Everything posted by Paanch
-
சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண்
முன்பு ஒரு செய்தி படித்த ஞாபகம், அமெரிக்கர்கள் தெருவில் போகிற பாம்பைப் பிடித்து பைக்கற்றில் போட்டுவிட்டு அது கடிக்கக் குய்யோ முறையோ என்று கத்துவார்களாம்.🕺 அமெரிக்கர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா? என்று அந்த உருசிய மங்கை காட்டியுள்ளார், அவ்வளவுதான்.💃🏼
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் இது தலைப்பு. இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
சாமியாரா இதைச் சொன்னார்? நம்பமுடியவில்லை!! திருவள்ளுவர் கடைச்சங்க காலத்துப் புலவர். அவர் குறள் எழுதிய காலம் கி.மு 31 என வரலாறு தெரிவிக்கிறது. அவர் எந்த ஆங்கிலேயரிடம் எழுதப்படிக்க கற்றுக்கொண்டார்? திருக்குறள் தெரிவிக்காத நாகரீகத்தையா ஆங்கிலேயர் எமக்குக் கற்றுத்தந்தார்கள்?? ஆங்கிலேயர் எங்களை ஆண்ட காலத்தில் பட்டினத்தார் பிறந்திருந்தால்… பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் என்று பாடியிருக்கமாட்டார், வெறும் கண்களாலே அந்த இடத்தைப் பார்க்கும் நாகரீக நிலையைப் பெற்றிருப்பார்.
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
டிரம்பை பெரு நெருப்பு விளக்கேற்றி வரவேற்றது. பெரும்பனி பூத்தூவி அலங்காரம் செய்கிறது. பலகோடி செவ்விந்தியரின் ஆவிகள் சூழ்ந்துநிற்க அங்கு திருவிழா நடைபெறுகிறது, பலிபீடம் ஆடு, கோழிகளுக்குப் பதில் மனிதர்களைப் பலியெடுக்கிறது, அடுத்து என்னென்ன விழாக்கள் நடக்குமோ.? ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட இடங்கள் எல்லாமே உலகில் அல்லோலப்படுகிறது.!😳
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
காலமாற்றம் கடுகளவும் மாறுவதில்லை அது தடம்மாறாது ஓடுகிறது. மனிதன் மாறுகிறான் அதனால் மனிதமும் மாறுகிறது. அளவற்ற ஆசையும், அகங்காரமும் இதயத்தை நஞ்சாக்குகிறது. அதன் புதிய கண்டுபிடிப்புகள் இயற்கையைச் சீண்டுகிறது. இதற்கு இறப்புத்தான் முடிவல்ல, இயற்கையோடு இணைந்து இதயத்தில் அன்பை மலரவைக்க முனைவதும் முடிவாகும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புது வரவு நல்வரவாகட்டும். யாழை அபசுரம் வராது இனிமையாக மீட்டுங்கள்.🙌
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் தன்னை வளர்துக்கொள்ள என்னென்ன செய்தார் என்று நான் கேட்கவில்லை, தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்றுதான் கேட்டேன், அதற்குரிய தரமான பதில் வந்ததாகத் தெரியவில்லை. போகட்டும் தமிழர்களுக்குச் சீமான் செய்த நல்லவைகள் என்னென்ன என்பதையும் அவர்மீதுள்ள வக்கிரத்தைவிட்டு வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம். சென்னை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது சீமான் செய்த உதவிகள் வீடியோவாகவும் வெளிவந்து அறியக் கிடைத்தது. அதனால் கேட்டேன்.🧐
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமானை இங்கு சிலர் வறுத்தெடுக்கிறார்கள், தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்பதையும் வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.🤪
-
ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !
சிகப்பு இந்தியர்கள் என அழைக்கப்படுபவர்கள்தான் அமெரிக்க நாட்டின் பூர்வீகக் குடிகள். இவர்கள் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன் வட ஆசியாவிலிருந்து கால்நடையாக கனடா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்கள். இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சுமார் ஏழரை கோடி மக்கள் இருந்தனர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். 2000 வகை மொழிகளில் இவர்கள் பேசினார்கள் என்றும் ஆதாரங்கள் உள்ளன. இவர்களிடம் கலைகள், அரசியல், சமூகக் கட்டுமானங்கள், கணிதம், தொழில், விவசாயம், எழுதுதல் மற்றும் பலவிதமான மதநம்பிக்கைகள் பரவலாக இருந்தன. நெருப்பின் பயனை நன்கு உணர்ந்தவர்கள். ஆடைகள் தயாரித்துக் கொள்ளவும் குடியிருக்க இடம் உண்டாக்கிக் கொள்ளவும் தெரிந்தவர்கள். நம் இந்திய நாட்டைத் தேடி அலைந்த ஐரோப்பியர்கள் வழிதவறி அமெரிக்காவில் வந்திறங்கினார்கள். அமெரிக்காவை இந்தியா எனத் தவறாக நினைத்துக் கொண்ட அவர்கள், அங்கு வசித்து வந்த பூர்வீகக் குடிமக்களை இந்தியர்கள் என அழைத்தார்கள். இந்த மக்கள் முகத்தில் செந்நிற சாயத்தைப் பூசியிருந்ததால் இவர்களைச் செவ்விந்தியர்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர். ஐரோப்பாவில் இருந்து தங்கம், வெள்ளி செல்வங்களைத் தேடி வந்தவர்கள் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களையும் வேட்டை நாய்களையும் கொண்டு வந்து, எதிர்ப்பு காட்டிய பூர்வீக மக்கள் மீது பிரயோகம் செய்து அழிக்க முற்பட்டனர். மேலும், பெரியம்மை, காலரா போன்ற கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்டுவந்து நோயைப் பரப்பினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பூர்விக செவ்விந்தியர்கள் பலர் மாண்டு போனார்கள். இவ்வாறு இறந்துபோன மக்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடி என்று கருதப்படுகிறது. இவ்வாறு அழிந்து போனவர்கள் நீங்கலாக நாளது தேதியில் சுமார் 2,50,000 பூர்வீகக் குடிமக்கள் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பல ஆண்டுகளாக சம உரிமையும் சுதந்திரமும் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கென்று தனி உரிமைகள், சலுகைகள் மற்றும் முக்கியத்துவம் ஏதும் கிடையாது. ஜோசப் ராஜபாதர்7 தினமணி ஆனி 22. 2012
-
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
முகமறியாத மக்களையும் சந்திக்கும்போது முகமன் கூறுவது மேலைநாட்டவரின் மேலான ஒரு வழமை. அனேகமாக முகம்பார்த்தே முகமன் கூறுவார்கள், அதுவும் யேர்மனியில் இந்தவழக்கம் மிக அதிகம், ஆண்களைப் போலவே தலைமயிரை வெட்டித் தங்களை அழகுபடுத்தும் பெண்களும் அதிகம். ஆண்களும் முகத்தில் மீசை இல்லாதிருந்தால் அவர்கள் ஆணா, பெண்ணா என்று அறிவது மிகவும் கடினம். ஆகவேதான் (meine Damen und Herren) ஆண்கள் பெண்கள் என்று விழிக்காமல் பொதுவாக (Guten Tag) நல்லநாள் என்று எல்லாப் பாலினத்துக்கும் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.🙏
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்தியாவில் உள்ள கடவுளுக்கு அவர் காணும் குமரிகள் எல்லாம் பெண்டாட்டிகள். இலங்கையில் உள்ள கடவுளுக்கு பாவம் இரண்டே இரண்டுதான்.😩
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்து மதம் என்றும், சைவ சமயம் என்றும் பள்ளியில் பாடம் படிப்பித்தார்கள். கொழும்பான் அவர்கள் இந்துவும் சமயம் என்று சொல்கிறாரே? 🧐
-
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
உலகில் எத்தனை பாலினங்கள் உள்ளன.???????????🧐
-
இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம் : அமைச்சர் சந்திரசேகர்
