Everything posted by goshan_che
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
#யாவரும் கேளிர்❤️
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த திரியை கட்சிசார்/எதிர் காணொளிகள் இணைக்கப்பாவிக்காமல் - போட்டி திரியாக மட்டும் பாவித்தால் நல்லம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
இதற்கு பொறுப்பான அமைச்சர் டயனா கமகேயா🤣 ம்ம்ம்…..அதுவும் உண்மையே.
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்? ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள். ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
🤣…. கனபேர் 2022 இல் அடிச்சு பிடிச்சு தமக்கும் பிள்ளைகளுக்கும் சைக்கிள் வாங்கி போட்டு, இப்ப அவை கிடந்து உக்குது என்ற ரீதியில் சொன்னார்கள். சைக்கிள் பாவனை வெகுவாக குறைந்து விட்டது போலத்தான் எனக்கும் தெரிந்தது. கல்லுண்டாய், வல்லை, பொன்னாலை எதிர்காத்தில் சைக்கிள் உழக்கி போவதை இப்ப நினைத்தாலும் முதுகு நோவது போல் இருந்தாலும் - உடம்பு கொஞ்சமேனும் working condition இல் இருக்க அப்போ சைக்கிள் ஓடியது நிச்சயம் ஒரு காரணமே.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இல்லை. இதை false equivalence என்பார்கள். ஒன்று தமிழர் காணியில் அடாத்தாக தமிழரை துரத்தி விட்டு, அல்லது தமிழர் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதிகளை அழித்துவிட்டு அதில் அந்த பகுதியில் உள்ள இனம்பரம்பலுக்கு சரி எதிரான பரம்பலில், அரசே முழு கட்டுமானங்களையும் செய்து, மானியமும், காணியும் வேலையும் கொடுத்து உருவாக்கும் state sponsored colonization. மற்றையது தனி மனிதர்கள் தம் சுய விருப்பு, முயற்சியில் வாய்ப்பை தேடி இடம் பெயர்வது. Individual enterprise. சில சிங்களவர் இப்படி என்னிடம் கேட்டு நான் விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொண்டுள்ளார்கள். பலர் பதில் இல்லாமல் வாயை மூடியுள்ளார்கள். உங்கள் நண்பர் படித்தவன் என்கிறீர்கள் - இந்த அடிப்படை வேறுபாட்டை கூட விளங்க முடியவில்லையா அவரால்?
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
பதிலுக்கு நன்றி. தொடரவும் ஆவலாக இருக்கிறது.
-
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
🤣 மேலே “சேற்றை வாரி” இறைப்பதாக எழுதியது உங்களுக்கல்ல. கட்டுரையை பதிந்ததால் உங்களை quote பண்ணினேன். தவறாக விளங்கி கடுப்பாகி விட்டீர்கள் போலும். அரசியல் ஆய்வாளர்கள் மீது ஒரு போதும் நம்பிக்கை வைத்ததில்லை. இப்போதும் நிலாந்தன் சொல்வதால் இது உண்மை என நான் சொல்லவில்லை. நான் கண்டு வந்து எழுதியதை நிலாந்தனும் சொல்கிறார். ஆனால் எனக்கு செய்வது போல் அவரை இலகுவாக கடந்து போக முடியாது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எப்படி கருணாநிதி குடும்பத்துக்கு வக்கீல் வேலை செய்வது என் நோக்கம் இல்லையோ அதேபோல் வீரப்பன் கொள்ளையன் அல்லது கொள்ளையன் அல்ல என நிறுவுவதும் என் நோக்கமில்லை. ஆனால் வீரப்பனுக்கும் ஈழ விடுதலை போராட்டத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவர் எமது குலசாமியும் இல்லை.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சொல்வது கோஷானாக இருந்தால் சேற்றை வாரி இறைகலாம். நிலாந்தனும் இப்படி எழுதினால் என்ன செய்வது🤣
-
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
சொல்வது கோஷானாக இருந்தால் சேற்றை வாரி இறைகலாம். நிலாந்தனும் இப்படி எழுதினால் என்ன செய்வது🤣
