாங்க வந்தனான். முத்தத்தில் மாடுகளைக் கண்டதும் நின்று பார்க்கிறன். வீட்டுக்காரர் விப்பினமோ தெரியேல்ல என்று சொல்கிறான். ஓ....அப்படியா இது எங்களுடைய வீடுதான். ஆனால் நாங்கள் மாடுகள் விக்கிறதில்லை என்று சொல்லிவிட்டு சைக்கிள் ஹாண்டிலில் கை வைத்து திருப்ப முயல அவன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ரவிதாசும் உங்களின் கடிகாரம் அழகாய் இருக்கு, என்ன விலையிருக்கும் என்று இயல்பாகக் கேட்கிறான். தெரியவில்லை இது அப்பா எனக்கு பரிசாகத் தந்தது என்று சொல்லிவிட்டு, என்ன நீங்கள் மாடு வாங்க வந்ததாக சொல்லுறீங்கள். பின் கடிகாரம் பற்றி விசாரிக்கிறீங்கள், உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறான். முத்துவின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது........! பார்ப்போம் இனி ...................! ✍️
  3. வேட்டியை... உருவ கூடாது, என்று கல்லு வைத்திருக்கிறார். 🤣
  4. இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள். 2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள். “சரியான மூட்டைக் கடி” என்கிறேன். மகள் நம்பாமல் “எனக்கு ஒன்றும் கடிக்கவில்லையே. உங்களுக்குச் சும்மா நினைப்பு” என்றுவிட்டு படுக்க, நானும் வேறு வழியின்றித் தூங்கிவிட்டேன். அடுத்தநாள் பார்த்தால் கால்களில் முதுகில் எல்லாம் தடித்தபடி இருக்க, மூட்டைப் பூச்சிகள்தான் கடித்திருக்கு என்று முடிவெடுத்து மகளுக்குக் காட்ட, “எனது கட்டிலில் ஒன்றும் கடிக்கவில்லை. இன்று நீங்கள் நான் படுத்த கட்டிலில் படுங்கள். நான் உங்கள் கட்டிலில் படுக்கிறேன்” என்று கூற, கடி வாங்கினால்தான் தெரியும் என்று மனதில் நினைத்தாலும் சிலநேரம் மகளுக்கு இளரத்தம். கடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் ஓடியது. அந்தன்றும் சுற்றிப் பார்த்த களைப்புடன் வந்து கட்டில் மாறிப் படுக்கிறோம். காலையில் அலாம் அடிக்கும் மட்டும் நான் எழும்பவே இல்லை. “என்ன நல்ல நித்திரை போல” என்று மகள் கேட்க, நக்கலாகக் கேட்கிறாளோ என நினைத்து “ஓம் நல்ல நின்மதியான நித்திரை” என்றேன். இரவு முழுதும் “ஒரே மூட்டைக் கடி” என்று அவள் சொல்ல எனக்குள் மகிழ்ச்சியில் விளக்குகள் எரிகின்றன. காலையில் வரவேற்புப் பெண்ணிடம் சென்று முறையிட்டு வேறு அறை வேண்டும் என்று கேட்க, அடுத்த பத்தாவது நிமிடமே அதேபோன்ற வேறு அறை ஒன்றும் தந்துவிட்டார்கள். அதன்பின் மூட்டை கடிக்காவிட்டாலும் எங்கள் உடைகள், பயணப் பொதிகளுடன் மூட்டையும் வந்துவிடுமோ என்னும் பயம் எனக்கு இருந்துகொண்டே வந்ததில் லண்டன் திரும்பிய பிறகு எல்லா ஆடைகளையும் துவைத்துக் காயவைத்து சூட்கேசை வெயிலில் காயவைத்துப் பின்னர் உள்ளே எடுத்து வைத்தபின் தான் நின்மதி வந்தது. ஒரு மூன்று மாதம் போயிருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது முதுகில் மூட்டை கடிப்பது போல ஒரு உணர்வு. சிலநேரம் எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தபின் கடியே இல்லை. அடுத்த நாளும் அப்பிடித்தான். என்னடா கோதாரி காசு குடுத்து கம்போடியா போய் இதையும் கொண்டவந்து சேர்த்தாச்சோ என்னும் நினைப்பு எழ, சீச்சீ இருக்காது என்று மனம் சமாதானம் கொள்ள, உடன ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்பம் என்று