Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19134
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31987
    Posts
  3. island

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1748
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/14/23 in all areas

  1. என்னது? பாலஸ்தீன ஆதரவாளர்களா😝. ஜோக் அடியாதேங்கோ அண்ணை. இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள். அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள். ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள். உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள். இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான். இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம். இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.
  2. என்ன இருந்தாலும் இப்படி நேரடியாக உண்மையை எழுதி இப்படி எம்மை தோலுரிப்பது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. நீங்க ரொம்ப மோசம் சார்.
  3. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது. இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம். இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.
  4. இஸ்ரேல்.. அகதிகளாக வெளியேறச் சொல்லிவிட்டு.. அந்த அகதிகள் மீது குண்டு தாக்குதல் நடத்தி இருப்பது அப்படியே யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது சாரை சாரையாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது நாவற்குழி பகுதியில் வைச்சு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல பொது மக்கள் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார்கள். ஆக அடக்குமுறையாளர்களுக்கு கொள்கை வகுக்கும் அமெரிக்க மேற்குலக ஜாம்பவான்கள்.. தங்கள் நலனுக்காக.. பலவீனமான இனங்களில்.. மனித இன அழிப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் மீண்டும்.. இனங்காட்டுகிறது. உக்ரைனில் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. கொசவாவில் மதிப்பினமாம்.. சேர்பியாவில் பிரிவினைக்கு ஆதரவாம். ஏனெனில் நேட்டோ ஊடுருவலுக்கு அது அவசியம். ஜோர்ஜியாவில் சுதந்திர தேசங்களை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. ஜோர்ஜிய ஒருமைப்பாட்டுக்கு உழைப்பினமாம்... ஏனெனில் ஜோர்ஜியாவின் அமைவிடம் நேட்டோவுக்கு அதன் விரிவாக்கத்திற்கு அவசியம். முன்னர் அமெரிக்கவும் மேற்குலக நாடுகளும்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த குர்திஷ் மக்களின் போராட்ட அமைப்பின் ஆதரவை.. சிரியாவில் அரசுக்கு எதிரான மோதலுக்கும் நேட்டோ ஊடுருவலுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் போது.. மேற்குலக ஜாம்பவான்கள்.. குர்திஷ் இன மக்களின் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்க நேரிட்டது. இன்று... நேட்டோ நாடான துருக்கி தொடர்ந்தும்.. குர்திஷ் இனப்படுகொலை செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினமாம். (துருக்கியும் முஸ்லிம் தான்.. குர்திஷும் முஸ்லிம் தான்) அதேபோல்.. தான் பலஸ்தீன மக்கள் விடுதலையிலும்.. மேற்குலகம் இஸ்ரேலின் ஊடாக மத்திய கிழக்கில் தன் ஆக்கிரமிப்பு ஊடுருவல் நிலைப்பாட்டை போனிக் கொள்ள இஸ்ரேலின் எல்லா விதமான பயங்கரவாதச் செயல்களையும் அங்கீகரித்து நிற்கிறது. ஈழத்திலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஆதரவோடு.. தங்களின் பூகோள நலனை பெற்றுக் கொள்ளத் தக்க வகையில்.. அமெரிக்காவும் அதன் மேற்குலக கூட்டாளிகளும்.. தமிழர்களின் தார்மீக விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. இனப்படுகொலைகளின் ஊடாக.. தமிழர்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக அதனை.. குசிப்படுத்துவதன் ஊடாக தமது நலனை பேணிக் கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு ஹிந்தியா கூட்டு உடந்தையாக உள்ள அதேவேளை.. சீனா போட்டியாளராக இருப்பதால்.. அப்பப்ப.. போர்க்குற்றம்.. மனித உரிமைகள் கோசங்களை சர்வதேச அரங்கில் போட்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்கள் பக்கம் அதிகம் சார்ந்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள். இப்படியாப்பட்ட அமெரிக்காவையும்... அதன் மேற்குலகக் கூட்டாளிகளையும்.. ஏன் இங்கு சிலர் ஆதரிக்கினம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவினது முழு இராணுவ பொருண்மிய உதவியோடு கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்கள் தான்.. தலிபான்கள்.. பில்லேடனின் அல்குவைதா அமைப்பு.. ஐ எஸ் ஐ எஸ்.. போன்றவை. இவை ஏதோ ஒரு தருணத்தில் அமெரிக்காவினால் அதன் மேற்குலக ஏஜெண்டுகளால்..