Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    32002
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46797
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/29/23 in all areas

  1. தமிழர்கள் மீதான வன்முறைகளில் விருப்பத்துடன் பங்கேற்ற சிங்கள் குடியேற்றவாசிகள் தான் அனுப்பிய தந்தியைத் தொடர்ந்து ஆடி 5 ஆம் திகதி கடிதம் ஒன்றினையும் அமிர்தலிங்கம் ஜெயாருக்கு அனுப்பியிருந்தார். வன்முறைகளின் அளவு குறைந்திருந்தபோதும், பதட்ட நிலை அங்கு தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். " கடந்த இரவு கூட தமிழரான சுந்தரன் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்" என்று கூறியதோடு தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இக்கடிதத்தில் இராணுவத்தினரின் இனக்குரோத மனோநிலையினை வெளிப்படுத்தும் சம்பவங்கள் பற்றியும் அவர் குறிப்பிடத் தவரவில்லை. "திருகோணமலையில் நடைபெற்ற வன்முறைகளின்போது ராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் கவனத்திற் கொள்ளத் தக்கது. அபயபுர பகுதியில் இரண்டு தமிழர்களை வெட்டிக் கொன்றுவிட்டு, இன்னும் பலரை வாட்களால் வெட்டிக் காயப்படுத்திய சிங்களக் காடையர்கள் கூட்டத்தின்மீது தமிழ் கடற்படை அதிகாரியொருவர் நடவடிக்கை எடுத்தவேளை அவர்மீது மிகக்கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் அவருடன் கூடவே அப்பகுதியில் கடமைக்கு நின்ற‌ சிங்கள கடற்படை வீரர்கள். அரச படைகளுக்குள் இனவாதம் எவ்வளவு ஆளமாக ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்" என்று அமிர் கூறியிருந்தார். "பொலீஸாரும், ராணுவத்தினரும், சாதாரண சிங்களப் பொதுமக்களும் இனவாதம் தலைக்கேறிய நிலையில் திருகோணமலையில் தமிழர்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மீதான வன்முறையென்பது வைரஸ் கிருமி போல சிங்களவர்களிடையே பரவி வருவதுடன், இந்த அபாயகரமான வைரஸின் தோற்றிடம் சிங்கள அரசியல்வாதிகள் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை"என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இனவாதத்திற்கும் பாஸிஸத்திற்கும் எதிரான அமைப்பின் பிரதிநிதியான நான்ஸி மரே திருகோணமலையில் நடைபெற்ற தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் குறித்து தான் எழுதிய "இனவாதம் கொண்ட சர்வாதிகார அரசு" எனும் புத்தகத்தின் "தமிழர்களுக்கு எதிரான அரசாங்கம்" எனும் அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "இரண்டு மாதகாலமாக நடைபெற்ற தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகளால் திருகோணமலை நகரம் பாழடைந்துபோய்க் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் எரிக்கப்பட்டு, ஆடி மாத இறுதியில் குறைந்தது 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதலை அவதானிக்கும் எவருக்கும் அவை மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒரே பாணியில் நிகழ்த்தப்பட்டிருப்பது தெரியவரும். அண்மைய வருடங்களில், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிங்களவர்கள் மட்டுமே பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயற்பட்டு வரும் அரசு, தமிழரின் பிரதேசங்களான கிழக்கு மாவட்டங்களில் அதிகளவில் சிங்களவர்களைக் குடியேற்றி வருகிறது. 1983 ஆம் ஆண்டளவில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இக்குடியேற்றங்களுக்கு வந்துசேரும் சிங்களவர்கள் தமது குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் விருப்பத்துடன் பங்கேற்று வருவது தெரிகிறது. இப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னத்தை தமிழர்கள் எதிர்ப்பதனால், சிங்களவர்களிடம் அமெரிக்காவின் இருப்பென்பது அவசியமானது எனும் தோற்றப்பட்டை உருவாக்குவதிலும் அரசு முயன்று வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.
