Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88827
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7138
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46977
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19669
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/03/23 in all areas

  1. சீலனின் வீரமரணம் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை வெடிக்கவைக்கும் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர், குறிப்பாக அதன் புலநாய்வுத்துறையினர் உசார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். வெடிக்கவைக்கும் கருவிகளை எடுத்துச் செல்லும் திட்டத்திற்குப் பொறுப்பாக சீலனே இருந்தார் என்பதை இராணுவத்தினை அறிந்துகொண்டனர். பாரிய தாக்குதல் ஒன்றிற்குப் புலிகள் தயாராகிறார்கள் என்பதை இராணுவத்தினர் அனுமானித்திருந்தனர். ஆகவே, புலிகள் தாக்குவதற்கு முன்னர் தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று தீர்மானித்த யாழ்ப்பாண ராணுவ ‍- பொலீஸ் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளர் மேஜர் சரத் முனசிங்க யாழ்க்குடாநாட்டில் புலிகளின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். சீலன் நினைவேந்தல் - ‍ 2003 "மீசாலைப்பகுதியில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதாக எமக்குச் செய்தி வந்திருந்தது. மீசாலை ‍- கச்சாய் வீதியில் இருக்கும் அடர்ந்த தென்னந்தோப்பொன்றினுள் இந்த மறைவிடம் இருப்பதாக எமக்குச் சொல்லியிருந்தார்கள். ஆகவே இதுகுறித்த துல்லியமான தகவல்கள் எமக்குத் தேவைப்பட்டன" என்று சரத் முனசிங்க என்னிடம் கூறினார். கொடிகாமம் பொலீஸ் நிலையத்திற்கு ஒருவரால் வழங்கப்பட்ட இந்தத் தகவல், குருநகர் ராணுவ முகாமில் இயங்கி வந்த ராணுவ ‍ பொலீஸ் கூட்டு புலநாய்வுத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடி 15 ஆம் திகதி காலை 10 மணியளவில் பொலீஸ் அதிகாரி ஒருவரால் இந்தத் தகவல் முனசிங்கவிடம் வழங்கப்பட்டது. இத்துடன் மேலதிகமாக இன்னொரு தகவலையும் அந்தப் பொலீஸ் அதிகாரி வழங்கியிருந்தார். அதுதான் அந்த மறைவிடத்திற்கு மிக அருகாக மலசல கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது என்கிற அடையாளம். ஆனாலும், இந்த தகவல்கள் தெளிவானதாக இருக்கவில்லை. துல்லியமாக புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாகவே இருக்கப்போகிறதென்று ராணுவத்தினர் கருதினர். ஆனாலும் அப்பகுதியில் தேடுதல் நடத்துவதென்று முனசிங்க முடிவெடுத்தார். "புலிகளின் தாக்குதல் ஒன்றினை முறியடிப்பது மிக மிக அவசியமானது என்று நாம் நினைத்தோம்" என்று முனசிங்க கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான கட்டளை அதிகாரி, பிரிகேடியர் லைல் பல்த்தசாரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார் முனசிங்க. தனக்குக் கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் பற்றி பல்த்தசாரிடம் விளக்கிய முனசிங்க, மீசாலைப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் புலிகளின் மறைவிடத்தை தேடிப் பார்ப்பது அவசியம் என்று தான் கருதுவதாகக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பல்த்தசார், இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 12 பேர் அடங்கிய கொமாண்டோ அணியையும், மேலதிகமாக ஒரு இளநிலை