Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8907
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7044
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    5416
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/01/25 in all areas

  1. இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி
  2. 1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன. இத்தடைகள் ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது நடவடிக்கைகளைக் கைவிட மறுத்தமையினால் மேலும் இறுக்கப்பட்டன. இடையிடையே அமெரிக்க அரசுகள் இத்தடைகளைத் தளர்த்திப் பேச்சுக்களில் ஈடுபட்டபோதிலும், ஈரானின் அணுவாயுதக் கனவுத் திட்டத்தை அது முழுமையாக நிறுத்த விரும்பாததனால் தடைகள் தற்போது அமுலில் உள்ளன. அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடாமை, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கி வருகின்றமை என்பனவே ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளுக்கு முக்கியமான காரணங்கள் என்று நினைக்கிறேன். கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
  3. இப்போது வரும் பல கட்டுரைகளில் எங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், சுமந்திரனின் பெயரை இழுத்துவிட்டு அவரை ஒரு தடவையாவது விமர்சிக்காமல் கட்டுரையாளர்கள் போக மாட்டார்கள். யாருடைய கட்டுக்குள்ளும் மனுசன் அகப்பட மாட்டார் என்பது புரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் ‘சங்கு’ பெற்ற துன்பம் நிலாந்தனுக்கும் இருக்கும். அதனால், சுமந்திரனை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அமைதியாக இருக்க மாட்டார். ஆனால், "தமிழ் கட்சிகள் ஒன்றாகவேண்டும்" என்று எழுதுவதை மட்டும் விட மாட்டார். ‘அணையா விளக்கு’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் நடந்த அவதூறு நிகழ்ச்சிக்கு சிறீதரன் தான் காரணம் என்று நேராகச் சொல்லவில்லை என்றாலும், அதைப் புரிந்து கொள்ளலாம். நிலாந்தனும் அந்த விஷயத்தை மெதுவாக தொட்டுச் செல்கிறார். உண்மையில் குற்றம் சுமந்திரனிடம் அல்ல, சிறீதரனிடம் தான். "அனைவரும் வருங்கள்" என்று சொல்லி, சமூக நலவாதிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சுமந்திரனை நேரடியாக எதிர்க்கத் தைரியம் இல்லாத,தனது கட்சிக்குள்ளேயே ஆளுமையை நிலைநாட்ட முடியாத ஒருவர், தனக்கு வேண்டாதவர்களை அவமதிக்க முயன்றிருக்கிறார். அவ்வளவுதான். சிறீதரன் ஒரு விசச் செடி என்பது சிந்தித்தால் புரியும். அவருக்கு அவரது அரசியல் நலன்தான் முக்கியம், பொதுநலமல்ல. ஒட்டுமொத்தமாகச் சொன்னால், அவருக்கு ஆசிரியர் வேலையும் சரியாக வந்திருக்காது. அவர் அரசியலில் இருப்பது தமிழருக்கும் நன்மை பயக்காது. அவர் பேசாமல் ஒரு வியாபாரியாகவே இருந்து விடலாம்.
  4. இது நம்ம அண்ணன் அடிக்கடி சொல்லும் தெலுங்கு வந்தேறி எல்லொ😂.. பிகு தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டை கொழுத்தும் 🤣
  5. தம்பியருக்கு ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது 🤭
  6. மாவீரர் பொது நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.
  7. மேற்குலகினை எதிர்க்கிறோம் என்ற நினைத்துக் கொண்டு அவற்றிற்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால் இவை தனது எதிரி நாடுகளை நட்புடன் கையாளும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது ? இதற்கு தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்திக்க வேண்டியதில்லை. அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஈரானின் கொள்கை தவறானது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் அறிவியலில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைய முடிந்தால் ஈரானின் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று தனது சொந்த வான்பரப்புப் பாதுகாப்பையே முற்றாக இழந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது..
  8. வேகக்கட்டுப்பாடு அதாவது அக்சிலேற்றரை ஏறி நின்று உழக்கினாலும் 70 km/h மேல ஓடாதவாறு செய்யுங்கோ புண்ணியமாப்போகும்.
