Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46793
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    2958
    Posts
  3. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8557
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/19/23 in all areas

  1. எட்டு வீட்டுக்குப் போகும்போது ஒரு லட்ச ரூபாய்களை எடுத்துச் சென்று எல்லோரும் நிற்கும்போது தங்கையின் கைகளில் கொடுக்கும்படி கணவரிடம் சொல்ல மறு பேச்சுப் பேசாமல் எடுத்துச் சென்று கொடுக்கிறார். அதன் பின்தான் என்னால் நிம்மதியாக உண்ண முடிகிறது. ஆனாலும் என்ன, அது முடிய மாறிமாறி அந்தக் கோவில் இந்தக் கோவில் விரதம் என்று ஒரு மாதமாக ஒரே மரக்கறிதான் என்பது வேறுகதை. ஆனால் நாங்கள் அங்கு தொடர்ந்து நிற்கவில்லை என்பது எம்மைக் காப்பாற்றிவிட்டது. அடுத்தநாள் கிளிநொச்சி செல்வதற்குக் கிளம்பி காலை 9.30 இக்கு இணுவிலுக்கு வரும் தொடருந்தில் ஏறி அமர்ந்தாச்சு. இரண்டாம் வகுப்பு டிக்கட் ஒருவருக்கு 350 ரூபாய்கள். மூன்றாம் வகுப்பில் எக்கச்சக்கமான சனம். ஓரளவு புதிய தொடருந்து. சுத்தமாகவும் இருக்க பாராக்குப் பார்ப்பதும் கதைப்பதுமாகப் பொழுதுபோக யாழ் ப்பாணத்தில் இரு சிறுவர்களுடன் ஒரு குடும்பம் ஏறி எமக்கு அடுத்த பக்கத்து இருக்கைகளில் அமர்கின்றனர். மனைவி நல்ல நகைநட்டுகள் போட்டு அழகான ஆடையும் அணிந்திருக்க கணவனும் பிள்ளைகளும் கூட நல்ல ஆடையுடன் பார்க்க நல்ல குடும்பம் போல் இருக்கிறது. தொடருந்து புறப்பட்டவுடன் இருக்கைகளில் இருக்காமல் இரு பையன்களும் சாண்டில்சுடன் இருக்கைகளின் மேல் தாவுவதும் குதிப்பதும் தாயை ஏதோ கரைசல் குடுப்பதும் இந்தத் தொங்கலில் இருந்து அந்தத் தொங்கல் வரை ஓடுவதுமாக ஒரே அட்டகாசம். கணவனும் மனைவியும் பிள்ளைகள் ஏதோ சாகசம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு எரிச்சல் வருகிறது. என் முகத்தைப் பார்த்தே நான் ஏதோ சொல்லப் போகிறேன் என்று எண்ணி என் கணவர் நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடிப்படு என்கிறார். நானும் சரியென தலையை ஒருபக்கம் சாய்த்து கண்களை மூட தூக்கம் நன்றாக வருகிறது. எவ்வளவுநேரம் தூக்கினேனோ தெரியாது என் கன்னத்தில் எதுவோ விழுந்ததுபோல் இருக்கத் திடுக்கிட்டு விழித்து அங்கும் இங்கும் பார்க்கிறேன். கணவர் ஒரு பிஸ்கட் பக்கற்றை என் காலடியில் இருந்து மெதுவாக எடுக்கிறார். பிஸ்கட் சாப்பிடவே என்னை எழுபின்நீங்கள் என்று கேட்க மகள் சிரிக்கிறாள். உதில சிரிக்க என்ன இருக்கு என்று கேட்க, மனிசன் பிஸ்கட்டை எடுத்து அந்தப் பக்கம் உள்ளவர்களிடம் நீட்ட அந்தப் பையன் வெடுக்கென கணவனின் கைகளிலிருந்து அதைப் பிடுங்குகிறான். அவன் எறிந்த பக்கட்தான் என் கன்னத்தில் விழுந்திருக்கு என எனக்குப் புரிகிறது. பிஸ்கற் பக்கற்றை கண்டபடி பிரித்து உடைத்து எடுத்து உண்கிறான் அவன். மற்றப் பையனும் ஓடிவந்து தானும் பறித்து உண்கிறது. காலின் கீழே பிஸ்கட் தூள்கள் கொட்டுண்டு கிடக்கின்றன. தாயும் தகப்பனும் எதுவித சுரணையுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க நீங்கள் ஒழுங்கக்காகப் பிய்த்துக் கொடுங்கோ என்று சொல்ல வாயெடுக்க, மகள் வேண்டாம் அம்மா என கண்களால் சைகை காட்ட நான் மறுபுறம் திரும்பிக் கொள்கிறேன்.