Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3061Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46791Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்5Points1487Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/15/24 in Posts
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
6 pointsஏமாற்றம் --------------- எங்கே போனாலும் அங்கே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள், அதனால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே எல்லோரும் வளர்க்கப்பட்டிருக்கின்றோம். கடைக்காரர்கள் ஏமாற்றுவார்கள், ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள், வேலைக்கு வருபவர்கள் ஏமாற்றுவார்கள், இவ்வளவும் ஏன், நண்பர்களே ஒரு நாள் ஏமாற்றுவார்கள் என்று அவரவர்களின் பல சொந்த அனுபவங்களும், கதைகளும் எங்கள் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கும். கடவுளே எங்களை ஏமாற்றி விடுவார் என்று சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் கடவுளை ஏமாற்ற முயன்ற கதைகளை இதுவரை எவரும் வெளியில் சொல்லவில்லை. மொழி தெரியாமல் ஏமாற்றப்படுவது மிகச் சாதாரணமாக உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு. சிங்கள மொழி தெரியாததால் கொழும்பில் ஏமாற்றப்பட்டவர்கள் எங்களில் பலர். பல வருடங்களின் முன் ஒரு தடவை நண்பன் ஒருவன் இடுப்பு பட்டி ஒன்றை அங்கு சந்தையில் வாங்கினான். பட்டியில் ஓட்டைகள் போட்டிருக்கப்பட்டிருக்கவில்லை. ஐந்து ஓட்டைகள் வேண்டும் என்றான். ஐந்து ஓட்டைகளை போட்டு விட்டு மேலதிகமாக ஐந்நூறு ரூபாய்கள் கொடு என்று அவர்கள் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். முன்னமே சொன்னோமே, சிங்களத்தில், என்றார்களாம். பல வருடங்களின் முன் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னையில் இருக்கும் வேறோர் இடத்திற்கு, அண்ணா நகருக்கு, போக வேண்டி இருந்தது. என்னை ஏற்றிக் கொண்டு போக இருந்தவர் கடைசி நேரத்தில் வர முடியாத நிலை. ஒரு பிரச்சனையும் இல்லை, நானே சமாளித்துக் கொள்கின்றேன் என்று அங்கு இருக்கும் உறவினர்களுக்கு சொன்னேன். அவர்கள் நான் போக வேண்டிய இடத்திற்கு கார் வாடகை எவ்வளவு, எங்கே கார் எடுக்க வேண்டும், எங்கே கார் எடுக்கக் கூடாது என்று ஒரு நாலு பக்கங்கள் வரும் அளவிற்கு தகவல்கள் கொடுத்திருந்தனர். மிக முக்கியமாக, நான் வெளிநாட்டிலிருந்து அங்கு வந்திருப்பதாக சொல்லக் கூடாது என்றனர். இந்தியப் பணம் இங்கிருந்து கிளம்பும் போதே என்னிடம் கொடுக்கப்பட்டும் விட்டது. அப்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து அண்ணா நகருக்கு வாடகைக் கார் கட்டணம் அறுநூறு ரூபாய்கள். விமான நிலையத்தில் இறங்கி ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். சொல்லப்பட்டது போலவே பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கார்கள் அங்கு நின்றன. பதிவு செய்யும் இடத்திற்கு போய், அண்ணா நகருக்கு போக வேண்டும் என்றேன். ஒரு காரைக் காட்டி அதில் போங்கள் என்றனர். பற்றுச்சீட்டு கொடுங்கள் என்றேன். பற்றுச்சீட்டு கட்டாயமாக கேட்டு வாங்க வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. பற்றுச் சீட்டு வேணும் என்றால், உள்ளே போய் அங்கிருக்கும் ஒரு இடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். காத்துக்கொண்டே இருந்தேன். எவரும் வரவில்லை. பின்னர் இது வேலைக்கு ஆகாது என்று வெளியில் வந்ததும் பதியாத கார்கள் ஓடுபவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். பல வித பேரங்கள். கடைசியாக ஒருவர் அறுநூறு ரூபாய்க்கு வருவதாக சொன்னார். ஃபோனில் படம் எடுத்தேன், கூப்பிட்டு உறவினர்களுக்கு சொன்னேன். அவர்களும் அந்த சாரதியுடன் கதைத்தனர். இலங்கையிலிருந்து அங்கு வருவதாக சாரதிக்கு சொன்னேன். அவர் கோயம்புத்தூர் சொந்த ஊர் என்றார். காதலித்து, இரு வீட்டார்களையும் எதிர்த்து மணம் முடித்ததாகவும், அப்படியே ஓடி வந்து சென்னையில் தங்கி விட்டதாகவும் சொன்னார். இந்தக் கார் அவருடைய சொந்தக் கார், வங்கிக் கடனில் வாங்கியது என்றார். சென்னைக்கு வந்து விடுங்கள் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு கார் வாங்கி விடலாம் என்றார். இலங்கையில் படும் கஷ்டம் எதுவும் இங்கு படத் தேவையில்லை என்றார். கலங்கின கண்களை மூடி, கைகளால் பொத்தினேன். ஏன் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்த்தார்கள் என்று கேட்டேன். அவருடைய ஒரு கால் செயற்கை என்றார். அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை. மிக நன்றாக படிக்கிறாராம் அவர். எப்படியும் ஒரு கலெக்டர் ஆக்கி விடுவோம் என்றார். முத்திரைகள் சேர்க்கின்றார் என்றார். நானும் சிறுவயதில் முத்திரைகள் சேர்த்திருக்கின்றேன். அப்படியே வெளிநாட்டு நாணயங்களும் சேர்க்கின்றாராம். இலங்கை முத்திரைகள், நாணயங்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருக்கின்றது என்றார். இறங்கிய பின் அவரின் காலைக் கவனித்தேன். பேசியது போலவே அறுநூறு ரூபாய்கள் கொடுத்தேன். அப்படியே ஒரு இருபது டாலர்களும், அப்பொழுது ஒரு டாலரின் பெறுமதி அறுபது ரூபாய்கள், கொடுத்தேன். இது என்ன சார் என்று நின்றார். இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.6 points
-
முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்"
முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்" உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும் ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், முதியோர்கள் தனிமையை உணர தொடங்குவதையும், தாம் தனித்து விடப்பட்டு விடுவார்கள் என ஏங்க தொடங்குவதையும் காண்கிறோம். இது அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியுமாகும். இந்த நிலையில் ஐந்து புலன்களில் முக்கியமான காது கேட்டலையும் இழந்தால், அவரின் நிலை மேலும் விரக்தியைத் தான் ஏற்படுத்தும். ஆகவே இன்று நாம் "காதும் கேட்டாலும்" பற்றி சிறுது அலசுவோம். காது வழியாக நாம் ஒலியை கேட்பதால் தான், எங்களால் பேச முடிகிறது. குழந்தைகள் முதலில் ஒலியை உணர்கின்றன. அதனால்த் தான் குழந்தைகள் பேசவே ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. எனவே, மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது எனலாம். தூக்கத்தின்போது 1. கண் (eye), 2. காது (ear), 3. மூக்கு (nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) ஆகிய ஐம்பொறிகளில் நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது இந்த காது தான் ! அதேபோல், விழிக்கும் பொழுது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் இதுவே தான் ! எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்று நாம் கூறலாம். உதாரணமாக, காது கேட்காமல் வாழ்வதும் [செவிடனாக] அல்லது குறிப்பிடத்தக்க அளவு, கேட்கும் சக்தியை அல்லது திறனை இழந்து வாழ்வதும் கட்டாயம், ஒரு மனிதனில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. கேட்கும் உணர்வை இழப்பது அவனை தனிமைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு மனச்சோர்வை அவனில் ஏற்படுத்தலாம். அது மட்டும் அல்ல சில ஆய்வுகள் இது பாரதூரமான நோய்களுக்கும், உதாரணமாக மனச் சோர்வினால் ஏற்படும் ஒரு வித மறதிநோயை [Dementia / டிமென்ஷியா] ஏற்படுத்தலாம் என்றும் உறுதி படுத்துகிறது. ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும் என கூறலாம். இது ஒரு வித சக்தி ஆகும். இது ஒரு ஊடகத்தினூடாக பயணிக்கும் பொழுது, ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை [அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் / atoms and molecules] அதிர்வுறச் செய்கிறது. அதன் மூலம் ஒலி பரவுகின்றது. உதாரணமாக, மத்தளத்தை தட்டியவுடன், மத்தளத்தின் தோல் அதிர்வுறுகின்றது. அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் [வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம்] உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன. அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும். ஆனால் இது வெற்றிடத்தின் [vacuum] ஊடாக செல்லாது. அதிர்வினால் ஒலி அலைகள் ஏற்படுகின்றன. எல்லா ஒலி அலைகளும் மனிதனால் கேட்க முடியாது. உதாரணமாக, மனிதனின் கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 20 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். 20 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது அக ஒலி அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளை விட அதிகமாக இருந்தால் அது மிகை ஒலி அல்லது மீயொலி (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. மனிதனை விட, ஏனைய விலங்குகளின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும். காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது கடவுளால் அல்லது பரிணாம வளர்ச்சியால் அல்லது படிவளர்ச்சியால் வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியியல் பகுதி என்று கூறலாம். இதனால் நாம் எல்லாவிதமான ஒலிகளையும் கேட்டு இன்று மகிழ்கிறோம். அது மட்டும் அல்ல, ஒலி பிறந்ததால் தான் எழுத்தும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடன் ஒருவர் கலந்து பேசவும், தொடர்பு கொள்ளவும் இதுவே வழிசமைத்தது எனலாம். மனிதக் காது மூன்று பாகங்களால் ஆனதாகும். அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும். உதாரணமாக, காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது ஆகும். நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிப்பது ஆகும். அங்கு மூன்று சிறிய எலும்புகள் இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன. உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கிறது. அதில் சிறு சிறு நரம்புகள் ஒன்றாக இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடைகின்றன. ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த திரை மிருதங்கம் போல் மெலிதான தோலாகும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு மூளையைச் சென்றடையும். மூளை ஒரு அதிநவீன கணினி போல், இதை ஒலியின் உணர்வாக எமக்கு மாற்றி தருகிறது. அதாவது இது மின்சார ஒலிபெருக்கி [Microphone / மைக்ரோஃபோன்] போல் தொழிற்படுகிறது எனலாம். காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். உதாரணமாக காது கால்வாயை [ear canal] துப்பரவாக வைத்திருக்க வேண்டும். மேலும் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் [காது, மூக்கு, தொண்டை / வாய்] ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உதாரணமாக செவித்திரைக்கும் (Tympanic Membrane) உட்செவிக்கும் (Inner Ear) இடையில் உள்ள பகுதியான நடுச் செவியில் (Middle Ear) தான் நடுச்செவி குழாய் [Eustachian Tube or middle ear tube] உள்ளது. இது மூக்குக்கும் தொண்டைக்கும் நீண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் தடை அல்லது அடைப்பு, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கக் கூடியது. மனிதர்கள் மூப்படைய, செவிப்பறையும் ['eardrum' காது நடுச் சுவர்] தடிப்பாகவும் மற்றும் அதிர்வது கடினமாகவும் மாறுகிறது. நடுச்செவியின் உள்ளே உள்ள எலும்புகளும் ஒன்றுக் கொன்று இணைந்து [get fused] தன்பாட்டில் அதிராமல் [vibrate] விடலாம். இதனால், உட்செவியின் நரம்பு தொகுதி [inner ear nervous system] சரியாக தொழிற் படாமல் போகலாம். அது மட்டும் அல்ல வேறு செயலிழப்புகளும் [malfunction] ஏற்படலாம். காது கேளாமைக்கு ஒரு மாற்று வழியாக கேள் உதவிக் கருவிகள் [hearing devices / செவிப்புலன் உதவி சாதனம்] இன்று பயன் படுத்தப் படுகின்றன. இது மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். கேட்கும் திறனை மேம்படுத்துவதற்காக இக்கருவி மூன்று கட்டங்களினூடாக அல்லது பகுதிகளினூடாக ஒலியினை பெருக்குகிறது. காது கேள் கருவியில் ஒரு சிறிய ஒலிவாங்கி [microphone ] ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. இந்த சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது [amplifier] அதிகரிக்கச்செய்கிறது. அதன் பின் ஒலிபெருக்கி [speaker] ஒன்று காதுக்குள் பெருக்கப்பட்ட ஒலியை [amplified sound] ஏற்படுத்துகிறது. இவ்வாறு காது குறைபாட்டை செவிப்புலன் உதவி சாதனம் நிவர்த்தி செய்கிறது. [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]4 points
-
ஆபிரகாம் லிங்கன் முதல் டிரம்ப் வரை.. துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் பட்டியல்
3 pointsகதைக்க விட்டால் ஜனநாயகம் என மூச்சுக்கு ஒரு தடவை சொல்வார்கள்.போதாதற்கு ரஸ்யா, சீனா, ஈரான், வடகோரியா ஆகிய நாட்டு அரசுகளை, தலைவர்களை கிண்டல், கேலி செய்வது. இவ்வளவு தலைவர்கள் ஏதாவது நாட்டில் சுடப்பட்டார்கள் என நான் நினைக்கவில்லை.3 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
2 points- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இரத்த பொட்டு புகழ் அமிரும் மங்கையர்கரசியும் இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை ஆயுத போருக்கு அடித்தளம் இட்டவர்கள் . குறிப்பாக தமிழர் விடுதலை கூட்டமைப்பினர். ஒரு பா உறுப்பினரின் மகள் உயர்தர பரீட்சையில் குண்டடித்தவர் 😆தற்போது டாக்டராக உள்ளார்.2 points- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