விட்டால்……. ஒரு வாரம் எந்தவித அசுமாத்தமும் இல்லை. அடுத்த வாரம் மீண்டும் இன்னொரு இடத்தில் கடி. கடித்த இடம் கடுப்பது போல் இருந்து மீண்டும் காலையில் மறந்துபோக, எனக்கு அந்த மூட்டைப் பூச்சி தினமும் கடித்துக் கரைச்சல் தரவில்லைத் தானே. இருந்திட்டுப் போகட்டும் என்ற எண்ணம் வந்ததும் எனக்குள் ஒருவித நின்மதி பரவ ஆரம்பிக்க, எப்ப அது கடிக்கும் என்று நான் எதிர்பார்க்கும் அளவுக்கு எனக்கு அதைப் பிடித்துப்போய் விட்டது என்றால் நீங்களே நம்ப மாட்டீர்கள். இந்தப் பெரிய உடலில் வாரம் ஒருதடவை அது இரத்தம் குடிப்பதால் என்ன கெட்டுவிட்டது என்னும் அளவுக்கு என மனம் வந்துவிட்டது. ஒரு இரண்டு மூன்று மாதானக்கள் செல்ல “உங்களுக்கு ஏதும் கடிக்கிதோ” என்று மனிசனிட்டைக் கேட்க, “உன்னை மீறி என்னட்டை எது வரப்போகுது, அதோடை ஏன்ர ரத்தம் நல்ல சுத்தம்” என்ற நக்கல் வேறு. ஒரே ஒரு மூட்டை தான் ஒட்டிக்கொண்டு வந்திட்டிது. நல்லகாலம் என்ற ஒரு ஆறுதல். இரண்டு வந்திருந்தாலே பெருகியிருக்கும். ஒண்டே ஒண்டு எண்டதாலதான் தப்பிச்சன் என மனதைத் தேற்றிய படி இருக்க, அடுத்த வாரம் கால் பகுதியில் கடி. முதுகில் கடிக்காததால் இவர்தான் இரே இடம் அலுத்துப்போய் இடம்பெயர்ந்திருக்கிறார் என்று நம்பியபடி நானும் என்பாட்டில் இருக்க, ஒரு ஆண்டு கோவிட் குழப்பங்களும் பயமும், பயமுறுத்தும் செய்திகளுமாய் இருக்க, அதுவும் மனிசனின் கட்டிலுக்கு இடம்மாறிச்சிதோ என்னவோ நானும் மூட்டை இருக்கிறதையே மறந்துபோனன். இன்னும் வரும்
  5. இது ஒரு நல்ல கேள்வி. இதில் வியப்பொன்றும் இல்லை கு.சா.......! பொதுவா 1990 க்கு முன்பெல்லாம் இவை போன்ற பெயர்கள் ஈழத்தமிழர்களிடம் பரவலாக நிறைந்து இருக்கும். அதுபோல் கிறிஸ்தவர்களும் குறிப்பான சில பெயர்களையே வைத்து வருவார்கள்.பாடசாலையில் ஆசிரிய/ ஆசிரியைகள் ஆனாலும் சரி, கூடப் படிக்கும் பிள்ளைகள் ஆனாலும் சரி பெரும்பாலும் 4/10 இந்தப் பெயர்களே இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது......பலரும் எந்தவொரு அர்த்தத்திலும் வராத பெயர்களையே நாகரீகம் என்று பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்.(எனது உறவுகளுக்குள்ளும் இது நடக்கிறது). ஆண் பிள்ளையெனில் தாய் தந்தையின் முதல் எழுத்துடன் "ன்" போட்டு விடுகிறார்கள். அப்படியே பெண் என்றால் "லா" அல்லது "னி" போட்டு விடுகிறார்கள்.....இங்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் இடத்தின் பெயர் என்று வைத்து விடுகின்றார்கள். பார்த்து மௌனமாக கடந்து போக வேண்டியுள்ளது. அதனால் இந்த நாகரீகப் பெயர்களை நான் கூடியவரை தவிர்த்து விடுகின்றேன்......! 😢
  6. கடந்த காலங்களில் இரத்தம் blood transfusion செய்யப்பட்டு இருந்தாலும் உடலில் கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நன்கு வாசிக்கும் போது விளங்கிக் கொள்ள முடிகிறது.அக்கா வந்து என்ன குண்டு போட போறா பார்ப்போம்.✍️
  7. மூட்டைப்பூச்சி இருந்தால் கட்டாயம் அது குடித்த இரத்தம் எங்காவது இருக்கும். இலண்டனின் பல இடங்களில் இருக்கின்றது. நான் தமிழரின் விலை குறைந்த சலூனுக்குப் முன்னர் போய் கதிரையில் இருந்தால் கடிக்கிற மாதிரி ஒரு உணர்வு வரும்! அது மலிவான கதிரைகளில் மூட்டை இருக்கும் என்று மனம் நம்புவதால் வரும் உணர்வு என்று நினைக்கின்றேன். இப்பவெல்லாம் கொஞ்சம் பொஷ்ஷான சலூனுக்குப் போவதால் அப்படியான கடிக்கும் உணர்வு ஒன்றும் வருவதில்லை! ஆக, ஆன்ரிக்கு ஒன்றில் மனப்பிரமை அல்லது தோலில் பிரச்சினை. எதற்கும் நகங்களை கீறாமல் இருக்குமளவிற்கு வெட்டிவிட்டால் நல்லது. 😃
