Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8975
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46977
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88827
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19669
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/11/23 in all areas

  1. திருநெல்வேலித் தாக்குதல் பலாலி வீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியொன்றில் தான் ஒட்டிவந்த மினிபஸ்ஸை செல்லக்கிளி ஓரமாக நிறுத்தவும் உள்ளிருந்த பிரபாகரனும் ஏனைய தோழர்களும் இறங்கிக் கொண்டார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கி இருவர் கொண்ட சிறிய குழுக்களாகப் பிரிந்துகொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்திசையில் திரும்பி சுமார் 200 மீட்டர்கள் நடந்தார்கள். அவ்விடத்திலிருந்த மளிகைக்கடை ஒன்றின் முன்னால் அவர்கள் மீண்டும் கூடினர். சீமேந்தினால் அமைக்கப்பட்ட கூரையும், அதன் முன்னால் அரைப்பங்கிற்குக் கட்டப்பட்ட சீமேந்துச் சுவரும் கொண்டு காணப்பட்டது அந்த மளிகைக்கடை. சுமார் இரவு 9 மணியிருக்கும் அப்போது. அநேகமான வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் இன்னமும் எரிந்துகொண்டிருந்தன. வீதியில் சப்பாத்துக் காலடி ஓசை கேட்க, அருகிலிருந்த வீடுகள் சிலவற்றிலிருந்து குடியானவர்கள் வீட்டு யன்னல்களூடாக‌ வீதி நோக்கிப் பார்ப்பத் தெரிந்தது. தான் கொண்டுவந்திருந்த ஆயுதப் பையை வீதியில் போட்டுவிட்டு திறக்கப்பட்ட யன்னல்கள் அருகில் சென்ற விக்டர், "யன்னல்களைச் சாத்துங்கள்" என்று சிங்களத்தில் கத்தினார். பின்னர் மின்விளக்குகளையும் அணைக்குமாறு அவர் சிங்களத்திலேயே உத்தரவிட்டார். யன்னல்கள் சாத்தப்பட்டதுடன் மின்விளக்குகளும் உடனேயே அணைக்கப்பட்டுவிட்டன. சிங்கள ராணுவத்தின் கட்டளைகளுக்கு பணிந்துபோவதென்பது அப்போது தமிழருக்கு நன்கு பரீட்சயமாகியிருந்தது குறிப்பிடத் தக்கது. ராணுவத் தொடரணிகளின் பாதுகாப்பிற்காக கால்நடையாக வீதியில் ரோந்துவரும் சிங்கள ராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது இவ்வகையான கட்டளைகளை இட்டுக்கொண்டே செல்வது அக்காலத்தில் வழமையாக இருந்த ஒன்று. அன்றிரவு பிரபாகரனும் அவரது தோழர்களும் ராணுவச் சீருடையிலேயே காணப்பட்டதனால், அவர்களைச் சிங்கள ராணுவத்தினர் என்றே மக்களும் எண்ணிக்கொண்டார்கள். கடையின் அருகில், வீதியின் ஓரமாக தொலைத்தொடர்புச் சேவையின் ஊழியர்கள் கம்பிகளை புதைப்பதற்காக அகழிகளை வெட்டி வைதிருந்தார்கள். அந்த அகழிகளில் ஒன்றில் விக்டரும் செல்லக்கிளியும் தாம் கொண்டுவந்திருந்த கண்ணிவெடியினை புதைத்துக்கொண்டிருப்பதை பிரபாகரன் திருப்தியுடன் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்களுடன் அவர் பேசவில்லை. பின்னர் அருகில் நின்றை ஏனைய தோழ‌ர்களிடம் சென்ற பிரபாகரன் அவர்களுடன் சேர்ந்து, தாம் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக சாக்குப் பைகளிலிருந்து வெளியில் எடுக்க ஆரம்பித்தார். எச் கே ஜி 3 தான் கொண்டுவந்த ஜி 3 ரைபிளை வாஞ்சையுடன் வெளியே எடுத்த பிரபாகரன் அதன் மீது படிந்திருந்த தூசியினை மெதுவாகத் துடைத்தார். ஏனையவர்களிடம் எஸ் எம் ஜி இயந்திரத் துப்பாக்கிகள் காணப்பட்டன. புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, விக்டர், புலேந்திரன், ஐயர், சந்தோசம், அப்பையா உட்பட வேறு சிலரும் அந்த இராப்பொழுதில் அங்கே ராணுவத்தின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்து நின்றனர். புலிகளின் தாக்குதல்க் குழுவில் மொத்தமாக 14 பேர் இருந்தார்கள். பிரபாகரன் திட்டமிட்டதைப் போலவே இரு குழுக்களாக அவர்கள் பிரிந்துகொண்டார்கள். ஒரு குழுவிற்குப் பிரபாகரன் தலைமை தாங்க, மற்றைய குழுவிற்கு கிட்டு தலைமை தாங்கினார். இத்தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் பிரபாகரனாலேயே வகுக்கப்பட்டது. சீலனைக் கொன்றதற்காக இராணுவம் மிகப்பெரிய விலையினைச் செலுத்தவேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் கூறியிருந்தார். "சீலனின் இழப்பென்பது ஈடுசெய்யப்பட முடியாதது. ஆனாலும், சீலனின் இழப்பிற்கு நாம் பெரிதாக ஒரு நடவடிக்கையினைச் செய்யவேண்டும். அவனுக்குத் திருப்தியைக் கொடுக்கும் வகையில் அது அமையவேண்டும்" என்று சீலன் கொல்லப்பட்ட நாளிலிருந்து தனது போராளிகளிடம் பிரபாகரன் இதனைச் சொல்லி வந்திருந்தார். திருநெல்வேலித் தாக்குதல் நடந்து சுமார் 8 மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு பங்குனியில் அனித்தா பிரதாப்பிற்கு செவ்வியளித்த பிரபாகரன், திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலாகவும், இராணுவத்தினருக்கான தண்டனையாகவுமே தன்னால் திட்டமிடப்பட்டதாகக் கூறியிருந்தார். கல்கத்தாவில் இருந்து வெளிவரும் அரசியல் வார இதழ் ஒன்றிற்காக அனித்தா பிரதாப் பிரபாகரனை சென்னையில் செவ்வி கண்டிருந்தார். அனித்தாவினால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியினை நான் இங்கே இணைத்திருக்கிறேன், கேள்வி : ஆடித் தாக்குதலை நீங்கள் ஏன் நடத்தினீர்கள்? இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே? சிலரைப் பொறுத்தவரை, ராணுவத்தால் வன்புணர்வுசெய்யப்பட்ட தமிழ்ப்பெண்களுக்கான பழிவாங்கலாகவே இதனை நீங்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, உங்களின் நண்பனும், ராணுவப் பிரிவின் தளபதியாகவும் இருந்த சார்ள்ஸ் அன்டனியை ஆடி 15 இல் கொன்றுவிட்டோம் என்று கூதூகலித்திருந்த சிங்கள ராணுவத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவே நீங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நான் உணர்கிறேன். உண்மையென்னவென்றால், உங்கள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதி ஒருவரைச் சிங்கள ராணுவம் கொன்றுவிட்ட போதிலும், அவர்கள் மீது தீவிரமான தாக்குதல் ஒன்றினை நடத்தக்கூடிய இயலுமையும் பலமும் இன்னமும் உங்கள் இயக்கத்திடம் இருக்கின்றது என்பதைக் காட்டவே நீங்கள் இதனைச் செய்தீர்கள் என்று நான் நம்புகிறேன், இது சரிதானே? பிரபாகரன் : "சார்ள்ஸ் அன்டனி பற்றியும், திருநெல்வேலித் தாக்குதல் பற்றியும் நீங்கள் தேடி அறிந்துவைத்திருக்கும் விடயங்களில் சில உண்மைகள் இருக்கின்றன. இத்தாக்குதல் ஒரு வழியில் பழிவாங்கலாகவும், இன்னொரு வழியில் சிங்கள ராணுவத்திற்கான தண்டனையாகவுமே எம்மால் நடத்தப்பட்டது. ஆனாலும், 13 சாதாரணச் சிங்களச் சிப்பாய்களின் மரணம் ஒரு மாபெரும் புரட்சிகர விடுதலைப் போராளியான சார்ள்ஸ் அன்டனியின் மரணத்திற்கு ஒப்பாகி விடாது. எமது எதிரி மீதான எமது அமைப்பின் கெரில்லா ரீதியிலான தாக்குதலாகவுமே இதனை நாம் முன்னெடுத்தோம்". மேலும், அனித்தா குறிப்பிட்ட நான்கு தமிழ்ப் பெண்கள் மீதான சிங்கள ராணுவத்தின் பாலியல் வன்புணர்வும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார். அக்காலத்தில் வந்திருந்த செய்திகளின்படி ஆடி 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்று இளம் தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்ற சிங்கள ராணுவத்தினர் அப்பெண்களை தமது முகாமிற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இப்பெண்களில் ஒருவர் பிந்நாட்களில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சதாசிவம் கிருஸ்ண‌குமார் ‍ கிட்டு திருநெல்வேலித் தாக்குதலைத் திட்டமிடும் பொறுப்பினை கிட்டுவிடமும் செல்லக்கிளியிடமுமே பிரபாகரன் ஒப்படைத்திருந்தார். போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கு ராணுவம் மீது தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதே சரியானது என்று பிரபாகரன் உள்ளகக் கலந்துரையாடல்களில் போராளிகளிடம் பேசியிருந்தார். ஆகவே, ராணுவத்தின் இரவு ரோந்து அணி மீது தாக்குதல் நடத்துவதே சீலனின் மரணத்திற்கு தாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும் என்று கிட்டுவும் செல்லக்கிளியும் முடிவெடுத்தனர்.இத்தாக்குதல் மூலம் ஆயுத ரீதியிலான பலமான அமைப்பொன்று உருவாகிவிட்டதை சிங்கள அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உணர்த்த முடியும் என்றும் அவர்கள் நம்பினர். வழமையான ராணுவ ரோந்தணி மாலை மங்கும் வேளையில் மாதகல் ராணுவ முகாமிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமை வந்தடையும். இந்த ரோந்து அணியில் ஜீப் வண்டி ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் இடம்பெற்றிருந்தன‌. குருநகர் முகாமில் தமது இரவு உணவை முடித்துக்கொண்ட அதிகாரியும் ராணுவ வீரர்களும் மீண்டும் மாதகல் முகாம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். திருநெல்வேலிச் சந்தி ‍ அண்மைய நாட்களில் ராணுவ ரோந்து அணி திரும்பிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த திருநெல்வேலிக் கிராமத்தை கிட்டுவும் செல்லக்கிளியும் தமது தாக்குதலுக்கான இடமாகத் தெரிவுசெய்வதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது அதன் அமைவிடம். யாழ்ப்பாண நகரில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அப்பகுதி அமைந்திருந்ததுடன், சனத்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. கட்டடங்களைக் கொண்டிருந்த பகுதியாதலால், மறைந்திருந்து தாக்குவதற்கு உகந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக தாக்குதலை முடித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்கான பல வழிகளையும் அப்பகுதி தன்னகத்தே கொண்டிருந்தது. இரண்டாவது நேரம். ராணுவ ரோந்து அணி திருநெல்வேலியை அடையும் நேரம் நள்ளிரவு வேளையை அடைந்திருக்கும். அவ்வேளையில் வீதியில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியே வீதி கணப்படும். மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம் வீதியின் அருகில் தோண்டப்பட்டிருந்த அகழிகள் தமது கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கு புலிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. அப்பகுதியில் அகழிகள் தோண்டப்பட்டிருப்பதை இராணுவத்தினர் அறிந்திருந்தமையினால், அவற்றினைச் சந்தேகம் கொண்டு சோதிக்கும் எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. அப்பகுதியைப் பார்வையிட்ட பிரபாகரன் மிகுந்த திருப்தியடைந்திருந்தார். இப்பகுதியைத் தெரிவுசெய்தமைக்காக கிட்டுவையும் செல்லக்கிளியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தமது தாக்குதலுக்கு மிகச் சரியான இடம் அதுவே என்று அவர்களிடம் பிரபாகரன் கூறினார். செல்லக்கிளி பதுங்கியிருந்து கண்ணிவெடியினை இயக்குவதற்கு உகந்த பாதுகாப்பினை சீமேந்துக் கூரையும், அரைப்பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த சீமேந்துச் சுவரும் அவருக்குக் கொடுத்தன. அவருக்குத் துணையாக அருகே பதுங்கியிருந்த விக்டருக்கும் அப்பகுதி பாதுகாப்பு அளித்தது. கூரையிலிருந்த கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைக் கொடியினுள் கண்ணிவெடிக்கான வயர்களை அவர்களால் முழுமையாக மறைக்கக் கூடியதாக இருந்தது. மேலும், அயல் வீடுகளில் கட்டப்பட்டிருந்த சீமேந்து மதில்களுக்குப் பின்னால் தாக்குதல் அணி மறைந்துகொள்வதற்கான வசதியும் அங்கு காணப்பட்டது. எனது ஊரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தோசம் என்னுடன் சில வருடங்களுக்குப் பின்னர் பேசும்போது, "தாக்குதல் நடத்தப்பட்ட‌ நாளன்று, அதிகாலையிலிருந்தே நாம் அனைவரும் பதட்டத்துடன் இருந்தோம்" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதியே தாக்குதலை நடத்துவதென்று பிரபாகரன் முடிவெடுத்திருந்தார். "அதற்கு முதல்நாள் இரவு என்னால் தூங்க முடியவில்லை. எமது தாக்குதல் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டோம்" என்றும் அவர் மேலும் கூறினார். புலிகள் நடத்திய மூன்றாவது கண்ணிவெடித் தாக்குதலே திருநெல்வேலித் தாக்குதல் என்பதோடு, கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலும் இதுவாகும். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதலை செல்லக்கிளியினால் வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கவில்லை. பொன்னாலைக் கரையோரச் சாலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் கடற்படையினர் அப்பகுதிக்கு வரமுன்னரே வெடித்திருந்தன. கண்ணிவெடிகள் வெடித்தபோது கடற்படையினர் ரோந்து அணி சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் வந்துகொண்டிருந்தது. இரண்டாவது தாக்குதலான உமையாள்புரப் பகுதித் தாக்குதலில் கண்ணிவெடித் தாக்குதலுடன், துப்பாக்கித் தாக்குதலும் முதன்முறையாக நடத்தப்பட்டபோது, அதுவும் நேரம் தவறியிருந்தது. ராணுவத்தினரின் ட்ரக் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடிகள் வெடித்துவிட்டன. கண்ணிவெடி வெடிக்கவைக்கப்பட்டதையடுத்து ட்ரக் வண்டியைச் சாரதி நிறுத்திக்கொள்ள, வெளியே பாய்ந்த ராணுவத்தினர் புலிகள் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே ஓடத் தொடங்க, புலிகளும் அப்பகுதியை விட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. புலிகள் எதிர்பாராத விதமாக ராணுவத் தொடரணியொன்று அப்பகுதிக்கு வந்ததனால் ஏற்பட்ட குழப்பத்தில் புலிகளின் அணியிலிருந்த சிலர் தமது காலணிகளையும் விட்டுவிட்டே ஓடியிருந்தனர். ஆகவே, திருநெல்வேலித் தாக்குதல் எப்படியாவது வெற்றியளிக்க வேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் சொல்லிக்கொண்டிருந்தார். கிளேமோர்க் குண்டு அதிகாலையிலேயே துயில்விட்டெழும் பழக்கம் கொண்ட பிரபாகரன் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாளான ஆடி 23 ஆம் திகதி வழமைபோலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். தனக்குத் திருப்தியாகும் வரை செல்லக்கிளியுடனும் விக்டருடனும் தாக்குதல் திட்டத்தை மீண்டும் மீண்டும் பரீட்சித்துச் சரிபார்த்துக்கொண்டார். சுமார் இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அகழியினுள் கண்ணிவெடிகள் இரண்டினைப் புதைத்த செல்லக்கிளியும், விக்டரும் அவற்றிற்கான மிந்தொடுப்பினை இயக்கியுடன் இணைக்கும் வேலையில் இறங்கினர். கண்ணிவெடிகளையும் , வெளியே தெரிந்த வயர்களளையும் மண்கொண்டு மூடி மறைத்தனர். வயரின் மீதிப்பகுதியை கூரையிலிருந்து நிலம்வரை தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப் பந்தலினுள் லாவகமாக மறைத்துக்கொண்டு கூரையிலிருந்த இயக்கிவரை இழுத்துச் சென்றனர்.பின்னர் கூரையின் மீது ஏறி, மறைப்பாகக் கட்டப்பட்டிருந்த அரைச்சுவரின் பின்னால் பதுங்கிக் கொண்டு ராணுவ ரோந்து அணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரு மருங்கிலும் இருந்த மதில்களின் பின்னர் நிலையெடுத்து நின்றனர்.
  2. நல்ல செய்தி! நாதத்தின் மொழியில் சொல்வதானால்: "அடிச்சான் பாரு அப்பாயின்ற்மென்ற் லெட்டரு!"😂
  3. யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்.. இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
  4. 1983 ஆடியில் தமிழர்கள் மீது தாக்குதலை நடத்த ஜெயார் உருவாக்கிய தொழிற்சங்க அக்கிரமப் படை தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட அரசாங்கமும் தயாராகி வந்தது. பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்காகத் தான் கூட்ட எண்ணியிருந்த அனைத்துக் கட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி நடவாமல்ப் போனது ஜெயாருக்குக் கடுமையான சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும், அவர்களின் நடவடிக்கைகள் தொடரபாகவும் செய்தி வெளியிடுவதில் கடுமையான தணிக்கைகளை அவர் கொண்டுவந்தார். தணிக்கையினைக் கண்காணிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான டக்ளஸ் லியனகே நியமிக்கப்பட்டார். ஆடி 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது. தமிழர்களைத் தொடர்ச்சியாக அரசாங்கம் ஏமாற்றி வருவதால் இனிமேல் அரசுடன் பேசுவதில்லையென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்த் தலைமைப்பீடம் ஆடி 23 ஆம் திகதி மன்னார் நகரில் கூடியபோது முடிவெடுத்திருந்தது. மேலும், தம்மால் முன்வைக்கப்படும் 4 நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கச் சம்மதிக்கலாம் என்றும் அக்கட்சி முடிவெடுத்தது. அந்த 4 நிபந்தனைகளாவன, 1. சுதந்திரக் கட்சி அடங்கலாக, அனைத்துக் கட்சிகளும் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். 2. மாநாட்டில் பேசப்படும் விடயங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கான தன்னாட்சி அதிகாரம், மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவிடயங்களும் உள்ளடக்கப்படவேண்டும். 3. தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களில் இருந்து ராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். 4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களைப் பற்றிச் சிந்தைக்கவோ அல்லது அவர்களின் நிபந்தனைகளை ஏறெடுத்துப் பார்க்கவோ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்தபோதிலும் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த தமிழர்களுடனான உறவினைத் தான் புதுப்பிக்க விரும்புவதாக பாசாங்கு செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே ஆடி 21 ஆம் திகதி, தன்னுடன் வந்து பேசுமாறு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் நடராஜாவை காமிணி திசாநாயக்கவூடாக ஜெயார் அழைத்தார். இந்தச் சந்திப்பு ஜெயாரின் இல்லத்தில் நடைபெற்றது. லலித் அதுலத் முதலியும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். அன்று மாலை சிறிலங்கா பவுண்டேசன் மண்டபத்தில் இடம்பெற்ற புனிதம் திருச்செல்லவம் நினைவுப் பேருரை நிகழ்வில் நடராஜா கலந்துகொண்டபோது நான் அவரைச் சந்தித்தேன். முதலில் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை நடராஜா என்னிடம் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அச்சப்படுகிறது என்று தான் ஜனாதிபதியிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்கான அதிகாரத்தையும், நிதியினையும் அரசாங்கம் தர மறுத்துவருவதாக அவர் ஜெயாரிடம் கூறியபோது குறுக்கிட்ட லலித் அதுலத் முதலி, "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதுமே தரப்போவதில்லை" என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதில் அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை. நாட்டில் தற்போது இருக்கும் நிலைமை அதற்கு ஒருபோதுமே இடம் கொடுக்கப்போவதில்லை. ஆகவே, இங்குவந்து அதிகாரங்களைப் பகிர்ந்து தாருங்கள் என்று கேட்பதை நிறுத்துங்கள்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் காட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் நடராஜா விரக்தியடைந்திருக்கிறார். பின்னர் ஜெயாரின் பக்கம் திரும்பிய நடராஜா, அவரைப் பார்த்து "லலித் கூறுவது நீங்கள் எடுத்திருக்கும் முடிவைத்தானோ?" என்று கேட்டிருக்கிறார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஜெயவர்த்தன, "நான் கூறச்சொன்னதை அப்படியே லலித் உங்களிடம் கூறினார், அவ்வளவுதான், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், நிலைமை சற்றுச் சீராகட்டும், அதன்பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை கொடுப்பது பற்றிச் சிந்திக்கலாம்" என்று கூறியிருக்கிறார். இதனால் சற்றுச் சினமடைந்த நடராஜா, "அதுவரை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எமது மேசைகளில் இருந்து கோப்புக்களை அங்கும் இங்குமாக அரக்கச் சொல்கிறீர்களா? " என்று வெறுப்புடன் கேட்டிருக்கிறார். நடராஜாவை ஆசுவாசப்படுத்த முயன்ற ஜெயார், நிலைமைகள் இப்போது நன்றாக இல்லை, ஓரளவுக்கு நிலைமைகள் சீரடைந்தவுடன் அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசலாம் என்று கூறியிருக்கிறார். ஜெயாரும் நடராஜாவும் பேசும்போது குறுக்கிட்ட லலித், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இக்கட்டான நிலை எனக்குப் புரிகிறது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளிலிருந்து சில நல்ல விடயங்களை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் அவர்களிடம் காட்டவேண்டும் என்பதே உங்கள் பிரச்சினை. விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு நாம் உங்களுக்குப் பணம் தருவோம். இவ்வகையான நடவடிக்கைகள் உங்களை பரபரப்பாக வைத்திருப்பதுடன் உங்கள் மக்களையும் திருப்திப்பட வைக்கும்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் கூறினார். லலித் தன்னிடம் தருவதாகக் கூறிய வாக்குறுதியை தான் நிராகரித்துவிட்டதாக நடராஜா என்னிடம் கூறினார். அவர்களுக்குப் பதிலளித்த நடராஜா "நாம் எதிர்பார்ப்பது நிலையான தீர்வையே அன்றி நீங்கள் போட நினைக்கும் அற்பச் சலுகைகளை அல்ல" என்று கூறியிருக்கிறார். பின்னர் பேசிய ஜெயார் இந்த விடயங்களைப் பற்றி இன்னொரு கூட்டத்தில் பேசலாம் என்று கூறி அன்றைய சந்திப்பை முடித்துவைத்தார். இந்தச் சந்திப்பைப் பற்றி நடராஜா கூறியது இதைத்தான், ஜெயார் எனும் மனிதர் இனிமையாகப் பேசி தனக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டார்.அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் நடராஜா பதவி விலகுவதிலிருந்து தடுப்பது ஒன்றே. அதில் அவர் வெற்றியும் கண்டார். நான் இதனை டெயிலி நியூஸ் பத்திரிகைக்குச் செய்தியாக அனுப்பவில்லை. எனது ஆசிரியரை தர்மசங்கடத்தினுள் ஆள்த்த நான் விரும்பவில்லை. நாம் கொடுக்கவேண்டிய செய்திக்குப் பதிலாக லலித் ஒரு அறிவிப்பை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதுதான் நடராஜா தனது பதவி விலகலை இரத்துச் செய்தார் என்றும் மேலதிக கலந்துரையாடல்கள் தொடரும் என்பதும். ஜெயாருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது. அவரும் அவரது அடியாட்களும் பல்வேறு செயல்களைத் திட்டமிட்டிருந்தார்கள். சிறில் மத்தியுவும் அவரது இனவாத தொழிற்சங்கமுமான ஜாதிக சேவா சங்கமயவும் தெற்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அனைவரினதும் விலாசங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் பாரிய அதிரடி நடவடிக்கை ஒன்றிற்காக விசேட படைப்பிரிவொன்றும் உருவாக்கப்பட்டு வந்தது. லேக் ஹவுஸ் அமைப்பில் இயங்கிவந்த ஜாதிக சேவா சங்கமய இல் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். என்னை ஓரளவிற்கு மரியாதையுடனேயே அவர்கள் நடத்தி வந்தனர். தமிழர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு 3 அல்லது நான்கு நாட்களுக்கு முன்பதாக என்னிடம் ரகசியமாகப் பேசிய சிங்கள உறுப்பினர் ஒருவர்,"அசம்பாவிதம் ஒன்று நடக்கப் போகிறது" என்று கூறிவிட்டு சில நொடி மெளனத்திற்குப் பின்னர் "அவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களினது பட்டியல் ஒன்றினையும் தயாரிக்கிறார்கள்" என்று கூறினார். ஏதோ அசம்பாவிதம் ஒன்று என்னைச் சுற்றி சூழ்கிறதென்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தமிழருக்கெதிரான வெறுப்புணர்வு வெளிப்படையாகவே அவர்களின் முகத்தில் படிந்துவருவதை நான் உணர்ந்துகொண்டேன். லங்கா கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவும் இந்தவகையான ரகசியப் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறார். அதுபற்றி பல வருடங்களுக்குப் பின்னர், 1992 ஆம் ஆண்டு மாசி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் அவர் "மனிதர்களும் அவர்களின் செயற்பாடுகளும்" என்கிற பதிவில் எழுதியிருந்தார். "கொடூரமான அவலங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்னராவது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாகச் செய்திகள் பரவி வந்தன. மிகக்கொடுமையான, ஒரு இனக் கூட்டத்திற்குப் பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்கான செயற்பாடுகளில் பரவலாக இறங்கப் போகிறார்கள் என்கிற அந்தச் செய்தி". ஆடி 23 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, "4 ‍ X 4 பிராவோ" என்று பெயரிடப்பட்ட ராணுவ ரோந்து அணியின் வருகைகையினை எதிர்பார்த்து பிரபாகரனும் அவரது தோழர்களும் திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் காத்திருந்தார்கள். புலிகளின் மூத்த போராளிகளான கிட்டு, ஐயர், விக்டர், புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோசம் மற்றும் அப்பையா ஆகியோர் பரபரப்புடன் வீதியின் இருபுறத்திலும் நிலையெடுத்துக் காத்திருந்தார்கள். ராணுவ ரோந்து அணி மீது கண்ணிவெடித் தாக்குதலையும் அதன்பின்னர் பதுங்கித் தாக்குதலையும் நடத்துவதே அவர்களின் திட்டம். தான் ராணுவம் மீது அன்றிரவு நடத்தவிருக்கும் இத்தாக்குதல் இலங்கையின் மொத்தச் சரித்திரத்தையும் மாற்றிப்போடவிருக்கிறது என்பதுபற்றி பிரபாகரன் சிறிதும் அறிந்திருக்கவில்லை. மறுநாள் தமிழர்கள் மீது தனது அக்கிரமக்காரர்களின் படையினை ஏவிவிட்ட ஜெயார் கூட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தனது நடவடிக்கை முற்றாக உடைத்துப் போடப்போகிறதென்பதை அறிந்திருக்கவில்லை. மிகக்கொடுமையான இரவுகளான ஆடி 23 நள்ளிரவு தொடக்கம் ஆடி 24 நள்ளிரவு வரையான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு இலங்கை இன்றுவரை தோற்றே வருகிறது
  5. திருநெல்வேலித் தாக்குதலைத் தீர்மானித்த பிரபாகரன் ராணுவத்தினர் அன்றிரவே தமது விசாரணைகளை ஆரம்பித்தனர். சூட்டுச் சத்தம் கேட்டவுடன் வீதிக்கு வந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமகன் ஒருவரை முனசிங்க தலைமையிலான ராணுவத்தினர் பிடித்துக்கொண்டனர். அவரே புலிகளின் மறைவிடத்தை இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தார். வெள்ளம்பொக்கடிக்கும் கச்சாய்க்கும் இடையிலான பகுதியொன்றில் அந்த வீடு அமைந்திருந்தது. மீசாலையினைச் சேர்ந்த சின்னையா சந்திர மெளலீசன் என்பவரே அந்த வீட்டினை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். அவ்வீட்டில் பிரபகாரன் பல தடவைகள தங்கிச் சென்றிருக்கிறார். அவ்வீட்டைச் சோதனையிட்டபோது சில ஆவணங்களும், ஒரு கண்ண்டிக் குப்பியும் காணப்பட்டன. ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட முதலாவது சயனைட் குப்பி இதுவே. சீலனினதும், ஆனந்தனினதும் வித்துடல்கள் கடுமையான பொலீஸ் பாதுகாப்புடன் தெல்லிப்பழையில் எரியூட்டப்பட்டன. ஒரு ராணுவ வீரனின் பார்வையில் என்று தான் எழுதிய புத்தகத்தில் சீலனினதும் ஆனந்தனினதும் வித்துடல்களின் ஒளிப்படங்களை முனசிங்க இணைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 16 ஆம் திகதி தான் எடுத்த மாவீரர்கள் இருவரினதும் ஒளிப்படங்களின் மூலப்பிரதியை அவர் என்னிடம் காண்பித்தார். சீலனின் தலைப்பகுதியிலும், கண்ணுக்கு அருகிலும் காணப்பட்ட சூட்டுக் காயங்களைப் பார்க்கும்போது மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பது புரியும் என்று அவர் கூறினார். சீலனின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டே என்னுடன் பேசிய முனசிங்க, "சீலனின் உடலினைக் காட்டும் ஒரே புகைப்படம் இதுதான், ஆகவே பிரபாகரன் நிச்சயம் எனது புத்தகத்தை வாங்குவார்" என்று கூறினார். பிரபாகரனின் நீண்ட மெளனமும், சிந்தனையும் கிட்டுவால் கலைக்கப்பட்டது. சீலனின் மரணத்திற்காகப் பழிவாங்கவே பிரபாகரன் மெளனமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பதை கிட்டு பின்னர் உணர்ந்துகொண்டார். அனிதா பிரதாப், சொர்ணம் மற்றும் தமிழ்ச்செல்வனுடன் தேசியத் தலைவர் பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்த சர்வதேசப் பத்திரிக்கையாளரும், அவரைத் தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து ஆய்வுகளை வெளியிட்டு வந்தவருமான அனிட்டா பிரதாப் தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் "பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மிகவும் மூர்க்கத்தனமாகச் செயற்படுவார், ஒரு அடிபட்ட புலியைப் போல" என்று எழுதுகிறார். சீலனைக் கொன்றுவிட்டோம் ஏன்று ராணுவம் குகதூகலித்துக் கொண்டாடிய விதமே பிரபாகரனைத் திருநெல்வேலித் தாக்குதலைச் செய்யத் தூண்டியது என்று அனிட்டா கூறுகிறார். திருநெல்வேலியில் ராணுவம் மீது பிரபாகரன் நடத்திய தாக்குதலினைப் பார்க்கும்போது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்குவதற்காகவே அதனைச் செய்தார் என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார். தனது போராளிகளின் மரணத்தினை பிரபாகாரன் இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. அது அவரது இயல்பு. பிரபாகரனின் இந்தக் குணாதிசயத்தைக் காட்ட இரு நிகழ்வுகளை அனிட்டா விளக்குகிறார். http://www.eelamview.com/wp-content/uploads/2015/10/kumarappa-pulenthiran.jpg இந்தியச் சிங்களச் சதியால் பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் ‍ முதலாவது நிகழவு 1987 ஆம் ஆண்டு பலாலி ராணுவத் தளத்தில் தனது மிக முக்கிய தளபதிகள் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணித்தபோது இடம்பெற்றது. "1987 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்குக் கொண்டுசெல்ல ஏற்பாடாகி இருந்தது. இந்தியா அவர்களை விடுவிக்க எவ்வளவோ முயன்றபோதும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அவர்களைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து விசாரிப்பதில் பிடிவாதமாக நின்றார். கொழும்பிற்கு இழுத்துச் செல்லும் கணத்திற்குச் சற்று முன் புலிகளின் தளபதிகள் அனைவரும் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணத்தைத் தழுவிக்கொண்டனர். பிரபாகரனின் சினத்தின் மூடியை இச்சம்பவம் முற்றாகத் திறந்துவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார். சீலனின் நினைவாலயம் ‍ மீசாலை - 2003 ‍ அனிட்டா குறிப்பிடும் இரண்டாவது சம்பவம் 1994 இல் இடம்பெற்றிருந்தது. வன்னிக்கு முக்கிய செய்தியொன்றுடன் வந்துகொண்டிருந்த புலிகளின் தளபதியான லெப்டினன்ட் கேணல் அமுதனை ராணுவத்தினர் பதுங்கியிருந்து சுட்டுக் கொன்றனர். அமுதனின் தலையினை தனியே வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது உடலினை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர் ராணுவத்தினர். "பிரபாகரன் கடுஞ்சினம் கொண்டிருந்தார்" என்று அனீட்டா எழுதுகிறார். அக்காலத்தில் சந்திரிக்காவுடன் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை விடவும் அமுதனின் படுகொலைக்கு பிரபாகரன் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அமுதனுக்கான தமது இறுதி மரியாதையினைச் செலுத்த அவரது தலையினை உடனடியாக இலங்கை ராணுவம் தம்மிடம் கையளிக்கவேண்டும் என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அப்போதைய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை, அமுதனின் தலை நன்கு பழுதடைந்த நிலையில் இருந்தமையினால் நாமே அதனை எரித்துவிட்டோம், தேவையென்றால் அத்தலையின் சாம்பலைத் தருகிறோம் என்று பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் ஈடுபட பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார். சீலனின் மரணத்திற்கு பழிவாங்கலாக பாரிய தாக்குதல் ஒன்றினைச் செய்யட பிரபாகரன் தீர்மானித்தார். ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் யாழ் நகரையும் சுற்றுப்புறங்களையும் ரோந்து புரியும் ராணுவத் தொடரணி மீது பதுங்கித் தாக்குவதென்று அவர் முடிவெடுத்தார். செல்லக்கிளி இத்தாக்குதலை திட்டமிடும் பொறுப்பு செல்லக்கிளியிடமும் கிட்டுவிடமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, ராணுவ ரோந்து அணியின் பலம், அதன் பாதைகள், ரோந்து அணி வழமையாக ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் இருவரும் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூரண விபரங்களுடனான தாக்குதல் திட்டம் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தானே நேரில் சென்று பார்வையிட்ட பிரபாகரன் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். தேசியத் தலைவருடன் கிட்டண்ணா ஆடி 23 ஆம் திகதியை தமது தாக்குதலுக்கான நாளாக பிரபாகரன் தீர்மானித்தார். இத்தாக்குதல் நடக்கப்போவது குறித்து எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், செல்லக்கிளியைத் தேடி ராணுவம் வலைவிரித்தது. இந்த நடவடிக்கைக்கு யாழ்த் தளபதி பல்த்தசார் உத்தரவிட்டார். தனது புலநாய்வு வலையமைப்பை இந்த நடவடிக்கைக்காக அவர் முடுக்கிவிட்டார். அவரக்குச் சில வெற்றிகளு கிடைத்திருந்தன. செல்லக்கிளியின் நடமாட்டம் குறித்து அவ்வப்போது ராணுவத்திற்கு தகவல்கள் வரத் தொடங்கின. ஆடி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செல்லக்கிளி தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார் என்கிற தகவலும் ராணுவத்தினருக்குக் கிடைத்திருந்தது. இதனையடுத்து ராணுவ ரோந்து அணியொன்றினை ஒழுங்கமைத்துக்கொண்டு யாழ்நகரை நள்ளிரவு வேளையில் சுற்றிவரும்படி முனசிங்கவைப் பணித்தார் பல்த்தசார். அதன்படி கொமாண்டோ படைப்பிரிவு ஒன்றினை நள்ளிரவு ரோந்திற்காக முனசிங்க ஒருங்கமைத்தார். வழமையாக நள்ளிரவு ரோந்தில் ஈடுபடும் சாதாரண ராணுவ அணியை அன்று நள்ளிரவுக்கு முன்னமே யாழ்நகரை விட்டு வந்துவிடுமாறு அவர் உத்தரவிட்டார்.
  6. அதனால்தான் மாபெரும் ஆளுமையாக இந்த உலகு உள்ளவரை படிக்கப்படும் ஒரு படைத்துறை வல்லமையாகவும் எம் தலைவன். ரஞ்சித் அவர்களே நன்றி.