அதிகாரியுடன் 5 சாதாரண சிப்பாய்களையும் அனுப்பி வைத்தார். ராணுவ வண்டிகளில் புலிகளின் மறைவிடம் நோக்கிப் போகும்போது புலிகளின் ஆதரவாளர்களால் தமது பிரசன்னம் புலிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, புலிகள் தப்பிச் சென்றுவிட வாய்ப்பிருப்பதாக முனசிங்க கருதினார். ஆகவே, பொதுமக்கள் பாவிக்கும் மினிபஸ் ஒன்றினை மடக்கிப் பிடிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளின் சீருடையணிந்த இரு ராணுவ வீரர்களை மணிக்கூட்டுச் சந்திக்கு அருகிலிருக்கும் நீண்ட ஆளரவம் அற்ற சாலையில் மதியவேளை அனுப்பி வைத்தார். அப்பகுதியால் வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை மறித்து, அதிலிருந்த சாரதியையும், நடத்துனரையும் கட்டிப்போட்டு விட்டு வாகனத்தை முகாமிற்கு ஓட்டிச் சென்றனர் ராணுவ வீரர்கள். முகாமை அடைந்ததும் சாரதியும், நடத்துனரும் முகாமின் அறை ஒன்றினுள் அடைத்துவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மணிக்கூடுக் கோபுரம் ‍ 2003 ஆனால், வாகனத்தை ஓட்டுவதற்கு சாரதி எவரும் முகாமில் இருக்கவில்லை. இருந்தவர்கள் எல்லாம் வேறு நடவடிக்கைகளுக்காகச் சென்றுவிட்டிருந்தனர். ஆகவே, தானே வாகனத்தை ஓட்டுவதென்று முனசிங்க முடிவெடுத்தார். நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தனர். "நாம் குருநகர் முகாமிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்குக் கிளம்பினோம். தேவையேற்படின் வாகனத்தை ஓட்டுவதற்கு வசதியாக இளநிலை அதிகாரி எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். எவருமே பேசிக்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையின் பாரதூரம் பற்றி எல்லோரும் நன்கு அறிந்தே இருந்தோம். யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் நான் சற்று வேகமாகவே ஓட்டிச்சென்றேன். பின்னல் சீருடை தரித்த ராணுவத்தினர் ஜீப் ஒன்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் எம்மைப் பிந்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.மீசாலைச் சந்தியை அடைந்ததும், வாகனத்தை கச்சாய் நோக்கித் திருப்பினேன். அவ்வீதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இருவரை எமக்கு வழிகாட்ட ஏற்றிக்கொண்டோம். தென்னந்தோப்பின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டு வரும் மலசல கூடம் குறித்து அவர்களிடம் கேட்பதே எமது நோக்கம். ஆனால், எங்களால் புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது போய்விட்டது" என்று முனசிங்க என்னிடம் கூறினார். ஆகவே, மினிபஸ்ஸை கடற்கரை நோக்கிச் செலுத்தினார் முனசிங்க. பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி அவ்விடத்தை அடையுமட்டும் முனசிங்கவும் கொமாண்டோக்களும் அங்கு காத்து நின்றனர். மாலை 6 மணியாகிக்கொண்டிருந்தது, சூரியன் மெது மெதுவாக பட்டுக்கொண்டிருந்தான். மாலை நேரச் செவ்வானத்தின் அழகினை ரசிக்கும் நிலையின் முனசிங்கவோ படையினரோ அப்போது இருக்கவில்லை. முகாமிற்குத் திரும்புவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். முகாமிலிருந்து வந்தது போலவே, சாதாரண உடையணிந்த கொமாண்டோக்களுடன் மினிபஸ்ஸை முனசிங்க ஓட்டிச் செல்ல, சீருடையில் வந்த ராணுவத்தினர் பின்னால் ஜீப் வண்டியில் இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தனர். "கொண்டமூலாய் முடக்கினூடாக