Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    28
    Points
    87988
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20010
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8133
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/13/25 in all areas

  1. ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விடணும் கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி கழுத்தில வடம்போல சங்கிலிகள் கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன் கையை அகட்டியபடி ஒரு நடை கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன் காலில சேலில வாங்கின செருப்புகள் இடைக்கிடை என்ன வெக்கையப்பா இங்க மனுசர் வாழலாமோ என்றனும் இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும் இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும் கடை கடையா ஏறி இறங்கணும் காணாததை கண்டவன் போல கண்ணில் கண்டதையும் வாங்கி வைக்கணும் கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க கடையில மலியப்போட்ட சாமான்களை கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும் ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும் உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம் மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும் கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர் கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும் அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும் அப்படியே நாலு கடற்கரை போகணும் அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம் அப்படியே ஏலுமென்றால் சந்தையும் இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும் அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும் ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு உதுதான் எங்கட குலதெய்வம் என்று ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும் ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும் உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும் ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும் வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம் வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று எல்லாம் முடிய ஏக்கங்களோட மிளகாய் தூளும் அரிசி, வேற வகை மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும் மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும் வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂 உண்மை உரைகல்
  2. மாட்டுவண்டி ஊர்போய் சேருவது மாத்திரமல்ல இடைஇடை கள்ளுக்கடையிலும் நிற்கும்.
  3. 2 points
    புறாக்கள் அ ஓர் கருப்பு ஆங்கிலேய மேக்பை ஆங்கிலேய தாரைப் புறா ஆச்சன் லகுவர் கேடய ஆந்தை (=Aachen Luster Shield,[1] ELFP-No. D/705;[2] = Aachen Shield Owl[3]) ஆப்பிரிக்க ஆந்தை (GB/710)[2] ஆல்டென்பர்கர் தாரைப் புறா (D/513)[2] அமெரிக்க ராட்சத ரன்ட் புறா அமெரிக்கன் சோ ரேசர் (ESKT/031)[2] அனடோலிய ரிங்க்பீட்டர் (TR(D)/1104)[2] ஆன்ட்வெர்ப் சுமெர்லி (B/701)[2] அரேபிய தாரைப் புறா (D/514)[2] அரச புறா (ESKT/204)[2] ஆர்க்காங்கல் (புறா) (=Gimpel (D/402)) ஆர்மீனியன் டம்ப்லர் ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர் ஆங்கிலேய கேரியர் (=Carrier (GB/101)[2]) ஆங்கிலேய விசிறிவால் (=Garden Fantail (GB/608)) ஆங்கிலேய நீளமுக டம்ப்லர் (clean legged (GB/830)[2] and muffed (GB/831)[2]) ஆங்கிலேய மேக்பை (GB/807)[2] ஆங்கிலேய நன் புறா (=Nun (GB/896)) ஆங்கிலேய பவுட்டர் (GB/310)[2] ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா (GB/832)[2] ஆங்கிலேய தாரைப் புறா (ESKT/508)[2] இ இந்திய விசிறிவால் (ESKT/607)[2] இந்திய கோலா இத்தாலிய ஆந்தை (I/706)[2] இலாகூர் புறா (D/037)[2] ஈரானிய ஹைஃப்லையர் உ உக்ரைன் ஸ்கைகட்டர் (=Ukrainian Skycutter, =Polish Eagle (PL/963)) உரல் கோடிட்ட பிடரி புறா எ எகிப்திய ஸ்விஃப்ட் (GB/043)[2] எலிசிடர் புருசுலர் (=Old German Magpie Tumbler (D/828)) க ஓர் சிவப்பு கார்னியா ஓர் வெள்ளை குமுலெட் டிரகூன் கலடி கர்ணப் புறா ஆண் ஓர் சிவப்பு ஹெல்மெட் கொண்டைப் புறா ஓர் கருப்பு ஹெல்மெட் புறா கார்னியா (F/007)[2] கவுசோயிசு புறா (F/008)[2] கோபர்க் வானம்பாடி புறா (D/025)[2] கொலோன் கரணப் புறா (D/827)[2] கொண்டை சவுல்சு புறா (F/018)[2] குமுலெட் (GB/822)[2] கடிடானோ பவுட்டர் (=Gaditano Cropper (E/337)[2]) கலட்சு சுழல் கரணப் புறா (RO/974)[2] கென்ட் கிராப்பர் (B/309)[2] கிரானடினோ பவுட்டர் (E/343)[2] ஹெல்மெட் புறா ஹோல்லே கிராப்பர் (NL/331)[2] ஹோமிங் புறா காலர் புறா (GB/605)[2] கீவ் கரணப் புறா (RUS(D)/891)[2] கோமன் கரணப் புறா (H/857)[2] கீழை சுருள் புறா (GB/714)[2] கீழை சுழல் கரணப் புறா (D/850)[2] சுழல் கரணப் புறா, ச செகடினர் ஹைஃப்லையர் சீன பறக்கும் புறா[3] (=Chinese Nasal Tuft; Chinese Tumbler (D/914)) சீன ஆந்தை (D/609)[2] சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா சுருள் இறகுப் புறா (D/601)[2] ஜெர்மன் பியூட்டி ஹோமர் (D/032)[2] ஜெர்மன் மோடெனா (D/206)[2] ஜெர்மன் நன் (D/897)[2] சாக்சன் ஃபேரி சுவாலோ சாக்சன் பீல்டு புறா (D/475)[2] சாக்சன் துறவி (D/467)[2] சாக்சன் சீல்டு (D/471)[2] சாக்சன் ஸ்பாட் (D/472)[2] ஸ்கான்டரூன் (D/105)[2] ஸ்மால்கல்டன் மூர்ஹெட் (D/602)[2] செர்பிய ஹைஃப்லையர் (SRB/886)[2] சிராசு டம்ப்லர் (D/920)[2][1] சவுத் ஜெர்மன் மாங் (muffed (D/436)[2] and clean legged (D/437)[2]) சவுத் ஜெர்மன் சீல்டு (D/438)[2] ஸ்டார்கார்டு சேக்கர் (D/818)[2] (German: Stargarder Zitterhals) இசுடார்லிங் புறா (D/405)[2] இசுடிரால்சுன்டு ஹைஃப்லையர் (D/804)[2] சிராசர் புறா (D/023)[2] ஸ்வெர்டுலோவிஸ்க் நீல சாம்பல் பல அம்ச தலை புறா செகடின் ஹைஃப்லையர் (H/861)[2] ஜிட்டர்ஹால் (=Stargard Shaker (D/818)) ட டமாஸ்கஸ் புறா (GB/042)[2] டானிசு காலர் (DK/604)[2] டானிஸ் சுவாபியன் (DK/404)[2] டானிசு டம்ப்லர் (DK/810)[2] டான்சிக் ஹைஃப்ளையர் (D/816)[2] டபிரசின் கர்ணப் புறா (H/849)[2] டொமஸ்டிக் சோ பிலைட் Domestic Show Flight (ESKT/915)[2] டோமினோ சுருள்Domino Frill (GB/715)[2] டோனெக் (=Dunek) டிரெசுடன் தாரைப் புறா (D/505)[2] டச்சு பியூட்டி ஹோமர் (NL/033)[2] டச்சு கிராப்பர் (NL/302)[2] டார்மிகன் (GB/611)[2] டிப்லர் புறா டர்பிட் (GB/711)[2] டிரகூன் (GB/104)[2] ந நார்விச் கிராப்பர் (GB/306)[2] நன் (GB/896)[2] (=English Nun) நிஸ் வெள்ளை வால் ஹைஃப்லையர் த துரிஞ்சன் வண்ண புறா, a group of pigeon breeds ப