கணவர் மகளுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் காட்டி ஏதேதோ சொல்லியவண்ணம் வர நான் என் பண்ணை பற்றியே எண்ணியபடி வருகிறேன். ஒன்றரை மாணித்தியாலத்தில் கிளிநொச்சியை சென்றடைகிறோம். முன்னரே ஹோட்டல் ஒன்றை தொலைபேசியில் தொடர்புகொண்டு புக் செய்து வைத்ததனால் ஓட்டோ ஒன்றை கூப்பிடுகிறோம். கடும் வெயிலாக இருக்கிறது. ஹோட்டலின் பெயரைக் குறிப்பிடுகிறார் கணவர். 1500 ரூபாய்கள் வரும் என்கிறார் ஓட்டோக்காரர். அவ்வளவு தூரமா என்கிறேன் நான். கரடிப்போக்குச் சந்திக்குப் போக அவ்வளவு தேவையில்லையே தம்பி என்று கணவர் கூற 1000 ரூபாய்க்குக் குறைக்க ஏலாது என்கிறான். சரி என ஏறி அமர்ந்தால் ஒரு மூன்று கிலோமீற்றர் போக கோட்டல் தெரிகிறது. கீழே கடைகள் இருக்க முப்பது படிகள் நடந்து மேலே ஏறிப் போகக் கோட்டல். உள்ளே சுத்தமாக இருக்கிறது. ஆனால் யாரையும் காணவில்லை. தொலைபேசியில் அந்த இலக்கத்துக்கு அழைத்து யாரும் இல்லையா என்று கேட்க, நான் போன் செய்யிறன் உடனே வருவார்கள் என்கிறார் ஒருவர். நாம் சோபாவில் அமர்ந்து ஐந்து நிமிடங்கள் காத்திருக்க ஒரு பெண் வருகிறார். எங்களைக் கடந்து சென்றவர் எம்மை திரும்பியும் பார்க்காமல் சென்று வரவேற்பு மேசையில் எதையோ தேடுகிறார். நான் எழுந்து சென்று நீங்கள் இங்கு வேலை செய்பவரோ என்று கேட்கிறேன். ஓம் பொறுங்கோ வாறன் என்றுவிட்டு லாச்சியை இழுத்தும் பார்க்கிறா. பின் வேறு ஒன்றைத் திறந்து திறப்பையும் ஒரு கொப்பியையும் எடுக்கிறா. வெளிநாடா? உங்கட பாஸ்போட்டுகளைத் தாங்கோ என்கிறா. நான் கணவரின் பாஸ்போட்டை மட்டும் கொண்டுவந்து கொடுக்க, மற்றதுகள் என்கிறா. என்ன மற்றதுகள் என்கிறேன் நான். பாஸ்போட் என்கிறா. நாங்கள் குடும்பம் ஒரு பாஸ்போட் காணும் என்கிறேன். அவர் வேறொன்றும் பேசாமல் பெயரை எழுதிவிட்டு பாஸ்போட்டைத் தந்துவிட்டு வாங்கோ என்றபடி முன்னால் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு அறையைத் திறக்கிறா. வெளியே யன்னல் இல்லாத அந்த அறை சிறிதாகவும் இருட்டாகவும் இருக்க நாம் இரு கட்டில்களுடன் மூன்றுபேர் தங்குவதற்குரிய அறைகள் தானே கேட்டோம். இது சிறிதாக இருக்கிறது. வேறு அறை காட்டுங்கள் என்கிறேன். அப்ப மேலேதான் போகவேண்டும் என்றபடி மேலே செல்ல நாமும் பின்தொடர்கிறோம். அந்த அறை பெரிதாக இருக்கிறது. AC, Fan எல்லாம் இருக்கிறது. Toilet ஐ எட்டிப் பார்க்க சுத்தமாக இருக்கிறது. மகள் உடனே கட்டிலின் மேலே ஏறிச் சாய்ந்தபடி TV பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சூட்கேசை வைத்துவிட்டு நானும் ஏறி அமர்கிறேன். கணவர் ஏசியை போட நன்றாக இருக்கிறது. இப்ப மதிய உணவுக்குச் செல்வோமா என்கிறார் கணவர். ஒரு மணித்தியாலம் செல்லச் செல்வோமென்று மகள் கூற சரி என்று கூறிவிட்டு நானும் கணவரும் AC குளிரில் கட்டிலில் சாய்கிறோம். உடனே கதவு தட்டும் சத்தம் கேட்க என்னடாய்து என்று எழுந்து சென்று நான் கதவைத் திறந்தால் ஒரு றேயில் கோப்பிக் கோப்பைகளை நீட்டுகிறார். நாம் கேட்கவில்லையே என்கிறேன். இது ஃப்ரீ தான் என்கிறார். நன்றி சொல்லிவிட்டு வாங்கி மற்றவர்களுக்கும் கொடுக்கிறேன். நன்றாகச் சீனி போட்டு nescafe வாசனையுடன் இருக்கிறது. குடித்து முடிய மீண்டும் நீட்டி நிமிர்ந்து கட்டிலில் படுக்க எத்தனை சுகம் என எண்ணியபடி நன்றாகத் தூங்கிவிட மீண்டுமெழுந்தபோது ஒரு மணிமுப்பது நிமிடம் என தொலைபேசி சொல்கிறது. கீழே இறங்கிச் சென்றால் பக்கங்களில் இரண்டு மூன்று சிறு உணவகங்கள். ஒரு கடையில் நுழைகிறோம். அங்கும் இங்கும் வேலையாட்கள் செல்கிறார்கள். ஒருவர் கூட எம்மை வாருங்கள் என்று கூப்பிடவில்லை. ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு வாங்கோ வேறு கடைக்குப் போவோம் என்று கூறி வெளியே வந்து போவோர் சிலரை இங்கு எது நல்ல உணவகம் என்று கேட்க சிலர் தெரியாது என்கின்றனர். சிலர் இன்னும் சில கடைகளைக் காட்டுகின்றனர். ஓட்டோ காரரிடம் கேட்டால் காட்டுவார்கள் என எண்ணி அவற்றை மறித்தால் அவை ஆட்களோடு செல்வதால் நிறுத்தவில்லை. வீட்டில் இருந்து வரும்போது தொப்பியையும் கொண்டுவரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நிறுத்தியிருக்கும் ஓட்டோவையும் காணவில்லை. ஓட்டோவைப் பிடியுங்கள் என்றுவிட்டு நானும் மகளும் ஒரு கடையுள் நுழைந்து குடை இருக்கா என்று கேட்கிறோம். மகள் தொப்பிகளைப் பார்த்து ஒன்றை எடுக்க நான் குடை என்ன விலை என்று கேட்க 2500 ரூபாய்கள் என்கிறார் கடைக்காரர். நான் ஒரு கூடையைத் தெரிவுசெய்து எடுக்க அதில் 1200 என்று விலை தொங்குகிறது. இதில் 1200 என்று போட்டிருக்க நீங்கள் இரு மடங்கக்காகச் சொல்கிறீர்களே என்கிறேன். அது பழைய விலை தங்கச்சி. இப்ப விலை கூடீற்றுது. அதை கிழிக்க மறந்துபோனன் என்கிறார். தொப்பிக்கும் அதற்கும் சேர்த்து 3000 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளியே வர கணவர் ஓட்டோவை மறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நல்ல உணவகம் என்றால் மூன்று மைல் செல்லவேண்டுமாம் அம்மாச்சி பக்கத்தில் இருக்காம் என்கிறார். மகளும் ஒன்லைனில் பார்த்துவிட்டு இரண்டு மூன்று உணவகங்கள் தூர இருக்கு என்கிறாள். எதற்கும் அம்மாச்சிக்கே இப்ப போவோம். மாலை உணவுக்கு அங்கே போகலாம் என்கிறேன். அங்கு சென்று பார்த்தால் நிறையப்பேர் இருக்கிறார்கள். 2017 இல் வந்தபோது இருந்த அம்மாச்சி உணவகம் சுத்தமாக இருந்தது. தொங்கலில் வெறுமையாக இருந்த மேசையில் சென்று அமர்கிறோம். மேசையில் ஆங்காங்கே உணவுப் பருக்கைகள் கிடக்கின்றன. உண்ட தட்டுக்களும் யாரும் எடுப்பாரற்றுக் கிடக்க கணவர் அங்கு வேலை செய்த பெண்ணை கூப்பிட்டு துடைக்கும்படி கூற அவர் தண்ணீருடன் ஒரு துண்டைக் கொண்டுவந்து துடைத்துவிட்டுப் போகிறார். நல்ல காலம் நான் டிசு கொண்டுசென்றதால் அதை எடுத்து நன்றாக மேசையைத் துடைத்துவிட்டு உணவை எடுக்கச் செல்கிறேன். மகளும் பின்னே வர அவளையும் கேட்டு விருப்பமானவற்றை வாங்கி வருகிறோம். அப்பம், இடியப்பம் எல்லாம் ஆறிபோய் இருக்கு. நான் வழமைபோல தோசை, வடை. மகள் எடுத்த இட்லியும் ஆறிப்போய் இருந்தாலும் சாம்பார் சூடாக இருக்கிறது. நான் தேநீர் எடுக்க தகப்பனும் மகளும் பிரெஸ் பழச்சாறுகளை எடுக்கின்றனர். நான் எழுந்து சென்று ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கிறேன். ஏன் முன்புபோல் சுத்தமாக இல்லை என்று கேட்க இப்பதான் லஞ்ச் டைம் முடிந்து பழையவர்கள் போக நாங்கள் வந்துள்ளோம். அதுதான் இப்படி என்று சமாளிக்கிறார். பொரித்த மோதகமும் பார்க்க நன்றாக இருக்க அதில்ஒரு ஆறை பார்சல் செய்துகொண்டு வெளியே வர உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்கிறார் கணவர்.
