Everything posted by satan
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அவர்கள் அங்குமிங்கும் பார்வையாளராகவும் பங்குதாரராகவும் இருந்து தம்மை வளப்படுத்த நினைக்கிறார்கள். ஹிஸ்புல்லா அறிக்கையை, அண்மையில் ஹக்கீமின் கருத்தை பார்த்தால் புரியும். இந்துக்கோவிலை அழித்து மீன் சந்தை, தமிழர் நிலத்தில் தமது ஆதிக்கம், அதற்கு விசேட அதிகாரம். எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது? தமிழர் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, போராடி தமது விடுதலையை தேடுகிறார்கள், இவர்கள் சும்மாவிருந்து சுகம் தேட நினைப்பது எந்த விதத்தில் நிஞாயம்? அவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், அணைக்கிறார்கள் இதில் நமக்கென்ன? கோத்தாவின் ஊர்காவற்படையில் இருந்து தமிழரை அழித்தது யார்? ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தி கோத்தாவை அரியணை ஏற்றியது யார்? அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98% உடன்பாடுள்ளது, முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்கிறார் முபாரக் அப்துல் மஜித். முஸ்லீம் ஆண்கள் சிங்களப்பெண்களை மணந்து தங்களோடு இணைந்து வாழ்வதாக சிங்கள அரசியால்வாதியொருவர் கூறுகிறார், பிறகேன் அவர்களுக்கு ஒரு தனியலகு? அவர்கள் கிழக்கில் தங்கள் வியாபர தலங்களை, மத வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக அமைக்கிறார்கள், தமிழர் நிலங்களை பறிக்கிறார்கள், தமிழர் அப்படி செய்ய முடியுமா? அவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழரை எதிர்த்து, அழித்து, தம் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள். தமிழர் பிரிந்து போனால், அடுத்த குறி தாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் எங்களோடு சேர்ந்து வாழவும் மாட்டார்கள், பிரிந்து போகவும் விடமாட்டார்கள்.
-
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
ஆட்கடத்தற்காரர் ஆசை காட்டி அவர்களை ஆபத்தில் சிக்க வைக்கின்றனர். ஆட்கடத்தற்காரர் கைது செய்யப்பட்டு இந்த மரணங்களுக்கு பொறுப்பு கூற வைக்கப்படவேண்டும்.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
சிங்களவரால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது பார்வையாளர், கொள்ளையடிக்கப்படும்போது பங்குதாரர், போர் நடக்கும்போது நாடு இரண்டுபடக்கூடாது, தமிழர் அடிமைகளாக நடத்தபடவேண்டும் தாம் பாதிக்கப்படக்கூடாது ஆகவே தோள் கொடுப்பது. தமிழர் தீர்வு கேட்கும்போது நமக்கும் ஒரு அலகு வேண்டும். அப்போது நாடு இரண்டுபடாது? சிங்களம் அவர்களை அடிக்கும் போது குரல் கொடுக்க, தோள் கொடுக்க தமிழன் வேண்டும். ஏனெனில் தாமும் தமிழராம். சுத்த பச்சோந்தித்தனம்!