ஏமாற்றப்பட்டதன் விளைவே.. அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிரான அவர்களின் சில நடவடிக்கைகள்.. மேலும் சில நடவடிக்கைகள்.. அமெரிக்காவின் தலையீடுகளை இட்டு இவர்களால் அமெரிக்காவின் அதன் மேற்குக் கூட்டாளிகளின் உளவு அமைப்புக்களின் தூண்டுதலின் பெயரில் இடம்பெற்ற கலகங்கள். குறிப்பாக.. துனிசியாவில் ஆரம்பித்து.. லிபியாவில் கடாபியை முடிக்க தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சிப் போராட்டங்கள். இவற்றின் முடிவில்.. அமெரிக்காவால்.. மேற்குலகால் ஏமாற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோரே.. பின்னர் பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள். இதையிட்டு.. அமெரிக்கா தன் தவறுகளை ஒத்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டது கூட இல்லை. இப்படியாப்பட்ட அடக்குமுறைகளுக்கு துணைபோவதும்.... தமது பூகோள நலனை மட்டும் முன்னிறுத்தி மட்டும்..செயற்படும்.. அமெரிக்க.. மேற்குலக நாடுகளையும் அவர் தம் ஏஜென்டு நாடுகளையும் அரசுகளையும்.. குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளையும்..ஆதரிப்பது என்பது உலகில் உரிமைகள் மறுக்கப்பட்டு.. ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. இஸ்லாமிய மக்களின் அவர் தம் சொந்த பூர்வீக நில மற்றும் ஆட்சி உரிமைப் போராட்டம் என்பது வேறு. இந்தப் பகுப்பறிவுள்ள யாழ் கள உறுப்பினர்கள் தெளிவாத்தான் எல்லாம் எழுதினம். இந்த தெளிவற்றவை தான்.. தாம் எதற்கு எதை ஆதரிக்கினம் என்ற ஒரு விளக்கமே இன்றி.. மாற்றுக் கருத்து நிலை என்ற சப்பை போட்டி மனப்பாங்கிலும்.. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கோதாவிலும்.. அப்பட்டமான இனப்படுகொலைகளையும்.. மனித இன உரிமை மீறல்களை செய்யும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளை கேள்விக்கு உட்படுத்தாமலே ஆதரிக்கவும் செய்கிறார்கள். ரஷ்சிய - உக்ரைன் மோதலின் அடிப்பட்டைக்காரணம்.. டான்பாஸ் பிராந்திய மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளும் இனப்படுகொலையும். இதன் பின்னணியில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத மற்றும் சதி திட்டங்களை தீட்டிக் கொடுத்தது அமெரிக்காவும் மேற்குலக நேட்டோ நாடுகளும் என்பது எப்போதோ வெளிப்பட்ட பின்னும்.. புட்டினின் இந்த சதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை என்னென்பது. புட்டின்.. ஒரு அழிக்கப்படும் இனத்தின் காவலராக உள்ள வரை.. அவர் பக்கம் தர்மம் இருக்கும். அதற்காக புட்டினும் ரஷ்சியாவும் தமிழ் மக்களின் அழிவுகளை தடுக்க வந்தார்கள்.. அல்லது தடுக்க உதவினார்கள் என்பது அல்ல அதன் அர்த்தம். மேற்குலகின் தேவைகளுக்காக அழிக்கப்படும் குறைந்தது.. ஒரு இன மக்களின் பாதுகாவலராகவாவது.. புட்டின் இருக்கிறார் என்பதுதான் ரஷ்சிய - உக்ரைன் மோதலின் யதார்த்தமாகும்.
  5. நீயுமா ராசா 🤣 (சிரிப்புக்குறிகளை கவனிக்க தவறியதேனோ?)😅
  6. கழுகு கண் என்பது போல் வெளவ்வால் காதைய்யா உங்களுக்கு😂. ஆனால் இதை கொப்பி அல்லாமல் inspiration எண்டு தான் சொல்லோணும் என இளையராஜா, ரெஹ்மான், தேவா எல்லாரும் சொல்லி இருக்கினம். அவையே அப்படி எனும் போது, அடிப்படை உபகரணங்களை வைத்து இசையமைச்ச நாமும் ஓகேதான்😎.
  7. கதியில்லாமல் அலையும் றொகிங்கியா முஸ்லிம்களை விட்டு விட்டீர்கள்! அவர்களையும் நல்ல விதமாகப் பார்க்காத "பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள்"!😎
  8. பிடிக்கும் (like) என்பதை விட அவர்கள் மீது எனக்கிருப்பதை begrudging respect தயக்கம்-சேர் மரியாதை எனலாம்.
