Everything posted by satan
-
புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச
புலிகளை ஒழித்திருக்கலாம் ஆனால் நாட்டில் முக்கியமான புரையோடிப்போயுள்ள பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அதனாலேயே உங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. யாரைப்பார்த்தாலும் எதைக்கண்டாலும் புலி என உளறுகிறீர்கள். உங்களுடைய நீதிமன்றங்களிலேயே வழக்குகள் தொடரப்படுகின்றன, உங்கள் இராணுவமும் புலனாய்வுமே சாட்சிகள் அளிக்கின்றனர். உங்கள் நீதிமன்றங்களில், அதிகாரிகளில், நீதிபதிகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், பயம் வேண்டாம். சர்வதேச நீதிமன்றங்களை நாடலாம் அமைச்சரே. கடந்த காலங்களில் பயங்கர வாதச்சட்டம், நீதிபதிகள், விசாரணை அதிகாரிகளை மாற்றி நீங்கள் போட்ட நாடகம், அதனாலேயே உங்களுக்கு இவற்றின்மேல் நம்பிக்கையில்லை. உங்களைப்போல் இவர்களும் பழிவாங்குகிறார்கள் என்று மக்களை திசை மாற்றுகிறீர்கள். எங்கே உண்மையை வெளியில் கொண்டுவந்துவிடப்போகிறார்கள் என அஞ்சி விசாரணை அதிகாரியை மாற்றினீர்கள். இப்போ அதிகாரம் இழந்து, படைகள் உங்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதால் படைகளுக்காக அழுகிறீர்கள். வெகு சீக்கிரம் உங்களுக்காகவும் அழுவீர்கள்.
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
தமிழருக்கு உரிமை வழங்கக் கூடாது என்பதற்காக, எல்லா நாட்டினரையும் கூவி கூவி அழைத்து எல்லா உபசரணைகளும் செய்வார்கள். பின் குத்துது குடையுது என்பார்கள். அவர்கள் மூக்கை நுழையாது விட்டிருந்தால் இன்று தமிழர் தமது உரிமைகளை தாமே முயன்று பெற்றிருப்பர். எல்லாம் இழந்த பின் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அப்போ, இவர்களெல்லாம் பேசவே முடியாத நிலையிலிருப்பர்.
-
தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் ; பாராளுமன்றம் அலைய வேண்டியதில்லை - ரிஷாட் எம்.பி.
இந்த யதார்த்தம் தமிழரை சிங்கள புலனாய்வுடன் சேர்ந்து கொலை செய்யும் போது, அவர்களின் காணிகளை அடாத்தாக பிடிக்கும்போது ஏன் வரவில்லை? எங்களுக்கு தனி மாகாணம் வேண்டும், பிரிவினைக்கு இடமளியோம் என்று தோளோடு தோள் நின்று போராடும்போது இந்த எண்ணம் எங்கே போனது? இவர் மன்னாரில் செய்த ஊழல், அடாவடி, தமிழருக்கெதிரான வெறுப்பு பேச்சு எல்லாவற்றையும் மறைத்து அதை தக்க வைத்துக்கொள்வதற்காக நல்லிணக்கம் எனும் பெயரில் மீண்டும் தன்னை மூடி மறைத்து தப்ப முயற்சிக்கிறார். இனிமேலும் இவர்கள் புட்டும் தேங்காய்ப்பூவும் என்கிற விசர் ஒப்புமைகளை தூக்கியெறிந்து விட்டு கறாராக பேசி நாம் நம் வழியில் பயணிப்பதே நமது எதிர்கால சந்ததிக்கு நல்லது. இவர்கள் தாங்கள் சங்கடப்படும்போது எங்களோடு ஒட்டிக்கொள்வார்கள். ஆனால் எப்போ முதுகில் குத்தலாமென சமயம் பார்த்திருப்பார்கள். எட்டப்பர் உறவே வேண்டாம், அது எமது சமுதாயத்திற்கு கேடு!