  8. சத்தியமாக இல்லை. உங்கள் உயரத்தை வைத்து கண்டு பிடித்தேன். 😁
  9. நன்றி ராசவன்னியன் ஐயா. பிடித்த பல பாடல்களைக் இசைஞானியின் இசையில் மீண்டும் கேட்கமுடிந்தது. முன்னுக்கு இருந்தவர்கள் பின்னால் இருந்தவர்கள்/நின்றவர்கள் மீது கொஞ்சம் கரிசனை காட்டியிருக்கலாம்☺️
  10. முதுகு பக்கத்தை காட்டினால்… நாங்கள் எப்படி கண்டு பிடிக்கிறதாம். என்ன நிற சட்டையுடன்…. நிற்கிறீர்கள். 🙂
  11. ஏன் சார் அவ்வளவு நாள் காத்திருக்கோணும்..? வரும் மார்ச் 18ன் திகதி (18-03-2022), சென்னை தீவுத்திடலில் "ராக் வித் ராஜா" என்ற தலைப்பில் இளையராஜா எல்லோரையும் "ஆடுவோம்.. பாடுவோம்" என அழைக்கிறாரே..? நுழைவு சீட்டு, ரூ. 1000 முதல்..! இதன் முக்கிய அனுசரணையாளர்கள், Noice & Grains (சிங்கப்பூர் கச்சேரியை கொடுத்தவர்கள் என நினைக்கிறேன்..) போகலாமா? 😎
  12. ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே. இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல. அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல். அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை, செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம். ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும். அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும். கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்? காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான். தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு. நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம், அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம் எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம். நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான். இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும். வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய். யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.
  13. நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ live stream மினூடாக நிகழ்ச்சியின் இறுதி இரண்டு மணித்தியால நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. அலைபேசியின் திரையை அகண்ட தொலைக்காட்சி திரைக்கு mirror பண்ணி பார்த்தமையால் அருமையான அனுபவம் கிடைத்தது. ஆனாலும் நேரில் பார்த்த அனுபவம் இதை விட பல மடங்கு அற்புதமாக இருந்திருக்கும்.
  14. ராஜாவின் நிகழ்ச்சியை பார்ப்பதும் கேட்பதும் இன்பம் அதிலும் தரையில் அமர்ந்து புற்களை கிளறிக் கொண்டே கேட்பது பேரின்பம் .......நீங்கள் அதிஸ்டக்காரர்.......! 👍
  15. பூண்டுடன் குழவிய இறால் ........! 😍
  16. உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. நீ கண்கண்ட தெய்வம். உயிரே,உயிரே,உயிரே,உயிரே,உயிரே.. நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்... உயிரே...! உயிரே...!
