Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விளங்க நினைப்பவன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    4325
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    19097
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    1567
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/05/25 in all areas

  1. அவர்கள் இறுதி இலட்சியமே முக்கிய முக்காத இடங்களில் எல்லாம் சிலைகள் வைத்து யாழ்ப்பாண அழகை நாசமாக்குவது தானே. சுத்தமான மலசலகூடம், குப்பைகள் ஒழுங்காக அகற்றும் ஏற்பாடுகளை செய்யட்டும்.
  2. போட்டியைத் திறம்பட நடத்திய கந்தப்புவுக்கு நன்றிகள்.போட்டியில் வெற்றிபெற்ற Ahasthiyan , அல்வாயன், செம்பாட்டான் வாழ்த்துகள்
  3. முதல் 3 இடத்தை பிடித்த அகஸ்தியன், அல்வாயான், செம்பாட்டான் , மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌ க‌ந்த‌ப்பு அண்ணாவுக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும்👏
  4. மலையக தமிழர்கள் எப்போது இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்? இலங்கை தமிழர் என்று அரசால் வரையறை செய்யப்பட்ட தமிழர்கள் பிறக்கும்போதே இலங்கை குடியுரிமை கொண்டவர்களாக பிறக்கிறார்கள், மலையக தமிழர்கள் எனப்படுவோர் காலம் காலமாக இலங்கைக்கு பொருளாதார ரீதியாக தமது ரத்தத்தை செலவிட்டாலும் காலம் காலமாக சிங்கள தேசியகட்சிகளுடன் இணைந்தே அவர்கள் பயணித்திருந்தாலும் பல தசாப்தங்களாக அவர்களுக்கு இலங்கை பிரஜை என்ற குடியுரிமை இல்லாமலிருந்ததே வரலாறு. ஒரே இனம் மொழி என்ற ரீதியில் மானசீகமாக மலையக தமிழர் எமது இனம் என்று நோக்கப்பட்டாலும், சட்டரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ இலங்கை தமிழரும் மலையக தமிழர்களும் சேர்ந்து பயணித்ததாக வரலாறே இல்லை. அவர் யாழ்ப்பாண மக்கள் தொகையை குறிப்பிடபோய் இலங்கை தமிழர்களுடன் குழப்பிக்கிட்டார் என்று தோன்றுகிறது, 2023 கணக்கின்படி 6 லட்சத்து 30 ஆயிரமாக இருந்த யாழ்மக்கள் தொகை படிபபடியாக குறைந்து செல்கிறது என்பதே யதார்த்தம். யாழுக்கென்று ஒரு சிறப்பு உண்டு யாழ்மண்ணில் வாழும் மக்கள் தொகையைவிட இந்தியா அமெரிக்க ஐரோப்பிய மற்றும் வேலைவாய்ப்புக்காய் மத்திய கிழக்கு என்று புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் யாழ் மக்கள் தொகை ஏறக்குறைய அதிகம். போதாக்குறைக்கு படித்துவிட்டு வேலைதேடி கொழும்பு நோக்கி பெயரும் தமிழர்களும் கணிசம் அவர்களில்பெரும்பாலானோர் யாழுக்கு திரும்பி அங்கே வாழ்வதில்லை. ஆனால் ஒன்று இன்னும் ஓரிரு தசாப்தங்களில் இலங்கையில் முதல் சிறுபான்மையினம் முஸ்லீம்களே, அவர்களுக்கும் எமக்குமான சனதொகை வித்யாசம் வெறும் மூன்றரை லட்சங்கள் என்றே நினைக்கிறேன். அதைவிட முக்கியம் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர்களைபோல் பெரும் எடுப்பில் நாட்டைவிட்டு வெளியேறிவதில்லை, போதாகுறைக்கு பெரும்பான்மை தமிழர்களால் யாழ்ப்பாணம் நிறைந்திருப்பது சிங்களவர் முஸ்லீம்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் மஹிந்த கோத்தபாய, மைத்திரி ஆட்சியில் சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இன்று முஸ்லீம்கள் அதனை முயற்சிக்கிறார்கள், அதன் பிரதிபலிப்பே எந்த தடையும் இல்லாதபோதும் இன்றும் வாராவாரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று கூவுகிறார்கள். அதன் அப்பட்டமான சூழ்ச்சியே யாழிலிருந்து வெளியேற்றதாக சொல்லப்படும் முஸ்லீம்களைவிட அதற்கு சம்பந்தப்படாத முஸ்லீம்களே வெளியேற்றம்பற்றி அப்பப்போ தூண்டிவிடுவதும் துவேசத்தை வளர்ப்பதும். யாழின் மக்கள் தொகையை பேண இந்தியாவில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி தகர கொட்டகைகளிலும் தவிக்கும் வெய்யிலிலும் வாழும் எம்மக்கள் தாயகம் திரும்பலாம், ஆனால் ஏற்கனவே தாயகத்தை விட்டு விலகிய நாம் அவர்களை திரும்பு என்று சொல்லும் தகுதியை இழந்துவிடுகிறோம், ஆனாலும் அங்கு படும் கஷ்டத்தைவிட, வெளியேற்றப்பட்டோம் வெளியேற்றப்பட்டோம் என்று சொல்லி யாழை செல்லரிக்க காத்திருக்கும் கூட்டத்தின் சதியை முறியடிக்கவாவது அங்கு துயரப்படும் எம் மக்கள் சுய விருப்பில் தாயகம் திரும்பலாம் என்பது மனக்கிடக்கை, கட்டளை அல்ல. இன்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கபோவதா சொல்கிறார்கள், அப்படி கொடுத்தாலும் எத்தனை தலைமுறையாக அங்கு வாழ்ந்தாலும் சிலோன் அகதிகள் என்றே தமிழகத்தில் பெரும்பாலானோர் அழைப்பார்கள். அது அவர்களில் பெரும்பாலானோர் குணம்.