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
அதென்றால் நூறு வீதம் உண்மை. தமிழரை நம்ப வைத்து கழுத்தறுத்ததும் இந்தியாதான். ஆனால் அதை சுட்டிக்காட்ட மாட்டார் விமல் வீரவன்ச.
-
பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !
யாராவர் நாமலா? எத்தனை ஆட்டம்? அத்தனையும் அதிகாரம் தந்த போதை! இனி அதன் பலனை உணரட்டும். தனக்காகவா இத்தனையும் செய்திருப்பார்? அவர்கள் ஒருவரும் இவரை இனி சந்திக்கவே முன்வர மாட்டார்கள். யோசிக்கட்டும் தனிய இருந்து.
-
செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
இருநூறுபேர் பார்வையிட்டிருந்தனர், வெறும் எலும்புக்கூட்டை வைத்து எப்படி அடையாளம் காண முடியும்? சான்றுப்பொருட்கள் உள்ளவர்களின் உறவினர் யாரும் உயிருடன் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்களின் டி என் ஏ பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமோ என்னவோ?
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
கிழக்கில் முஸ்லீம் ஊர்காவற்படை அமைக்கத்தேவை என்ன வந்தது? அன்றைய ஜனாதிபதி, அரபு முஸ்லீம் நாடுகளிடம் பயங்கரவாதத்தை அழிக்க உதவி கோரினார். அது நிஞாயமான காரணம் தெரிவித்து மறுக்கப்பட்டதால், தமிழ் முஸ்லீம் மோதலை ஏற்படுத்தி, புலிகளை அதற்குள் இழுத்துவிட்டு காரியம் சாதிக்க வேண்டிய தேவை பிரேமதாசாவுக்கு இருந்தது. அதற்கு இராணுவ புலானய்வு, முஸ்லீம் ஊர்காவற்படையை இணைத்துக்கொண்டது. ஆனாலும் முன்னர் இல்லை என்று சொன்ன அரபு தேசம், பின்னர் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது ஒன்றும் பெரிய காரியமல்ல. கிழக்கில் அரபு முஸ்லீம் கல்லூரிகளை நிறுவலாம், சமய நிறுவனங்களை ஆரம்பிக்கலாம் என்ற உறுதிப்பாட்டுக்கமைய சம்மதம் தெரிவித்திருக்கலாம். ஆகையாலேயே கிழக்கு முஸ்லிம்களுடையது என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் கூவுகின்றனர். ஆரம்பத்தில் அது தமிழர் மாகாணமாகவே இருந்தது. ஆரம்பத்தில் ஏற்படும் மோதல் பின்னைய நாளில் அதன் காரணம் ஆதாரமாக வெளிப்படுவது இல்லையா? இப்படித்தான் தொண்ணூறுகளில் நிகழ்ந்திருக்கிறது. ஏன் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்ப காலங்களில் செய்த தவறுகள் பின்னாளில் செய்த தவறுகளை விசாரிக்கும் பொழுது வெளிவரவில்லையா? அல்லது அது முன்னாளில் நடந்தது அதற்கும் இதற்கும் சம்மதமில்லை என்று விலக்கி விட்டனரா? பலநாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடும்போது வாழ்நாள் களவுகள் வெளிவருவதில்லையா? அல்லது வரக்கூடாதா?