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை
இலங்கையில் பொது வெளியில் சட்டத்தை மீறி செயற்பட்ட பிக்கு ஒருவரை போலீசார் தட்டிக்கேட்டபோது, குறிப்பிட்ட பிக்கு சொல்லுறார், சட்டங்கள் பிக்குகளுக்கு அல்லவாம். அப்போ அவர்கள் என்னதான் செய்வார்கள்? இதில பௌத்தத்துக்கு முன்னுரிமை! இவர்கள் தங்கள் வீட்டில் ஒழுங்காக கலியாணம் செய்து குடும்பம் குட்டியோட இருந்திருக்கோணும் அல்லது நாட்டில இருந்திருக்க வேணும். போற இடமெல்லாம் பொது தோட்டமென்று நினைத்து மேய வெளிகிட்டா தண்டனை அனுபவிக்க வேண்டும். இப்போ அவுஸ்ரேலியத்தூதுவரை அழைத்து கண்டனத்தை தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கட்டும் பாப்போம் வெளிவிவகார அமைச்சர்! எடுத்ததற்கெல்லாம் தூதுவரை அழைத்து தமது கண்டனத்தை தெரிவிப்பவர்கள்.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
வயிற்றுக்குள் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்தனர் என்பதுபோல் இதுவும் ஒரு கதை. கிழக்கில் நடந்த அசம்பாவிதம் வடக்கில் நடந்தேறிவிடக்கூடாது என்பதற்காகவே இது நிகழ்ந்திருக்கலாம். இல்லையேல் வடக்கிலும் அதுதான் நடந்திருக்கும். பேசுவது தமிழ் ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனித் தீர்வு வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதற்காக அவர்கள் போராடாமல், தமிழர் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கும் குடைச்சல் எடுக்கும். புலிகள் தவறு என்பதை ஏற்று, மன்னிப்பு கேட்டு, மீளவும் குடியேற அழைத்தனர். ஆனால் இவர்கள் தாம் செய்த தவறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபகுதியும் விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இவர்களோ தமது தவறை மறைத்து எம்மை குற்றவாளிகளாக்குவது இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவே முடியும்.
-
கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் - ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு
செயலமர்வில் கலந்து கொண்டவர்கள், அடுத்து எப்போ, எங்கே தொடர்ந்து பேசுவது என முடிவெடுத்திருப்பார்கள். அதன்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இல்லை தொடர்ந்து பேசாமல் இருக்கவும் கூடும். இவர் வலியச்சென்று ஏன் தன்னையும் அழைக்கும் படி, அல்லது தானே அவர்களை பேச அழைக்கிறார்? இவர் வேண்டாமென அவர்களே முடிவெடுத்திருக்கலாம். அழையா வீட்டுக்கு நுழைய துடிக்கிறார். தன்னை புறந்தள்ளி தனக்கு தெரியாமல் ஏதாவது நடந்து விடுமோ என பதறுகிறார்.
-
கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் - ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு
சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை. முன்பு கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளில் சுமந்திரன் தனியே சென்று சந்தித்து விட்டு, யாரையும் கூட்டி வரவேண்டாம் என்று என்னையே அழைத்தார்கள், இது ஒரு இரகசிய சந்திப்பு என்று கதை விட்டு, தனக்கு சார்ந்த மாதிரி அறிக்கை விடுவார். அதனாலேயே சந்தேகப்பட்டு, சுமந்திரனே நேரில் சென்று என்ன கதைத்தார்கள், முடிவெடுத்தார்கள் என்று விளக்கம் கேட்டிருக்க கூடும். அதன் பின் ஏதோ தன்னை அழைத்து விளக்கம் கொடுத்த மாதிரி இவர் அறிக்கை விடுகிறார் போலும். இவருக்கு இரகசிய சந்திப்பு, அறிக்கை நடத்தாவிட்டால் உறக்கம் வராது. இதற்கு, என்ன பேசப்பட்டது என அதில் கலந்து கொண்ட தனது கட்சிக்காரரிடமே கேட்டுத்தெரிந்திருக்கலாம். "தான் கள்ளன் பிறரை நம்பானாம்."
-
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்
எல்லா நாடுகளிலும் இந்த அரசியல் மீறல்களை கட்டுப்படுத்தி மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவும், அநீதியான ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உண்டு. அதனாலேயே இவர்கள் ஆட்சியைப்பிடிக்க முடிந்தது. ஆனால் அந்தகதிரையில் குந்திய பிறகு அதை விட்டு எழும்பவோ, அல்லது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவோ மனம் வராது. அவ்வளவு சக்தி அந்தக்கதிரைக்கு. அதனாலேயே சட்டத்தை மாற்றி தமக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள். பின் அது தமது சந்ததிக்கு உரிமையாக்கிக் கொள்கிறார்கள். அடித்து விரட்டினாலொழிய அதை விட்டு கிளம்ப மாட்டார்கள். அதற்காக எத்தனையோ தகிடுதத்தங்கள் செய்வார்கள். அதற்கு நம் நாடு சிறந்த எடுத்துக்காட்டு.