  7. வெற்றிலைக்கேணிக்கும் ஆழியவளைக்கும் எல்லையாக அமைந்து இருப்பது இந்த வெளிச்ச வீடு இதனை அங்குள்ளவர்கள் கோரி என்றும் அழைப்பார்கள். போத்துக்கேயரால் 18ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிடுவதுபோல் இது முக்கியமான இடமும்கூட.... அருமையான பயணங்களும் நினைவு..... உங்களுடன் நானும் பயணித்திருந்தது போல இருந்தது.
  8. நானும் ஒரு தகவலை தருகிறேன். வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நுழைவு வாயிலாக இருக்கும் 4 ஊர்களில் இதைப் போல காவல் அரண்களை கட்டியுள்ளார்கள். பூநகரி அதில் ஒன்று. மிகுதி 3 ஊர்களில் ஒன்றில் இந்தக் காவல் அரண் உள்ளது. எங்களது வரலாற்றில் முக்கியமான இடம்😁
  9. காணாமல் போகவில்லை. இடையிடை வருகிறனான். ஆனால் எங்களது அலுவலகத்தில் எனது பகுதி offshore போகிறது அதனால் கொஞ்சம் வேலைப்பளு, அத்துடன் தந்தையின் உடல்நிலை மற்றும் எனது தனிப்பட்ட project ஒன்றும் நிறைவடையாமல் இழுத்தடித்துக் கொண்டு போனதால் ஒரு சலிப்பு 😒 இந்தக் கோபுரம் வடமராச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது🤔 அப்படியா?? ஆனால் நான் கூகிளில் எடுக்கவில்லை😀. புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு.. கோவளம் கடற்கரையில் வெளிச்சக்கூடு இல்லை
  10. பிந்திய செய்தி சுவீடனை நேட்டோவில் சேர்க்கும் தீர்மானத்தை ஆதரித்து தமது பாராளுமன்றத்துக்கு அனுப்ப, துருக்கி அதிபர் முடிவு.
  11. இங்கே வடை தன்னை சுடுவதற்கு தானே ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளது என்கிறனர். சுட்டு கொல்லப்பட்டவர் - தான் காலையில் ஓடும் ரூட்டை ஒரு அப்பில் தினமும் வெளியிடுவாராம். சில நாட்களுக்கு முன் இப்படி வெளியிட்ட ரூட்டை - உக்ரேனிய புலனாய்வு அமைப்பின் தலைவர் புடுனொவ் லைக் பண்ணினாராம். உ.ப.ப செய்திதான்.
  12. பிரபாகரனை வெகுவாகப் பாதித்த சீலனின் மரணம் "அவர்கள் எவராலும் கொல்லப்பட்ட இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் வெள்ளை நிற டீ ஷேர்ட்டின் மேல் ஒலிவ நிற ராணுவச் சீருடையினை அணிந்திருந்தார். இறந்த இருவரினதும் உடல்களை யாழ் மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொலீஸார் அனுப்பிவைத்தனர். ராணுவத்திற்கு தகவல வழங்கியவர்களில் ஒருவரான "சேவியர்" என்பவர் கொல்லப்பட்டது சீலன் தான் என்று அடையாளம் காட்டினார். என்னால் அதை நம்ப முடியவில்லை" என்று முனசிங்க கூறினார். திருகோணமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட சீலனின் தாயார் இறந்ததது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டும்வரை யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி பல்த்தசார் கூட அதனை நம்பவில்லை. கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள் மிகுந்த வெற்றிக்களிப்போடு சீலனின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தன. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியின் மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கொண்டாட‌ப்படவேண்டிய நிகழ்வாகவே கருதப்பட்டது. "புலிகள் முடிந்துவிட்டார்கள்" என்கிற செய்திகளும் வெளியிடப்பட்டன. சீலனின் மரணத்தினால் உற்சாகமடைந்த ராணுவ பொலீஸ் புலநாய்வுத்துறையினர், பிரபாகரனையும் செல்லக்கிளியையும் தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனால், சீலனின் மரணத்திற்குப் பழிவாங்க பிரபாகரனும், செல்லக்கிளியும் திட்டமிட்டு வருவது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், தனது உயிரைத் தியாகம் செய்து, தனது ஆயுதத்தைத் தன்னுடன் வந்த தோழனிடம் கொடுத்தனுப்பிய சீலனின் வீரச்செயல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளித்திருந்த உத்வேகத்தையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சீலனைத் தமது கொமாண்டோக்களே சுட்டுக் கொன்றதாக ராணுவம் நம்பியது. ஆனால், அப்படி நடக்கவில்லை. தனது மரணத்திற்கு சீலனே உத்தரவிட்டார். முனசிங்க மூன்று இளைஞர்களுக்கருகில் தனது மினிபஸ்ஸினை நிறுத்தியபோது, தமது சைக்கிள்களை எறிந்துவிட்டு ஓடியவர்கள் சீலன், ஆனந்தன் மற்றும் அருணா ஆகிய மூன்று புலிகளின் போராளிகள்தான்.ஆனந்தனும் அருணாவும் சைக்கிள்களை மிதித்துச் செல்ல, சீலன் அருணாவின் சைக்கிளில் அமர்ந்து சென்றார். சீலனின் மடியில் உப இயந்திரத் துப்பாக்கியொன்று இருந்தது. ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் இலக்கானவர் ஆனந்தன். ராணுவம் மறைந்திருந்த பற்றைக் காட்டிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் வீழ்ந்தவர் ஆனந்தனே. அருணாவும், சீலனும் மேலும் 100 மீட்டர்கள் ஓடியபின்னர் சீலன் கீழே வீழ்ந்தார். ஆனால், முனசிங்க நினைத்தது போல சீலன் சூடுபட்டு விழவில்லை. சில காலத்திற்கு முன்னர் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது சீலனுக்கு முழங்காலில் சூடுபட்டிருந்தது. அக்காயம் முற்றாக ஆறாமல் இருந்ததோடு, அதனால் கடுமையான வலியும் சீலனுக்கு ஏற்பட்டு வந்தது. வீழ்ந்ததும் மறுபடியும் அவர் எழ முயற்சித்தபோதும் அவரால் அது முடியாது போய்விட்டது. சீலனின் சிறுவயது நண்பனும், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணா, சீலனை எப்படியாவது காப்பற்றி இழுத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். எஸ் எம் ஜி யுடன் சீலன் "ஓடு, ஓடு, இன்னும் கொஞ்சத்தூரம் ஓடினால்ப் போதும்" என்று அருணா சீலனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தார். "என்னால் முடியாது" என்று வலியில் முனகியபடியே சீலன் பதிலளித்தார். ராணுவத்தினர் அவர்களை நோக்கித் தரையால் ஊர்ந்துவரத் தொடங்கியிருந்தார்கள். "எழுந்திரு, கிராமத்திற்கு அருகில்ச் செல்ல வேண்டும். சென்றுவிட்டால் நாம் தப்பிவிடலாம்" என்று அருணா கூறவும், சீலன் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை. "என்னையோ எனது எஸ்.எம்.ஜி ஐயோ அவர்கள் கைப்பற்றிவிடக்கூடாது" என்று உறுதியுடன் கூறிக்கொண்டிருந்தார் சீலன். "நான் அவர்களிடம் உயிருடன் பிடிபடவே மாட்டேன்" என்று அக்கணத்தில் சபதம் பூண்டார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிர்மலா நித்தியானந்தனின் வீட்டில் மறைந்திருந்தபோதும் இதனையே சீலன் மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலேயே சீலனை நான் எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று முனசிங்க கர்வத்துடன் பேசியபோது, "அவரைக் கைதுசெய்ய எத்தனிக்க வேண்டாம், ஏனென்றால் சீலனை நீங்கள் உயிருடன் பிடிக்க முடியாது" என்று முனசிங்கவிடம் நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார். சீலன் பயமறியாதவர், துடிதுடிப்பானவர், சமயோசிதமானவர். இலட்சியத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வந்திருந்தவர். பிரபாகரனுக்கு முழுமையான விசுவாசமாகச் செயற்பட்டவர். சீலனைப் பொறுத்தவரை "தம்பி" தலைவர் மட்டுமல்ல, அவரின் குருவும் அவரே. அருணாவின் கண்களை நேராகப் பார்த்து சீலன் பின்வருமாறு கூறினார், "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்கக் கூடாது. என்னைச் சுட்டு விட்டு எனது எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" . அருணாவுக்கு தலையில் இடி ஒன்று இறங்கியதான அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாது ஸ்த்தம்பித்துப் போனார். சீலனின் பொறுமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களை நோக்கி ஊர்ந்துவந்த ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே முன்னேறி வந்துகொண்டிருந்தனர். "என்னடா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று சீலன் அருணாவைப் பார்த்துக் கத்தினார். "என்னைச் சுட்டு விட்டு ஓடு, நான் சொல்றதைக் கேள்" என்று மீண்டும் அருணாவைப் பார்த்துக் கத்தினார் சீலன். அருணாவினால் எதையுமே யோசிக்க முடியவில்லை. பிரமை பிடித்தவரைப்போன்று அசைவின்றிக் கிடந்தார் அருணா. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியைக் கொல்ல அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை, எனது எஸ் எம் ஜி யையும் அவர்கள் எடுத்துவிடக் கூடாது" என்று மீண்டும் கத்தினார் சீலன். "இது எனது கட்டளை, சுடடா" என்று இறுதியாகக் கத்தினார் சீலன். தனது நிலைகுலைந்து அருணா அழத் தொடங்கினார். "சுடடா .... சுடடா....சுடடா....." என்று சீலன் முனகிக்கொண்டிருக்க, அருணா துப்பாக்கியின் குழலை சீலன் நெற்றிக்கும் மூக்கிற்கும் இடையே வைத்து அழுத்தினார். தனது முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே துப்பாக்கியை இயக்கினார் அருணா. சீலன் இறந்து கீழே விழ, சீலனின் எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு, தனது பலம் எல்லாம் திரட்டி ஓடத் தொடங்கினார் அருணா. ராணுவத்தினரின் சன்னங்களில் ஒன்று அவரின் மேல் பட்டதும் கீழே வீழ்ந்தார், ஆனால் தப்பிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினார். இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் காயத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையில் சீலன் இயந்திரத் துப்பாக்கியைப் பத்திரமாகப் பற்றிக்கொண்டு வயல்வெளிகள் தாண்டி கிராமத்தினுள் நுழைந்து சாவகச்சேரிப் பகுதியை அடைந்தார். வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றினைத் துப்பாக்கியைக் காட்டி மறித்த அருணா, சாரதியை இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஏறி ஓட்டிச் சென்றார். மறுநாள் காலை திருநெல்வேலிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காரினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். காரின் ஸ்டியரிங் வீல் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. காரைக் கைவிட்ட அருணா, மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்வேலிப் பகுதியில் இருக்கும் புலிகளின் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார். நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தில் இயக்கத்தில் நிதி நிலைமைகள் குறித்து பண்டிதர் மற்றும் கிட்டுவுடன் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு அருகில் ஓடிச்சென்ற அருணா, சீலனின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டு அவர் அருகில் மயங்கிச் சரிந்தார். சீலனின் மறைவுகுறித்து அருணா கூறியபோது பிரபாகரன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். நெடுநேரம் எவருடனும் அவர் பேசவில்லை. அந்தப் பொழுதினை பின்னாட்களின் என்னுடன் பகிர்ந்துகொண்ட கிட்டு, "அவரின் உணர்வுகள் அக்கணத்தில் எப்படியிருந்தன என்று எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது" என்று கூறினார். சீலனை அவர் அதிகமாக நேசித்தார். அவரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். சீலன் தீரமானவர், புத்திசாதுரியம் மிக்கவர், அஞ்சாத நெஞ்சுரமும், தலைமை மீது அளவுகடந்த விசுவாசமும் கொண்டவர். ஆகவே, சீலனும் ஆனந்தனும் செய்த உயிர்த்தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டார். சீலனையும் ஆனந்தனையும் போற்றி, வணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் வடக்குக் கிழக்கில் பரவலாக‌ ஒட்டப்பட்டன. அவர்களின் இயற்பெயர்களைத் தாங்கி அவை வெளிவந்திருந்தன. சீலனின் இயற்பெயரான சார்ள்ஸ் அன்டனி மற்றும் அவரது பிறந்த ஊரான திருகோணமலை உட்பட அவரின் விபரங்கள சுவரொட்டிகளில் காணப்பட்டன. அவரது வீர மரணத்தின் பின்னர் "லெப்டினன்ட்" எனும் பதவி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஆனந்தனின் இயற்பெயரான ராமநாதன் அருளானந்தன் மற்றும் அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு போன்ற விடயங்கள் அவரது வீரவணக்க சுவரொட்டிகளில் காணப்பட்டன. ஆனந்தன் அந்த வருடமே புலிகளுடன் இணைந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அருணாவின் இயற்பெயர் செல்லச்சாமி கோணேசன். இவர் திருகோணமலையினைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் சீலனின் பால்ய வயது நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சீலனின் பெயரால் உருவாக்கப்பட்ட புலிகளின் முதலாவது மரபு வழிப் படைப்பிரிவு ‍- சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி
  13. சீலனின் வீரமரணம் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை வெடிக்கவைக்கும் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர், குறிப்பாக அதன் புலநாய்வுத்துறையினர் உசார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். வெடிக்கவைக்கும் கருவிகளை எடுத்துச் செல்லும் திட்டத்திற்குப் பொறுப்பாக சீலனே இருந்தார் என்பதை இராணுவத்தினை அறிந்துகொண்டனர். பாரிய தாக்குதல் ஒன்றிற்குப் புலிகள் தயாராகிறார்கள் என்பதை இராணுவத்தினர் அனுமானித்திருந்தனர். ஆகவே, புலிகள் தாக்குவதற்கு முன்னர் தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று தீர்மானித்த யாழ்ப்பாண ராணுவ ‍- பொலீஸ் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளர் மேஜர் சரத் முனசிங்க யாழ்க்குடாநாட்டில் புலிகளின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். சீலன் நினைவேந்தல் - ‍ 2003 "மீசாலைப்பகுதியில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதாக எமக்குச் செய்தி வந்திருந்தது. மீசாலை ‍- கச்சாய் வீதியில் இருக்கும் அடர்ந்த தென்னந்தோப்பொன்றினுள் இந்த மறைவிடம் இருப்பதாக எமக்குச் சொல்லியிருந்தார்கள். ஆகவே இதுகுறித்த துல்லியமான தகவல்கள் எமக்குத் தேவைப்பட்டன" என்று சரத் முனசிங்க என்னிடம் கூறினார். கொடிகாமம் பொலீஸ் நிலையத்திற்கு ஒருவரால் வழங்கப்பட்ட இந்தத் தகவல், குருநகர் ராணுவ முகாமில் இயங்கி வந்த ராணுவ ‍ பொலீஸ் கூட்டு புலநாய்வுத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடி 15 ஆம் திகதி காலை 10 மணியளவில் பொலீஸ் அதிகாரி ஒருவரால் இந்தத் தகவல் முனசிங்கவிடம் வழங்கப்பட்டது. இத்துடன் மேலதிகமாக இன்னொரு தகவலையும் அந்தப் பொலீஸ் அதிகாரி வழங்கியிருந்தார். அதுதான் அந்த மறைவிடத்திற்கு மிக அருகாக மலசல கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது என்கிற அடையாளம். ஆனாலும், இந்த தகவல்கள் தெளிவானதாக இருக்கவில்லை. துல்லியமாக புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாகவே இருக்கப்போகிறதென்று ராணுவத்தினர் கருதினர். ஆனாலும் அப்பகுதியில் தேடுதல் நடத்துவதென்று முனசிங்க முடிவெடுத்தார். "புலிகளின் தாக்குதல் ஒன்றினை முறியடிப்பது மிக மிக அவசியமானது என்று நாம் நினைத்தோம்" என்று முனசிங்க கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான கட்டளை அதிகாரி, பிரிகேடியர் லைல் பல்த்தசாரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார் முனசிங்க. தனக்குக் கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் பற்றி பல்த்தசாரிடம் விளக்கிய முனசிங்க, மீசாலைப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் புலிகளின் மறைவிடத்தை தேடிப் பார்ப்பது அவசியம் என்று தான் கருதுவதாகக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பல்த்தசார், இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 12 பேர் அடங்கிய கொமாண்டோ அணியையும், மேலதிகமாக ஒரு இளநிலை அதிகாரியுடன் 5 சாதாரண சிப்பாய்களையும் அனுப்பி வைத்தார். ராணுவ வண்டிகளில் புலிகளின் மறைவிடம் நோக்கிப் போகும்போது புலிகளின் ஆதரவாளர்களால் தமது பிரசன்னம் புலிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, புலிகள் தப்பிச் சென்றுவிட வாய்ப்பிருப்பதாக முனசிங்க கருதினார். ஆகவே, பொதுமக்கள் பாவிக்கும் மினிபஸ் ஒன்றினை மடக்கிப் பிடிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளின் சீருடையணிந்த இரு ராணுவ வீரர்களை மணிக்கூட்டுச் சந்திக்கு அருகிலிருக்கும் நீண்ட ஆளரவம் அற்ற சாலையில் மதியவேளை அனுப்பி வைத்தார். அப்பகுதியால் வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை மறித்து, அதிலிருந்த சாரதியையும், நடத்துனரையும் கட்டிப்போட்டு விட்டு வாகனத்தை முகாமிற்கு ஓட்டிச் சென்றனர் ராணுவ வீரர்கள். முகாமை அடைந்ததும் சாரதியும், நடத்துனரும் முகாமின் அறை ஒன்றினுள் அடைத்துவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மணிக்கூடுக் கோபுரம் ‍ 2003 ஆனால், வாகனத்தை ஓட்டுவதற்கு சாரதி எவரும் முகாமில் இருக்கவில்லை. இருந்தவர்கள் எல்லாம் வேறு நடவடிக்கைகளுக்காகச் சென்றுவிட்டிருந்தனர். ஆகவே, தானே வாகனத்தை ஓட்டுவதென்று முனசிங்க முடிவெடுத்தார். நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தனர். "நாம் குருநகர் முகாமிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்குக் கிளம்பினோம். தேவையேற்படின் வாகனத்தை ஓட்டுவதற்கு வசதியாக இளநிலை அதிகாரி எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். எவருமே பேசிக்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையின் பாரதூரம் பற்றி எல்லோரும் நன்கு அறிந்தே இருந்தோம். யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் நான் சற்று வேகமாகவே ஓட்டிச்சென்றேன். பின்னல் சீருடை தரித்த ராணுவத்தினர் ஜீப் ஒன்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் எம்மைப் பிந்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.மீசாலைச் சந்தியை அடைந்ததும், வாகனத்தை கச்சாய் நோக்கித் திருப்பினேன். அவ்வீதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இருவரை எமக்கு வழிகாட்ட ஏற்றிக்கொண்டோம். தென்னந்தோப்பின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டு வரும் மலசல கூடம் குறித்து அவர்களிடம் கேட்பதே எமது நோக்கம். ஆனால், எங்களால் புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது போய்விட்டது" என்று முனசிங்க என்னிடம் கூறினார். ஆகவே, மினிபஸ்ஸை கடற்கரை நோக்கிச் செலுத்தினார் முனசிங்க. பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி அவ்விடத்தை அடையுமட்டும் முனசிங்கவும் கொமாண்டோக்களும் அங்கு காத்து நின்றனர். மாலை 6 மணியாகிக்கொண்டிருந்தது, சூரியன் மெது மெதுவாக பட்டுக்கொண்டிருந்தான். மாலை நேரச் செவ்வானத்தின் அழகினை ரசிக்கும் நிலையின் முனசிங்கவோ படையினரோ அப்போது இருக்கவில்லை. முகாமிற்குத் திரும்புவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். முகாமிலிருந்து வந்தது போலவே, சாதாரண உடையணிந்த கொமாண்டோக்களுடன் மினிபஸ்ஸை முனசிங்க ஓட்டிச் செல்ல, சீருடையில் வந்த ராணுவத்தினர் பின்னால் ஜீப் வண்டியில் இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தனர். "கொண்டமூலாய் முடக்கினூடாக நான் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு செல்லும்போது, எமது வாகனத்தின் முன்னால் மூன்று இளைஞர்கள் சைக்கிளில் செல்வதை நாம் கண்டோம். மூன்று சைக்கிள்களும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக ஓட்டிச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த சைக்கிளில் இன்னொருவர் அமர்ந்துவரக்கூடியதாக இருக்கை பூட்டப்பட்டிருந்தது. மற்றைய இருவரும் ராணுவ சீருடையினை ஒத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து சென்ற இளைஞனிடம் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை அவதானித்ததும் நான் மினிபஸ்ஸை உடனடியாக நிறுத்தினேன். பஸ்ஸும் கிரீச்சிட்ட சத்தத்துடன் அவர்களின் அருகில்ப் போய் நின்றது. வாகனத்தில் இருந்த இரு கொமாண்ட்டஓக்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே வெளியில்க் குதித்தனர். இதனைக் கண்டதும் தாம் பயணித்த சைக்கிள்களை வீதியின் முன்னே விட்டெறிந்த அந்த மூன்று இளைஞர்களும் வேலியின் மீது பாய்ந்து ஏறித் தப்பியோடத் தொடங்கினர். பின்னர், பற்றை ஒன்றிற்குள் நிலையெடுத்து எம்மீது தாக்கத் தொடங்கினர். அவர்களைப் பிந்தொடர்ந்து துரத்தும் கொமாண்டோக்களைத் தாமதிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது" என்று இந்தச் சம்பவம் குறித்த நினைவுகளை முனசிங்க என்னுடன் பகிர்ந்துகொண்டார். தமக்கு முன்னால்த் தெரிந்த நெல்வயலினூடாக மூன்று இளைஞர்களும் ஓடிக்கொண்டிருந்தனர். "என்னுடன் வந்த கொமாண்டோக்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். கொமாண்டோக்கள் நிலையெடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த பற்றையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர்களில் ஒருவர் சூடுபட்டு விழுந்தார். மற்றையவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் சூடுபட்டு விழுந்தார். மூன்றாமவர், கீழே வீழ்ந்தவரை இழுத்துக்கொண்டு ஓட முயல்வதை நான் அவதானித்தேன். ஆனால், அம்முயற்சி சாத்தியமாகாது போகவே, அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர் மீண்டும் ஓடத் தொடங்கினார். அவருக்கும் சூடு பட்டிருந்தது, ஆனாலும் ஓடித் தப்பிவிட்டார்" என்று முனசிங்க கூறினார். அப்பகுதியை இருள் சூழத் தொடங்கியிருந்தது. தனது வீரர்களை அப்பகுதியில் இருட்டில் தேடுதல் நடத்தவேண்டாம் என்று முனசிங்க கூறிவிட்டு குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு மேலதிக படையினரை அனுப்புமாறு கேட்டார். மேஜர் அசோக ஜயவர்த்தனவின் தலைமையில் ராணுவ அணியொன்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வந்திறங்கியது. அவருடன் சில மூத்த பொலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
  14. இந்தியாவின் ஆட்சேபம் பயங்கரவாதத்தினை அழித்தே தீருவேன் என்றும், அதனால் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி தான் கவலைப்படப்போவதில்லை என்றும் டெயிலி டெலிகிராப் பத்திரிக்கைக்கு ஜெயார் கொடுத்திருந்த செவ்வி இந்திய வெளியுறவுத்துறையில் சிறிய சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இந்தவிடயத்தை பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர்கள் கொண்டுசென்றபோது, இந்தியாவின் இது தொடர்பான கரிசணையினை இலங்கைத் தூதுவரான பேர்ணாட் திலகரத்ணவை அழைத்துத் தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளரான சங்கர் பாஜ்பாயை இந்திரா பணித்தார். ஏ.சி.எஸ்.ஹமீட் அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்படுவோர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களை எரித்துவிடும் அதிகாரம் ராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இக்கொலைகளுக்கான தண்டனைகளில் இருந்து ராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் முற்றான விலக்கும், மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது பரேதப் பரிசோதனை செய்யவோ தேவையில்லை என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கரிசணை கொண்டிருந்தது. மிகக் கொடுமையான இந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக எழுதி வ‌ந்ததையடுத்து, கொழும்பிலிருந்து இந்திய உயர்ஸ்த்தானிகர் எஸ்.ஜே.