-
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
எல்லாமே ஒரு குட்டையில ஊறின மட்டையள்தான். போராட்டத்தில் உடமைகளை, உறவுகளை, நிலங்களை இழந்தவர்கள், பங்களிப்பு செய்தவர்கள், அந்தப்பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் மக்கள். அவர்களுக்குத்தான் தெரியும் அங்கே என்ன நிகழ்ந்தது, தங்களுக்கு என்ன வேண்டுமென்பது. இதில் எந்தவிதத்திலும் ஈடுபடாத, இழப்புகளை சந்திக்காத, அந்தப்பிரதேசத்தில் வாழாத இவர்கள் அந்த மக்களுக்கு தலைமை தாங்கவோ அல்லது அவர்களுக்கு எது வேண்டுமென்று முடிவெடுக்கவோ முடியாது. அந்த மக்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து குறுகிய நேரத்திற்குள் தமக்கென எதுவும் எடுக்க அனுமதிக்காது திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர், துரத்தி துரத்தி கொன்றொழிக்கப்பட்டனர். இது இனப்படுகொலை இல்லையா? அவர்களுக்கு இங்கு அரசியல் உரிமை இல்லை என்பதும் கேட்டால் இரத்த ஆறு ஓடும் என்று மிரட்டுவதும் அவர்கள் பூர்வீக நிலங்களிலிருந்து அவர்களை விரட்டிவிட்டு தங்கள் மத தலங்களை எழுப்புவது இந அழிப்பு இல்லையா? பல மனித நேய அமைப்புகள் சொல்கின்றன, கனடா இலங்கையில் நடந்தது இந அழிப்பே அதை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என்கிறது. ஆனால் ஒரு இந அழிப்பை சந்தித்தவர்களின் பிரதிநிதிகள் அதை மறுக்கின்றனர். சரி, புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்றாவது தெரியுமா இவர்களுக்கு? புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு முன் தமிழினத்தை குறி வைத்து இனக்கலவரம் நடக்கவில்லையா, அவர்களின் பொருளாதாரம் சிதைக்கப்படவில்லையா, தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா, விரட்டப்படவில்லையா? எங்களுக்கு இனவழிப்பு நடைபெறவில்லை என்று இவர்கள் சொன்னால், எங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இரக்கம் காட்டும் நாடுகள் எம்மை கைவிடாதா? சிங்களம் இவர்களை வைத்தே அந்த நாடுகளை விரட்டும். எமது வலியும் இழப்பும் வேணவாவும் புரியாதவர்கள் தமக்கு அரசியல் செய்வதற்கு நம்மை பயன்படுத்துகிறார்கள்.
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புலிகள் முஸ்லிம்கள் போல் வந்து கொலைசெய்தனராம். புலிகள் ஏன் அப்படி வரவேண்டும்? ஏன் முஸ்லிம்களை கொல்ல வேண்டும்? புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? சிரியா முஸ்லிம்களுக்கும் சுதேச முஸ்லிம்களுக்கும் இடையிலேயே பிரச்சனை. அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த மக்களை வற்புறுத்தி, துன்புறுத்தியவர்கள் அவர்களே. 2020 அப்துல் பாஹிர்என்பவர் காணாமற் போய் விட்டார், புலிகள் அவரை கடத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி முறுகல் நிலையை ஏற்படுத்தினர். அவரை தேடி போலீசார் நடத்திய தேடுதலில் அவர் தனது வீட்டிலே சாவகாசமாக மறைந்து இருந்திருக்கிறார். இவர் ஈ பி டி யை சேர்ந்தவர். பொலிஸாரின் விசாரணையில், தான் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதாகவும் இந்த நாடகத்திற்கு சம்மதித்தால் பணம் தருவதாக கூறப்பட்டதாகவும் அதற்கு தான் சம்மதித்தே இந்த வேலையை செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதன் பின்னணியில் ஈ பி டி பி, முஸ்லீம் குழு, இராணுவ புலனாய்வு இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்ட