Everything posted by satan
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.
-
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
இது சிங்கள இராணுவ, பொலிஸாருடைய உடல்கள் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பிக்குகளின் வாயை அடைக்க வெளிப்பட்டிருக்கிறது. நன்றாக அவர்களைபேசுங்கள், நீங்களாகவே உங்களையுமறியாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறைவா! ஒரு பாவமுமறியாத எங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலையா? ஒருவரை ஒருவர் பாதுகாக்க, காப்பாற்ற இறந்தவர்கள் அணைத்திருந்திருப்பார்களோ? அன்றி புதைகுழியில் ஒன்றோடு ஒன்றை பிணைத்து போட்டிருப்பார்களோ? எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள், கெஞ்சியிருப்பார்கள்? அந்த நிமிடத்தை, இதை செய்தவர்கள் நினைத்திருந்தால்; இந்த நிலை தொடர்ந்திருக்காது. இன்றுவரை இந்த புதைகுழி மௌனமாய் இருந்திருக்காது. புதைகுழி திறந்ததுபோல் கொடியவர்கள் மனதும் திறந்து உண்மையை கொண்டுவரவேண்டும். ஒரு சிங்கள இராணுவம் உண்மையை சொல்லியும் ஏற்காமல் விதண்டாவாதம் பண்ணும் ஒவ்வொருவரும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களே! இதன் பின்னும் நம்மவர் சிங்களத்துக்கு வெள்ளையடிப்பார்களா? ஆம்! அருண் சிர்த்தாத் வெளிக்கிட்டிருக்கிறார்.
-
ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி
இந்தப்பிக்கு கூட்டத்திற்கு ஒரு தலைமை இருப்பதாக தெரியவில்லை. ஒழுக்கம் இல்லை, பொறுப்புகூறல் இல்லை, கேள்வி இல்லை, கோட்பாடு இல்லை, தண்டனை இல்லை, அதது தன் வயிற்றுக்கு இனவாதம் பேசுது, நிலம் பிடிக்குது, இதற்கு இல்லறத்திலேயே இருந்திருக்கலாம்.
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
பின் எதற்காக அச்சப்படுகின்றீர்கள்? முழு உண்மையும் வெளியில் வர விடுங்கள். இவன் எதற்காக இப்போ பதற்றப்படுகிறான்? இராணுவத்தினுடைய உடல்கள் என்கிறான், ஏன் தோண்டுகிறார்கள் என்கிறான். இராணுவத்தினருடைய உடல்கள் என்றால்; அவர்களின் உறவினர் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே? ஒரு இனத்தையே கொன்று புதைத்துவிட்டு, யாசகனின் காயமாம். மக்களுக்கு காருண்யத்தையும் அன்பையும் போதித்து வழிகாட்ட வேண்டிய மதகுரு, அழிவை போதித்து அதை நிஞாயப்படுத்துகிறார். இது என்ன இனமோ? இவற்றைப்பார்க்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது நமக்கு. உலக ஆசையை துறந்து வந்த துறவி பேசுகிற பேச்சா இது? ?
-
செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்
அதற்காகத்தான் இவ்வளவு உறுமலும். அவருக்கு பாராளுமன்ற கதிரை இல்லாமல் இருக்க முடியாது.
