Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87992
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. நந்தி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    241
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/04/23 in Posts

  1. கால் நூற்றாண்டுகளாய் களம் கண்டு-நின்றியங்கும், யாழ் இணையம்- நூறாண்டு மேல் உயர வாழ்த்துக்கள் ! மச்சானின் நெல் வயலில் மகிழ்ந்திருந்த நெல் மணிகள், கச்சான் காத்தடித்ததனால் கதிர் விலகிச் சிதறினவே. அருகினிலே சில மணிகள் ஆழ மண்ணில் சில மணிகள் தெருவினிலே சில மணிகள் தேசம் விட்டுச் சில மணிகள். கலகலத்துச் சிரித்துவிட்டு கச்சான் காத்தோய்ந்து போக, வெலவெலத்துப் போன மச்சான் வெளிப்பட்டான்-செயற்பட்டான். பதறிப் போன மச்சானும் சிதறிப்போன மணிகளதைக், கதறிக் கொண்டு சேகரித்துக் கட்டிச் சேர்த்தான் கோணியிலே. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. கட்டிச் சேர்த்த கோணியாக களம் இந்த யாழ் -இங்கு. ஒன்றாவோம் உரிமைகளை வென்றாவோம். நன்றாவோம் நாளை நமது என்றாவோம்.!
  2. வணக்கம், முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், பிரச்சார நோக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தமையால் RT News பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு RT News இன் நேரடி இணைய இணைப்பும் பல இணைய வழங்கிகளால் தடுக்கப்பட்டுள்ளது. யாழ் இணையம் நம்பகத்தன்மையையான தகவல்களையே அனுமதிக்கும் என்பதால் RT News கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, RT News இலிருந்து நேரிடையாகவோ அல்லது அதன் செய்திகளை பிரதியிடும் வேறு தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும், பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வறிவித்தலை சட்டைசெய்யாது செயற்படுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என அறியத்தருகின்றோம். நன்றி
  3. சுவிஸின் முன்னனி தொலைக்காட்சி SRF நடாத்தும் STAT LAND TALENT நடன போட்டியில் கலந்து கொண்டு, இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர் எங்களது இரு கலைஞர்கள் மிதுஷாவும், ஜானுஷாவும் (அக்காவும் தங்கையும்) இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  4. "மலருக்கு தென்றல் பகையானால் மலர்ந்திட கதிரவன் துணையுண்டு" . கடவுளின் சன்னிதானம் எல்லோரையும் ஒன்றிணைத்து எல்லாம் சுபமே முடிந்தது. அனுபவ அறிவை , நிஜ சம்பவங்களை கோர்த்து அழகான ஒரு கதையாக உருவாக்கிய சுவி அண்ணருக்கு என் நன்றிகள் பாராட்டுக்கள். சுவி என்று யாழ்கள உறவு இருந்தார் என்று நாளைய சமுதாயதுக்கு விட்டு செல்லும் பதிவுகளாக இருக்கிறது உங்கள் கதை தொகுப்புக்கள். யாழ் இணையத் திற்கு கிடைத்த சுவி அண்ணர் (சுவை ) ஒரு அறிவுக் களஞ்சியம். குறிப்பு . : ஒரு இந்து மதத்தவராய் இருந்து மடுத்தலத்தை பற்றி இவ்வ்ளவும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். போகுமிட குறிப்புகள் வழிப்பாதை எல்லாம் தெரிந்து இருக்கிறது. அப்பகுதியில் வேலை செய்தீர்களா ?
  5. கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.