யூரோ கிண்ணத்தை நான்காவது தடவையாக ஸ்பெய்ன் சுவீகரித்தது 15 JUL, 2024 | 12:57 PM (நெவில் அன்தனி) பேர்லின் ஒலிம்பியா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஸ்பெய்ன் நான்காவது தடவையாக ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய வருடங்களில் ஸ்பெய்ன் சம்பியனாகியிருந்தது. இறுதிப் போட்டியில் போடப்பட்ட 3 கோல்களில் கடைசி இரண்டு கோல்களை மாற்று வீரர்கள் போட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வருட யூரோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழு போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்பெய்ன் தோல்வி அடையாத அணியாக சம்பியன் ஆனது. மேலும் சகல போட்டிகளிலும் முழு ஆட்டநேரத்தின்போது ஸ்பெய்ன் வெற்றியீட்டியது ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் ஒரு சாதனையாகும். பீபா உலகக் கிண்ணத்தில் சம்பியனான ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, 2018இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா ஆகியவற்றை வெற்றிகொண்டே ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை ஸ்பெய்ன் சுவீகரித்தது. குழுநிலையில் குரோஏஷியாவை 3 - 0 எனவும், இத்தாலியை 1 - 0 எனவும், அல்பேனியாவை 1 - 0 எனவும், 16 அணிகளுக்கான இரண்டாம் சுற்றில் ஜோர்ஜியாவை 4 - 1 எனவும் கால் இறுதியில் ஜேர்மனியை 2 - 1 எனவும் அரை இறுதியில் பிரான்ஸை 2 - 1 எனவும் கடைசியில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 எனவும் ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் இறுக்கமாக அமைந்தது. போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் வேகம், விவேகம், சிறந்த புரிந்துணர்வு ஆகியவற்றுடன் விளையாடியபோதிலும் முதல் 45 நிமிடங்களில் எந்த அணியும் கோல் போடவில்லை. எனினும் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து 2ஆவது நிமிடத்தில் (போட்டியில் 47ஆவது நிமிடம்) 17 வயதான இளம் வீரர் லெமின் யமால் பரிமாறிய பந்தை நிக்கோ வில்லியம்ஸ் கோலாக்கி ஸ்பெய்னை 1 - 0 என முன்னிலையில் இட்டார். வில்லியம் தனது 22ஆவது பிறந்த தினத்தை கடந்த வெள்ளிக்கிழமையும் லெமின் யமால் தனது 17ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமையும் கொண்டாடினர். அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் கழித்து ஸ்பெய்ன் வீரர் ஒல்மோ இரண்டாவது கோலைப் போட எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது. அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தது. போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாக்கா, பெலிங்ஹாம் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்தை இறுதியாகப் பெற்றுக்கொண்ட கோல் (Cole) பாமர் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார். கோல் பாமர் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அடுத்த நிமிடத்திலேயே கோல் போட்டமை விசேட அம்சமாகும். தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் மற்றொரு மாற்றுவீரரான மிக்கேல் ஒயாஸ்பாபல் மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை 2 - 1 என முன்னிலையில் இட்டார். அதுவே ஸ்பெய்னின் வெற்றிகோலாக அமைந்தது. இந்த சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட லெமின் யமால், டெனி ஒல்மோ ஆகிய இருவரும் தங்கப் பந்து விருதை பகிர்ந்துகொண்டனர். ஐரோப்பியன் சம்பியன்ஷிப்பில் மிக குறைந்த வயதில் விளையாடி தங்கப் பந்தை வென்ற வீரர் என்ற பெருமையை லெமின் யமால் பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/1884962 points- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நம்பிடாதங்கையா நம்பிடாதீங்க….. சிறீலங்கா அரசியல்வாதிகளின் புழுகுகளை…. இதுவரை இப்படி ஒன்று விமானநிலையத்தில் இல்லவே இல்லை….2 points- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
2 points- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
2 points- விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே? ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂 நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன்1 point- யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்
1 pointஜேர்மனியில் தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் வாழ்கின்றார்கள். அதில் தமிழ்நாட்டு தமிழர்களும் அடங்கும். இப்போது ஜேர்மனியில் உள்ள இந்து கோவில்களிலும் சரி,தமிழ் பாடசாலைகளிலும் சரி இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.. இவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பண்பாடு பிடித்திருக்கின்றது. அதிலும் ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேச்சு வழக்குகளை மெச்சுகின்றனர். சுத்த தமிழுக்காகவே தமிழ்பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர். புலம்பெயர்ந்து வந்தும் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபிக்கின்றனர்.1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 point🤣...... வீட்டில் இரு பிள்ளைகளும் சிறுவர்களாக இருந்த நாட்களில் மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டே இரவுக்கு என்ன சாப்பாடு என்று தாயைக் கேட்பார்கள். இனித்தான் யோசிக்க வேண்டும் என்று அவரும் சொல்லுவார். இப்ப என்னுடைய நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான், 'இனித்தான் யோசிக்க வேண்டும்' .........🤣. நான் தான் ஆரம்பிக்கின்றேன் என்றாலும், உண்மையில் இங்கு களத்தில் உள்ள சிலரும் சேர்ந்து தான் இவை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது............🙏.1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 pointஇது எந்த நாட்டு நாணயமாக இருக்கும்..யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்..அடுத்த குறும்கதை வரும்வரை...1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 pointகண் கலங்க வைத்து விட்டீர்கள், தில்லை ஐயா........... 'கடவுளே......' என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வதென்றும் எனக்குத் தெரியவில்லை....🙏.1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 point1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 pointஉள்ளூரில் ஓரளவு ஆட்களை விசாரித்து உறுதிப்படுத்தலாம் அண்ணை. புதிய இடங்களில் அறிவு சொல்வதை விட மனம் இரங்கினால் செய்துவிட வேண்டியது தான். நண்பர் ஒருவர் கடன் தொகை கூடி(வட்டி குட்டி போட்டு) தற்கொலை செய்யும் நிலையில் இருந்தார். கனடிய நண்பன் ஒருவன் பல இலட்சம் கொடுத்து உதவியதோடு பகுதி பகுதியாகத் தருமாறு கூறி இருந்தான். 3 ஆண்டுகள் ஆகியும் ஒரு ரூபா கூட திருப்பி வழங்கவில்லை. இதே நண்பரின் நிலையை அறிந்து வேறு நண்பர்களிடம் அவர் பேசிய காணொளியை தனிப்படப் பகிரந்திருந்தேன். அவர்களும் உதவி இருக்கிறார்கள், ஆனால் இவர் எனக்கு சொல்லவில்லை. சற்று வருத்தமாக இருந்தாலும் அவருடைய நிலை இப்போது நன்றாகிவிட்டதை நினைத்து நிம்மதி.1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 pointஅறியாத தெரியாத இடங்களுக்கு போகும் போது ஒரு விழிப்புணர்வு alert இருக்க வேண்டியது கடடாயம் தானே . நல்ல சேவை கிடைக்கும்போது அமையறியாமலே கொடுக்கும் உணர்வு வரும். சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)... Kavi arunasalam ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ தொகுப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.1 point- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