மாவடியில் மணாளன் மகேசன் எனும் தமிழர் கொல்லப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் போடப்பட்டார், அதே நேரம் குசேன் உயிரற்ற உடல் வீசப்பட்டதற்கு கப்டன் ஹைஜி என்பவருக்கு சம்பந்தம் என்றும், நிந்தவூர் விடுதலைப்புலி உறுப்பினர் பூவண்ணன் வெட்டப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் ஈ பி டி பியால் போடப்பட்டதும் முஸ்லீம், தமிழர் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி வேண்டுமென்றே திணித்து புலிகளை வலிந்து இழுத்து முஸ்லிம்களை எதிரிகளாக்கினர். இதற்கு முஸ்லிம் ஊர்காவற் படை, ஈ பி டி பி, இராணுவ புலனாய்வுமே காரணம். நல்ல வேளையாக வடக்கிலிருந்து உயிரிழப்பில்லாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையால் இந்த கலவரம் அங்கு தோன்ற வாய்ப்பிருக்கவில்லை. இல்லையேல் அங்கும் பல நாடகங்கள் அரங்கேறியிருக்கும். தமிழரின் காணிகளை பறித்து, முஸ்லீம் வியாபார தலங்களை அமைத்தேன், பேருந்து தரிப்பிடங்களை அமைத்தேன், எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை எனது அதிகாரத்தை கொண்டு மாற்றினேன், கிழக்கு முஸ்லீம் மாகாணமாக மாற்ற வேண்டுமென்றால் ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வேண்டுமென்று ஹிஸ்புல்லா சவால் விட்டார். இப்போ கக்ஹீம் கூறுகிறார். அப்படியிருக்க முஸ்லிம்கள் நிலங்களை இழந்தனராம் நம்பக்கூடியதாகவா இருக்கிறது? வி. முரளிதரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டுமென கட்டளை இட்டபோது, யாழ்ப்பாணத்தாரின் வியாபார நிலையங்களை முஸ்லிம்களே குறைந்த விலையில் பெற்றுக்கொண்டனர். தமிழரை விரட்டிவிட்டு அவர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து குறைந்த விலையிலும் பயமுறுத்தியும் பிடித்துள்ளனர். இவர்களுடன் எந்தக்காலத்திலும் தமிழர் இணைந்து வாழ முடியாது. தமிழர் இவர்களை கழட்டி விட்டால், இவர்களை சிங்களம் கூட மதிக்காது.
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
அது சரி ..... கிழக்கிலிருந்து தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகள் பிரதேசங்களை விட்டு விரட்டப்பட்டார்கள், அவர்களின் கோயில்கள், காணிகளை பறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை தனது அதிகாரத்தினால் மாற்றி, முஸ்லீம் வியாபார நிலையங்களை அமைத்தேன் என்று வீராப்பு பேசுகிறார் ஹிஸ்புல்லா. அங்கே முஸ்லீம் ஊர்காவற் படை, சிங்கள இராணுவப்படை இவ்வளவையும் தாண்டி முஸ்லிம்களை புலிகள் தாக்கினார்கள் என்றால் இவர்களது இராணுவப்படை, பலம் என்ன செய்தது? ஏன் அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. புலிகளை சீண்டி மிகுதியை எதிர்பார்த்தபடி தாம் அரங்கேற்றி, புலிகளின் தலையில் கட்டி புலிகளை பெலவீனப்படுத்தும் செயல் இது. சியா முஸ்லிம்கள் இராணுவத்தோடு செய்த அடடூழியம். தமிழரை கொன்ற ஊர்காவற் படையினர் இன்னும் உலாவருகின்றனர், அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். இரண்டு போலீசாரை சுட்டும் வெட்டியும் ஆயுதங்களை எடுத்து விட்டு புலிகளின் தலையில் கட்டியவர்கள். ஏன் பலரை கொன்று விட்டு புலிகளின் தலையில் இராணுவமே போட்டது. எல்லாம் வெளிவரத்தான் போகுது. வெளிப்படாமல் மறைந்திருக்கும் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மைகள் வெளிவரும் காலமிது.