  6. நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் நான் வாழ நீயின்றி வேறேது காரணம் புதிய தாகம் இதுவோ காதல் பானம் பருக வருமோ நமது காதல் விளைய இது புதுமையான களமோ நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் காற்றுப் போலவே நெஞ்சம் சூழலுதே உன் கண்ணைக் கண்டதாலே பேதை என்னையே வாழ வைத்ததே நேசம் கொள்ளைக் கொண்டதாலே உன்னைப் பார்க்கையில் அன்னைப் பார்க்கிறேன் உந்தன் ஜீவக்கண்ணில் என்னைப் பார்க்கையில் உன்னைப் பார்க்கிறேன் உந்தன் வடிவந்தன்னில் அன்பைச் சொல்லியே என்னைச் சேர்க்கிறேன் இன்று உந்தன் வாழ்வில் அன்பே! எண்ணம் கூடுமோ இந்த மாய வாழ்வினில்.... அன்பே! நேசம் கூடுமோ உந்தன் ஞான வாழ்வினில்.... அன்னை நீ! தந்தை நீ! விண்ணும் நீ! மண்ணும் நீ! கீதை போலே உந்தன் பேரை ஓதும் பேதை நான்.... நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் கல்வி செல்வமும் அன்பு செல்வமும் வாரித் தந்தவன் நீயே! நாளும் என்னையே வாழவைத்திடும் பேசும் தெய்வம் நீயே! என்னை வணங்கிடும் என்னை ஏந்திடும் மோனவல்லியே வெள்ளை மனத்தில் அன்பை மேவியே என்னை ஆளும் கோதையே என் மன மேடையில் நீ தான் ராதையே என் நினைவில் வாழ்ந்திடும் என் சுவாச பாதையே என்னுயிர் நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் மனைவி நீதான் காதலி நீதான் என் வசந்தம் நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் சரவிபி ரோசிசந்திரா
  7. @suvy ஓசியிலை ஒரு கதைப்புத்தகம் வாசிச்ச திருப்தி. மாதம் ஒரு கதையாவது யாழ்களத்திற்காக எழுதுங்கள். திறமை உள்ளவர்களைத்தான் கேட்க முடியும்.
  8. எங்கே பனி பொழியக் காணொம் ? பிசி போல ...
  9. கவிதைக்கு நன்றி , நந்தி.
  10. கருத்தாளம் மிக்க கவிதை. நன்றியும் வாழ்த்துகளும்.
  11. நுணா… அதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால்… நிச்சயம் பகிர்கின்றேன்.
  12. அடுத்த சிரிப்பு நடிகை, நல்ல திறமையிருக்கு இவரிடம்
  13. நாலு வரியை வைத்து நச்சுன்னு பாட்டு, பார்க்க நல்லாயிருக்கு.......! 👍
  14. முதல் ஆள் பாத்திரம் இல்லாததால் சாப்பாடு கொடுக்கப்பட மாட்டாது.
  15. மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிகிட்டு என்னபாத்து நச்சுன்னு கண்ணடிச்சான் தையலும் பிஞ்சு இப்போ மச்சினி தரையில குந்திகிட்டான் மச்சினி கைலிய கட்டிகிட்டு மூலயில கட்டிலில் சஞ்சிகிரான்...
  16. முற்பகல் செய்யின்.... 🤣
  17. மலர்............(12). நிர்மலாவின் குடும்பத்தினரும் அங்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து பந்தல் எல்லாம் போட்டு சாமான்களை இறக்கி வைத்து அப்புவை காவலுக்கு வைத்து விட்டு மாதாவின் ஊர்வலம் பார்க்கப் போயிருந்தார்கள். பின் தரிசனம் முடிந்து அவர்கள் வந்து சமைக்கத் தொடங்கியதும் அப்பு கோயில் பார்க்கப் போகிறார். கதிரவனும் முகிலனும் விளையாட்டு சாமான்கள் வாங்குவதற்கு கடைகள் இருக்கும் பக்கமாகப் போகிறார்கள். சிவாங்கியும் சரவணனும் சிறுவர்களாதலால் தாயோடும் பேத்தியாரோடும் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஆச்சியும் நிர்மலாவும் சமையல் வேலைகளை முடித்து விட்டிருந்தார்கள். இனி எல்லோரும் வந்து சாப்பிட்ட பின் ஊருக்கு கிளம்பு வேண்டியதுதான். ஆச்சி அங்கிருக்க நிர்மலாவும் பிள்ளைகளுக்கு பிராக்கு காட்ட இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு மூவருமாய் வீதியில் நடக்கிறார்கள். அப்போது ஒரு பந்தலுக்குள் இருந்த அம்மா அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு பிள்ளை நிர்மலா என்று சத்தமாய் கூப்பிடுகிறாள். உடனே நிர்மலாவும் திரும்பிப் பார்க்க அங்கு இராசம்மா ஒரு சிறிய கதிரையில் இருந்து எழும்ப முயற்சித்தபடி இவர்களை அழைக்கிறாள். ஓம் ...