Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இவர்களில் பலரை திமுக சார்பு கலை, இலக்கிய மேடைகளில் சர்வசாதாரணமாக அண்மைய வருடங்களில் காண கிடைத்தது என்பதை கொஞ்சம் நினைவூட்ட விரும்புகிறேன். அதுவும் இந்து ராம் இப்போதெல்லாம் ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவர் போல் பேசுகிறார்😂. மெத்த படித்த கனவான்களே, அப்படியாயின் அந்த முன்னோட்டத்தை கண்டும், அழிவை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பேணும் தன் பொறுப்பில் தவறியுள்ளது என்பதுதானே பொருள்? இந்த தவறுக்காக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்😂. அப்பட்டமான பொய். விஜைக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கவில்லை. வேலுசாமிபுரத்தில் நடந்தது பொதுக்கூட்டம்.
  2. செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், உதயநிதி இன்னும் இருக்கும் திமுக பேச்சாளர்கள் எல்லாரும்…இதை பார்த்து, பேச கற்றுகொள்ள வேண்டும்😂. பிகு கரூர் அவலம் பற்றி நான் முதன் முதலில் திரி திறந்த போது, டிஸ்கியாக ஒரு எதிர்வுகூறலை போட்டேன். ஐந்து நாளில் அது உண்மையாகி உள்ளது 😂.
  3. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் இந்த விடயத்தில் ஒன் இந்தியா (தட்ஸ்தமிழ்) கொஞ்சம் அல்ல ரொம்பவே திமுக சார்பு நிலை எடுக்கிறது (வழமையாக தேர்தல் நெருங்கும் போது திமுக சார்ப்பாக மாறுவார்கள் -கவனித்துள்ளேன்). ஆகவே இப்படித்தான் நடந்ததா என தெரியவில்லை. விகடன் எழுதினால் தெரியும். ஆதவ் டெல்லி போயுள்ளாராமே?
  4. சினிமாவில் சீமான் எத்தனை தசாப்தங்கள் இருந்தார்? தம்பி, பாஞ்சாலங்குறிச்சி தவிர அவர் இயக்கி சுமாராகவேனும் ஓடிய படங்கள் யாவை? அரசியலுக்கு வரும் முன் சீமான் சொந்தமாக கார் வைத்திருந்தாரா? நீலாங்கரையில் 6 கோடி பங்களா? மலைநாட்டில் பல ஏக்கரா காணி? சினிமாவில் சிங்கிள் டீ க்கு சிங்கி அடித்தபடி, திராவிட, கம்யூனிச மேடைகளில் ஏறி வாயை வாடகைக்கு விட்டு வாழ்க்கைபாட்டை ஓட்டியவருக்கு, முள்ளிவாய்க்கால் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. மட்டகளப்பில் தங்க-சுனாமி என்பார்கள். அத்தனை அழிவிலும் கூட தப்பிய பலர் வெளிநாட்டு உதவிகளை பகிர்கிறோம் என அளவுக்கு அதிகம் சொத்து குவித்தார்கள். சீமானுக்கு தங்க முள்ளிவாய்க்கால்.
  5. என்ன பிரக்கடித்து விட்டதா? தண்ணியை குடித்து விட்டு மீண்டும் கூறுங்கள்😂
  6. சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம் HemavandhanaUpdated: Wednesday, October 1, 2025, 12:03 [IST] திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. நேற்று விடிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று, வாழைத்தார்களை ஏற்றி வந்துள்ளது.. திருவண்ணாமலை கான்ஸ்டபிள்கள் இந்த மினிவேனை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் நிறுத்திய கான்ஸ்டபிள்கள் இருவரும், அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 20 மற்றும் 45 வயதில் 2 பெண்கள் இருந்ததை கண்டு அவர்கள் யார் என்று விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது இருவரும் ஆந்திரா சித்தூரை சேர்ந்த மகளும், சித்தியும் (தந்தையின் இரண்டாவது மனைவி) என்பதும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, தன்னுடைய உறவினர் மினிவேனில் வந்துள்ளதும் தெரியவந்தது. ஆனாலும், 2 பெண்களையும் விசாரணை என்ற பெயரில் நைசாக பேசி, ஒதுக்குப்புறமிருந்த தோப்பு பகுதிக்கு கான்ஸ்டபிள்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே சித்தி கண்முன்னேயே 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதில் அந்த பெண் அங்கேயே மயங்கிவிழ, சித்தி அலறி கூச்சலிட, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலியே பயிரை மேய்ந்தது இதையடுத்து, மருத்துவமனையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர்.. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சித்தி கண்முன்னேயே இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சித்தி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். பாஜக, அதிமுக கடும் கண்டனம் அதேபோல, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளும் திமுக ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம். திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே காமுகர்களாக உருமாறி வருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக அரசுக்கு கண்டனம் அதேபோல முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திருவண்ணாமலை சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/thiruvannamalai/tiruvannamalai-two-policemen-arrested-for-lorry-girl-incident-and-edappadi-palanisamy-annamalai-na-739789.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி தமிழக பொலிசார் எவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். இதை கண்டிக்கும் தலைவர்கள் அரசியல்விளையாட்டு விளையாடுகிறார்கள்.
