Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7055
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46798
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  4. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8557
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/03/23 in Posts

  1. பதினாறு அடுத்தநாளே பழைய காணித் தரகர் போன் செய்கிறார். தம்பி எங்களுக்குக் காணி ஒன்றும் வேண்டாம். இனிமேல் காணி பார்க்கக் கூப்பிடவேண்டாம் என்கிறேன். இல்லை அக்கா. இந்தக் காணியைப் பார்த்தால் உங்களுக்கும் அண்ணருக்கும் கட்டாயம் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்காட்டில் இதோட நான் கேட்க மாட்டன் என்கிறார். சரி அதையும் ஒருக்காப் பார்த்திடுவம் என்று நானும் கணவரும் மகளும் செல்ல பின்னாலேயே தங்கையின் கணவரும் வருகிறார். இணுவிலில் இருந்து இருபது நிமிடம் ஓட்டோவில் செல்ல தரகர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் பெரிய வளவு. தென்னை மரங்கள், மாமரங்கள், பாலாமரங்கள், வாழைத்தோட்டம் என நான் எதிர்பார்த்தவாறு காணி இருக்க நட்டநடுவே ட வடிவில் பழைய வீடு ஒன்றும் இருக்க எம் எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது. தங்கையின் கணவரிடம் எம் விருப்பத்தைக் கூற, நீங்கள் வாயத் திறக்கவேண்டா ம். நானே கதைத்துக்கொள்கிறேன் என்கிறார். வீட்டினுள்ளே சென்று பார்த்தால் அறைகள் நான்குமீற்றர் உயரத்துடன் இருக்கின்றன. மூன்று அறைகள், குசினி, சுவாமி அறை என்பவற்றுடன் நீளமான வரவேற்பறையும் குசினிக்குச் செல்வதற்கு நீண்ட தாள்வாரமும் இருக்கின்றன. எந்தவிதத் திருத்தவேலைகளும் தேவை இல்லை எனத்தெரிய இதை வாங்குவது என்று தீர்மானித்து 14 பரப்புக்காணியும் வீடும் ஒன்றேகால் கோடி என்கின்றனர். வீடு கட்டவே இப்ப ஒருகோடி முடியும் என்கிறார் இன்னொரு தரகர். எல்லாமாக நான்கு தரகர்கள் ஒவ்வொருத்தராக வந்து சேர, ஏன் இத்தனை தரகர்கள் என்றதற்கு இந்தக் காணி ஒருவர் இன்னொருவருக்குச் சொல்லிக் அவர் மற்றவருக்குச் சொல்லி இப்பிடித்தான் கூட்டி வருவார்கள். அதனால் தான் கனபேர் என்கிறார். ஒரு கிழமையில உங்களால் இங்கு பணத்தை எடுக்க முடியுமா என்று கேட்க ஓம் என்கிறார் கணவர். ஆறுமாதம் அவர்கள் வாடகை இல்லாமல் இந்த வீட்டில் இருப்பதற்குக் கேட்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று தரகர் கேட்க அதற்கென்ன இருக்கட்டும். ஆனால் நான் வீட்டுக்குள் வரமாட்டேன். காணியைத் துப்பரவு செய்ய, வேலி அடைக்க ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவேன் அதற்குச் சம்மதமா என்று கேளுங்கள் என்றுகூற, ஒரு முப்பத்தைந்து மதிக்கத்தக்க வீட்டின் உரிமையாளர் சம்மதம் என்கிறார். நான் காலை வேலைக்குச் சென்றால் வர இரவாகும். மற்ற இரண்டு பேரும்தான் இருப்பினம். எனக்குப் பிரச்சனை இல்லை என்கிறார். ஒரு கோடிக்கு பேசி முடிக்க தங்கையின் கணவர் நீங்கள் பணம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? இருந்தால் இன்றே அட்வான்ஸ் குடுக்கலாம் என்கிறார். என்னிடம் இருபதாயிரம் தான் இருக்கு என்கிறேன். அண்ணரிடம் கொடுங்கோ என்றுவிட்டு அவரையும் கூட்டிக்கொண்டு புரோக்கர்மார் நிற்குமிடம் சென்று காணி உரிமையாளரையும் கூப்பிட்டு பணத்தைக் கொடுத்து அடுத்த கிழமையே எழுத்தலாம் என்றுவிட்டு மகிழ்வோடு வீடு திரும்புகிறோம். இரண்டு நாட்களில் கணவரும் மகளும் லண்டனுக்குத் திரும்ப நானே தனிய ஓட்டோவில் சென்று அலுவல்கள் பார்த்து ஒரு வாரத்தில் எழுத்துவேலை எல்லாம் முடிய எனது சித்தியையும் மச்சாளையும் கூட்டிக்கொண்டு இரண்டாம் தடவை வீட்டுக்குச் செல்கிறேன். காணியைப் பார்த்ததும் என் சித்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஐந்து நிமிடத்தில் வளவைச் சுற்றிப் பார்த்தவர் 44 தென்னை நிக்குது. தேங்காய் நல்ல விலைக்கு விக்கலாம் என்றவுடன் நான் சிரிக்கிறேன். மச்சாளின் முகத்தில் எந்த உணர்வையும் காண முடியவில்லை. இணுவிலில் இருந்து போக வர ஓட்டோவுக்கு 2000 ரூபாய்கள். நான்கு புறமும் வேலிகள் எல்லாம் உயிர்வேலிகள். தென்னைகளில் 14 தென்னைகள் தறிக்கவேணும். உயரமாகி சோடைபோய்விட்டது என்கிறா சித்தி. மச்சாளும் அதை ஆமோதிக்க யாரையாவது பிடித்துவிடுங்கள் என்று அவர்களிடமே கேட்கிறேன். இணுவிலில இருந்து ஆர் இவ்வளவு தூரத்துக்கு வேலை செய்ய வரப்போகின்றனர் என்கின்றனர் இருவரும். நான்கு பக்கமும் மதில் கட்ட எக்கச்சக்கம் முடியப்போகுது என்கிறா சித்தி. பேசாமல் தகர வேலி அடியுங்கோ என்கிறா மச்சாள். கணவரிடம் கேட்க, கனக்கப் பணத்தை வீணாக்காதே என்கிறார். தங்கையின் கணவரைக் கேட்க இங்கிருந்து ஒருத்தரும் வரமாட்டார்கள் அக்கா. நீங்கள் உங்கே அயலட்டையில் விசாரித்துப் பாருங்கள் என்கிறார். தென்னை மரங்கள் வெட்டுவதற்கு யாரிடம் விசாரித்தும் சரியானவர்கள் அகப்படவே இல்லை. என் வளவுக்குப் பின்னால் மூன்று வீடுகள். அவர்களிடம் சென்று விசாரித்தால் எல்லாரும் வேலைக்குப் போறவை. வரீனமோ தெரியாது என்று என் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு விட்டதோடு சரி. என் நண்பனின் அம்மாவுடன் கதைத்தபோது தன்னிடம் வேலை செய்யும் இருவர் இருக்கின்றனர். அனுப்பிவிடுகிறேன் என்று கூற நானும் சரி என்கிறேன். அவர்கள் வந்ததும் அவர்களைப் பார்க்க ஒரு நம்பிக்கை வருகிறது. ஒரு தென்னை மரம் வெட்ட நான்காயிரம் என்கின்றனர். அவர்கள் கதைக்கும்போது என் ஓட்டோக் காரரும் நிற்க, துண்டுபோடுவதற்குத்தான் உந்த விலை. இது முழுசாகவே வெட்டி விழுத்தலாம். மூவாயிரம் கேளுங்கள் என்கிறார். அவர்களும் சம்மதிக்க அன்றே பதினாலு தென்னைகளையும் வெட்டி வீழ்த்திவிட காணி பார்க்கமுடியாமல் இருக்கு. மாலை வீடு திரும்பும்போது ஓட்டுனரை எங்கே அகற்றுவது என்று கேட்கிறேன். தேடித்தான் பார்க்கவேணும். சிலவேளை மரங்கள் சிலாகைக்காய் அறுப்பதற்கு எடுப்பாங்கள். ஆனால் நீங்கள் வெட்டிப்போட்டுக் கூப்பிட்டால் உடன வரமாட்டினம். எதுக்கும் உவங்களைக்கொண்டு துண்டுபோட்டு எங்காவது அகத்திவிடுங்கோ என்கிறார். அடுத்தநாள் அவர்கள் எல்லாவற்றையும் துண்டுபோட்டுக்கொண்டு நிற்க இரண்டு மூன்று பேர் வந்து தாம் அந்தக் குற்றிகளை விறகுக்கு எடுக்கலாமா என்கின்றனர். தாராளமாக எடுத்துப் போகலாம் என்கின்றேன். அதில் இருவர் வந்து மூன்றில் இரு பகுதியை பெட்டி பூட்டிய உளவு இயந்திரத்தைக் கொண்டுவந்து எடுத்துச் செல்கின்றனர். மூன்றாவதாய் எடுப்பதாகக் கூறியவர்களை மூன்றுநாட்கள் ஆகியும் காணவில்லை. தொலைபேசியை அடித்தாலும் எடுக்காமல் இருக்க பின்னால் உள்ள வீடுகளில் ஒன்றுக்குச் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தென்னங்குற்றிகள் இருக்கு. தேவை என்றால் சொல்லி விடுங்கள் என்றுசொல்ல தாமே எடுக்கிறோம் என்றும் ஆனால் தமக்கு அதை ஏற்றிவிட ஆட்கள் இல்லை என்கின்றனர். சரி நானே ஆட்களைத் தருகிறேன் என்றுவிட்டு இரு கூலி 6000 கொடுத்து காணிக்குள் வெட்டிய தென்னைமரங்களை எல்லாம் அகற்றியாச்சு.