யார் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தார்கள் என்ற தகவல்கள் எனக்குத் தெரியாது. ஆனால் முயன்றால் இதை மெதுமெதுவாக நிற்பாட்டலாம். மற்றவர்களை நிற்பாட்டு என்று சொல்வதை விட, ஒவ்வொருவரும் தன்னளவில் மாறினாலே காலப் போக்கில் ஒரு மாற்றம் வரும். அரசியலுக்கு மட்டும் இல்லை, இது எல்லா பொது வெளிக்கும் பொருந்தும்1 point- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்று பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிக்கட்சி தலைவராக அமர்ந்த பெருமை அன்பு அமிர் அவர்களையே சாரும். அந்த அரசியல் பலத்தை வைத்து எதுவுமே செய்யாத மனிதர். அது மட்டுமல்லாமல் சிங்கள தலைவர்களை சந்திக்க பின் கதவால் செல்லும் நற்பழக்கைத்தை ஈழமண்ணில் அறிமுகப்படுத்தியவரும் சாட்சாத் அன்பு அமிர் அவர்கள் தான் என்பதை நினைவு கூர்கின்றேன்.🤪1 point- நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் - மன்னாரில் சஜித்
நீங்கள் கூறுவது ஒரு வகையில் உண்மைதான். இனிவரும் நாட்களில் இன்னும் பல அரசியற் கொலைகளை உலகம் எதிர்கொள்ள நேரிடலாம்.1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointவைத்தியர் அர்ச்சுனா உளரீதியாக பாதிக்கபட்டதா மற்றவர்கள் எழுதியதை பேட்டி எடுப்பவர் படித்தாராம். பின்பு டொக்டரிடமே நேரில் கேட்கிறார் நீங்கள் உளரீதியாக பாதிக்கபட்டிருக்கின்றீர்களா இந்த பேட்டி எடுத்தவர் பேட்டி எடுப்பதற்கே தகுதி இல்லாதவர்.1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 pointஎல்லோரும் ஏமாற்றுவார்கள் என்றில்லை ......... 500 பேர் நிற்கும் வாடகை வண்டி நிலையத்தில் ஒரு 4 பேர் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ....... என்ன .......எங்களது காலக்கொடுமை அந்த நாளில் ஒன்றுதான் நாங்கள் போகும் நேரம் வந்து நிக்கும்.......! எங்களிடம் ராக்சி இருந்தது ........ அதில் அப்பப்ப சிலர் பொருட்கள் பார்சல்கள் தவறவிட்டு விடுவார்கள்.......அவற்றை சாரதிகள் பத்திரப்படுத்தி அன்றோ அடுத்தநாளோ உரிமையாளர் வந்து தேடும்போது கொடுத்து விடுவார்கள்........பக்கத்து சவாரி என்றால் மற்ற டாக்சி சாரதிகள் சொல்வார்கள் அவர் இப்ப வந்து விடுவார் கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லுவினம், தூர சவாரி என்றால் இன்னொரு நல்ல சாரதியிடம் குடுத்து விட்டு செல்வார்கள்......இப்படி ஒரு எழுதப்படாத விதி அன்று அவர்களுக்குள் இருந்தது .........! (இன்னொன்றும் இருக்கு இப்ப நேரமில்லை பிறகு).1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
யூரோக் கிண்ணத்தை சுவீகரித்த ஸ்பெயின்! ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ணக் காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின்அணி 4ஆவது முறையாக யூரோக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் 24 அணிகள் பங்கேற்கும் யூரோக் கிண்ணக் காற்பந்துத் தொடரானது கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இத் தொடரில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன. இந்நிலையில் நேற்றைய தினம் பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் யூரோ காற்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. https://athavannews.com/2024/13922581 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointவைத்தியர் அர்ச்சுனா கடும் வாக்குவாதம் - நாந்தான் இங்க வைத்தியர் - பொலிசார் கைதுசெய்ய முயற்சி1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 point‘ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது’ என்பது இப்பொழுது சற்றுப் புரிகிறது. கில்லாடி சார் நீங்கள். ‘இட்டார் கெட்டார்’இல் விட்ட தவறை ‘ஏமாற்றம்’ இல் சரி செய்திருக்கிறீர்கள். ஏமாறாமல் மட்டுமல்ல ஏமாற்றாமலும் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு வழியில் நாங்களும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். சில சமயங்களில் எங்களை நாங்களே. சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)1 point- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
1 pointஏமாறாமலே போய்ச் சேர்ந்துட்டீங்க. தெரியாத இடங்களில் தமது பணத்தை செலவு செய்தே உதவுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ நம்மை ஏமாற்றும் இடமென்றால் நம்ம பிறந்த இடம் தான்.1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
👍....... ட்ரம்ப் அவர்களின் கையில் எதுவும் இல்லை. எல்லாம் பைடனின் கையில் தான் உள்ளது. இன்றைய நிலையில் பைடன் நினைத்தால் மட்டுமே ட்ரம்ப் அடுத்த அதிபராக வருவது தவிர்க்கப்படலாம். இந்த வாரம் சூட்டின் சூட்டை ஆற விட்டு, அடுத்த வாரம் பைடன் தான் போட்டியிலிருந்து விலகுவதாக சொன்னால், இறங்கின ரேட்டிங் மீண்டும் ஏறும். என்ன ஆனாலும் கலிஃபோர்னியாவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த மாநிலத்திற்கு எவரும் பிரச்சாரத்திற்கு கூட வருவதில்லை.........🤣.1 point- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை. இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது. அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது என ஒதுங்கியது மட்டுமல்லாமல் சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விடயம். இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.1 point- 37 வருட கால உலக சாதனையை முறியடித்த 22 வயதான யரோஸ்லாவா மஹுச்சிக்!
வாழ்த்துக்கள்.............................1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பானியா....வாவ்....வாவ்1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
என்ன தமிழ்சிறி அண்ணா சுட்டவருக்கு பயிற்ச்சி காணாது போல் தெரியுது....................இத்தனை தோட்டாவாலும் சுட்டு ரம் மலை போல் நின்று வெறித்தனத்தோடு கைய உயர்த்தி காட்டுகிறார்😛 தலைக்கு தினா வெட்டு அதிகம் தான்..................... அது சரி ரம்ப சுட்ட துப்பாக்கி எந்த வகை துப்பாக்கி இதை ஏன் கேட்க்கிகிறேன் என்றால் பல மாடி உயரத்தில் இருந்து கெனடிய ஒரு சூட்டின் மூலம் கெனடியின் மண்டை சிதரி மருத்துவமனைக்கு கொண்டு போக முதலே இறந்து விட்டார் .......................இதில ஏதோ குளறு படி இருப்பதாக தெரியுது......................துப்பாக்கியால் சுட்டால் தொண்டர்கள் தொட்டு பலர் பதறி அடிச்சு ஓடுவினம் ஆனால் இந்த காணொளியில் அப்படி ஒன்றும் நடந்த மாதிரி தெரிய வில்லையே ஹா ஹா.ரம்பின் உடம்பில் தோட்டா போன மாதிரி தெரிய வில்லை..................இது முன் கூட்டியே போட்ட பிலான் மாதிரி தெரியுது...................இது வெறும் ராமா 😁😛........................................1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
சினப்பர் தாக்குதல் ஆனால் காதில் மட்டும். WWF ஆளப்பா. இவ்வளவு செய்திட்டம் இது செய்ய தெரியாதா. ..???1 point- சம்பந்தர் காலமானார்
1 pointஎது எப்படியோ..... ஈழ அரசியலின் முக்கிய அரசியல்வாதி சம்பந்தனின் மரண சடங்கின் நிகழ்வுகள் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்ல படிப்பினையாக அமையும். இன்றைய காலகட்டத்தில் வாயில்லா பூச்சிகளான தமிழினம் தாம் கொண்ட கொள்கையில் மாறவில்லை என்பதை சம்பந்தனின் மரண நிகழ்விற்கு வந்த மக்கள் தொகை உணர்த்தி நிற்கின்றது. சாது மிரண்டால் காடு கொள்ளாது.1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
