Everything posted by ஈழப்பிரியன்
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
கெலன் சூறாவளியால் இதுவரை 130 பேர் இறந்துள்ளனர்.இன்னமும் 600 பேருக்கு மேலானவர்களின் நிலை தெரியவில்லை.வெள்ளத்துடன் அடிபட்டுப் போயிருக்கலாம்.வீடுகளுக்குள்ளேயே வெளியேற முடியாமல் தவிக்கலாம். பல பாலங்கள் முற்றாக வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டதால் ஆஸ்வில்லி என்ற இடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
• Climbing death toll: At least 130 people have died across six states and officials fear the death toll can rise following Hurricane Helene. Many more remain missing, perhaps unable to leave their location or unable to contact family where communications infrastructure is in shreds. https://www.cnn.com/weather/live-news/hurricane-helene-damage-north-carolina-10-01-24/index.html Approximately 600 people were still unaccounted for in Asheville, North Carolina, Monday afternoon as the city suffers from washed out roads and bridges, cell service outages and blackouts, the mayor told CNN. Extensive damage to roads and infrastructure has isolated many remote communities and prevented crews from reaching residents with vital supplies, Asheville Mayor Esther Manheimer said on “The Source” Monday night. “There’s still a lot of folks that we need to be able to reach, so that is the priority,” Manheimer told CNN’s Kaitlan Collins. “But we also are in a situation where we don’t have water and power in most areas, and we do need resources like drinking water and food and other household supplies and personal supplies people might need.” The devastation wrought by Helene in the city is “catastrophic,” the mayor said. “The pictures don’t do it justice” President Joe Biden will fly over the city on Wednesday to survey the damage, she added.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
அனுரா வந்தால் டாலரின் விலை எகிறும் என்று ஊகித்தேன். ஆனால் டாலரின் விலை வீழ்ந்துள்ளது. 297.00
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 30ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இதே கேள்வி தான் எனக்கும்.
-
ஒற்றுமையாக போட்டியிட முயற்சி!- இந்தியத் தூதுவருக்கு வாக்குறுதி.
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://seithy.com/breifNews.php?newsID=323490&category=TamilNews&language=tamil சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ? அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ? அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?
-
பொது தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் விக்னேஸ்வரன் - மணிவண்ணன் கூட்டணி.
சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான வி.மணிவண்ணன் இணைந்துள்ளார். வி.மணிவண்ணனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் யாழ்ப்பாணத்தில் தயராவதாக கூறப்படுகின்றது. https://tamilwin.com/article/wigneswaran-to-contest-general-elections-alone-1727728503
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஆரம்பத்தில் இந்தத் தேர்தலும் தேவையில்லை என்றார்கள்.மற்றைய சிங்கள கட்சிகள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்றதும் இவர்களும் சரி என்று சொல்கிறார்கள். ஆனாலும் பொலிஸ் காணி அதிகாரம் பற்றி மூச்சில்லை. இவ்வளவு காலமும் காணாமல் போனோர் விடயத்தில் பிரதமர் அதிக அக்கறை கொண்டிருந்தார். இனிமேல் இந்த விடயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம். நீதியாக முடிவெடுத்தால் சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் நிலை என்ன? இது ஒரு பெரிய சவால் நிறைந்த விடயம்.பார்ப்போம்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
மறந்திடாமல் கையில் ஒரு பியரும் எடுத்துப் போகவும். பாராளுமன்றில் அனுரவை ஆட்டங்காண வேண்டியே சந்திரிக்காவை ஏற்கனவே களமிறக்கிவிட்டார்கள். தமிழ்குழுக்களையும் இந்தியா கூப்பிட்டுள்ளது. அனேகமாக எல்லா குழுக்கழும் ஒன்று சேரலாம்.
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
நீங்க எங்கேயோ போயிட்டீங்க. ஜேர்மனியில் இப்ப சாமம். இன்னும் தூங்கலையோ? மனைவி பேசலையோ? எனக்கு இரவு 11 மணியின் பின் அனுமதியில்லை.
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
ஆதாரத்தோடு வெளியாகிய Bar பொமிட் உரிமையாளர் விபரம்! கிளிநொச்சியில் சந்திரகுமாரும், விக்னேஸ்வரனும், அங்கயனும், டக்ளசும் தான் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். 1) கந்தசாமி கோவிலுக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடையில் உள்ள ஒரு பார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த Bar A9 வைன் ஸ்ரோர் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. 2) சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. 3) பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 4) 55ஆம் கட்டைக்கு அருகில் தொண்டமான்நகரில் அங்கயனின் தந்தை இராமநாதனின் பெயரில் ஒரு பார் திறக்கப்பட்டுள்ளது. அந்த Bar கேட்ட கடிதமும் வெளிவந்திருக்கிறது. 5) கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. 6) பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இது யாழில் நகரில் ஏற்கனவே Bar வைத்திருக்கும் நபர் தான் வாங்கியிருக்கிறார். கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரால் கனகபுரம் வீதியில் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது. விடுதலைப்புலிகள் காலத்தில் கிளிநொச்சியில் 11 பார்கள் இருந்தன. இப்போதும் 11 உள்ளதாம். 6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 11 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம். இந்த கயவர்களை மக்கள் அறிய Share செய்யுங்கள் whatsapp
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
அண்ணை...................... உங்களுக்குள்ள ஒரு 'அன்பே சிவம்' இருக்கிறது இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே.... எல்லாம் 17-18-19 வயதுவரை. 1977 தேர்தல் கூட்டங்களின் போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டம் இருந்தபடியால் சங்கானை நெல்லியடி போன்ற இடங்களில் கூட்டம் நடக்கும் போது பாதுகாப்பின் நிமித்தம் வேறுவேறு ஊர்களில் இருந்து கலவரங்கள் வெடித்தாலும் என்று பாதுகாப்புக்காக வாகனங்களில் போவோம். வாகனங்களில் ஆயுதமும் இருப்பதாக கதைப்பார்கள்.ஒருநாளும் நான் காணவில்லை. வீட்டிலே ஒரே பிரச்சனைஇ உன்னை ஏன் கொண்டு திரியிறாங்களா என்று தெரியுமாடா என்று அப்பா கேட்பார். அது புரிவதற்கு நீண்டகாலம் எடுத்தது. திருமணத்தின் போது கூட ஐயரை வைத்து செய்ய விருப்பமில்லை.ஆனாலும் தனித்து நின்றதால் முடியாமல் போய்விட்டது. அந்தநேரங்களில் இயக்கம் இருப்பது தெரிந்திருந்தால் சிலவேளை போராளியாகி இருப்பேன். காயுமில்லை பழமும் இல்லை.வெறும் சிப்பாய் தான். சிறுப்பிட்டியில் சிந்தில்வேல் ஒருவர் சிறந்த பேச்சாளர் இப்போதும் இருக்கிறார்.