  9. இது கூவி ஆட்களை கூப்பிடுவது மாதிரி இருக்கே?😅
  10. இண்டைக்கு நான் தப்பித்தேன். உங்களைத்தான் தோலை உரித்து உப்பு கண்டம் போடப்போகிறார்கள்🤪. #கச்சேரி களைகட்டும்😂
  11. எழுதுவதற்கு மன்னிக்கவும் எனக்கு இஸ்ரேலை ரொம்ப பிடிக்கும். அவர்களது இனப்பற்று மற்றும் ஒற்றுமை உலகையே ஆளும் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சி இருந்தால் இப்படி இருக்கணும் என் இனம். என் தேசம். நன்றி
  12. அருமையான கொள்கை...இக் கொள்கையின் படி பாலஸ்தீனர்களை. இஸ்ரேல் குண்டுகள் போட்டு கொல்கிறது என்று எடுத்து கொள்ளலாம் இந்த கொள்கையை பாலஸ்தீன ஆதரவாளர்கள் அறிவார்களா. ???
  13. தமது அமைச்சரவைப் பதவிகளைத் தக்கவைக்க இஸ்ரேல் தூதரகத் திறப்பினை அமைதியாக ஏற்றுக்கொண்ட முஸ்லீம் அமைச்சர்கள் இரு அமெரிக்க உயர் அதிகாரிகளின் இலங்கைக்கான‌ அடுத்தடுத்த வருகை இந்தியாவுக்குச் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரான வோல்ட்டர்ஸின் வருகை இந்தியாவை ஒரே நேரத்தின் ஆத்திரப்படவும் கவலைப்படவும் வைத்திருந்தது. வோஷிங்டனின் இந்தியாவுக்கெதிரான கொள்கையின் பிதாமகனே அவர்தான் என்று இந்தியா நம்பியது. இந்தியாவுக்கெதிரான சதியொன்றில் இறங்குவதற்காகவே வோல்ட்டர்ஸ், ஜெயவர்த்தனவைச் சந்தித்திருக்கலாம் என்று அது கருதியது. ஆகவே, வோல்ட்டர்ஸின் விஜயம் தமக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யாது தவிர்த்துவிட்டது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றும் வோஷிங்கடனுக்கு தனது அதிருப்தியை அறிவித்தது. வோல்ட்டர்ஸின் வருகையின் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மிகுந்த செயற்றிரனுடன் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த இலங்கைத் தூதுவருக்கும் வோல்ட்டர்ஸுக்கும் இடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்ரேலுக்கான அலுவலகம் ஒன்றினை அமைத்தல், சிலாபம் மாவட்டத்தின் இரணவில பகுதியில் வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான அஞ்சல் நிலையம் ஒன்றினை உருவாக்குவது, திருகோணமலை எண்ணெய்க்குதங்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவது, திருகோணமலை துறைமுகப்பகுதியில், அப்பகுதியினால் வலம்வரும் அமெரிக்கக் கடற்படை வீரர்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல விடயங்கள் இப்பேச்சுகளின்போது கலந்துரையாடப்பட்டன. வோல்ட்டர்ஸ் மீண்டும் 1983 மார்கழியில் கொழும்பிற்கு விஜயம் செய்தார். தனது ஐப்பசி மாத விஜயத்தின்போது தான் கேட்டுக்கொண்ட விடயங்கள் தொடர்பாக ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினை அறிவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தினை வழங்குவதற்கு ஜெயார் இணங்கியிருந்தார். இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை அரசு வழங்கினால், முஸ்லீம்களை அரசுக்கெதிராகத் திருப்பிவிட சிறிமா த‌லைமையிலான எதிர்க்கட்சிகள் முயல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிறிமாவின் அரசு உள்ளூர் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவும், மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளின் ஆதரவினைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேலுடனான சகல தொடர்புகளையும் அறுத்தெறிந்திருந்தது. இஸ்ரேலின் உளவு அமைப்புக்களில் ஒன்றான ஷின் பெத்தின் அதிகாரிகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இயங்கச் செய்வதனூடாக அவர்களின் உதவியினை இலங்கை இராணுவத்திற்குப் பெற்றுக்கொள்வதென்று ஒத்துக்கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தினை உருவாக்குவதில் வோல்ட்டர்ஸ் பெரும் பங்காற்றியிருந்தார். மேலும் இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா அஞ்சல் நிலையம், திருகோணமலை துறைமுக எண்ணெய்க்கிணறுகளின் குத்தகை, திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைக்கான பொழுதுபோக்கு அனுமதி தொடர்பாகவும் சாதகாமன இணக்கப்பாடுகள் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எட்டப்பட்டிருந்தன. இலங்கையுடனான பேச்சுக்களில் பங்குபற்றியிருந்த இஸ்ரேலின் ஆசியாவுக்கான வெளிவிவகார அமைச்சின் உதவித் தலைவர் டேவிட் மதானி 1984 ஆம் ஆண்டு சித்திரையில் கொழும்பில் தமது அலுவலகம் ஒன்றினைத் திறக்கும் விடயமாக கொழும்பு வந்திருந்தார். சபை ஒத்திவைக்கப்படும் வேளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை சபையில் போட்டுடைத்தார். அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவ்வுறுப்பினரின் கேள்விக்கான பதிலை வழங்கினார்.