  2. என்ன சகோதரி நீங்கள்???? தற்போது பல திரிகளில் புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் சொகுசாக வாழ்ந்தபடி...... என்றுதானே கருத்தெழுதுகின்றார்கள். அந்த தம்பி என்ன செய்யும்?
  3. இதுவரை உங்களின் பதிவில் இருந்து நீங்கள் நினைத்து சென்ற விடயங்கள் 60 % முடிவுற்று இருக்கிறது என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி இனி மேற்கொண்டு அதை சீரமைப்பதிலும் இடையிடை போய் பார்ப்பதிலும் செலவிடவேண்டும்." உடையவன் பாரா வேலை ஒருமுழம் கடடை" என்பார்கள் . உரியவர்கள் அங்கு நின்று அலுவல பார்ப்பது தான் மிகவும் சிறந்தது. சுமேரியிடம் எல்லாத்தையும் சொல்லும் கள்ளமில்லாத ,இரக்க,மனசு ஒன்று உண்டு. அது சில சமயம் உங்களுக்கே " பூமறாங்க் " மாதிரி திருப்பி தாக்க கூடும். சொந்த உறவுகளின் பிரச்சினைப்பற்றி சொல்லும் போது அவதானமாக இருங்கள். .யாரையும் நம்பாதீர்கள். வீட்டுக் காரன் பென்ஷன் வயதை எடட இருந்தால் , முடிந்தால் அங்கு சென்று இருப்பது நன்று. நாடு தொடர்ந்து நல்ல நிலைமையில் (?) இருக்கவேண்டும். உடமைகளுக்குப் பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ளுங்கள்
  4. ம்ம் நான் மறந்து போனேன்.செலவோடு செலவாக மதில் கட்டுறது கூடுதல் பாதுகாப்பு.எனக்கு அவர் வன்னிக்கு வரவில்லை என்பது ஒரு சின்ன ஏமாற்றம்.(சுயநலம்)
  5. மகிழ்ச்சி,அந்த ஸ்கூட்டிய மறந்திடாதீங்க😁
  6. இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் இழுத்தடிப்பு பற்றி கூற வந்தேன். நாங்கள் விடையங்களை நேரடியாக கதைத்து செய்ய நினைப்போம் ஆனால் அங்கிருப்பவர்கள் அப்படியல்ல. ஒரு விடையத்தை நேரடியாக சொல்ல கூட மாட்டார்கள். அவர்கள் சூட்சமமாக காய் நகர்த்துவார்கள். அப்பாவித்தனமாக இருக்கிறார்கள் போல வெளிப்பார்வைக்கு தெரியும்.
  7. தாய்மை , படம் அழகு இயற்கையோடு ஒன்றித்தது . நன்றி
  8. பிசுபிசுத்துப்போனன் கண்ணிவெடித் தாக்குதல் சதாசிவம் செல்வநாயகம் - செல்லக்கிளி சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், புரட்டாதி 19 ஆம் திகதியன்று, ஜனாதிபதி ஜெயவர்த்தன தேர்தல்ப் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். இந்தநாளே, செல்லக்கிளி தலைமையிலான புலிகளின் முதலாவது தோல்விகரமான கண்ணிவெடித் தாக்குதல் எத்தனிக்கப்பட்டது. ஜெயாரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக, தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழ மாணவர் அமைப்பு மற்றும் கொம்மியூனிஸ்ட் அமைப்புகள் ஒழுங்குசெய்த ஹர்த்தால் நிகழ்விற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் திட்டமிட்டிருந்தனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த விவசாயக் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்லக்கிளி. புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த செல்லக்கிளி, பஸ்டியாம்பில்லை மீதான துணிகரமான திடீர்த் தாக்குதலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். தம்மைக் கைதுசெய்ய வந்திருந்த பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் குழுவினரை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியவர். பஸ்டியாம்பிள்ளை தேநீர் அருந்த எத்தனிக்கும்போது, அவரின் இயந்திரத் துப்பாக்கியைப் பறித்து அதனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றவர். செல்லக்கிளியின் துரித அசைவுகளுக்காகவும், சூழ்நிலையினை அவதானித்துச் செயற்படும் விவேகத்திற்காகவும் பிரபாகரன் அவரை கண்ணிவெடித் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார். வீதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத நிலையிலிருந்த கண்ணிவெடியைப் பரிசோதித்த ராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அது புலிகளால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். அக்குண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் சரியான முறையில் அடைக்கப்பட்டிருக்கவில்லை. உருக்கு இரும்பிலான கோதுகளினுள் ஐந்து கிலோகிராம் வெடிபொருட்களும்,இரும்புத் துண்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஹொண்டா மின்பிறப்பாக்கியொன்றிலிருந்து இக்குண்டினை வெடிக்கவைக்க மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. பொண்ணாலை வீதியூடாக தினம் தோறும் பயணிக்கும் கடற்படையினரின் ரோந்தைக் குறிவைத்து தமது முதலாவது பரீட்சார்த்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தலாம் என்று செல்லக்கிளியும் தோழர்களும் தீர்மானித்தார்கள். காரைநகர் கடற்படை முகாமினுள் குடிநீர் இருக்கவில்லை. முகாமினுள் உப்புத்தண்ணிர்ரே கிடைத்தது. ஆகவே, முகாமின் பாவனைக்காக யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த மூளாய்க் கிராமத்திலிருந்தே குடிநீர் கடற்படையினரால் எடுத்து வரப்பட்டது. ஒவ்வொருநாள் காலையும் இதற்காக முகாமிலிருந்து மூன்று தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வெளிக்கிளம்பிச் செல்லும். புரட்டாதி 29 ஆம் திகதி, காலை 6:30 மணிக்கு வழமை போல மூன்று தண்ணீர் தாங்கி வண்டிகளுடன் கடற்படை அணியொன்று கிளம்பிச் சென்றது. இந்த அணிக்கு கடற்படை அதிகாரியான செல்வரட்ணம் பொறுப்பாக இருந்தார். முன்னால் சென்ற இரு ஜீப் வண்டிகளில் 12 கடற்படை வீரர்கள் ஏறிக்கொள்ள, கடற்படை வாகனத் தொடரணி மெதுவாக பொன்னாலை வீதியூடாக நகர்ந்துசெல்லத் தொடங்கியது. காரைநகர் பொன்னாலை வீதி புரட்டாதி மாதம் என்பது பொதுவாக யாழ்க்குடாநாட்டைப் பொறுத்தவரையில் வறட்சியான காலமாகும். வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மழைவீழ்ச்சியைக் கொண்டுவரும் காலம் புரட்டாதி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. யாழ் ஏரியினால் உருவாக்கப்பட்ட மணற்திட்டுக்கள் அவ்வீதியின் இருமரங்கிலும் தொடர்ச்சியாகக் காணப்படும். சில மணற்திட்டுக்களில் சிறிய பற்றைகளும் அவ்வபோது வளர்ந்திருக்கும். வீதியின் தென்முனையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் நான்கு அகழிகளை செல்லக்கிளியும் தோழர்களும் வெட்டினார்கள். இந்த அகழிக்குள் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு இணைக்கப்பட்ட நீண்ட மின்கம்பிகள் மணற்மேட்டின் பற்றைகளுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கிக்கு இணைக்கப்பட்டிருந்தன. மின்கம்பிகள் வெளித்தெரியாவண்ணம் அவற்றின் மீது தாரும், மணலும் கொட்டப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. மின்பிறப்பாக்கிக்கு அருகில் ஒளிந்திருந்த செல்லக்கிளி கையில் கண்ணிவெடியினை இயக்கும் கருவியை வைத்திருந்தார். மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குப் பொறுப்பாக அருணாவும் அருகில் இருந்தார். வழமைபோல, அதே நேரத்திற்கு கடற்படையின் வாகனத் தொடரணி அவ்வீதியூடாக வந்தது. வாகனங்களின் வேகத்தைத் தவறாகக் கணிப்பிட்ட செல்லக்கிள், தொடரணியில் முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடியின் இயக்கு கருவியை அழுத்திவிட்டார். முதலாவது கண்ணிவெடி வெடித்துச் சிதறியபோது உள்ளிருந்த இரும்புத் துண்டுகளும், கற்களும் மணலும் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. அவ்வெடிப்பு சுமார் ஒரு மீட்டர் ஆளமான அகழியொன்றை வீதியில் ஏற்படுத்தியது. ஆனால், மீதி மூன்று