Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3034
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7138
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33807
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/08/24 in all areas

  1. இந்த றோ அதிகாரியினை தேன் பொறி (Honey Trap) எனும்முறையில் தம்பக்கம் அமெரிக்கா ஈர்த்திருந்ததாக கூறப்பட்டது, இந்திய இலங்கை ஒப்பந்தம் நிக்ழ்ந்த 3ம்ணித்தியாலத்திற்குள் அமெரிக்க அரசு அதனை வரவேற்றதன் பிண்ணனியிலேயே அவரினை இந்தியா அடையாளம் கண்டு கொண்டதாக பத்திரிகைகளில் வாசித்தாக நினைக்கிறேன். அவ்வாறாயின் இலஙகை அரசிற்கும் இந்த ஒப்பந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது, இலங்கை அரசு இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு ஆவணம் (Documentary) ஒன்றினை வெளியிட்டிருந்தது அதன் தலைப்பு அக்கோடிங் அன்ட் வித்டோரவல் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை, ஒப்பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நிகழும் எனும் தொனியிலான ஒரு ஆவணம்.
  2. ஜெயவர்த்தனவின் ஆலோசனைகள் இந்திரா காந்தியுடனான தனது சந்திப்பு நிறைவுபெற்று மூன்று வாரங்களின் பின்னர் ஆடி 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றினை ஜெயார் நடத்தினார். இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத இரு விடயங்களினால் சர்வகட்சி மாநாட்டின் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒருபகுதியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் கொடுக்கக் கூடாது எனும் வேளை, இன்னொரு பகுதியினர் அதிகாரம் மிக்க பிராந்தியங்களுக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவருகிறார்கள். ஆகவே, இவ்விரு பகுதியினரினதும் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காவண்ணம் இரு பகுதியினரும் சந்திக்கக் கூடிய சமரச நிலைப்பாடு ஒன்றிற்கு வருவது அவசியம் என்று அவர் கூறினார். பின்னர் "இரண்டாவது சபையினை" அமைக்கும் ஆலோசனையினை ஜெயார் முன்மொழிய சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஏலவே அமைக்கப்பட்டிருந்த இரு குழுக்களும் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையினை அடுத்துவரும் அமர்வில் விவாதிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஜெயார் முன்மொழிந்த இரண்டாவது சபை யோசனையினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உடனடியாகவே நிராகரித்தது. "அதனை கருத்திக் கொள்ளக் கூடத் தேவையில்லை" என்று சிறிமாவோ கூறினார். இரண்டாவது சபைக்கான முன்மொழிவை ஆரம்பத்தில் அமிர்தலிங்கமும் அதிகம் விரும்பவில்லை. "இந்த ஆலோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை என்று நாம் நம்பவில்லை" என்று அமிர் கூறினார். ஆனால் லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் இந்த ஆலோசனையினை வரவேற்றிருந்ததுடன், நாட்டி வாழும் அனைத்து இனக் குழுமங்களினதும் கருத்துக்களும், விருப்பு வெறுப்புக்களும் இதற்குள் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன. ஆவணி மாதத்தின் முதலிரு வாரத்தில் இரண்டாவது சபை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஆவணி 17 ஆம் திகதி அரசியல் நடைமுறைபற்றிய குழுவின் அறிக்கையினை பிரேமதாச மாநாட்டில் முன்வைத்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கலந்துரையாடலினை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறப்போகும் அலகு மாவட்ட சபையா அல்லது மாகாணசபையா என்பதை மாநாட்டு உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரேமதாச முன்வைத்த அறிக்கையினை சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்கள் நான்கு நாட்களாக விவாதித்தனர். ஆவணி 21 ஆம் திகதி தான் வழங்கிய அறிக்கையில், மாவட்ட சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்பதை தான் நிராகரிப்பதாக