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
பிரான்சில் உணவு தயாரிப்பில் விசேட விருது பெற்ற ஒரு தமிழர் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் வரவேற்பு நடந்தது. ஏன்? லைக்கா இன்னும் கனடா இந்திரகுமார் இவர்களுக்கும் வரவேற்புண்டு. அடித்து கலைப்பது, பின் மாலையளித்து வரவேற்று தங்களை மறைத்து இலங்கையர் என்று உரிமை கொண்டாடி தமிழருக்கு தங்களால் ஏற்பட்ட அழிவுகளையும் கொடூரங்களையும் இழைக்கப்படும் அநீதிகளையும் மறைத்து அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து தங்களை காப்பாற்றிக்கொள்வது. அதனாற்தான் சிங்களவருடன் வாழ்வது அதிஷ்டமென சிலர் புளகாங்கிதம் கொள்கின்றனர்.
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
நீங்கள் எல்லோரும், நான் உட்பட உந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரது ஊடகப்பிரிவு முந்திக்கொண்டது உங்களுக்கு முதல். அவர், தங்கம் வாங்கவோ கடத்தவோ முயன்றது உண்மை. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். நடத்துவார்களா?
-
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
நீங்கள், ஏன் என்னை காவடி என்று சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காவடி தூக்குவதென்றால்; ஒருவர் என்ன செய்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பது. ஆனால், அனுரா தவறு செய்தாலும் விமர்சிப்பேன், அதே மஹிந்த நல்லது செய்தாலும் வரவேற்பேன். அவர்தான் எதுவும் தமிழருக்கு செய்யவுமில்லை, செய்பவரை விடுவதுமில்லை, தீயதாவது செய்யாமல் இருக்கலாம். இது நடுவு நிலைமை. இன்று மட்டுமல்ல பல தடவை இவர்களின் செயற்பாட்டை நான் விமரிசித்துள்ளேன், நீங்கள் அதை கவனிக்கவில்லைப்போலும். இன்னும் பலதடவை சொல்லுங்கள், அதனால் எனக்கேதும் குறையப்போவதில்லை.
-
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
நடந்த ஒன்றை, இல்லையென்று நிறுவ முயற்சித்து தோல்வியை தழுவப்போகிறார்கள். இப்படியான நிலைப்பாட்டில் இவர்கள் இருந்தால்; நாடு முன்னேறவே முடியாது. இவர்களும் நாளை இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது. படடலந்தை வதை முகாம் பிரச்சனையை ஜெனீவாவுக்கு கொண்டு போகப்போவதாக இவர்களே கூறினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதை ஜெனிவாவில் முறையிடப்போவதாக மறு பகுதி கூறுகிறார்கள், இதனால் நாட்டின் இறையாண்மை கெடாதா? ஒட்டுமொத்த இனத்தையும் கொத்தாக அழித்து கெத்து காட்டுவதை மட்டும் சர்வதேசத்துக்கு கொண்டுபோகக்கூடாதாம். நாட்டை அழிப்பது என்று அவர்களே முடிவெடுத்து விட்டால், யார் தடுப்பது? நாடு இன்று இந்த நிலைக்கு சீரழிந்ததென்றால் அதற்கு காரணம் சீரற்ற சட்டம், இந அழிப்பு. அழியும் வரை உண்மையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
-
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்
நானும் இருக்கிறேன் சேர்! இப்படி ஏதும் சொல்லி தன்னை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது இவருக்கு. அவருக்கு தனது பழைய எஜமானரது நினைவு வருகிறது. பயங்கரவாதிகள் என்று கூறி பட்டப்பகலில் பறவை சுடுவதுபோல் வயது வேறுபாடின்றி தெருக்களில் தமிழரை கொலை செய்து வீசும்போது, வெள்ளை வானில் ஏற்றி சென்று காணாமல் ஆக்கப்பட்டபோது, இந்த நினைவு ஐயாவுக்கு வரவில்லை, கேள்வி கேட்கவில்லை. இப்போதான் பலருக்கு ஞானம் பிறக்குது. முன்பெல்லாம் கதைக்க, விமர்ச்சிக்க பயந்திருந்தவர்கள் இப்போ, விமர்ச்சிக்கிறார்கள். பாதாள போதைக்குழு, தங்களை பாதுகாக்க அதன் பின்னால் இருப்பவர்களை போட்டுத்தள்ளுகிறார்கள். அதன் தலைவன் பிடிபடும்வரை அல்லது கொல்லப்படும் வரை இது தொடரும். இது அவர்களின் தொழில் தர்மமாக்கும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது அதன் விளைவையும் எதிர்பார்த்திருக்க வேண்டும். கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், அவர்களே தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் அரசை விமர்ச்சிக்கிறார்கள். விமர்ச்சிப்பவர்கள் யார்? இதனால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களா?