அம்மா நான் நிர்மலாதான், நீங்கள் இருங்கோ நான் அங்கு வாறன் என்று சொல்லி பிள்ளைகளுடன் அங்கே செல்கிறாள். அவளைக் கண்டதும் இராசம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. கண்களில் நீர் சொரிய அவளின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். --- நிர்மலா எப்பிடியடி இருக்கிறாய். இவர்கள் உன் பிள்ளைகளோ என்று வினவுகிறாள். ---ஓம் அம்மா நான் நல்லா இருக்கிறன். இவன் என் மகன் சரவணன். இவள் என் புருசனின் மூத்த தாரத்து மகள் சிவாங்கி. இவ பிறக்கும்போது அவ தவறிட்டா. --- அப்ப நீ இரண்டாம்தாரமாகவோ அவரைக் கட்டியிருக்கிறாய். அவருக்கு வேறு பிள்ளைகளும் இருக்கோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா இவளுக்கு மூத்த சகோதரன் முகிலன் என்றொரு மகனும் இருக்கிறார். பின் இராசம்மாவும் அவள் வயிற்றைப் பார்த்து விட்டு கண்ணாலேயே விசாரிக்க அவளும் ம்....என்று சொல்கிறாள். --- எத்தனையாவது மாசம் என்று கேட்க நிர்மலாவும் ஆறுமாசமாகுது என்கிறாள். --- பிள்ளை அன்று நீ போனதில் இருந்து நாங்கள் உன்னைத் தேடாத இடமில்லை. உன்ர அப்பா அம்மாவுடன் கதைக்கிறனியே. --- இல்லையம்மா, இனிமேல்தான் அவையளோட தொடர்பு கொள்ள வேணும். --- கெதியா அவையளோட கதை பிள்ளை.அவையிலும் கலங்கிப்போய் இருக்கினம். நாங்கள்தான் உன்னை ஏதோ செய்து போட்டம் என்று சண்டை பிடித்து விட்டு போனவை. பிறகு ஒரு தொடர்பும் இல்லை. அதுசரி உன்ர புருசனும் அவை வீட்டுக்காரரும் உன்னை நல்லபடியா வைத்திருக்கினமோ. --- ஓம் அம்மா. அவர் மட்டுமன்றி அப்பு ஆச்சியும் என்மேல் நல்ல பாசமாய்தான் இருக்கினம். --- எனக்குத் தெரியும் பிள்ளை, நீ உன்ர குணத்துக்கு எங்கிருந்தாலும் நல்லா இருப்பாய் என்று சொல்லி சரவணனை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறாள். --- நான் அங்கு போகும்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. நான் அவையளது வீட்டில் வாடகைக்குத்தான் இருந்தனான். பின் அவரைத் திருமணம் செய்துதான் கடவுள் அருளால் எனக்கு இந்தப் பிள்ளைகள் கிடைத்தன. அது சரி அம்மா உங்களுக்கு பேரன் பேத்தி இருக்கினமோ. --- இராசம்மாவுக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. அவள் மூக்கை சிந்தி அங்கால வரப்பில் எறிந்து விட்டு, அதை என் பிள்ளை கேட்கிறாய், ஜோதியை கலியாணம் செய்து கொண்டு வந்து இப்ப நாலைந்து வருடமாகி விட்டது. இன்னும் கடவுள் கண் திறக்கேல்ல. நானும் கையடுத்துக் கும்பிடாத தெய்வமில்லை, செய்யாத பரிகாரமுமில்லை, இனி இந்த மாதாவாவது கண் திறக்க வேணும் குரல் கம்முகிறது. --- அழாதையுங்கோ அம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்குத் தெரிந்தவரையில அவருக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. நான் செய்த இந்தத் திருமணம் கூட நானே எனக்கு செய்து கொண்ட ஒரு சுயபரிசோதனைதான். ஒருவேளை இந்தப் பிள்ளைகள் கிடைக்காதிருந்தாலும்கூட