  17. பகுதி 2 2020 எங்களுக்குக் கோவிட் வந்து, முதலாவது ஊசி போட்ட ஒரு வாரத்தில் மீண்டும் மூட்டைப் பூச்சிக்கடி தொடங்கியாச்சு. அதுவும் ஒவ்வொருநாளும். கை, கால், முதுகு, கன்னம், பிடரி கூட மிச்சமில்லை. அதுவும் முதுகுப் பக்கம் ஊர்வதுபோல் ஆரம்பித்து கடிக்கும். நான் துடித்துப் பதைத்து எழுந்து மூட்டை எங்கு கடித்ததோ படுக்கையில் அந்த இடத்தை கைகளால் விறாண்டிவிட்டுப் படுக்க பின்னர் எதுவும் கடிக்காது. என் தாக்குதலுக்குப் பயந்து கட்டில் சட்டங்களுக்குக் கீழே பூச்சிகள் போய் ஒளிந்துகொள்வதாக நான் எண்ணிக்கொண்டேன். மீண்டும் அடுத்தநாள் அவை கடிக்க நான் எழுந்து கைகளால் கிர் கிர் என்று விறாண்ட, மனிசன் திடுக்கிட்டு எழுந்து என்ன செய்யிறாய் என்று கேட்க மூட்டை கடிக்குது. இப்பிடிக்க செய்தால் கடிக்காது என்றுவிட்டு நான் படுக்க, உனக்கு என்ன விசரே. எனக்கு ஒண்டுமே கடிக்கேல்லை. நீ நாளைக்கு என்ர கட்டில்ல படு. நான் உதில படுத்துப் பாக்கிறன் என்கிறார். கம்போடிய அனுபவத்தில நாளைக்கு நல்லாக் கடி வாங்கப் போறார் என்று மனதில் எண்ணியபடி தூங்கி எழுந்து அடுத்தநாள் அவர் படுக்கும் பக்கம் நானும் என் பக்கம் அவரும் படுக்க ஒரு மணித்தியாலம் எந்தப் பிரச்சனையுமில்லை. கொஞ்சநேரம் போக இடது பக்கமாகத் திரும்பிப் படுத்து ஒரு பத்து நிமிடம் ஆகவில்லை கன்னத்தில் சுரீர் என்று கடி. அட கடவுளே! தலையணைக்குள்ளும் வந்திட்டிதா என எண்ணியபடி “இந்தாங்கோ, இந்தத் தலையணையில் படுங்கோ” என தலையணையை எதுவும் சொல்லாமல் கொடுத்தபின்னும் மனிசனிடம் எந்த அசுமாத்தமும் இல்லாமல் நித்திரைக்கொள்ள, நானும் வேறு வழியின்றி எனக்குக் கடிச்சதில ஒண்டாவது கடிக்கும் தானே என எண்ணியபடி தூங்கிப்போகிறேன். காலையில் “எனக்கு எதுவுமே கடிக்கேல்லை. உனக்கு விசர்” என்றபடி மனிசன் போக, மனிசன்ர ரத்தம் உண்மையில நல்லதோ அல்லது என்ர தான் ருசியெண்டு குடிக்குதோ என்ற சந்தேகம் என்னுள் ஏற்பட்டுப் போக, என்ன செய்வது? வீட்டில மூட்டை இருக்கு என்றாலே எவ்வளவு கேவலம். யாரிட்டையும் போய் கேட்கவும் ஏலாமல் கூகிளில் மூட்டைப் பூச்சி பற்றிய தேடுதலைத் தொடங்கினன். மொத்தமாக 12 இக்கும் அதிகமான மூட்டைகள் இருப்பதாகவும் அதில் மூன்று விதமானவையே கட்டில்களில் வாழ்வதாகவும் ஒருவரின் இரத்தம் குடிக்காமல் 45 நாட்கள் வரைகூட அதனால் வாழ முடியும் என்றும் அதன்பின் இன்னொரு மூட்டையின் இரத்தத்தைக் குடித்தே வாழும் என்றும் ஒரு youtube வீடியோ பார்த்தபின் எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அடுத்தநாள் காலை எழுந்து என் கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் இருக்கு. மருந்து அடிக்க வேண்டும் என்றேன் கணவரிடம். தான் வாங்கிக் கொண்டு வாறன் என்றதும் மனம் நின்மதியடைய