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தகவலுக்கு நன்றி. 2019 உடன் ஒப்பிடும் போது யாழில் மிக அதிக அளவில் பெற்ரோல் செட் டுகளை கண்டேன். சில இடங்களில் எதிரும் புதிருமாக இரெண்டு செட் அடித்துள்ளார்கள். அனதளவுக்கு எரிபொருளுக்கு கேள்வி உள்ளதா?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
உலகில் முதல்முறையாக தேர்தல் மூலம் அதிகாரத்தை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியது மே. வங்கத்தில் என நினைக்க்கிறேன். 1996 வரை மிக சிறப்பாகவே மே வங்கத்தை ஆண்டார்கள். 1991 ற்கு பின்னான நரசிம்மராவின் திறந்த பொருளாதார இந்தியா தூக்கி அடித்த விடயங்களில் மே. வங்க கம்யூனிஸ்டுகளும் அடக்கம். அதை விட திறமான ஆட்சியை இன்றும் கேரளாவில் தருபவர்களும் கம்யூனிஸ்டுகளே. நான் அடிப்படையில் பொதுவுடமை கொள்கைக்கு ஆதரவானவன் இல்லை. ஆனால் சுந்தந்திர இந்தியாவில் கறைபடியாத அரசியல் எனப்பார்த்தால் மீண்டும், மீண்டும் பட்டியலில் வருவது அவர்கள்தான். தமிழ் நாட்டிலும் அதுவே. அதே போல் கம்யூனிஸ்டுகள் இல்லாவிடில் எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக்கவும் வாய்ப்பு இருந்தது. கேரளாவில் எதிர்ப்பு, மத்தியில் கூட்டு என்பது தவிர்க்க முடியாத அரசியல் இக்கட்டு. ஆனால் இன்று வரை பிஜேபி யை மூர்க்கமாக நாடெங்கும் எதிர்க்கிறார்கள். நாம் ஒருபோதும் பிஜேபியோடு கூட்டணி வைக்கவில்லை என கூறும் தகுதி வேறு எந்த பெரிய கட்சிக்கும் இல்லை. நான் கம்யூனிஸ்ட் ஆதரவாளன் இல்லை - ஆனால் தமிழ் நாட்டில் இன்றைக்கும் நாட்டை கொள்ளை அடிக்காத, அடிக்கமாட்டர்கள் என நம்ப கூடிய அரசியல்வாதிகள் உள்ள கட்சிகள் எவை எனப்பார்க்கின்- அது கம்யூனிஸ்டுக்ளே.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி🙏 ——பதிலிட்ட பையனுக்கும் நெடுஸ்சுக்கும் 🙏. ———-
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
1991 மே 21 க்கு பின் தமிழ் நாட்டில் ஒரு ஈழத்தமிழ் குடும்பம் வாடைக்கு வீடு எடுப்பதே இயலாத காரியமாக இருந்தது.ஒரே இரவில் வீட்டை காலி செய்ய சொன்னர்வர்கள் பலர். அதே போல் பொலிஸ் பதிவு, அலைக்கழிப்புகள் ஏராளம். இது வெளியில் வாடகை வீட்டில் இருந்தோருக்கு. முகாமில் நிலமை இன்னும் மோசம். இந்த காலத்திலும் பின்பும் வேல் முருகன், மணி, தியாகு போன்றோரின் அர்பணிப்புகள் எப்போதும் நன்றிக்குரியன. ஆனால் வீரப்பனுக்கும், தமிழக அரசியல் கட்சிகளும் இடையில் இருந்தது இப்படியான நேர்மஐயான உறவு அல்ல. அது சந்தன கட்டை வியாபாரம் அதன் இலாபம் பற்றியது. அதே போல் தமிழகத்தில் இருந்து 1991 இன்பின்னர் பொருட்கள் அனுப்புவது தனியே உதவியாக மட்டும் அல்ல, வியாபாரமாகவும் நடந்தது. தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் ஆட்டோ சங்கருடனும் தொடர்பில் இருந்தன. அதே கட்சிகள் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தன. ஆனால் ஆட்டோ சங்கருக்கும் ஈழ போராட்டத்துக்கும் ஒரு தொடர்புமில்லை. அப்படித்தான் வீரப்பனும். வீரப்பன் புலிகளை ஆதர்சித்து இருக்கலாம். இருக்கலாம் இல்லை. ஆதர்சித்தார். ஆனால் புலிகள் இவரை அருகில் கூட எடுக்கவில்லை. இவரை மட்டும் அல்ல பல ஆயுத வழி தமிழ் தேசிய இயக்களையும் தள்ளியே வைத்திருந்தனர். உங்களுக்கு தனிப்பட்டு அவர் என்னவாயும் இருந்து விட்டு போகட்டும், ஆனால் ஈழத்தமிழருக்கு அவர் குலசாமி இல்லை. எங்கள் குலசாமிகள் அடையாளம் இல்லாத உப்பு தரவைகளில் உறங்கி கொண்டிருக்கிறார்கள். 👆🏼🙏 👆🏼👍
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