  2. ஏழு தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என் கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என் தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது. தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம். வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை. மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும், துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன் பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும் என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.
  3. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை (எல்லாரும் உக்ரையினிலை பிசி😃)
  5. சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும் சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால் எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும் சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும் சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால் எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும் சங்கடம் தீர்த்திடும் பிள்ளையார் எங்கள் சந்திரசேகர பிள்ளையார் வேண்டியத்தருளும் பிள்ளையார்
  6. இல்லை... Software update ஒன்று குழப்பியடித்து விட்டது என நினைக்கிறேன்.
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 💐 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. @யாயினி க்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  9. Wheel Chair போன்ற சேவைகளை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. ஆனால், காசு மாற்றிக் கொண்டு போவதுண்டு. பம்பாய், கட்டார் போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்ள Toilet இனை பயன்படுத்த முதல் அங்கிருக்கும் கிளீனரை கண்டு பிடித்து (அனேகமாக அங்கேதான் நிற்பார்கள்), அவருக்கு $10 இனை கொடுத்து நான் பாவிக்க நினைக்கும் Toilet ட்டை சுத்தம் செய்ய சொல்லிய பின் தான் பயன்படுத்துவது. அவருக்கு மகிழ்ச்சி, எனக்கு தூய்மை. சேர்விஸ் சார்ஜ் அறவிடும் உணவு விடுதிகளில் Tips கொடுப்பதில்லை. இங்கு (கனடிய) Tips ஆக மொத்த பில்லின் 10 அல்லது 15 வீதம் கொடுப்பதுதான் வழமை. கனடிய முறைகளில் (habits) இதுவும் ஒன்று. கொடுக்கப்படும் பணம் அங்குள்ள மிச்ச வேலையாட்களும் பகிரப்படும். என் மகன் கடந்த வருட கோடை விடுமுறையில் ஒரு உணவு விடுதியில் Dish washer ஆக part time வேலை செய்தான். வாரத்துக்கு டிப்ஸ் மட்டும் $100 இற்கு மேல் கிடைத்தது.
  10. எனது மைத்துனர் ஒருவர் இங்கு வைத்தியராக வேலை செய்கிறார் அவர் இரண்டு தொழில்கள், பல வீடுகள் என முதலிட்டுள்ளார், அவர் தனது நிதி ஆலோசகரை ஒன்றுக்கும் உதாவாதவர் என கூறுவார், காசினை வாங்கிவிட்டு பெரிதாக எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை என கூறுவார். அதன் உண்மைதன்மை தெரியாது, உங்களது முதலீடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிதி ஆலோசகர் தேவைப்படமாட்டார் என்றே கருதுகிறேன். நான் அறிந்தவரை நிதி ஆலோசகர்கள் சொந்த முதலீட்டு அனுபவம் குறைவானவர்களாக உள்ளனர், சரியான நிதி ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பது கடினம் என்றே கருதுகிறேன்.