நான் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு செல்லும்போது, எமது வாகனத்தின் முன்னால் மூன்று இளைஞர்கள் சைக்கிளில் செல்வதை நாம் கண்டோம். மூன்று சைக்கிள்களும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக ஓட்டிச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த சைக்கிளில் இன்னொருவர் அமர்ந்துவரக்கூடியதாக இருக்கை பூட்டப்பட்டிருந்தது. மற்றைய இருவரும் ராணுவ சீருடையினை ஒத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து சென்ற இளைஞனிடம் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை அவதானித்ததும் நான் மினிபஸ்ஸை உடனடியாக நிறுத்தினேன். பஸ்ஸும் கிரீச்சிட்ட சத்தத்துடன் அவர்களின் அருகில்ப் போய் நின்றது. வாகனத்தில் இருந்த இரு கொமாண்ட்டஓக்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே வெளியில்க் குதித்தனர். இதனைக் கண்டதும் தாம் பயணித்த சைக்கிள்களை வீதியின் முன்னே விட்டெறிந்த அந்த மூன்று இளைஞர்களும் வேலியின் மீது பாய்ந்து ஏறித் தப்பியோடத் தொடங்கினர். பின்னர், பற்றை ஒன்றிற்குள் நிலையெடுத்து எம்மீது தாக்கத் தொடங்கினர். அவர்களைப் பிந்தொடர்ந்து துரத்தும் கொமாண்டோக்களைத் தாமதிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது" என்று இந்தச் சம்பவம் குறித்த நினைவுகளை முனசிங்க என்னுடன் பகிர்ந்துகொண்டார். தமக்கு முன்னால்த் தெரிந்த நெல்வயலினூடாக மூன்று இளைஞர்களும் ஓடிக்கொண்டிருந்தனர். "என்னுடன் வந்த கொமாண்டோக்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். கொமாண்டோக்கள் நிலையெடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த பற்றையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர்களில் ஒருவர் சூடுபட்டு விழுந்தார். மற்றையவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் சூடுபட்டு விழுந்தார். மூன்றாமவர், கீழே வீழ்ந்தவரை இழுத்துக்கொண்டு ஓட முயல்வதை நான் அவதானித்தேன். ஆனால், அம்முயற்சி சாத்தியமாகாது போகவே, அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர் மீண்டும் ஓடத் தொடங்கினார். அவருக்கும் சூடு பட்டிருந்தது, ஆனாலும் ஓடித் தப்பிவிட்டார்" என்று முனசிங்க கூறினார். அப்பகுதியை இருள் சூழத் தொடங்கியிருந்தது. தனது வீரர்களை அப்பகுதியில் இருட்டில் தேடுதல் நடத்தவேண்டாம் என்று முனசிங்க கூறிவிட்டு குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு மேலதிக படையினரை அனுப்புமாறு கேட்டார். மேஜர் அசோக ஜயவர்த்தனவின் தலைமையில் ராணுவ அணியொன்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வந்திறங்கியது. அவருடன் சில மூத்த பொலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
  2. காட்டிக்கொடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் (இவர் மீசாலையை சேர்ந்தவர் என நினைக்கிறேன்) துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கில் போட்டு சந்திகளில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  3. நீங்களும், அப்படி தானே நினைச்சீங்க... 🤣
  4. குழந்தையைத் தூக்குவது போல கொண்டு போறாங்க.
  5. ஆட்சிகளும் கட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் தமிழின அழிப்புத்தொடர, 40ஆண்டுகளாக மன்னிப்புச்சபையும் மற்றும் ஐ.நா.ம.உரிமைச் சபை போன்றனவும் இன்றுவரை அறிக்கையோடு மட்டுமே நிற்கின்றன.