-
செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்
யாரும் யாரையும் வாசலில் போய் சந்திக்கவில்லை. டேவிட் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க யாழ்ப்பாணம் வந்தார். இலங்கை அரசு அவர் வருவதை தடை செய்ய எத்தனையோ காரணங்களை சொன்னது. இருந்தாலும் அவர் அவைகளை கடந்து வந்தார். மக்களை சந்திக்க விடாமல் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். அங்கே செல்வராசா கஜேந்திரன், மதகுருக்கள், அனந்தி போன்றோர் மக்களுடன் கலந்து நின்றனர். அப்போ நம்ம தலைகள் யாழ் நூல்நிலையத்திலிருந்து பின்கதவு வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர். அனந்தி பொலிஸாரின் தடைகளையும் தாண்டி ஓடிச்சென்று கார் யன்னல்வழியாக அறிக்கை ஒன்றை டேவிட் கமரோனிடம் கையளித்தார். இந்த சம்பவத்திற்கு பின் காணாமல் போன உறவுகளை சந்திக்க சென்றனர். கோபமடைந்த உறவுகள், அவர்களுடன் உரையாட மறுத்து, எங்கள் பிரச்சனைகளில் எங்களோடு நிற்கவில்லை இப்போ மாப்பிளை அழைக்க வந்தீர்களோ என விசனத்தை தெரிவிக்க, குனிந்த தலையுடன் சுமந்திரன் சம்பந்தர் வெளியேறினர்.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
அப்போ சந்திரசேகர், இளங்குமரனையும் வெளியேறும்படி கோரியிருந்தனரே, அவர்களும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை வெளியேற்றியிருந்தனரோ? தங்கள் தவறுகளை மறைக்க வேறொருவர் மேல் பழியை போட்டு தப்புவது உங்கள் மரபு. நீங்கள் அரிய நேந்திரனை சொல்கிறீர்கள் போலுள்ளது. அவருக்காக யாழ்ப்பாணத்தில் குரலெழுப்பினரா? அல்லது உங்களது மனசாட்சியின் குரலா அது?
-
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்
புதைத்தவனே அடையாளம் காட்டி, கொலை செய்தவர்களையும் காட்டிக்கொடுத்துள்ளான். அவர்களுக்கு தண்டனையை கொடுங்கள். இல்லையேல் யாருடையது என அன்றே நிரூபித்திருக்கலாமே, எதற்கு காலத்தை கடத்தினீர்கள்? அவர் சுத்தமானவர் என்றால் அமெரிக்காவை விட்டு ஏன் தப்பியோடிவந்தார்? அங்கேயே நின்று விசாரணையை எதிர்கொண்டு தனது நிஞாயத்தை கூறி தான் சுற்றவாளி என நிரூபித்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை? அவர் மனித உரிமை ஆணையாளர், அவர் அரசியல் பேசவோ, சட்டம் பேசவோ வரவில்லை. அவரை அவர்கள் அழைக்கவுமில்லை. உங்களுக்கு ஐ நா வில் காலத்திற்கு காலம் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நீங்கள் உறுதி அளித்துள்ளீர்கள். அதை செயற்படுத்தாமல் ஏமாற்றி, காலத்தை கடத்தி, புனை கதை சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். வெகு விரைவில் மக்களால் நையப் புடைக்கப்படுவீர்கள். முதலில் உள்நாட்டில் உங்களுக்கெதிராக உள்ள வழக்குகளில் இருந்து உங்களை விடுவியுங்கள்.
-
தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் - திஸ்ஸ விதாரண வலியுறுத்தல்
இது சரியான நிஞாயம்! இதை செய்யாமல் நாடு இம்மியளவும் முன்னேறாது. காலத்திற்கு காலம் இவற்றை சொல்லி ஏமாற்றியே தலைமைகள் மாறிக்கொண்டிருக்கும்.
-
உள்ளகப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்ற உண்மை உயர்ஸ்தானிகர் வோல்கரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்
இதைத்தானே சி. வி .விக்கினேஸ்வரனும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார். அப்போ, சாணக்கியன் உட்பட பலர் விமர்சித்திருந்தனரே?