அமிர்தலிங்கம் கூறியிருந்தார். உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பும், தமது சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளுதலுமே தமிழர்களின் தற்போதைய அதிமுக்கியமான பிரச்சினைகளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். அன்றைய நாளுக்கு ஒருநாள் முன்னதாகக் கூட கிளிநொச்சியில் இரு விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ள இராணுவம் இன்னுமொருவரை படுகாயப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முதல்வாரம் மன்னாரின் விவசாயக் கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த இராணுவம், அங்கிருந்த அப்பாவி மக்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களை அழித்து, அவர்களின் பெறுமதியான பொருட்களைக் களவாடிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் (இப்படுகொலைகள் குறித்த மேலதிக விபரங்கள் இனிவரும் அத்தியாயங்களில் விபரிக்கப்படும்). "தமிழர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும், தனித்தன்மையினையும் பாதுகாப்பதூடாகவே தமிழர்கள் தமது வாழ்தலுக்கான பாதுகாப்பையும், சொத்துக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்" என்று அமிர்தலிங்கம் அங்கு கூறினார். "தமிழ் மக்கள் தமது தாயகத்தில் அரசியல் அதிகாரத்தையும், உள்ளக சட்டம் ஒழுங்கு மீதான அதிகாரத்தையும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய பொறிமுறையினை உள்ளடக்கிய ஆலோசனையொன்றினை சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருக்கிறது. ஆகவே, இந்த பொறிமுறையினைக் கொண்டிராத எந்த அரசியல்த் தீர்வையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அவர் மேலும் கூறினார். மேலும் இரண்டாவது சபைக்கான முன்மொழிவையும் இரு காரணங்களை முன்வைத்து அமிர்தலிங்கம் எதிர்த்திருந்தார். முதலாவது காரணம், இரண்டாவது சபை எனும் கருதுகோள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அடிப்படை நிர்வாக அலகான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், இரண்டாவது சபை உருவாக்கப்படுவதன் நோக்கமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தினை உறுதிப்படுத்தி அதனை மேலும் பலப்படுத்தும் நோக்கத்திற்காகவே முன்வைக்கப்படுகிறது என்பதாகும். அமிர்தலிங்கம் கூறியதன்படி, இரண்டாவது சபையின் முன்மொழிவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதும், நடைமுறையில் இருக்கும் பொறிமுறையினை நீட்டிப்பதும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாவது சபை எனும் அமைப்பை வெறும் பிரச்சார அழகுப் பொருளாகவே அரசாங்கம் பாவிக்க விரும்பியது. சிங்கள மக்களுக்கு இருக்கும் முற்றான ஆட்சியதிகாரத்தினை பரவலாக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் மேலும் மத்திய அரசின் கைக்குள் இறுகச் செய்வதுதான் இதன் உண்மையான நோக்கம். மாவட்ட அதிகார சபைகளுக்கும் அப்பால் சென்று இலங்கையரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவே இரண்டாவது சபையினை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேசத்தை அரசு ஏமாற்ற முயலும் அதேவேளை சிங்களவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நாடு முழுவதற்குமான ஆட்சியதிகாரத்தை மேலும் மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் இதனைப் பாவிக்க நினைத்தது. தன்னால் அமைக்கப்பட்ட குழுக்கள் முன்வைத்த அறிக்கையினையும், இரண்டாவது சபைக்கான கருத்துக்கள் தொடர்பாகவும் ஆவணி 21, 29 மற்றும் புரட்டாதி 1, 3 ஆகிய நாட்களில் சர்வகட்சி மாநாட்டு கட்சிப் பிரதிநிதிகளுடன் ஜெயார் உரையாடினார். இறுதிநாளான புரட்டாதி 3 ஆம் திகதி அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டிய அலகு குறித்து சபை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது. மாவட்ட சபை மற்றும் மாகாண சபை நடைமுறையினை முற்றாக நிராகரித்த அமிர்தலிங்கம், அதிகாரம் மிக்க பிராந்திய அலகே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என்று