  9. நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள். 1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.
  10. லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் நினைவுக்கல் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ் 23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.
  11. 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களா? 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள். நம்பக்கூடிய மாதிரி இல்லையே. இவ்வளவு முதலீட்டை எப்படி பெற்றார்கள்? இந்த நிர்மாணிப்பு எங்கே இடம்பெறுகின்றது? 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றால் நிச்சயம் பிரமாண்டமானாக அமையும் என ஊகிக்கலாம்.
  12. சிறிதரனுக்கு, பார் லைசென்ஸ் கறுப்புப் புள்ளி வருவதற்கு முதலே பல ஊழல், உள்ளடி வேலைகளில் "நல்ல பெயர்"😎 இருக்கிறது. இங்கே யாழிலேயே பாதிக்கப் பட்ட ஆட்கள் தேசியம் கருதி பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சிறியர் அரசியலுக்கு வந்தது சுமந்திரன் போல தன் தகுதியைப் பாவித்து தீர்வை நோக்கி நகர்வதற்காக அல்ல. தான் ஒரு புலிகளின் முக்கிய தளபதியின் உறவினர் என்ற அறிமுகத்தோடு கையில் காசு பார்க்க மட்டும் தான். இது போன்ற குற்றச்சாட்டுகள் சுமந்திரனிடம் இல்லை. வேறு குறைகள் அவரை எதிர்க்கும் மக்கள் மனங்களில் இருக்கலாம், ஆனால் சிறிதரன் போல ஊழல் பேர்வழி அல்ல சுமந்திரன்.
  13. அணுவாயுதம் என்பது தன்மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அணுவாயுதத்தைப் பாவிப்போம் என்று அச்சுருத்துவதனூடாக அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பாவிக்கும் ஒரு கருவியாகத்தான் இதுவரையில் அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் பார்க்கின்றன. ஆனால் வடகொரியாவோ ஈரானோ அவ்வாறல்ல. அவை அணுவாயுதத்தை உருவாக்குவதற்கும், வைத்திருப்பதற்கும் இருக்கும் காரணங்கள் வேறு. கிம்மைப் பொறுத்தவரை தனது சர்வாதிகாரத்தனமான ஆட்சியை, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையினை ஒரு நாடோ அல்லது கூட்டாக சில நாடுகளோ தன்மீது எடுக்கலாம், ஆகவே தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அணுவாயுதத்தை வைத்திருப்பது போலத் தெரிகிறது. ஆனால் ஈரான் அப்படியல்ல. ஈரானின் அணுவாயுதத்தின் முதன்மை நோக்கம் இஸ்ரேலை அழிப்பது, பின்னர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தன்மீது நடக்கலாம் என்று அஞ்சும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பது.
  14. கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது. நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:
  15. அனுர ஒரு சிக்னல்..காட்டினால்....போதுங்க.... போதுங்க... உள்ளகப் பொறிமுறையே வேண்டாமென்பார்..அதைவிட..நம்ம உள்ளூராட்சி சபை விசாரித்தாலே போதும் என்பார்..
  16. புத்திசாலிகளான கிம் ரீம் எப்படி மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் பாருங்கள்😂? இப்படியே சிங்களவனும் இறுகப் பூட்டிய வீடாக இலங்கையை வைத்திருந்திருந்தால் தமிழர்களே அங்கே எஞ்சியிருக்காமல் போயிருப்பர்.