கண்ணிவெடிகளும் வெடிக்கத் தவறிவிட்டன. தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தன்னுடன் இருந்த அனைவரையும் தாம் வந்திருந்த மினி பஸ் நோக்கி ஓடுமாறு கட்டளையிட்டார் செல்லக்கிளி. அருணா மின்பிறப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பாரம் மிகுதியால் அவர் சிரமப்பட்டதுடன், ஏரிக்கரை மண்ணில் அவரது கால்கள் புதைய ஆரம்பித்தன. ஆகவே, வேறு வழியின்றி, மின்பிறப்பாக்கியை அவ்விடத்திலேயே விட்டு அவர் ஓடத் தொடங்கினார். கடற்படை அணிக்கு முன்னால் 50 இலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த புலிகளை நோக்கிக் கடற்படையினர் ஒரு துப்பாக்கி வேட்டையேனும் தீர்க்க நினைக்கவில்லை. இத்தாக்குதல் குறித்த விசாரணையில் சாட்சியளித்த செல்வரட்ணம், தனது வீரர்கள் அனைவரும் தமக்கு முன்னால் நடப்பதைப் பார்த்து அதிர்சிக்குள்ளாகி விக்கித்து நின்றுவிட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் பிரபலமான மிட்சுபிஷி ரோசா மினிவான் கடற்படையினர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நடப்பதை அறியமுன்னர், புலிகள் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். சுமார் 400 மீட்டர்கள் வரை ஏரிக்கரை மணலில் ஓடி, தமக்காகக் காத்து நின்ற ரோசா பஸ் வண்டியில் ஏறி மூளாய் நோக்கித் தப்பொஇச் சென்றது புலிகளின் அணி. முதல் நாள் இரவு கடத்தப்பட்ட அந்த பஸ்வண்டியில் மூளாயிலிருந்து பொன்னாலைப் பகுதிக்கு புலிகளின் தாக்குதல் அணி வந்திருந்தது. தாக்குதல் தோல்வியின் பின்னர், மயிரிழையிலேயே அவர்கள் தப்பிச் சென்றார்கள். கடற்படை சுதாரித்துக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருந்தால் புலிகளின் தாக்குதல் அணியில் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். இத்தாக்குதல் தொடர்பாக நடந்த விசாரணைகளில் செல்வரட்ணத்தை விசாரித்த உயரதிகாரி, "நீங்கள் அன்று சுட்டிருந்தால், புலிகளின் முதுகெலும்பை முறித்திருக்கலாம்" என்று ஆத்திரத்துடன் கத்தினார். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியே கண்ணிவெடித் தாக்குதலை புலிகளின் தாக்குதல் முறைகளில் இலங்கை படைகளுக்கு கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதமாக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கும் உத்வேகத்தினைக் கொடுத்திருந்தது. பின்னாட்களில் நடைபெற்ற புலிகளின் பல வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்களையடுத்து, தெற்கின் ஊடகங்கள் உள்நாட்டுப் போரினை. "கண்ணிவெடிப் போர்" என்று அழைக்கும் நிலையும் உருவாகியிருந்தது. இராணுவத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கவும் கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் மிகவும் துல்லியமாகப் பாவிக்கத் தொடங்கினர். செல்லக்கிளியைப் பொறுத்தவரையிலும் இத்தாக்குதலின் தோல்வி அரிய சந்தர்ப்பம் ஒன்றினைத் தவறவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் மீதும் கடுமையான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதுமான ஒரு தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியாது போய்விட்டது. யாழ்ப்பாணக் கோட்டை 2019 இல் ஆனால், இத்தாக்குதல் தோல்வியினால் எல்லாமே இழந்துவிட்டதாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையில் அன்று காலைவரை தங்கியிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு இக்கண்ணிவெடி முயற்சி பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சினமடைந்து காணப்பட்டார். இக்கண்ணிவெடித்தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புச் சபையினை அவர் உடனடியாகக் கூட்டியிருந்தார். இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், வடமாகாண இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க, வடமாகாண உதவி ராணுவத் தளபதி லயனல் பலகல்ல, கப்டன் சரத் முனசிங்க, யாழ்ப்பாணத்திற்கான ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி உட்பட பல மூத்த ராணுவ பொலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கை ராணுவத்தின் பேச்சாளராகப் பின்னாட்களில் கடமையாற்றிய கேணல் சரத் முனசிங்க ஜெயவர்த்தன மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். புலிகளின் மீளெழுச்சி பற்றி தனக்குத் தெரியத் தராமைக்காக கப்டன் சரத் முனசிங்கவை அவர் கடுமையாக வைதார். முனசிங்கவைப் பார்த்து ஜெயார் பின்வருமாறு கேட்டார், "பிரபாகரன் தற்போது எங்கே?". "அவர் மதுரையில் இருக்கிறார்" என்று முனசிங்க பதிலளித்தார். கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரென்று கேட்டறிந்துகொண்ட ஜெயார், "இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறியாதுவிட்டால், எமக்குப் பெரும் பிரச்சனையாக இது மாறச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால், தனக்கெதிராக நடத்தப்பட்ட ஹர்த்தாலினாலோ, அல்லது தனது வருகையினையொட்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலினாலோ ஜெயார் பயந்து ஓடிவிடவில்லை. தனது திட்டத்தின்படியே யாழ்ப்பாணம் முத்தவெளியரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜெயாருக்கு முன்னதாக காமிணி திசாநாயக்க மேடையில் பேசினார். தனது பேச்சின் நிறைவில் , "எமது தலைவர் இப்போது உங்கள் முன் உரையாற்றுவார். அவர் உங்களிடத்தில் முக்கியமான விடயம் ஒன்றுபற்றிப் பேசுவார்" என்று கூறி முடித்தார். அடுத்ததாக ஜெயவர்த்தன பேசத் தொடங்கினார். தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றித் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாக தான் தமிழர்களின் பிரச்சினை குறித்து அறிந்துகொண்டதாக அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கானஅடிப்படைகளை தான் உருவாக்கியிருப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவிருப்பதாக அவர் கூறினார். தனது அடுத்த இலக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதே என்று கூறிய ஜெயார், அதற்கான மக்களை ஆணைக்காகவே தான் தமிழ் மக்களிடம் வந்திருப்பதாகவும் கூறினார். ஈரோஸ் அமைப்பினரால அனுப்பப்பட்ட இளைஞர் ஒருவர் கூட்டத்தில் இருந்து எழுந்து, "அப்படியானால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து எதற்காகப் பாதயாத்திரை சென்றீர்கள்?" என்று ஜெயாரைப் பார்த்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "ஆம், நான் எதிர்த்தேன். இனிமேலும் யாராவது அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க நினைத்தாலும், நான் மீண்டும் கண்டிக்குப் பாத யாத்திரை போவேன்" என்று அகம்பாவத்துடன் அந்த இளைஞனைப் பார்த்துக் கூறினார். ஆனால், ஜெயார் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மேடையைச் சுற்றியிருந்த தூண்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சில ஈரோஸ் இளைஞர்கள் அறுத்தெறிந்தார்கள். இதனையடுத்து மேடை சரிந்துவிழ, மேடையிலிருந்த காமிணியும், ஜெயாரும் கீழே விழுந்தார்கள். ஆனால், ஜெயாருக்கு உடம்பில் காயங்கள் எதுவும் படவில்லை. ஆனால், அவரது இதயத்தில் பலமான அடியொன்று விழுந்துவிட்டது. 79 வயதான ஜெயாரின் 50 வருடகால அரசியல் வாழ்க்கையில் அன்றுபோல் என்றுமே அவர் அவமானப்பட்டதில்லை. ஆகவே, தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற அவரது வெறி இன்னும் இன்னும் அதிகமாகியது.