கூறினார். "அதிகாரம் மிக்க பிராந்திய அலகு எனும் தமிழர்களின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்படுமிடத்து, தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட, தனியான தமிழர்களின் தாயகத்தினை விடுவிப்பதற்கான சாத்வீக வழிப் போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வேறு தெரிவுகள் இல்லை" என்று அவர் மேலும் அரசை எச்சரித்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த பிராந்திய அலகுக் கோரிக்கையினை குமார் பொன்னம்பலமும் தொண்டைமானும் ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு புரட்டாதி 21 ஆம் திகதி இடம்பெற்றது. தனது அறிக்கையினை சபையில் முன்வைத்த ஜெயார், புரட்டாதி 30 ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். எட்டுப் பக்கங்கள் அடங்கிய அவரது அறிக்கை கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் மாநாட்டில் எட்டப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. மேலும், நான்கு விடயங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவையாவன, 1. அடிமட்ட ஜனநாயக வழி அமைப்புக்களுக்கான அதிகாரம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. 2. நாடற்றவர்கள் எனும் நிலையினை ஒழிப்பது. 3. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முற்றாக அழிப்பது. 4. இரண்டாவது சபையினை உருவாக்குவது. ஒரு மாகாணத்திற்கு இருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, ஒருங்கிணைந்த மாவட்டங்களாக செயற்பட முடியும் என்றும், இவ்வாறான மாவட்ட சபைகளுக்கு இரண்டாவது சபையினூடாக சட்டவாக்கல் அதிகாரங்கள் வழங்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சர்வகட்சி மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்று இதனை அரச ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு குறித்து பேச்சுக்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக டெயிலி நியூஸ் எக்காளப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி அமிர்தலிங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட முடியுமென்றாலும் கூட, அவை தற்போதும் வெறும் அடிப்படை அலகுகள்தான் என்று அவர் கூறினார். மாவட்டங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஒருங்கிணைந்த மாவட்டங்களின் அலகுகளுக்கு தனியான அதிகாரம் ஏதும் பகிரப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துவிடவும் அவர் விரும்பவில்லை. இவற்றினை முற்றாக நிராகரிக்காது இருப்பதன் மூலம் தொடர்ச்சியான பேரம்பேசலுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கலாம் என்று அவர் எண்ணினார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த தமிழ்பேசும் தனியான அதிகாரம் மிக்க அலகே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்று அவர் ஆணித்தரமாக விவாதித்தார். இதன்பின்னர் மாநாட்டினை கார்த்திகை 15 ஆம் திகதிவரை ஜெயார் ஒத்திவைத்தார். ஆனால், ஜெயார் எதிர்பார்த்ததற்கு மாறாக புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வன்முறை தலை விரித்தாடியது. குறிப்பாக கிழக்கிற்கும் வன்முறைகள் பரவத் தொடங்கியிருந்தன.
  3. https://www.facebook.com/reel/894766818933857 தரமான சம்பவங்கள் 😂
  4. பார்த்தீரா ஐயா பார்த்தீரா ........ நடிப்பு: தங்கவேலு & சரோஜா .......படம்: பாக்யலக்சுமி ......! 😍