  17. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இவை நீங்கள் சரியாகச் சுட்டிக் காட்டியது போல சிறந்த வாழ்க்கைத் தரமோ, நீதி முறைமையோ கொண்ட நாடுகள் அல்ல! ஆனால், இவை எவையுமே ஒரு குண்டு மணியைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் வெளிநாடுகளிடம் கையேந்தும் தோல்வியுற்ற நாடுகளும் அல்ல! வட கொரியா கடலுக்குள் விட்டு விளையாடும் வாணங்களுக்கு செலவழிக்கும் தொகையை தன் மக்களுக்கு அடிப்படை உணவு, உடை, சுகாதார வசதிகள் கொடுக்க செலவழிக்க வேண்டும். இலங்கை- அதன் குறைபாடுகள் எல்லாவற்றையும் தாண்டி - தன் மக்களுக்கு இலவசக் கல்வியும், சுகாதாரமும் வெளிநாடுகளிடம் பிச்சையெடுத்தாவது கொடுக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உங்கள் எண்ணம் போல வடகொரிய மொடலில் தனி தமிழர் தேசம் உருவாகியிருக்க வேண்டுமென்றால், அது உருவாகாமல் விட்டது தான் நல்லது!
  18. வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது. கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன. பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன. ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வண‌ங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?
  19. வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு உணவைக் கூட சீனாவும், ஐரோப்பிய யூனியனும், செஞ்சிலுவைசங்கம் போன்ற NGO அமைப்புகளும் தான் கொடுத்து உதவுகின்றன. இவ்வளவு வறுமையில் இருக்கும் மக்கள், இந்த உல்லாச விடுமுறைத் தளத்திற்குப் போய், தங்கி, mall இல் பொருட்கள் வாங்கி..என்ன விளையாட்டு இது😂? யாழ் களத்தில் கிம்மை "முன்னுதாரணத் தலைவராக" வரித்துக் கொண்ட உறுப்பினர்கள் இதை விளக்குவார்களா😎?
  20. அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஒரு தடவை என்றால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம். இதை கடந்த சில போகங்களிலும் கேள்விப்பட்டேன். தொடர்ந்து நடந்தால் அதை வித்தியாசமாகத் தானே பார்க்க வேண்டி உள்ளது. இதுபற்றி ஊரில் உள்ள @சுவைப்பிரியன் @ஏராளன் @பாலபத்ர ஓணாண்டி ஆகியோரின் கருத்துக்களை அறிய ஆவல்.
  21. Ravindran Tharmalingam Srtdopseon:,1u741h77laaa822 30210i373nul 3a1fc8lj50tafmfihm1 · தெருவில் பணக்காரன் நடக்கும் போது ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது. அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே நின்று விட்டான். தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் பார்த்து வரவேற்றான். அந்த ஏழையின் வீடு பிடிக்காவிட்டாலும் வீட்டில் இருந்து வந்த உணவின் மணம் பணக்காரனை உள்ளே போக சொன்னது. போய் தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தான். “என்ன உன் வீட்டில் இறைச்சி கறி வாசமாக வீசுகிறது”. “ஆம் ஐயா கொஞ்சம் பட்டையும், ஏலமும், கிராம்பும், மிளகும், இஞ்சியும், பூண்டும் தூக்கலாக போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்த காரணத்தால் இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள்”. பணக்காரன் தலை அசைத்தான். இலையில் சோற்றை வைத்து கட்டியாக வைக்கப்பட்ட கறிக்குழம்பை ஊற்றினான். ஆசையாக பணக்காரன் ஒருவாய் கறியை எடுத்து வாயில் வைத்தான். “இது என்ன கறி. சுவை அற்புதம்..” “ஐயா இது முயல் கறி”. “முயல் கறியா... முயல் கறி உனக்கு ஏது. விலைக்கு