  6. இந்தியாவின் ஆட்சேபம் பயங்கரவாதத்தினை அழித்தே தீருவேன் என்றும், அதனால் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி தான் கவலைப்படப்போவதில்லை என்றும் டெயிலி டெலிகிராப் பத்திரிக்கைக்கு ஜெயார் கொடுத்திருந்த செவ்வி இந்திய வெளியுறவுத்துறையில் சிறிய சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இந்தவிடயத்தை பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர்கள் கொண்டுசென்றபோது, இந்தியாவின் இது தொடர்பான கரிசணையினை இலங்கைத் தூதுவரான பேர்ணாட் திலகரத்ணவை அழைத்துத் தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளரான சங்கர் பாஜ்பாயை இந்திரா பணித்தார். ஏ.சி.எஸ்.ஹமீட் அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்படுவோர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களை எரித்துவிடும் அதிகாரம் ராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இக்கொலைகளுக்கான தண்டனைகளில் இருந்து ராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் முற்றான விலக்கும், மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது பரேதப் பரிசோதனை செய்யவோ தேவையில்லை என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கரிசணை கொண்டிருந்தது. மிகக் கொடுமையான இந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக எழுதி வ‌ந்ததையடுத்து, கொழும்பிலிருந்து இந்திய உயர்ஸ்த்தானிகர் எஸ்.ஜே.ஜே. சாட்வாலை தனது வெளியுறவுத்துறை அமைச்சின் அலுவலகத்திற்கு அழைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை அமுலாக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் விளக்கவேண்டியதாயிற்று. ஹமீடின் விளக்கத்தினை ஷட்வால் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றினை அவர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பிவைத்தார். பேர்ணாட் திலகரட்ண அன்று மாலையே தில்லியில் தங்கியிருந்த பேர்ணாட் திலகரட்ணவை தனது அலுவலகத்திற்கு அழைத்த இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளர் பாஜ்பாய், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த இந்தியாவின் கரிசணையினைத் தெரிவித்தார். இச்சட்டங்கள் தமிழர்களுக்கான அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியா இச்சட்டம் தொடர்பான தனது கருத்தினையே முன்வைக்கிறது, அழுத்தங்களையல்ல என்றும் மிகவும் பவ்வியமாக அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த திகரட்ண, "கடவுளே, இது எமது நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் அல்லவா?" என்று பாஜ்பாயைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார். பின்னர், அவரைப் பார்த்து, "இது தமிழ்நாட்டு அரசின் கருத்தா அல்லது மத்திய அரசின் கருத்தா?" என்று கேட்டர் திலகர‌ட்ண. அதற்குப் பதிலளித்த பாஜ்பாய், "இது மத்திய அரசின் அதிமேலிடத்தில் உள்ளவரின் கருத்து" என்று கூறினார். உடனடியாக கொழும்புடன் தொடர்புகொண்ட திலகரட்ண, "இது எனக்கு அதிர்ச்சிதரும் ஒரு அறிக்கை" என்கிற தலைப்பில் இந்தியாவின் கரிசணையினை அனுப்பிவைத்தார். இந்தியாவின் கரிசணை பற்றி தனது தூதுவர் மூலம் அறிந்துகொண்டபோது கொழும்பு அரசாங்கம் கடும் எரிச்சலடைந்தது. டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் இதனைச் செய்தியாகப் போடுமாறு பணிக்கப்பட்டதுடன், ஆசிரியர்த் தலையங்கத்திலும் இந்தியாவின் கரிசணை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. செய்தியின் தலைப்பு இப்படிச் சொல்லியது, "எமது விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை இலங்கை வெறுப்புடன் நோக்குகிறது". மேலும் அதன் ஆசிரியர் தலையங்கத்தில், "இதனை எப்படிச் செய்தாய் பெரியண்ணா?" என்கிற கருத்தில் விமர்சித்திருந்தது. இனவாதப் பத்திரிக்கையான சண் ஒருபடி மேலே சென்று, "பெரிய சண்டியன் இந்தியா" என்று தலைப்பிட்டிருந்தது. சர்வகட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடக்கவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தினை ஒழிக்கும் சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், தோழமைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே சமூகமளித்திருந்ததனால், அம்மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் புதிய சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தனர். பயங்கரவாதத்தினை அழிக்கும் தனது திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வெளியிடாததனால் தாம் இந்த மாநாட்டில் பங்குபெற்ற விரும்பவில்லை என்று சுதந்திரக் கட்சி கூறியது. அக்கட்சியின் பேச்சாளாரான லக்ஷ்மண் ஜயக்கொடி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது "ஜெயவர்த்தனா சதியில் இறங்கியிருக்கிறார், பயங்கரவாதத்தினை அழிப்பதற்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு, பின்னர் ஏதும் தவறுகள் நடக்குமிடத்து சுதந்திரக் கட்சியே இவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டது என்று பழியினை எம்மீது போட்டுவிடுவார்" என்று கூறினார். "இந்த சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுவதை விடுத்து தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு முதலில் வெளிப்படையாகச் சொல்லட்டும்" என்றும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு அமிர்தலிங்கம் இரு காரணங்களை முன்வைத்தார். முதலாவதாக, பிரச்சினைக்கான மூல காரணத்தை அறியாமலும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்வைக்காமலும் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மட்டுமே இந்த மாநாடு கூட்டப்படுவதால் தனது கடசி அதில் கலந்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இம்மாநாட்டில் சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளாமையினால், தமிழருக்கான தீர்வினைத் தருவதில் இக்கட்சிகள் இரண்டினதும் ஒருமித்த கொள்கை ஒன்று இல்லாமல்ப் போயிருயிப்பதாகவும், இதுவே தனது கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமைக்கான மற்றைய காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார். "இம்மாநாட்டில் மேசைகள் எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கின்றன, வட்டமாகவா அல்லது சதுரமாகவா?" என்று லலித்திடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "1977 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டமேசை மாநாடு என்றே நாம் பேசி வந்தோம், ஆகவே வட்டவடிவில்த்தான் அவை ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று கூறினார். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அவர் எனக்கு அளித்த பதில் குறித்து அவருக்கு நான் நினைவுபடுத்தினேன். அன்று நான் அவரிடம் "தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று?" என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்திருந்த லலித், "வட்டமேசையா, அது என்ன? மக்களின் ஆணையுடன் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினைக் கொண்டிருக்கிறோம். நாங்களே மேசையைச் சுற்றி அமர்ந்துகொள்வோம். இனப்பிரச்சினையாக இருந்தாலென்ன, அல்லது வேறு எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன, நாமே என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுப்போம்" என்று கர்வத்துடன் கூறியிருந்தார். ஆகவே, நான் இன்று கேட்டபோது, "இன்றைக்கும் எமது முடிவு அப்படியே இருக்கிறது, நாமே முடிவுகளை எடுப்போம்" என்று மீண்டும் அத‌னை உறுதிப்படுத்தினார். மறுநாள், ஆடி 21 ஆம் திகதி, தனது கருத்தினை பாராளுமன்றத்தில் முன்வைத்தது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து பெளத்த சிங்களக் கட்சிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தமது போருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது ஜெயாரின் உணர்வுகளை அச்சொட்டாக அவர் விரும்புவதுபோலவே வெளியிட்டார். பாராளுமன்றத்தில் அதுலத் முதலி கூறியது இதைத்தான், "அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சினையினை எப்படித் தீர்க்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்தவகையில் நாம் தீர்த்துவைப்போம். நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டாலென்ன, விட்டாலென்ன அல்லது அதனை ஆதரித்தலேன்ன இல்லாவிட்டாலென்ன, நாம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை எமது திட்டத்தின்படி கொடுப்போம். பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட எது சரியான தீர்வென்று எமது அரசாங்கம் நினைக்கின்றதோ, அந்தவைழியில் சென்று நிச்சயம் அதனை முற்றாக நடத்தி முடிப்போம்". "பயங்கரவாதத்தை அழிக்கும் இந்த செயற்பாட்டில் அப்பாவிகள் பாதிக்கப்படலாம். அப்பாவிகளின் அழிவுகளை குறைக்க நாம் முயற்சி எடுப்போம். சுதந்திரக் கட்சிக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும், ஆனால் தற்போது எதற்காகப் பின்வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிங்கள பெளத்த கட்சியாக இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எப்படிக் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? பயங்கரவாதத்தை அழிக்க முன்வராது இருந்துவிட்டு எப்படி மக்களையும் தேர்தல்களையும் எதிர்கொள்ளப்போகிறீர்கள்? பாஸிஸப் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரில் உங்களை இணைந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் கொலைஞன் ஒருவனுடன் உலங்குவானூர்தியில் இருந்துகொண்டு உரையாடும் சிங்கள பெளத்த கொலைஞன் லலித் அதுலத் முதலி ஜெயவர்த்தனவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் காமிணியை ஓரங்கட்டிவிட்டு ஜெயாருக்கு நெருக்கமாகலாம் என்று லலித் எண்ணினார். அவர் பிரேமதாசாவால் ஒதுக்கப்படும்வரைக்கும் அதுவே அவரது அரசியலாக இருந்தது. ஏனென்றால், பிரேமதாசா கூட ஜெயாரின் இனவாதத்தைத்தான் கைக்கொண்டு வந்தார்.