-
செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்
செம்மணியில் நடந்த போராட்டம், மக்கள் தமது தொலைந்துபோன, காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யபட்ட உறவுகளுக்கு நீதி தேடி, அவர்கள் தம் அரசியல் தலைவர்களால் கவனிப்பாரற்று கேட்ப்பாரற்று கைவிடப்பட்டவர்கள் தாங்களாகவே தமது நீதியை தேடி போராட புறப்பட்டவர்கள். அவர்களின் கேள்விக்கு, போராட்டத்திற்கு அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பெரும் கட்சி, தாய்க்கட்சி, ஏகோபித்த வரவேற்பை பெற்ற கட்சி என்று பீற்றிக்கொள்பவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தேடிக்கொண்டிருப்பவர்களை, கொலை, காணாமல் போகச்செய்தவர்கள், புதைத்தவர்களோடு தம் பதவிக்காக தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் ஆணைக்கு எதிராக பேரம் பேசுபவர்கள், செம்மணி என்பது வாய்வழிக்கதை அப்படி அங்கே ஒன்றுமில்லை என்று சொல்லும் கட்சியை சார்ந்தவர்கள், அந்த மக்களின் துயரத்தை வைத்து தம் லாபம் தேட விட முடியுமா? அப்படி விட்டால்; அதனால் என்ன பயன்? அவர்கள் உணர வேண்டும், கடமை செய்யாமல் மக்களின் போராட்டத்திற்கு உரிமை கோர முடியாது என்பதை உணரவேண்டும், திருந்த வேண்டும். இல்லையேல் துரத்தியடிக்கப்படுவார்கள். ஐ. நாவில் இத்தனை ஆண்டுகளாய் நமது பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம அரசியல்வாதிகள் தமது மக்களுக்காக, அவர்கள் துயரங்களை எடுத்துச்சொல்ல சென்றார்களா? அநீதியிழைத்தவனுக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க விரைகின்றனர். இதெல்லாம் உலகத்திற்கு, ஐ. நாவிற்கு தெரியாது? அவர்கள் இந்த போராட்டத்திற்தான் இவர்கள் செயற்பாட்டை கண்டுணரப்போகிறார்களாக்கும். அந்த மக்கள் கொன்றொழிக்கப்படும்போது, பல நாட்டு தூதுவர்கள் வந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேச அவர்கள் பிரதிநிதிகள் யாரும் நாட்டில் இல்லை. அவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு, உயிரற்ற உறவுகளின் உடலங்களை எடுத்து இறுதி மரியாதை செய்யக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார்களே... அப்போது இவர்கள் ஏன் அவர்களுடன் இருக்கவில்லை? இப்போ மட்டும் எங்கிருந்து இந்த பொறுப்பு ஏன் வந்தது? எல்லாமே ஐநாவுக்கும் தெரியும் சர்வதேசத்திற்கும் தெரியும். இப்போ மக்களின் போராட்டத்தை நீர்த்துபோகச்செய்யவே அங்கே போய் பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.
-
பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை
மனநோயேதுமாக இருக்குமோ என்கிற சந்தேகமெனக்கு.
-
செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது
முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில், அடுத்த டக்கிளஸ் அருண் சித்தாத், தனது பெண் கூட்டாளியுடன் சென்று, அந்தப் பெண்ணின் தந்தையுடன் நாலாயிரம் பேரை புலிகள் அங்கு தடுத்து வைத்து கொலை செய்து அங்கு புதைத்ததாகவும் அதை தேடி அகழப்போவதாக ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தியுள்ளார். ம் இத்தனை ஆண்டுகள் இவர்களை தேட, புதைகுழியை அடையாளம் காட்ட, முறைப்பாடு செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று சொன்னவர் இவரின் கடவுள் மஹிந்தா. அவரிடம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? விகாரைக்கு வக்காலத்து வாங்குவது, மஹிந்தவின் எதிரணியை குழப்ப புகுந்து அடிவாங்குவது, இப்போ, எஜமானரை காக்க புது நாடகத்துடன் வந்துள்ளார். அந்தப்பெண் கேக்கிறாள் செம்மணி புதைகுழி தோண்டலாம் இது தோண்டக்கூடாதோ என்கிறாள். ஆனால் நாடகத்திற்கான பயிற்சி போதாது, நடிக்கத்தெரியவில்லை. ஒரு