நான் வளர்க்க அவர் மூலமா இரண்டு பிள்ளைகள் இருக்கு என்னும் மனநிறைவுதான். --- நீ சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும். --- நிர்மலா தனக்குள் நினைக்கிறாள் "ஒருவேளை சங்கரும் யாராவது ஓரிரு பிள்ளையுடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் அவருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கக் கூடுமோ என்று. --- அதே எண்ணம் இராசம்மாவுக்கும் அதேநேரத்தில் தோன்றுகிறது. --- பின்பு நிர்மலாவும் சரியம்மா அவர்கள் வரும் நேரமாச்சுது, என்னையும் பிள்ளைகளையும் தேடுவார்கள். நாங்கள் போகிறோம் என்று சொல்லி பிள்ளையை அவளிடம் இருந்து வாங்கும் போது எதிர்பாராமல் இராசம்மாவும் தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி பிள்ளையின் கழுத்தில் போடப்போக நிர்மலா அதைத் தடுத்து வேண்டாம் அம்மா இது சிலநேரம் வீட்டில் பிரச்சினையாகி விடும், ஏதாவது இனிப்போ பலகாரமோ குடுங்கள் போதும் என்று சொல்ல இராசம்மாவும் ம்.....அதுவும் சரிதான் என்றுவிட்டு பைக்குள் இருந்து கொஞ்சம் சொக்கிலேட்டுகள் எடுத்து பிள்ளைகளிடம் கொடுக்கிறாள். நிர்மலாவும் சரியென்று சொல்லி விட்டு பிள்ளைகளுடன் போவதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க கோயில் மணியும் ஒலிக்கிறது. அவர்களின்தலைக்கு மேலால் மாதாவின் கோயில் தெரிகிறது. அவளையறியாமல் கைகள் கோயிலைப் பார்த்து கும்பிடுகின்றன. அதேநேரம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஒரு பெண்ணும் சிறு பையனும் வந்து அங்கிருந்த கடலை விக்கிற பெண்ணின் அருகில் பாதணிகளை கழட்டி வைத்து விட்டு கால் கை முகம் கழுவி பையனுக்கும் முகத்தை நீரால் துடைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டுடன் உள்ளே செல்கிறார்கள். அங்கு ஒருரூபாய் அர்ச்சனை சீட்டு பத்து வாங்கிக் அர்ச்சனைத் தட்டில் வைத்துக் கொண்டு தண்டாயுதபாணி சந்நிதிக்கு வந்து அய்யரிடம் தருகிறாள். --- ஐயா இன்று இவருக்கு பிறந்தநாள்.ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும். --- அதுக்கென்ன செய்திடலாம். துண்டில பையனின் பெயர் நட்ஷத்திரம் மற்றும் பெற்றோரின் பெயர்களையும் எழுதிவிடுங்கோ. அது சரி ஏனம்மா பிள்ளைக்கு பிறந்தநாள் என்று சொல்கிறாய், முன்னுக்கு மூலவர்,உற்சவர், ஆறுமுகசாமி எல்லாம் கல்யாண கோலத்தில் இருக்க இந்தப் பழனியாண்டியிடம் வந்திருக்கிறாய். --- அது வந்து ஐயா இந்த சாமிதான் தந்தையின் வீடும் வேண்டாம் சொத்து பத்து எதுவும் வேண்டாம் என்று தனியாக வந்து தனக்கென ஒரு இடம் பிடித்து கம்பீரமாய் எழுந்தருளிக் கொண்டு இருக்கிறார் அதுதான். --- அதுவும் சரிதான், அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டுபோய் முருகனுக்கு முன்னால் ஜெய்சங்கர் மூலநட்ஷத்திரம் சங்கர் தாயம்மாவின் ஏகபுத்திரன் என்று பெயர் சொல்லி தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்கிறார். பின் தட்டோடு வந்து அவனின் நெற்றியில் வீபூதி இட்டு சந்தனப் பொட்டும் வைத்து விட்டு தீர்த்தம் குடுக்கும்போது அவன் கையை கவனிக்கிறார் அதில் ஆறு விரல்கள் இருக்கின்றன. நீ ராஜாடா, நன்றாக வாழ்வாய், "ஆண் மூலம் அரசாளும்" என்று சொல்லி விட்டு போகிறார். சுபம்.......! 🌺 யாவும் கற்பனை......! யாழ் இணையம் 25 வது அகவைக்காக அன்புடன் சுவி.....!
