Everything posted by goshan_che
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
மேலே சொல்லப்பட்டுள்ள “மேற்கு” என்ற ஒற்றை பதமே காலாவதியான ஒண்டு. நமது அண்ணர் 2024 க்கு பின் அப்டேட் ஆகவில்லை போலுள்ளது. அண்மையில் வந்த அமெரிக்க பாதுகாப்பு மூலோபாய ஆவணம் - தற்போதைய ஐரோப்பாவை கடுமையாக சாடி ராஸ்யாவை அரவணைக்கிறது. ரஸ்யாவும் அதை வரவேற்கிறது. டிரம்ப் புட்டின் கைப்பாவை இதன் அடிப்படையில் இப்போ அமரிக்கா+ரஸ்யா சேர்ந்து உக்ரேனை விழுங்க முனைகிறனர். ஐரோப்பா தனித்து விடப்பட்டுள்ளது. யூகேயும் அதேதான். இதுதான் இப்போ உலக ஒழுங்கு. இன்னும் பழைய மேற்கு கிழக்கு பதங்களை பாவிப்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
முன்னரே சொன்னதுதான். உங்கள் சிந்தனை தெளிவு பிரமிக்கத்தக்கது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும். மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது. சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும். நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா? எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும். அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம். 200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா? இல்லவே இல்லை. மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள். 1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான். இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும். ஆனால்…. “என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?” எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஓம் தெரியும். ஆக நீங்கள் சொல்வது? புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள். ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர். சரியாக புரிந்துள்ளேந்தானே? தாங்காளும் போய் இருக்காயினம்🤦♂️ ஆதாரம் எங்கே?
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதனால்தான் சொல்கிறேன் சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம். இதை சொன்னால் கூட விளங்கி கொள்ள முடியாது ஈழதமிழ் சுண்ணாம்பு குவளைகளால்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஒரு அருமையான கருத்தை……. சுமன் சொன்னார் என்பாதால் மட்டுமே எதிர்க்கும் அளவுக்கு….. சுமன்லவர்ஸுக்கு காதல் ஜுரம் முற்றி விட்டது என்பதை இந்த திரி காட்டி நிற்கிறது. போற போக்கில் சுமன் நாளைக்கு கருணா துரோகி எண்டு சொன்னால், இல்லை அவர் சொக்கதங்கம் எண்டு எழுதும் அளவுக்கு காதல் முற்றி விடும் போல உள்ளது.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதற்குமேல் எழுத எதுவும் இல்லை🙏.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும். அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது. நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂 பலர் மாவீரர். இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள். இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை. அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
எதிரி எனிலும் give credit where it’s due. அண்மையில் பிரித்தானிய கோவிட் பொது விசாரணையின் முதல் அறிக்கை வந்துள்ளது. அதில் மோடன் பொரிஸ் ஜோன்சன் செய்திருக்க வேண்டிய, செய்யதவறிய கொவிட் கால நடவடிக்கைகள் என பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் பலதை கோத்தா அரசு செய்தது என்பதே உண்மை. அதன் பின் நாடு வங்குரோத்தானது பல காரணங்களால் அதில் முதன்மையானது அதற்கு பலவருடம் முன்பாகவே நடந்த ஊழல், கொள்ளை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகம் சிங்களவர்களது தாயகம். அதில் குடியேற்றப்பட்டவகள் எமது மலையக உறவுகள். எந்த மலையக கிராமத்திலும் அவர்களை குடியேற சிங்களவர்கள் அனுமதிப்பதில்லை. லைன் ஒற்றை அறைக்குள் பல சந்ததிகள் குடும்பம் நடத்த வேண்டிய கலாச்சார கேடான நிலை. மலை சரிவுகளில் லைன்கள். 