  2. ஜெயாருக்கு அமிர்தலிங்கம் அனுப்பிய திருகோணமலை நிலவரம் தொடர்பான தந்தி திருகோணமலையின் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வந்தது. ஆடி முதலாம் திகதி அந்த நகருக்கு பயணம் செய்த அமிர்தலிங்கம், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். மறுநாள் கொழும்பு திரும்பிய அவர் ஜெயவர்த்தனவுக்கு பின்வருமாறு ஒரு தந்தியினை அனுப்பியிருந்தார். "திருகோணமலையில் இன்று இருக்கும் நிலைமையினை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு இன்றுதான் கொழும்பு திரும்பினேன். இரு தரப்பினராலும் வன்முறைகள் நடைபெறுவதாகக் கூறப்படுபவை தவறான செய்திகளாகும். இதுவரை 16 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும், வெட்டுக்காயங்களுடனும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 40 பேரில் 35 பேர் தமிழர்கள். இதுவரை எரிக்கப்பட்டுள்ள 150 வீடுகளில் 95 வீதமானவை தமிழருக்குச் சொந்தமான வீடுகளாகும். குறைந்தது ஆயிரம் பொதுமக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர், இவர்களுள் ஒருவர் கூட சிங்களவர் கிடையாது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் ராணுவத்தினர் மக்களை அச்சுருத்திவிட்டுச் செல்ல, சிங்களக் காடையர்கள் அவர்களின் பின்னால் சென்று தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்திவருவதுடன் தமிழர்களின் வீடுகளையும் எரியூட்டுகின்றனர். தமிழர்கள் மீது பாரிய அளவில் வன்முறைகளும், தாக்குதல்களும், படுகொலைகளும் நடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில்க் கூட ஓரிரு சிங்களவர்களை மட்டுமே பொலீஸார் இதுவரையில் கைதுசெய்திருக்கின்றனர். ஆனால், கைதுசெய்யப்பட்டவர்களில் குறைந்தது 80 வீதமானவர்கள் தமிழர்கள். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும்வேளையில் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சிங்களவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். பொலீஸாரும், இராணுவத்தினரும் இனரீதியாகச் செயற்பட்டு, வன்முறைகளை ஊக்குவித்து வருகின்றனர். ராணுவத்தினரும் பொலீஸாரும் இப்பகுதிகளில் இருந்து வெளியேறினால் தமிழர்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் நிலைமை உருவாகும். தமிழர்கள் தம்மை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்துவரும் பொலீஸாரும், ராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வரும் சிங்களக் காடையர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் தமிழ் பொலீஸாரின் எண்ணிக்கை நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர எந்தவிதத்திலும் போதுமானது அல்ல. தமிழர்களின் நம்பிக்கையினை வளர்ப்தற்கு தயவுசெய்து தமிழ் பேசும் அதிகாரிகளையும், பொலீஸாரையும் இப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். சிங்கள ராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் துணையுடன் அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுவதைத் தயவுசெய்து தடுத்து நிறுத்துங்கள்" என்று அத் தந்தி கோரியிருந்தது.
  3. பெளத்த துறவிகளின் கைகளில் தவழும் தானியங்கித் துப்பாக்கிகள் ‍ இங்கிலாந்துச் செய்தியாளர் டேவிட் செல்போர்ன் எனும் இங்கிலாந்துச் செய்தியாளர் மஞ்செஸ்டர் கார்டியன் எனும் பத்திரிகைக்கும் ஏனைய வேறு பத்திரிகைகளுக்கும் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர். லலித் அதுலத் முதலியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர். 1982 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு பயணம் செய்தபோது ஜெயவர்த்தனவுக்கும், காமிணி திஸாநாயக்கவுக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ஒருநாள் பொதுக்கூட்டம் ஒன்றிற்காகச் சென்றுகொண்டிருந்த ஜெயவர்த்தன, காரில் தன்னுடன் அந்தச் செய்தியாளரையும் அழைத்துப் போனார். செய்தியாளர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்வதற்கு ஜெயார் பாவித்த வழிமுறைகளில் இதுவும் ஒன்று. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெயாருக்கும் டேவிட் செல்போர்னுக்கும் இடையிலான சம்பாஷணை தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் தடம் மாறியது. தனது அறிக்கையில் லலித் அதுலத் முதலி கூறியவற்றை செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார். "நாங்கள் சிலரின் தலைகளை நொறுக்கப் போகிறோம்" என்பதுதான் லலித் அதுலத் முதலி செபோர்னிடம் கூறிய வார்த்தை. ஆனால் பின்னாட்களில் தான் அப்படிச் சொல்லவில்லை என்பதனை மறுத்திருந்த லலித் அதுலத் முதலி, செல்போர்னை தனது எதிரியாகவும் பார்க்கத் தலைப்பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு செல்போர்ன் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தபோது உளவாளிகள் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். தேர்தல் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கலாக இராணுவம் வெறியாட்டம் ஆடிய கந்தர்மடம் பகுதிக்கு செல்போர்ன் சென்றிருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்போர்ன் பேசியபோது, கந்தர்மடத்திற்கு வந்திறங்கிய இராணுவத்தினர் தமது அதிகாரி அங்கு வரும்வரையில் காத்திருந்ததாகவும், அவர் வந்து உத்தரவு பிறப்பித்த பின்னரே தாக்குதலை ஆரம்பித்ததாகவும் அவரிடம் கூறியிருக்கின்றனர். செல்போர்ன் அமிர்தலிங்கத்தையும் செவ்வி கண்டிருந்தார். அமிர்தலிங்கம் அவருடன் பேசும்போது "புலிகளின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஆதரிப்பதாகவும், அதனாலேயே அவர்களை பாதுகாப்பதாகவும்" கூறியிருக்கின்றார். மேலும், "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் திக‌ழ்பவர்கள் புலிகள் தான்" என்றும் அமிர் செல்போர்னிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், செல்போர்ன் பிரதம நீதியரசரர் நெவில் சமரக்கோனையும் செவ்வி காண ஒழுங்கு செய்திருந்தார். . ஆனி 11 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரத்வத்தை, பேர்சி சொலிம் தோமே, சொய்சா ஆகியவர்களுக்கெதிராக ஜெயார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதையடுத்து நீதியரசர் ஜெயாருடன் முரண்பட்டிருந்த வேளை அது. கம்யூனிசக் கட்சியின் உறுப்பினரான விவியேன் குணவர்த்தண மீது கொள்ளுப்பிட்டிய பொலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதி வழங்கியவர்களே இந்த மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ஆகும். அதற்குப் பழிவாங்கலாகவே அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஜெயார் தூண்டிவிட்டிருந்தார். செல்போர்னுடனான செவ்வியின் போது ஜெயார் குறித்து கடுமையான விமர்சனங்களை பிரதம நீதியரசர் முன்வைக்கலாம் என்று அஞ்சிய அரசு, ஆனி 25 ஆம் நாள் இரவு, செல்போர்னைக் கைது செய்து நாடு கடத்தியிருந்தது. தம்புள்ளை குகை விகாரை நன்கு அறியப்பட்ட செய்தியாளரைக் கைது செய்து நாடு கடத்தியமை இலங்கை அரசுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையில் செல்போர்ன் எழுதிய "வன்முறைகளை தடுக்கத் தவறிய இலங்கை ராணுவம்" எனும் தலைப்பிலான செய்தி அதிகம் பகிரப்பட்டதோடு வேறு பல செய்தித்தாள்களிலும் மேற்கோள் காட்டப்பட்டு வெளிவந்திருந்தது. ஆடி 6 ஆம் திகதி வெளிவந்த இச்செய்தியை இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகளும் மீள் பிரசுரித்திருந்தன. தான் எழுதிய செய்தியாக்கத்தில் செல்போர்ன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், "காவி உடை தரித்த பெளத்த பிக்குகளின் கைகளில் இன்று தானியங்கித் துப்பாக்கிகள் பளபளக்கின்றன". மேலும், இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் புரட்டாதி மாதத்தில் சத்தியாக்கிரக நிகழ்வொன்றினை நடத்துவதற்கும் உத்தேசித்திருக்கிறார்கள் என்று அவர் எழுதியிருந்தார்.
  4. இந்த மனுசன் மரியாதையாய் ஒரு தரத்தோட விட்டு விட்டு போகலாம். பதவி ஆசை. பிகு வயது போக போக அறளை கூடி - தன்னிலை தாழ்வதை, என்னை சுற்றி இப்போ அதிகம் காண்கிறேன். எனக்கும் இப்படி ஒரு நிலை வந்து, ஏறுக்கு மாறாக, குதர்க்கமாக எழுதும் நிலை வரமுதல், யாழ்களத்தில் எழுதுவதை நிப்பாட்டி விட வேணும்.
  5. நீங்கள் சொறியுங்க அது உங்கள் சொந்த சுய இன்பம் என்னை அதற்குள் இழுக்க வேண்டாம். அவருக்கு அவரது வாய் தான் எதிரி.
