Everything posted by satan
-
சுமந்திரன் தவறானவர் என சாணக்கியன் பகீர் தகவல்! மூடிய சமையலறையில் சுமந்திரன் விசேட சந்திப்பு
இல்லை சிறி, அவர்கள் எல்லோருக்கும் சுமந்திரனை தெரியும், தெரிந்துதான் கூட்டுச்சேர்ந்தார்கள். ஏனெனில் அவர்களும் பதவிகளுக்காக தொழுது பின் திரிபவர்கள் தான். நேற்று வந்த சாணக்கியன், அதுவும் சிங்களத்தின் பாசறையில் இருந்து வந்தவர், வரலாறு தெரியாதவர், நஸீருடன் நடந்த நேர்காணலில் அதை ஏற்றுக்கொண்டவர், வந்ததுமுதல் முஸ்லிம்களோடு ஒட்டிஉறவாடுபவர், தமிழர் மத்தியில் வாய் வீச்சு மட்டும் காட்டுபவர், ஆரம்ப உறுப்பினர்களை பரிகசிப்பவர், கட்சியின் தலைமைக்கு ஆசைப்படுவது தமிழரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்று தெரியவில்லை.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள்; தங்கள் போரினை நிஞாயப்படுத்தி, மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, ஆதரவைப்பெறவும், சர்வதேச நாடுகளிடம் நிதி, அனுதாபம், ஆலோசனைகளை பெறவும் நிகழ்த்தப்பட்டன. பொன்சேகாவே கூறியிருந்தார், தன்மீதும் கோத்தா மீதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டவும் போரின் தாக்குதலை அதிகரிக்கவும் செய்யபட்ட தந்திரம் என்று. இன்னும் பல எதிர்பார்க்கிறோம்! இதில் முஸ்லிமகளின் பங்கும் வெளிவர வேண்டும். வானுயர உயர்த்தப்பட்டு பாராட்டப்பட்டவர்கள் பாதாளம் வரை தாழ்த்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த அழிவு வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். இல்லையேல், மௌனமாக்கப்பட வாய்ப்புண்டு. இன்னும் சிறிது நேரத்தில் உதயன் கம்மன் பில கூப்பாடு போட்டுகொண்டு வருவார் சிங்களத்தை துயிலெழுப்ப.
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
இந்தியாவில் ஒரு நாளைக்கு பாலியல், வரதட்ஷனை, பெண்பிள்ளை பெற்றதால், கள்ளக்காதலால் இறக்கும் பெண்களின் பதியப்பட்ட தொகை அதிகரித்து வருகிறது. பதியப்படாமலேயே எவ்வளவோ இருக்கிறது. நேற்று ஒரு செய்தி; கர்நாடகாவில் தர்மசாலா எனும் இடத்தில் கொன்று புதைக்கப்பட்ட சிறு பெண்களின் உடல்கள் அறுநூறு அல்லது அதற்குமேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு தேவஸ்தானத்தில் நடந்த படு பயங்கரம். மோடி எங்கு கைகூப்பி, யாரை வணங்குகிறாரோ, அங்கெல்லாம் பாலியல் துஸ்பிரயோகம், கொலை, புதைப்பு.
-
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு. அல்வாயனுக்கு ஒரு பதிவிட்டிருந்தேன். "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது." நான் யாரையும் பிடிக்கவில்லை என்று சிலவற்றை சுட்டிக்காட்டி ஒரு சொல்லில் எழுதினால், ஆதாரம் இருக்கா? வெறும் காழ்ப்புணர்ச்சி என்று சொல்வார்கள். ஆதாரங்களை சேர்த்து எழுதினால், அதற்கு மறுத்து ஆதாரம் வைக்க தெரியாவிட்டால், முடியாவிட்டால் பந்தி எழுதுகிறேன் என ஒரு குற்றச்சாட்டு என்மேல் உண்டு. அதனாலேயே ஒரு சில வரிகளுடன் விட்டேன். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் நன்று என்று இன்று தெரிகிறது. கிழக்கில் இத்தனை கொடூரங்களும் யாரால், ஏன் நிறைவேற்றப்பட்டது என்பதும் மெல்ல மெல்ல திரை விலகுகிறது. அன்று, தாம் பதவியை கைப்பற்ற முஸ்லிம்களை வைத்து தாக்குதலை நடத்தினர். இன்று புலிகளை சாட்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். துப்பாக்கியையும் கொடுத்து, போலீசாருக்கும் அறிவித்து, நான் நினைக்கிறன் பயத்தில் தடுமாறுகிறார்கள் என்று. அன்று அனுரா சிறிய பையன். இவர்களின் திரிப்புகளை உண்மையென நம்பியிருக்கலாம், இப்போ வெளிவருபவை உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றன. அன்று பூட்டிய அறைகளுக்குள் காதோடு காதாக பேசியவை, ரகசியமாக செய்தவை இன்று பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இனிமேலும் பித்தலாட்டம் ஆட வெளிக்கிட்டால்தாங்களாகவே பொறியில் சிக்குவார்கள். கிழக்கில் முஸ்லிம்களை பலிகொடுத்து, தமிழரை பலி எடுத்து ஆடிய ஊழியாட்டம் வெளியில் வர இருக்கிறது. எத்தனை பலம், படை இருந்து, தமிழரின் நிலங்களை, உயிர்களை, கோயில்களை பறிக்க அதிகாரம் இருந்ததென்றால்; அந்த முஸ்லிம்களை காக்க முடியவில்லையா? அப்போ எந்த அதிகாரத்தினால் இதை சாதித்தேன் என்று சவால் விட்டார் ஹிஸ்புல்லா? முஸ்லீம் அரபு நாடுகளிடம் முதலில் உதவி கேட்டு சென்றபோது முஸ்லிம்களுக்கு அங்கு ஒரு ஆபத்துமில்லை ஆகவே உதவி செய்ய தயங்கிய அந்த நாடுகளிடம், புலிகள் முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்கிறார்கள் ஆகவே உதவி செய்யுங்கள் என்று மீண்டும் போனால்; அங்கு என்ன நடந்திருக்கு என்று சொல்லாமலே புரியும். எந்த நாடும் இந்த நாட்டில் முதலிடலாம், வியாபார, கல்வி, சமய கருமங்களை ஆற்றலாம். ஆனால் தமிழருக்கு இடமில்லை, அவர்களை அழிக்க உதவுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் என்றால்; இவர்களின் தந்திரோபாயத்தை என்னவென்று சொல்லலாம்? எத்தனையோ சாட்சிகளை கொலை செய்திருக்கிறார்கள், இன்னும் சிலருக்கு அதிகாரிகள் வற்புறுத்தி பொய் சாட்சி சொல்ல வைத்தார்கள் என்று கதை எழுதினார்கள். ஒன்றை மறைக்க பல கொலைகளை அஞ்சாமல் செய்து காரியத்தை சாதித்தார்கள். இப்போ அதற்கான விலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும், விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள், ஜனாதிபதி போன்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அரசியல்வாதிகளின் பாதுகாப்பை குறைத்து இவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். இந்த குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முடியாது, பழைய கொலைகலாச்சாரத்தை அரங்கேற்றுவார்கள். காலம் எப்படி சுற்றி வளைத்திருக்கிறது பாருங்கள்!
-
புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில
ஆமா.... துல்லியமான தகவல் வழங்கி, எதை தடுத்தீர்கள்? தகவல் கிடைத்தும் தடுக்கத்தவறியவர்கள் குற்றவாளிகளே. அது கூடத்தெரியாத இதெல்லாம் வக்கீலாமெல்லே! இந்த இரத்தக்காட்டேரி ஏன்இப்போ பதறுது? சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்படவில்லை, அவர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்றார், இப்போ இப்படி புலம்புகிறார். ஒருநாள் வக்கீல் சட்டையை மாட்டி விட்டு சட்டம் தெரிந்ததுபோல் அலப்பறை பண்ணக்கூடாது. ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படுவர், வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டாரா என விசாரிக்கும்போது எல்லாமே வெளியில் வரும், சம்பந்தப்பட்டவரின் குற்ற வரலாற்றை பார்க்கும்போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். ஏன் கிரிசாந்தி வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவர் மற்ற கொலைகள் பற்றி தெரிவிக்கவில்லையா? இவர் எல்லாம் சிறைக்குள் போய் குற்றவாளியை சந்திப்பதற்காக வக்கீல் சட்டை மாட்டுபவர். ரொம்பதான் துடிக்கிறார், சிறைக்கு போவதற்காகவோ?
-
சுமந்திரன் தவறானவர் என சாணக்கியன் பகீர் தகவல்! மூடிய சமையலறையில் சுமந்திரன் விசேட சந்திப்பு
முன்னர் பிரித்தானியாவில் சுரேன் என்று அழைக்கப்படுபவர் சுமந்திரனின் எடுபிடியாக இருந்து மூடிய அறைக்குள் ஆலோசனைகள் நடந்தன. இப்போ, கட்சியை மாற்றி அமைத்ததுபோல் அந்த அணியை மாற்றி அமைக்க சென்றிருப்பார் போலுள்ளது. ஊரில், தெருக்கோடியெங்கும் கோட்டு ஸூட்டோடு காட்சியளித்து அலைபவர், அங்கே சமயலறையில் சமையற்காரன், தனது சமையல் பற்றி விளக்குவது, விவரிப்பதுபோல் ஒரு படம். எப்பிடியிருந்த சுமந்திரனா இப்படி?