  5. ரஜீவ் காந்தியையும், ரொமேஷ் பண்டாரியையும் இலகுவாகக் கையாள நினைத்த ஜெயவர்த்தன அரசு இந்திரா காந்தியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளான கார்த்திகை 3 ஆம் திகதியை இலங்கையரசு பொது விடுமுறை நாளாக அறிவித்தது. இரங்கல்ப் புத்தகத்தில் கையொப்பம் இடுவதற்காக இந்திய தூதுவராலயம் அமைந்திருந்த பகுதியில் சிங்களவர்கள் உட்பட பல பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தமது இறுதி மரியாதையினைச் செலுத்திச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இந்திரா காந்தியின் இறுதி வணக்க நாளை ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒன்றென்று குண்டுகளை வெடிக்க வைத்து போராளிகள் தமது மரியாதையினைச் செலுத்தினர். அந்த நாள் முழுதும் யாழ்க்குடாநாடு குண்டுச் சத்தங்களால் அதிர்ந்துகொண்டிருந்தது. இந்திரா காந்தியின் இறுதிக் கிரியைகளில் ஜெயவர்த்தனவும் கலந்துகொண்டார். அங்கிருந்தவேளையில் ரஜீவுடனும் சிறிய சந்திப்பொன்றை நிகழ்த்தினார். ரஜீவுடன் பேசும்போது, " இந்தியா தமிழர்களுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவும், அதனாலேயே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கோரிக்கைகளை வழங்குவதற்காக தனது அரசாங்கத்தை இந்தியா அழுத்தம் கொடுத்துவருவதாகவும் சிங்கள மக்கள் நம்புகிறார்கள்" என்று கூறினார். மேலும், இந்தியாவினால் வழங்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உதவிகளைத் தொடர்ந்தும் பயன்படுத்தும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக புதிய வழிகளில் செயற்படுவதும் அவசியமாகும் என்றும் ரஜீவிடம் நாசுக்காகத் தெரிவித்தார் ஜெயார். ஜெயாரின் வேண்டுகோள்களை அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்த ரஜீவ் அதற்குச் சாதகமான முறையில் செயற்படச் சம்மதம் தெரிவித்தார். ஜெயாருக்குப் பதிலளித்த ரஜீவ், ஜெயார் கேட்டுக்கொண்டத்ற்கேற்ப இலங்கை தொடர்பான இந்தியாவின் மத்தியஸ்த்தத்தில் புதிய வழிமுறையினைப் பின்பற்றப்போவதாகத் தெரிவித்தார். இதுவரை தமிழருக்குச் சார்பாக செயற்பட்டுவந்த இந்தியாவின் நிலைப்பாடு இனிமேல் பக்கச்சார்பின்றி இருக்கும் என்று கூறிய ரஜீவ் ஜெயவர்த்தன தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் கண்டறிவது அவசியம் என்றும் கூறினார். மேலும், தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யாத எந்தத் தீர்வும் நாட்டினை மேலும் மேலும் பிரச்சினைக்குள் இட்டுச் செல்வதுடன், ஈற்றில் நாடு பிளவுபடுவதற்கும் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, இந்தியா இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எப்போதும் காத்து நிற்கும் என்றும் உறுதியளித்தார். இந்திரா காந்தியின் இறுதிநிகழ்வில் பங்குபற்றிவிட்டு கொழும்பு திரும்பிய ஜெயார் பத்திரிக்கையாளரைச் சந்தித்தார். அங்கு பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாய் அமைந்ததாகக் கூறினார்."இளைய பிரதமர் புதிய ஆரம்பம் ஒன்றினை ஏற்படுத்த விரும்புகிறார்" என்று கூறியதுடன் "பிரிவினைக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று உறுதியளித்தார்" என்றும் கூறினார். பின்னர் அமைச்சரவையில் பேசும்போது, ரஜீவ் தொடர்பான தனது கணிப்புப் பற்றி அமைச்சர்களுக்கு விளங்கப்படுத்தினார். "ரஜீவ் காந்தியுடன் மேம்பட்ட தொடர்பாடல்களை நாம் மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அப்போது கொழும்பில் நிலவிய கணிப்பீடு என்னவெனில், "புதிய பிரதமர் ரஜீவும், அவரது ஆலோசகர் ரொமேஷ் பண்டாரியும் அனுபவம் இல்லாதவர்கள், ஆகவே இவர்கள் இருவரையும் எமக்கேற்றவழியில் கையாள்வது மிக இலகுவானது" என்பதுதான். இந்திராவின் மறைவிற்குப் பின்னர், சர்வகட்சி மாநாட்டினை சூழ்நிலைக்கேற்ப நடத்திச் செல்லவே ஜெயார் நினைத்தார். கார்த்திகை 14 அன்று கூடவிருந்த மாநாட்டினை மார்கழி 14 இற்கு ஒத்திவைத்த அவர், அரசாளும் பொறிமுறை குறித்த அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாநாடு பிற்போடப்படுவதாக அறிவித்தார். மார்கழி 14 இல் அறிக்கையினைச் சமர்ப்பித்த ஜெயார், மாநாட்டினை மீண்டும் மார்கழி 21 இற்கு ஒத்திவைத்ததுடன் அன்றே உறுப்பினர்கள் அறிக்கை குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்றும் கூறினார். அரசாளும் பொறிமுறைக்கான உத்தேச சட்டம் ஐந்து நிலை நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அவையாவன, 1. கிராமோதய மண்டலங்கள் : தன்னார்வ மக்கள் அமைப்புக்களில் இருந்து 4500 கிராமோதய மண்டலங்கள் கிராமங்களில் உருவாக்கப்படும். 