பிரித்தானிய சோ ரேசர் புருன்னர் பவுட்டர் பழைய டச்சு கபுசின் புராதான கரணப் புறா (D/907)[2] பார்பு புறா (Barb pigeon) (GB/102)[2] பெல்ஜிய ரிங்க்பீட்டர் (B/1102)[2] பெர்லின் சார்ட் ஃபேசுடு கரணப் புறா (D/904)[2] பிஜல்ஜினா சுழல் கரணப் புறா (BiH/1008)[2] பர்மிங்கம் சுழல் கரணப் புறா (GB/918)[2] பொகாரா தாரைப் புறா (GB/501)[2] பிரெசுலோ கரணப் புறா (D/911)[2] பிரித்தானிய சோ ரேசர் புருன்னர் பவுட்டர் (CZ/330)[2] புடாபெஸ்ட் ஹைஃப்லையர் (Poltli) பர்சா கரணப் புறா (TR(D)/894)[2] பெலசிகாசா கரணப் புறா (H/858)[2] பிரெஞ்சு மான்டைன் (F/006)[2] பனிப் புறா (D/403)[2] பழைய டச்சு கபுசின் (NL/603)[2] பழைய டச்சு கரணப் புறா (NL/826)[2] பழைய கீழை சுருள் (=Old Oriental Owl (D(USA)/726)) பழைய ஜெர்மன் கிராப்பர் (D/301)[2] பழைய செர்மானிய ஆந்தை (D/704)[2] பழைய கீழை ஆந்தை (D(USA)/726)[2] (=Old Fashioned Oriental Frill) பாகிஸ்தான் ஹைஃப்லையர் பார்லர் சுழல் கரணப் புறா பிக்மி பவுட்டர் (GB/329)[2] போலந்து ஹெல்மட் (=Polish Krymka Tumbler (PL/934)) ம மோடெனா மோடெனா (GB/205)[2] மஃப்ஃபெடு ஹெல்மட் (=Polish Helmet, =Polish Krymka Tumbler (PL/934)) மேற்கு இங்கிலாந்து டம்ப்லர் (GB/833)[2] ர ரமனோல். ரவுபைசியன். ரேசிங் ஹோமர் ரிவர்சேவிங் பவுட்டர் (=Reversewing Cropper (D/304)[2]) (German: Verkehrtflügelkröpfer) ரோசன் சிராக் ல லுசெர்ன் தங்க காலர் லுசெர்ன் தங்க காலர் (CH/421)[2] வ விசிறிவால் வியன்னா ஹைஃப்லையர் விசிறிவால் புறா (GB/606)[2] வாலன்சிய ஃபிகரிட்டா (=Valencian Frill (E/722)[2]) வியன்னா ஹைஃப்லையர் (A/981)[2] ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர் (NL/327)[2] மேலும் காண்க வளர்ப்புப் புறா வீட்டுப் புறா ஆடம்பரப் புறா டிப்லர் புறா மேற்கோள்கள் Encyclopedia of Pigeon Breeds: List of Pigeon Breeds Entente Européenne d’ Áviculture et de Cuniculture (2012): EE-List of the breeds of fancy pigeons (ELFP) National Pigeon Association (2014): Breeds: from the NPA Standard (table of contents by name) பகுப்புகள்: Articles containing German-language text புறாக்கள் இப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2024, 06:48 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.Pßü
  4. நாம் நமது காதலி அல்லது மனைவி மற்றும் அக்கா தங்கைகள் கூட இவ்வாறு விசா இல்லாமல் பல எல்லைகளை கடந்து வந்து இங்கே திருமணம் செய்து வாழ்வோரே. அப்படியானால் அவர்களின் படங்களை இவ்வாறு உலகம் முழுவதும் பிரசுரித்தால் எப்படி இருக்கும் எமக்கு?????
  5. கொழும்பு - யாழ்ப்பாணம் பேரூந்துகளில் போகும் போது.. கூடுமானவரை தண்ணீரை குறைத்து அருந்தி பிரயாணம் செய்வது நல்லது. அதிக நீர் அருந்தினால்... அடிக்கடி ஒன்றுக்கு போக வேண்டி வரும். பேரூந்து சாரதி நிறுத்தும் சில மலசல கூடங்களுக்குப் போனால், இல்லாத வியாதிகளையும் வாங்கிக் கொண்டு வரவேண்டி வரலாம். காட்டுப் பக்கம் ஒதுங்கினால்... தவிச்ச முயல் அடிப்பதற்கு என்றே... பல கள்வர்கள் பதுங்கி இருப்பார்கள் போலுள்ளது. 😂
  6. சாரத்துக்கும் சாராயத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? சாராயம் சாரத்தையும் அவிழ்த்துவிடும் பிரியரே, பின்பு பொத்திக்கொண்டுதான் ஓடவேண்டும். அனுபவம் இருந்தால் எழுதலாம் வாசிக்க மறுப்பில்லை.