-
செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
ம், செம்மணியில் வெளிவரும் எலும்புத்தொகுதிகள் இராணுவத்தினரதும் சிங்கள, முஸ்லிம்களினதும் உடல்கள் என கொக்கரித்தவர்கள், ஐ. நா. மனித உரிமையாளர் தங்களை சந்திக்கவில்லையென குறை கூறியவர்கள், புலம்பெயர் புலிகள் விடுதலைப்புலிகளால் அடைய முடியாததை அடைய முயற்சிக்கிறார்கள், புலம்பெயர் புலிகள் சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கிறார்கள் என்றெல்லாம் ஊழையிட்டவர்கள் இப்போ, என்ன சொல்லப்போகிறார்கள்? சோமரத்ன ராஜபக்ச பொய் சொல்கிறார் என்று சொல்வார்களா அல்லது நாட்டை காட்டிக்கொடுக்கிறார் என்று சொல்வார்களா? யார் அந்த உத்தியை எடுத்தார்கள் என்றும் சொல்லலாமே? அப்போ, இந்தக்கொலைகளை ஜனாதிபதிகளின் பணிப்பின் பேரில் இராணுவத்தினர் செய்தார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறாரா? பொதுமக்களையே அதிலும் குழந்தைகளை இராணுவம் கொன்றுள்ளது. இதற்கிடையில் புலிகளையே கொன்றோம், மக்களை பாதுகாத்தோம் என்று பொய் வேறு. உலகம் நம்பி விட்டது என இவர் இன்னும் நம்புகிறார். ஐ. நா. மனித உரிமையாளர் ஏன் செம்மணிக்கு போனார் என்றாவது இந்த மடையனுக்கு புரியுமா? அப்படி ஒன்றும் நடக்கவேயில்லை என்று வாதாடியவர் இப்போ இப்படி கூறுகிறார். அதை சொல்ல இவர் யார்? ஏன் அதை செய்வதற்கு இவ்வளவு காலம்? எதுவுமே நடைபெறவில்லையென இழுத்தடித்தார்கள். உவன் ஒரு ரோஷமுள்ளவன் என்றால் உதோடு வாயை பொத்திக்கொண்டு இருப்பான். இல்லை அடிவாங்கியே தீருவேனென அடம்பிடித்தால், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. எங்கே விமல், உதயன் கம்மன்பில இன்னும் தூக்கம் கலையவில்லையோ? இப்படியான கூட்டத்தொடர் தொடங்கினாற்தான் நீங்களும் பரபரப்பாகிறீர்கள். அப்படியேதும் நடைபெறவில்லையென்றால் ஏன் இவ்வளவு பரபரப்பு, பயம்? இது ஒன்றும் இன்றைய நேற்றைய குற்றச்சாட்டல்ல சரத் வீரசேகர அவர்களே! இருபத்தொன்பது ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, நிரூபிக்கப்பட்ட, ஒத்துக்கொண்ட குற்றம். ஆனால் குற்றம் செய்தவர் யாரோ, தண்டிக்கப்படுபவர் வேறொருவர். அதனாற் தான் உண்மையை வெளிக்கொணர முன்வந்துள்ளார். சோமரத்ன ராஜபக்சவுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது ஜனாதிபதியின் முக்கிய கடமை. அப்போதான் தெருத்தெருவாக ஊழையிட்டு கூட்டம் சேர்க்கலாம். இந்தமுறை உதெல்லாம் நடவாது. எதுக்கும் இவர் இராணுவப்பாதுகாப்பு பெறுவது நல்லது. அப்படி யாரும் இருக்கிறார்களா?
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ராஜ பக்ஸ குடும்ப வலையமைப்பு மீது சர்வதேச விசாரணை தொடங்கப்படுள்ளதாக செய்திகள் கசிகின்றன. தந்தையார் ஈடு வைத்த வீட்டை மீட்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்களே உதவி செய்து மீட்டுக்கொடுத்ததாகவும், மஹிந்த அரசியலில் இணைவதற்கு பணமின்மையால் பணிசெய்த இடத்தில் ஒரு வருட சம்பளத்தை கடனாகப் பெற்றே இணைந்ததாகவும் இவரது முன்னைய வரலாறு கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களிடம் கோடிகளில் பணம், வெளிநாடுகளில் முதலீடு எப்படி வந்தது? இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏழை சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து, மக்களை ஏமாற்றி சேர்த்த சொத்து. இப்போ இவை எல்லாம் வெளிவரும் நிலையில் நாமல் ஒருபுறம், கட்சி உறுப்பினர் மறுபுறம் எச்சரிக்கை விடுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் எப்போ பூதம் வெளிக்கிளம்புதென்று. அதற்கு முதல் இவர்களை காப்பாற்றும் பரிவாரங்களை கைது செய்து இவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
வாகனங்களை வாங்கி பூசை செய்ய வருவோரை, பூசைக்கு முதல் விசாரணை செய்து பொலிஸாரின் சான்றிதழோடு வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்போகிறார் பூசாரி.