2. பிரதேச சபைகள்: இவை தற்போதிருக்கும் உதவி அரசாங்க பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்படும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் 250 சபைகள் பிரதானமாக உள்ளூராட்சி விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தும். 3. மாவட்ட சபைகள் : இவை அபிவிருத்திச் சபைகளைப்போன்று செயற்படும். மாவட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் இவற்றின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படும். 25 மாவட்டங்களுக்கும் ஒவ்வொன்றாக உருவாக்கப்படும் இச்சபைகளுக்கான தலைவர்களும், உதவித் தலைவர்களும் அம்மாவட்ட வாக்களர்களாலும், அச்சபையின் உறுப்பினர்களிடையிலான வாக்களிப்புகள் ஊடாகவும் தெரிவுசெய்யப்படுவார்கள். அபிவிருத்திச் சபைகளைக் காட்டில் சற்று அதிகமான, பரந்துபட்ட‌ அதிகாரங்களையும் மாவட்ட சபைகள் கொண்டிருக்கும். 4. மாகாண சபைகள் : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக மாகாண சபைகள் அமையும். மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு அதே மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் இன்னொரு மாவட்ட சபையுடன் அம்மாவட்டங்களில் நடத்தப்படும் வாக்களிப்பின் ஊடாக‌ இணைந்துகொள்ளமுடியும். மாவட்ட சபைகளால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை அந்தந்த மாகாணசபைகள் பயன்படுத்தும். கலைக்கப்படும் மாவட்ட சபைகளில் இருக்கும் சபை உறுப்பினர்கள் மாகாணசபையில் இணைந்துகொள்ள முடியும். 5. மாகாண மற்றும் மாவட்ட அமைச்சர்கள் : பாராளுமன்றத்திற்கான அமைச்சர்களையோ அல்லது இராஜாங்க அமைச்சர்களையோ மாகாண சபை அமைச்சர்களாகவும், மாவட்ட சபை அமைச்சர்களாகவும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பார். ஒரு குறிப்பிட்ட மாகாண சபையின் ஆதரவினைக் கொண்டிருக்கும் ஒருவரை அந்த மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதி கொண்டிருப்பார். மாவட்டங்களின் சம்மேளனம் சுமார் 75 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டங்களின் சம்மேளனம் எனும் அமைப்பு உருவாக்கப்படும். இவர்களில் ஒவ்வொரு மாவட்ட சபையிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் தலைவரும், உப தலைவருமாக 50 பேர் இருப்பர். மேலும் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இருவர் என்கிற அடிப்படையில் 18 பேரும் (மாவட்ட சபைகளில் சனத்தொகை விகிதாசாரம் சரியான முறையில் பாவிக்கப்படாதுவிடத்து) அம்மாகாணங்களில் இருக்கும் சனத்தொகை அடர்த்திக்கேற்ப இச்சம்மேளனத்தில் இடம்பெறுவர். மீதி 7 பேரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். இந்தச் சம்மேளனத்தின் ஒரே பணி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது மட்டும்தான். பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்படும் எதனையும் நிராகரிக்கும் அதிகாரம் இச்சம்மேளனத்திற்கு இருக்காது. ஆனால், பாராளுமன்றத்தால் சட்டமாக உருவாக்கபடுவனவற்றை அமுல்ப்படுத்தும் அதிகாரமும், அடிப்படை மனிதவுரிமைகள், மொழியுரிமை, பிராந்திய உரிமைகள், தேசிய ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் பாராளுமன்றத்தில் கருத்துக்கூறும் அதிகாரமும் இச்சம்மேளனத்திற்கு வழங்கப்படும். மேலும் மாவட்டங்களுக்கிடையிலான பிணக்குகள், மாகாணங்களுக்கிடையிலான பிணக்குகள், தேசிய ஒற்றுமை, சமூக ‍ பொருளாதார விடயங்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்களை இச்சமேளனத்தினால் உருவாக்க முடியும். இச்சம்மேளனத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அமைச்சர்கள் தெரிவுசெய்யப்படவும் இயலும்.
  6. ஜேர்மனியில் இன்று அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடக்கம் பல்வேறு தொழில் இயக்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாடளாவிய ரீதியில் வீதி முடக்கங்களை செய்ய உள்ளார்கள். எனவே ஒட்டு மொத்த ஜேர்மனியும் இன்று (8.01.2024) முடக்கப்படலாம்.
