Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    9976
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/14/23 in all areas

  1. நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும். (பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!) உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?
  2. காற்றில்லாத விண்வெளியில் சந்திராயன் போன்ற விண்கலங்கள் எவ்வாறு உந்திதள்ளப்படுகின்றன?
  3. நன்றிகள் தோழர்..vpn வழியாக தெரிகிறது..👍
  4. சிறி ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கதை சொல்கிறது. இணைப்புக்கு நன்றி.
  5. இரை தேடி வந்த பாம்பொன்று தச்சனொருவனின் பட்டறைக்குள் நுழைந்தது. பட்டறைக்குள் நுழைந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து திரிந்த பாம்பின் உடல் அருகிலிருந்த கூரிய வாளில் பட்டு விட்டதால் சிறியதொரு காயம் ஏற்பட்டுவிட்டது. கோபமடைந்த பாம்பு வாளை கடிக்க முற்பட்டது. வாள் தன்னை எதிர்த்துத் தாக்குவதாக தவறாக நினைத்துக் கொண்ட பாம்பின் தாக்குதலும் அதிகரித்தது. வாளின் கூரான பற்கள் பாம்பின் வாயை அறுத்ததால் பெரிதாகக் காயமேற்பட்டு இரத்தமும் வடியத் தொடங்கிற்று. இப்போது பாம்பின் கோபம் தலைக்கேறி கண்களை மறைக்க... தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்... தன் பலம் முழுவதையும் சேர்த்து வாளை சுற்றி வளைத்து இறுக்க ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும்? பாம்பின் உடல் வாளின் பற்களுக்கு இரையாகிப் போனது. எங்கும் பலத்த காயங்கள்; எங்கும் ரத்தம். என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாமலேயே பாம்பு இறந்து போனது. காலையில் பட்டறைக்குள் நுழைந்த தச்சன் ரத்தம் தோய்ந்த வாளையும் துண்டாகி செத்துக் கிடக்கும் பாம்பையும் கண்டான். பாம்பின் கோபமும் தீய எண்ணமும் நிதானமற்ற தன்மையுமே அதனது சாவுக்குக் காரணமாகின... இதுபோன்றுதான்... சில சமயங்களில் கோபத்தின் காரணமாக நாம் பிறரை காயப்படுத்த முயல்கிறோம். ஆனால் நாம் பிறரை காயப்படுத்தவில்லை... நம்மை நாமே காயப்படுத்துகிறோம் என்பதை தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம். சில நேரங்களில் தீய எண்ணம் கொண்டு பிறரை வீழ்த்த முற்படுகிறோம். ஆனால் நாம்தான் பலியாகி விட்டோம் என்பதை காலம் கடந்தே உணர்ந்து கொள்கிறோம். வாழ்க்கையில் சில நேரங்களில்... சில நிகழ்வுகளை, சில மனிதர்களை, சில வார்த்தைகளை, சில செயல்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் எல்லா விடயங்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டிய தேவையுமில்லை. தேவையற்ற செயல், கோபம், எண்ணம் அனைத்தும் எம்மை அழித்து விடும்.
  6. யாழ்ப்பாணப் படுகொலைகள் இராணுவத்தினரின் பொதுவான மரணச்சடங்கு கொழும்பில் நடப்பதை எதிர்த்த அதிகாரிகள், பிடிவாதமாக நின்ற ஜெயார் தாக்குதலினால் நிலைகுலைந்துபோன யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாரும் ஏனைய இராணுவ அதிகாரிகளும் திருநெல்வேலியிலிருந்து குருநகர் முகாம் திரும்பியவுடன் அவசரக் கூட்டம் ஒன்றினை நடத்தினர். இதேவேளை, 13 இராணுவத்தினர் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி குருநகர் ரேடியோ அறையிலிருந்து கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டது. முதலாவதாக பலாலியிலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் பல்த்தசாருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. கொழும்பு ராணுவத் தலைமையகத்திலிருந்து ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுக்கு தாக்குதல் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாருடன் பேசினார். "நான் ஜனாதிபதிக்கு உடனடியாக இதுபற்றி அறிவிக்க வேண்டும், இது ஒரு மிகப் பாரதூரமான சம்பவம்" என்று அதிர்ச்சியடைந்த நிலையில் ராணுவத் தளபதி யாழ்ப்பாணத் தளபதியிடம் கூறினார். பின்னர் திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதியை எழுப்பினார். தான் திருநெல்வேலித் தாக்குதல் குறித்து ஜெயாருக்குச் சொன்னபோது அவர் மிகுந்த கோபம் அடைந்ததாக தனது அதிகாரிகளுடன் பேசும்போது திஸ்ஸ வீரதுங்க கூறியிருந்தார். "நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என்று ஜயவர்த்தன ஆவேசத்துடன் கூறினார். காலை விடிந்தவுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் வீரதுங்கவைப் பணித்தார். குருநகரில் நடந்த கூட்டத்தில் மூன்று முக்கிய விடயங்கள் இராணுவ அதிகாரிகளால் ஆரயாப்பட்டிருந்தன. தாக்குதலினால் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்களை