மனிசன் தேநீர் அருந்திய உடனேயே கடைக்குக் கலைத்தேன். மனிசன் போய் நாலு கடை ஏறி இறங்கி ஒரு ஸ்பிறே மட்டும் வாங்கிக்கொண்டு வர எனக்குக் கடுப்பானது. எதில தான் நப்பித்தனம் பாக்கிறது எண்டு இல்லையோ. ஒரு மூண்டாவது வாங்கி வந்திருக்கலாம் என்று திட்ட, முதல் இதை நான் நல்லாக் கட்டில் எங்கும் அடிச்சுவிடுறன். அதுக்குப் பிறகு சொல்லு என்று சொல்ல வாய்மூடுகிறேன். “எடுக்கிறதை எடு. இரண்டு மூன்று மணித்தியாலங்கள் அறைப்பக்கம் வரக்கூடாது” என்று மனிசன் சொல்ல ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மனிசன் தன் வேலையைக் தொடங்குகிறார். அன்று மாலை கட்டிலுக்கு புதிதாக எல்லாம் விரித்து மூட்டை செத்திருக்கும் என்ற நினைப்போடு போய் படுத்தால் ஒரு கடியும் இல்லை. மனிசனைத் தேவையில்லாமல் திட்டினது என நினைத்து முதலே இந்த ஸ்பிறேயை வாங்கி அடிச்சிருக்கலாம் என மனதுள் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை. நடுச் சாமம் இருக்கும் நல்ல தூக்கம். சுரீர் என்று ஒரு கடி. துடித்துப் பதைத்து எழுந்து கோபத்தில் படுக்கையை விறாண்ட மனிசனும் எழும்பி இந்த நேரத்தில என்ன செய்யிறாய் என்கிறார். திரும்பவும் மூட்டை கடிக்குது. நீங்கள் ஒழுங்கா மருந்தை அடிச்சியளா? அல்லது மிச்சம் வச்சிட்டியளா என்று கேட்க, “கட்டில் சட்டம் எல்லாம் வடிவா அடிச்சு முடிச்சிட்டன். ஸ்பிறே டின் குப்பை வாளிக்குள்ள கிடக்கு விடியப் போய் பார்” என்கிறார். “சட்டங்களுக்கு மட்டும் அடிச்சா மெத்தைக்குள்ள இருக்கிற பூச்சி எப்பிடிச் சாகும்? நாளைக்கு நானே கடையில வாங்கிவந்து அடிச்சு பூச்சிக்கு ஒரு வழி பண்ணுறன் என்றபடி தூங்க முயல்கிறேன். முதல் நாள் இணையத்தில் மூட்டைகள் பற்றிப் பார்த்தபோது அவை எங்கெங்கு இருக்கும், எப்படி எல்லாம் பயணம் செய்யும், எத்தனை தரம் இரத்தம் குடிக்கும் என்றெல்லாம் போட்டிருந்தது அந்த இரவில் என் நினைவில் வந்து நின்மதியைக் கெடுக்க, எங்கெல்லாம் ஸ்பிறே அடிக்க வேண்டும் என்று மனதில் எண்ணியபடி ஒருவாறு தூங்கிப் போகிறேன். அடுத்தநாள் கடைகளில் சென்று பார்த்தால் பல கடைகளில் ஸ்பிறே முடிந்துவிட்டிருந்தது. கடைசியில் ஒரு கடையில் இருந்த மூன்று ஸ்பிறேயையும் எடுத்துக்கொண்டு வீடுவந்து கட்டில், மெத்தை, தலையணை மட்டுமன்றி அங்கிருந்த கதிரை, கபேட், காபெற், கதவு கூட விடாமல் முழுவதும் அடி அடியென்று ஒன்றும் விடாமல் அடித்து கதவு யன்னல் எல்லாவற்றையும் இறுக மூடி கதவின் அடியில் காற்றே உள்ளே போகாதவாறு ஒரு துணியினால் அடைத்துவிட்டு நானும் கையோடு குளித்து ஆடை மாற்றிக்கொண்டு மனநின்மதியுடன் கீழே வருகிறேன். அன்று முழுவதும் அறைப்பக்கம் போகவே இல்லை. ஒவ்வொருநாள் மாலையும் ஒன்றிரண்டு மணிநேரம் தூங்குவது என் கடமை. என் அறைக்குப் போக