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
எனக்கொரு சந்தேகம். லலித், குகன் கொலைக்கு டக்கிலஸை பயன்படுத்தியிருக்கலாம் புலனாய்வுக்குழு. மாறி மாறி வந்த முன்னாள் அரசியல்வாதிகள் கொலை கொள்ளைகளை வளர்த்து இராணுவ போலீஸ் துறையை தமது பாதுகாப்பிற்க்கு அரணாக உருவாக்கியுள்ளனர்.இந்த துறைகளில் சுத்தமானவர்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனாலேயே கோத்தாவும் நாட்டை விட்டு தப்பியோட வேண்டி வந்தது. அனுரா அரசியலில் வீரம் இருந்தாலும் இந்த நரிகளை சமாளிப்பதற்கு அனுபவம், செல்வாக்கு காணாது. உடனடியாக இவர்களில் கை வைக்க முடியாது. சாட்சிகள், தாங்கள் யார் அதிகாரத்தால் இப்படி நடந்து கொண்டோமென மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், மக்களே இவர்களுக்கு நிரந்தர தீர்ப்பெழுத வேண்டும். இல்லையேல் இவர்களை ஐ .நா.வில் கையளிக்க வேண்டும். அதை அனுரா செய்ய மாட்டார். மக்கள் ஒரு நாள் செய்வார்கள். எங்கள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையிலும் வறுமையிலும் முதுமையிலும் வாடுவதுபோல் அதற்கு காரணமான இவர்களும் தவிக்க வேண்டும், தவிப்பார்கள் விதி வலிமையானது.
-
மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்
அவர்கள் தானே விநியோகிஸ்தர்கள். எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அவர்களே குற்றவாளிகள், பதவி இழப்பு, வேலை நீக்கம் என்று செய்திகள் வருகின்றனவே. இதுவரை காலமும் இவர்களை கேள்வி கேட்காமல் ஊட்டி வளர்த்தது யார்?
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஒன்றொன்றாக வெளிவந்து நாடே அலறப்போகுது. நாமல் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு ஒத்திகை பாத்துள்ளார். பெரும்பாலும் மாலை தீவுக்குத்தான் போக முடியும், இல்லையென்றால் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு ஆட்சியை கைப்பற்ற முனைவார்கள். அனுரவுக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார் நாமலும் அவரது கட்சியினரும். எல்லாமே கொலை கொள்ளைக்கூட்டம்! கொஞ்சமாவது மனச்சாட்சி, படிப்பறிவு, அநுபவம் வேண்டும் அரசியலுக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களுக்கும். வெறும் இனவாதத்தையே முதலாக கொண்டு கொலையில், அழிவில் ஆட்சி செய்ய முடியாது. மகாவம்சத்தில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்பதற்காக எத்தனை பித்தலாட்டங்கள். இப்போ அதே மஹாவம்சம் இவர்களை எப்படி சித்திரிக்கும்? நாட்டை கொள்ளையடித்து சீரழித்த கூட்டம்!