பெண், அருண் சித்தாத் கமராக்காரனாம் (மீடியாக்காரன். காமராவோ வேறு எதுவுமோ அவரிடம் காணப்படவில்லை)என்று மூவர் புதை குழி தோண்ட வந்தனராம். குழி தோண்ட வந்தாரோ அல்லது பெண்ணை கடத்திவந்து அகப்பட்டுக்கொண்டாரோ தெரியவில்லை. தகப்பனையும் நாலாயிரம்பேரையும் புலிகள் கடத்தும்போது இவளுக்கு ஆறு வயதாம். தொண்ணூறாம் ஆண்டு நடந்ததாம். சுண்ணாகத்தில் புலிகள் அலுவலகத்தில் போய் விசாரித்தனராம். அப்போ எதிரில் நின்றவர் கேட்டார், நீங்கள் சொல்லும் காலப்பகுதியில் இந்தியன் இராணுவந்தான் இங்கிருந்தது, புலிகளுக்கு எங்கும் அலுவலகம் திறந்து காரியமாற்றும் சூழ்நிலை இருக்கவில்லை. உங்களுக்கு யார் சொன்னது இங்கு புலிகள் அவர்களை தடுத்து வைத்து கொலை செய்து புதைத்ததாக என்று கேட்க, யாரோ சொன்னார்களாம். அந்த யாரையோ கூட்டி வாருங்கள் அல்லது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டபோது, தொலைபேசி இலக்கம் தெரியாதாம், அவர்கள் வந்து சாட்சி சொல்ல அவர்களுக்கு பயமாம். யாருக்கு பயம், ஏன் பயம்? இப்படி இழிதொழில் செய்து பிழைக்கும் கூட்டத்தை விட, இவர் சொல்லும் தொழிலேதும் குறைவானதல்ல. இவரது செயலே, இந்த இழிதொழிலே இவரை ஒதுக்குவதற்கு போதுமானது. சந்திரகாந்தனுக்கு வக்காலத்து வாங்கபோய் கம்மன்பில அவரை மீள முடியா விசாரணைக்கு வழிவகுத்து பல கொலை கொள்ளை வெளிவர காரணமானார். அதுபோல் இவரும் முன்வந்துள்ளார். இவருக்கு, தன்னை சமுதாயத்தில் அடக்கி வைத்தார்களாம் அதற்கு பழிவாங்க இனத்தை அழிக்க இவர் எடுத்த வழிமுறை இது. வடிவாக இவரின் முகத்தைப்பாருங்கள், டக்கிலஸின் சாயல் அடிக்கிறது. இன்னொரு கோசத்தோடு சிங்கள பிக்கு கூட்டம் வெகு விரைவில் இவர் காட்டிய இடத்திற்குவந்திறங்குமென்று எதிர்பார்க்கலாம்.
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
எப்பொழுதும் தமிழர்களை அச்சுறுத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கவே சிங்களமும் தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்கின்றனர். தமிழரை வன்முறையை பற்றி சிந்திக்கவும் அதை நோக்கி தூண்டி இந அழிப்பை செய்யவும் நடவடிக்கையிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆவா குழு, கஞ்சா எங்கிருந்து யாரால் எப்போது வடக்கில் தலைதூக்கியது என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. ஏன், தெற்கில் பாதாள உலகம் மற்றும் இவர் சொல்லும் பிரச்சனைகள் துப்பாக்கிச்சூடுகள் அதிலும் நீதிமன்றத்திற்குள் இல்லையா? ஏன் வடக்கில் மட்டும் இவ்வளவு கரிசனை? ஒரு இராணுவ அதிகாரி, நிர்வாகம் செய்ய முற்பட்டால் கருத்து சொல்ல வெளிக்கிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த பிரச்னைகள் சமூகப்பிரச்னைகள். இவற்றை உருவாக்கி, வளர்த்து, சுயநலம், வருமானம் காண்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களை நல்வழியில் நடத்துவதற்கு பதிலாக இவ்வாறான சமுக சீர்கேடுகளை,இந, மத வன்முறைகளை, முரண்பாடுகளை தூண்டி வயிறு வளர்க்கின்றனர். இதை தீர்க்க வேண்டியது நீதி, சட்ட, காவற்துறை சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இயற்றப்படவேண்டும், பிரச்சனைகள் நீதிமன்றம்மூலம் நிஞாயமாக தீர்க்கப்பட வேண்டும். அதை விட்டு ஆயுதம் தூக்க தூண்டக்கூடாது, அடக்குமுறை செயற்படுத்தக்கூடாது. உண்மை, அந்த நாடுகள்போல் இங்கு சட்டங்கள் இல்லை, நீதி இல்லை, நாட்டு நலன் இல்லை, அரசியல் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, எங்கே பிரச்சனையின் ஆரம்பம் என அடையாளம் காண முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை இவருக்கு. எல்லாவற்றையும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கிவிடலாமென