-
உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!
கேள்வி கேட்பது யார் என்று கவனியுங்கள்! பயங்கரவாதிகளை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில், வயது வேறுபாடின்றி கண்ட இடங்களிலெல்லாம் தமிழரை சுட்டுக்கொன்றது இவர்களது கட்சிதானே? அன்று அதை செய்தவர்களே இன்றும் செய்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டின் பின்னால் இருப்பவர்கள் முன்னாள் இராணுவ வீரர். இந்த துணிவை கொடுத்தது, இவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களித்தது யார்? போதைப்பொருள், பாதாள உலகக்குழுவை வளர்த்தது யார்? அதற்குப்பின்னால் இருப்பது யார்? அங்கேயும் போலீஸ், இராணுவமே. இவர்களால் எப்படி இது முடிந்தது? இன்று நேற்றா இந்த குழு இயங்குகிறது? ஏன் அதற்கெதிராக கடந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முயலவில்லை? காரணம்; இவர்களின் ஆசீர்வாதத்தோடு, ஆதரவோடுதான் இவைகள் இயங்கின. இவர்களின் ஆட்சி வீழ்ந்தவுடன் தங்களுக்கு பாதுகாப்பில்லை என உணர்ந்து, வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர். கொலை செய்பவர்களுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் கிடைத்தன? பெரிய கள்ளரின் தயவில் வாழும் கள்ளர், தங்கள் எஜமானரை காப்பாற்ற துடிக்கின்றனர். அப்போ தாங்களும் காப்பாற்றப்படுவோம் என்கிற நப்பாசையில். இறுதியில் இவர்களே எஜமானரை காட்டியும் கொடுப்பர் தம்மை காத்துக்கொள்வதற்காக.