முடியாது. சரி மகளின் கட்டிலில் படுப்போம் என்று போனால், எங்கள் அறையில் மூட்டை இல்லை. தயவு செய்து கொண்டுவந்துவிடாதீர்கள். எதற்கும் குறை நினைக்காமல் வரவேற்பறையிலேயே தூங்குங்கள் என்கின்றனர் பிள்ளைகள் சிரித்தபடி ஒன்றுசேர. இத்தனைக்கும் ஒரு வாரமாக அவற்றிலிருந்து மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக போர்வை, விரிப்புகள், தலையணை என ஒன்றும் விடாமல் கடும் சுடுநீரில் வோசிங்க் மெஷினில் போட்டு எடுத்தபடிதான் இருந்தேன். அன்று இரவும் வரவேற்பறையே கதியாகிட அடுத்தநாள் அறைக்குச் சென்று யன்னலை நன்கு திறந்து காற்றோட்டமாக்கியபின் மாலை புதிதாக எல்லாம் மாற்றி, வாசனைக்காக மெழுகுதிரியும் கொளுத்தி வைத்தாயிற்று. இனிமேல் எதுவுமே இல்லாமல் நின்மதியாகத் தூங்கலாம் என எண்ணியபடி கட்டையைச் சாய்த்தால் முதுகுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் ............................... என்ன இது. இவ்வளவு மருந்து அடித்தும் இன்னும் மூட்டைகள் சாகவில்லையே. என்ன பிரச்சனை என்று கட்டிலுக்குப் பக்கத்தில் உள்ள கதிரையில் எழும்பி இருந்து யோசிக்க மனிசனுக்கு மூக்கில வேர்க்க கண்ணை முழிச்சு எதையோ பாக்கிற மாதிரிப் பார்த்திட்டு, மூட்டை இப்பவும் கடிக்குது எண்டால் நீ உதில இருந்தபடி நித்திரை கொள்ளு. தயவு செய்து என்னை எழுப்பிக் கதை சொல்லிக்கொண்டிருக்காதை. என்ர நல்ல மனதுக்கு என்னை எதுவும் கடிக்கேல்லை எண்டு சொல்லிவிட்டுப் படுக்க, இரவு பதினொரு மணிக்கு நான் எழுந்து கீழே சென்று என் கணனியை இயக்குகிறேன். உண்மையில மூட்டை இருக்கா இல்லையா என்று அறிய வேறு என்ன வழி என்று தேடினால் amazon இல் Bed Bug Trap எண்டு ஒண்டு கிடக்க, இதுதான் மூட்டை உடனடியா சிக்க சிறந்த வழி என்று எண்ணி உடனேயே £15 இக்கு ஓடர் செய்ய amazon prime இனூடாக அடுத்தநாளே வந்து சேர, கட்டில் கால்களுக்கும் மெத்தைகளுக்குக் கீழும் ஒட்டிவிட்டேன். பிள்ளைகள் மதியம்தான் “என்ன மூட்டைகள் போய்விட்டதா” என்று கேட்க, எனக்கு நேற்றும் ஊர்ந்ததுபோல் இருந்தது என்று இழுக்கிறேன். எதுக்கும் நாங்கள் ஒரு சினிமா பார்க்கத் திட்டம் போட்டனாங்கள். இரண்டு மணி நேரப் படம். உங்கள் கட்டிலில் இருவரும் படுத்தபடி ஐப்பாட்டில் படத்தைப் பார்க்கிறோம் என்கிறாள் கடைக்குட்டி. சரி படுங்கோ என்றுவிட்டு மனதை அங்கும் இங்குமாக அலைபாயவிட்டபடி இரண்டு மணிநேரம் பொறுமை காக்கிறேன். ஒரு மகள் தனக்கு எதுவும் கடிக்கவில்லை என்கிறாள். மற்றவள் தனக்கு ஏதோ ஊர்வதுபோல் இருந்தது ஆனால் கடிக்கவில்லை என்கிறாள். எதற்கும் இன்றும் கடிக்கிறதா என்று பாருங்கள். சில நேரம் நீங்கள் விரித்துள்ள கட்டில் விரிப்புத்தான் உங்களுக்குக் கடிப்பதுபோல இருக்கோ தெரியவில்லை