வாங்கினாயா” என்று சொல்லி ஆசையாக ரசித்து சாப்பிட்டான் பணக்காரன். ஏப்பம் விட்டு நன்றி சொல்லி வெளியே வரும் போது தெருநாய் ஒன்று ஏழையின் வீட்டு வாசலில் படுத்திருந்தது. “ச்சீ நாற்றம் பிடித்த நாயே நீ இங்கேயும் வந்து விட்டாயா. இந்த சனியனுக்கு நான் தினமும் எச்சில் உணவை வைப்பேன். வாசலில் காவலாய் காத்துகிடக்கும்” என்றான் பணக்காரன். “ஐயா. நீங்கள் சாப்பிட்ட சுவையான முயல் கறியின் முயலை இந்த நாய்தான் பிடித்து வந்தது. அருகில் இருக்கும் காட்டு விளைகளுக்குள் போய் இந்த நாய் நின்று கொண்டிருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமாக கொழுத்த முயல் மாட்டியது போல. பிடித்து அது கூட சாப்பிடாமல் என் வீட்டுக்கு தூக்கி வந்து விட்டது” இதைக் கேட்டதும் பணக்காரன் பொறாமையில் சட்டென்று திரும்பி நாயை வெறுப்பாக பார்த்தான். எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். மறுநாள் பணக்காரன் மதிய சாப்பாடு சாப்பிட்டு மீன் முள்ளை தூக்கி வெளியே போடப் போகையில் அந்த தெருநாய் வந்து உணவுக்காக நின்றது. “நன்றி கெட்ட நாயே. தினமும் உனக்கு எச்சில் உணவு கொடுப்பது நான். ஆனால் நன்றியே இல்லாமல் நீ பிடித்த கொழுத்த முயலை அந்த பஞ்சத்து ஏழைக்கு கொடுத்து விட்டாயே” என்று திட்டினான். பசிதாங்காமல் நாய் அந்த மீன் முள்ளை பார்த்துக் கொண்டே இருந்தது. ”உனக்கு கிடையாது போ” என்று கல்லை எடுத்து நாய் மீது எறிந்த பணக்காரன் முள்ளை காக்கைகளுக்கு வீசினான். இந்த காட்சி எல்லாம் முடியவும், ஏழை அப்பக்கம் வரவும் சரியாக இருந்தது. அவன் பணக்காரனை சட்டை செய்யாத அவசரசத்தில் இருந்தான். “வா வா என்ன ரொம்ப பசியா இருந்தியோ... எனக்கு இன்னைக்கு அரைநாள் கூலியா இரண்டு ஆப்பம் கிடைச்சது... தொட்டுக்க கொஞ்சம் துவையலும் இருக்கு. வீட்டுக்கு வா ஆளுக்கொரு ஆப்பம் சாப்பிடலாம்” என்று நாயை அழைத்தான். கதவை திறந்து விட்டான். நாய் உரிமையுடன் ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தது. வெளியே இருந்து பார்க்கும் போதே பணக்காரனுக்கு அவர்கள் ஆளுக்கொரு ஆப்பத்தை பகிர்ந்து சாப்பிடுவது தெரிந்தது. நாயும் ஏழையும் அருகருகே இருந்து சாப்பிட்டார்கள். அந்த ஏழை நாயை கொஞ்சவும் இல்லை. அன்பை பொழியவும் இல்லை. ஆனால் அவனுக்கு சரிசமாக வைத்து தன் உணவை பகிர்ந்து கொண்டான். பிறருக்கு கொடுப்பது என்பது தன்னுடைய உணவில் மிஞ்சியதை தூக்கி எறிவது அல்ல, தன்னுடைய உணவை “வா பகிர்ந்து சாப்பிடலாம்” என்று நட்பாக கொடுப்பதுதான் என்ற உண்மையை பணக்காரன் உணர்ந்தான். அந்த ஏழையின் மதிப்பான அன்பிற்கு பரிசாகத்தான் நாய் கொழுத்த முயலை வேட்டையாடி அவனுக்கு கொடுத்திருக்கிறது, தனக்கு கொடுக்கவில்லை என்ற பெரிய உண்மையையும் தெரிந்து கொண்டான். எழுத்தாளர் ஜேக் லண்டன் சுயசரிதையில் தன் பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பற்றி பேசும் போது "என்னப்பா பணக்காரர்கள் தானம் கொடுக்கிறீர்கள். பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ஏழைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நாய்க்கு எலும்பை வீசுவது அன்பு இல்லை. தனக்கு கிடைத்த எலும்பை நாயோடு பகிர்ந்து சாப்பிடுவதுதான் அன்பு” என்பதை படித்த உடன் இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியது. All credits goes to the author Voir la traduction

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.