  7. சில வேளைகளில் வேலை செய்யாது. அந்த வகையில்.. Other Media (you can see it at the right bottom corner of text box where you type your message to post)---> Insert image from URL ---> copy and paste image link address---> click insert into post இப்படி செய்தால் வேலை செய்யும். நான் நினைக்கிறேன் சில ஊடகங்களில் இருந்து நேரடியாக வெட்டி ஒட்ட அனுமதிக்கினம் இல்லை.
  8. இப்போது காணொளி தோன்றுகின்றது. நன்றி! யூரியூப்பில் இணைப்பு முகவரி எடுக்கும்போது முன்பு நகல் செய்தேன். இப்போது வட்சப் பகிர்வு இணைப்பை சொடுக்கி அதை இங்கு இணைக்கும் போது காணொளி தோன்றுகின்றது. முதலாவது முறையில் முகவரி சுருக்கப்பட்டு உள்ளதோ தெரியாது.
  9. இந்திராவின் வேண்டுகோள் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயவர்த்தன இந்தியாவுக்கும் சென்றார். அங்கு இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். ஜெயாருடன் பேசுகையில், இலங்கையில் இராணுவ ரீதியில் தலையிடும் நோக்கமோ, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கமோ இந்தியாவுக்குச் சற்றேனும் கிடையாது என்று இந்திரா கூறினார். தனது நிலைப்பாட்டினை முன்னணியினரிடம் தான் தெளிவாகக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார் அதன்பின்னர் பேசிய இந்திரா, சர்வக்ட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சிகொண்ட பிராந்தியங்களே அமையும் என்று இந்தியா எண்ணுவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த ஜெயார் சுயாட்சி கொண்ட பிராந்தியங்கள் எனும் தீர்வினை வழங்க எதிர்க்கட்சித் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க தடைபோட்டுவருவதாகக் கூறினார். அதன் பின்னர் பேசிய இந்திரா, அப்படியானால் மாகாணசபை முறையினை அமுல்ப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், சிங்கள மக்கள் தற்போது இருக்கும் மனோநிலையில் மாகாணசபை முறையினையும் தன்னால் ஏற்படுத்த முடியாது என்று மறுத்தார். "எமக்கான ஆதரவுத் தளத்தினை நாம் இழந்துவிடுவோம், நாம் எல்லோரையும் இழந்துவிடுவோம்" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள் குறித்த விடயங்களை இந்திராவிடம் காண்பித்த ஜெயவர்த்தன‌ தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறுவதை தனது அரசாங்கம் விரும்புகிறது என்று இந்திரா கூறினார். இச்சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த ஜெயார், "நான்கூட விரைவான தீர்வினையே விரும்புகிறேன். ஆனால் இலங்கையில் வன்முறையில் ஈடுபட்டு வருவோர் தீர்விற்கான முயற்சிகளுக்குத் தடங்கலாக இருக்கின்றனர். பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து,பயிற்சி முகாம்களை அமைத்து, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சிங்கள மக்கள் கோபம் கொண்டிருக்கின்றனர்" என்று பதிலளித்தார். தமிழ்நாட்டில் போராளிகளுக்கான பயிற்சிமுகாம்கள் இருக்கின்றன எனும் ஜெயாரின் கூற்றினை இந்திரா நிராகரித்தார். ஆனால், சுமார் முப்பதினாயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களைப் பராமரிக்கவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "உங்களுக்கு வேண்டுமென்றால் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கோ இம்முகாம்கள் குறித்து அனைத்து விடயங்களும் தெரியும்" என்று கூறியதுடன் தன்னுடன் கொண்டுவந்திருந்த, முகாம்கள் அமைந்திருந்த இடங்களின் வரைபடங்கள், அவற்றின் பெயர்கள், ஒவ்வொரு போராளி அமைப்பிற்கும் பயிற்சி வழங்கப்பட்ட முகாம்களின் விபரங்கள், ஒவ்வொரு முகாமிலும் பயிற்றப்பட்டு வந்த போராளிகளின் எண்ணிக்கை, பயிற்சி முகாம்களில் பயிற்றுவாளர்களாகச் செயற்பட்டு வந்த இந்திய இராணுவ அதிகாரிகளின் பெயர்கள், தரங்கள் என்று அனைத்து விடயங்களையும் ஆவண வடிவில் இந்திராவிடம் கையளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த