என்கிறாள். சரியென்று அன்று இரவு சரியான குளிர் நன்றாக போர்வையைப் போர்த்துக்கொண்டு ஒரு பக்கமாகப் படுக்கிறேன். முதுகுப் பக்கம் எந்த அசுமாத்தமும் இல்லை. ஆனால் கையின் மேற்பகுதியில் சுரீர் என்று ஒருவலி. எனக்கு எரிச்சலிலும் ஒரு சந்தோசம். கடுகடுத்த கையைப் பார்க்க அந்த இடம் சிறிது தடித்துப்போய் இருக்கு. உடனே போனை எடுத்து அதை வீடியோ எடுத்து எங்கள் குடும்பத்துக்கான வற்சப் குழுமத்தில் போடுகிறேன். அடுத்தநாள் காலை எழுந்து ஒட்டிவிட்ட டேப் எதிலாவது ஒரு மூட்டைக் குஞ்சாவது ஓட்டுப்பட்டிருக்கா என்று பார்த்தால் அதன் ஒரு கால் அடையாளம் கூட அதிலில்லை. என் ஏமாற்றத்தை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்றே எனக்குப் புரியவில்லை. அடுத்தநாள் காலை எல்லாரும் வரவேற்பறையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கின்றனர். இதை வளரவிட்டால் மூட்டை வீடு முழுதும் பரவிவிடும். எனவே உடனடியாக மூட்டை பிடிப்பவர்களை அழைக்கவேண்டும் என்கின்றனர். உடனடியாக அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க,அடுத்தநாளே வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான கொடுப்பனவு £100. மனிசன் ஏதோ புறுபுறுத்தபடி எழுந்து போக நான் வாயே திறக்கவில்லை. அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு வருவதாக அவர்கள் எனது போனுக்கு செய்தியை அனுப்ப, காலை ஏழு மணிக்கு எழுந்து கோப்பி குடித்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறேன். சரியாக எட்டு மணிக்கு வீட்டு மணி அடிக்க விரைந்து கீழிறங்கிக் கதவைத் திறக்கிறேன். இரண்டு இளம் ஆண்கள் நிற்கின்றனர். தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டிவிட்டு உள்ளே வார முதல் அவர்களின் காலணி களுக்கு பிளாஸ்டிக் கவர் போடுகின்றனர். கோவிட்டுக்காகத்தான் அந்தப் பாதுகாப்பு என்று அவர்கள் சொன்னாலும் மூட்டைக்காகத்தான் என நான் நம்புகிறேன். அவர்களுக்கு மேலே கைகாட்டிவிட்டு அவர்கள் செல்ல நான் பின்னே செல்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்பு முறைமைதான். அவர்கள் இருவரும் இரண்டு டோச் லைட் மட்டுமே வைத்திருக்கின்றனர். கட்டில் எல்லாம் சோதிக்கப் போகிறோம் என்று கூற நான் தலையாட்டிவிட்டு வாசலில் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். முதலில் இரண்டு தலையணைகளையும் எடுத்து கதிரையில் வைத்துவிட்டு காட்டில் விரிப்பை இருவரும் சேர்ந்து ஒழுங்காக மடிக்கின்றனர். பின்னர் படுக்கையை நிமிர்த்தி அலுமாரியுடன் சாய்த்து வைத்துவிட்டு லைட் அடித்து அங்குலம் அங்குலமாகப் பார்க்க எனக்கு நெஞ்சு பாதைக்குது. எவ்வளவு மூட்டைகள் இருந்து துலைச்சு என்ர மானத்தை வாங்கப் போகுதோ என்று. 