  7. என்னதான் நீங்கள் பழைய உறுப்பினர் எண்டாலும்…யாழ்களத்தில் நேற்று இணைந்து கொண்ட ஒருவர் உங்கள் Saturn எண்டு சொன்னால், என்போன்றோருக்கு கோவம் வரும்தானே அண்ணை?
  8. 1. டிரோனில் பார்த்து நடு நடுங்கும் கூட்டத்துக்கு 500 பொலிஸ்காரரை மட்டும் போட்டது ஏன் கூட்டம் அதிகமானது என தெரிந்தால் - நேரடியாக விஜை, அல்லது ஆனந்த், ஆதவ் எவரையாவது அழைத்து கரூருக்கு வர வேண்டாம் என பொலிச் கேட்டதா? மீறிவந்தால் மக்கள் நலனை காட்டி ஒரு நீதிபதி வீட்டுக்கு போய் தடைஉத்தரவு கூட வாங்கி இருக்கலாம். இங்கே மேற்க்கை உதாரணம் காட்டும் பலருக்கு, மேற்கில் பொலிசார் செய்யும் dynamic risk assessment பற்றி தெரிந்திருக்கும். ஒரு கூட்டம் கூடுகிறது என்றால் அனுமதி அளித்தவுடன் பொலிசாரின் கடமை முடிவதில்லை. அந்த கூட்டத்தை நடக்கும் போதும் அவதானித்து, தக்க நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை. இன்று செந்தில் பாலாஜியே சொல்கிறார். விஜை பேச தொடங்கி 3 நிமிடத்தில் அவர் மீது செருப்பு வீசியதாக. யார் வீசி இருப்பார்கள்? நிச்சயமாக திமுக அனுப்பிய ஆட்களை தவிர வேறுயாருக்கும் இந்த தேவையில்லை. இப்படி எடப்பாடிக்கு, அன்புமணிக்கு நடப்பதை தமிழக உளவுதுறை விடுமா? 500 பொலிஸ்காரரர் இருந்தார்களே, சிலரை விஜை பேசும்போது வேனுக்கு அருகில் கூட தடிகளுடன் காண முடிகிறது. எத்தனை பொலிசார் தள்ளுமுள்ளில் இறந்தார்கள்? யாராவது காயமாவது பட்டார்களா? இதில் சதி இருக்கலாம் இல்லாதிருக்கலாம். ஆனால் கணிசமான தவறு தமிழ் நாடு அரசின் பொலிஸ்மீது என்பது மறுக்கவியலாத உண்மை. RCB கூட்ட நெரிசலுக்கு யாரும் RCB கொலைகாரர்கள் என சொல்லவில்லை. RCB யும் பங்களூரு பொலிசும் கடமை தவறினர் என்றே சொன்னார்கள். எடப்பாடி, அன்புமணி, பிரேமலதா இதில் அரசியல் செய்வது உண்மை. ஸ்டெரலைட் நேரம் மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் பொம்மை விளையாடி கொண்டு இருக்கவில்லைதானே? ஆனால் அரசியலையும் தாண்டி தவறில் கணிசமான பங்கு தமிழக அரசுக்கு என்பது அடிப்படை உண்மை. இன்னொரு விடயம் - ஸ்டெரலைட் முதல் - அஜித்குமார் கொலை வரை, தமிழக பொலிஸ் தமது அரசியல் எஜமானர்களுக்காக எந்த நிலைக்கும் போக கூடியவர்கள் என்பது ஏலவே நிறுவப்பட்ட ஒன்று. விஜைக்கு முட்டை அடிக்கும் அந்தரிப்பில் நாம் இதை மறக்க கூடாது.