ஆனால், மழுப்பலாகவும், விடயத்தைத் திசைதிருப்பும் வகையிலுமே அவரது பதில் அமைந்திருந்தது. இஸ்ரேலின் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவரான லலித்தும் இஸ்ரேல் அலுவலகத்தை கொழும்பில் திறக்கும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. வைகாசி 3 ஆம் திகதி ஒப்பந்தத்தின் வரைபினை ஜெயவர்த்தன பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான போக்குவரத்து அமைச்சர் எம்.எச். மொஹம்மட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமீத் ஆகியோர் இதனை எதிர்த்தனர். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்வதன் மூலம் உள்ளூர் முஸ்லீம்களுக்கு அரசு துரோகம் இழைத்திருப்பதாகவும் இலங்கைக்கு நட்பான மத்தியகிழக்கு முஸ்லீம் நாடுகளை அரசு அவமதித்திருப்பதாகவும் அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். எம்.எச். மொஹம்மட் முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதைக் காட்டிலும் தமிழ்ப் பிரிவினைவாதத்தினை அழிப்பதே தனது முக்கிய நோக்கம் என்று கூறிய ஜெயார், இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தினை எதிர்க்கும் எவரும் தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என்றும் அறிவித்தார். ஆனால், தமது அமைச்சரவைப் பதவிகளை விட்டுக் கொடுக்க விரும்பாத இரு முஸ்லீம் அமைச்சர்களும் அதன்பின்னர் அமைதியாக இருந்துவிட்டனர். ஏ.சி.எஸ் ஹமீத் ஜெயாரின் நெருங்கிய சகாக்களான லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் ஆகியோர் இவ்வொப்பந்தத்தினை முழுமையாக ஆதரித்து நின்றனர். கொழும்பில் இஸ்ரேலின் அலுவலகம் ஒன்றினைத் திறப்பதற்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சில முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர், ஆனால் ஜெயார் இவை எதையுமே சட்டை செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. "எனது உடனடித் தேவை தமிழ்ப் பயங்கரவாதத்தினை அழிப்பதே. ஆகவே, இஸ்ரேலின் தொடர்புகளை எதிர்க்கும் எவரும் பயங்கரவாதத்தினை ஆதரிப்பவர்களாகக் கருதப்படுவர்" என்று ஜெயார் ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலளித்தார். இதனையடுத்து முஸ்லீம்கள் மெளனமாகிவிட்டனர். மேலும், எதிர்க்கட்சிகளினால் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்திற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து கடுந்தொணியிலான அறிக்கை ஒன்றினை சிறிமா வெளியிட்டார். சிறிமாவின் அறிக்கை பின்வருமாறு கூறியது, "எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், இஸ்ரேலின் அலுவலகத்தை இந்த நாட்டிலிருந்து அகற்றிய முதலாவது அரசுத் தலைவர் என்கிற வகையிலும் இந்த அரசு செய்துகொண்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தினை நான் முற்றாக நிராகரிக்கிறேன். மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் அரபு - இஸ்ரேல் பிரச்சினையினை எமது நாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதன் மூலம் ஏற்கனவே இங்கு நடந்துவரும் வன்முறைகளுக்கு மேலதிகமாக மேலும் வன்முறைகள் உருவாகவே இது வழிவகுக்கும்". "இலங்கையின் நலன்கள் மீதும் அதன் மக்கள் மீதும் நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பட்டமான தாக்குதலை இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையை நேசிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வாவும் இதனை எதிர்த்து அறிக்கையொன்றினை வெளியிட்டார். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம் இலங்கையின் அணிசேராக் கொள்கையினை மீறி அமெரிக்க முகாம் நோக்கி இலங்கை சாய்ந்துவருவததாக அவர் குற்றஞ்சாட்டினார். "இராணுவ ரீதியில், இஸ்ரேலின் பலம் என்பது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பலமேயன்றி வேறில்லை" என்று அவர் கூறினார். ஆனால், இந்த எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இஸ்ரேலின் அலுவலகம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 1984 ஆம் ஆண்டு வைகாசி 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. டேவிட் மதானி இந்த அலுவலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் அதன் இலங்கைக்கான தூதுவராக மூத்த இராஜதந்திரி அக்ரெயில் கார்னியை ஐப்பசி 24 ஆம் திகதி நியமித்தது. பெரும்பாலான முஸ்லீம் நாடுகளின் இலங்கையின் இந்தச் செயலைக் கண்டித்தன. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டம் ஒன்றிற்கான தனது நிதியுதவியினை சவுதி அரேபியா நிறுத்தியது. மேலும் லிபியா, சிரியா, ஈரான், ஜோர்தான் ஆகிய நாடுகளும் தமது கடுமையான எதிர்ப்பினை ஜெயவர்த்தனவுக்குத் தெரிவித்திருந்தன. முன்னணிப் பிரெஞ்சுப் பத்திரிக்கை ஒன்றிற்குப் பேட்டியளித்த இந்திரா காந்தி, இலங்கையின் இந்த முடிவிற்கான தனது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தார். தனது தென்கோடியில் இருக்கும் அயல்நாடு ஒன்று வெளிநாட்டுச் சக்திகளை உள்ளே கொண்டுவருவது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான விடயம் என்று அவர் கூறினார். "பயங்கரவாதத்தை ஒழிக்கவே வெளிச்சக்திகளை கொண்டுவருவதாக ஜனாதிபதி ஜயவர்த்தன கூறுகிறார். ஆனால், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற பெயரில் அவர் தமிழ் மக்களைப் படுகொலை செய்யாமலிருப்பார் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
  14. The Whispers!!! - பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது..
  15. இஸ்ரேலிய படையினர் காசாவில் மேற்கொண்ட தாக்குதலில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்கள் மீட்பு- இஸ்ரேல் செய்தித்தாள்கள் Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 10:01 AM இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட தரைநடவடிக்கையின் போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஹரேட்சும் ஜெரூசலேம்போஸ்ட்டும் தெரிவித்துள்ளன. பெருமளவு உடல்களை மீட்ட இஸ்ரேலிய படையினர் அவற்றை இஸ்ரேலிற்கு கொண்டுவந்தனர். அவற்றில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளமை தெரியவந்துள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன காசா மீதான பாரிய தரைத்தாக்குதலிற்கு முன்னதாக சிறிய தரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி ஆயுதங்களை அகற்றும் நோக்கத்துடனும் பணயக்கைதிகளை மீட்கும் நோக்கத்துடனும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பணயக்கைதிகளை மீட்பதற்கு உதவக்கூடிய ஆதாரங்களை படையினர் சேகரித்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ந்தும் காசவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றன. https://www.virakesari.lk/article/166819
  16. தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை. பலஸ்தீனியர்களும் கூட இல்லை. அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது… ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது. ஐ சீ ஆர் சி… முஸ்லிம் நாடுகள்… வத்திகான்… HRW… Amnesty International …. எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான். யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**. இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல. நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.
  17. மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும். உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா? இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
  18. இதனால்தான் இந்த திரியில் 6 பக்கமாக புலிகள் என்ற வார்த்தையை கூட பாவிக்காமல் எல்லாருமே உரையாடினோம் என நம்புகிறேன். 7 ம் பக்கத்தில் அவர்களை தேவையில்லாமல் இழுத்து வந்தவர்தான் இதற்கு பொறுப்பு. ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார். படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல். ————— @நன்னிச் சோழன் சில நாட்களுக்கு முன்பே காஸாவில் இருந்து தாக்குதல் நடக்க போகவதாக எகிப்து நெதென்யாகுவை எச்சரித்ததாம். உங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது. https://x.com/ShaykhSulaiman/status/1711403086642630868?s=20
  19. ஐயா உங்கள் முகப் புத்தக இணைப்பினூடாக வாசித்தேன், இங்கேயும் அவ்வெழுத்துப் பொக்கிசத்தைப் பகிரலாமே?
  20. கோஷான் இணைப்புக்கு நன்றி. இந்த படத்தில் வந்த ஒரு பாடலின் மெட்டை அப்படியே ஈயடிச்சான் கொப்பியடித்து “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு” என்ற பாடலை இயற்றி உள்ளார்கள் எம்மவர்கள். 😂 படத்தின் நடுவிலும் இறுதியிலுமாக இரு முறை அந்த பாடல் வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.