  5. 05 Nov, 2025 | 12:53 PM யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார். யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்? | Virakesari.lk
  6. வீடு வாங்கியோர் ஒரு பொறிதான். அவர்களின் பங்களிப்பு 10% என்றால், மிகுதி 90% காரணமானவர்கள் வர்த்தக நிறுவனங்களே. அவர்களின் அதீத பேராசைதான் எல்லாத்துக்கும் மூலகாரணம். அத்தோடு, அரசின் கட்டுப்பாடுகள். இப்போது இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அப்போது இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. என்ன இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் வந்ததே 2008 பொருளாதார வீழ்ச்சியினால் தான். அரசுகள் எப்போதும், ஒன்று நடந்தாப் பிறகுதானே சட்டம் போடுறவை. உண்மையில், யார் நிறைய வீடுகளை வாங்கியது என்று நினைக்கிறீர்கள். அதே வர்த்தக நிறுவனங்களே. நீங்களோ நானோ அல்ல. இப்படி சாதாரணமாக, நம் போன்றவர்களைக் கை காட்டி விட முடியாது. Big Short என்ற படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
  7. எங்களில் சிலர் கமலா ஹாரிஸ்சை வட மாகாணத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடியது போன்று அதை விட தீவிரமாக மதத்தை கொண்டாடுகின்ற தனது இனம் தான் பின்பற்றுகின்ற முஸ்லிம் மதம் என்று சொல்கின்ற இலங்கையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் அவர்கள் சோர்வடைந்து போகாமல் இருப்பதற்கு சந்தோசபட வைத்து நம்பிக்கை கொடுத்து உற்சாகபடுத்த தான் அவர்கள் பத்திரிக்கை அப்படி எழுதியுள்ளது. அவர்கள் சொல்ல வருவது அமெரிக்க நியூயோர்க் நகரமே முஸ்லிம் மதத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.அடுத்து அமெரிக்க நாடு. அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும் 🤣
  8. முக்காத இடங்களிலும் வைக்கலாம்.
  9. ஆம் 250 மில்லியன் வரி கட்டாமல் விட்டதைத்தான் சொல்கிறேன். ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதியதால் வந்த பிரச்சனை, the company is in debt to the HMRC to the tune of 250 millions என்பதை அப்படியே தமிழில் எழுதிவிட்டேன்.
  10. https://noolaham.net/project/169/16872/16872.pdf தன் காதலியைக் கொன்ற ஒரு தனியன் யானையை ஒருவர் காடுகளில் துரத்தித் திரிவதைப் பற்றிய கதை. இதுவும் 3 பதிப்புகள் வெளிவந்த பிரபலமான செங்கை ஆழியான் நாவல்.
  11. காமிலா காதி · ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது. ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம். இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும் . தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும். ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும். மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும். காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது. ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது. வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்!! Voir la traduction
  12. பதிலுக்கு நன்றி. நான் கேட்டதற்கு காரணம் வைத்திய கலாநிதி வல்லிபுரநாதனில் கட்டுரையில் குடிநன மதிப்பில் இலங்கைத்தமிழராக மலையக தமிழரை பதிவு நல்லது என்று கூறியிருந்தார். வெறும் பதிவில் எமது எண்ணிக்கையை கூட்டிகாட்ட மட்டும் அவர்களைச் சேர்க்காமல் அவர்களை நம்மை போல் நடத்துவதே சிறந்தது. ஆனால் அப்படி நடக்க இலங்கை தமிழர் மனநிலை ஒரு போதும் சம்மதியாது என்பதால் அவர்களுக்கு இழப்பு மட்டுமே தான் வரும் என்பது எனது அபிப்பிராயம்.