  7. சர்வதேச மன்னிப்புச் சபையுடன் முரண்பட்ட ஜெயார், ஜனாதிபதியாகத் துடித்த லலித் ஜெயவர்த்தன தனது இரண்டாவது தவணைக்காலத்தை 1988 ஆம் ஆண்டு நிறைவுசெய்யும்போது ஜனாதிபதிப் பதவிக்கு வரும் தனது விருப்பத்தை லலித் அதுலத் முதலி வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால், ஜெயாருடன் காமிணி திசாநாயக்க கொண்டிருந்த நெருக்கம் அவருக்கு கவலையைக் கொடுத்திருந்தது. அத்துடன் காமிணியின் கட்டுப்பாட்டிலிருந்த பல அமைச்சுக்களும், குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டமும் அதனுடன் இணைந்த பாரியளவிலான காணிகள் மீதான அதிகாரமும் லலித்திற்கு சங்கடத்தைக் கொடுத்திருந்தன. லலித்தின் கவலைகளை அவருடன் நெருங்கிப் பழகிய செய்தியாளன் என்கிற வகையில் நான் நன்கு அறிந்தே இருந்தேன். அவரின் கீழிருந்த வணிகம் மற்றும் கப்பற்றுரை அமைச்சுக்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த அதே காலத்தில் காமிணியின் கீழான அமைச்சுகக்கள் பற்றிய செய்திகளையும் சேகரித்து வந்திருந்தேன். ஜெயாரினதும், மக்களினதும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல நிதியுதவித் திட்டத்தினை லலித் பரிந்துரை செய்திருந்தார். ஜெயவர்த்தனவின் அரசியலின் அடிநாதமே "வடக்குப் பயங்கரவாதத்தை அழித்தல்" என்றாகியபோது, லலித்தும் அதனை இறுகப் பற்றிக்கொண்டார். ஆகவேதான் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரேரித்ததுடன் நின்றுவிடாமல், அதனைச் சட்டமாக்கவும், நிறைவேற்றவும் கடுமையாக உழைத்து ஜெயாரின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான "தீர்வினை" சிரம் மேல் ஏற்று முன்னின்று உழைத்தார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஜெயார் கொண்டிருந்த நிலைப்பாட்டினை நாட்டினுள்ளும், வெளியிலும் நியாயப்படுத்தி, முன்கொண்டு செல்வதிலும் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வந்தார். லலித்தின் செயற்பாடுகள் பற்றி நான் தொடர்ந்து இங்கு பதிவிடுவேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அடக்குவது குறித்து கிரகம் வோர்ட்டிடம் பேசிய ஜெயார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தான் கூட்ட விரும்புவதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமரான சிறிமா உட்பட பல அரசியல்த் தலைவர்களையும் அழைக்கப்போவதாகக் கூறிய ஜெயார், தனது திட்டத்தினை எவர் ஏற்றுக்கொண்டால் என்ன, இல்லாதுவிட்டால் என்ன தான் நிச்சயமாக பயங்கரவாதத்திற்கெதிரான தனது நடவடிக்கைகளை எடுத்தே தீருவேன் என்று தீர்க்கமாகக் கூறினார். இச்செவ்வியின்போது சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கிரகம் வோர்ட் வினவியபோது, அது இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டு வரும் பிரச்சாரம் என்று எள்ளி நகையாடினார் ஜெயார். இலங்கையின் கம்மியூனிசக் கட்சியின் ஸ்த்தாபகரான கலாநிதி விக்கிரமசிங்கவின் மகனான டெஸ்மண்ட் பெர்ணான்டோவே சர்வதேச மன்னிப்புச் சபையின் கொழும்புக் கிளைக்குப் பொறுப்பாக அக்காலத்தில் பணிபுரிந்து வந்தார். ஆகவே, அவரை மனதில் இருத்தியே "கம்மியூனிசஸ்ட்டுக்களின் பொய்ப் பிரச்சாரம்" என்று தனது ராணுவம் மற்றும் பொலீஸார் மீதான விமர்சனங்களை அவர் நிராகரித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 6 ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து தமிழர்களை கைதுசெய்து, தடுத்துவைத்து, கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மேல் புரிந்து, நீதிமன்ற வழ்க்குகளின்றி கலவரையின்றி அடைத்துவைத்தல் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தடுத்துவைத்தல் ஆகிய செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சட்டியிருந்தது. அத்துடன், இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை எழுந்தமானமாகக் கைதுசெய்து , சித்திரவதைகளின்பின்னர் அவர்களைக் கொன்று வீதிகளில் எறிந்துவருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. https://www.amnesty.org/fr/wp-content/uploads/2021/06/asa370051984en.pdf "பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்படும் அரசியல்ச் செயற்பாட்டாளர்களை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து இலங்கையரசு தடுத்துவைத்திருக்கிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பலர் சுமார் எட்டு மாத காலம்வரை ராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் கடுமையான சித்திரவதைகளை சந்தித்து வருகின்றனர். இச்சித்திரவதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு, அவர்களின் நக இடுக்குகளில் ஊசிகள் ஏற்றப்பட்டு, கண்கள் உட்பட உடலின் பல இடங்களில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தது சர்வதேச மன்னிப்புச்சபை. மேலும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அல்லது அவர்களுக்கான வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வதையோ இலங்கையரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தே வருவதாகவும் மன்னிப்புச்சபை கூறியது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக 12 பரிந்துரைகளை மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது, 1. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தினை அக்கைதிகளுக்கு தெரியப்படுத்துவது. 2. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது. 3. கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தல். 4. கைதிகள் மேல் நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான கட்டமைப்பொன்றினை உருவாக்குவது. 5. ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சாட்சியங்களை தயாரித்தல் அல்லது சேகரித்தல். 6. நீதிமன்றில், நீதிபதிகளின் முன்னால் அன்றி, வேறு எவ்விடத்திலும் பொலீஸாரினால் தயாரிக்கப்படும் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை முற்றிலுமாகத் தடை செய்வது. ஆகியவை இவற்றுள் முக்கியமானவையாகும். தனது அறிக்கைக்குப் பதிலாக இலங்கையரசாங்கம் வெளியிட்ட விமர்சனத்தை வெளியிடப்போவதாக மன்னிப்புச்சபை தெரிவித்தபோது ஜெயார் கடுமையாகக் கோபமடைந்திருந்தார். மன்னிப்புச்சபையின் அறிக்கைக்குப் பதிலளித்த அரசாங்கம், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த விடயங்களில் ஒன்பது விடயங்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன் சில கைதிகள் வெளித்தொடர்பின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தது. இதுகுறித்த முற்றான அறிக்கையினை அரசு ஆடி 22 ஆம் திகதி வெளியிட்டது. வி.என். நவரட்ணம் இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது மூன்றாவது வருடாந்த மாநாட்டினை மன்னாரில் ஆடி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதாகத் தீர்மானித்திருக்க, சாவகச்சேரி தேர்தல்த் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரட்ணம் தான் பதவி விலகுவதாக ஆடி 21 ஆம் திகதி அறிவித்தார். தனது விலகலுக்கான காரணத்தை அறிக்கை வடிவில் வெளியிட்ட நவரட்ணம், கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததுடன் 1977 ஆம் ஆண்டு தன்னைத் தெரிவுசெய்து ஆறு ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாக்காளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் அறிக்கை முன்னணியின் ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான அவமானத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெயாருக்கும் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபபையின் தலைவர் எஸ்.