  18. மலரும்.........! (10). அன்று ஆச்சி அப்படிக் கேட்டதும் சில நாட்களாக அதை பற்றி நன்றாக யோசித்துப் பார்த்த நிர்மலா தனது வாழ்க்கைக்கும் ஒரு பிடிமானம் வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இவர்களின் குடும்பம் ஒரு நல்ல குடும்பமாகவும் இருக்கின்றது. ஏன் தானும் மறுமணம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன காரணத்துக்காக மறுமணம் செய்தார்களோ அதே காரணம் எனக்கும் இருக்குதுதானே. மாதங்கள் வந்து போகுதோ இல்லையோ மாதவிடாய் தவறாமல் வந்து விடுகிறதுதானே. தானாக வரும் இந்த சந்தர்ப்பத்தை ஏன் நான் எனக்கான பரிசோதனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்று பலவாறு யோசிக்கிறாள். அன்று ஆச்சி உரலில் வெத்திலை இடித்துக் கொண்டிருக்கும்பொழுது நிர்மலா சிவாங்கியுடன் அங்கு வருகிறாள். அப்போது ஆச்சியும் இயல்பாக என்ன பிள்ளை நான் சொன்ன காரியத்தை யோசிச்சனியோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா ....நான் நிறைய யோசிச்சனான். நீங்கள் இப்படிக் கேட்பது உங்களின் மகனுக்குத் தெரியுமோ, அவருக்கு இதில விருப்பம் இருக்குதோ என்று வினவுகிறாள். --- ஓம் பிள்ளை......முதலில் நானும் இவரும்தான் இது பற்றி கதைத்தனாங்கள். அன்றைக்கு இந்தப் பிள்ளை சிவாங்கி அந்தக் கிணத்துக் காட்டில் ஏறி நின்று விளையாடியபோது நானும் இவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிக்க நீ தளப்பம் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து போய் பிள்ளையை படக்கென்று பிடித்தனியெல்லோ, அப்போதுதான் எங்கட மனசுக்குள் இந்த எண்ணம் தோன்றியது. பின் இந்த சம்பவத்தை கதிரவனிடம் சொன்னபோது அவன் உனக்கு நன்றி சொல்லிவிட்டு போனவன். பிறகு சிலநாள் கழித்து நாங்கள் அவனுடன் இந்த எங்களின்விருப்பத்தை சொன்னபோது முதலில் தயங்கினாலும் பிறகு சரியென்று சொல்லிப் போட்டார். ஆனால் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வற்புறுத்தக் கூடாது எண்டவர். அதன் பின்னால்தான் நான் உன்னோடு கதைத்தது. அடுத்து வந்த சில நாட்களில் கதிரவனுக்கும் நிர்மலாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. என்னதான் அவர்கள் நட்புடன் பழகி இருந்தாலும் அடுத்து வந்த இரவுகளில் தயக்கத்தாலும் பிள்ளைகள் அவர்களிடையே படுத்துறங்குவதாலும் அதிகமான நெருக்கம் இன்றி கை கால்களின் சின்ன சின்ன உரசல்களுடனும் விரல்களின் சில்மிசங்களுடனும் காதல் பார்வைகளுடனும் உறவுகள் இன்றியே கடந்தன. இவர்களின் போக்கை தனது அனுபவத்தால் உணர்ந்த ஆச்சியும் மெய்கண்டான் காலண்டரில் ஒரு நல்ல நாள் பார்த்து அன்று பிள்ளைகளை தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டு நிர்மலாவுக்கு சில அறிவுரைகள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்கிறாள். அறைக்குள் கட்டிலின் மீது புதிய விரிப்புகளும் பூபோட்ட தலையணைகளும் அழகாக விரித்து இருக்கின்றன. ஊதுபத்தியின் மணம் ஒரு கிறக்கத்தைத் தருகின்றது. உள்ளே கதிரவனும் நாலுமுழ வேட்டி அணிந்து மெல்லிய வெள்ளை சேர்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறான். சேர்ட்டினூடாக