Everything posted by Paanch
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
goshan_che நீங்களுமா??😢
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ் போதனா வைத்தியசாலையில் எனது உறவினர் ஒருவர் தாதியாகப் பணிபுரிகிறார், அவரின் கூற்றுப்படி அங்கு பணிபுரியும் பலருக்குப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியர்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 🤔
-
கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
- வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை!
ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர். அப்போ முழுவைத்தியரக எத்தனைபேரைக் கொல்லவேண்டும்??🤔- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
யாழ்ப்பாணத் தமிழ் எழுத்திலும் ஒளிருது, வாழ்த்துக்கள்!!- அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது
பங்களா என்ன பங்களா!! பங்கரிலும் வாழலாம்.…. பங்கர் வெட்டி ஒரு சனாதிபதியே வாழ்ந்த சரித்திரம் இலங்கையில் உண்டு!!!.🤔- “விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
மாவீரர் நினைவேந்தலில் குத்துவிளக்கு ஏற்றுதல், தேசியக்கொடி ஏற்றுதல் என்று வேறுபட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவற்றில் ஒன்றில் அந்தத் தாயாரின் மனம் புண்படாமல் ஈடுபடுத்தியிருக்கலாம்.- பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!
தவறு அற்ற ஒரு செயலுக்காக மன்னிப்புக் கேட்பது பெரும் தவறு.- நினைத்தால் மீண்டும் தேர்தலில் களமிறங்குவேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
வாலில்லா நாய்க்கு மனதுக்குள் ஒரு கொண்டாட்டம் என்ற முதுமொழிக்கு இளமை திரும்பிவிட்டதா????🤔🧐- யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
அன்னாரது ஆத்மா சாந்திபெற ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏- கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்
இன்னும் சில மணித்துளிகளில் நரியாரின் விருப்பமும் நிறைவேறலாம்🤣.- இராசவன்னியரின் மகன் திருமணம்
வன்னியருக்கு ஒரு பெண்பிள்ளைதான் சசி அவருக்குத் திருமணமாகி குடும்பப் பெண்ணும் ஆகிவிட்டார். அழவேண்டாம்.😩😢- இராசவன்னியரின் மகன் திருமணம்
ஈழம் பற்றி ஈழத்தில் பிறந்த எங்களுக்கே தெரியாத பல விடயங்களை அவர் தெரிந்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளேன். மகனுக்கு திலீபன் என்று பெயர் வைத்ததில் ஆச்சரியமில்லை.😌- இலங்கைக்கு தங்க விருது.
பழைய அரசியல்வாதிகளை தொடர்ந்தும் மக்கள் ஆட்சிசெய்ய அனுமதித்தால் 1 யூரோ பெறுமதி 500 ரூபாவுக்கும் மேலே செல்ல வைத்து, வைர விருதே வாங்கும் நிலைக்கு கொண்டுவந்திருப்பார்கள், ஐயமில்லை.🤪- 5 வயது பேரனின் கேள்வி
என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார். இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும் நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால் ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳- இராசவன்னியரின் மகன் திருமணம்
எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌- இராசவன்னியரின் மகன் திருமணம்
எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌- சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை
ஊருக்கு. உபதேசம் செய்யும் பல்லி கூழ்ப்பானைக்குள் விழுவதுண்டு என்ற பழமொழியும் உண்டு. சுமந்திரனும் சனாதிபதிக்கு உபதேசம் செய்யும் நிலையில் உள்ள ஒரு பல்லி.😜- 40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம். ஒலியைவிட வேகமாகப் பறக்கத் தயாரிக்கப்பட்ட சுப்பர் சோனிக் விமானம் தற்போது அரும்காட்சியத்தில் உள்ளது. அது தனக்குத் துணை தேடுகிறது போல் உள்ளது.🧐🤔- 5 வயது பேரனின் கேள்வி
சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????- நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?
100% சட்டத்தை மதிக்கும் இலங்கை மக்கள்! அதிசயம்!!!🤔🤩- யாழில் எலிக்காய்ச்சலால் இளம் குடும்பஸ்தர் பலி!
தற்போது தமிழர்களிடம் இருந்தும் பல எலிகள் உருவாகி ஓடித் திரிகின்றன! எந்த எலிகள் ஆபத்தானவை என்று ஆராச்சி செய்து கூறமுடியுமா??- திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
யாழ் தந்த உறவுகள்! அதிலும் முகமறியா நல்லுறவுகளிடமும் இருந்தும் வெளிப்படும் மனிதநேயம் மருந்தின்றி நோய்மாற்றும் மகத்துவம் கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. உங்கள் பிராத்தனையின் பலன்கள் உடனே கைகூடி என் மனைவிக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம் குறைவடைந்து உள்ளதால் அவரை நாளை வீடுசெல்லலாம் என்று வைத்தியர் இன்று கூறிவிட்டார். என் மனைவியின் நோய்நீங்கப் பிரார்த்தித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙌🙏🙏🙏- இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
அன்னாரது ஆத்மா சாந்திபெற ஆண்டவன் துணைபரிய வேண்டுகிறேன்🙏 - வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.