Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    12678
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87986
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19102
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    20008
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/16/25 in all areas

  1. அவுஸ்திரேலியா 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா , இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே 9 அல்லது 9 க்கு மேல் புள்ளிகள் பெற முடியும். இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் ஒரு போட்டி நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு நாடு மட்டுமே 9 புள்ளிகள் பெறமுடியும். (இந்தியாவால் அதிகபட்சம் 10 புள்ளிகள் பெற முடியும்). இதனால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு செல்லும் (அரை இறுதிக்கு செல்லும் 4 நாடுகள்) வாய்ப்பினை பெற்றுள்ளது. வினா 32) அரையிறுதிக்கு தெரிவாகும் முதலாவது நாடு அவுஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 36 புள்ளிகள் 2) ஏராளன் - 34 புள்ளிகள் 3) ரசோதரன் - 34 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 32 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) வீரப்பையன் - 32 புள்ளிகள் 7) புலவர் - 30 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 30 புள்ளிகள் 9) சுவி - 29 புள்ளிகள் 10) வசி - 26 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 26 புள்ளிகள் 12) வாதவூரான் - 26 புள்ளிகள் 13) கறுப்பி - 26 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 38)
  2. கார் முன் இருக்கைகளில் குறித்த வயதுவரை குழந்தைகளை உட்கார வைத்தல் ஆகாது. பின் இருக்கையில் கூட, இருக்கையின் அடித்தளத்தில் பயணியின் பிட்டம், தொடை பகுதி சமாந்தரமாக பதிந்து, முழங்கால் மூட்டு 90 பாகை வளைந்து, பாதம் தரையில் சமாந்தரமாக பதியும் அளவு உடல் உயரம் வளரும் வரை பூஸ்டர் சீட் எனும் துணை இருக்கை பயன்படுத்த வேண்டும். முன்னிருக்கையில் சில கார்களில் ஏர் பேக் கை தற்காலிகமாக செயலிழிக்க செய்யும் வசதி உள்ளது. இது குழந்தைகளை பூஸ்டர் அல்லது சைல்ட் சீட்டில் வைத்து முன் இருக்கையில் அமர்த்த உதவினாலும். பின் இருக்கையில் இவற்றை போட்டு அமர்துவதே மிக பாதுகாப்பானது. இதை எல்லாம் விட்டு விட்டு, குழந்தையை டிரைவரின் மடியில் வைத்து ஓடி விட்டு, ஏர் பேக்கை குறை சொல்ல முடியாது.
  3. இவர்கள் திருந்தப்போவதில்லை.இந்தியாவின் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மைகள். இந்தியா மாகாணசபை முதல்வராக ஒரு பொம்மை முதலமைச்சரைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை விட்டு விட:டு 13ஆம் திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது.சமுன்னணியைக் கூப்பிட வேண்டாம் என்று இந்தியா சொல்லி விட்டதோ?அது சரி வரதராஜப்பெருமாள் பிரகடனப்படுத்திய தமிழீழப் பிரகடனம் என்னாச்சு?
  4. வினா 18) 10 விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலியா அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 35 புள்ளிகள் 2) ஏராளன் - 33 புள்ளிகள் 3) ரசோதரன் - 33 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 31 புள்ளிகள் 5) கிருபன் - 31 புள்ளிகள் 6) வீரப்பையன் - 31 புள்ளிகள் 7) புலவர் - 29 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 29 புள்ளிகள் 9) சுவி - 28 புள்ளிகள் 10) வசி - 25 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 25 புள்ளிகள் 12) வாதவூரான் - 25 புள்ளிகள் 13) கறுப்பி - 25 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 15) வாத்தியார் - 23 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 37)
  5. உண்மையில் இப்படியாக முட்டாள் வேலைகள் செய்யும் பெற்றோரை, அவர்களது இழப்பையும் பொருட்படுத்தாமல் சிறுவர் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி சிறையில் போட வேண்டும். ஏனைய குழந்தைகளைக் காப்பாற்ற இது ஒரு வழியாக இருக்கும். 7 வயதுக் குழந்தை முன் இருக்கையில் இருப்பதே விதி மீறல், இந்த லட்சணத்தில் மடியில் வைத்துக் கொண்டு வேறு பயணம்! தற்கால வாகனங்களில் முன் இருக்கையின் எயார் பாக் ஒரு குறிப்பிட்ட நிறை இருந்தால் மட்டும் தான் செயல்படும் படி வைத்திருக்கிறார்கள். நிறை குறைந்த குழந்தையை முன்னிருக்கையில் வைத்து பெல்ற் போட்டாலும் எயார் பாக் வேலை செய்யாது. வாகனம் நகர ஆரம்பித்ததும் எச்சரிக்கை மணி கூட ஒலிக்கலாம். இது இந்தியாவில் நடந்திருக்கிறது. இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!