  9. பதினைந்து இரவு கொழும்பு சொய்சா புரத்தில் இருந்து 10 மணிக்கு வெளிக்கிட்ட சொகுசு பஸ் விடிகாலை 4.30 க்கு இணுவிலுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு 4500 ரூபாய்கள். நல்ல வசதியான பஸ்தான். ஓட்டுனர் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறிக் கதைக்க அவர் சிங்களவரா தமிழரா என்றுகூட மட்டுக்கட்ட முடியவில்லை. அடுத்தநாள் எல்லோரும் வரவேற்பறையில் இருந்து கதைத்துக்கொண்டிருக்க காணிகள் பார்த்த கதையும் வருகிறது. வேறு காணிகள் பார்க்கவில்லையோ என்கிறா மச்சாள். பார்த்துப் பார்த்து களைத்துவிட்டது. மிஞ்சிப்போனால் உதயனின் காணி இருக்குத்தானே. அதற்குள் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டாவது இருக்கலாம் தானே என்கிறேன். உடனே கணவரின் தங்கை மகள் “தோட்டக் காணிக்குள் எப்பிடி நீங்கள் வீடு கட்ட முடியும்? நாங்கள் விடவே மாட்டோம்” என்கிறா. கணவர் இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய் நிற்க எனக்குக் கோபம் வருகிறது. “எம்மை வீடு கட்ட வேண்டாம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உங்கள் அம்மா சொன்னாக்கூடப் பரவாயில்லை” என்கிறேன். “ ஏன் அவள் இந்த வீட்டுப் பிள்ளை தானே. அவளுக்குக் கதைப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு” என்கிறா. இருக்கட்டும். எனக்குச் சொந்தமான காணியில் நான் எதுவும் செய்ய முடியும் என்கிறார் கணவர். இல்லை அண்ணா சுற்றிவர மற்றவர்கள் தோட்டம் செய்யும் போது அவர்கள் ஓம் என்று சொல்லாமல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறா தங்கை. அப்படியும் இருக்குமோ என்று நான் எண்ணிவிட்டுப் பேசாமல் இருக்க, அப்ப நீயே இந்தக் காணியையும் எடுத்துக்கொண்டு காசைத் தா என்கிறார் கணவர். உடனே அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒரு இரண்டு ஆண்டுகள் செல்ல வாங்குவதைப்பற்றி யோசிக்கிறேன். அதுவும் நான் தான் விலையைச் சொல்வேனே தவிர நீங்கள் சொல்லும் விலைக்கு நான் வாங்கமாட்டேன் என்கிறா. எம்மை விட அவர்களிடம் பணம் இருப்பது ஊருக்கே தெரிந்த விடயம். என் மகள் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்கிறாள். இத்தனை நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்த தங்கையின் கணவர் சரிசரி தேவையில்லாமல் உந்தக் கதையள் எதுக்கு நிப்பாட்டுங்கோ என்று கூறிய பின் யாரும் எதுவும் பேசாது எழுந்து செல்கிறோம். எனக்கு மனதுள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. கணவர் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர் என்னிடம் ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் புலம்பியதில் இருந்து புரிய, என் தங்கையின் கணவருக்கு போன் செய்து உங்களுக்குத் தெரிந்த லோயர் யாராவது இருந்தால் கூறுங்கள் என்கிறேன். தனக்கு நன்கு தெரிந்தவர் மணிவண்ணன். நான் சொல்லி விடுகிறேன். போய்ப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாள் காலையே செல்வோம் என எண்ணிப் போன் செய்தால் மாலைதான் தாம் திறப்பதாக கூற மாலை 5.30 இக்குப் போய் காவலிருக்கிறோம். திறந்தவுடன் இன்னொரு ஆணும் ஒரு பெண் வக்கீலும் இருக்கின்றனர். மணிவண்ணன் வர ஏழரை ஆகும் என்கிறார். எனக்கு ஒருவிதமான கூச்சமாகவும் இருக்கு. அந்தப் பெண் வக்கீலிடம் விபரம் கேட்க, உங்கள் பெயரில் காணி இருந்தால் நீங்கள் என்னவும் செய்யலாம். யாருக்கும் விற்கலாம். என்கிறா. கணவரின் முகத்தில் விளக்கெரிகிறது. ஆனாலும் காணி உங்கள் பெயரில் இருந்தாலும் அவர்கள் சோழவரியை இருபது ஆண்டுகளுக்குமேல் கட்டியிருந்தால் அவர்களுக்குக் காணி சொந்தமாவதற்குரிய சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கு. எனவே உங்கள் பெயரில் சோழவரி கட்டுவதற்குரிய ஏற்பாட்டைப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாளே பிரதேச சபைக்குச் சென்று கணவரின் பெயரில் சோழவரியை மாற்றுவதற்குரிய படிவத்தைக் கேட்டால் படிவம் 300 ரூபாய்கள். அத்துடன் அந்த நிலத்துக்குரிய திட்டம் மற்றும் தாய் உறுதி, காணி உறுதி என்பன கட்டாயம் வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே காணிக்குத் திட்ட வரைபு இருக்கிறதா என்று கேட்க கணவர் தெரியாது என்கிறார். தங்கையிடம் தான் கேட்கவேண்டும். கணவனோ நீயே கேள் என்கிறார். எனக்கோ சங்கடமாக இருக்கு. ஆனாலும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, என் நல்ல நேரம் வீட்டுக்குச் சோழவரி கட்டும் விலைப் பட்டியலை ஒருவர் மணி அடித்துத் தந்துவிட்டுப் போக என்ன உது என்கிறேன் மச்சாளிடம். சோழவரி கட்டவேண்டும். அதுதான் என்கிறா. கடிதம்போடாமல் கொண்டு வந்தா தருவார்கள் என்கிறேன் நம்பாமல். இது வெளிநாடில்லை. இங்க வீடுவீடாக கொண்டுபோய் குடுப்பினம் என்றவுடன் தோட்டத்தின் சோழவரியும் அப்படித்தானோ என்கிறேன். :தோட்டத்தின்ர சோழவரி உங்கள் பெயரிலோ இருக்கு? :இல்லை அம்மாவின் பெயரில் தான் தொடர்ந்து கட்டிக்கொண்டு இருக்கிறம். :இனிமேல் நீங்களே