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
கல்வி அமைச்சைப் பொறுத்தளவில் ஏறத்தாள உயர்கல்வி அந்தக்கல்வி இந்தக்கல்வி என்று அதற்கு மட்டும் 7 அமைச்சர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.7 அமைச்சர்களுக்கும் எத்தனை உதவியாளர்கள் வாகனங்கள் எரிபொருட்கள் அத்தனை பேருக்கும் கட்டடங்கள். ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை இப்படியாக வீண்செலவு செய்தார்கள். இதே போலவே இந்த விமானசேவையும் இருக்கும் என எண்ணுகிறேன். அதற்கும் ஏதாவது திட்டங்கள் வகுப்பார்கள் அப்போ தெரியும் ஏன் நஸ்டத்தில் ஓடியதென்று. எமிரேட்டுடன் இருந்த போது லாபத்தில்த் தானே ஓடியுள்ளது. நேரமிருக்கும் போது இந்தக் காணொளியைக் கேட்டுப் பாருங்கள்.
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இனி பாராளுமன்றம் போகிறவர்கள் பாடு ரசியாவுக்கு வேலைக்க போனமாதிரி தான். போட்ட முதலும் காலியாகும்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
பாதுகாப்பு பிரிவினரின் கெடுபிடிகள் லஞ்சம் கப்பம் இல்லாமல் போனதே பெரியதொரு சுமை குறைந்ததாக சொல்கிறார்கள்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
இந்தாளின் கை ரொம்பவும் சுத்தமாக இருக்கும் என்று நம்பிவிட்டேன்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
தமிழ் கட்சிகள் பெரிய முதலாளிமார்கள் போல திமிராக நடந்து கொண்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தல் அவர்களின் உண்மையான முகங்களைக் காட்டியுள்ளது. தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அனுரவைப் பார்க்கிறார்கள். இதிலே மிகமிக வேதனையான செய்தி என்னவென்றால் ஆன்மீகவாதி விக்னேஸ்வரன் திறுநீற்றுப் பட்டையுடன் உலாவந்து மதுபான அனுமதிப் பத்திரம் எடுத்து கையோடு ரணில் தான் இப்போது நாட்டை கொண்டு நடத்தக் கூடியவர்.அவருக்குத் தான் எனது ஆதரவு என்று தெரிவித்திருந்தார். இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு தந்தார்கள் வாங்கிவிட்டேன் என்கிறார்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
காரணம் இயலாமை ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....??? எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்???? இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம் அண்மையில் டாக்ரர் அர்ச்சுனா ராமநாதனையே ஒரு மீட்டபராக பார்த்தோம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மவர்கள் சிறிய தடி தென்பட்டாலும் பற்றிப் பிடிக்கவே செய்வர்.
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
- 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
One storm, 95 dead and a 500-mile path of destruction. Now comes the hard work of recovering from Helene CNN — Short on supplies, short on power and short on patience, the people who saw the power of a massive storm upend their lives have emerged to a new week, facing the daunting challenge of rebuilding. Some of the roads and bridges they need to do the job aren’t there anymore. Electricity could be a week away or longer. Emergency services are stretched. And neighbors, some of whose own homes are gone, are helping neighbors. At least 95 people have died across six states and officials believe there could be more. So far, state and county officials said 36 people died in North Carolina, 25 in South Carolina, 17 in Georgia, 11 in Florida, four in Tennessee and two in Virginia. Many more remain missing, perhaps unable to leave their location or unable to contact family where communications infrastructure is in shreds. வட கரோலினாவில் 38 பேர் இறந்துள்ளனர்.மகனின் வீட்டடியிலும் பல இடங்கள் நிலம் தெரியாத அளவுக்கு வெள்ளமாக இருந்தது. தெ;கரோலினாவில் 25 பேர் . ஜேர்ஜிஜாவில் 17 பேர் புளோரிடாவில் 11 பேர். இன்னும் பல இடங்களை ஏறத்தாள 500 மைல் நீழத்திற்கு குடிமனைகளை தூள்தூள்களாகத் தான் பார்க்க முடிகிறது. காற்று 150 மைல் கிழக்கே வந்திருந்தால் நாங்களும் அகப்பட்டிருப்போம். https://www.cnn.com/2024/09/30/weather/hurricane-helene-recovery-cleanup-monday/index.html- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
- சிரிக்க மட்டும் வாங்க
Sarath Fonseka-4F,3F,2F.- இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
இதுவரை இந்திய விமானங்களில் பயணித்ததில்லை. என்ன அந்தக் குடும்பத்துக்கு 2-3 மில்லியன் வரப் போகுது. - 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.