  7. என்னில் அவ்வளவு நம்பிக்கையை வைத்தமைக்கு நன்றி அல்வாயன். 🙏 நான் வாழும் நாட்டில் கூட… தேவையில்லாத ஆடம்பரங்களை செய்வதில்லை. இது @குமாரசாமி , @Paanch அண்ணை ஆகியோருக்கும் தெரியும்.
  8. இது முகநூலிலும் காணக்கிடைக்குது...இவரா அவர் என நினைக்க வைத்தாலும் ...சிறியர் அங்கு வரமாட்டார் என்பது என் நம்பிக்கை...படம் சேப்பு சீப்புக்கூட சந்தேகம் ஏற்படுத்துது....எனது நம்பிக்கையை சிறியர் தகர்க்கமாட்டார்...என்ன சிறியர் சரிதானே...
  9. சுமந்திரனுக்கு வாக்குப் போட்டு, முதல் அமைச்சாராக்குகின்ற மக்கள் அங்கு இல்லை. ஏற்கெனவே சுத்துமாத்தின் அரசியலுக்கு… சென்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுரை எழுதியாகி விட்டது. இனி… சுமன் முக்குவதில் அர்த்தமில்லை. மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விட தமிழ் மக்களுக்கு விசரே. 😂 🤣
  10. ஹர்த்தால் உண்ணாவரதம் என்று ஈடுபட்டாலே தமிழ் மக்களின் மனங்களைக் கவரலாம் அப்போ தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பார்க்கலாம் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். மாகாணசபை தேர்தல் மட்டும் இப்படி நிறையவே நடக்கும். முதலமைச்சராகிய பின்பு இதே இராணுவமே எனக்கு பாதுகாப்பு வழங்கும்.
  11. பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.
  12. அந்தப் பெண் அதுவும் 25வயது இளம்பெண் எந்தப் பாதிப்புச் செய்திகளும் இன்றி முகமில் ஒப்படைக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது.😍 அவர் தன் காதலனை மணந்து இன்புற்று வாழ வாழ்த்துக்கள்!!🙌
  13. இல்லை சாத்தான். நான் ஊருக்குப் போனால்... அங்குள்ள மக்களாகவே மாறி விடுவேன். சாரம், வேட்டி, பாட்டா செருப்பு, ஒரு மஞ்சள் பை... போன்றவை தான் எனது சீருடை. 😂
  14. 1 point
    பலதரப்பட்ட புறாக்களின் பகிர்வுக்கு நன்றி ......... ! 😀
  15. அம்பாறை தொகுதியில்.. சிங்களவன் பியசேன என்பனை தமிழரசு கட்சியில் போட்டியிட வைத்து... பாராளுமன்றம் அனுப்ப, அவன் ஓடிப் போய் மகிந்த கட்சியில் இணைந்து... சம்பந்தனுக்கு அல்வா கொடுத்த சம்பவமும் நடந்தது. இப்படி.... சம்பந்தனின் ராஜதந்திரம் எல்லாம் சாயம் வெளுத்த சம்பவங்கள் நிறைய உண்டு. சம்பந்தன், தமிழனை காட்டிக் கொடுத்து.... சாகும் மட்டும்... அரசாங்க மாளிகையில் சொகுசாக இருந்து, அனுபவித்துப் போனது தான், அரசியலில் செய்த சாதனை.
  16. சுமந்திரன்... மைத்திரியின் கூட்டரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் போது மட்டும்... இராணுவத்துடன் தோழில் கை போட்டுக் கொண்டு, "டூயட்" பாடி திரிவாராம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்று, செருப்படி வாங்கி... வீட்டில் குந்தி இருக்கும் போது மட்டும், இராணுவம் கசக்குதாம். இந்தப் புத்தி முன்பு ஏன் வரவில்லை.
  17. உங்கள் உள்ளக்கோயிலில் நெட்டன்யாகு சுவாமிகள் வீற்றுள்ளார்.