நடராஜா தனது பதவி விலகல் அறிவிப்பினை ஆடி 15 இல் வெளியிட்டது ஜெயாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. தனது பதவி விலகல் குறித்து யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜா, மாவட்ட அபிவிருத்திச் சபைக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட அதிகாரங்கள் எவற்றினையும் அரசு தரமறுத்து வருவதாகவும், சபை இயங்குவதற்கான நிதியினை தடுத்துவைத்திருப்பதாகவும் கூறியதோடு, இச்சபைகளை அரசு உருவாக்கியதன் உண்மையான நோக்கம் தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கேயன்றி வேறு எதற்கும் அல்ல என்று கூறியதோடு, வெற்றுக்கோது என்றும் இச்சபையினை அவர் விளித்திருந்தார். "பொடியள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லை. சபையினை இயக்குவதற்காக நான் முன்வைத்த நிதிக் கோரல்களை நிதியமைச்சு தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது" என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் இப்பத்திரிக்கையாளர் மாநாட்டில் இரு விடயங்கள் குறித்து நடராஜா பேசியிருந்தார். முதலாவது, காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு பை சீமேந்திற்கும் தலா ஒரு ரூபாய் வீதம் வரியினை அறவிடுதல். இரண்டாவது, காங்கேசந்துறைக்கும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையினை ஆரம்பிப்பது. இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக நிராகரித்த அரசு, மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இல்லையென்று முதலாவது கோரிக்கையினை உதாசீனம் செய்ததுடன், நாட்டில் நிலவும் பாதுகாப்புக் காரணங்களால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பற்சேவையினை ஆரம்பிக்க முடியாது என்றும் கூறியிருந்தது. ஆடி 17 ஆம் திகதி வெளிவந்த பத்திரிக்கைகள் அனைத்திற்கும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய சர்வகட்சி மாநாட்டினை அரசு கூட்டவிருப்பதான செய்தியினை ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்தது. அச்செய்தியில் பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான வழிகள் பற்றி இந்த மாநாடு ஆராயும் என்றும் கூறியது. சுதந்திரக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும் இச்செய்தி கூறியது. தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காது பயங்கரவாதத்தினை முறியடிக்க நடத்தப்படும் இந்த மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பங்கேற்காது என்று அமிர்தலிங்கம் கூறினார். உடனடியாக இதற்குப் பதிலளித்த ஜெயார், இம்மாநாட்டில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயலாம் என்று மாநாட்டின் நோக்கத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்தார்.
  8. நூல் கைகளில் விரியும்போது ஆயுதங்கள் நழுவிச்செல்லும் .........! 👍
  9. விம்பிள்டன் சிரிப்பு.......! 😂 🤣
  10. வெறும் ஊகம் டினிப்ரோ நதி கரையில் காற்றில் இனம் தெரியாத தொற்று கண்டறியபட்டதாக ஒரு உக்ரேனிய சார்ப்பு கணக்கு சொல்கிறது. வெறும் ஒற்றை வரி செய்தியாக. ஆதாரம் எதுவும் இல்லாமல்.
  11. ஓம் அண்ணை. 2000 ஆம் ஆண்டில் சி வி குணரத்ண சொய்ஸா தொடர்மாடிக்கருகில் கொல்லப்பட்டபோது எம்முடன் படித்த சிங்கள மாணவர்களே எம்மை அடித்து புலிகள் என்று பொலீஸில் பிடித்துக் கொடுத்தார்கள். எமது அறைகள் உடைக்கப்பட்டு அனைத்து உடமைகளும் தெருவில் வீசப்பட்டிருந்தன. சுவர்களில் எம்மைப் புலிகள் என்று விளித்து எழுதினார்கள். எனது நண்பன் ஒருவன் 250 சி சி மோட்டார் சைக்கிள் ஒன்று வைத்திருந்தான். அவனைப் புலிகளின் உளவுத்துறை என்று படத்துடன் செய்தி போட்டது திவயின. காலம்தான் வேறு, ஆனால் அவர்களின் செயலோ ஒரேவகையானவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.