கட்டிக்கொண்டிருக்காமல் உதயனின் பெயருக்கு மாத்தி விடுவம். :அது கன காசு சிலவு மச்சாள். பேசாமல் அம்மாவின் பெயரிலேயே இருக்கட்டும். :என்ன சிலவு ? :பிளான் எல்லாம் கீற வேணும். அதுக்கு கன காசு. போக சேவையர்மார் செய்து முடிக்க நாலைஞ்சு மாசம் செல்லும். அதுக்குள்ள அண்ணா திரும்பப் போயிடுவார் எல்லோ. :காசு பிரச்சனைஇல்லை. அதை நாங்கள் குடுப்பம். ஆரும் இருந்தாச் சொல்லுங்கோ. :எனக்கு ஒருத்தரையும் தெரியாது. :உங்கள் மகனும் கட்டட அளவையாளர்தானே. அவருக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் தானே. :அவன் போன் செய்யேக்குள்ள கேட்டுப்பாக்கிறன். :தோட்டத்துக்கு சோழவரி கட்டுற துண்டை ஒருக்கா தாங்கோ பார்ப்பம். :தேடித்தான் எடுக்கவேணும். இவர் வந்ததும் கேட்டுப் பார்க்கிறன். :சரி. மச்சாளுக்கு நாம் காணி அளப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் உதை உப்பிடியே விடுவம். உங்கள் அம்மாவின் பெயரில் தான் சோழ வரி கட்டுறதாலை எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறேன். நீ குழப்பாதை. பிளானைக் கீறி எடுத்தால்தான் உவவுக்கு கொஞ்சம் பயம் வரும் என்கிறார். அடுத்த நாளே என் தங்கையின் கணவர் ஒரு நில அளவையாளரைத் தொடர்புகொண்டு வார இறுதியில் வருவதாகக் கூற தங்கையிடமும் கூற தங்களுக்கு ஒரு சாமத்தியவீடு இருப்பதாகவும் அதனால் தாங்கள் நிற்கமாட்டோம் என்றும் கூற அடுத்த வார இறுதிக்கு அது ஒத்திவைக்கப்படுகிறது. கணவர் இன்னும் ஒரு எட்டு நாட்கள் தான் நிற்பார். அவரில்லாது காணி அளப்பது சரியானதாக இருக்காது என்பதனால் அடுத்த வாரமும் அவர்கள் ஏதும் சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடுகிறது. நில அளவையாளர் பக்கத்துக் காணிக்காரரின் பெயர்களும் தேவை என்கின்றார். சகோதரியும் கணவரும் தமக்குத் தெரியாது என்கின்றனர். என்ன நீங்கள். இங்கேயே இருக்கிறியள். பக்கத்து காணிக்காரரைத் தெரியாமல் இருக்கிறியளா? என்கிறார் கணவர். நல்ல காலத்துக்கு கணவரின் அண்ணா ஒருவர். அவருக்கு காணிக்காரரின் பெயர்கள் தெரிந்தபடியால் அலைச்சலின்றி பெயரை அளவையாளரிடம் கொடுக்க அவரும் காணி அளப்பதற்கு வருகிறார். எல்லாமாக மூன்றுபேர் வருகின்றனர். இரண்டு மணி நேரத்தின் பின் தங்கையின் எட்டுப் பரப்புப் போக எமக்கு ஐந்து பரப்பு வருகின்றது என்கிறார் அளவையாளர். தங்கையின் கணவருக்கு டென்ஷன் ஏற்பட அதெப்படி வரும். எங்கட காணியில குறைச்சு அளந்திட்டியளோ என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அந்த நில அளவையாளருடன் வந்தவர் “தம்பி நீங்கள் உப்பிடிக்க கதைக்கக் கூடாது. நாங்கள் பத்து ஆண்டுகளாகத் தொழில் செய்கிறம். ஒருவரும் உப்பிடிச் சொன்னதில்லை. முந்தி காணியளை காலாலைதான் அளக்கிறது. கூடக் குறைய வாறது தான் “ என்றவுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு அவர் தன் வீட்டுக்குப் போகிறார். என்னடா இது என்று எமக்குக் குழப்பமாக இருக்க அளவையாளர் சொல்கிறார் கூட இருப்பதை இரண்டாகப் பிரித்துவிடவோ என்று. ஓம் அப்பிடிக்க செய்யுங்கோ பிரச்சனை இல்லை என்று நான் கூற, நீ வாயை மூடிக்கொண்டு இரு. இது என்ர காணி. நானே முடிவை எடுக்கிறன். அஞ்சு நிமிஷம் பொறுங்கோ என்றுவிட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்குச் செல்கிறார். நானும் மற்றவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள “இது எனக்குத்தான் கெட்டபெயர். நான் தான் தடுத்திட்டன் என்று தங்கச்சியார் நினைக்கப்போறா, இந்தாள் ஏன் இப்பிடிச் செய்யுது” என்கிறேன். “அவை சகோதரங்கள். கதைச்சு முடிவெடுக்கட்டும் அக்கா. நீங்கள் தலையிடாதேங்கோ” என்கிறார் அளவையாளர். சிறிது நேரத்தில் கணவரும் தமையனும் ஒருபக்கத்தால் வர மறுபக்கம் தங்கையின் கணவரும் வருகிறார். தங்கையின் கணவர் "இவர் குடும்பத்தைப் பார்த்ததுக்கு மாமி நாலேகால் பரப்பு மட்டும்தான் எழுதினவா. ஆனபடியால் மிகுதி எங்களுக்குத்தான் சேரவேண்டும். நான் இரண்டு மூண்டு பேரிட்டை இப்ப விசாரிச்சிட்டுத்தான் வாறன் " என்கிறார். உடனே தமையன் "இல்லை உங்களுக்கு வீடுவளவும் காணியும் சீதனம் தந்தபடியால் சீதனக் காணி தவிர மிகுதி தம்பிக்குத்தான் சேரவேணும். நீங்கள் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றவுடன் "எனக்கு இவை அளந்ததில நம்பிக்கை இல்லை. திரும்ப வேறு யாரையும் கொண்டு அளவுங்கோ" என்று கூற சேவையருக்குக் கோபம் வந்துவிட்டது. என் கணவரைப் பார்த்து உங்களுக்கு வேறை யாரையும் கொண்டு அளக்கவேணும் என்றால் அளவுங்கோ என்கிறார். எனக்கு நாலேகால் பரப்பில் கால் பரப்பு குறைந்தால் இவர்கள் எனக்குத் தரவா போகிறார்கள். நீங்கள் அளந்ததில் எனக்கு எந்தக் குறையுமில்லை. நீக்கள் எங்கள் காணிக்குரிய பிளானை கீறி ரெஜிஸ்டர் பண்ணித் தாங்கோ. மச்சான் நீங்கள் வேறு ஒருவரைப் பிடித்து உங்கள் காணி எட்டுப் பரப்பும் இருக்கிறதா என்று பாருங்கள் என்றவுடன் அளவையாளர்கள் எல்லைக் கற்களை நான்குபுறமும் கிண்டித் தாட்டுவிட்டுச் செல்கின்றனர்.
