Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7044
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20010
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87988
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/30/25 in all areas

  1. வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது. கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன. பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன. ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வண‌ங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?
  2. மேலே வணங்காமுடி சொல்லியிருப்பவையோடு இன்னொரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டும்: குப்பை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல். இதை பள்ளிக் கூடங்களில் அமல் படுத்தி இளையவர்களைப் பயிற்றுவித்தால் எது குப்பை, எது மீள்சுழற்சி செய்யக் கூடிய பொருள் என்பதை அடுத்த 10 ஆண்டுகளில் சமூகம் உணர்ந்து கொள்ளச் செய்யலாம். அது வரை அல்லாட வேண்டியது தான். இந்தக் குப்பைகள் பற்றிய அலட்சிய மனப்பான்மை எங்கள் தமிழ்/தெற்காசிய ஜீன்களில் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்குண்டு😂. இங்கே அமெரிக்காவில் நடக்கும் எங்கள் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகள் பலவற்றில், நிகழ்வு முடிந்ததும் சுத்தம் செய்வதற்குத் தான் நீண்ட நேரம் ஒதுக்குகிறோம். சாப்பிட்ட பேப்பர் தட்டு முதல், கோப்பிக் கோப்பைகள் வரை சிறுவர் முதல் பெரியோர் வரை அந்த இடத்திலேயே விட்டு விட்டுக் கிளம்பி விடும் பழக்கம் மிகப் பரவலாகக் காணக் கிடைக்கிறது. ஏற்பாட்டுக் குழு தான் முறிந்து சுத்தம் செய்ய வேண்டும்.
  3. அப்படி அவர்கள் செய்ய நினைத்தாலும் அவர்களால் முடியாது என நினைக்கிறேன். "சதிகார" மேற்கு நாடுகள், அவர்கள் தங்கள் நாட்டை விட்டு எங்கும் போய் விடாமல் கடவுச் சீட்டை வாங்கி லொக்கரில் பூட்டி வைத்திருப்பார்கள் என ஊகிக்கிறேன். இதனால் தான், இஷ்டமில்லாமல் கஷ்டப் பட்டு இந்த மேற்கு நாடுகளிலேயே இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்😎!
  4. வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு உணவைக் கூட சீனாவும், ஐரோப்பிய யூனியனும், செஞ்சிலுவைசங்கம் போன்ற NGO அமைப்புகளும் தான் கொடுத்து உதவுகின்றன. இவ்வளவு வறுமையில் இருக்கும் மக்கள், இந்த உல்லாச விடுமுறைத் தளத்திற்குப் போய், தங்கி, mall இல் பொருட்கள் வாங்கி..என்ன விளையாட்டு இது😂? யாழ் களத்தில் கிம்மை "முன்னுதாரணத் தலைவராக" வரித்துக் கொண்ட உறுப்பினர்கள் இதை விளக்குவார்களா😎?
  5. உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!
  6. சிறிதரன் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் நடந்து கொணடது பிழைதான். ஆனால் இதை லவத்து சுமத்திரனுக்கு வெள்ளையடிக்க பலர் அரும்பாடு படுகிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிரனும் சுமத்திரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
  7. புது ஸ்கூட்டர் வாங்கி... வெடி கொளுத்தி கொண்டாடினால் மிஞ்சினது இதுதான்.
  8. இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.
  9. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இவை நீங்கள் சரியாகச் சுட்டிக் காட்டியது போல சிறந்த வாழ்க்கைத் தரமோ, நீதி முறைமையோ கொண்ட நாடுகள் அல்ல! ஆனால், இவை எவையுமே ஒரு குண்டு மணியைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் வெளிநாடுகளிடம் கையேந்தும் தோல்வியுற்ற நாடுகளும் அல்ல! வட கொரியா கடலுக்குள் விட்டு விளையாடும் வாணங்களுக்கு செலவழிக்கும் தொகையை தன் மக்களுக்கு அடிப்படை உணவு, உடை, சுகாதார வசதிகள் கொடுக்க செலவழிக்க வேண்டும். இலங்கை- அதன் குறைபாடுகள் எல்லாவற்றையும் தாண்டி - தன் மக்களுக்கு இலவசக் கல்வியும், சுகாதாரமும் வெளிநாடுகளிடம் பிச்சையெடுத்தாவது கொடுக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உங்கள் எண்ணம் போல வடகொரிய மொடலில் தனி தமிழர் தேசம் உருவாகியிருக்க வேண்டுமென்றால், அது உருவாகாமல் விட்டது தான் நல்லது!