நினைக்கிறார். அதனால் துரத்தப்பட்டவர்களை கண்டும் விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லை அல்லது தானும் மாட்டுப்பட்டு விடுவேன் என்கிற அச்சமோ தெரியவில்லை. இங்கு அது தான் பிரச்சனையே. அது தான் முக்கிய பிரச்சனை. அதை சரி செய்ய யாரும் இல்லை, சரி செய்யவும் விடமாட்டார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அதுவே இப்போ பெரிய கள்ளர், கொலைகாரருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இவருக்கு நாமல் போன்றவர்களுக்கு ஜனாதிபதி ஆசை அடங்கும் வரை இது தொடரும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவும்வரை இந்த நப்பாசை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போதுவிண்ணப்பதாரியின் நன்னடத்தை நற்சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு குடியேற விரும்புவோருக்கும் அவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஒரு நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ இது நடைமுறையில்லிலை. இந்த நாட்டில், பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் வடித்தெடுத்த கள்ளர், கொலை கொள்ளை, பொறுக்கி, போதைப்பொருள் கடத்திகள். நாடு எப்படி உருப்படும்? அனுர இப்படியானவர்களை தண்டித்து இப்டிப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும். நாளைக்கு இவர் தேர்தலில் நின்றாலும், தமிழர் வாக்கை இவருக்காக சேகரிக்க ஒரு கூட்டம் முண்டியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
இல்லை. பதவிமோகத்தில் எதுவும் புரியவில்லை. அன்று முன்னாள் பிரித்தானியப்பிரதமர் பல தடைகளை தாண்டி தமிழ் மக்களின் துயரங்களை கேட்க சொந்த நிலம் இருந்தும் அகதிகளாக வெள்ளத்திலும் ஒழுகும் குடிலிலும் இருந்த மக்களை சந்திக்க வந்தார். அப்பொழுது அந்த மக்களின் பிரதிநிதிகளாக நின்று பேச வேண்டியவர்கள் அங்கு வரவில்லையே, எங்கே ஓடி மறைந்தார்கள்? ஏன்? அப்போது இவர்களின் பொறுப்பு எங்கே போனது? கட்சி எங்கே போனது? இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்களே, அப்போது அந்த மக்களோடு இவர்கள் இல்லாமல் எங்கே போய் ஒளிந்தார்கள்? அப்போ இவர்களுக்கு பொறுப்பு இருக்கவில்லையா அந்த மக்கள் மட்டில்? இந்தபுதைகுழியில் கொலைகாரன் டக்கிளஸால் கொல்லப்பட்டவர்களின் உடல்களும் இருக்க வாய்ப்புண்டு. மக்களை கொன்ற கொலைகாரர்களோடு பதவிக்காக சமரசம், மக்களோடு பொறுப்பு தெரிவிக்கப்போனாராம். பதவிக்காக எந்தப்பேயோடும் கூட்டுசேர்வார்கள். இவர்களாலேயே மக்களுக்கு இந்த நிற்கதி. நாமே தமிழரின் ஏகோபித்த கட்சி, ஆதிக்கட்சி என்று சொன்னவர்கள், இன்று பதவிக்காக கொலைகாரரிடம் இறங்கிபோகிறார்கள். யாருக்காக? தங்களை அழித்தவர்கள் தங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கும் போது, இவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது அவர்களுடன் கூட்டுச்சேர? இப்போ வீட்டில் குடியிருப்பது கொலை கொள்ளை செய்பவர்களும், மக்களை வஞ்சிப்பவர்களுமே. அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சி என்று சொல்லிக்கொள்ள சந்தர்ப்பமே இருக்காது, எல்லோரையும் வெளியேற்றிவிடுவார்கள்.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