  6. இப்படி உங்கள் கருத்துக்கு. நான் பதில் எழுதினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?? இந்த உங்கள் பதிலனாது எந்தவித கருத்துகளும் அற்றது 🤣
  7. இனிமையான பாடல்கள் 🅘🅝🅘🅜🅐🅨🅐🅝🅐 🅟🅐🅓🅐🅛 · Rejoindre Dinesh Kumar · · வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா??? இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும் கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம் ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு ஒரு வாரம் தவம் கிடந்தோம் அந்த காலம் தான் நன்றாக இருந்தது.. ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்.. தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்.. ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்.. இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்.. அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும் மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள் வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள் ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை.. ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை.. கண்டதை உண்டாலும் செரித்தது. தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது.. பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம் உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம் ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது.. எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது.. வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை.. பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது.. கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது.. மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்.. ஆசிரியைகளிடம். எளிமை இருந்தது.. படுக்கையை எதிர்பாராமல் பாயில் உறங்கினோம் தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே அவர்கள் மடி மீது தலை வைத்து நாம் உறங்கிய தருணம் கண்டோம் பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை.. அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது.. பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்... காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது.. பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம் ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம் செல்போன் எதுவும் இல்லை ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள் ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள் காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம் ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம் ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்.. மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை.. மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே... ஆமாம் தானே??? இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் நாங்களும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தோம்.....இந்தக் கொடுப்பனவு எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.......! 😁
  8. கடந்த வாரத்திற்கு முந்தய வாரத்தில் ஒருவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எடுத்தவுடனேயே கோபத்துடன் கூறினார் நீங்கள் கூறினீர்கள் 2025 வரை வட்டி விகிதம் அதிகரிக்காது என ஆனால் தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கிறது, வீட்டு கடன் கட்டுவதில் சிரமாக உள்ளதாகக்கூறினார். ஆம் அவர் எனது அபிப்பிராயத்தினை கேட்டிருந்தார் அது கோவிட் கட்டுபாடுகள் முடிவடைந்த கால கட்டம், அவர் என்னிடம் கேட்ட கேள்வி வட்டி விகிதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அவுஸ்ரேலிய அரசுகளும் வங்கிகளும் வட்டி விகித அதிக்ரிப்பு 2025 பின்னரே ஏற்படும் என கூறுகின்றன ஆனால் எனக்கு தெரியாது ஏனவே கூறியிருந்தேன், அத்துடன் கோவிட் பொருளாதார தூண்டலின் காரணமாக பணவீக்கம் ஏற்படும் என நான் கருதுவதாக கூறினேன் எனது கருத்து தவறாக இருக்கலாம் என கூறியிருந்தது எனது நினைவில் இருந்தது. அவர் Fixed / variable வீட்டு கடன் தொடர்பாக ஆர்வம் காட்டுவதாக் காண்பித்தார், அதனால் நானும் அது தொடர்பாக எந்த அறிவுரையும் கூறவில்லை. ஆனால் அவர் தனது வீட்டை விற்று அதனைவிட ஒரு பெரிய வீட்டினை வாங்கியிருந்தார் தற்போது வீட்டுக்கடன் மிக பெரியளவில் ஏற்பட்டு விட்டது வட்டி விகித அதிகரிப்பினால் அவ்ர் நிலை மோசமாக உள்ளது. பின்னர் என்னிடம் மீண்டும் எனது கருத்தினை கேட்டார் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதா என, இந்த முரை தெளிவாக இல்லை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என கூறிவிட்டு வந்துவிட்டேன். கடந்த வாரம் வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என அனைவரும் எதிர்பார்க்க மத்திய வங்கி 25 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மே மாத இறுதியில் எதிர்பார்க்கப்பட நுகர்வோர் விலைசுட்டெண் 0.40 அதிகரித்திருந்ததே இதற்கு காரணம் ஆனால் மக்கள் அதனை கவனிக்க தவறியிருந்தார்கள். அதில் வீட்டு விலை, உணவு, போக்குவரத்து அந்த விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது. இந்த மாத நடுப்பகுதியில் முக்கிய 4 வங்கிகளும் இந்த வட்டி விகித அதிகரிப்பினை அமுல்படுத்தவுள்ளது. consumer confident, China PMI என்பன சரிவு ஏற்பட்டாலும் பணவீக்கம் குறைவதாக இல்லை அதற்கு காரணம் பெற்றோலிய பொருளின் விலையேற்றம் போக்குவரத்து உணவுப்பொருலின் விலையில் நேரடித்தாக்கம் ஏற்படுத்துகிறது. China PMI சுட்டெண் சரிவினால் மூலப்பொருளின் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் அவஸ்ரேலியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளிவரும் நிகர்வோர் விலைசுட்டெண்ணும், இந்த வாரத்தில் வெளிவரவுள்ள வேலையின்மை தரவுகளும் எதிர்கால வட்டி விகிதத்தினை தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது, இந்த இரண்டு விடயங்களும் கடந்த மாதத்தில் அதிகரித்து வருவது கலைக்குரிய அம்சமாகவுள்ளது. வேலைகளை தக்க வைத்தல் அத்துடன் பக்க வருவாயினை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், இது எல்லோருக்கும் ஒரு கடினமான காலமாக உள்ளது. தேவையற்ற ஆடம்பர போலி கவுரத்திற்கான செலவுகளை குறைத்தல், தேவையற்ற பெரிய கடனை சுமப்பதால் குடும்பத்தில் நிம்மதி இழப்பு, அதிகரித்த வேலையினால் முக்கியமான் குடும்ப நேர இழப்பு ஏற்படும்.
  9. படங்களையும் பார்த்து செய்திகளையும் வாசிக்க பிபி எகிறிக் கொண்டு போகுது. தொடருங்கள் ரஞ்சித்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.