  10. உமாவைக் கொல்வதில்லை என்று உறுதியளித்த பிரபாகரன் அக்காலத்தில் மதுரையில் இயங்கிவந்த சுபாஷ் சந்திரபோஸ் சங்கத்தினர் தமது கூட்டமொன்றிற்கு நெடுமாறன் அவர்களையும் அழைத்திருந்தனர். சந்திரபோஸின் தீவிர அபிமானியாகவிருந்த பிரபாகரனும் நெடுமாறனுடன் இக்கூட்டத்திற்குச் சென்றிருந்தார். கூட்டத்தில் பேசிய பலரும் சுபாஸ் சந்திரபோசையும் அவரது இந்தியத் தேசிய ராணுவத்தையும் புகழ்ந்து பேசியபோது உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். இந்தியத் தேசிய ராணுவத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மண்டபத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ராணுவ வீரர்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் ராணுவ வணக்கத்தினை ஒத்த சைகையைச் செய்தபோது பிரபாகரனும் உணர்வுபொங்க எழுந்துநின்றார். கூட்டம் முடிவுற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நெடுமாறனுடன் பேசிய பிரபாகரன், தன்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றதற்காகக் அவருக்கு நன்றி கூறினார். மேலும், "சுபாஸ் சந்திரபோசிற்கு அவரின் வீரர்கள் விசுவாசத்துடன் அளித்த வணக்கத்தைப் போன்று, நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளின் ராணுவ அணிவகுப்பினைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றும் கூறினார். தனது ராணுவ வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடும் சுபாஸ் சந்திரபோஸ் பிந்நாட்களில் பேசிய நெடுமாறன், அன்றைய சுபாஸ் சந்திரபோஸின் நிகழ்வு பிரபாகரனின் வாழ்வில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒரு திருப்பம் என்று கூறுகிறார். அன்றிலிருந்து புலிகள் இயக்கத்தை இரு ராணுவ வல்லமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை பிரபாகரன் செயற்படுத்தத் தொடங்கினார். புலிகளின் கொடியினை வடிவமைத்த பிரபாகரன் அவர்களுக்கான சீருடைகளையும் தானே வடிவமைத்தார். பரிசோதனைகள் மூலம் தான் அதுவரையில் பயன்படுத்தி வந்த புலிகளுக்கிடையிலான சங்கேத தொலைத்தொடர்பு முறையினை அவர் மேலும் மெருகூட்டினார். மேலும், தனது போராளிகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளான வோக்கி - டோக்கி களைப் பயன்படுத்தும் பயிற்சிகளையும் வழங்கவேண்டும் என்று தீர்மானித்தார். நவீன தொலைத் தொடர்புக் கருவியுடன் தியாக தீபம் - லெப்டினன்ட் கேணல் திலீபன் தனது இயக்கத்திற்கான நவீன தொடர்பாடல் வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தினை பிரபாகரன் வகுத்தார். அக்காலத்தில் பிரபாகரன் எடுத்த தீர்மானங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது, டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று சுயமாக இயங்குவது எனும் தீர்மானமாகும். இதனை, தமிழ்நாட்டில் புலிகளுக்கான தனியான முகாம்களை அமைப்பதிலிருந்து ஆரம்பித்து வைத்தார். தமிழ்நாட்டின் சிறுமலை, பொள்ளாச்சி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் புலிகளுக்கான முகாம்கள் பிரபாகரனால் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களிலேயே புலிகளின் போராளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உட்பட்ட கெரில்லா ராணுவம் ஒன்று கற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படை உபாயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகளுக்காக ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய ராணுவ அதிகாரிகளை பிரபாகரன் பணிக்கு அமர்த்தினார். இம்முகாம்களுக்கு அடிக்கடி சென்றுவந்த பிரபாகரன் தனது போராளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை மேற்பார்வை செய்து வந்ததோடு, தனது பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். தனது போராளிகளை சுபாஸ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிகரான ஒரு போராட்ட அமைப்பாக உருவாக்கும் வேலைகளில் பிரபாகரன் மும்முரமாக ஈடுபட்டு வந்தவேளையில், சென்னையில் தன்னை வந்து சந்திக்குமாறு அமிர்தலிங்கத்திடமிருந்து பிரபாகரனுக்கு அழைப்பொன்று வந்திருந்தது. சென்னையில் அமிர்தலிங்கம் தங்கியிருந்த விடுதியொன்றில் அவரைச் சந்தித்தார் பிரபாகரன். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே நிலவிவந்த பிரச்சினையினைத் தீர்ப்பதே தனது சென்னை பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அமிர்தலிங்கம் பிரபாகரனிடம் கூறினார். ஆனால் , அமிர்தலிங்கம் பேசி முடிக்கும் முன்பே மிகக் கோபத்துடன் பேசிய பிரபாகரன் "அது எப்படிச் சாத்தியமாகும்? புலிகள் இயக்கத்தின் கொள்கையினை அவர் மீறிவிட்டார். அதற்கு மேலதிகமாக எனது ஆதரவாளர்களையும் அவர் கொன்றிருக்கிறார்" என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் மீது அவர் வைத்திருந்த மரியாதையின் நிமித்தம், பெருஞ்சித்திரனார் வீட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் இணங்கினார். பெருஞ்சித்திரனார் தனது போராளிகள் மீதும், ஆதரவாளர்கள் மீது பிரபாகரன் வைத்திருந்த பாசமும், அக்கறையும் ஆளமானது. மேலும், தனது போராளிகளையும் ஆதரவாளர்களையும் கொல்பவர்களை ஒருபோதும் அவர் மன்னித்ததில்லை. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர், 27 வயது நிரம்பிய ப. இறைக்குமரன எனும் தமிழீழ விடுதலைச் செயற்ப்பாட்டாளர் அளவெட்டிப் பகுதியில் 7 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சுடப்பட்டார். இறைக்குமரன் சுடப்பட்டதை நேரில் கண்ட அவரது நண்பரான 28 வயதுடைய த.உமாகுமரனும் அந்தக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அளவெட்டியின் வயற்பகுதி ஒன்றிலிருந்து இவ்விரு இளைஞர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. விவசாய அதிகாரியாகப் பணியாற்றிவந்த இறைக்குமரன் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி எனும் அமைப்பின் செயலாளராகக் கடமையாற்றி வந்தார். இதற்கு முன்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவில் சேர்ந்து செயற்பட்டு வந்த அவர், 1976 இல் முன்னணிக்குச் சார்பான பத்திரிக்கையான இளைஞர் குரலின் ஆசிரியராகவும் செயலாற்றியிருந்தார். ஆனால், ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்த முடிவினால் அதிருப்தியடைந்த இறைக்குமரன், முன்னணியிலிருந்து விலகி தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக இயங்கத் தொடங்கினார். இறைக்குமரனினதும், உமாகுமரனினதும் கொலைகளுக்கு பழிவாங்கியே தீரவேண்டும் என்று எண்ணிய போதும் பிரபாகரன், உமாவைக் கொல்வதைத் தவிர்க்க விரும்பினார். தமிழ்நாட்டில் உமா மகேஸ்வரன் தங்கியிருந்த பெருஞ்சித்திரனாரின் வீட்டினைக் கண்காணிக்க சில போராளிகளை பிரபாகரன் நிறுத்தியிருந்தார். புலிகளின் போராளிகள் தனது வீட்டிற்கருகில் நடமாடித் திரிவதை அவதானித்த பெருஞ்சித்திரனார், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு உமாவை வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று பணித்திருந்தார். உமாவின் பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்திருந்த பெருஞ்சித்திரனார் உமாவைக் கொல்லவேண்டாம் என்று பிரபாகரனிடம் கேட்கும்படி அமிர்தலிங்கத்தை வேண்டியிருந்தார். பெருஞ்சித்திரனாரின் வீட்டிற்கு தனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் பிரபாகரன் சென்றார். உமாவுடன் கைகொடுப்பதை அவர் தவிர்த்துவிட்டார். உமாவுடனான பிரச்சினையைத் தீர்க்குமாறு அமிர்தலிங்கம் பிரபாகரனைப் பார்த்து மன்றாட்டமாகக் கேட்டார். ஆனால், பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக நின்றார். எவர்மீதும் தனக்கு எந்த வெறுப்பும் இல்லையென்று பிரபாகரன் அங்கு கூறினார். இயக்கத்தின் கொள்கைகளை எவரும் மீறுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில் எவரினதும் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறுவதை பிரபாகரன் முற்றாகத் தவிர்த்திருந்தார். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "உமாதான் இப்போது உங்களின் இயக்கத்தில் இல்லையே?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார். அமிரைப் பார்த்துப் பேசிய பிரபாகரன், "இயக்கத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே போதுமானது அல்ல. இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள், விடுதலைப் போராட்டத்தில் இருந்தும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். இயக்கத்தின் விதிகளின்படி, போட்டியாக இன்னொரு அமைப்பைத் தொடங்குவதும் குற்றமே. இயக்கத்தின் யாப்பும், கொள்கையும் கூறுவது அதையே. எவரும் இதற்கு விதிவிலக்கில்லை. இதை எவராவது மீற விரும்பினால், மரணத்தை விரும்பி அழைக்கிறார்கள் என்று பொருள்" என்று மிகவும் தீர்க்கமாகக் கூறினார். இதைக் கேட்டதும் பெருஞ்சித்திரனார் மிகுந்த வருத்தமடைந்தார். "இப்படிப் பேசாதீர்கள். நீங்கள் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது உண்மைதான். ஆனால், உங்களுடன் நின்று, இயக்கத்திற்கான தொடர்பாடல் வேலைகளைச் செய்ததும், இன்று புலிகள் இயக்கம் பற்றி உலகம் அறிந்துகொள்ளவும் உதவியது உமாதான்" என்று பெருஞ்சித்திரனார் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார். முன்னர், தனது வீட்டிற்கு வந்த பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது அன்றாடச் செலவுகளுக்கு சிறுதொகைப் பணத்தினை அவ்வப்போது பெற்றுச் சென்றதை பெருஞ்சித்திரனார் பிரபாகரனுக்கு நினைவுபடுத்தினார். பெருஞ்சித்திரனாரின் வீட்டிலேயே புலிகள் இயக்கம் பணத்தினை சேமித்து வைத்திருந்தது. புலிகளின் பணத்தினைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதே பெருஞ்சித்திரனாரின் பணியாக இருந்தது. "இப்போது ஒருவரையொருவர் கொல்லப்போவதாக மிரட்டுகிறீர்களா? அதைச் செய்யவேண்டாம்" என்று பிரபாகரனைப் பார்த்துக் கூறினார் பெருஞ்சித்திரனார். சி.என்.அண்ணாத்துரையுடன் ராமசாமிப் பெரியார் மேலும் பேசிய பருஞ்சித்திரனார், ராமசாமிப் பெரியார் மணியம்மையை மணந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகத்தை அமைத்தவரான அண்ணாத்துரை கூறியதை நினைவுபடுத்தினார். "இருகட்சிகளாக இருந்தபோது, இருகுழல்த் துப்பாக்கியாக இயங்கலாம் என்று அன்று அண்ணாத்துரை கூறியதுபோல, நீங்களும் இயங்கலாம்" என்று அவர் கூறினார். பெருஞ்சித்திரனார் கூறியதை வழிமொழிந்த அமிர்தலிங்கம், "ஐயா கூறுவதன்படியே செய்யுங்கள்" என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறினார். பின்னாட்களில் பிரபாகரனின் தீவிர அபிமானியாக மாறிப்போன பெருஞ்சித்திரனார் என்னுடன் ஒருமுறை பேசும்போது, அன்று தனது வீட்டில் இடம்பெற்ற கூட்டம் ஓரளவு பலனை அடைந்ததாகக் கூறினார். தானும், அமிர்தலிங்கமும் இணைந்து, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒருவரையொருவர் கொல்வதில்லை எனூம் உறுதிப்பாட்டை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறினார். " தான் கொடுத்த வாக்குறுதியை பிரபாகரன் இறுதிவரை கடைப்பிடித்து வந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனது வீட்டைச் சுற்றி தான் நிறுத்தியிருந்த தனது போராளிகளை அவர் விலக்கிக் கொண்டார். அதற்குப் பின்னர் உமாவைக் கொல்ல அவர் ஒருபோதும் எத்தனிக்கவில்லை. எனது நன்றியை தெரிவிக்க பிரபாகரனை நான் சந்திக்க முடியாது போனமைக்காக வருந்துகிறேன்" என்று பெருஞ்சித்திரனார் கூறினார். அதன் பிறகு, அவர் இறக்கும்வரை பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உமா மகேஸ்வரனைத் தான் கொல்லாமல் இருப்பதற்கு, பிரபாகரன் ஒரு நிபந்தனையினை விதித்தார். அதாவது, உமா மகேஸ்வரன் தனது அமைப்பை நடத்தலாம், ஆனால் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக உரிமைகோர முடியாது என்று கூறினார். ஏழுமாதங்கள் வரை பிணையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த பிரபாகரன், 1983 ஆம் ஆண்டு, மாசி மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பதை பொலீஸார் நன்கு அறிந்தே இருந்தனர். ஆனாலும், அறிக்கையினைச் சமர்பிப்பதற்காக அவர் தங்கியிருந்ததாகக் கருதப்பட்ட பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி வீடுகளை அவர்கள் சோதனையிட்டனர். பிரபாகரன் அன்று யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான காரணம் ஒன்று இருந்தது. தான் மனதில் வரைந்துவைத்திருந்த சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தைப்போன்ற இலட்சிய உறுதியும், தியாக மனப்பான்மையும் கொண்ட கெரில்லா ராணுவம் ஒன்றை உருவாக்குவதே அது.
  11. புலிகளை மீட்டுவரும் நடவடிக்கை கே மோகன்தாஸ் தமிழ்நாட்டு பொலீஸ் மா அதிபர் கே மோகன்தாஸைச் சந்தித்த இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் ருத்ரா ராஜசிங்கம் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் இலங்கைக்கு நாடுகடுத்துமாறு கேட்டுக்கொண்டார். தனது கோரிக்கைக்கு வலுச் சேர்ர்கும் முகமாக அவர்கள் இருவர் மீதும் இருந்த குற்றச்சாட்டுக்களின் பட்டியலை ருத்ரா, மோகந்தாஸிடம் காண்பித்தார். அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் இருவர்மீதும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்ற் ருத்ரா கூறினார். ஆனால், சமயோசிதமாக இந்தக் கோரிக்கையினை மறுத்துவிட்ட மோகன்தாஸ், நாடுகடத்தும் விவகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருப்பதால் தான் இதுகுறித்து எதுவும் செய்யமுடியாது என்று ருத்ராவிடம் கூறினார். ஆனால், மத்திய அரசாங்கம் இதற்கு இணங்கும் பட்சத்தில் தான் இதுதொடர்பாக இலங்கையதிகாரிகளுக்கு உதவத் தயாரக இருப்பதாகவும் கூறினார். புது தில்லியில், வெளிவிவகார அதிகாரிகள் இலங்கையின் வேண்டுகோளினை கண்ணியமாக மறுத்துவிட்டார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமையினால், அவர்களை நாடுகடத்துவது முடியாத காரியம் என்று அவர்கள் கூறினார்கள். மேலும், அவர்கள் இருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை, கொலை முயற்சி, இந்திய வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் சட்டத்திற்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்காகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். ஆகவே, இக்குற்றச்சட்டுக்கள் குறித்து தமிழ்நாட்டு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கியதன் பின்னரே இலங்கையின் நாடுகடத்தும் கோரிக்கை குறித்துத் தம்மால் சிந்திக்க முடியும் என்றும் கூறிவிட்டார்கள். ராஜசிங்கம் வெறுங்கைய்யுடன் நாடு