இருக்கட்டும் அவர்கள் அரசியல்வாதிகள் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லியே அவர்களை வெளியேறுமாறு கோரினர். அர்ச்சுனாவின் தந்தையும் காணாமலாக்கப்பட்டவர. வாழ வேண்டிய குருத்துக்களை, இராணுவத்தோடு சேர்ந்து கலைத்து கலைத்து சுட்டுக்கொன்றவன் டக்கிளஸ். என்னை சுடாதீர்கள், ஒருவேளை நீங்கள் தேடும் ஆள் நானில்லாமல் இருக்கலாம், முதலில் ஒருதடவை என்னை விசாரியுங்கள் என்று தம் உயிரை காக்க கதறியும் பலனில்லாமல் குருவிகளை சுடுவதுபோல் நடுரோட்டில் சுட்டுப்போட்டவன், இராணுவத்தின் பங்கருக்குள் நா...போல பதுங்கியிருந்து செய்த கொலைகள் ஏராளம். அந்த ஜென்மத்தோடு பதவிக்காக பேரம் பேசபோனவர் சிவஞானம். இவர் பெரிய மனிதனா? வயதில் மூத்தவராக இருக்கலாம் ஆனால் பகுத்தறிவு அற்றவர். எங்களுக்கு பதவி வேண்டும் இல்லையென்றால் அங்கை என்ன வாய்ப்பாக்கவோ என்று கேள்வி எழுப்பினாரே அதிலிருந்தே இவரின் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது? அப்படியானால் தலைமைப்பதவி இல்லாதவர்கள் வாய் பார்க்கிறார்கள் என்று சொல்லி மற்றவர்களை அவமானப்படுத்துகிறாரா இவர்? பதவிக்காக கட்சியில் இருக்கிறார்கள் இல்லையென்றவுடன் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஏன் மற்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்? சம்பவத்துக்குப்பின் இவர் நேர்காணலில் கூறியதை கேளுங்கள் மிகுதி விளங்கும். மூப்பும் வயதும் மட்டும் மரியாதைக்குரியவையல்ல. அனுபவம், பொறுப்பு மிக அவசியம் மரியாதையை பெறுவதற்கு.
-
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
ம்.... மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சி என்கிற பிதற்றல் மறைந்து இப்போ, உள்ளூராட்சி தேர்தலில் தலை நிமிர்ந்து நிக்கிற கட்சி என்று பாடுகிறார் சிவஞானம். எங்கிருந்த கட்சியை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் என்று இன்னும் அவர்களுக்கு புரியவில்லை. போயும் போயும் டக்கிலஸுடன் கைகோர்த்த இவர்கள் டக்கிலஸை விட உயர்ந்தவர்கள் இல்லை. தங்கள் பெலயீனத்தை மறைக்க, கட்சிக்கெதிராக செயற்பட்டால் சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார். யாருக்கு நட்டம்? எல்லோரையும் விரட்டிவிட்டு தலையாட்டியும் சட்டாம்பியும் மட்டும் கட்சியை நடத்துவார்கள். பேச்சாளர் பதவியை அடாவடியாக பிடித்து வைத்துக்கொண்டு விக்கினேஸ்வரன் பதவி விலகவேண்டுமென்று கூப்பாடு போட்ட கோமாளி, முடிந்தால் தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும் என்று சவால் விட்டவர், தமிழரசுக்கட்சியாலும் மக்களாலும் நிராகரிக்கப்பட்டார். அடுத்தமுறை கட்சி இருக்கும், இவர்கள் இருவரும் வீட்டுக்குள் பதுங்கி இருப்பர். தானே உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து வெளியேற்றிவிட்டு பதவி இல்லாததால் வெளியேறினர் என்று கதை விடுவது இவருக்கு இன்று நன்றாக பொருந்தியிருக்கிறது. அவர்களாவது மரியாதையாக விலகினார்கள், இவரோ அடுத்தவரின் பதவியை தந்திரமாக பறித்து வைத்துக்கொண்டு சன்னதம் ஆடுகிறார். ஆமா கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசியாமல், அவர்களுக்கு தெரியாமல் டக்கிளசோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்களை யார் தண்டிப்பது? தங்களுக்கென்றால் வக்கீல், அடுத்தவருக்கென்றால் நீதிபதியா? எந்த ஒரு தார்மீகமும் இல்லாதவர், வலுக்கட்டாயமாக கட்சியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார். வடக்கு கிழக்கில் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லி சிங்களத்திடம் பாதுகாப்பு பெற்றுக்கொண்டு அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ள இவருக்கு வெட்கமில்லை? மக்கள் வெட்கப்படுகிறார்கள். அதனாற்தான் பதவிக்காக காலில விழுகிறார்.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