தொடருங்கள்🙏. புத்தரின் நான்கு பேருண்மைகளை நான் மிக இலகுவாக, எளிமையாக: 1. துக்கம் உள்ளது 2. துக்கத்தின் வேர் ஆசை 3. ஆசையை துறந்தால் துக்கத்கில் இருந்து விடுபடலாம் 4. 3ஐ அடுத்த கட்டமாகிய கொல்லாமை, காரூண்யம், அன்பு என்பனவற்றுக்கு நகர்தினால் - பிறவி கடலின் சுழற்சியில் இருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடையலாம். இந்த புரிதல் சரிதானா? —————- எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அதே 1% தான். தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால். பிகு இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎 ————- @nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
அதே போல் Wellington Oval, WACA இரெண்டிலும் காற்று வேகமாக அடிப்பதும் - conditions இல் ஒன்றாக விளையாட்டின் அங்கமாக கருதப்படும். Fremantle Doctor பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
இல்லை - இது கையிருப்பு சம்பந்தமான பிரச்சனை போல தெரியவில்லை. மாறாக விநியோகம் சம்பந்தமானது. வட் வரி செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் பெற்றோல் விநியோகஸ்தர் - அரசினை நெருக்க, விநியோகத்தை வைத்து blackmail பண்ணுகிறார்கள். நான் அங்கு நிற்கும் போது இது புகைய தொடங்கியது. பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவை என அறிவித்து அரசாணை வெளி வந்தது. 24 மணி நேரம், கியூ 5 கார் அளவுக்கு நீண்டு பின் அடங்கி விட்டது. இதை நான் ஒரு trade union vs govt. பிணக்காகவே பார்க்கிறேன். ஆளை ஆள் மிரட்டி விட்டு பின் ஒரு compromise ற்கு வர வாய்புள்ளது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
என்ன சத்தியம் வேணும்? நான் போராட்டத்தை காட்டி கொடுக்கவில்லை… இந்த சத்தியமா? நிச்சயமாக செய்யலாம். அம்மா உயிரோடு இல்லை - ஆனால் மகன் இருக்கிறார் அவர் மேல் செய்யலாம். போராடாமல் விட்டு விட்டு வந்ததை தவிர போராட்டத்தை எதிர்த்து நான் ஒரு துரும்பைத்தானும் போடவில்லை. ஆனால் போராட்டத்துக்கு சமாந்திரமாக என்னால் முடிந்தவரை தமிழர் மீதான அடக்குமுறைகளை ஜனநாயக வழியிலும், ஊடக பரப்பிலும் ஏனைய பண்பாட்டியல் வழியிலும் - வெளிகொணர முயன்றுள்ளேன். நான் மட்டும் இல்லை, இங்கே 99% வர்கள் இப்படிதான். ———- ஆனால் ஒரு news forumமில் சத்தியத்தை வாங்கினால் அதை வைத்து என்னையோ இன்னொருவரையோ நம்பலாம் என நம்பும் அப்பாவியாக நீங்கள் இருப்பது கொஞ்சம் நெருடலாகவே உள்ளது. நீங்கள் இலகுவில் சீமான் போன்றோரின் கவர்ச்சி பேச்சால் எடுபடுபவர் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பச்சை தண்ணியாக இருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதென்ன லூஸ் தனமான கேள்வி? இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது. நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க? புலிகள் 1991 க்கு பின் எப்படி தமிழ் நாட்டில் ஒரு பின் தள வலைபின்னலை மீள உருவாக்க கஸ்டப்பட்டனர் என்பது தெரியும். இதை 1998 அளவில் நடுக்கடலில் வைத்து மருந்து, பின்னர் பெற்றோலியம் கைமாற்றும் அளவுக்கு வளர்த்தமையும் இந்த வலையமைப்பை இந்தியா அடிக்கடி உடைப்பதும் கேள்வி பட்டவையே. இதில் பல திக உறுப்பினர், வேல்முருகன் போன்றோர் தொடர்ந்து ரிஸ்க் எடுத்ததும் தெரியும். ஆனால் இந்த வலையமைப்பில் இருந்தோருக்கு கூட இதில் யார் ஈடுபட்டனர் என்ற முழு விபரமும் தெரியாது. அதுதான் புலிகளின் அணுகுமுறை. இந்த ரகசியங்கள் பல அவர்களோடு போய்விட்டன. இப்போ அண்ணன் சீமான 1000 லீட்டர் பெற்றோலை தனது பேண்ட் பக்கெட்டில் வைத்து, ஒரு கையால் பொத்தி கொண்டு போய் வன்னியில் கொடுத்தார் - என்ற ரீதியில் யாரோ உங்களுக்கு கதை சொல்லி இருக்கிறார்கள் என ஊகிக்கிறேன். ஏனைய ரகசிய தகவல்கள் போல் இதையும் எழுதுங்கள் - கேட்டு ரசிப்போம். இது ரொம்ப ஓவர் பையா…. ஈழப்போராட்டம் நடந்த போது நீங்கள் படுக்கையில் உச்சா போகும் வயதினர்…..