  13. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வட்டுக்கோட்டை February 3, 2025 | Ezhuna இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது. சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை நிலப்படத்தில் எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1). நிலப்படம் காட்டும் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்று இன்றைய வலிகாமம் மேற்கு – சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகிறது. நிலப்படத்தில் கட்டியுள்ள வடக்கு எல்லையும் அமைவிடத்தைத் துல்லியமாக அறிவது கடினம் என்றாலும், இன்றைய கிராம சேவையாளர் பிரிவுகளான வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, சங்கரத்தை, அராலி மேற்கு, அராலி மத்தி, அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு ஆகியவை இந்தக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனலாம். பிற்காலத்தில் வடக்கு எல்லையை அண்டிச் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இது, வலிகாமம் மேற்குப் பிரதேசசபையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் வடக்குப் பகுதியின் மூன்று பக்கங்களிலும் சங்கானைக் கோவிற்பற்றும், தெற்குப் பகுதியின் மேற்கு, தெற்கு எல்லைகளில் கடலேரியும் கிழக்கு எல்லையில் வழுக்கியாறும் உள்ளன. இக்கோவிற்பற்றின் கிழக்கு எல்லையை அண்டியே வழுக்கியாறு கடலேரியுட் கலக்கிறது. மேற்குப் பக்கம் உள்ள கடலேரிக் கரை எதிர்ப் பக்கத்திலுள்ள காரைநகர், வேலணை ஆகிய தீவுகளை நோக்கியபடி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையிலுள்ள வழுக்கியாற்றுக்கு அடுத்த பக்கத்தில் மானிப்பாய்க் கோவிற்பற்று உள்ளது. வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் தென் அரைப் பகுதியை அராலி துணைப்பிரிவு உள்ளடக்குகிறது. வடக்கு அரைப்பகுதியை வட்டுக்கோட்டை மேற்கு என நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. படத்தில் எல்லை குறித்துக் காட்டாவிட்டாலும், வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவும் மேற்படி வடக்கு அரைப் பகுதிக்குள் அடங்குவதாகக் கொள்ளமுடியும் (படம்-2). குறிப்பாக, சங்கரத்தையும் அதை அண்டிய சில பகுதிகளும் வட்டுக்கோட்டை கிழக்குத் துணைப்பிரிவுக்குள் அடங்கியிருந்திருக்கக்கூடும். வீதிகள் இக்கோவிற்பற்றுக்குள் அடங்கிய பல வீதிகளை நிலப்படத்தில் காணமுடிகிறது. வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்கு அருகில் காணப்படும் சந்திப்பில் மூன்று வீதிகள் இணைகின்றன. இச்சந்திப்பிலிருந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்லும் வீதி, தெற்கெல்லையை அண்டி அமைந்த வழுக்கியாற்றைக் கடந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் செல்கிறது. நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இவ்வீதி வழுக்கியாற்றைக் கடக்கும் இடத்தில் பாலம் எதுவும் இருக்கவில்லை. அதனால், மழைக்காலத்தில் போக்குவரத்துக் கடினமாக இருந்திருக்கும். வழுக்கியாற்றுப் பாலம் பிரித்தானியர் காலத்தில் அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லன்ட் டைக் அவர்களின் முயற்சியால் 1843 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.1 இன்னொரு வீதி மேற்கு நோக்கிச் சென்று மூளாய் – தொல்புரம் எல்லையை அண்டிக் கடற்கரையை அடைகிறது. வட்டுக்கோட்டையில் இது தொடங்குமிடத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ள தேவாலய இல்லத்துக்கு இடம் தருவதற்காகப் போலும், வீதியைப் பெரிதாக வளைத்து வரைந்துள்ளனர். உண்மையில் இது இவ்வாறு இருந்திருக்க வாய்ப்பில்லை. லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் காட்டும் நிலப்படத்தில் இவ்வீதி நேராகவே உள்ளது. இவ்வீதியின் முடிவிடமே தற்காலத்தில் புன்னாலைப்பாலம் தொடங்குமிடம் ஆகும். மேற்படி வீதி புன்னாலைப் பாலத்தினூடாகக் காரைநகருக்குச் செல்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் முழுமையாகக் காட்டும் மேலே குறிப்பிட்ட லெயுசிக்காமின் நிலப்படம் இவ்வீதி முடிவுறும் மூளாய்க் கரையிலிருந்தே காரைநகருக்கான கடல்வழிப்பாதை தொடங்குவதாகக் காட்டுகிறது. 