  9. கரூர் கேஸ்.. விஜய்க்குத்தான் பெரிய பின்னடைவு.. நீதிபதி கேட்ட வலுவான கேள்விகள்.. தடுமாறும் தவெக Shyamsundar IUpdated: Tuesday, September 30, 2025, 15:06 [IST] கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று வாதம் வைத்தனர். ஏற்கனவே கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெகவிற்கு பின்னடைவு இந்த வழக்கில் இன்று தவெகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. வழக்கில் இன்று வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், அந்த வருத்தத்தால் தான் விஜய் வரவில்லை. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான். சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும். Also Read அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்ட விரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது. சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம் . சனிக் கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள். கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான், என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது. போலீஸ் வைத்த வாதம் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கால தாமதமாக வந்தது மட்டும் இன்றி, விஜய் வாகனம் ராங் ரூட்டில் வந்தது. பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதும் கூட்ட நெரிசலுக்கு காரணம். Recommended For You சொன்ன நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சொன்னபடி 3 மணிக்கே வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம். இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார் அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே?, என்று குற்றச்சாட்டுகளை வைத்தது. நீதிபதிகள் கண்டிப்பு இதில் நீதிபதிகள் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்ததோடு, அவர்களுக்கு கடுமையான கேள்விகளையும் எழுப்பியது. அதில், கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு. அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே? இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். தமிழக அரசிடம் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படி சொன்னார். எதை வைத்து 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னீர்கள்? விஜய்க்கு இது தெரியுமா? அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா? சொல்லுங்க? மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை. நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்? என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார். https://tamil.oneindia.com/news/chennai/what-really-happened-in-the-vijay-tamilaga-vetri-kazhagam-case-at-karur-court-739575.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel மிக காத்திரமான, நியாயமான கேள்விகளை தவெக விடம் கேட்டுள்ளார் நீதிபதி. காவல்துறையிடம்?
  10. இந்த திரியில் எத்தனையோ மானுட நேயர்கள் வந்து கருத்து சொல்லி போயுள்ளார்கள்… ஆனால் இந்த பதிவில் நீங்கள் தமிழ் நாட்டு காவல் துறையின் பொறுப்பு பற்றி எழுப்பிய எந்த கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்ல முயற்சிக்க கூட இல்லை. ஏன்? ஏனென்றால் அப்படி பதில் சொன்னால் இந்த இழப்புகளுக்கு தவெக வும் தமிழக அரசும் கூட்டு பொறுப்பு என்பதை ஒத்துகொள்ள வேண்டி வரும். அப்படி ஒத்துகொண்டால், (ஏதோ ஒரு அல்லது பல காரணங்களுக்காக ) இந்த விடயத்தில் விஜையை ஒரு பக்க சார்பாக போட்டு வெளுக்கமுடியாது போய் விடும். (எமக்கும் விஜயகாந்த் நினைவில் உள்ளார்😂).
  11. பொதுவாக உடல், உள பிரச்சனைகளை வைத்து நாம் ஒருவரை ஒரு தொழில் அல்லது சேவையில் இருந்து ஒதுங்க சொல்லமாட்டோம். ஆனால் இதற்கு அரசியல் விதிவிலக்கு. நாளைக்கே ஒரு பெருவெள்ளம் அல்லது சுனாமி வந்து சில நூறு உயிர்கள் போனதும், முதல்வர் போய் வீட்டுக்குள் பூட்டி கொண்டால் அது சரிவராது.
  12. ஓம் அந்த பேட்டியையும் பார்த்தேன். பிந்திய செய்தி ஆதவ் இரவோடிரவாக கைதாகலாமாம். மிக சரியான கருத்து. வாழ்க்கையில் எம்மால் என்ன இயலும் என்பதை விட, என்ன இயலாது என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம். தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு மட்டும் அல்ல நாட்டுக்கே சேதம்.