கிப்ஸ் பெனியனும் அதன் மேல் அட்ஷரக்கூடுடன் கூடிய தடித்த டைமன் சங்கிலி டாலடிக்கிறது. அவனிடம் இருந்து நறுமணமிக்க செண்டின் வாசனை வருகின்றது. அவனுக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாக இருக்கிறது. நிர்மலாவும் ஆச்சி தன் கையாலேயே பின்னி அவள் தலையில் சூடிவிட்ட ஒற்றை மல்லிகை சரமும், கையில் மாற்றிக் கட்டுவதற்கான நைட்டியோடும் பூபோட்ட கொட்டன் புடவையும் அணிந்துகொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்து அதைத் தாழிடுகிறாள். அப்போது வலிமையான இரு கரங்கள் அவளை இடையுடன் சேர்த்து தன்னுடன் அனைத்துக் கொள்கின்றன. --- ஸ்......என்ன அவசரம், கொஞ்சம் பொறுங்கள் நைட்டியை மாற்றிக் கொண்டு வருகிறேன். அவள் குரல் கெஞ்சலாய் ஒலிக்கிறது. --- இந்த சேலையை அகற்றினால்தானே அதை நீ மாற்ற முடியும், அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அப்படியே பூமாலைபோல் அவளை அள்ளியெடுத்து தத்தையை மெத்தையில் வளர்த்திவிட்டு வித்தைகள் புரிய சரிந்து கொள்கிறான். அவள் வெட்கத்தில் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு மெத்தையில் உருண்டு குப்புறப் படுத்துக் கொள்கிறாள். அந்த அறையின் சிறு வெளிச்சத்தில் ஒரு தேவதைபோல் அவனருகே கிடக்கிறாள். அவனும்கூட வெகு காலத்தின்பின் தனக்கே தனக்கான ஒரு பெண்ணணங்கை தன்னருகே பாசத்தோடும் காதலோடும் பார்க்கிறான். அவளது கருங்குழல் அந்தப் பரந்த முதுகில் மயில்தோகை போன்று சற்றே விரிந்து பரவிக் கிடக்கிறது. அதன் நடுவே ஒற்றை மல்லிகை சரம் மின்னல் கீற்றாக மின்னுகிறது. அவன் கைகள் அவள் முதுகை ஆதரவுடன் வருடிக் கொண்டு வர "கரைதேடி நுரையோடு வரும் பேரலையொன்று கற்பாறையில் மோதி மேலெழுந்து குடையாய் விரித்தபடி ஒரு கணம் அசைவற்று அப்படியே நிண்றதுபோல்" இடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பொங்கித் தளும்பும் பேரழகு மனசை அலைக்கழிக்க, அவனது பார்வை போகும் இடமெல்லாம் தன் அகக்கண்களால் உணர்ந்தவள்போல் அவள் சிறிது நெளிந்து கொள்கிறாள். அவனும் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி அவளது வழுக்கும் தோள்களை வலுவான கரங்களால் பற்றி தனது பக்கம் திருப்புகிறான். அவளது மேனியில் இருந்தும் ஒரு சுகந்தமான வாசனை அவன் நாசியை வருடுகிறது. தன் முகத்தருகே மிக அருகில் நெருங்கும் அவன் முகத்தை அவளும் காதலுடன் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கையில் அந்த வார்த்தைகளை அவன் தன் வாயினுள் வாங்கிக் கொள்கிறான். அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த காமம் கிளர்ந்தெழுகிறது. ஆதவனின் கதிர்கள் மலர்களை மலர்விப்பதுபோல் கதிரவனின் ஸ்பரிசத்தில் பெண்மை மலர்கின்றது. அந்நேரத்திலும் அவளது மனம் "முருகா எனக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க நீ அருள் புரிய வேண்டும். குழந்தையுடன் உன் சன்னதிக்கு வந்து மாவிளக்கு ஏற்றுவதற்கு நீ கிருபை செய்திடு" என்று பிரார்த்திக்கிறாள். இதயம் பிரார்த்தனை செய்ய இதழ்களில் அவன் பருகப் பருக தேன் சுரக்கிறது. ஆகிருதியான அவன் மார்பின் உரோமங்களை உரசி உரசி முந்தானை மொட்டுக்கள் மலர்கின்றன. விலகிய ஆடையின் இடையினில் துலங்கிய