டிரம்பின் டிரம்ப் card தான் இத்த துப்பாக்கிச் சம்பவம். இருவாரங்களுக்குமுன்னே டிரம்ப் பயங்கரவாத தாக்குதல் தடக்குமென்று அடிச்சு சொன்னது ஞாமகமிருக்குதோ? இது வாக்கு வங்கியை வைத்த குறி.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏறெடுத்தும் பார்க்கமறுத்த ஒப்பந்தங்களில் பத்தோடு பதினொன்றாவதாக சேர்க்கப்பட்ட ரஜீவ் காந்தியின் தில்லி ஒப்பந்தம் திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்ட புலிகளின் உறுப்பினர் லோரன்ஸ் திலகருடன் பாலசிங்கம், தலைவர் பிரபாகரன் மற்றும் இந்தியாவின் டிக்ஷிட் தில்லியில் தொடர்ச்சிய ஒருவார காலம் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகளும், இலங்கை அதிகாரிகளும் பேச்சுக்களுக்கான அடிப்படை ஆவணமாக ஒன்றைத் தயாரித்துக்கொண்டனர். அதற்கு "ஒப்பந்தத்திற்கான அடிப்படைகளை வரையறுத்துக்கொள்ளுதலும் அதனை புரிந்துக்கொளுவதற்குமான வரைபு" என்று பெயரிட்டனர். பின்னாட்களில் அதுவே தில்லி ஒப்பந்தம் என்று அழைக்கப்படலாயிற்று. மேலதிகப் பேச்சுக்களுக்கான ஆரம்ப ஆவணமாக இது அமையவேண்டும் என்று ரஜீவ் விரும்பியிருந்தமையினால் அதனை "தொடக்க ஆவணம்" என்று அவர் அழைத்தார். இந்த ஆவணத்தில் இலங்கை சார்பாக ஹெக்டர் ஜெயவர்த்தனவும் இந்தியா சார்பாக ரொமேஷ் பண்டாரியும் கைய்யெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இருவரது கைய்யொப்பங்களும் இடப்படுவதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். ஜெயாருடனான முன்னைய கசப்பான அனுபவங்களையடுத்தே இந்திய அதிகாரிகளை இதனைச் செய்தனர். முன்னர் அனெக்ஸ் சி (இணைப்பு சி) இயில் தான் கையொப்பம் இடவில்லை என்று அதிலிருந்து ஜெயார் தன்னை அந்நியப்படுத்தி நாடகமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனி 2 ஆம் திகதிய ஆவணம் எழுத்துவடிவில் இடம்பெறவில்லையென்பதாலும், அதில் தான் கையொப்பம் இடவில்லையென்பதாலும் அவ்விணக்கப்பாட்டினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆகவே, ஜெயாரின் சொந்தச் சகோதரரான ஹெக்டருடன் தாம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தினைக் கூட ஜெயவர்த்தன மிக எளிதாக தட்டிக் கழித்துவிடலாம் என்று இந்திய அதிகாரிகள் ஓரளவிற்கு ஊகித்தே இருந்தனர். இணைப்பு சி இனை மேம்படுத்திய தீர்வாகவே தில்லி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக தில்லி ஒப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க தில்லி ஒப்பந்தத்தில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டு, தமிழரின் நலன்களைப் பாதிக்கும் எந்தச் சட்டமும் இக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்தப்படமுடியாது என்கிற சரத்தையும் அரசியல் யாப்பினூடாக இவ்வாலோசனைகளில் உள்ளடக்குவதென்றும் இவ்வொப்பந்தம் பரிந்துரை செய்தது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மிக அடிப்படையான விடயங்களைக் கூட பூர்த்தி செய்ய தில்லி ஒப்பந்தம் தவறியிருந்தது. முதலாவதாக, தமிழரின் தயகக் கோரிக்கையான வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தில்லி ஒப்பந்தம் நிராகரித்திருந்தது. அரசியல் யாப்பு மாற்றங்களுக்கூடாகவன்றி, பாராளுமன்றத்திற்கூடாகவே மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தில்லி ஒப்பந்தம் கூறியது. இதன்படி சிங்களக் கட்சிகள் மிகச் சிறிய பெரும்பான்மையினூடாக சட்டம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை எப்போது வேண்டுமானாலும் இரத்துச் செய்யக்கூடிய நிலை காணப்பட்டது. தேசிய கொள்கைகளை வகுக்கும் அதிகாரமும், கோட்பாடுகளை வழங்கும் அதிகாரமும் மத்திய அரசிடமே விடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கினை பரவலாக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்த போதிலும், காவல்த்துறையினை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே விடுவதென்று தில்லி ஒப்பந்தம் கூறியது. காணி மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இவ்வொப்பந்தம் எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் மாகாணங்களுக்கான ஆளுனருக்கும் முதலமைச்சருக்குமிடையினால தொடர்பாடல், நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்புக்கள் குறித்தும் தெளிவான வரையறைகளை இவ்வொப்பந்தம் முன்வைக்கத் தவறியிருந்தது. தில்லியில் இந்திய இலங்கை அதிகாரிகளைடையே தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்த வேளையில் சென்னையிலும் இலங்கையிலும் சில விடயங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. ஆவணி 22 ஆம் திகதி திருகோணமலையில் இராணுவ ஜீப் ஒன்றின்மீது புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மறுநாளான ஆவணி 23 ஆம் திகதி சென்னை அடையாறில் அமைந்திருந்த புலிகளின் அரசியல் அலுவலகத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அன்டன் பாலசிங்கம், " இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தவறி வருவதனால், எமது மக்களைக் காப்பதற்கான பதில்த் தாக்குதல்களில் நாம் இறங்குவதற்கான முழு உரிமையும் எமக்கு இருக்கிறது" என்று அறிவித்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்தமைக்காக போராளிகளைப் பழிவாங்கிய ரஜீவ் காந்தி போராளிகளின் நிலைப்பாடு குறித்து இந்தியா கடுமையாக அதிருப்தியடைந்தது. குறிப்பாக பாலசிங்கத்தின் மீதே அதன் முழுக் கவனமும் திரும்பியிருந்தது. பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட தமிழர் தரப்பின் குழுவினருக்கும் சென்னையில் தங்கியிருந்த போராளிகளின் தலைவர்களுக்குமிடையிலும் தொடர்பாடலைப் பேணுவதற்கென்று இந்திய அரசால் செய்துகொடுக்கப்பட்டிருந்த நேரடித் தொலைபேசித் தொடர்பினை ரோ அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒட்டுக் கேட்டுவந்தனர். அதன் அடிப்படையில் பேச்சுக்களில் இருந்து விலகும் அழுத்தத்தினை பாலசிங்கமே தமிழர் தரப்புக் குழுவினருக்கு வழங்கினார் என்று ரோ அதிகாரிகள் ரொமேஷ் பணடாரியிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் தெரிவித்தனர். இந்தியாவின் சமரச முயற்சிகளை தோற்கடித்தவர் என்கிற பிரச்சாரம் பாலசிங்கம் மீது இந்தியர்களால் நிகழ்த்தப்பட்டது. சத்தியேந்திராவும் பண்டாரியுடன் திம்புப் பேச்சுக்களின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். சிறீசபாரட்ணத்தின் மீது செல்வாக்குச் செலுத்திவந்த சந்திரகாசனை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ. ஏ யின் முகவர் என்றும் இந்திய அதிகாரிகள் சந்தேகித்து வந்தனர். அதுவரை ரோவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்துகொண்டிருந்த சிறீசபாரடணம் திடீரென்று அவர்களுக்கெதிராகப் பேச ஆரம்பித்திருந்தார்.