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
ஐயருக்கும் ஒரு பங்கு கொடுத்திருப்பார்கள். ம், நீங்கள் பள்ளிகூடத்தில் படிக்கிற காலத்தில இதுவே பெரிய விஷயம். இப்போ இருக்கிற தொழில் நுட்ப்ப வசதிகள் அப்போ இருந்திருந்தால்; எத்தனைபேர் மோட்டார் சைக்கிளென்ன? வீடு, நகை அதற்கு மேலேயும் வாங்கியிருப்பார்கள். உங்களுக்கு கொடுப்பினை இல்லை. இதுவும் ஒரு ஏமாற்றுத் தான்.
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
பாராளுமன்றம் அரசியல்வாதிகளை தவற விட்டு விட்டீர்கள். மனித புதைகுழி, ஊழல், கொலை, கொள்ளை, கடனால் சூழ்ந்துள்ள நாடு. இது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை. பிணந்தின்னி பேய்கள் அரசாளும் நாடு!
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
புழுகு மோடி அந்த நாடுகளின் பட்டியலை வெளியிடலாமே? விடுதலைப்புலிகளிடம் வலிய வந்து வாங்கிக்கட்டியதையும் சொல்லலாம். இலங்கை ஜனாதிபதியும் உப்பிடித்தான் கதை விட்டவர் உண்மையை, அவர்கள் செய்த கொடூரத்தை மறைக்க. பரவாயில்லையே, இலங்கைக்கு ஒன்றும் சளைத்தது இல்லை இந்தியா. எத்தனை அப்பாவிகளின் வீடுகளோ? காரணமானவர்களை அழிக்க முடியாவிட்டாலும் வீடுகளை அழித்து விட்டீர்கள். இனி பயங்கரவாதிகள் வாழவே முடியாது. குடிமக்களையும் அவர்களின் இல்லங்களையும் குண்டுபோட்டு அழித்து விட்டு, புலிகளையும் அவர்களின் முகாம்களையும் அழித்துவிட்டோம் என்பார்கள், பின் இராணுவத்திற்கு ஆள், பணம் சேர்ப்பார்கள். அதெப்படி என்று யாரும் கேட்க்கவுமில்லை, இவர்கள் சொல்லவுமில்லை.
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
இயற்கைக்கும் இறைவனுக்கும் முன் இவர்கள் ஒன்றுமேயில்லை. அதை உணரும் வரும்வரை ஆடுவார்கள். அவையும் ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
இவர்களே குற்றவாளிகள். இதில இவர்களுக்கு காவற்துறை சேவை. இவர்கள் எப்படி குற்றவாளிகளை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது? இவர்கள் குற்றமற்றவர்களையே தண்டித்திருக்கிறார்கள். செய்த பாவத்திற்கு சரியான தண்டனை. இருபத்தைந்து ஆண்டுகளாக குற்றம் செய்து, சம்பளமும் பெற்று, இனிமேல் ஓய்வூதியம் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டாலென்ன?
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
எனது ஊரில் உள்ள சில சமூக அக்கறை இல்லாத சில பொடியளை அங்குள்ள இராணுவம் போலீஸ் தமது வலைக்குள் இழுக்கும், இராணுவத்தின் நட்பு கிடைத்ததும் இவர்கள் அந்த ஊரில் பெரிய மனிதர்களாகிவிடுவார்கள். சண்டித்தனம், அடாவடி. அவர்களுக்கு வக்காலத்து வாங்க போலீஸ் வேற துணைக்கு. போலீசாரிடம் முறைப்பாடு அளித்தாலும் இந்த போக்கிலியள் சார்பாகவே போலீஸ் கதைத்து முறைபாடளித்தவர்களை அச்சுறுத்தும். இதனால் யாரும் அவர்களுக்கெதிராக முறைபாடளிக்க முன்வருவதில்லை. அவர்களை வைத்து, ஊரில் யாரெல்லாம் புலிகள் சார்பானவர்கள் ,யார் இராணுவத்துக்கு எதிரானவர்கள், போராளிகுடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், அவர்களின் குடும்ப விபரங்களை திரட்டுவது. இதனால் இப்படிப்பட்டவர்களை ஊரவர் ஒதுக்கி விடுவர். அதன் பின் அவர்களை வைத்து இப்படியான கதைகளை புனைவது, போதைப்பொருள் தரகராக்குவது, பின் இள வயதிலேயே மரணம். ஒரு வேளை நிலைமை புரிந்து விலக நினைத்தாலும் முடியாது. நீர்ச்சுழியில் சிக்கியதுபோல அவர்கள் எதிர்காலம். இது புரியாமல் ஆமிக்காரன் சிரிக்கிறான், உதவுகிறான் என்று உறவு வைத்தால் அவ்வளவுதான். அது ஒரு விஷ ஜந்து என விலகி ஓடிவிட வேண்டும் இராணுவத்தை கண்டால்.