1560 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தபோது இடம்பெற்ற நிகழ்வுகளை விவரித்த கோட்டூ என்பவர், யானைத்துறைக்குச் செல்லும் வீதி பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும்2 அந்த யானைத்துறை காரை நகரில் இருந்ததுபற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். வழுக்கியாற்றிலிருந்து வட்டுக்கோட்டைக்கும், அங்கிருந்து புன்னாலைக்கும் செல்லும் வீதிகள் மேலே குறிப்பிட்ட யானைத்துறைக்குச் செல்லும் வீதியின் பகுதிகள் என்பதில் ஐயமில்லை. எனவே, இவ்வீதி போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு. முற்காலத்தில் யானை ஏற்றுமதி அரசாங்கத்துக்கு நல்ல வருமானத்தைத் தரும் செயற்பாடாக இருந்தது. இதனால், காரைநகரில் யானைத்துறை இயங்கிய காலத்தில் இந்த வீதி பொருளாதார முக்கியத்துவம் கொண்ட ஒரு வீதியாக இருந்திருக்கும். அடுத்த வீதி, வட்டுக்கோட்டையிலிருந்து வடகிழக்குத் திசையிற் சென்று சங்கானையுடனான எல்லைக்கு அருகே கிழக்கு நோக்கித் திரும்பிச் சங்கானையூடாக மானிப்பாய்க்குச் செல்வதாக நிலப்படம் காட்டுகிறது. வட்டுக்கோட்டையிலிருந்து வரும் வீதி கிழக்கு நோக்கித் திரும்பும் இடம் சித்தன்கேணிச் சந்தியாக இருக்கவேண்டும். தற்கால நிலப்படங்களோடு ஒப்பிடும்போது லெயுசிக்காமின் நிலப்படத்தில் சித்தங்கேணிச் சந்தியின் அமைவிடம் கூடுதலாகக் கிழக்கு நோக்கி நகர்ந்திருப்பதால் வீதி வடகிழக்குத் திசையில் செல்வதுபோல் வரையப்பட்டுள்ளது. தற்காலத்தில் சித்தன்கேணிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிப் புன்னாலை வரை செல்லும் வீதியையும் நேரே பண்டத்தரிப்புவரை செல்லும் வீதியையும் நிலப்படம் காட்டவில்லை. இதனால் இன்று நாற்சந்தியாக இருக்கும் சித்தன்கேணிச் சந்தியை நிலப்படம் ஒரு சந்தியாகக் காட்டவில்லை. மடம் ஒன்றைக் குறிப்பதன் மூலம் அராலித்துறையை நிலப்படம் காட்டுகிறது. இத்துறையை அண்மையிலுள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கு அக்காலத்தில் வீதித் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய வீதித் தொடர்பு இருப்பதை நிலப்படம் காட்டவில்லை. தற்காலத்தில், வட்டுக்கோட்டைச் சந்தியிலிருந்தும் வழுக்கியாற்றுப் பாலத்துக்கு அருகிலிருந்தும் வீதிகள் அராலித்துறைக்குச் செல்கின்றன. இவை நிலப்படத்தில் இல்லை. இவை அக்காலத்தில் முக்கியத்துவம் அற்றவையாக இருந்திருக்கலாம் அல்லது, நிலப்படத்தின் நோக்கத்துக்கு அவை தேவையற்றவையாகக் கருதப்பட்டிருக்கலாம். கட்டடங்கள் மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் இருப்பதாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் கட்டடங்களுள் வட்டுக்கோட்டை கிறித்தவத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் முக்கியமானவை. இவற்றைத் தவிர அராலித் துணைப் பிரிவுக்குள் கடற்கரை ஓரமாக ஒரு மடமும் உள்ளது. தேவாலயமும் குருமனையும் நல்லூர்க் கோவிற்பற்றைத் தவிர, இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எடுத்தாளப்பட்ட எல்லாக் கோவிற்பற்றுகளிலும் தேவாலயமும் குருமனையுமே முக்கியமான கட்டடங்களாக நிலப்படத்திற் குறித்துக் காட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மேற்குறித்த எல்லாத் தேவாலயங்களிலும் குருமனைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியான குறியீடுகளாகவே காணப்பட்டன. ஆனால், வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் குறித்துள்ள குருமனை சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இது, இதுவரை பார்த்த குருமனைகளைவிடப் பெரிதாகவும் விரிவானதாகவும் காணப்படுகிறது. வழமையான குருமனையுடன் இணைந்ததாக நீளமான கட்டட அமைப்பொன்றை நிலப்படம் காட்டுகிறது. வேறு கோவிற்பற்றுகளில் இல்லாதவாறு இவ்விடத்தில் இவ்வாறான கட்டடம் காட்டப்பட்டிருப்பதாலும், அதைக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீதியைக்கூட வளைத்துக் காட்டியிருப்பதாலும், உண்மையிலேயே அவ்வாறான பெரிய கட்டடம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இது, வட்டுக்கோட்டைத் தேவாலயத் தொகுதி ஏதோவொரு வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த ஏனைய தேவாலயத் தொகுதிகளைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளக்கூடும். ஆனாலும், போல்தேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது, ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்கப் பகுதியில் வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்குச் சிறப்பு முக்கியத்துவம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்நூலிலுள்ள வட்டுக்கோட்டைத் தேவாலயத்தின் படத்தில் தேவாலய இல்லம் ஓரளவு பெரிய கட்டடமாகவே காட்டப்பட்டுள்ளது (படம்-3). இப்படத்தை வரைந்தவர் கட்டடத்தைப் பார்க்கவில்லை என்பதால் இப்படத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. அக்காலத்தில் தெல்லிப்பழைத் தேவாலயமே தலைமைத் தேவாலயமாக இருந்துள்ளது.3 நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட்டுக்கோட்டைத் தேவாலயம் புதிய வகிபாகத்தைப் பெற்று வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும். 1820 களில், பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் வட்டுக்கோட்டைத் தேவாலயம் அமெரிக்க மிசனின் முக்கியமான நிலையங்களில் ஒன்றாக விளங்கியது. 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசன் பணிக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பின்னர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஐந்து ஒல்லாந்தர் காலத் தேவாலயங்களில் முதலில் இயங்கவைக்கப்பட்ட இரண்டு நிலையங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. மற்றது தெல்லிப்பழை. அமெரிக்க மிசனின் புகழ்பெற்ற செமினரியும் பிற்காலத்தில் வட்டுக்கோட்டையிலேயே நிறுவப்பட்டது. ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் வட்டுக்கோட்டை பெற்றிருந்த முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்க மிசன் காலத்திலும் அது முக்கியத்துவம் பெற்றதா என்பது ஆய்வுக்குரியது. எவ்வாறெனினும், அமெரிக்க மிசன் கையேற்றபோது வட்டுக்கோட்டைத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சிதிலமடைந்து இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். அக்காலத்தில் ஒல்லாந்தர் தேவாலயம் 170 அடி நீளமும் 56 அடி அகலமும் கொண்டதாகவும், நான்கு அடி தடிப்புக் கொண்ட கற்சுவர்களுடன் கூடியதாகவும் இருந்துள்ளது.4 மடம் நிலப்படம், அராலி துணைப்பிரிவின் தென்கிழக்குக் கரையோரத்தில் ஒரு மடம் இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. ‘ராலி மடம்’ (Ralie maddam) என இதற்குப் பெயர் குறித்துள்ளனர். நிலப்படத்தில் பல இடங்களில் இவ்வாறான மடங்களுக்கு ஊர்ப்பெயரைத் தழுவியே பெயர் வழங்கப்பட்டிருப்பதால், இப்பெயரும் ‘அராலி மடம்’ என்பதன் திரிபாக இருக்கக்கூடும். இது இருக்குமிடம் இன்றைய அராலித்துறை என்பதில் ஐயமில்லை. நீண்ட காலமாகவே இவ்விடத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் வேலணைத் தீவிலுள்ள வடக்குத்துறைக்கு, இடையிலுள்ள ஆழம் குறைந்த கடலேரியூடாகச் சிறு வள்ளங்கள் மூலமும் சிலவேளைகளில் கால்நடையாகவும் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.5 எனவே, இங்கே குறிக்கப்பட்டுள்ள மடம், துறைகளை அண்டிப் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட மடம் என்பதில் ஐயமில்லை. இதற்கு எதிர்க் கரையில் வேலணை வடக்குத் துறையிலும் ஒரு மடம் இருந்ததை லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள வேறு நிலப்படங்கள் காட்டுகின்றன. குளங்கள் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுக்குள் பதினாறு குளங்களை நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் ஏழு குளங்களுக்கு மட்டுமே சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. ஏனையவை குளம் (Tanck), கேணி (keúni) ஆகிய பொதுப் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. பதினாறு குளங்களில் வட்டுக்கோட்டை மேற்குப் பிரிவையும் கிழக்குப் பிரிவையும் உள்ளடக்கிய பகுதிக்குள் ஒன்பது குளங்கள் உள்ளன. இப்பிரிவில் இரண்டு நீர்நிலைகள் மட்டுமே வெட்டுத்துரவு, திக்கிராய்க் குளம் என்னும் சிறப்புப் பெயர்களுடன் காணப்படுகின்றன. எஞ்சியவற்றுள் மூன்று கேணிகளும் நான்கு குளங்களும் உள்ளன. அராலிப் பிரிவுக்குள் காணப்படும் ஏழு குளங்களுள் கோணாவில் குளம், ஒல்லிக் குளம், பெரிய குளம், திக்கிரிக் குளம், பெந்தாலிக் குளம் ஆகிய சிறப்புப் பெயர்களுடன் கூடிய ஐந்து குளங்களும் குளம் என்ற பொதுப் பெயருடன் இரண்டு