அதுவும் மிக இள வயதிலேயே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்…. உண்மை என்வென்றால் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் இயலுமையோ, வயதோ, வாழ்விடத்திலோ நீங்கள் அப்போ இருக்கவில்லை. அதென்ன “ஈழ ஆதரவு”🤣 - நீங்கள் என்ன தமிழ் நாட்டு காரரரா ஈழ ஆதரவு நிலை எடுக்க? நடந்து முடிந்தது எமது போராட்டம் - அதில் நாம் பங்காளிகள் - ஆதரவு நிலை எடுப்போர் அல்ல.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் ஒன்றும் செய்யாமல் இருந்ததே பாரிய நன்மைதான் 🤣. அதை விளங்கியப்படியால்தான் அப்போ நவதுவாரங்களையும் மூடி கொண்டு இருந்தேன் (பகிடி இல்லை). ஆனால் இங்கே நான் கோஷான் குலசாமி, என போராட்ட வரலாறுடன் என்னை பொய்யாக சொருகவில்லை. ஆகவே என்னை பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் வீரப்பனை போராட்ட வரலாற்றுடன் சொருகி கதை புனைவதால் அது கேள்விக்கு ஆகிறது.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இதற்கு மாறாக நான் எங்கேயும் எழுதவில்லையே? பலர் 5%- 12% சொன்னார்கள். நான் இதுவரை சீட் சுழியம், 39 டெபாசிட் காலி என்றே சொல்லி வந்தேன். இப்போ முதல் முறையாக சதவீத கணிப்பை போட்டுள்ளேன். மீண்டும் நினைவூட்டுகிறேன் 1. நான் தேர்தல் விற்பனர் அல்ல. கணிப்பு என் தொழிலும் அல்ல. உண்மையை சொல்ல போனால் கணக்கில் நான் ரொம்பவே வீக். 2. நான் களத்திலும் இல்லை. ஏனையோரை போல செய்திகள் அடிப்படையிலே என்கருத்தை, கணிப்பை எழுதுகிறேன். 3. IPL போட்டி கணிப்பு போலவே இதுவும். அங்கே - கோஷான் RR வெல்லும் என்றார், ஆனால் KKR வென்று விட்டதே என யாரும் சிறுபிள்ளைதனம் செய்வதில்லையே? அது போலவே இங்கும். 4. இதை எழுத்தில் போட வேண்டி இருப்பது - யாழ் உறவுகளின் maturity ஐ யோசிக்க வைக்கிறது 😆. 5.என் சீமான் எதிர்ப்புக்கும் கணிப்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவருக்கு 1% கூட வரக்கூடாது என்பது என் ஆசை. ஆனால் 8% வரை எடுப்பார் என்பது என் கணிப்பு. இரெண்டையும் வேறுபடுத்தி பார்ப்பது அவ்வளவு கஸ்டமான விசயம் இல்லை என நம்புகிறேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படி எந்த பலக்கமும் என்னிடம் இல்லை. ஆனால்….. வீரப்பனை தேவையில்லாமல் எமது போரட்டத்தில் கொண்டு வந்து சொருகினால் - அந்த போராட்டதை மதிக்கும் எவருக்கும் கோபம் வரும். முடிந்தால் வீரப்பனுக்கு எம் போராட்டத்துடன் உள்ள தொடர்பு பற்றி நீங்கள் எழுதுவது சரி என குறைந்தத்கு 5 யாழ்கள உறவுகளை இங்கே வந்து எழுதும்படி கேட்டுப்பாருங்கள். அப்போ தெரியும் எப்படி பட்ட ஒரு பொய்கதையை சீமான் புனைந்துள்ளார் என்பது. 🤣 என்ன திருப்பி கருணாநிதியிடம் போய் விட்டீர்கள். நேற்றே சொல்லி விட்டேனே - அவர்களை பற்றி என்னன்சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அதற்காக என் பொன்னான நேரத்தினை நான் வீணக்கவும் போவதில்லை இல்லை. அதை மட்டுமா காண்கிறோம்…நாம் எவ்வளவு செய்தோம், எவ்வளவு கொடுத்தோம் என்பதை இன்னொரு நபருக்கு சொல்லி, அதை பொது வெளியில் எழுதி பெருமை கொள்வோரையும் அல்லவா நம் கண் முன்னே பார்கிறோம்!!!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எனக்கும் வீரப்பனுக்கும் என்ன வாய்க்கால் தகறாரா. எமது போராட்டத்துக்கு எதுவும் செய்யாத ஒருவர் அவர். அவரை சூழ்சியாக கொல்ல புலிகள் பெயரை பயன்படுத்தினார் ஜெ. ஆகவே அவரை ஏதோ எமது போராட்டத்தூண் போலவும், இயக்கம் அவரை அழைத்தது என்பது போலவும், எமது போராட்டத்தை பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதினால் - அதை கேள்வி கேட்டே ஆவேன். எந்த கொம்பனாய் ஆனாலும். காகம் உண்ணி கொத்தி யானைக்கு வலிப்பதில்லை🤣