  13. PTSD எப்போ, எப்படி கிளம்பும் என கணிக்க முடியாத ஒரு விடயம். நீறுபூத்த நெருப்பாக இருந்து பல பத்தாண்டுகளின் பின் கூட ஒரு trigger இல் வெடிக்கும். இது 100% எனது ஊகம் மட்டுமே.
  14. இது என்னுடைய வாழ்க்கை அனுபவம் சார்ந்த ஊகம் மட்டுமே. Shell shock பாதிப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆளை வீடியோவில் பார்க்க trauma வில் இருந்து மீளவில்லை என்பது போலவே உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்மை நேசித்த மூன்றாம் நபர்கள் நம் கண்முன்னே இறப்பது என்பது ஜீரணிக்க கடினமான விடயம். கூட்டத்திலேயே இந்த திகிலை காண முடிந்தது. நானும் மனிதனே, மனதளவில் நொருங்கியுள்ளேன் என்ற வார்த்தைகள் சொல்லாமல் சொல்லும் செய்தி இது என நினைக்கிறேன். இதை உடைத்து சொல்ல முடியாது. பைத்தியம் என கதையை முடித்து விடுவார்கள். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதால் இது நடிப்பாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கூகிள் ஜெமினியில் இருந்து Overview நடிகர் விஜய்யின் தங்கை வித்யா, லுகேமியா (leukemia) எனும் நோயால் உயிரிழந்தார். விஜய்க்கு தன் தங்கை மீது மிகுந்த அன்பு இருந்ததாகவும், அவருடைய இழப்புதான் விஜய்யை மிகவும் அமைதியாக்கியது என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். தங்கை இழப்பின் பின்னணி: விஜய்க்கு தனது தங்கை வித்யா மீது மிகுந்த அன்பு இருந்தது. வித்யாவுக்கு மூன்று வயது இருக்கும்போது லுகேமியா நோய் தாக்கியது. இந்த நோயின் காரணமாக, அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் இழந்தனர். தந்தையின் கருத்து: விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். வித்யா தான் விஜய்யின் உலகம் என்றும், அதன் இழப்பு அவனை அமைதியாக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
  15. இல்லை. ஆனால்… நாங்கள் சொன்ன விதிகளின் படி நடந்து கொண்டோம். என சொல்லி உள்ளார். இதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். நீங்கள் இடத்தை கொடுத்தீர்கள், நீங்கள் விதிகள் போட்டீர்கள் அதன்படி நாம் நடந்தோம். இடம் பொருத்தமில்லை என்பதால் தள்ளுமுள்ளு எனில் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே நான் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை. இதுதான் நிலைப்பாடு என நினைக்கிறேன். அத்தோடு உண்மை விரைவில் வெளியே வரும் என்றால்… தப்பு தவெக மீது இல்லை என்பதுதானே அர்த்தம் (விஜை பார்வையில்). இல்லை. கரூரில் கலவரம் வரும் எனில். திருச்சியில் ஒரு ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்றிருக்கலாம்.
  16. அருணா கமிசன் விசாரணை, பொலிஸ் குற்றவியல் விசாரணை நடக்கும் போது அமுதா ஐ ஏ எஸ் சுக்கு இப்படி ஒரு கூட்டம் போடும் அவசியம் என்ன? வழக்கை குழப்பும் முயற்சி என எடப்பாடி ஒரு பிடி பிடித்துள்ளார்.
  17. மேலும் நானும் மனுசந்தானே என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை சம்பவ இடத்துக்கு அருகில் தங்க விரும்பினேன், ஆனால் மேலும் அசம்பாவிதம் வரும் என சொல்லி என்னை அகற்றினர். என்றும் கூறினார்.