ரோ அதிகாரிகளைப் பொறுத்தவரையில் சிறீசபாரடணம் தீவிர நிலைப்பாட்டை வரிந்துகொண்டவரைப் போல் தெரியத் தொடங்கினார். பிரபாகரனைப் போல அவரும் தலைமறைவு வாழ்க்கையினை வாழத் தொடங்கியிருந்தார். இதற்குச் சந்திரகாசனே காரணமாக இருக்கலாம் என்று ரோ அதிகாரிகள் நம்பத் தொடங்கினர். தமிழ்ப் போராளி அமைப்புக்கள் பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்தமைக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியது. அதனடிப்படையில் பாலசிங்கம், அடேல் மற்று நடேசன் சத்தியேந்திரா ஆகிய மூவரையும் அது நாடுகடத்தியது. இவர்களை நாடு கடத்தும் முடிவினை தானே எடுத்ததாக இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் செய்தித்தாளான கல்ப் நியூஸிற்கு ஆவணி மாதத்தின் இறுதிப்பகுதியில் வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகக் கூறியிருந்தார். "அவர்கள் இந்தியர்களோ, இலங்கையர்களோ கிடையாது, அதனாலேயே அவர்களை நாடு கடத்தும் முடிவினை எடுத்தேன். அவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்" என்று ரஜீவ் விமர்சித்திருந்தார். இந்தியாவை விட்டு வெளியேறும் பாலசிங்கமும், அடேலும் இவர்கள் மூவருக்கு எதிராகவும் கடுமையான தண்டனைகளை வழங்கும் தருணத்திற்காக இந்திய அதிகாரிகள் காத்திருந்தார்கள். தமது எண்ணத்தை இந்திய மத்திய அரசும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவ்வதிகாரிகள் எண்ணியிருந்தார்கள் என்றுஅடேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தம்மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை பேச்சுக்களிலிருந்து தமிழர் தரப்பு வெளியேறிய நாளிலிருந்தே இந்திய அதிகாரிகள் திட்டமிட்டு வந்தது தமக்குத் தெரிந்தே இருந்தது என்றும் அவர் எழுதுகிறார். ஆவணி 23 ஆம் திகதி மதிய உணவு வேளையின்போது தம்மீதான பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தம்மை நாடுகடத்த இந்திய மத்திய அரசு முனையலாம் என்று பேசிக்கொண்டதாகவும், அன்றே இந்திய மத்திய அரசு தம்மை நாடுகடத்தும் உத்தரவினைப் பிறப்பித்தத்து என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். பேச்சுக்களிலிருந்து தமிழர் தரப்பு வெளியேறியதையடுத்து திம்புவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவினரை தில்லியில் வந்து தன்னைச் சந்திக்குமாறு ரஜீவ் காந்தி பணித்தார். கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் பேசிய ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு இரு காரணங்களை முன்வைத்தார். அவர் முன்வைத்த முதலாவது காரணம், பேச்சுக்களுக்களை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கான ஆரம்ப்பத் தீர்வு ஒன்றினை முன்வைக்க இலங்கையரசு தவறியமை என்று அவர் கூறினார். இரண்டாவது காரணமாக தமிழ் மக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான வன்முறைகளை அவர் குறிப்பிட்டார். ஆகவே, தான் குறிப்பிட்ட முதலாவது காரணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வருங்காலப் பேச்சுக்களுக்கு ஏற்ப நியாயமான அடிப்படைகளை முன்வைக்குமாறு இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜயவர்த்தனவிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். திம்புவிலிருந்து தில்லிக்கு ஆவணி 23 ஆம் திகதி பயணமான ஹெக்டர் ஜயவர்த்தன, ஆவணி 30 வரை அங்கேயே தங்கியிருந்து ரஜீவ் காந்தியுடனும், ஏனைய இந்திய அதிகாரிகளுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்தார். ஹெக்டருடனான தனது முதலாவது சந்திப்பில் பேசிய ரஜீவ், பங்களாதேசின் தலைநகரான டாக்கவிற்கான பயணத்தின்போது தன்னுடன் உடனிருந்த ஜெயார் ஜெயவர்த்தனவுடன் தான் பேசும்போது அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக மாகாண சபைகளை அவர் ஏற்றுக்கொள்வதாக தன்னிடம் உறுதியளித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். "நாம் அந்தக் கலந்துரையாடல்களை எழுத்துவடிவில் ஒரு ஒப்பந்தமாகத் தயாரிக்க அப்போது விரும்பியிருக்கவில்லை. அது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் நான் அது எழுத்துவடிவில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை" என்று ரஜீவ் கூறினார். தொடர்ந்து ஹெக்டருடன் பேசிய ரஜீவ், அடுத்த பேச்சுக்களுக்கான அடிப்படையாக மாகாணசபைகளை அதிகாரப் பரவலாக்க அலகாக முன்வைத்து ஆவணங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????1 point- கருத்து படங்கள்
1 point1 point- மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
1 point- சம்பந்தர் காலமானார்
1 pointசம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂1 point- சம்பந்தர் காலமானார்
1 pointவணக்கம் இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது. அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதிம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்களாக நான்கு விடயங்களை பாலசிங்கம் தனது புத்தகமான போரும் சமாதானமும் என்பதில் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது காரணம் இந்திய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரி. "இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்த அடிப்படை அறிவினை அவர் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் இரண்டிலும் நிலவிவரும் வேறுபட்ட நிலைப்பாடுகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அறிவும் அவரிடம் இருக்கவில்லை. சிக்கலானதும் , கடிணமானதுமான இனச்சிக்கலுக்கு உடனடியான இலகுத் தீர்வுகளை வழங்கமுடியும் என்று அவர் பொறுப்பற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார்" என்று பாலசிங்கம் கூறுகிறார். பண்டாரி தொடர்பான தொண்டைமானின் அவதானிப்பும் இதனையே கூறியிருந்தது. நான் முன்னர் கூறியதுபோல, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து ரொமேஷ் பண்டாரிக்கு அடிப்படை அறிவெதுவும் கிடையாது என்று தொண்டைமான் என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். பேச்சுக்களின் தோல்விக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது இந்திய உளவுத்துறையும், அதிகாரிகளும் ஆகும். தமிழ்ப் போராளிகளுடனான அவர்களின் தொடர்பாடல்களின்போது ஆண்டான் - அடிமை மனநிலையே அவர்களிடம் காணப்பட்டது. "நாம் சொல்வதன்படி கேட்டு நடவுங்கள், அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்" என்பதே அவர்களின் எச்சரிக்கையாக இருந்து வந்தது. அவர்கள் வெளிப்படையாகவே இந்திய நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்ததை தமது செயற்பாடுகளில் காட்டிவந்தார்கள் . தமிழர்களின் நலன்கள் குறித்த சிறிதளவு கரிசணையும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மூன்றாவது காரணம் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட முறை. பேச்சுவார்த்தையில் ஜெயவர்த்தன கலந்துகொண்டதன் ஒற்றை நோக்கமே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டிருக்கிறேன், ஆனால் தமிழர்கள்தான் விட்டுக்கொடுப்பின்றிப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று உலகிற்கும், இந்தியாவிற்கும் காட்டுவதுதான். பேச்சுவார்த்தைக்காக தான் தேர்ந்தெடுத்த சிங்களப் பிரதிநிதிகள், அப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் காட்டிய கடும்போக்கு, பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த தீர்வு ஆகியன சர்வதேச சமூகத்தினை ஏமாற்றி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிட ஏதுவான களநிலையினை உருவாக்கிக் கொள்வதற்காக அவர் ஏற்படுத்திய நாடகம் என்றால் அது மிகையில்லை. இவற்றுள் மிகவும் முக்கியமான காரணி