2019 கம்போடியா போட்டு வந்ததிலிருந்துதான் கடிக்கத் தொடங்கினது என்று அவர்கள் கேட்காமலேயே நான் கூற, ஓ என்று தலையை நிமிர்த்திக் கூறிவிட்டு காட்டில் சட்டங்களை எல்லாம் தூக்கிவிட்டு, கால் பகுதி எல்லாம் பார்த்து முடிய இருவரும் ஒருசேர நிமிர்கின்றனர். நானும் ஒருக்கா மூட்டைகளைப் பார்க்கலாமா என்கிறேன். அவர்கள் முகங்களில் சிரிப்பு. நீ பார்க்க முடியாது என்கின்றனர். அவர்கள் எதற்கு சிரிக்க வேண்டும். “என் வீட்டில் உள்ள மூட்டைகளை ஏன் நான் பார்க்க முடியாது என்கிறேன் சிரித்தபடி ஆனால் சிறிது கோபமும் உள்ளே எழ. “உன் கட்டிலில் ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லை. நானும் எதுவும் கொண்டு வரவில்லை” என்கிறான் ஒருவன் சிரித்தபடி. “உண்மையாகத்தான் சொல்கிறாயா” என்கிறேன் நம்பமுடியாமல். சத்தம் கேட்டுப் பிள்ளைகளும் எழுந்து வருகின்றனர். மூட்டை ஒன்று இருந்தாலே அது கடித்துவிட்டு வரும்போது இரத்தம் கட்டாயம் கட்டில் விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ அன்றி சட்டங்களில்எல்லாம் கூடப் பிரண்டிருக்கும். ஆனால் இங்கு எந்தவித அடையாளமும் இல்லை. இரண்டு மூட்டைகள் இருந்திருந்தாலே இரு ஆண்டிலுள் இராண்டாயிரமாய்ப் பெருகியிருக்கும். வீட்டில் ஒரு மூட்டைகளும் இல்லை. நாங்கள் போகிறோம். மீண்டும் எப்போதாவது மூட்டைகள் இருப்பதாக எண்ணினால் கூப்பிடு என்று சிரித்துக்கொண்டே செல்ல, கீழே எல்லாம் கேட்டபடி நின்ற மனிசன் 100 பவுண்டஸ் தண்டம் என்கிறார். சரியப்பா இனி அம்மாவுக்கு மூட்டையே கடிக்காது. அப்பிடிக் கடிச்சா வைத்தியரிட்டதான் கூட்டிக்கொண்டு போக வேணும் என்று சொல்லிச் சிரிக்க நான் செய்வதறியாது நிற்கிறேன்.
  18. மிக மிக உண்மையானது சில நேரம்களில் மோகன் அண்ணாவின் உழைப்பு வார்த்தைகளில் சொல்ல முடியாது. போர் முடிந்ததும் தமிழ் நாதம் இப்ப கனபேருக்கு தெரியாது அந்த இணையம் மூலமே யாழ் எனக்கு அறிமுகம் ஆரம்பத்தில் பார்வையாளராக இருந்தேன் இந்த பெருமாள் புனைபெயர் மோகண்ணாவுக்கு மட்டும் தெரிந்த ஒன்று என்று நினைக்கிறன் போர் முடிய பல தமிழ்தேசிய இணையங்கள் இலங்கை உளவு பிரிவுகளால் மண்டை கழுவப்பட்டு இழுத்து மூடப்பட்டன அதில் தமிழ்நாதமும் ஒன்று சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் இலங்கை புலனாய்வு பிரிவினரால் இயக்கப்படும் குடும்பத்தில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கி இருந்தார் போன் தொடர்பு அற்று யாழும் இப்படி ஆகுமோ என்று தினமும் இங்கு வந்தேன் ஆனால் நான் நினைத்ததுக்கு மாறாக மோகன் அண்ணா மண்டை கயிறாக இருந்தார் மண்டை கயிறு பேச்சு வழக்கு உண்டு பலகோடி நன்றிகள் மோகன் அண்ணாவுக்கும் இயக்கம் மட்டுக்களுக்கும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.