ஜே. சாட்வாலை தனது வெளியுறவுத்துறை அமைச்சின் அலுவலகத்திற்கு அழைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை அமுலாக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் விளக்கவேண்டியதாயிற்று. ஹமீடின் விளக்கத்தினை ஷட்வால் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றினை அவர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பிவைத்தார். பேர்ணாட் திலகரட்ண அன்று மாலையே தில்லியில் தங்கியிருந்த பேர்ணாட் திலகரட்ணவை தனது அலுவலகத்திற்கு அழைத்த இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளர் பாஜ்பாய், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த இந்தியாவின் கரிசணையினைத் தெரிவித்தார். இச்சட்டங்கள் தமிழர்களுக்கான அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியா இச்சட்டம் தொடர்பான தனது கருத்தினையே முன்வைக்கிறது, அழுத்தங்களையல்ல என்றும் மிகவும் பவ்வியமாக அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த திகரட்ண, "கடவுளே, இது எமது நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் அல்லவா?" என்று பாஜ்பாயைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார். பின்னர், அவரைப் பார்த்து, "இது தமிழ்நாட்டு அரசின் கருத்தா அல்லது மத்திய அரசின் கருத்தா?" என்று கேட்டர் திலகர‌ட்ண. அதற்குப் பதிலளித்த பாஜ்பாய், "இது மத்திய அரசின் அதிமேலிடத்தில் உள்ளவரின் கருத்து" என்று கூறினார். உடனடியாக கொழும்புடன் தொடர்புகொண்ட திலகரட்ண, "இது எனக்கு அதிர்ச்சிதரும் ஒரு அறிக்கை" என்கிற தலைப்பில் இந்தியாவின் கரிசணையினை அனுப்பிவைத்தார். இந்தியாவின் கரிசணை பற்றி தனது தூதுவர் மூலம் அறிந்துகொண்டபோது கொழும்பு அரசாங்கம் கடும் எரிச்சலடைந்தது. டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் இதனைச் செய்தியாகப் போடுமாறு பணிக்கப்பட்டதுடன், ஆசிரியர்த் தலையங்கத்திலும் இந்தியாவின் கரிசணை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. செய்தியின் தலைப்பு இப்படிச் சொல்லியது, "எமது விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை இலங்கை வெறுப்புடன் நோக்குகிறது". மேலும் அதன் ஆசிரியர் தலையங்கத்தில், "இதனை எப்படிச் செய்தாய் பெரியண்ணா?" என்கிற கருத்தில் விமர்சித்திருந்தது. இனவாதப் பத்திரிக்கையான சண் ஒருபடி மேலே சென்று, "பெரிய சண்டியன் இந்தியா" என்று தலைப்பிட்டிருந்தது. சர்வகட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடக்கவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தினை ஒழிக்கும் சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், தோழமைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே சமூகமளித்திருந்ததனால், அம்மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் புதிய சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தனர். பயங்கரவாதத்தினை அழிக்கும் தனது திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வெளியிடாததனால் தாம் இந்த மாநாட்டில் பங்குபெற்ற விரும்பவில்லை என்று சுதந்திரக் கட்சி கூறியது. அக்கட்சியின் பேச்சாளாரான லக்ஷ்மண் ஜயக்கொடி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது "ஜெயவர்த்தனா சதியில் இறங்கியிருக்கிறார், பயங்கரவாதத்தினை அழிப்பதற்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு, பின்னர் ஏதும் தவறுகள் நடக்குமிடத்து சுதந்திரக் கட்சியே இவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டது என்று பழியினை எம்மீது போட்டுவிடுவார்" என்று கூறினார். "இந்த சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுவதை விடுத்து தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு முதலில் வெளிப்படையாகச் சொல்லட்டும்" என்றும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு அமிர்தலிங்கம் இரு காரணங்களை முன்வைத்தார். முதலாவதாக, பிரச்சினைக்கான மூல காரணத்தை அறியாமலும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்வைக்காமலும் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மட்டுமே இந்த மாநாடு கூட்டப்படுவதால் தனது கடசி அதில் கலந்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இம்மாநாட்டில் சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளாமையினால், தமிழருக்கான தீர்வினைத் தருவதில் இக்கட்சிகள் இரண்டினதும் ஒருமித்த கொள்கை ஒன்று இல்லாமல்ப் போயிருயிப்பதாகவும், இதுவே தனது கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமைக்கான மற்றைய காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார். "இம்மாநாட்டில் மேசைகள் எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கின்றன, வட்டமாகவா அல்லது சதுரமாகவா?" என்று லலித்திடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "1977 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டமேசை மாநாடு என்றே நாம் பேசி வந்தோம், ஆகவே வட்டவடிவில்த்தான் அவை ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று கூறினார். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அவர் எனக்கு அளித்த பதில் குறித்து அவருக்கு நான் நினைவுபடுத்தினேன். அன்று நான் அவரிடம் "தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று?" என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்திருந்த லலித், "வட்டமேசையா, அது என்ன? மக்களின் ஆணையுடன் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினைக் கொண்டிருக்கிறோம். நாங்களே மேசையைச் சுற்றி அமர்ந்துகொள்வோம். இனப்பிரச்சினையாக இருந்தாலென்ன, அல்லது வேறு எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன, நாமே என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுப்போம்" என்று கர்வத்துடன் கூறியிருந்தார். ஆகவே, நான் இன்று கேட்டபோது, "இன்றைக்கும் எமது முடிவு அப்படியே இருக்கிறது, நாமே முடிவுகளை எடுப்போம்" என்று மீண்டும் அத‌னை உறுதிப்படுத்தினார். மறுநாள், ஆடி 21 ஆம் திகதி, தனது கருத்தினை பாராளுமன்றத்தில் முன்வைத்தது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து பெளத்த சிங்களக் கட்சிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தமது போருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது ஜெயாரின் உணர்வுகளை அச்சொட்டாக அவர் விரும்புவதுபோலவே வெளியிட்டார். பாராளுமன்றத்தில் அதுலத் முதலி கூறியது இதைத்தான், "அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சினையினை எப்படித் தீர்க்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்தவகையில் நாம் தீர்த்துவைப்போம். நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டாலென்ன, விட்டாலென்ன அல்லது அதனை ஆதரித்தலேன்ன இல்லாவிட்டாலென்ன, நாம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை எமது திட்டத்தின்படி கொடுப்போம். பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட எது சரியான தீர்வென்று எமது அரசாங்கம் நினைக்கின்றதோ, அந்தவைழியில் சென்று நிச்சயம் அதனை முற்றாக நடத்தி முடிப்போம்". "பயங்கரவாதத்தை அழிக்கும் இந்த செயற்பாட்டில் அப்பாவிகள் பாதிக்கப்படலாம். அப்பாவிகளின் அழிவுகளை குறைக்க நாம் முயற்சி எடுப்போம். சுதந்திரக் கட்சிக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும், ஆனால் தற்போது எதற்காகப் பின்வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிங்கள பெளத்த கட்சியாக இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எப்படிக் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? பயங்கரவாதத்தை அழிக்க முன்வராது இருந்துவிட்டு எப்படி மக்களையும் தேர்தல்களையும் எதிர்கொள்ளப்போகிறீர்கள்? பாஸிஸப் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரில் உங்களை இணைந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் கொலைஞன் ஒருவனுடன் உலங்குவானூர்தியில் இருந்துகொண்டு உரையாடும் சிங்கள பெளத்த கொலைஞன் லலித் அதுலத் முதலி ஜெயவர்த்தனவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் காமிணியை ஓரங்கட்டிவிட்டு ஜெயாருக்கு நெருக்கமாகலாம் என்று லலித் எண்ணினார். அவர் பிரேமதாசாவால் ஒதுக்கப்படும்வரைக்கும் அதுவே அவரது அரசியலாக இருந்தது. ஏனென்றால், பிரேமதாசா கூட ஜெயாரின் இனவாதத்தைத்தான் கைக்கொண்டு வந்தார்.
  15. சர்வதேச மன்னிப்புச் சபையுடன் முரண்பட்ட ஜெயார், ஜனாதிபதியாகத் துடித்த லலித் ஜெயவர்த்தன தனது இரண்டாவது தவணைக்காலத்தை 1988 ஆம் ஆண்டு நிறைவுசெய்யும்போது ஜனாதிபதிப் பதவிக்கு வரும் தனது விருப்பத்தை லலித் அதுலத் முதலி வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். ஆனால், ஜெயாருடன் காமிணி திசாநாயக்க கொண்டிருந்த நெருக்கம் அவருக்கு கவலையைக் கொடுத்திருந்தது. அத்துடன் காமிணியின் கட்டுப்பாட்டிலிருந்த பல அமைச்சுக்களும், குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டமும் அதனுடன் இணைந்த பாரியளவிலான காணிகள் மீதான அதிகாரமும் லலித்திற்கு சங்கடத்தைக் கொடுத்திருந்தன. லலித்தின் கவலைகளை அவருடன் நெருங்கிப் பழகிய செய்தியாளன் என்கிற வகையில் நான் நன்கு அறிந்தே இருந்தேன். அவரின் கீழிருந்த வணிகம் மற்றும் கப்பற்றுரை அமைச்சுக்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த அதே காலத்தில் காமிணியின் கீழான அமைச்சுகக்கள் பற்றிய செய்திகளையும் சேகரித்து வந்திருந்தேன். ஜெயாரினதும், மக்களினதும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல நிதியுதவித் திட்டத்தினை லலித் பரிந்துரை செய்திருந்தார். ஜெயவர்த்தனவின் அரசியலின் அடிநாதமே "வடக்குப் பயங்கரவாதத்தை அழித்தல்" என்றாகியபோது, லலித்தும் அதனை இறுகப் பற்றிக்கொண்டார். ஆகவேதான் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரேரித்ததுடன் நின்றுவிடாமல், அதனைச் சட்டமாக்கவும், நிறைவேற்றவும் கடுமையாக உழைத்து ஜெயாரின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான "தீர்வினை" சிரம் மேல் ஏற்று முன்னின்று உழைத்தார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஜெயார் கொண்டிருந்த நிலைப்பாட்டினை நாட்டினுள்ளும், வெளியிலும் நியாயப்படுத்தி, முன்கொண்டு செல்வதிலும் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வந்தார். லலித்தின் செயற்பாடுகள் பற்றி நான் தொடர்ந்து இங்கு பதிவிடுவேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அடக்குவது குறித்து கிரகம் வோர்ட்டிடம் பேசிய ஜெயார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தான் கூட்ட விரும்புவதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமரான சிறிமா உட்பட பல அரசியல்த் தலைவர்களையும் அழைக்கப்போவதாகக் கூறிய ஜெயார், தனது திட்டத்தினை எவர் ஏற்றுக்கொண்டால் என்ன, இல்லாதுவிட்டால் என்ன தான் நிச்சயமாக பயங்கரவாதத்திற்கெதிரான தனது நடவடிக்கைகளை எடுத்தே தீருவேன் என்று தீர்க்கமாகக் கூறினார். இச்செவ்வியின்போது சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கிரகம் வோர்ட் வினவியபோது, அது இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டு வரும் பிரச்சாரம் என்று எள்ளி நகையாடினார் ஜெயார். இலங்கையின் கம்மியூனிசக் கட்சியின் ஸ்த்தாபகரான கலாநிதி விக்கிரமசிங்கவின் மகனான டெஸ்மண்ட் பெர்ணான்டோவே சர்வதேச மன்னிப்புச் சபையின் கொழும்புக் கிளைக்குப் பொறுப்பாக அக்காலத்தில் பணிபுரிந்து வந்தார். ஆகவே, அவரை மனதில் இருத்தியே "கம்மியூனிசஸ்ட்டுக்களின் பொய்ப் பிரச்சாரம்" என்று தனது ராணுவம் மற்றும் பொலீஸார் மீதான விமர்சனங்களை அவர் நிராகரித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 6 ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து தமிழர்களை கைதுசெய்து, தடுத்துவைத்து, கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மேல் புரிந்து, நீதிமன்ற வழ்க்குகளின்றி கலவரையின்றி அடைத்துவைத்தல் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தடுத்துவைத்தல் ஆகிய செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சட்டியிருந்தது. அத்துடன், இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை எழுந்தமானமாகக் கைதுசெய்து , சித்திரவதைகளின்பின்னர் அவர்களைக் கொன்று வீதிகளில் எறிந்துவருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. https://www.amnesty.org/fr/wp-content/uploads/2021/06/asa370051984en.pdf "பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்படும் அரசியல்ச் செயற்பாட்டாளர்களை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து இலங்கையரசு தடுத்துவைத்திருக்கிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பலர் சுமார் எட்டு மாத காலம்வரை ராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் கடுமையான சித்திரவதைகளை சந்தித்து வருகின்றனர். இச்சித்திரவதைகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு, அவர்களின் நக இடுக்குகளில் ஊசிகள் ஏற்றப்பட்டு, கண்கள் உட்பட உடலின் பல இடங்களில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தது சர்வதேச மன்னிப்புச்சபை. மேலும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அல்லது அவர்களுக்கான வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வதையோ இலங்கையரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தே வருவதாகவும் மன்னிப்புச்சபை கூறியது. இவ்வறிக்கையின் தொடர்ச்சியாக 12 பரிந்துரைகளை மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது, 1. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தினை அக்கைதிகளுக்கு தெரியப்படுத்துவது. 2. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது. 3. கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தல். 4. கைதிகள் மேல் நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான கட்டமைப்பொன்றினை உருவாக்குவது. 5. ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சாட்சியங்களை தயாரித்தல் அல்லது சேகரித்தல். 6. நீதிமன்றில், நீதிபதிகளின் முன்னால் அன்றி, வேறு எவ்விடத்திலும் பொலீஸாரினால் தயாரிக்கப்படும் கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை முற்றிலுமாகத் தடை செய்வது. ஆகியவை இவற்றுள் முக்கியமானவையாகும். தனது அறிக்கைக்குப் பதிலாக இலங்கையரசாங்கம் வெளியிட்ட விமர்சனத்தை வெளியிடப்போவதாக மன்னிப்புச்சபை தெரிவித்தபோது ஜெயார் கடுமையாகக் கோபமடைந்திருந்தார். மன்னிப்புச்சபையின் அறிக்கைக்குப் பதிலளித்த அரசாங்கம், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மன்னிப்புச்சபை வெளியிட்டிருந்த விடயங்களில் ஒன்பது விடயங்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன் சில கைதிகள் வெளித்தொடர்பின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருந்தது. இதுகுறித்த முற்றான அறிக்கையினை அரசு ஆடி 22 ஆம் திகதி வெளியிட்டது. வி.என். நவரட்ணம் இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது மூன்றாவது வருடாந்த மாநாட்டினை மன்னாரில் ஆடி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதாகத் தீர்மானித்திருக்க, சாவகச்சேரி தேர்தல்த் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரட்ணம் தான் பதவி விலகுவதாக ஆடி 21 ஆம் திகதி அறிவித்தார். தனது விலகலுக்கான காரணத்தை அறிக்கை வடிவில் வெளியிட்ட நவரட்ணம், கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததுடன் 1977 ஆம் ஆண்டு தன்னைத் தெரிவுசெய்து ஆறு ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாக்காளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் அறிக்கை முன்னணியின் ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான அவமானத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெயாருக்கும் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபபையின் தலைவர் எஸ்.நடராஜா தனது பதவி விலகல் அறிவிப்பினை ஆடி 15 இல் வெளியிட்டது ஜெயாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. தனது பதவி விலகல் குறித்து யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜா, மாவட்ட அபிவிருத்திச் சபைக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட அதிகாரங்கள் எவற்றினையும் அரசு தரமறுத்து வருவதாகவும், சபை இயங்குவதற்கான நிதியினை தடுத்துவைத்திருப்பதாகவும் கூறியதோடு, இச்சபைகளை அரசு உருவாக்கியதன் உண்மையான நோக்கம் தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கேயன்றி வேறு எதற்கும் அல்ல என்று கூறியதோடு, வெற்றுக்கோது என்றும் இச்சபையினை அவர் விளித்திருந்தார். "பொடியள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லை. சபையினை இயக்குவதற்காக நான் முன்வைத்த நிதிக் கோரல்களை நிதியமைச்சு தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது" என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் இப்பத்திரிக்கையாளர் மாநாட்டில் இரு விடயங்கள் குறித்து நடராஜா பேசியிருந்தார். முதலாவது, காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு பை சீமேந்திற்கும் தலா ஒரு ரூபாய் வீதம் வரியினை அறவிடுதல். இரண்டாவது, காங்கேசந்துறைக்கும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையினை ஆரம்பிப்பது. இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக நிராகரித்த அரசு, மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இல்லையென்று முதலாவது கோரிக்கையினை உதாசீனம் செய்ததுடன், நாட்டில் நிலவும் பாதுகாப்புக் காரணங்களால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பற்சேவையினை ஆரம்பிக்க முடியாது என்றும் கூறியிருந்தது. ஆடி 17 ஆம் திகதி வெளிவந்த பத்திரிக்கைகள் அனைத்திற்கும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய சர்வகட்சி மாநாட்டினை அரசு கூட்டவிருப்பதான செய்தியினை ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்தது. அச்செய்தியில் பயங்கரவாதத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான வழிகள் பற்றி இந்த மாநாடு ஆராயும் என்றும் கூறியது. சுதந்திரக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும் இச்செய்தி கூறியது. தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காது பயங்கரவாதத்தினை முறியடிக்க நடத்தப்படும் இந்த மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பங்கேற்காது என்று அமிர்தலிங்கம் கூறினார். உடனடியாக இதற்குப் பதிலளித்த ஜெயார், இம்மாநாட்டில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயலாம் என்று மாநாட்டின் நோக்கத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்தார்.
  16. தமிழர்களின் வாழ்வுபற்றியோ அல்லது அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ நான் கவலைப்படவில்லை - ‍ ஜே ஆர் ஜெயவர்த்தன‌ டேவிட் செல்போர்னினால் சர்வதேசத்தில் தெரிவிக்கப்பட்ட திருகோணமலை வன்முறைகள் தொடர்பான செய்திகளை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்ய ஜெயார் விரும்பினார். அதற்காக அமிர்தலிங்கம் தனக்கு ஆடி 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தினை பிரச்சாரப் பொருளாக்கினார் ஜெயார். ஆகவே சனடாவில் வசித்துவந்த தனது ஆலோசகரான ஜெயரட்ணத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெயார், அரச ராணுவத்தினரினுள்ளும் பொலீஸாரினுள்ளும் வேரூன்றிப் போயிருக்கும் தமிழ் மக்கள் மீதான வெறுப்புப் பற்றி அமிர்தலிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பேசினார். அரசாங்கத்திற்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்படுவதன் மூலம் இனங்களுக்கிடையிலான பகைமையுணர்வினைக் குறைக்கலாம் என்று அவர் கூறினார். "உங்கள் நண்பரிடம் நான் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்று கூறுங்கள். இப்பேச்சுவார்த்தைகளை ஆடி 9 ஆம் திகதி நாம் ஆரம்பிக்கலாம்" என்று வில்சனூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியனுப்பினார் ஜெயார். ஜெயரட்ணம் வில்சன் தன்னிடம் கொண்டுவந்த செய்தி குறித்து அமிர்தலிங்கம் திருப்தியடையவில்லை. அவர் வில்சனிடம் இவ்வாறு கூறினார், "முன்னர் நடந்த கூட்டங்களில் அவர் ஏற்றுக்கொண்ட விடயங்களை முதலில் செய்து முடிக்கச் சொல்லுங்கள், பின்னர் புதிய கூட்டங்கள் குறித்துப் பேசலாம்" என்று கூறினார்.பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதத்தில் செய்வதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏழு விடயங்கள் குறித்து எழுதியிருந்தார். மேலும் எட்டு புதிய விடயங்கள் குறித்து தான் ஜனாதிபதியுடன் பேச விரும்புவதாகவும் கூறியிருந்தார். அமிர்தலிங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் வருமாறு, "நாம் கலந்துகொண்ட முன்னைய கூட்டங்களில் செய்வதாக உறுதியளித்த கீழ்வரும் விடயங்கள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கைகளும் உங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படமை குறித்து நான் வருத்தம் அடைகிறேன்". 1. வவுனியா தொல்பொருள் திணைக்கள வளாகத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் எழுப்பப்பட்டிருக்கும் புத்தர் சிலையினை அகற்றுவது தொடர்பான இணக்கப்பாடு. 2. வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சன்குளத்தில் புகையிலைக் கூட்டுத்தாபனத்திலன் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தினை அகற்றுவது தொடர்பான இணக்கப்பாடு. 3.உப பொலீஸ் மா அதிபர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வைகாசி 31 ஆம் திகதி முதல் ஆனி 3 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் படுகொலைகளிலும், தமிழ் மக்கள் மீதான வன்முறைகளிலும் ஈடுபட்டவர்கள் என்று கண்டறியப்பட்ட பொலீஸ் அதிகாரிகள் மீது இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிரதம நீதியரசருக்கு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அரசு மறுத்து வருகிறது. 4. மாவட்ட அதிகார சபைகளுக்கூடாக அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட ஊர்லகாவல்ப் படையினை இதுவரை அரசு அமைக்க முன்வரவில்லை. 5. தமிழ் மற்றும் முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகளை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்தல். வட மகாணத்திற்கு தமிழ் அதிகாரிகளை அனுப்பியதன் மூலம் அங்கு நிலைமை ஓரளவிற்கு சுமூகமாக்கப்பட்டிருந்தாலும் கூட ஏனைய தமிழ் பேசும் மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடமையில் இருந்த தமிழ் பொலீஸ் அதிகாரிகளை அகற்றிவிட்டு அங்கு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் அமர்த்தி வருகிறது. எம்முடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக இந்த மாவட்டங்களில் அதிகளவு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் பதவியில் அமர்த்தி வருகிறது. 