திரும்பினார். யாழ்ப்பாணத்திலிருந்து வாரந்தோறும் வெளிவரும் சட்டர்டே ரிவியூ எனும் ஆங்கில பத்திரிக்கை இலங்கையரசின் முயற்சி குறித்து ஏளனத்துடன் "புலிகளை மீட்டுவரும் நடவடிக்கை" எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் 1973 ஆம் ஆண்டு குட்டிமணியை இந்தியா விருப்பத்துடனேயே நாடு கடத்தியிருந்தமைக்கும், இன்று பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துவதற்கு இந்தியா காட்டிவரும் எதிர்ப்பையும் ஒப்பிட்டும் செய்தி வெளியிட்டிருந்தது. அன்று, பிரதமாரகவிருந்த சிறிமா மிகவும் தீவிரமாக அணிசேராக் கொள்கையினை கடைப்பிடித்து வந்தமையும், இலங்கை தொடர்பாக இந்தியா எதுவிதமான பாதுகாப்பு அச்சுருத்தல்களையும் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், அக்காலத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுத எழுச்சியென்ற ஒன்றே இலாதிருந்ததும், தமிழர் மீதான அரச பயங்கரவாதம் இன்றிருப்பதுபோல மிகத் தீவ்ரமாக இருக்கவில்லையென்பதும் மற்றைய காரணமாகும். ஆனால், ஜெயவர்த்தன பதவியேற்றதன் பின்னர் நிலைமை முற்றாக மாறியிருந்தது. ஜெயாரின் அமெரிக்கா நோக்கிய சாய்வும், தமிழர்கள் மீது அவரால் ஏவிவிடப்பட்ட ராணுவ பொலீஸ் அராஜகங்களும் இந்தியா தனது நிலைப்பாட்டினை மாற்றவேண்டிய சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது. ஆவணி 6 ஆம் திகதி இரு போராளித் தலைவர்களையும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலீஸார் சமாதானத்திற்கு ஊறுவிளைவித்தமை மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய பிணையில் எடுக்கக்கூடிய குற்றங்களை அவர்கள் மீது சுமத்தியிருந்தார்கள். நிபந்தனை அடிப்படையிலான பிணையில் இருவரையும் விடுவித்த நீதிமன்றம், வழக்கு முடியும்வரை இருவரும் தமிழ்நாட்டின் வேறு வேறு நகரங்களில் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டது. பிரபாகரன் மதுரையைத் தெரிவுசெய்ய, உமா மகேஸ்வரன் சென்னையில் இருக்க ஒப்புக்கொண்டார். பிரபாகரன் நெடுமாறனுடனும், உமா மகேஸ்வரன் பெருஞ்சித்திரனாருடனும் தங்கிக்கொண்டார்கள். நீதிமன்றம் கட்டளையிட்டதன்படி அவர்கள் நகர எல்லைக்குள் வசிப்பதை உறுதிசெய்ய உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரும், மூன்று கொன்ஸ்டபிள்களும் அவர்களுடன் தங்கியிருந்தார்கள். பிரபாகரனுக்கு அவர்களுடன் தொடர்பாடுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. சிறிது நாட்களிலேயே அவர்கள் பிரபாகரனின் அபிமானிகளாக மாறிவிட்டார்கள். அவர் நகருக்கு வெளியே சென்றபோது அவர்கள் கண்டும் காணாததுபோல இருந்துவிடுவார்கள். அவரைப் பின் தொடர்வதைக் கைவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று அவர் கைய்யொப்பம் இடவேண்டும் என்கிற நீதிமன்றத்தின் கட்டளையினையும் அவர்கள் காற்றில் பறக்கவிட்டார்கள். ஒரேயொரு முறை மட்டுமே பொலீஸார் பிரபாகரனின் அறையினைச் சோதனை செய்யவேண்டி ஏற்பட்டது. பிரபாகரன் செய்தித் தாள்களை வெட்டி, கோப்பாக பராமரித்து வருவதை அவதானித்த பொலீஸார் அதனை என்னவென்று பார்க்க விரும்பினர். அதில் ஒன்று அல்பேர்ட் துரையப்பாவின் கொலை. அக்கொலை தொடர்பாக பிரபாகரனை தேடி இலங்கைப் பொலீஸார் நடத்திய தேடுதல் வேட்டைகள் குறித்த செய்திகளும் அதில் காணப்பட்டன. "இந்த செய்தித் தால்களை எதற்காக வெட்டி வைத்திருக்கிறீர்கள்? அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று பொலீஸார் அவரை கேட்டனர். இவ்வாறு அவர்கள் கேட்டது பிரபாகரனுக்குச் சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், " ஆம், எனக்கு அவரைத் தெரியும். நான் தான் அந்த நபர்" என்று அவர் பதிலளித்தார். பிரபாகரனின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்டதும் பொலீஸார் ஒருகணம் அதிர்ந்துபோனார்கள். பொலீஸாரில் ஒருவர் நெடுமாறனிடம் இதுகுறித்துப் பேசியதுடன், கொலைகாரர் ஒருவருக்குத் தஞ்சம் கொடுத்திருக்கிறீர்கள் என்றும் முறையிட்டார். நெடுமாறனின் அறைக்குச் சென்ற அந்தப் பொலீஸ்காரர், "ஐயா, நீங்கள் ஒரு ஆபத்தான மனிதரை இங்கே தங்கவைத்திருக்கிறீர்கள். தான் ஒரு கொலைகாரன் என்று அவரே கூறுகிறார்" என்று கூறினார். அந்தப் பொலீஸ்காரரைத் தொடர்ந்து பிரபாகரனும் நெடுமாறனின் அறைக்குச் சென்றார். தனது அறையினை பொலீஸ் காரர் தனது அனுமதியின்றிச் சோதனையிட்டதாக அவர் நெடுமாறனிடம் புகாரளித்தார். இதனையடுத்து அந்தப் பொலீஸ்காரரைப் பார்த்துப் பேசிய நெடுமாறன், "இந்த வீட்டில் எந்தவொரு அறையினையும் எனது அனுமதியின்றிச் சோதனையிட உங்களுக்கு அதிகாரம் இல்லை" என்று கூறினார். மேலும், அந்தப் பொலீஸ்காரரின் நடவடிக்கை குறித்து அவரின் உயரதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினார். பிரபாகரனைப் பொறுத்தவரையில் நெடுமாறனின் வீட்டில் அவர் தங்கியிருந்த 7 மாதங்களும் இனிதே அமைந்திருந்ததுடன், அவரால் பல செயற்பாடுகளையும் முன்னெடுக்க உதவியிருந்தது. நெடுமாறனின் குடும்பத்தில் ஒருவராக அவர் நடத்தப்பட்டதுடன், நெடுமாறனின் மனைவியார் சமைத்த சைவ உணவுவகைகளையும் அவர் விரும்பி உண்டார். நெடுமாறனின் பிள்ளைகளோடு மிகவும் அன்பாகப் பழகிய பிரபாகரன், அவ்வபோது நெடுமாறனின் 6 வயது மகளுடன் கரம் விளையாட்டிலும் ஈடுபட்டார். பிள்ளைகள் படுக்கைக்குச் செல்லுமுன் அவர்களுக்குக் கதைகள் சொல்லித் தூங்கவைப்பதிலும் அவர் தன்னை ஈடுபடுத்தினார். பிரபாகரன் அவர்களுக்குக் கூறிய பெரும்பாலான கதைகள் தமிழர்களின் வீரத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டவை. இலங்கையில் தமிழர்கள் மேற்கொண்டுவரும் விடுதலைப் போராட்டம் தொடர்பான கதைகளையும் அவர் நெடுமாறனின் பிள்ளைகளுக்குக் கூறினார். அவ்வாறு ஒருநாள் பிரபாகரன் 1958 ஆம் ஆண்டு பாணதுறையில் சிங்களவர்களால் உயிருடன் எரிக்கப்பட்ட சைவ மதகுருவின் கதை பற்றிக் கூறியபோது, கண்ணீருடன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நெடுமாறனின் மகன், "அந்த ஈனச் செயலைச் செய்த அரக்கர்களை அழிக்க உங்களுடன் நானும் வந்து சேரப்போகிறேன்" என்று உணர்வுபொங்கக் கூறியிருக்கிறார். அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டுக்கொண்டே பேசிய பிரபாகரன், "நீங்கள் நன்றாகப் படியுங்கள். நாங்கள் அந்த அரக்கர்களுக்குச் சரியான தண்டனையினை வழங்குவோம் " என்று கூறினார். மதுரையில் அவர் தங்கியிருந்த 7 மாதங்களும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் அவரது வாழ்நாளில் மிகவும் பயனுள்ள காலங்களாக இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரும் அவரது போராளிகளும் மதுரையிலேயே தங்கிவிட்டதுடன், ஆரம்ப மாதங்களை தம்மைச் சுய விமர்சனம் செய்வதிலேயே கழித்தனர். பின்னர், தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்தனர். நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? எங்கே தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன? தற்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து எப்படி முன்னேறப்போகிறோம்? ஆகிய கேள்விகளைத் தாமே கேட்டுக்கொண்டதுடன் அதற்கான பதில்களையும் தேடத் தொடங்கினார்கள்.
  12. ஈரானிய கிராமிய பாடலை அழகிகளின் வாத்திய இசையுடன் பார்த்து இரசியுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.