ஆமா.... உங்களுக்கு மட்டுந்தான் கௌரவம் உண்டு, மற்றவர்களுக்கு மரியாதை அதெல்லாம் இல்லையென்று நினைத்தா நீங்கள் மற்றவர்களை விமர்ச்சிக்கிறீர்கள். தனக்குத்தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குது. அங்கு வந்த எல்லா அரசியல்வாதிகளையுமே அவர்கள் வெளியேற்றினார்கள், அவரவர் தமக்கு என்று எடுத்து கருத்து வெளியிடுவதைப்பார்த்தால் இவர்களது உள்நோக்கம் புரியும். மக்களின் எல்லாப்பிரச்னைகளிலும் நீங்கள் அவர்களுடன் கூட இருந்திருந்தால், இப்படியான அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையே. பாவம் இவர், வெளிவந்த காணொளிகளை பார்க்கவில்லைபோலும். சுமந்திரன் பாணியில் செய்தியாளரை சாடுகிறார். சரி, அப்படியொன்றுமே நடக்கவில்லையென்றால் ஏன் அதே பத்திரிகையாளரை கூட்டி புலம்புகிறார்? அதுதான், மக்களின் போராட்டத்தை தங்களின் போராட்டம் போல் தம்பட்டம் அடிப்பது மட்டுந்தான் கட்சியின் பொறுப்பு. முதலில் கட்சிக்குள் இருக்கும் புடுங்குப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணியை பொது அமைப்புகள் ஏற்பாடு செய்ய, இடையில் புகுந்து தங்களது ஏற்பாடுபோல் முதலாளித்தனம் காட்டிய நீங்கள், எதையும் செய்ய மாட்டீர்கள் யாரவது முயற்சியில் இடையில் புகுந்து பெயரெடுக்க வேண்டும். மக்கள் அழிக்கப்படும்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது? அப்போ எங்கே போயிருந்தீர்கள்?
-
எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை
இவர் மறைமுகமாக ஸ்ரீதரனை சாடியுள்ளார். குழப்பம் விளைவித்தவர்கள் கள்ளக்காணி பிடித்தவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள் என்று பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுள்ளார். இவரை மக்களின் போராட்டத்துக்குள் புகுந்து தன்னை பிரபல்யப் படுத்த விட்டிருந்தால் இது ஒன்றும் அவருக்கு தெரிய வந்திருக்காது. இவ்வளவு குற்றமுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஏன் காலத்தை கடத்தினார்? நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள், கொலை கொள்ளை செய்த பிரபலங்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுங்கள், பிறகு உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுங்கள். மக்கள் எத்தனை ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், அப்போவெல்லாம் எங்கே போயிருந்தீர்கள் அவர்களுடன் சமூகமளிக்காமல்? தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை பழிவாங்கப்போறாராம். அடுத்த தேர்தலில் இவர் தொடர்ந்து இருப்பாரா என்பதே இவரறியா கேள்வி, பதவி வந்தவுடன் பதவிக்கு மீறிய அதிகாரம் வந்துவிடும்.
-
எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை
போராட்டக்காரர்கள், இளங்குமரனை மட்டும் துரத்தவில்லை. அரசியல், அரசியல்வாதிகள் வேண்டாம் என்று அனைவரையுமே விரட்டினார்கள். காரணம், அவர்கள் செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்து களைத்ததினாலேயே வேறு வழியின்றி தாமாக போராட வெளிக்கிட்டனர். அதுவரை வேடிக்கை பார்த்தவர்கள், காணாமல் இருந்தவர்கள், இன்று மனித உரிமையாளர் வருகிறார் என்றவுடன் தம்மை பிரபல்யப்படுத்தி மக்களின் போராட்டத்தை திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது. இதில பழிவாங்கப்போறாராம். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் இவர். முதலில் மக்களுக்கு என்ன விமோசனம் பெற்றுக்கொடுத்தார்? அதை முதலில் செய்யுங்கள், மக்கள் உங்களை அழைப்பார்கள்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
உலகம் எங்கே போகிறது? நோபல் பரிசுக்கே, அல்லது இதுவரை அந்த பரிசை பெற்றவர்களுக்கே அவமானம். அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் தானாம். அது அணு ஆயுதம் தயாரிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதனால பாகிஸ்தான் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து கோபத்தை, தாக்குதல் இலக்கை திசை திருப்ப பார்க்கிறதா?