6. தமிழ் பொலீஸ் அதிகாரிகளை கடமைக்குச் சேர்த்துக்கொள்வது என்கிற தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 7. திஸ்ஸமாராமைப் பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றப்பாடுவார்கள் என்கிற உறுதிப்பாடு இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை. திஸ்ஸமாராமக் குளம் மேலும், ஜெயவர்த்தனா பிரஸ்த்தாபித்த ஆடி 9 ஆம் திகதி கூட்டத்தில் தான் எட்டு விடயங்கள் குறித்து பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலாவதாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவது மற்றும் அவற்றினை இயங்கச் செய்வது தொடர்பான விடயம். இரண்டாவது, மகாவலி அபிவிருத்தித் தட்டத்தின் மூலம் வீடுகளையும் நிலங்களையும் தமிழ் மக்களுக்கு ஒதுக்குவது, வன்முறைகளினால் அழிக்கப்பட்ட வீடுகளை மீளக் கட்டிக் கொடுப்பது மற்றும் பலகலைக் கழக அனுமதியில் திருத்தங்களை மேற்கொள்வது. தனது பொறிக்குள் அமிர்தலிங்கம் விழாது சாதுரியமாகத் தப்பிக்கொண்டது ஜெயாருக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. எந்த விடயங்களை பேச்சுவார்த்தையில் இருந்து விலக்குவது என்று அவர் நினைத்திருந்தாரோ, அதே விடயங்களை அமிர்தலிங்கம் மீண்டும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கக் கேட்டுக்கொண்டது அவரது சினத்தை இரட்டிப்பாக்கியிருந்தது. மேலும், ஆடி 6 ஆம் திகதி காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகளை புலிகள் எடுத்துச் சென்றிருந்ததும் அவரது சினத்திற்கு இன்னொரு காரணம். சீலன் தலைமையில் சீருடைகளை அணிந்து சென்ற புலிகளின் அணியொன்று அதிகாலை இரண்டரை மணிக்கு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் வாயிலை அடைந்தது. தனது வாகனத்திலிருந்து கீழிறங்கிய சீலன் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த இராணுவ வீரரை தனக்கருகில் வருமாறு அழைத்தார். வந்திருப்பது ராணுவ அதிகாரியொருவர் என்று நினைத்த ராணுவ வீரர்கள் அவரருகில் சென்று அவருக்கு சல்யூட் செய்தனர். அவர்களுடன் சிங்களத்தில் பேசிய சீலன், "தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகளை புலிப் பயங்கரவாதிகள் எடுத்துச் செல்ல திட்டமிட்டு வருவதாக எமக்குச் செய்தி வந்திருக்கிறது. மேலதிக பாதுகாப்பிற்காக நாம் வந்திருக்கிறோம். எவரையும் உள்ளே வரவிடாதீர்கள். எவராவது இங்கு வந்தால் அவர்களை இங்கேயே மறித்து வைத்துக்கொண்டு எம்மை அழையுங்கள், நாம் வந்து அவர்கள் பற்றி விசாரிக்கிறோம்" என்று கூறினார். அதன் பின்னர் வெடிக்கும் கருவிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் சேமிப்புக் கிடங்கிற்கு நேரடியாக தமது வாகனத்தை புலிகள் செலுத்திச் சென்றனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவரூடாக தாம் பெற்றுக்கொண்டிருந்த திறப்பினைக் கொண்டு சேமிப்புக் கிடங்கினைத் திறந்தனர். அங்கிருந்த ஐந்து வெடிக்கவைக்கும் கருவிகளையும் எடுத்துக்கொண்டு, சேமிப்புக் கிடங்கினை மீளவும் பூட்டிவிட்டு அங்கிருந்து அகன்ற புலிகள், வாயிலுக்கு வரும்போது வாகனத்த்தை மெதுவாகச் செலுத்தி வாயிலில் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறிவிட்டு தப்பிச் சென்றனர். காங்கேசந்துறைத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிக் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டமை மற்றும் யாழ்தேவி ரயில் டெலா இயக்கத்தால் எரிக்கப்பட்டமை ஆகிய விடயங்களுக்காகப் பழிவாங்கவேண்டும் என்று அரசு நினைத்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் அனைத்தையும் அது நிறுத்தியது. தனியார் போக்குவரத்தையும் முடக்கிப் போட்டது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஆறு தனியார் பஸ் வண்டிகள் ஈரப்பெரிய குளத்தில் வழிமறித்து எரிக்கப்பட்டன. பருத்தித்துறையிலிருந்து கொழும்புநோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிமீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சிங்களச் சாரதி காயமடைந்தார். யாழ்ப்பாணத்தின் பிரதான போக்குவரத்துச் சாதனமான துவிச்சக்கர வண்டிகளைத் தடைசெய்யவது தொடர்பாகவும் அமைச்சரவை ஆலோசனைகளை நடத்தியது. தெற்கில் ஜெயாருக்கான ஆதரவு வளரத் தொடங்கியிருந்த காலமது. சுதந்திரக் கட்சிக்குள் பிளவொன்றினை அவரால் உருவாக்க முடிந்திருந்தது. தனது 40 வருட அரசியல் வாழ்க்கையின் நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் சுதந்திரக் க‌ட்சியைச் சேர்ந்த அநுர பண்டாரநாயக்கவை அவரால் கலந்துகொள்ள வைக்க முடிந்திருந்தது. அநுரவின் இந்தச் செயலினையடுத்து சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விஜய குமாரதுங்க மற்றும் அவரது மனைவி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியிருந்தனர். மிகப் பிரபலமான நடிகரும், கவர்ச்சியான அரசியல்வாதியுமான விஜய குமரதுங்கவின் வெளியேற்றத்தினையடுத்து ஏற்கனவே பலவீனமடைந்திருந்த சுதந்திரக் கட்சி மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. விஜயகுமரதுங்கவை நக்சலைட்டுக்களுக்கு ஆதரவு வழங்கினார் என்று பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தண்டிக்க முயன்றபோதும் ஜெயாரினால் விஜயகுமாரதுங்க உட்பட்ட சுதந்திரக் கட்சியின் பலத்தினை சிதைக்க முடிந்திருக்கவில்லை. ஆனால், அநுரவை தனது அரசியல் நிக‌ழ்விற்கு வரவழைத்த சிறிய நடவடிக்கை மூலம் விஜயவை கட்சியிலிருந்து வெளியேறவும், சுதந்திரக் க‌ட்சியைப் பிளவுபடுத்தவும் ஜெயாரினால் முடிந்திருந்ததுடன் தெற்கில் தனது செல்வாக்கினையும் அதிகரிக்க முடிந்திருந்தது. ஆனால், தனது செல்வாக்கினை வடக்குக் கிழக்கில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஜெயாருக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியது. ஆகவே, தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நடத்தப்போவதாகத் தெரிவித்திருந்த ஆடி 9 ஆம் திகதிய கூட்டத்தை இரத்துச் செய்த ஜெயார், ஆடி 12 ஆம் திகதி டெயிலி டெலிகிராப் பத்திரிகையாளர் கிரகம் வோர்ட்டிற்கு வழங்கிய செவ்வியில் தமிழருக்கும், முன்னணியினருக்கும் கடுமையான செய்தியொன்றினை வழங்கியிருந்தார். "ஒன்றில் வழிக்கு வாருங்கள் அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதுதான் அவரது செய்தியின் சாரம்."தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட எனக்கு தற்போது நேரமில்லை. அவர்களைப்பற்றி என்னால் இப்போது நினைக்க முடியாது. அவர்களது வாழ்வு பற்றியோ அல்லது எம்மைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ நான் கவலைப்படவில்லை. பயங்கரவாதிகள் முற்றாக அழிக்கப்படும்வரை நாம் விரும்புவது நடக்கப்போவதில்லை. ஒரு நோயை அழிக்கும்வரை அந்த நோயாளியை எப்படிக் குணப்படுத்தமுடியாதோ அதுபோலத்தான் இதுவும்" என்று ஜெயார் தெரிவித்தார். மேலும் முன்னணியினரின் வாயை அடக்க ஒரு விடயத்தைக் கூறினார் ஜெயார், "இதுவரை காலமும் பயங்கரவாதிகளின் சார்பாக முன்னணியினர் பேசிவந்தனர், ஆனால் அது இனிமேல் நடக்கப்போவதில்லை". விஜய குமாரதுங்க, மாலினி பொன்சேக்கா, லக்கி டயஸ் மற்றும் ரஞ்சித் குமார‌ அரசியல் யாப்பில் ஆறாம் சட்டத் திருத்தத்தை ஜெயார் முன்வைத்ததும் அந்தச் சந்தர்ப்பத்தில்த்தான். முன்னணியினருடனான உயர் மட்டக் கூட்டத்தை இரத்துச் செய்திருந்த ஜெயார், உடனடியாக அமைச்சரவையின் உள்க்கூட்டத்தினைக் கூட்டி காமிணி திசாநாயக்க மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் முன்னணியினரை மெளனிக்கவைக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தார். ஜெயாருடன் நெருக்கத்தினை ஏற்படுத்த நினைத்திருந்த லலித் அதுலத் முதலி இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து பிரிவினைவாதத்தினை ஆதரித்து எவரும் பிரச்சாரம் செய்வதனைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யவேண்டும் என்கிற ஆலோசனையினை ஜெயாரிடம் முன்வைத்தார்.
  17. பெளத்த துறவிகளின் கைகளில் தவழும் தானியங்கித் துப்பாக்கிகள் ‍ இங்கிலாந்துச் செய்தியாளர் டேவிட் செல்போர்ன் எனும் இங்கிலாந்துச் செய்தியாளர் மஞ்செஸ்டர் கார்டியன் எனும் பத்திரிகைக்கும் ஏனைய வேறு பத்திரிகைகளுக்கும் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர். லலித் அதுலத் முதலியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர். 1982 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு பயணம் செய்தபோது ஜெயவர்த்தனவுக்கும், காமிணி திஸாநாயக்கவுக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ஒருநாள் பொதுக்கூட்டம் ஒன்றிற்காகச் சென்றுகொண்டிருந்த ஜெயவர்த்தன, காரில் தன்னுடன் அந்தச் செய்தியாளரையும் அழைத்துப் போனார். செய்தியாளர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்வதற்கு ஜெயார் பாவித்த வழிமுறைகளில் இதுவும் ஒன்று. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெயாருக்கும் டேவிட் செல்போர்னுக்கும் இடையிலான சம்பாஷணை தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் தடம் மாறியது. தனது அறிக்கையில் லலித் அதுலத் முதலி கூறியவற்றை செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார். "நாங்கள் சிலரின் தலைகளை நொறுக்கப் போகிறோம்" என்பதுதான் லலித் அதுலத் முதலி செபோர்னிடம் கூறிய வார்த்தை. ஆனால் பின்னாட்களில் தான் அப்படிச் சொல்லவில்லை என்பதனை மறுத்திருந்த லலித் அதுலத் முதலி, செல்போர்னை தனது எதிரியாகவும் பார்க்கத் தலைப்பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு செல்போர்ன் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தபோது உளவாளிகள் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். தேர்தல் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கலாக இராணுவம் வெறியாட்டம் ஆடிய கந்தர்மடம் பகுதிக்கு செல்போர்ன் சென்றிருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்போர்ன் பேசியபோது, கந்தர்மடத்திற்கு வந்திறங்கிய இராணுவத்தினர் தமது அதிகாரி அங்கு வரும்வரையில் காத்திருந்ததாகவும், அவர் வந்து உத்தரவு பிறப்பித்த பின்னரே தாக்குதலை ஆரம்பித்ததாகவும் அவரிடம் கூறியிருக்கின்றனர். செல்போர்ன் அமிர்தலிங்கத்தையும் செவ்வி கண்டிருந்தார். அமிர்தலிங்கம் அவருடன் பேசும்போது "புலிகளின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஆதரிப்பதாகவும், அதனாலேயே அவர்களை பாதுகாப்பதாகவும்" கூறியிருக்கின்றார். மேலும், "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் திக‌ழ்பவர்கள் புலிகள் தான்" என்றும் அமிர் செல்போர்னிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், செல்போர்ன் பிரதம நீதியரசரர் நெவில் சமரக்கோனையும் செவ்வி காண ஒழுங்கு செய்திருந்தார். . ஆனி 11 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரத்வத்தை, பேர்சி சொலிம் தோமே, சொய்சா ஆகியவர்களுக்கெதிராக ஜெயார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதையடுத்து நீதியரசர் ஜெயாருடன் முரண்பட்டிருந்த வேளை அது. கம்யூனிசக் கட்சியின் உறுப்பினரான விவியேன் குணவர்த்தண மீது கொள்ளுப்பிட்டிய பொலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதி வழங்கியவர்களே இந்த மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ஆகும். அதற்குப் பழிவாங்கலாகவே அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஜெயார் தூண்டிவிட்டிருந்தார். செல்போர்னுடனான செவ்வியின் போது ஜெயார் குறித்து கடுமையான விமர்சனங்களை பிரதம நீதியரசர் முன்வைக்கலாம் என்று அஞ்சிய அரசு, ஆனி 25 ஆம் நாள் இரவு, செல்போர்னைக் கைது செய்து நாடு கடத்தியிருந்தது. தம்புள்ளை குகை விகாரை நன்கு அறியப்பட்ட செய்தியாளரைக் கைது செய்து நாடு கடத்தியமை இலங்கை அரசுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையில் செல்போர்ன் எழுதிய "வன்முறைகளை தடுக்கத் தவறிய இலங்கை ராணுவம்" எனும் தலைப்பிலான செய்தி அதிகம் பகிரப்பட்டதோடு வேறு பல செய்தித்தாள்களிலும் மேற்கோள் காட்டப்பட்டு வெளிவந்திருந்தது. ஆடி 6 ஆம் திகதி வெளிவந்த இச்செய்தியை இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகளும் மீள் பிரசுரித்திருந்தன. தான் எழுதிய செய்தியாக்கத்தில் செல்போர்ன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், "காவி உடை தரித்த பெளத்த பிக்குகளின் கைகளில் இன்று தானியங்கித் துப்பாக்கிகள் பளபளக்கின்றன". மேலும், இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் புரட்டாதி மாதத்தில் சத்தியாக்கிரக நிகழ்வொன்றினை நடத்துவதற்கும் உத்தேசித்திருக்கிறார்கள் என்று அவர் எழுதியிருந்தார்.
  18. பொல்லாத மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் மரமும் மாதாவும் தான் ஒருவருக்கொருவர் துணை… யாழ் மாவட்டம் எத்தனை அழகிய கடற்கரைகளை உடையது என்பதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம்.. எத்தனை அழகான அமைதியான இடம்..
  19. நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.
  20. பெருமாள் கொசுறு தகவல் தந்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே சொல்லிவிடுங்கோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.