குளங்களும் உள்ளன. தற்காலத்தில் அராலிப் பிரிவில் பதினாறு குளங்களும், வட்டுக்கோட்டைப் பிரிவில் அடங்கிய பகுதிகளுக்குள் பத்துக் குளங்களும் உள்ளதைப் பதிவுகள் காட்டுகின்றன.6 லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அராலியில் ஏழு குளங்களே உள்ளதால், அக்காலத்தில் இருந்த பல குளங்களை நிலப்படம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. வட்டுக்கோட்டையில் இன்று ஒரு குளமே கூடுதலாகக் காணப்படுகிறது. நிலப்படத்தில் கேணி, துரவு ஆகிய பெயர்களில் குறிக்கப்பட்டிருப்பவற்றைத் தற்காலத்தில் குளங்களாகக் கருதிப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை. நிலப்படத்திலுள்ள குளங்களுள் அராலிப் பிரிவிலுள்ள பெரிய குளம் இன்றுவரை பெயர் மாற்றமின்றி இருப்பதைக் காணமுடிகிறது. தற்காலப் பதிவுகளின்படி இதற்கு அராலிப் பெரிய குளம் என்ற பெயர் வழங்குகிறது. இதைவிட, வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் இருப்பதாக நிலப்படம் காட்டும் திக்கிராய்க் குளம் என்ற பெயருடன் தற்காலப் பதிவில் சங்கரத்தைக் கிராம சேவையாளர் பிரிவுக்குள் ஒரு குளம் உள்ளது. மேற்படி குளங்கள் இரண்டும் ஒன்றாக இருக்கக்கூடும். நிலப்படத்தில் வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் குறித்துள்ள வெட்டுத்துரவும், தற்காலப் பதிவிலுள்ள வெட்டுக்குளத்துக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருந்தாலும் அவற்றின் அமைவிடங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதால் இவை குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது. ஏனைய பல குளங்கள் பெயர் மாற்றம் பெற்றுள்ளன என்பதில் ஐயம் இல்லை. ஆனால், ஒப்பிடும்போது அடையாளம் காணத்தக்க பெயர் ஒற்றுமை இல்லாததாலும் நிலப்படத்தில் அமைவிடங்களைத் துல்லியமாக அறிய முடியாததாலும் பெயர் மாற்றங்களைப் பற்றிய சரியான தகவல்களை அறிவது கடினமாக உள்ளது. குறிப்புகள் செ. இராசநாயகம், யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆங்கிலேயர் காலம், (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2018), 133. Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 189. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 318, 322. Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192. கா. குகபாலன், தீவகம்-தொன்மையும் மேன்மையும் (கொக்குவில்: 2017), 221. விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி. ஒலிவடிவில் கேட்க Your browser does not support the audio element. About the Author இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார். வடக்கன் சிவலையைத் தேடி.... அளவெட்டியிலிருந்து அராலி வரை விபரித்துள்ளார்.... வாசித்தால் ஒரு நாடகமே கண் முன் தோன்றும் 👍
  14. நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள். யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர். தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும். எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான். ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம். இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான். ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.
  15. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். போட்டியில் வெற்றிபெற்ற @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் வாழ்த்துக்கள்
  16. தேசிய மட்டத்தில் மாவட்டங்கள் இடையே மதுபானம் அருந்தும் போட்டி வைத்தால் வவுனியா மாவட்டம், யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாட்டத்திற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எனது உறவினர் ஒருவர் பேரதெனியா பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு. புதிய மாணவர்களுடன் பழைய மாணவர்கள் சந்திக்ககூடாது, கதைக்க கூடாது என விதிமுறை உள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழகம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது பழைய மாணவர்களால் எதுவித தொந்தரவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இவர்களுக்கு வகுப்பு தொடங்கிய சமயத்தில் பழைய மாணவர்கள் விடுமுறையில் நின்றார்களாம். நல்லதொரு திட்டமிடல் இது.