பயிற்சிமுகாம்கள் குறித்த விபரங்களைக் கண்ணுற்றபோது ஒருகணம் அதிர்ந்துபோன இந்திரா ஒருவாறு சமாளித்துக்கொண்டே அவ்விடயங்கள் குறித்து விசாரிப்பதாகப் பதிலளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த விடயங்கள் சரியானவைதான் என்பது இந்திராவுக்குத் தெரியும். அவரது ஆச்சரியமெல்லாம் இவற்றினை ஜெயாருக்கு வழங்கியது யாரென்பதுதான். போராளி அமைப்புகளுக்குள் ஊடுருவிய லலித்தும், விலைபோன மலையாளி அதிகாரியும் தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றதும் லலித் அதுலத் முதலி செய்த முக்கியமான விடயங்களில் ஒன்று தமிழ்ப் போராளி அமைப்புகளுக்குள்ளும், இந்திய உளவுத்துறையான ரோவிற்குள்ளும் தனக்கான உளவாளிகளை உட்புகுத்திக்கொண்டதுதான். சென்னையில் செயற்பட்டுவந்த ரோவின் அலுவலகத்திற்கு மலையாளி அதிகாரியான உன்னிகிருஷ்ணன் பொறுப்பாகவிருந்தார். சி.ஐ.ஏ இன் உதவியுடன் லலித் அதுலத் முதலி உன்னிகிருஷ்ணனை விலைக்கு வாங்கியிருந்தார். இவரே தமிழ்நாட்டில் இயங்கிவந்த போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களின் அமைவிடங்கள் , வரைபடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இலங்கையின் பொலீஸ் புலநாய்வுத்துறைக்கு வழங்கியிருந்தார். இவற்றினை அடிப்படையாக வைத்தே உதவிப் பொலீஸ் அத்தியட்சகரான சிறில் ஹேரத் ஜெயவர்த்தனவுக்கான ஆவணங்களை தொகுத்து வழங்கினார். இவரது அறிக்கையில் போராளிகள் பயிற்சிகளின்போது பாவித்த ஆயுதங்களின் வகைகள் முதல் பல விடயங்கள் குறிப்பிட‌ப்பட்டிருந்தன. இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜெயாருடன் அதுலத் முதலியும் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இவர்கள் இருவரும் கடுமையான தொனியைப் பாவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் போது தமிழர்களின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று உறுதியாகத் தெரிவித்தனர். அங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று பிடிவாதமாக நின்றனர். மேலும், அரசியல் ரீதியிலான‌ தீர்வொன்றிற்கு இராணுவ ரீதியிலான வெற்றி தவிர்க்கமுடியாத அங்கமாகும் என்றும் வாதாடினர். "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்தி அழித்துவிடுவதூடாக அரசியல்த் தீர்விற்கான சந்தர்ப்பத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்" என்று லலித் அதுலத் முதலி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஆதரித்து வந்த இந்துப் பத்திரிக்கை, இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் 30,000 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் கோரி வந்துள்ள நிலையில் இதனை இலங்கையின் உள்வீட்டு விவகாரம் என்று கருதமுடியாது என்று வாதாடியது. மேலும், இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினையல்ல என்றும் அது கூறியது. "தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துவருவதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றே பார்க்கபடுதல் அவசியம்" என்று அது மேலும் கூறியது.
  10. Channel 14's Israeli news anchor Lital Shemesh
  11. ஒரு பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா......அதுவும் யாழில் "குமாரசாமி" என்னும் பெயர் எவ்வளவு வீரத் தழும்புகள், நெஞ்சில் கருத்து வடுக்கள் எல்லாம் கொண்டது என உலகறியும்.....அப்படியான ஒன்றை எதுக்காக, ஏன் மாற்றவேண்டும்......கொஞ்சம் சிந்தித்து முடிவெடுக்கவும்......! முன்பு தமிழ்சிறியும் மாற்ற வெளிக்கிட்டு தடுக்கி விழுந்த இடத்தில் இப்போ நீங்கள்....வேண்டாம் கோபால்......!
  12. தம்பி வெளிநாட்டில 65 முடிந்தா தான் பென்சனைப் பற்றி வாயே துறக்கலாம். அக்கா இனி டாக்ரர் மாரை எப்படியாம் கூப்பிடுவது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.