  11. நீங்கள் அவுஸ்ரேலியாவில் வசிக்கிறீர்கள் என கருதுகிறேன். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டினை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன். அவுஸ்ரேலியாவில் வீட்டின் விலை ஒவ்வோரு பத்தாண்டிற்கும் இரட்டிப்பாவதாக கூறுகிறார்கள், அதாவது வருடாந்தர 7% விகித அதிகரிப்பு(10% அல்ல கூட்டு வட்டி அடிப்படையில்). அவுஸ்ரேலிய பணவீக்கம் சராசரியாக 4.75% வீட்டின் தேய்மானம் 2.5%, ஆனாலும் அவுஸ்ரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது வீட்டினில் ஏற்படும் நட்டத்தினை உங்களது வருமான வரியில் தள்ளுபடி செய்யமுடியும். இங்கு leverage வருமான அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது( வங்கியினால் வழங்கப்பட்ட கடன்) உதாரணமாக $700,000 வீட்டினை $140,000 முதலீட்டுடன் வாங்கினால் வங்கியின் $560,000 பெறுமதி 10 வருடத்தில் இரட்டிப்பாகிறது. வீட்டினை விற்கும் போது(12 மாதத்திற்கு பின்னர்) மொத்த பெறுமதியில் 50% மட்டும் வரி செலுத்த வேண்டும். https://moneysmart.gov.au/ இந்த இணைய தளத்தில் உங்களுக்கு தேவையான கணிப்புகளை செய்து கொள்ளலாம் இதன் மூலம் முதலீடு தொடர்பான சந்தேகங்களை சொந்தமாக தீர்த்து கொள்ளலாம். அதனால் ரியல் எஸ்டேட்டில் தனிய முதலிடுவது இலாபமா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம் என கருதுகிறேன்(இந்த இணையத்தளத்தினை முன்னர் பார்த்த போது அறிய முடிந்தது, தற்போது புதிய மாற்றங்களுடன் உள்ளது இதனை பயன்படுத்தவில்லை). வீட்டு முதலீடு தொடர்பான excel கணிப்பு உள்ளது அதன் காணொளியினை இங்கு பதிகிறேன் ஆர்வமிருந்தால், அதனை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.
  12. மிக நன்றாக எழுதுகின்றீர்கள் சுமே. சுவாரசியமாக உள்ளது. ஒருவர் பயணம் போகும் போது, மடிக்கணணியைக் கொண்டு போகாமல், பெரிய கணணியை கொண்டு போனதை வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் வந்து போகும் இடம் இது. சாதாரண நாட்களிலேயே குறைந்தது 1000 பேராவது வருவர். ஆனாலும் ஆகக் குறைந்த சுகாதார வசதி கூட எம்மவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. இது தான் எம் தமிழ் மக்களின் பொறுப்பின்மை. எப்படி கேவலமாக இருப்பினும், காசு கொடுத்து அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் தான் சனம் வருவினம் என்பதால் தான் அவர்கள் இப்படி செய்கின்றனர். இத்தகைய திமிர் கலந்த பொறுப்பின்மையை தென்னிலங்கையில் காண்பது மிகக் குறைவு.
  13. ஈழப்பிரியன், இப்போதுதான்... முழுப் பதிவையும் வாசித்து முடித்தேன். ஆபத்தில் சிக்கி இருந்தாலும்.. அதில் இருந்து மீண்டு மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வித்தையையும் தெரிந்து, நடந்து கொண்ட விதம் உங்களை ஒரு பக்குவப் பட்ட மனிதராக காட்டியது. நல்ல ஒரு அனுபவ பகிர்வு. 👍 🙂
  14. மூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.
  15. இரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.
  16. நம்பி ஏறலாம்👍; இதை நடத்துபவர் எமது ஆள், இது முன்னரே நடக்க வேண்டிய விடயம், இன்னும் இழுபடுவதிற்கு காரணம் தமிழ்நாடு அல்ல, நமது நாடுதான், வெளிப்படையாக பல விடயங்களை கூற முடியாது, தீவு பகுதியில் இந்திய உதவியுடன் விரைவில் சூரிய மின்கலத்தால் மின்சார Projects வரும் 🤞

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.