நாபியில் அவனது விரல்கள் மேய்கின்றன. அந்த மோதிர விரல்களை மேலும் நகரவிடாமல் வளைக்கரமொன்று தளர்வாகத் தடுக்கின்றது. ஆனந்தகான அமுதமழையாக அவனை அவள் வர்ஷிக்கிறாள். அதில் மூல்கித் திளைத்தவனில் இருந்து வியர்வையுடன் முத்துக்களும் சிதறுகின்றன. சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது. சத்தான கருவில் வித்தாக எதுவும் தீண்டியதில்லை இதுவரை. கல்லாகி நின்ற மருங்குகள் அனல்மேல் மொழுகாகி நெகிழ்கின்றன. வியர்வை மதுவில் மூழ்கிய கனியை கொஞ்சி கொத்தி சுவைக்கும் கிளியாக ....... அந்தப்புரத்தில் ஆனந்தலீலை அதிகாலைவரை நீடிக்கின்றது. நேரத்துடன் கதிரவன் எழுந்து கொள்கிறான். இன்னும் அவள் களைப்பில் சாந்தமான முகத்துடன் உறங்குகிறாள். இதழ்களில் சிறு புன்னகையும் சேர்ந்திருக்க அதை சிறிது ரசித்து விட்டு அவள் நெற்றியில் நெளிந்த முடியை கொஞ்சம் ஒதுக்கி சிறு முத்தமிட்டு எழுந்து கொள்கிறான். அவள் கட்டியிருந்த சேலை எட்டிக் கிடந்ததால் அந்த ஆறடி அழகுச்சிலையை தனது நாலுமுழத்தால் போர்த்திவிட்டு சறத்தை அணிந்து கொண்டு வெளியே வருகிறான். அதற்காகவே காத்திருந்த ஆச்சியும் இரண்டு கோப்பைகளில் முட்டைக் கோப்பி எடுத்து வந்து ஒன்றை அவனிடம் குடுத்து விட்டு மற்றதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வருகிறாள். --- பிள்ளை எழும்பி இதைக் குடித்து விட்டு படனை. ஆறப்போகுது சுட சுட குடி நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு வேட்டியால் போர்த்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறுகிறாள். கதிரவன் எழுந்தவுடன் நிர்மலாவுக்கும் விழிப்பு வந்துவிட்டது. ஆனால் தான் இருந்த நிலையில் துணி எடுக்க அவகாசமில்லாததால் உறங்குவதுபோல் பாவனை செய்கிறாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தனது வேட்டியால் போர்த்திவிட்ட அந்தக் கரிசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு அவள் எழும்புவதற்குள் ஆச்சியும் உள்ளே வந்து விட்டா அதனால் மீண்டும் தூக்கம்போல் நடிப்பு. அவர்களது அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது ஒரு சரியான பாதுகாப்பான இடத்துக்கு தான் வந்திருப்பதாக உணர்கிறாள்......! மலரும்.........! 🌼
  19. சும்மா கலாய்ப்புக்குத்தானே எழுதினது. குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்து சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் வாசிப்போம்.
  20. செல்லம்! உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  21. கவனம் அப்பு ப்ரசர் ஏறிக்கிடக்கிற மாதிரி தெரியுது. கவிதை சொல்லுது..... மீள் வருகை நலமாகட்டும்.
  22. வணக்கம் பரணி. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி
  23. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி பரணி. யாழ் இணையம் வாழ்க்கைத்துணையை கண்டடைய உதவியது என்பது புதிய தகவல்.!
  24. அடையாளங்காட்டியமைக்கு நன்றி
  25. நல்ல கவிதையுடன் மீள் வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
  26. அப்புறம் ஏனையா விவாகரத்து எடுத்தீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.