என்னவெனில் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமக்கென்று தனியான இலட்சியம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், அவ்விலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையும் இந்தியாவும், இலங்கையும் உணரத் தவறியமைதான். தனது தேசிய நலன்களுக்காக பேச்சுவார்த்தையினையும், போராளிகளையும் இந்தியா பாவிக்க விரும்பியது. இந்தியாவிற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் பகைமையினை உருவாக்கி, அதன்மூலம் தமிழர்களின் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிட இப்பேச்சுவார்த்தை நாடகத்தை இலங்கையரசு பாவிக்க விரும்பியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த போதிலும், தமிழீழ விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் அது முக்கியமான திருப்புமுனையாக மாறியது. முதன்முறையாக இந்தியாவும், இலங்கையும் தமிழீழ மக்களின் அரசியல்த் தலைமைத்துவம் ஜனநாயக அரசியல்வாதிகளிடமிருந்து போராளித் தலைமைகளுக்கு மாறியிருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தன. மேலும், ஆயுதப் போராட்டத்தினையும் மறைமுகமாக அவை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்த அங்கீகாரத்தின் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தன்மை உருவாக வழியேற்படுத்தப்பட்டிருந்தது. அடுத்ததாக, திம்புப் பேச்சுக்களின் ஊடாக, தமிழீழத்திற்கு மாற்றான தீர்விற்கான அடிப்படைகள் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இறுதியாக, தமிழ் மக்களின் எந்தத் தீர்விலும் பிரபாகரனே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்கிற நிலையினையும் இப்பேசுவார்த்தைகள் ஏற்படுத்தியிருந்தன.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇரண்டாம் கட்டப் பேச்சுக்களில் இருந்து தமிழர்தரப்பை வெளியேற்ற புதிய ஆலோசனைகள் எனும்பெயரில் தந்திரங்களை முன்வைத்த இலங்கை அரசு தமிழ்ப் பிரதிநிதிகளின் இணைந்த அறிக்கைக்குப் பதிலளித்த ஹெக்டர் பின்வரும் விடயங்களைக் கூறினார். 1. இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்குழு பிரதிநிதித்துவம் செய்கிறது. இலங்கையின் அமைச்சரவையில்க் கூட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அமைச்சர்கள் அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். 2. இங்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்பினர் இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கோருகிறார்கள். ஆனால், யதார்த்தத்தில் இலங்கையரசாங்கமும் தமிழர்களை இங்கே பிரதிநிதித்துவம் செய்கிறது. இங்கு பிரசன்னமாகி இருக்கும் தமிழ் அமைப்பினர் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கோருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதை விடவும், இலங்கையர்களால் நன்கு அறியப்பட்ட தமிழ் அரசியட்கட்சியான தமிழ்க் காங்கிரஸ் இங்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. மேலும், சில ஆயுத அமைப்புக்களும் இப்பேச்சுக்களில் கலந்துகொள்ளவில்லை. 3. தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு இங்கு பிரசன்னமாகியிருக்கும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழு போதுமானது என்று நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் பேச்சுக்குழு இப்பேச்சுக்களின் பிரசன்னமாகியிருக்கின்றது. தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத்தன்மை குறித்த ஹெக்டரின் விளக்கத்தினால் இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் அப்போதைக்குத் தோல்வியடைவதைத் தடுக்க உதவியது. அத்துடன், இலங்கை அரச பிரதிநிதிகள் தமது புதிய யோசனைகள் முன்வைக்கவும் இது சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. உப தேசிய அலகுகளுக்கான கட்டமைப்பு எனும் பெயரில் இலங்கை அரசு தனது புதிய ஆலோசனைகளை முன்வைத்தது. அரசின் புதிய ஆலோசனைகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன் முதலாவது பிரிவு, மக்கள் தமது பிரச்சினைகளையும், தேவைகளையும் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளைத் தாமே உய்த்தறிந்துகொண்டு அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை உப தேசிய அலகுகள் ஊடாக பெற்றுக்கொடுப்பது. இந்த உப தேசிய அலகுகள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையினை முற்றாக ஏற்றுக்கொண்டே நடைமுறைப்படுத்தப்படும். சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கும், சட்டவாக்கல் அதிகாரமுள்ள பாராளுமன்றத்திற்கும் இந்த உப தேசிய அலகுகள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆலோசனைகளின் இரண்டாம் பிரிவு, உப தேசிய அலகுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான உப தேசிய அலகுகள் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும், தேவையேற்படின் நாலாவது அடுக்கும் சேர்க்கப்படலாம். அந்த மூன்று உப தேசிய அலகுகளுமாவன : மாகாண சபைகள், மாவட்ட சபைகள், பிரதேச சபைகள் என்பனவாகும். ஒவ்வொரு மாகாணத்திற்கென்று மாகாணசபைகளும், ஒவ்வொரு மாவட்டத்திற்குமென்று மாவட்ட சபைகளும், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்குமென்று பிரதேச சபைகளும் உருவாக்கப்படும். தேவையேற்படின் பிரதேசங்களுக்கான கூட்டமைப்பும் உருவாக்கப்படலாம். ஆனால், இதன்படி எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படுதல் முடியாது. தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாணங்களின் எல்லைகளைக்குள்ளேயே உத்தேச மாகாண சபைகளும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு மாகாணசபைக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். அந்த அதிகாரி பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுமிடத்து அவர் முதலமைச்சர் என்று அழைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதவிடத்து பொருத்தமான இன்னொரு பெயர் கொண்டு அவர் அழைக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணசபைக்குமான பிரதான நிறைவேற்று அதிகாரியை, அம்மாகாணங்களின் உறுப்பினர்களின் ஆதரவோடு ஜனாதிபதியே நியமிப்பார். தனது நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரிகள் சபையினை முதலமைச்சர் அந்த மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து தெரிவுசெய்துகொள்வார். பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான அதிகாரங்கள் பாராளுமன்றத்தினாலேயே அவருக்கு வழங்கப்படும். முதலமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே நேரடியாக வழங்குவார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லதவிடத்து, ஜனாதிபதியினால் சில அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்படும். மாகாண நிறைவேற்று மந்திரிசபைக்கென்று அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. தமக்கென்று தனியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட கட்டமைப்பினை எந்தவொரு மாகாண சபையும் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தின் எல்லைகளுக்குள், குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில், தமக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டு, அந்த