  18. வாய்ப்பை பயன் படுத்தி மாறி, மாறி பிரச்சார வீடியோவை இணைக்கும் எவரும், விஜை வெளியிட்ட வீடியோவை இணைக்கவில்லை என நினைக்கிறேன்😂. விஜையா முக்கியம் நமக்கு, நம்ம பொழப்புத்தான் முக்கியம் என எண்ணுகிறார்களோ என்னமோ😂. கரூரில் மட்டுமே ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் மக்கள் பார்த்துகிட்டுதான் இருக்காக விரைவில் உண்மை வெளிவரும் சி எம் சார், பழிவாங்குவாயின் என்ன பழிவாங்குங்கள், நிர்வாகிகளை விட்டு விடுங்கள் அரசியல் பயணம் தொடரும் ஆதரவாக கதைத்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி இவை விஜை சொன்னது
  19. கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அவசரமாக அனுமதி Velmurugan PPublished: Tuesday, September 30, 2025, 21:08 [IST] சென்னை: தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வதந்தி பரப்பியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள் . அந்த வகையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Also Read இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தவெகவினர் குற்றம்சாட்டி தகவல்களை பரப்பி வந்தார்கள் இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டு எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்திருந்தனர். அதில் இரண்டு பேர் தவெகச் சேர்ந்தவர்கள் ஆவார். ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்பு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. Recommended For You இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைக் காண அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாரடைப்பால் பெலிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/youtuber-felix-gerald-suffers-sudden-heart-attack-urgently-admitted-to-government-hospital-739681.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பிகு போன கருத்தில் இவரையும், சவுக்கையும் ஊடகவியளாலர் என எழுதினேன். யூடியூபர்ஸ் என்பதே சரியான பதம்.
  20. போனதடவை இருவரும் கைதான போதும், சவுக்கு கைது நியாயமானது ஆனால் பீலிக்ஸை தேவையில்லாமல் கைது செய்கிறார்களோ என தோன்றியது. இந்த முறை இவர்கள் இருவரின் வீடியோக்களையும் நான் இன்னும் பார்க்கவில்லை. போனமுறை சவுக்கு, பீலிக்ஸ் இருவரையும் கோர்ட் வெளியே விட்டது. இந்த முறையும் வெளிவிடும் என்றே நினைக்கிறேன். அவர்கள் வெளியே வரும் போது அவர்கள் கூறியது வதந்தி அல்ல என்ற தோற்றப்பாடு இயல்பாகவே எழும். இதை திமுக தவறாகவே கையாள்கிறது. அன்பில் ரமேஸ் அழுகையில் ஆரம்பித்து, செய்தியாளர் கைதுவரை, திமுக நாடகம் ஆடுகிறது, எதையோ மறைக்கிறது என்பதே மக்கள் மனதில் பதியல்கூடும். இது உண்மை அல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசியலில் சிலசமயம் உண்மையை விட, perception நிலைத்து விடுவது உண்டு. உதாரணம் ரஜீவ்காந்தி கொலையும் திமுகவின் 1991 படுதோல்வியும்.
  21. ஓம்… பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன். முதல் முறை சவுக்குடன் கைதானார்.
  22. அரசியல் ஆதாய நோக்கங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, சம்பவ இடத்தில் ஒரு கட்சி சாராத சாதாரண மனிதர் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். எந்த தள்ளுமுள்ளும் வரமுன்பே 4 பெரிய அம்புலன்சை அந்த வழியே அனுப்பி உள்ளனர்.
  23. நிறைய எழுதினேன் அக்னி. ஆனால் அழித்து விட்டேன். எழுதிகொண்டிருக்கும் போதே ஏதோ 2015 வாக்கில் கருத்தை விட்டு, கழுத்தை பிடிக்கும் வகையில் உரையாடல் நகர்வதாக தோன்றியது. ஆகவே அழித்து விட்டேன். யாழ் களமும், நீங்களும் நானும் கூட மாறிவிடோம். Dare I say வளர்ந்து விட்டோம். இணைந்திருங்கள் உருப்படியான கருத்துக்கள் எழும்பட்சத்தில் பரிமாறி கொள்வோம்.
  24. உங்களுக்கு என்னையா பிரச்சனை. நான் விஜை ரசிகர், அல்லது அவரின் அரசியல் ஆதரவாளர் என நினைத்துகொண்டு யாரும் இல்லாத இருட்டு அறையில் முரட்டு குத்து குத்துகிறீர்கள்😂. நான் இரெண்டுமே இல்லை. தமிழ் நாட்டு அரசியலில் நான் யாருக்கும் ஆதரவு இல்லை. ஒரே எதிரிதான். யார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.