1000 ரூபாய் வேதனம். வெளிநாடுகாள் சொல்லும் modern slavery தான் மலையகத்தில் நடப்பது. அந்த நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நாம் அவர்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை கொடுத்த படி, வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியாதா? முடியும். உங்கள் ஊருக்கே வருகிறேன், உங்கள் வீடு உள்ள பகுதியில் கூட ஒரு வீட்டில் ஆள் இருந்து கொண்டு, பக்கதில் இருக்கும் 4 வெளிநாட்டாரின் வீட்டை ஆள் இல்லாமல் பாதுகாக்கும் நிலை இல்லையா? ஊர்காவற்துறை, கரம்பன் போனால் நிலமை இன்னும் மோசம். வெற்று காணிகளை ஒரு அளவுக்கு மேல் கட்டி வைக்க முடியாது. உண்ணா சொத்து மண்ணா போகும். அதை இனத்தின் நலனுக்காவது பாவிக்கலாம். அளப்பவன் பெயர்தான் அரசியல்வாதி. ஆனால் நான் இங்கே அதன் பின்னால் உள்ள கருத்தின் அவசியத்தைதான் வலியுறுத்துகிறேன். ஆகவேதான் …”சும்மா” என்ற பீடிகை. ஓம். இதை நிழலியும் சொல்லி உள்ளார். ஆனால் அப்போதும், இப்போதும் யாழ்பாண “பொன்னம்பலங்கள்” இதை எதிர்க்கவே செய்தார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சும்மா ஒரு பேச்சுக்கு மனோவும், சுமனும் சொன்னதுக்கே….. யாப்பணீஸ் இந்த திரியில் படுறபாட்டை பார்த்து சிரிப்புத்தாளவில்லை😂. வாழ்வாதாரம் இல்லையாம்…மலையகம் அவர்களின் தாயகமாம்…அதாம்….இதாம்…😂 கரவு புத்தியை எப்படி எல்லாம் பெயிண்ட் அடித்து மறைக்க வேண்டி கிடக்கு 😂. இன்னும் ஒருவர் பிரதேசவாதம் எல்லாரிடமும் இருப்பதுதானாம்😂… நீங்கள் வெளிநாட்டில் வந்து தட்டு தூக்கி, 20 வருடத்தில் தொழிலதிபர்கள் ஆக முடியும் என்றால் ஏன் இந்த மக்கள் வடக்குக்கு வந்து வாழ முடியாது? நீங்கள் இரந்த போது வெளிநாட்டு அரசும் மக்களும் உங்களுக்கு தந்த அனுசரணையில் 10% நீங்கள் இவர்களுக்கு கொடுத்தாலே போதும். பிகு வடக்கை தமிழ் மாகாணமாக வைத்திருக்க இதுவே கடைசி உத்தி. ஆனால் தான், தனக்கு என்று மட்டுமே சிந்திக்கும் சுண்ணாம்பு மூளைகளுக்கு இது விளங்காது. ஆகவே இந்த பஸ்சும்…மிஸ்
-
யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
அஞ்சலிகள் பாலா அண்ணை. வேலணை மக்களின் முயற்சிக்கு, துணிவுக்கு பாராட்டுகள்.
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
அடேங்கப்பா…. ஈழத்தமிழனை வெற்றிகரமாக போட்டு மிதித்து, பிதுக்கி, ஒன்பது வாசலிலும் பவ்வி வர வைத்துள்ளான் சிங்களவன். அவனுக்கே இவ்வளவு சாபம் எண்டால்… பிதுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழன் தலையில் எத்தனை சாபம் இருக்கும் 😂. பிகு மேலே உள்ள கருத்தையும் வின்னர் பட டயலாக் பாணியில் பொழுதுபோக்காக வாசித்து கடந்து போகவும்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
விளக்கம் பிரமாதம்😂
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
உண்மையில் நான் எழுதியது பகிடி இல்லை. இது என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். உங்களுக்கு நினைவிருக்கலாம், அத்தனை எதிர் கருத்து இருந்த போதும் தான் அரசியலில் இறங்க யோசிப்பதாக நெடுக்ஸ் சொன்னபோது அதை நான் வரவேற்றேன். அப்படியாவது ஒரு வினைதிறானவர் முன்னுக்கு வரவேண்டும் என்பதால். என் போன்றவர்களை நம்பினால் இன்னும் அழிவே மிஞ்சும். நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா? இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா? இதுவரை காலமும் நாமலின் போட்டி பரீட்சை பிந்தைய பரீட்சைகள் சகலதையிம் ஜீ எல் பீரிஸ் எழுதி கொடுத்ததாக அல்லவா சொல்வார்கள்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம். கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை…. இந்த இனத்துக்கு உய்வே இல்லை.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
புதிதாக தேவையில்லை. ஒரு காலத்தில் மிக முக்கிய பெளத்த நகரம் காஞ்சிபுரம். அதே போல் இலங்கையின் முதல் பெளத்தன், மன்னர் தேவநம்பிய தீசனும் ஒரு தமிழனே. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன். இந்த 6 திருத்தத்தை ஏற்காது கூண்டொட்டோடு பதவி விலகினர் கூட்டணியினர். ஆனால் புலிகளின் பினாமிகான ததேகூ இதை ஏற்று கொண்டது. புலிகள் காலத்திலேயே.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சண்டித்தனம் செய்யாமல் ஒன்று பட்டு நகரலாம். தீர்வை அவர்கள்தான் தரவேண்டும். தனி நாடு, பிரிந்து போகும் சமஸ்டி எண்டு மூச்சும் காட்ட கூடாது. நீங்கள் சொல்லும் தீர்வை தரவேண்டிய ஏது நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும். ஆனால் இதை செய்ய என்னால் (அக்னியாலும்?😂) முடியாது. ஏன்னா… பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி😂. அங்கே பா ஊ க்குரிய சிறப்புரிமை பாராளமன்றத்துள் இருக்கு. இங்கே பேசினால் அடுத்த முறை நோ வீசா😂
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
ஸ்டார்ட் மீசிக்😂 70 வருடம் ஏதுவும் தராதோரிடம் என்னத்தை பேசி…என்னத்த …? இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சரி, நீங்கள் கூறும் யதார்த்த அரசியல்தான் என்ன என ஒரு விளக்க்கம் கொடுக்கிறது?