-
அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கிறார் நாமல் ராஜபக்ஷ சாடல்
அவர் பாதுகாப்புடன் செல்வதால் அவரை போட்டுத்தள்ளுவது உங்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாகத்தான் இருக்கும். ஏன், உங்கள் அப்பா, சித்தப்பாவுக்கு அப்படி பாதுகாப்பேதும் இருக்கவில்லையா கடந்த காலங்களில்? அன்று, லசந்த தனது இறுதித் தருணத்தில், உங்கள் அப்பாவிடம் உதவி கோரினாரே, அப்போ உங்கள் அப்பா என்ன செய்தார்? என்ன கேட்டார்? இப்போ மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றி புதுசா கரிசனை எழுகிறது இவருக்கு? அப்படி இருக்கும்போது, இவர் ஏன் தன் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுறார்? எதை விசாரணைக்கு எடுத்தாலும், இவரேன் முந்திக்கொண்டு கருத்து சொல்கிறார்? இனவாதத்தை முன்னிறுத்தி, அதன் பின்னால் மக்களின் கவனத்தை திசை திருப்பி, கொலை, கொள்ளை, ஊழல், போதைப்பொருள் கடத்தல், இராணுவத்தை பயன்படுத்தி பாதாள அமைப்பை உருவாக்கி தங்களுக்கு சவாலானவர்களை, கேள்வி கேட்ப்பவர்களை, ஊழலை வெளிப்படுத்துபவர்களை மௌனிக்கச்செய்தல், இவர்கள் செய்யாதது எது? இல்லையெனில்; இன்று அனுரா செய்வதை, அன்று இவர்கள் செய்து நாட்டை வளப்படுத்தியிருக்கலாமே? இன்றும் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாமென்கிற அச்சத்தில், மக்களை சூழ அழைத்து வைத்துக்கொண்டு உபதேசம் செய்கிறார்கள். இனவாதத்திற்கு பின்னால் எது இருந்ததோ, எவர் இருந்தனரோ, அவர்கள், அவைகள் வெளிப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அப்போ இனவாதம் தானாகவே முடிவுக்கு வரும். யார் அடுத்து கைது செய்யப்பட இருக்கிறாரோ, அது நடைபெறமுன் அவர் கொலை செய்யப்படுகிறார். அந்தக்கொலையை செய்தவர் அடுத்து கொலை செய்யப்படுகிறார். இந்தக்கலாச்சாரம் இந்த குடும்பத்தாலேயே நாட்டில் அறிமுகமானது. எப்படியும் இதற்குப்பின்னால் இயக்குவிக்கும் தாதா தப்பிப்பாரா?
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
சட்ட விரோதமான வேலை செய்வோருக்கு கெத்து கூட, அறிவு சொற்பம். ஒருநாள் மாட்டுப்பட்டு, குட்டு வெளிவராது என்கிற அற்ப அறிவு. சேர்த்தது, தனிப்பட்ட, குடும்ப மானம் இழந்து வாழ்நாள் முழுதும் சிறை. தனக்கேற்ற வேலைசெய்து கஞ்சியோ கூழோ குடித்து நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இனிமேல் இவர் செய்யாததும் இவர் மேல் சுமத்தப்படும். எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடியிருப்பர் தம் சொந்த பேராசையால். இவரோ? எவரோ?
-
தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு
தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் கொடுத்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசும் தவறியுள்ளது, அதையும் சேர்த்து சொல்லவேண்டியது. நீங்கள் இந்தியாவை கை காட்டி உங்கள் பொறுப்பை இந்தியாவிடம் விடுகிறீர்கள், தமிழர் பிரிந்து வாழ்வதையும் தடுக்கிறீர்கள். இது, நீங்களும் இந்தியாவும் விளையாடும் சொக்கட்டான் விளையாட்டு. தங்கள் பொறுப்பை இந்தியாவிடம் தட்டிக்கழிப்பது, பேசுவது; எங்கள் நாட்டுக்கு இறைமை உண்டு, இதில் யாரும் தலையிட முடியாது என. என்ன வேடிக்கையாக பேசுகிறார் கலாநிதி தயான் ஜயதிலக்க. இவர் ஒரு முன்னாள் ஐ .நாவில் இலங்கை சார்பாக தொடர்பாக பேசியவர். ஐ .நா. வையும் இந்தியாவையும் கை காட்டுவதால் பயனில்லை. நீங்களே அதற்கு முழுப்பொறுப்பு. தங்களின் கையாலாகாத்தன்மையை ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
அதெண்டா நீங்கள் சொல்வது உண்மைதான். அப்போ, எந்தக்கட்சி பதவிக்கு வந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்? மகிந்த, மைத்திரி, ரணில், கோத்தா, சந்திரிகா? இவர்களெல்லாம் பதவியையிழந்தபின் குற்றம் சாட்டுபவர்கள். அனுராவுக்கும் ஒரு சந்தர்ப்பம். இல்லையெனில் பத்தோடு பதினொன்று! நீங்கள்தான் ஆட்சிக்கு வந்தாலும், தமிழர் பிரச்சனை முழுதாக தீர்க்க முடியாது, இதுதான் யதார்த்தம். ஆரம்பத்தில் விட்டு தவறு, மீண்டும் சரிசெய்வது முடியாத காரியம்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
மாற்றம் ஒன்றே மாறாதது. மஹிந்த, தான் அரசியலில் நிலைத்து நிற்பதற்காக இனவாதத்தை கையிலெடுத்தார், இன்று அவரின் மாயையிலிருந்து மக்கள் விலகி விட்டனர். பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் அனுராவை தொடர்ந்து அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களிலிருந்து வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டும். நீங்கள் தந்தால் வேண்டாமென்றா சொல்வேன் நான்?