  18. உங்கள் & நண்பர்களின் தன்னலமற்ற சேவைகள் தொடர வாழ்த்துகள் தம்பியை சந்தித்தேன் உங்களை சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை சந்திப்போம்
  19. பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள் அமைப்பினரால் காரைநகரில் அத்தியாவசியப் பணி நிறைவேற்றப்பட்டது கடந்த 04/07/2025 வெள்ளிக்கிழமை அல்வின் வீதி, காரைநகரைச் சேர்ந்த திரு வே.நாகராசா (3பேர் விசேட தேவை உடையவர்கள்) ஐயாவின் வீட்டிற்கு குடிநீருக்காக புதிய தண்ணீர்தாங்கி பொருத்தி, பழுதடைந்திருந்த மலசலகூடத்தினை மீளப்புனரமைப்பு செய்துள்ளோம். இப்பணிகளுக்காக 44110 ரூபா செலவு செய்துள்ளோம். இந்த அத்தியாவசியப் பணியை செய்ய நிதி உதவி அளித்த பே்மிங்காம் (2016) உதவும் கரங்கள் அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசேடமாக இவ்அமைப்பின் செயற்பாட்டாளர்களான திரு கதிர் அண்ணா, திரு இராசகுமார் அண்ணா, திரு ஜெயசசி அண்ணா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளை பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்று செய்வித்த புலர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கு.பாலகிருஸ்ணாவிற்கும் கணக்காய்வாளர் திரு சி.சிறீரங்கன் அவர்களிற்கும் J/46 கிராம சேவகராக உள்ள திருமதி ப.சிவப்பிரியா அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி குயிலினி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிகிறோம். உதவிகள் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழுள்ள எமது WhatsApp இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். +94 77 777 5448 +94 77 959 1047 ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
  20. நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்
  21. மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும் ******** ****** **** *இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை. *இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை! *முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்! *** *** *** 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்... இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது? தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா? ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன. ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா? இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது. எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது. ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது. ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்... ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும். ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.... அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம். ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இப் பின்புலத்தோடு---- 2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ---- முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்! ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே ----- 2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும். ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது. இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும். அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும். மாறாக... இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம். இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம். ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?
  22. ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.
  23. கடந்த வாரம் கனடாவிலிருந்து நல்லூர் திருவிழாவிற்கு சென்றவராகத் தான் இருக்க வேணும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் இயற்கை கடன் கழிக்க போனவரை அடித்து, காயப்படுத்தி விட்டு 5 பவுண் நகை களற்றி எடுக்கபட்டதாக அறிந்தேன்.