மாகாணசபை சில சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், இவ்வாறு இயற்றப்படும் உப சட்டங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கும். மேலும், மாகாண சபை ஒன்றி இயற்றும் உப சட்டங்கள் முதலில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் அவசியம். எவ்வாறான விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகள் உப சட்டங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசின் அடுத்த கட்ட நிர்வாக அலகாக மாவட்ட சபைகள் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தந்த மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவர் மாவட்ட அமைச்சர் என்று அழைக்கப்படுவார். அவ்வாறு இல்லாதவிடத்து, அவர் அமைச்சர் என்று அழைக்கப்படுவார். மாவட்ட அமைச்சருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே இதுக்குவார். சாதாரண அமைச்சருக்கான அதிகாரங்கள் நேரடியாகவன்றி, பகிர்ந்தளிப்பு முறையில் வழங்கப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மாவட்ட சபைகள் தமது எல்லைக்குற்பட்ட விடயங்கள் தொடர்பாக உப சட்டங்களை இயற்றவியலும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது, இந்த ஆலோசனைகள் தமிழரைப் பொறுத்தவரையில் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகத் தோன்றினாலும்கூட, அவை உண்மையிலேயே தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பது தெரியவரும். இந்த ஆலோசனைகளை ஆளமாகப் படிக்கும் எவருக்கும், அரசாங்கம் வழங்க ஆயத்தமாக இருக்கும் அதிகார அலகு மாவட்ட சபையே அன்றி மாகாண சபை அல்ல என்பது தெளிவாகத் தெரியும். மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் ஒன்றுடன் ஒன்று இணைந்து மாகாணசபையினை உருவாக்க முடியும் அல்லது தனித்து இயங்கமுடியும். மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்களும் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், இந்த மாவட்ட சபைகள் தனித்து இயங்குவதா அல்லது இன்னொரு மாவட்ட சபையினை இணைத்து மாகாண அளவில் இயங்குவதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும். புதிய ஆலோசனைகளில் முன்வைக்கப்பட்ட "மாவட்ட சபையாக தனித்தோ அல்லது இணைந்து மாகாண அளவிலோ இயங்க முடியும்" எனும் சரத்தினூடாக இதனை அரசு புகுத்தியிருந்தது. "மாவட்ட சபையாகத் தனித்து இயங்குதல் அல்லது இணைந்து மாகாண அளவில் இயங்குதல்" எனும் சரத்தின் கீழ் பிரிவு 10 முதல் 12 வரையான மூன்று பிரிவுகளை புதிய ஆலோசனைகள் கொண்டிருந்தன. பிரிவு 10 மாகாண சபைகளுக்கான அரசியலமைப்புக் குறித்துப் பேசுகிறது. தற்போது இருக்கும் மாகாணங்களில் இயங்கும் மாவட்ட சபைகள் குறித்தும், இயங்காநிலையில் இருக்கும் மாவட்ட சபைகள் குறித்தும் இந்தப் பிரிவு பேசுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியே வருகின்றன. மாவட்ட சபைகள் இயங்கும் மாகாணங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு பல மாவட்ட சபைகள் இணைந்து மாகாண அளவில் இயங்க முடியும். அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்கும். மாவட்டங்கள் இணைந்து மாகாண சபைகள் உருவாகுமிடத்து அம்மாகாணத்திற்குள் இயங்கும் மாவட்ட சபைகளின் இயக்கம் முடிவிற்கு வரும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியிருக்கவில்லை. ஆகவே, இந்த மாகாணங்களில் இருக்கும் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அவை உருவாக்கப்படுதல் அவசியம். பின்னர் அந்த மாகாணத்தில் இருக்கும் மாவட்டசபைகளில் மூன்றில் இரண்டு விரும்புமிடத்து, மிகக் குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் பிரேரணை ஒன்றினூடாக தம்மை இணைத்து ஒரு மாகாணசபையாக உருவாகிக்கொள்ளுதல் முடியும். அவ்வாறு இணையும் முடிவு ஒன்று எடுக்கப்படாதவிடத்து, மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்க முடியும். புதிய ஆலோசனைகளின் பிரிவு 11 மாகாணசபைகள் மற்றும் மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்கள் பற்றிப் பேசுகிறது. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அம்மாகாணங்களிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாகாண சபை உறுப்பினர்களாக இருப்பர். அவ்வவறே, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மாகாண சபைகள் எனும் அமைப்புத் தோற்கடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவே புதிய ஆலோசனைகளின் பிரிவு 12 சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தில் இயங்கும் மூன்றில் ஒரு மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் அந்த மாகாணசபையிலிருந்து விலகி தனித்து மாவட்ட சபையாக இயங்கமுடியும் என்பதே அந்தச் சரத்து. அரசு முன்வைத்த புதிய யோசனைகளைப் படித்துவிட்டு தம்மால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் அப்போது செய்ய முடியாது போய்விட்டது என்று பேச்சுக்களில் பங்கெடுத்த இரு தமிழ்ப் பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்தனர். "சிலரோ கொதித்துப்போய் இருந்தனர், சத்தியேந்திரா அவர்களில் ஒருவர்" என்று ஒரு தமிழ்ப் பிரதிநிதி என்னிடம் கூறினார். தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே புதிய ஆலோசனைகளை அரசு முன்வைத்திருந்தது. தமிழர் தரப்பிற்குத் தேவைப்பட்டதெல்லாம் தகுந்த சூழ்நிலை மட்டும்தான். "பிரச்சினை என்னவென்றால், இந்தியாவைப் புண்படுத்தா வண்ணம் நாம் பேச்சுக்களில் இருந்து விலக வேண்டும்" என்று பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசும்போது தெரிவித்தார். தமிழர் தரப்பு எதிர்பார்த்திருந்த சரியான சூழ்நிலையினை அன்றிரவே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . ஆவணி 16 ஆம் திகதி வவுனியாவிலும் திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் ஆடிய படுகொலைகள் தமிழர்களை வெகுவாகக் கோபங்கொள்ளச் செய்திருந்தது.1 point- ஆங்கில வார்த்தை என்ன?
1 point- ஆங்கில வார்த்தை என்ன?
1 pointகேணி - Small Tank? சிரமதானம் - Community Service? பிழையாகக் கூட இருக்கலாம், அதனால் தான் '?' அங்கே இருக்கின்றது.......😀.1 point- கண்ணுறுவது கண்ணோட்டம்
1 pointஎன் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர். "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை) (குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?) மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு. 'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது. தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில் சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.1 point- கண்ணுறுவது கண்ணோட்டம்
1 pointஐயா உங்களுடைய முகப்புத்தக இணைப்பினூடாகச் செல்ல புதுத்திண்ணை இணைப்பு வருகிறது, சிலர் தொடரச் சிரமப்பட்டு அருமையான ஆக்கத்தை வாசிக்காமல் விடக்கூடாது என்பதனால் நான் முழு ஆக்கத்தையும் இணைத்துவிட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.1 point - குறுங்கதை 15 -- ஏமாற்றம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.