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
உங்களுக்கு வெறுப்பு என்னிலா? அனுரா அரசிலா? சிங்களத்தின் சுய குணத்தை மாற்ற இயலாது. ஆனாலும் அனுரா சிறிது மாற்றி யோசிக்கிறார். அதிலும் ரில்வின் சில்வா தனது கடும் போக்கை சிறிது தளர்த்துவது போல் எனக்குத் தெரிகிறது. குறை சொல்வதை விடுத்து மாற்றத்தை ஏற்று ஊக்கப்படுத்துவதே நமக்கு இப்போதுள்ள ஒரு வழி. எழுபத்தாறு ஆண்டுகள் திட்டமிட்டு, தீனி போட்டு வளர்க்கப்பட்ட இனவாதத்தை சில ஆண்டுகளில் மாற்றி அழித்துவிட முடியாது. அதற்கு காரணமானவர்கள், காரணம், வெளிக்கொணர்ந்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும், பயத்தை நீக்கவேண்டும், உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கு முதல், அதை ஏற்படுத்துபவர்கள் நடந்தது தவறு என ஏற்று, பொறுப்பெடுக்க வேண்டும். இதெல்லாம் சில ஆண்டுகளில் நடைபெறாது. அதை ஏற்படுத்துவதற்கு, சுயநல அரசியல்வாதிகளின் போலி முகங்களை களைவதற்கு, பல சவால்களை சந்திக்க வேண்டும். ஆமா.... இதை வாசித்ததன் பின், எனக்கு என்ன பெயர் சூட்டுவதாக உத்தேசம்? அதையும் அனுராவின் சவாலாக ஏற்றுக்கொள்வேன்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
அரச, காவற்துறை, இராணுவ, புலனாய்வின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் பாதுகாப்போடும் நாடு முழுவதும் பரப்பப்பட்டு கொடிகட்டிப்பறந்த போதை பாதாள உலக வியாபார கலாச்சாரம், தப்பி வெளிநாடுகளுக்குள் மறைந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார். மிகுதி, போகபோகத்தொடரும். அப்போ நீங்களும் தொடர்ந்து பாராட்டக்கூடும், பொறுத்திருந்து பாப்போம். நான் அனுராவின் காவடியாகவே இருந்து விட்டுப்போகிறேன். நல்லது செய்ய முயற்சிப்பவரில் எதிர்பார்ப்பு வைப்பதில் தப்பில்லை. அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தேசியத்தலைவர், தெய்வம் என்கிறார். இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால்; பயங்கரவாத சட்டமோ வெள்ளை வானோ இவரை இல்லாமல் செய்திருக்கும். சுமணரத்ன தேரர் வேறு புலம்புகிறார், மஹிந்த காலத்தில், வடக்கு கிழக்கில் சுதந்திரமாக பௌத்த கொள்கைத்திட்டங்களை ஆற்றினோம், அனுரா வந்து தொல்பொருள் பௌத்த கொள்கைகளை தடுத்து விட்டார் என, தனது கொள்ளை தொழில் பறிபோன கடுப்பில் அங்கலாய்க்கிறார். மெல்லெனப்பாயும் நீர், கல்லையும் உருக்கிப்பாயுமாம். உங்கள் பார்வையும் வெறுப்பும் எண்ணங்களும் மாறலாம். அதற்காக, அனுரா தமிழீழத்தை தூக்கி தந்துவிடுவார் என நான் சொல்ல வரவில்லை. தமிழர் பயங்கரவாதிகள், வந்தேறு குடிகள், அவர்களுக்கு இந்த நாட்டில் அதிகாரமில்லை, எந்த அரசியல் உரிமையும் தேவையில்லை என்கிற வாதம் தகர்க்கப்பட வாய்ப்புண்டு.