  6. நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்குமாக.. நாட்டு மக்களையும், இளைய சமுதாயத்தையும் சீரளித்துக் கொண்டு இருக்கும் கோர சிந்தனை உடையவர்கள். சில வாரங்களுக்கு முன்…. இந்தக் கும்பலின் 850 கிலோ பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப் பட்டிருந்தது. அந்த 850 கிலோவும் அடுத்த பத்து வருடத்துக்கு இலங்கையின் பாவனைக்கு போதுமானது என்று வாசித்தேன். அத்துடன் எல்லாம் முடிந்தது என்று பெரு மூச்சு விடுவதற்கிடையில்…. நேற்று தெற்கு கடல் பகுதியான தங்காலையில் 840 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் 51 சாக்குகளில் கடலில் மிதந்த வண்ணம் இருந்ததை கடற்படையினர் கண்டு எடுத்துள்ளார்கள். இவை எல்லாவற்றின் பெறுமதி பல பில்லியன் ரூபாய்களை தானும் என்கிறார்கள். ஆக…. இந்தப் போதைப் பொருள் வலையமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இதன் ஆணி வேரைத் தேடிப் போனால்… நிச்சயம் பெரும் கொழுத்த அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பது கசப்பான உண்மை. இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். ஆகவே…. வேரோடும், வேரடி மண்ணோடும் இந்த வலையமைப்பை அழித்து ஒழிக்கும் வரை… கைது செய்யப்பட்டவர்களை முட்டிக்கு முட்டி தட்டி… விசாரிக்க வேண்டும்.
  7. 33/35 =0.943 = 94.3% சரியாக புள்ளிகள் பெற்று முன்னிலையில் அகஸ்தியன் இருக்குறார்.
  8. வினா 17) மழை காரணமாக பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் 2) ஏராளன் - 31 புள்ளிகள் 3) ரசோதரன் - 31 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 29 புள்ளிகள் 5) கிருபன் - 29 புள்ளிகள் 6) வீரப்பையன் - 29 புள்ளிகள் 7) புலவர் - 27 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 27 புள்ளிகள் 9) சுவி - 26 புள்ளிகள் 10) வசி - 23 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 23 புள்ளிகள் 12) வாதவூரான் - 23 புள்ளிகள் 13) கறுப்பி - 23 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 23 புள்ளிகள் 15) வாத்தியார் - 21 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 17, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  9. சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை. சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார். இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்... ஆகவே ------ A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்? B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்? அப்படியானால் ---- 13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா? இல்லையே? 1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே? 2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே? இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது. நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது... அது மாத்திரமல்ல --- ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை... உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்? அத்துடன் ---- ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது. இந்த மடைமாற்றங்கள் --- ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்? புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது. ஆகவே ----- ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்----- -------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?
  10. சமாதானத்துக்கான நோபல் பரிசு sudumanal 2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார். இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது. யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார். பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர். அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர். சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர் இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர். அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு. கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya) நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார். மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை. எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார். இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது! ravindran.pa https://sudumanal.com/2025/10/11/சமாதானத்துக்கான-நோபல்-பர/
  11. 1) அகஸ்தியன் - 36 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் இல் விட்டதை எல்லாம் வீராங்கனைகளை வைத்து பிடிக்கிறார்.
  12. கற்காலத்துக்கு போகப் போகினம்..இனி முதல்லையிருந்து இரத்தப்பொட்டு வைப்போ தெரியவில்லை
  13. 👍.............. இயன் ஹீலியை தெரியும்........... அந்த நாளைய அலன் போர்டர் குரூப் தானே............ பெறாமகள் 16 அடிகள் பாய்கின்றாரே................... எங்களின் அப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள் வேலி தான் பாய்ந்தார்கள்........... நாங்களும் அவர்களை விட அதிகமாகவே பாய்ந்தோம்..................🤣.
  14. கிரிக்கெட் என்று மட்டும் இல்லாமல், நீங்கள் சிலர் பல உள் வீட்டு விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே....................😜. ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து விலக்கி விடலாம்...............🤣.