சரியான வகையில் பராமரித்தல் மற்றும் யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் என்பனவே அவையாகும். லெப்டினன்ட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க (காளை மாட்டு வீரதுங்க) உருவாகியிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல் என்பதற்குள் கண்ணிவெடித் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பதும் அடங்கியிருந்தது. முனசிங்கவும் அவரது ராணுவ புலநாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் அடுக்கப்பட்டிருந்தன. கொழும்பில் இயங்கிவந்த இறந்தவர்களை தூய்மைப்படுத்தி அலங்கரித்து உறவினர்களிடம் கையளிக்கும் ஏ. எப். ரேமண்ட் எனும் தனியார் நிறுவனத்திடம் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை தயார்ப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. யாழ்நகருக்கான பாதுகாப்பிற்கென்று மேலதிக இராணுவப் பிரிவுகள் கடமையில் அமர்த்தப்பட்டன. மறுநாள் காலை, வோர்ட் பிளேசில் அமைந்திருக்கும் ஜெயாரின் பிரத்தியேக வாசஸ்த்தலத்தில் அதியுயர் பாதுகாப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. "என்ன நடந்தது?" என்று ஜெயார் இராணுவத் தளபதி வீரதுங்கவைப் பார்த்துக் கேட்டார்.அவரிடம் பதில் இருக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு தமிழ்ப் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டதாக பிரகடனம் செய்த இராணுவ அதிகாரியும் இதே வீரதுங்கதான். இப்பிரகடனத்தைச் சிறப்பிக்க பாரிய களியாட்ட நிகழ்வொன்றினையும் வீரதுங்க நடத்தியதுடன், ஜனாதிபதி ஜெயாரையும் அதற்கு அழைத்திருந்தார். அன்று வோர்ட் பிளேசில் நடந்த கூட்டத்தில் பங்குகொண்ட இராணுவ அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில் கூட்டம் முழுவதிலும் ஜெயார் கடுங் கோபம் கொண்டு காணப்பட்டதாகக் கூறினார். "இது உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும், நாம் இதனை இப்படியே நடப்பதற்கு அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது" என்று மீண்டும் மீண்டும் ஜெயார் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர் இப்படிக் கூறியபோது அங்கிருந்த அனைவருக்கும் அவர் ஏதோ ஒரு விடயத்தை மனதில் வைத்தே இதனைக் கூறுகிறார் என்பது தெரிந்தது. கூட்டத்தின் முடிவில் இரு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முதலாவது விடயம் ராணுவத் தளபதி வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது. இரண்டாவது கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களுக்கும் கொழும்பில் அமைந்திருக்கும் பொது மயானமான பொரள்ளை கனத்தையில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது. கொழும்பில் பூரண இராணுவ மரியாதைகளுடன் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் மரணச் சடங்கினை நடத்துவதென்பது ஜெயாரினால் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் இராணுவ மரியாதையுடன் சடங்குகள் நடப்பதே வழமையாக இருந்து வந்தது, ஆகவே ராணுவத் தளபதி இம்முறையும் அவ்வாறே செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். இக்கூட்டத்தில் பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் பங்குகொண்டிருக்கவில்லை, ஆகவே அவர் சார்பாக வேறு இரண்டு பொலீஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களும் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைப்பதே சரியானது என்று கூறினர். 13 இராணுவத்தினருக்கும் ஒரே நேரத்தில் கொழும்பில் மரணச் சடங்கினை நடத்தும்போது அச்ம்பாவிதங்கள் நேரலாம் என்று அந்த பொலீஸ் அதிகாரிகள் தமது அச்சத்தைத் தெரியப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் பொலீஸார் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறு செய்வதே சரியானது என்று கூறினர். அனால், இவர்கள் எவரினதும் கருத்துக்களையும் செவிமடுக்கும் நிலையில் ஜெயார் இருக்கவில்லை. கொல்லப்பட்ட 133 இராணுவத்தினருக்கும் கொழும்பிலேயே கூட்டு மரணச் சடங்கினை நடத்துவதென்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததுடன், "13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல, அவர்களுக்கு பூரண இராணுவ மரியாதைகளுடன் தகுந்த முறையில் வழியனுப்பி வைப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் சரியான வணக்கமாகும்" என்று காட்டமாகக் கூறினார்.
  7. முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂
  8. தலையோடு வந்தது சைக்கிளோடு போச்சு......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.