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின், சொந்த விபரங்களை பயன்படுத்தி பல சிங்களவர்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் சிலர் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாக கடந்த அரசாங்கங்கள் கூறிவந்தன. அன்றைய அமைச்சர் ஒருவர் ஐ. நாவிலும் இந்த கருத்தை வைத்திருந்தார். இந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும் போது அதுவும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய அடையாள அட்டையை தயாரிக்க இவர்களால் முடிந்திருக்கிறதென்றால், உள்நாட்டில் தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே இவர்களுக்கு. பல வருடங்களுக்கு முன் போர் முடிந்த கையோடு ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. அதாவது நாமல் வாட பகுதியில் உள்ள தமிழரின் காணிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு அவர்கள் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல தூண்டப்படுவதாக. அந்தசெய்தியில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தவர்களில், இலங்கை சட்ட விரோத கடற் பயணங்களை தடுக்க அமைக்கப்பட்ட கடலோரக்காவல் பணியில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், தன் நாயோடு தஞ்சம் அடைந்திருந்ததாக செய்திகள் வந்தன. அவர் மட்டுமல்ல, பல சிங்களவர்கள் இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் எல்லாத்துறைகளிலும் ஊழல், மோசடி, விசேடமாக போலீஸ், பாதுகாப்பு படைகளில் முழுவதும் இது பரவியிருக்கிறது. அரச துறைகள் முழுவதும் மாற்றியமைக்கப்படவேண்டும். தமிழருக்கெதிரானது என உருவாக்கப்பட்டது, நாட்டையே விழுங்கி விட்டிருக்கிறது. சுட்டுப்படுகொலைசெய்யப்பட கணேசமுல்ல சஞ்சீவ காரணமில்லாமல் அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது எப்படி? உடனடியாக மத்துகமவுக்கு இஷாரா தப்பிச்செல்ல முடிந்தது எப்படி? போலீசார் மத்துக்கமவுக்கு தேடுதலுக்காக சென்றபோது மித்தெனியாவுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று, கென்னடி பஸ்ரியனிடம் இஷாராவை கையளித்தது யார்? சாதாரண பொதுமகனால் முடியுமா இதனை செய்ய? போலீஸ் புலனாய்வாளர்கள் நேபாளத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது வரை, ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாதது வரை வெளியில் கசிந்தது எப்படி? அப்படியென்றால்; குற்றவாளிகள் புலனாய்வுப்படைக்குள் இவர்களுடன் பயணிக்கின்றனர். மகிந்த காலத்தில் போலீஸ், இராணுவப்படைகளுக்கு அதிகளவு அதிகாரம், செல்வாக்கு, தண்டனைகளிலிருந்து விலக்கு இத்தியாதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் நாட்டை காப்பாற்றியவர்கள் என்கிற விளக்கம் கொடுக்கப்பட்டது. அது போதைப்பொருள் கடத்தலாக இருந்தாலென்ன, கொலை கொள்ளையாக இருந்தாலென்ன. நாட்டை காப்பாற்ற வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தபட்டார்கள். அனுராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இங்கே தான் உண்டு. அனுரவைத்தவிர வேறொருவர் ஆட்சி ஏற்றிருந்தால் இவையெல்லாம் நிறைவேறியிருக்காது. இப்போ நாமல் சொல்கிறார், இந்த குற்றவாளிகளின் பின்னால் செயற்படுபவர் யார், இந்த கள்ள அடையாள அட்டைகளை விநியோகித்தவர்கள் யார், புலனாய்வுத்தகவல்களை அளிப்பவர்கள் யாரென அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம். ஏன் இவ்வளவு அவசரம் இவருக்கு? தன் பெயரை தெரிந்து கொண்டுவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலா? அல்லது தகவல் கொடுப்போரை அழிப்பதற்காகவா? இவரை சுற்றி ஏலவே