Everything posted by Paanch
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
தமிழர்களின் தலைவர்களை அறிந்துள்ளேன். சிலரை நேரிலும் கண்டுள்ளேன், தலைவனையும் நேரில் கண்களால் காணும் பாக்கியத்தையும் பெற்றுள்ளேன். சம்பந்தரை ஊடகங்களில்தான் அறிந்தேன், அந்த அறிவு பச்சைப் பூச்சி மூக்கில்பட்டுத் தெறித்துபோன்ற உணர்வை ஏற்படுத்தியது, அதன் தாக்கம் குறைந்து மறந்துவரும் நேரத்தில் மீண்டும் இந்தப்பதிவு 👇 பூச்சியை மூக்கின் உள்ளேயே நுளைத்துவிட்டது.😩
-
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது உண்மையா? ஒரு வரலாற்று ஆய்வு
இலங்கை நாடுதான் உலகில் முதன்முதல் விமானத்தைக் கண்டுபிடித்தது. அதனை ஓட்டிய விமானியின் பெயர் இராவணன்.🧐
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
நகை கிடைத்ததா? பதிவு தலையைச் சுற்றுது.😇
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
கடவுளுக்கும் பிச்சைப் பாத்திரம் கொடுத்து பிச்சை எடுக்க வைத்திருக்கும் மானிட இனத்தில் பிறந்து வாழும் நாங்கள் வேறு எப்படிச் சிந்திக்க முடியும்.?????🤣
-
அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
அர்ச்சுனாவை நோக்கிப் பாயும் அம்புகள் அனைத்தும் மாலைகளாகி அவரை அலங்கரிக்கும் மர்மம் என்ன????🤔
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. தலை வைத்தும் படுக்க முடியாதளவுக்கு அப்படி என்னதான் ஊரிலை செஞ்சீங்க சாமி.🫣
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
இடியோசை கேட்டால் “அர்சுனா அபயம்” என்று அழைத்தால் இடி விழாது ஓடிவிடுமாம். சிங்களவரோ, தமிழரோ அர்ச்சுனா என்று பெயர். கொண்டாலே அநீதிகள் அவர்கண்டு ஓடிவிடும்போல் தெரிகிறது.
-
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
யானை மண்ணை அள்ளித் தன்தலையிலே போடுமாம். தற்போது அமெரிக்கா ரம்பை அள்ளித் தன் தலையில் போட்டிருப்பது போல் தெரிகிறது.😳
-
பயந்தாங்கொள்ளி
குழந்தை பெற்றபின் தாய்க்கு உடம்புதேற பத்தியக்கறி வைத்துக்கொடுப்பார்கள். அதுபோல குட்டிகள் ஈன்றபின் நாய் தான்போட்ட குட்டிகள் ஒன்றின் கால், காது, வால் போன்ற பகுதிகளில் ஒன்றைக் கடித்து தின்றுவிடுமாம். அதுதான் அந்த குட்டிகள் ஈன்ற நாய்க்குப் பத்தியக் கறி. அம்மா சொன்னது கேட்டுள்ளேன்.
-
செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!
இதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான பொய்யான பரப்புரைகள் பரப்புவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான பரப்புரைகள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்க ஏன் முன்வரவில்லை?? உதாரணமாக: இவை புலிகளால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள், மற்றும் சிங்கள இராணுவத்தினர் என்பதான பரப்புரைகள்.😲
-
செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்
சுமந்திரன் இருக்கிறார்.😁
-
வணக்கம்
தனக்கெடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்று சொல்வார்கள். அந்தவகையில் அத்துடன் ஆங்கிலமும் சேர்ந்து என் ஆங்கில மொழிபெயர்ப்பு அறிவுக்கு சேதம் விளைவித்து விட்டதே! இருந்தாலும் இணையவன் அவர்களின் தட்டச்சு அவரை என்னுடன் இணைய வைத்து ஆறுதல் அளித்தது.🙏
-
வணக்கம்
உங்கள் பழைய ஐடியை தேடிப்பார்த்தேன், முகநூல் முகம் காட்டியது. அதில்…… (விக்கினன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். பொதுவாக,அசுரர்கள் அரக்க குணம் உடையவர்கள். அவர்கள் தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். ஆதலால் அவர்கள் தேவர்களையும்,முனிவர்களையும் தொல்லை கொடுத்துவந்தனர். அசுரர் குலத்தில் பிறந்த விக்கினன் மட்டும் மாறுபட்டவனா?அவனும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லையை பொறுக்க முடியாத முனிவர்களும்,தேவர்களும் விநாய பெருமானிடம் சென்று அவனிடமிருந்து தங்களை காக்கவேண்டி சரணடைந்தனர். விநாயகரும் அவனை அழிக்க புறப்பட்டார். முதலில் விநாயகர் சிறு பிள்ளைதானே! அவரால் என்ன செய்து விடமுடியும்?என ஏளனமாக இருந்த விக்கினன் பிறகு விநாயகரிடம் மன வலிமையிலும், உடல் வலிமையிலும் தோற்று போய், கடைசியில் தன்னை மன்னித்து அருள்புரியுமாறு (யாழ்களத்திலும்) சரணடைந்தான். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.🫱🫲😁
-
பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!