  10. கணக்குபோடுவோம். நீயும் நானும் கணக்குபோடுவோம் வாழ்க்கையை இப்படி வாழனும் அப்படி வாழணும் என்று ஆனால் வாழ்க்கை அது பாட்டுக்கு ஒரு கணக்கைப்போட்டு நம்கையில் கொடுக்கும் பாருங்க அப்போது தான் புரியும் இயற்கையையும் கடவுளையும் யாரும் ஏமாற்ற முடியாது. என்று
  11. "துரியோதனனை " போல நண்பனைத்தேடு உலகிற்கு தீயவனாக இருந்தாலும் உனக்காக கடைசி வரை போராடுவான். " கர்ணனை "போல நண்பனைத்தேடு ஆண்டவனே எதிர்த்தாலும் நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக உயிரையே தருவான் படித்ததும் பகிர்ந்ததும்
  12. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளான இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் ஐரோப்பிய அமெரிக்க நலன்புரி நிறுவனங்களால் இன்றும் பஞ்ச நிவாரண உதவிகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இந்தியாவிற்கு என பிரத்தியேக சிறுவர் வறுமை என இன்றும் ஜேர்மனியில் நிதி சேகரிக்கின்றனர். அம்பானியின் ஆடம்பரமான திருமண நிகழ்வின் பின்னரும் இந்த உதவிகள் தொடர்வது அதிசயத்திலும் அதிசயம். உலகில் தன்னை புதிய வல்லராசாக காட்டிக்கொள்ள முனையும் சீனாவிற்கு மேற்கத்திய நாடுகள் செய்த உதவிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் அதை செய்து கொண்டே இருக்கின்றன. கூட்டிக்கழித்து பார்க்கப்போனால் சந்ததி சந்ததியாக இனப்படுகொலை /இன அழிப்பு செய்துவரும் சிங்கள ஸ்ரீலங்கா எனும் இனவாத நாட்டிற்கு சென்றுவரும் வெள்ளை உல்லாச பயணிகளுக்கு செங்கம்பளம் விரிப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள். நல்ல காலம் தனி நாடு அமையவில்லை. அதுவும் வந்திருந்தால் தமிழர்களுக்கு தமிழர்களே முற்று முழுதான எதிரிகள் ஆகியிருப்பர்.
  13. முன்னரெல்லாம் குப்பைகளை எரித்தார்கள் பாரதூர விளைவுகள் வரவில்லை. ஆனால் இன்றைய குப்பைகளோ மனித குலத்திற்கே பங்கம் விளைவிக்கும் குப்பைகளாக இருக்கின்றது. எமது முன்னோர்களை போல் இயற்கையோடு சம்பந்தப்பட்ட பொருட்களை பாவிக்க இன்றைய இளையோரை வழிநடத்தி செல்ல வேண்டும்.
  14. 2000 - 2003 யாழ் மருத்துவபீடத்தின் பீடாதிபதி என செய்தியில் உள்ளது. பீடாதிபதி பதவி யார் தயவினால் கிடைத்தது? இவருக்கு பல தகமைகள் உள்ளன. ஆனால் பதவியேற்கும் இந்த பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம். இவரிடம் ஏதோ உள்ளமையால் தானே இந்த பதவியை தனியார் நிறுவனம் வழங்குகின்றது?