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
இவர்களின் விசுவாசத்தால் சிங்களம் இதுவரை பிழைத்துக்கொண்டது, ஆனாலும் இவர்களை தமக்காக பாவிக்குமே ஒழிய வேறேதுமில்லை. கிழக்கின் விடிவெள்ளிகளின் இன்றைய நிலையை பி பார்த்தால் புரியும்.
-
செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை - காணாமல் போனவர்களும் செம்மணியும்
அந்த காலகட்டத்தில், இரவிரவாக செம்மணி மயானத்திற்குள் கனரக வாகனங்கள் வந்து சென்றதாகவும், பெரிய நெருப்பு வெளிச்சம் தெரிந்ததாகவும் சுற்றாடலிலிருந்த மக்கள் தெரிவித்திருந்தனர். அங்கு புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் வலுவாக இருந்தது அப்போ. அந்த புதை குழி பலர் முன்னனிலையில் தோண்டப்பட்டபோது அங்கே எலிகள், இன்னும் பிராணிகளின் எச்சங்கள் காணப்பட்டதாக கூறப்பட்டது. அப்படியெனில் அந்த எச்சங்கள் அங்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? அவை யாரால் கொண்டுவரப்பட்டது எனும் கேள்வியை யாரும் கேட்க முன்வரவில்லை. நம்ம அரசியற்றுதலைவர்களும் அதை மறந்து, மறைத்து சிங்களத்துக்கு காவடி தூக்கி வெள்ளை அடித்தனர். இப்போ அங்கே போக வேண்டுமென்று அடம்பிடிக்கின்றனர். இத்தனையும் தெரிந்த மனித ஐ. நா. மனித உரிமையாளருக்கு இவர்களின் தில்லாலங்கடி வேலை தெரியாமலா இருந்திருக்கும்? வர வர நம்ம அரசியற் தலைவர்களெல்லோரும் நகைக்சுவை பேச்சாளராகின்றனர்.
-
ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி
பாவம் இவர்கள்! ஜெனீவாவுக்கு போய் நீதிக்கான குரல் எழுப்பாமல் விட்டு, சிங்களத்துக்கு கால அவகாசம் வாங்கி கொடுத்து கொண்டிருந்தார்கள். தாங்கள் போகா விட்டால், சொல்லாமல் விட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது என்று நினைத்துக்கொண்டிருந்திருப்பார்கள். தமிழருக்கு என்ன நடந்தது சிங்களத்தால் என்பது இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் சொல்லப்போக அவர் தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்ல, சொன்னவர் எவ்வளவு மொக்கையீனப்பட்டிருப்பார்? ஹா..... ஹா..... என்ன பெரிய விளக்கம்! ஜெனிவாவில் தானே பேசப்போகிறார்கள். இங்கு நடந்தவற்றிற்கு சாணக்கியனிடம் இருந்து ஆதாரம் பெற்றுப்போக வந்திருப்பாரோ? அல்லது அனுராவிடம் தானே நேரடியாகசாட்சியம் அளிக்கப்போகிறாரோ தெரியவில்லை.
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
இருந்தாலும் சுமந்திரனின் கால், வாய் சும்மா இராது. இரவிரவாய் என்றாலும் சாணக்கியனையும் அழைத்துக்கொண்டு போய் மனித உரிமையாளர் நாயகத்தின் கதவைத் தட்டியென்றாலும் அவரை எழுப்பி அவரோடு நின்று புகைப்படம் எடுத்து போடாமல் விடமாட்டார்.