RishiK அவர்களே! முதலில் உங்கள் கிளீன் லங்கா பற்றிய முழுப் புரிதலையும் எழுதுங்கள் அறிய ஆவலாக உள் ளோம்.🧐
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்தின் அடிக்கல் நாட்டு வைபவம் 25.10.2021 காலை 10.00 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக தயாராகி வரும் திருக்குறள் வளாகத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவாின் திருவுருவச் சிலை கொண்டு வரப்பட்டு மிக வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. எதிா்வரும் 02.02.2025ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது திருக்குறள் வளாகத்தில் 1330 குறள்களும் கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகள் கடந்து திருக்குறள் ஒவ்வொருவரின் மனங்களுக்கும் சென்று சேரும் வண்ணம் செஞ்சொற்செல்வாின் முயற்சியால் இந்த அரிய பணி நடைபெற்று வருகிறது. திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மேற் கொள்வதற்கும், தியானங்களை மேற் கொள்வதற்கும், திருக்குறள் தொடர்பாக பல்வேறு மொழிகளில் வெளிவந்த நூல்களை வாசிப்பதற்கான, இங்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
குறளுக்கு பற்பலர் உரை எழுதியிருக்கலாம். ஆனால் எனது உரையே உண்மையானது. அதாவது முன் இல்லாதோர் கல்லாதவர் உடையார் முன் இல்லார்போல்ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.😂
-
இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?
சிறு தவறு மாறிப் பதிந்துவிட்டேன்
-
இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?
இலங்கையில் மகியங்கனை என்ற ஊரில்உள்ள குகை ஒன்றில் இராவணனின் உடல் இன்றும் அழியாது இருப்பதாகவும், அதற்குள் செல்வதற்கான உதவிகளை அரசு வழங்கினால் அவரது உடலைக் காண்பிப்பேன் என சிறிமாவோ பிரதமராக இருந்த காலத்தில் ஒரு புத்தபிக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்ததைப் படித்த ஞாபகம் உள்ளது. ஆனால் அது உண்மையானால், தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகிவிடும் என்பதால் அரசு அதில் தீவிரம் காட்டவில்லை என்ற விமர்சனங்களும் வந்ததாக ஞாபகம். இன்றுவரை அந்தப் பிக்குவுக்கு என்ன நடந்ததோ, ஏதுநடந்ததோ யாமொன்றும் அறியோம் பராபரனே. இதுபற்றி யாழ்கள உடவுகள் யாரேனும் ஒரு துரும்பளவாவது அறிந்திருந்து பதிந்தால்…..எனது இந்தப் பதிவு என் கனவோ, கற்பனையோ அல்ல என்று நானே என்னைப் பாராட்டி மகிழ்வேன்.😌
-
வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு
‘ முயல்பிடிக்கிற நாயை மூஞ்சையில் தெரியுமாம்.
- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
-
பொங்கல் சிரிப்புகள்.
- புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
சிங்களம் என்ற தனது ஆசைநாயகி தன்னைவிட்டு வேறு நாயகனைத் தேடாதவகையில் அவளைக் கட்டில் வைத்திருப்பதற்கு இலங்கைத் தமிழர்கள் என்ற கடிவாளம் இந்தியாவுக்குப் பேருதவியாக உள்ளது. ஆகவே அங்கு புகலிடம் தேடிவரும் இலங்கைத் தமிழர்களை அகதிகள் என்ற தாழ்வு நிலைக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தாமல் பாதுகாத்து வருகிறது.- தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
வெசாக் பண்டிகையை தேசியப் பண்டிகையாக மே மாத அமாவாசையில் கொண்டாடப் போவதாக அரசு முடிவெடுத்த செய்தி நனவா, கனவா?? அர்ச்சுனா நீ எங்கே???- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
நான் பிறந்த வீட்டுக்குப் பக்கத்து வளவில்தான் கொல்லன் பட்டடை. அடிக்கேக்கை கோமணம் அவிழும், பிடிகழரும், சுத்தியல் விழும் என்று பயந்து பாத்துக்கொண்டிருப்பேன், நல்லகாலம் ஒருநாளும் அப்படி நடக்கேலை.🧐😌 - புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.