  15. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், முதலமைச்சர் போட்டியில் இருக்கும் போது… சுமந்திரனை முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்க இந்தியா சம்மதிக்காது. இதிலும் சுமந்திரன்… “இலவு காத்த கிளி” தான். சுமந்திரனுக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை. அதற்கு எப்போதோ முடிவுரை எழுதப்பட்டு விட்டது. “தான் வெட்டிய குழியில்… தானே விழுந்து உத்தரிக்கும்” சீவன் என்றால் அது சுமந்திரன் தான். 😂
  16. 🤣 அருமையாகக் "கற்பனைக் கதை எழுதியிருக்கிறார் பா. ரவீந்திரன்! இப்படியாக சாவேஸ் அமெரிக்க எண்ணைக் கம்பெனிகளை கையகப் படுத்திய போது வெளிநாட்டு மூலதனம் 1.2 பில்லியன்களில் இருந்து இருந்து 200 மில்லியன்களாகச் சடுதியாக வீழ்ந்தது! அதே நேரம் நாட்டை விட்டு சில மாதங்களில் 20 மில்லியன் பணம் வெளியேறியது - அந்தப் பணத்தில் பெரும்பாகம் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் "ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்"😎 பக்கம் தான் போனது என்கிறார்கள். உச்ச நீதிமன்றமும், நாட்டின் பாராளுமன்றமும் சாவேசினால் இடை நிறுத்தப் பட்டன (எனவே, அவரது செயல்களை வெனிசுவெலா சட்டங்களால் தடுக்க முடியவில்லை!) வெனிசுவெலா மக்களுக்கு என்ன ஆனது? மக்கள் செல்வந்தர்களாகவில்லை, ஏழைகளானார்கள். பெருமளவினர் ஸ்பெயின், அமெரிக்கா, கனடா என்று புலம் பெயர்ந்தார்கள். பொருளாதாரம் பெரும் அடி வாங்கியது, இன்னும் எழ முடியவில்லை! அமெரிக்கா மீது காண்டு இருக்கலாம், ஆனால் நடந்தவற்றை கற்பனையினால் மாற்றி எழுதி வாசகர்களை முட்டாள்களாக்கக் கூடாது!
  17. இதற்க்கு மேல என்ன விளக்கம் வேணும் இல்லை இவங்களோட மிக அவதானமாக இருக்க வேணும். உவையிண்டை வரலாற்றை தெரியும் தாணே.
  18. செவ்வந்தி… கள்ளத் தோணியில் இந்தியா போய், நேபாளத்தில் இருந்து விமானத்தின் மூலம், தாய் நாட்டிற்கு வரும் போது… கொடுப்புக்குள் சிரிப்பு வரத்தான் செய்யும். 😁 😂 🤣
  19. ஆண்டிகள் கட்டிய மடம் போலுள்ளது. 😁 இவர்களுக்கு, கட்டுக்காசும் கிடைக்குமோ தெரியாது. 😂 முன்னாள் ஒட்டுக் குழுக்களும்… தேர்தல் என்றவுடன், “நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு” மோப்பம் பிடித்து வந்து விடுகின்றார்கள். 🤣
  20. செவ்வந்தி சிரிச்சபடி வந்திறங்குவதையும்..மற்றவர்களுடன் சிரித்து கதைப்பதையும் பார்த்தால் ...ஏன் உவ்வளவு செலவழித்து பொலிசு நடவடிக்கை தேவௌயற்றதுபோல் தெரிகிறது ...டிக்கட் காசை அனுப்பினாலே ..அவராகவே வந்து இறங்கியிருப்பார்..
  21. டூ வன்னா வை விட்டு விட்டு தலைப்பை வாசித்து ஒரு தரம் கலங்கிட்டேன் நானு🤣
  22. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  23. தவறு ஒன்றும் இல்லை... ஒரு சந்தேகம் என்று தான் எழுதியிருந்தேன் அரசே.... அதுக்கு.. அதுக்கு... அதுக்கு........ஏன்..... என்னை இப்ப இப்படி வெருட்டுறீங்கள் இதுக்கெல்லாம் கசையடியா உங்கள் தண்டனை😂😇😅
  24. எங்கேயோ ஒரு மூலையில் எதோ ஒரு அப்பாவி இந்த மழையால் பாதிக்கப்பட்டிருப்பான் 🙂 ஆனாலும் அவன் நம்பிக் கொண்டிருப்பான் நாளை நமதே என்று 😇
  25. விளிம்புநிலை தமிழ் மக்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற நேர்மையான தலைவர் அவர் இதற்குள் வரமாட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.