  17. அததெரண கருத்துப் படம்.
  18. தினமும் ஒரு வரி தத்துவம் · 🌹" படித்து பகிர்ந்து🌹" *Forwarded many times* *கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க*😀" செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . --- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? --- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம். என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை . பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!! (என்ன... தத்துவம்...) என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!! டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம். பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் . ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .. சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ?? யோசிக்கணும்............ ...!! தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? தத்துவம் 2 ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும் ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!) தத்துவம் 5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!) தத்துவம் 6: சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!) பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும். கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்டா கொலுசு வருமா ? பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம் T Nagar போனா டீ வாங்கலாம் . ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா? என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது . இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... . அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .. உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது . நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது . வண்டி இல்லாமல் டயர் ஓடும் . ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ? (இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.) சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னுதான் ஆகிடுமா. நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது. "Tea" / " Coffee" எது சுகாதாரம் ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும். "Coffee"ல 2 "ஈ " இருக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..🤓" Voir la traduction
  19. இந்த குற்றவாளிகள் சிறைக்கு செல்ல சந்தர்பம் வராது போல் தெரிகின்றது. அமைச்சர் சொல்லியுள்ளாராம் இந்த செயல் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால் இப்படியான செயல்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  20. தலைவர் அந்தப்பக்கமா என்று நீங்கள் கேட்டது வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா என்றா அல்லது எந்தப்பக்கம் என்று கேட்ட நீங்கள் 😃 ஓம் நானும் அந்தப்பக்கம் தான் ஆனால் இப்போது இந்தப்பக்கம் 😃 அந்தப்பக்கமாக இருந்தால் என்ன எந்தப்பக்கம் என்றாலும்😇 அந்தப்பக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும் அல்லவா 😃 அந்தப்பக்கம் தீவா நகரா என்ற இழுபறியில் இருக்கு அதுவரைக்கும் அந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவே இருக்கட்டும்🤣🤪 கோஷான் வேறை இந்தப்பக்கம் நிக்கிறாப்பல 😂
  21. அதுதானே அநியாயமாக பழி போட்டிருப்பார்கள். முஸ்லீம்களுக்கு வெடிகுண்டு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது என்று செத்துபோன சஹ்ரானில் இருந்து கமாஸ் ஹிஸ்புல்லா, தலீபான்வரை சொல்லியிருக்காங்க.
  22. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சுர்பி குப்தா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர். பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர். வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்? அதை சரிசெய்ய என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா மற்றும் டெல்லி டயட்ஸின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா ஆகியோருடன் பேசினோம். வைட்டமின் பி 12 நமக்கு ஏன் தேவை? பல உடல் செயல்முறைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன. அவை வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி -12 உள்ளிட்ட பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அடங்கும். "வைட்டமின் பி -12 ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இது நம் உடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா. வைட்டமின் பி -12 உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் அவசியம். தீப்தி கதுஜாவின் கூற்றுப்படி, உணவை ஆற்றலாக மாற்றுவது, புதிய மூலக்கூறுகள் உருவாக்குதல் உள்ளிட்ட உயிரணுக்களில் ஏற்படும் அத்தியாவசிய வேதியியல் எதிர்வினைகளில் வைட்டமின் பி -12 முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது என்று அவர் கூறுகிறார். இது நமது ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திலும் தாக்கம் செலுத்துகிறது. சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி-12 அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல வேலை செய்கிறது. பட மூலாதாரம், Getty Images எந்த உணவுகளில் வைட்டமின் பி -12 உள்ளது? வைட்டமின் பி -12 பிரதானமாக இறைச்சியில் காணப்படுகிறது. தாவர உணவுகள் செறிவூட்டப்படாவிட்டால் வைட்டமின் பி 12 கொண்டிருக்காது. இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பிற பால் பொருட்களில் வைட்டமின் பி -12 உள்ளது. இது முட்டை, கோழி, சிவப்பு இறைச்சி, மீன், கடல் உணவு மற்றும் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸும் கிடைக்கின்றன. வைட்டமின் பி -12 மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளும் கிடைக்கின்றன என்று அம்ரிதா மிஸ்ரா விளக்குகிறார். இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம். "வைட்டமின் பி -12 சப்ளிமெண்ட்ஸ் ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்." என்று தீப்தி கதுஜா கூறுகிறார். வைட்டமின் பி -12 குறைபாடு மோசமான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் பொருட்களை போதுமான அளவு உட்கொள்ளாதது ஆகியவை வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கு காரணம் என்று அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். வைட்டமின் பி 12 கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் குறைபாடு ஏற்படலாம். காரணம் அவர்களின் உடலால் அதை கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். அதாவது, நீங்கள் பி12 கொண்ட உணவை உட்கொள்கிறீர்கள், ஆனால் அந்த உணவின் விளைவுகள் உங்கள் உடலில் தெரியவில்லை. இதன் பொருள் உங்கள் உடல் அதை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே. பட மூலாதாரம், Getty Images உடலுக்கு வைட்டமின் பி -12 எவ்வாறு கிடைக்கிறது? வைட்டமின் பி -12 நம் உடலில் எடுத்துக் கொள்ளப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உணவில், வைட்டமின் பி -12 புரதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின்படி (என்ஐஎச்), வைட்டமின் பி -12 உடலால் இரண்டு கட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டத்தில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் வைட்டமின் பி -12 ஐ உணவில் உள்ள புரதங்களிலிருந்து பிரிக்கிறது. இரண்டாவது கட்டத்தில், புரதத்திலிருந்து பிரிக்கப்பட்ட வைட்டமின் பி -12 வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதத்துடன் பிணைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த காரணி எனப்படுகிறது, பின்னர் உடலில் உறிஞ்சப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 எந்த புரதத்திற்கும் பிணைக்கப்படவில்லை. எனவே அதனை உடல் உள்ளே எடுத்துக் கொள்ள முதல் கட்டம் தேவையில்லை. இருப்பினும், சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 உடலில் உறிஞ்சப்படுவதற்கான உள்ளார்ந்த காரணியுடன் பிணைக்கப்பட வேண்டும். வைட்டமின் பி -12 உடலுக்குள் எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் அது சரியாக நடக்கவில்லை என்றால், குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. என்ஐஎச்-ன் படி, வைட்டமின் பி -12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் போதுமான வைட்டமின் பி -12 பெறாதவர்கள் அல்லது உடல்கள் அதை சரியாக உறிஞ்சாதவர்களாக இருக்கலாம். உதாரணமாக வயதானவர்கள்: வயதாகும்போது, பலரின் வயிற்றில் போதுமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருக்காது. இதனால் வைட்டமின் பி -12 ஐ உணவில் இருந்து உடல் எடுத்துக் கொள்வது கடினம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் பி -12 செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படலாம். இரைப்பை அழற்சி உள்ளவர்கள்: இந்த தன்னுடல் தாக்க நோய் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வயிற்றில் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியில் குறைவை ஏற்படுத்துகிறது. இது வைட்டமின் பி -12 ஐ போதுமான அளவு உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பெர்னிசியஸ் ரத்த சோகை உள்ளவர்கள்: இந்த நிலையில், உடல் உள்ளார்ந்த காரணியை உருவாக்காது. இது வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவதற்கு அவசியமானது. அத்தகையவர்களின் உடல் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் இரண்டிலிருந்தும் வைட்டமின் பி -12 ஐ எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் பி -12 ஊசி மூலம் சிகிச்சையளிக்கிறார்கள். வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை செய்தவர்கள்: வயிற்றின் ஒரு பகுதியை அகற்றுவது போன்ற அறுவை சிகிச்சை உடலின் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவது கடினமாகும். சைவ உணவு உண்பவர்கள் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள், அசைவ உணவுகளை குறைவாக அல்லது சாப்பிடாதவர்கள் தங்கள் உணவில் இருந்து போதுமான வைட்டமின் பி -12 பெறாமல் போகலாம். பட மூலாதாரம், Getty Images உடலில் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம். "வைட்டமின் பி -12 குறைபாடு உருவாக காலம் எடுக்கும். எனவே அதன் அறிகுறிகளும் படிப்படியாக தோன்றி காலப்போக்கில் மிகவும் கடுமையானதாகிவிடும்." என்று தீப்தி கதுஜா விளக்குகிறார். வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்- உங்கள் கைகள் அல்லது கால்களில் விசித்திரமான, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு நடப்பதில் சிரமம் (சமநிலை பிரச்னைகள்) பெர்னிசியஸ் ரத்த சோகை நாக்கு வீக்கம் சிந்திப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் அல்லது ஞாபக மறதி தளர்வு சோர்வு தோல் மஞ்சள் நிறமாதல் மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல் செறிவு குறைதல் ஒருவருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு இருக்கிறதா என்பதை வைட்டமின் பி -12 சோதனை மூலம் தீர்மானிக்க முடியும், இது ரத்த பரிசோதனையாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1dymwnkpo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.