கண்காணிப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இவர் அறிய வில்லையா? அதைவிட இஷாரா இவரின் முன்னாள் காதலியென்கிற பேச்சும் அடிபடுகிறது. இவர்களின் ஊதுகுழல்கள் அடங்கிவிட்டனவே, இனிமேல் எது பேசினாலும் அது தமக்கு எதிராகவே திரும்புமென உணர்ந்து கொண்டனரோ? அவர்கள் தம் பாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் என சொந்த நாட்டிலேயே கொடிகட்டிப்பறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அனுரா ஆட்சியேறியவுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, கைதாகவும் வேண்டி வந்தது, ராஜபக்ச குடும்பத்துக்கு வந்த சோதனை. அவர்களின் கோர முகத்தையும், இருண்ட ஆட்சியையும் உலகிற்கும் சொந்த மக்களுக்கும் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் எல்லா துறைகளையும் மாற்றியமைக்க வேண்டியது, அனுராவுக்கு இன்னும் நாட்டை முன்னேற்றகரமாக கொண்டுசெல்ல உதவும். தமிழ் மக்களை மட்டுமல்ல சொந்த மக்களையும், உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களையும், இவர்களுக்காக, இவர்களை காக்க, தம் சொந்த உயிரையும் பணயம் வைத்து ஏவல் வேலை செய்து இவர்களை செழிப்பாக்கி அழகு பார்த்தவர்களையும் கொலை செய்த இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும். ஹி.... ஹி..... நீங்கள் அவர் செய்தவற்றை கண்டதால் போற்றுகிறீர்கள். நாங்கள் அவர் சாதிப்பார் என நம்பினோம், கேலி செய்தீர்கள் அன்று, என் போன்றவர்களை.
-
13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?
ஒரு இனப்படுகொலை இன்று சாதாரண பேசுபொருளாகியுள்ளது. அதற்காக இலங்கை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்து, பல ராஜதந்திர வேலைகளை செய்துள்ளது. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள் எதை சாதித்தார்கள்? அவர்கள் கூற்றை ஆமோதித்துக்கொண்டிருந்துள்ளார்கள். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? இவர்கள் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாம், தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள், அதைத்தான் சொன்னேன். உண்மை என்றும் மறைந்து போகாது. என்னை கிண்டலடிப்பதுபோல் உண்மையை ஏற்று, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இலங்கையில் விடுதலைப்போர் போர் முடிந்த கையோடேயே, தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, விடாமுயற்சியை, கல்வியை குறிவைத்து அடுத்த போர் தமிழருக்கெதிராக தொடங்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில், நடைபெறும் எல்லா சமூக விரோத செயல்களிலும் ஜவ்னாவையும் இழுத்து விட்டு, அவர்களே இவற்றிற்கு காரணம் என்று தாம் தப்பித்துக்கொள்வது என முடிவு செய்து செயற்பட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்படியெண்டா; செவ்வந்தியில் ஒரு மயக்கமுங்கோ உங்களுக்கு. ஒரு அமைச்சரே அவரின் திறமையை மெச்சியிருக்கிறார் என்றா பாத்துக்கொள்ளுங்களேன் செவ்வந்தி எப்படிப்பட்டவர் என்று. அதிலும் இருபத்தாறு வயதுதான் அவவுக்கு. எங்கள் பெண் போராளிகளை விமர்சிக்கிறார்கள், இவவையோ நினைத்து, கனவு கண்டு பாட்டுபாடுகிறார்கள். இருவேறு உலகமிது.