  15. எப்பொழுதும் தமிழர்களை அச்சுறுத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கவே சிங்களமும் தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்கின்றனர். தமிழரை வன்முறையை பற்றி சிந்திக்கவும் அதை நோக்கி தூண்டி இந அழிப்பை செய்யவும் நடவடிக்கையிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆவா குழு, கஞ்சா எங்கிருந்து யாரால் எப்போது வடக்கில் தலைதூக்கியது என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. ஏன், தெற்கில் பாதாள உலகம் மற்றும் இவர் சொல்லும் பிரச்சனைகள் துப்பாக்கிச்சூடுகள் அதிலும் நீதிமன்றத்திற்குள் இல்லையா? ஏன் வடக்கில் மட்டும் இவ்வளவு கரிசனை? ஒரு இராணுவ அதிகாரி, நிர்வாகம் செய்ய முற்பட்டால் கருத்து சொல்ல வெளிக்கிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த பிரச்னைகள் சமூகப்பிரச்னைகள். இவற்றை உருவாக்கி, வளர்த்து, சுயநலம், வருமானம் காண்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களை நல்வழியில் நடத்துவதற்கு பதிலாக இவ்வாறான சமுக சீர்கேடுகளை,இந, மத வன்முறைகளை, முரண்பாடுகளை தூண்டி வயிறு வளர்க்கின்றனர். இதை தீர்க்க வேண்டியது நீதி, சட்ட, காவற்துறை சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இயற்றப்படவேண்டும், பிரச்சனைகள் நீதிமன்றம்மூலம் நிஞாயமாக தீர்க்கப்பட வேண்டும். அதை விட்டு ஆயுதம் தூக்க தூண்டக்கூடாது, அடக்குமுறை செயற்படுத்தக்கூடாது. உண்மை, அந்த நாடுகள்போல் இங்கு சட்டங்கள் இல்லை, நீதி இல்லை, நாட்டு நலன் இல்லை, அரசியல் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, எங்கே பிரச்சனையின் ஆரம்பம் என அடையாளம் காண முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை இவருக்கு. எல்லாவற்றையும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கிவிடலாமென நினைக்கிறார். அதனால் துரத்தப்பட்டவர்களை கண்டும் விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லை அல்லது தானும் மாட்டுப்பட்டு விடுவேன் என்கிற அச்சமோ தெரியவில்லை. இங்கு அது தான் பிரச்சனையே. அது தான் முக்கிய பிரச்சனை. அதை சரி செய்ய யாரும் இல்லை, சரி செய்யவும் விடமாட்டார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அதுவே இப்போ பெரிய கள்ளர், கொலைகாரருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இவருக்கு நாமல் போன்றவர்களுக்கு ஜனாதிபதி ஆசை அடங்கும் வரை இது தொடரும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவும்வரை இந்த நப்பாசை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போதுவிண்ணப்பதாரியின் நன்னடத்தை நற்சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு குடியேற விரும்புவோருக்கும் அவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஒரு நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ இது நடைமுறையில்லிலை. இந்த நாட்டில், பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் வடித்தெடுத்த கள்ளர், கொலை கொள்ளை, பொறுக்கி, போதைப்பொருள் கடத்திகள். நாடு எப்படி உருப்படும்? அனுர இப்படியானவர்களை தண்டித்து இப்டிப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும். நாளைக்கு இவர் தேர்தலில் நின்றாலும், தமிழர் வாக்கை இவருக்காக சேகரிக்க ஒரு கூட்டம் முண்டியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  16. மத்தியப் பிரதேசம்; தண்ணீர் கலந்த டீசலை... நிரப்பியதால், முதலமைச்சர் மோகன் யாதவின் வாகன ஊர்தியில் சென்ற 19 வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றது.
  17. இவர் பிரபல திரைப்பட இயக்குனரான மீரா நாயரின் மகன் என்று இன்று அறிந்தேன். பல நல்ல திரைப் படங்களை உருவாக்கிய சமூகப் பிரக்ஞையுடைய இயக்குனர்!
  18. ரஞ்சித் பகிர்ந்த சொந்த கதை முன்பு வாசித்துள்ளேன். சில விடயங்கள் கிரகிப்பதற்கு கடினமானவை. இப்படியும் நடக்குமா என எண்ண தோன்றும் அதேசமயம் தந்தையார் என்ன மன/உள பாதிப்பு அடைந்தாரோ எனவும் சிந்தித்தேன். உலகில் எமது பெற்றோரின் அன்புதான் முதன்மையானது. அவர்கள் அரவணைப்பிற்கு பின்னர்தான் மிகுதி எல்லாம் வருகின்றது. ஆனால் முதன்மை நிலை அன்பு/அரவணைப்பு மறுக்கப்படும்போது ஒருவரின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. மிகவும் கடினமான, கரடு முரடான பாதையை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பரிசுத்த ஆத்துமன் அமைதியில் இளைப்பாறட்டும்!
  19. 😃 அது தானே பார்த்தேன் இரண்டும் கடுவன்கள். காலமாற்றத்தில் நாயும் பூனையும் நட் பாகி விடடனர் ...இந்த மனித ஜாதி தான் திருந்தவே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.