  24. ஏழாவது(July) மாதச் செலவுகள் மூன்றாவது மாதத்தில் இருந்து புதிதாக காரைநகரைச் சேர்ந்த இரண்டு விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்த உதவி வழங்க தொடங்கி உள்ளோம் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவோரின் விபரங்கள் 1) செல்வி இரட்சகன் நிவேதா (வயது 25) (காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவருடைய தாயார் திருமதி இ.சுதாரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 2) திரு ஏரம்பு கண்ணதாசன் (வயது 34) 3) திரு ஏரம்பு கரிதாசன் (வயது 33) (பொன்னாலை மேற்கு, (ஒரே குடும்பம்) 10000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஏ.பராசக்தி அவர்களுடைய தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 4) செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த் (வயது 13) (பொன்னாலை மேற்கு) 5000 ரூபா செல்வன் ம.டினுசாந்த் அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 5) செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன் (வயது 20) (சுழிபுரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி பா.சந்திரகலா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 6) செல்வி ஜசிந்தன் பவன்யா (வயது 16) (சுழிபுரம் மத்தி) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஜ.சுபாஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 7) செல்வி மகாலிங்கம் நிரோஜினி (வயது 25) (தொல்புரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ம.சரோஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 8) செல்வி சாந்தகுமார் கோபிசா (வயது 10) (பாண்டவெட்டை சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி சா.ரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 9) செல்வி ஐங்கரன் கருண்யா (வயது 8) (விக்காவில், காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஐ.ரதிலேகா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 10) செல்வி நாகராசா சசிகலா (வயது 36) (அல்வின் வீதி, காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய சகோதரி செல்வி நா.மஞ்சுளாதேவி அவர்களின் இலங்கை வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. மாதாந்தக் கொடுப்பனவிற்காக 50000 ரூபா 22/07/2025 அன்று மீளப்பெறப்பட்டு அன்றே தபாலக சேமிப்புக் கணக்குகளில் 9 பேருக்கு வைப்புச் செய்யப்பட்டது. ஒருவருக்கு 23/07/2025 இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது. எமது புலர் அறக்கட்டளைக்கு உதவ விரும்பும் கருணை உள்ளம் கொண்ட உறவுகள் +94 77 777 5448 அல்லது +94 77 959 1047 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம். மூவர் இணைந்த வங்கி விபரம் K BALAMURUGAN R PARANEETHARAN S THEVAKUMARAN A/C NO: 107250178888 National Savings Bank Chankanai Jaffna Sri Lanka SWIFT CODE - NSBALKLX
  25. பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது 21/07/2025 டென்மார்க்கைச் சேர்ந்த ஐங்கரன் சிவகுமார் மற்றும் லண்டனைச் சேர்ந்த அருணேஸ் கணேஸ்குமார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள், பிஸ்கற் வழங்கப்பட்டது. இருவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வளத்துடன் வாழ வாழ்த்துகிறோம். இந்நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து நடத்திய செயலாளர் திரு த.மோகன்றூபன் (PHI) முன்னாள் உபசெயலாளர் திரு இ.சிறிதரன் (அதிபர்) ஆகியோருக்கு எமது நன்றிகள். மேலும் இந்நிழவுக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் திரு இ.சிவகுமார் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் இது போல உதவிகள் வழங்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். T.P : +94 77 777 5448. ஒளிப்பதிவு திரு த.மோகன்றூபன்.
  26. வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.! கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 13, 2025 வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும். சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும். நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது. நானும் வீரமுனையை பிறப்பிடமாக கொண்டவன். 1990ஆம் ஆண்டுவரையில் வீரமுனையிலேயே இருந்துவந்தோம். வீரமுனை-சம்மாந்துறை எல்லைப்பகுதியிலேயே எங்கள் வசிப்பிடமிருந்தது. அதன்காரணமாக நான் அறிந்த காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தோம். குறிப்பாக 1988ஆம் ஆண்டு ஒரு தடவை வீரமுனை தீக்கிரையாக்கப்பட்டபோது எங்களது வீட்டில் இருந்த பொருட்களை எங்களது வீட்டுக்கு அருகிலிருந்து சகோதர இனத்தவர்கள் அள்ளிச்சென்றதை கண்டதாக எனது தந்தையார் தெரிவித்தார். இதேபோன்று எனது தந்தையின் மோட்டார் சைக்கிளும் அவ்வாறே ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது. நாங்கள் வீரமுனையில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பிரச்சினையே 1990ஆம் ஆண்டு பூதாகரமான அழித்தொழிப்பாக அமைந்தது. 1989ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் வீரமுனை மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள். இரவோடு இரவாக பல தடவைகள் இடம்பெயர்ந்த அனுபவங்கள் எனக்கும் உள்ளது.