-
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஏன் கையிலிருந்த துப்பாக்கி எங்கே போனது? இருவர் ஒருவரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை? யாரோ வேண்டுதலின் பேரில் தப்பிக்க வைத்திருக்கலாம், சில கடமைகளை நிறைவேற்றுவதற்காக.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் நமது பிரதேசத்தில் கேள்விப்பட்டதே இல்லை, வாள் வெட்டு? இதெல்லாம் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது?
-
லலித் குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு - யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது - கோட்டாபய தெரிவிப்பு
புலிகளை இல்லாமல் அழித்து விட்டோம், நாட்டில் மக்கள் அச்சமில்லாமல் எந்தப்பகுதிக்கும் போய்வரலாம், அந்த சுதந்திரத்தை நாங்கள் பெற்றுக்கொடுத்தோம், இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று கூறி, விகாரைகளையும் இராணுவ முகாம்களையும் எழுப்பி வெற்றி விழா கொண்டாடியவர்கள் இப்போ, தாங்கள் அந்தப்பகுதிக்கு வரத்தயாரில்லை. புலிகள் இல்லை நாட்டில் எங்கும், வடக்கில் இருப்பது புலிகளை அழித்த இராணுவம் (என்று சொல்லிக்கொள்கிறார்கள்) சிங்கள அரசின் காவற்துறை நீதி சட்டம். இருந்தும் வரத் தயக்கமேன்? செய்த கொலைகள். முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம். லலித், குகனை கொன்றது இலங்கை புலனாய்வுப்படை கோத்தாவின் உத்தரவின் பேரில். அதன் அடுத்த கட்டம் குமார் குணரட்ணம் கடத்தல் நாடகம். அவரையும் போட்டுத்தள்ளி இருப்பார் கோத்தா அவுஸ்ரேலிய தூதரகம் நேரடியாகவே களத்தில் இறங்கி, கோத்தாவை தொடர்பு கொண்டதினால் குமார் தப்பினார். அப்போ சர்வதேச நாடுகளுக்கு தெரிந்திருந்தது, இலங்கையில் நடக்கும் கொலை கொள்ளை கூட்டத் தலைவன் கோத்தா, அதன் படைகள் இராணுவ காவற்துறை புலனாய்வாளர்கள் என்பது. நாட்டில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, சாட்சிகளை அச்சுறுத்துவது, காணாமல் போகச்செய்வது, தடயங்களை அழிப்பது, இந்த இராணுவ காவற்துறை அதிகாரிகள். இதற்கு சம்பள, பதவி உயர்வு, மக்களாணை பெற்ற அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு உயரதிகாரிகள் என்ற பட்டயம் வேறு. நாடு உருப்படுமா? நீதியை எதிர்பார்க்க முடியுமா? சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் இவர்களுக்கே அமைச்சு பதவி சம்பளம் என்றால் அந்த துறை எப்படியானது என்று அதன் வண்டவாளங்கள் வரிசையாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. நாடே தாங்கமுடியாமல் தள்ளாடுது. அதை மறைக்க கொலைக்கு மேல் கொலை, திசை திருப்பும் குற்றச்சாட்டு. இந்தப்பிரச்சனை எங்கு போய் முடியுமென்று தெரியவில்லையே?