தான் பெறப்போகும் குழந்தை இவ்வுலகில் மனிதர்களோடு, மனிதத்தோடு சிறப்பாக வாழவேண்டும் என்ற எண்ணம்கூட அந்த கறுப்புசட்டை போட்ட அம்மாவுக்கும் இல்லையோ!🤔
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இந்த மனிதருக்கு தான் செய்தது தவறென்று இன்னுமா புரியவில்லை.???????
-
சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை
ஒருவர் தும்மினால் “நூற்றாண்டு” என்று சொல்லி அவர் நூறு வயதுவரை வாழவேண்டும் என்று வாழ்த்துவது எங்கள் மரபு, இங்கு நீதிபதி கிழவனை 128 வயது வரை வாழ வேண்டித் தீர்ப்பு வழங்கிவிட்டாரே. இப்படியான வக்கிரர்கள் வளர்வதைச் சட்டம் போட்டோ தண்டனை கொடுத்தோ தடுக்க முடியாது. இப்படி நினைத்தாலே நினைப்பவர்கள் பயம்வந்து நடுங்கி வாழச் செய்ய வேண்டும். நலமடித்து கை கால்களை முடமாக்கி வாழும்வரை மனழ் நொந்து வாழ விடவேண்டும்.😳
-
மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது!
இது ஒன்றும் அதிசயமல்ல. பிணம் புணரும் வெறி கொண்ட படைவீரர்களும் எங்கள் நாட்டு அரசிடம் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையா.?🤔
-
'சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது' - ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்
குட முழுக்கு என்பதே ஒரு அபத்தமான நிகழ்வு என்ற ஒரு பதிவைப் படித்துள்ளேன். அதாவது கோவில்களின் கட்டுமானப் பணிகள், பிராமண உயர்சாதி இனம் என்று வரையறுக்கப்பட்ட மனிதர்களால் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை, அனைத்துச் சாதி மனிதரகளாலும் மேற்கொள்ளப்படுவதால் அதில் தீட்டு உள்ளதாம், ஆகவேதான் தீட்டு நீங்கக் குடமுழுக்கு நிகழ்வு நடத்தப்படுகிறதாம். உண்மை என்ன.????
-
மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது!
சுமைதாங்கி எங்கே???????🤔
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்.🐟
-
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
தலையங்கத்தால் வாசகர்களைக் கவர முனையும் பதிவுகள் மலிந்துவிட்டன. யானையின் இலத்தியில் கண்டெடுத்த விளாம்பழம்போல் சில பதிவுகள் ஏமாற்றமளிக்கிறது.🤔
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.
-
"கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது" - கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன்
இலங்கையில் தமிழினத்தின் அறிவார்ந்த வளர்ச்சியுடன் தாங்களும் வளரவேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இன்றி அங்குள்ள படித்த சிங்கள இனவாதிகளும் காழ்புணர்சியோடு தமிழினத்தின் வளர்ச்சியை நோக்குவது போல், இந்தியாவிலும் தமிழ் மாநிலத்தின் வளர்ச்சியை அதன் சில மாநிலங்களிலுள்ள இனவாதிகள் நோக்குவது தெரிகிறது. இது இந்தியாவின் அழிவுக்கான அறிகுறிகள் என்பதை இலங்கையைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.🤔
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
- கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?
அம்மாள் வருத்தம் என்று பொக்கிளிப்பான், சின்னமுத்து போன்ற நோய்களுக்கு உள்ளாகி நான் வருந்தியபோது பனம்கள் வாங்கி வெங்காயம் போட்டு அம்மா அருந்தத் தருவா, ஓரிரு நாட்களில் நோய் பறந்துவிடும்.😆 - கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.