வீரமுனையிலிருந்து காரைதீவுக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். இதேபோன்று வீரச்சோலைக்கும் இடம்பெயர்ந்து சென்ற அனுபவம் இருக்கின்றது. அதிலும் 1990ஆம் ஆண்டு ஜுன்,ஜுலை,ஆகஸ்ட் மாதம் என்பது வீரமுனை மக்களினால் என்றும் மறக்கமுடியாத நாளாகும். அம்பாறையிலிருந்து இராணுவம் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது பல்வேறு அட்டூழியங்களை செய்ததுடன் அதற்கு துணையாக முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மாறியிருந்தனர். வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் எங்கள் குடும்பம் இருந்தது. இதனைப்போன்று வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வீரமுனை,வீரச்சோலை,மல்வத்தை,வளத்தாப்பிட்டி,மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காக அனைவரும் தஞ்சமடைந்திருந்தனர். முகாமிலிருந்த காலப்பகுதியில் தினமும் அழுகுரல்களே கேட்கும்.முகாமிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றவர்களை காணவில்லை,முகாமிலிருந்து வெளியில் சென்றவர்களை கொண்டுபோரார்கள் என்று தினமும் அழுகுரல்களே ஒலிக்கும். இரவு வேளைகளில் அழுகுரல்களே கேட்கும். அச்சம் நிறைந்த சூழலே காணப்படும். எங்களது முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் வந்துசெல்லும் செஞ்சிலுவை சங்கம் வந்துசென்றால் அதன் பின்னர் இராணுவ வாகனங்கள் ஊர்காவல் படையினர் சூழ வருகைதந்து முகாம் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள்,குடும்பதினர் என பஸ்களில் ஏற்றிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் திரும்ப வரமாட்டார்கள்.எங்களது தந்தையை இரண்டு தடவை கொண்டுசெல்வதற்கு இராணுவம் முயற்சிசெய்தபோது அங்கிருந்த பெண்கள் தமது பாவடைகளுக்குள் மறைத்து எங்களை பாதுகாத்ததை இன்று நினைக்கும்போதும் அச்சம் ஏற்படும். இவ்வாறு பல தடவைகள் எங்களது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் பலர் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டபோதிலும் அதில் யாரும் திரும்பி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு தடவை எமது ஆலய வளாகத்திற்குள் மனித தலையொன்று எரிந்த நிலையில் கிடந்ததை இன்றும் மறக்கமுடியாத நினைவு இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்புக்கு வரும்போது அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அதும் தமக்கு தெரிந்த நபர்கள் வந்திருப்பதாக அக்காலத்தில் பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். வீரமுனை படுகொலை நடைபெற்றபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் வந்ததாக அந்த முகாமிலிருந்த மக்கள் சாட்சி பகிர்ந்தனர். அதுவும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென்பதே அனைவரது கவலையாகவும் இருக்கின்றது. குறிப்பாக இந்த படுகொலைகள் நடைபெற்ற நிலையில் வீரமுனை உட்பட முகாமிலிருந்த மிகுதியான மக்கள் திருக்கோவில்,தம்பிலுவில் போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அகதிமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வீரமுனை உட்பட அனைத்து கிராமங்களும் முற்றாக சூறையாடப்பட்டது. வீரமுனை மக்கள் வீரமுனைக்கு வரும்போது எதுவும் இல்லாத நிலையிலேயே வந்து குடியேறினார்கள். இவ்வளவு அநியாயங்கள் வீரமுனை மக்களுக்கு அருகில் புட்டும் தேங்காய் பூவுமாக இருந்தவர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் நடந்த அநியாயங்களுக்கு இதுவரையில் தமிழ் மக்களிடம் வருத்தம்கூட தெரிவிக்காத நிலையே இன்றுவரையில் இருந்துவருகின்றது. அதனையும் தாண்டி தமது கிராமத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு கோபுரத்தினையும் அமைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளே அன்று வீரமுனையின் அழிவுக்கு துணையாக நின்றவர்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணமாகும். வீரமுனை கிராமம் என்பது வெறுமனே வந்தேறுகுடிகள் அல்ல அந்த மண்ணின் பூர்வீக குடிகள். இரு இனங்களும் தங்களுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதன் ஊடாக எதிர்காலத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தமுடியும். வெறுமனே ஒரு இனத்தின் கலாசாரத்தினையும் பண்பாடுகளை புதைத்துவிட்டு தாங்கள் வாழ நினைத்தால் அது எவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை உண்மையான மனித நேயத்தினை மதிக்கும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். வீரமுனை மக்கள் தங்களுக்கு நடந்த அநீயாயங்களை மறந்து தமது சக மதத்தவருடன் கடந்தகால கசப்புகளை மறந்துவாழும் நிலையில் தாங்கள் வரவேற்பு கோபுரம்போன்றவற்றிற்கு காட்டும் எதிர்ப்பானது எதிர்கால சமூகத்தின் மனங்கள் வடுக்களை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர்ந்துசெயற்படவேண்டும். தொடரும்…………………. https://www.battinatham.com/2025/08/blog-post_167.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.