-
குரோதம் கொண்டு வந்த ரயிலில் இப்போது சகோதரத்துவம் சுமந்து வருகிறோம் – மகேஷ் அம்பேபிட்டிய
செம்மணி மனித எலும்புகள் வெளிக்கிளம்பியதுதான் தாமதம், சகோதரத்துவமும் முளை விடுகிறது. இது ஒன்றும் கிழட்டுப்புலி, தருப்பை காப்பை ஏந்திய கதையில்லைத்தானே? இனிமேல் சண்டித்தனம் காட்ட முடியாதென்றால் அணைத்து குத்த வேண்டியது. இது இனத்தின் பாரம்பரியம். இத்தனை அழிவுகள் நம் இனத்துக்கு நடக்கும்போது, இவர்களும் நாட்டில், பாராளுமன்றத்தில், பதவிகளில் இருந்து ஆதரவு கொடுத்திருந்தார்கள். தமிழருக்காக அனுதாபத்தை கூட வெளிப்படுத்த வில்லையே இந்த செம்மணி விவகாரம் வெளிவரும்வரை. ஐ .நா வில் அப்படியொன்றும் நடக்கவில்லை, இனஅழிப்பு என்று யாராவது கதைத்தால் சட்டம் பாயும் என்று வேறு அச்சுறுத்தினார்களே? நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் எங்கள் நிலங்களை மீள அளியுங்கள், தடைகளை நீக்குங்கள், தேவையற்ற விகாரைகளை அகற்றுங்கள், நமது நிலங்களை ஆக்கிரமித்திருந்து சமூக சீர்கேடுகளை உருவாக்கும் இராணுவத்தினரை மீளப்பெறுங்கள், சம உரிமையை தாருங்கள், உங்களை நாங்கள் நம்புகிறோம். இங்கு ஒன்று, தெற்கில் வேறொன்று கூறி இரு பகுதி மக்களையும் ஏமாற்ற வேண்டாம்.
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
"இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை."எங்கும் நாம் சொல்லும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் திருமணங்கள், நாங்கள் சொல்லும் காரணங்களுக்குள் அடங்காது. எமது சமூகத்திலும் சாதி, சமயம் பாராமல், சீதனம் வாங்காமல் தாங்களே விரும்பியும், பெற்றோர் பார்த்தும் செய்துவைத்த திருமணங்கள் உண்டு. அப்போ சிலர் சொல்லிக்கொண்டனர்; பெண் கிடைக்காததால் அவ்வாறு செய்து கொண்டனர், ஆணில் ஏதோ குறையுண்டு. இவ்வாறு பல காரணங்கள் சொல்லிக்கொண்டனர். எனக்கு தெரிந்து அப்போது போலீசாக இருந்த ஒரு சிங்களவர், தாதியாக பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண்ணை விரும்பி திருமணம் செய்திருந்தார். அவர் ஒருதடவை தன் குடும்பத்தை பார்த்து குடும்ப சொத்தில் தனது பாகத்தை பெற சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார். அன்று போர் நடக்கும் போது, கோத்தா சொன்னார் என நினைக்கிறன். "தமிழ் இளைஞரின் உடல்கள் கடல் மீன்களுக்கு, பெண்கள் உடல் சிங்கள இளைஞருக்கு." போரிலும், திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், நிலங்கள், பெண்கள் வேறு வழியில்லாமல் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது அந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது. நாம் ஏதோ நல்ல மாற்றம் நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறோம். ஏன் சிங்கள தம்பதியினர் விவாகரத்து பெறவில்லையா? கள்ள தொடர்பு வைத்து காதலியையோ மனைவியையோ கொலை செய்யவில்லையா?
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
அவரே அப்படி போகக்கூடிய ஆள்தான்!
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
முப்பது வயதிற்குள் புலியில் போராடி, புனர்வாழ்வு அளித்து..... இவர்கள் கதை புனையும்போது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து புனைகிறார்களா அல்லது முட்டாள்தனமாக புனைகிறார்களா? இவர்களது கதையை பார்க்கும்போது இவர்கள் தங்கள் முட்டாள் கதைகளை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
இன்றைய பரிதாப நிலை! புலிகள் மீள எழுகிறார்கள் என காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா?
-
மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை
அவ்வாறே வடக்கில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் குரல் எழுப்பினால் தாழ்ந்து போகமாட்டீர்களே.
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
என்ன குழப்பமா, ஒருவருக்குத்தானா?
-
இன்றைக்கு இவன், நாளைக்கு எத்தனை பேரோ?
புது அனுபவம் போல் ரொம்ப பயந்துட்டார் முதல் குற்றம் செய்து ஜெயிலுக்கு போகும்போது ஏதோ பெரிசா சாதித்த பெருமை சிறுவர்களாக இருந்தால் தங்கள் கீரோக்களாகி விடும் என்கிற நினைப்பு அடுத்து ஜெயிலில் பலவித பலவயதில் நண்பர்கள் அடுத்த முறை சிக்காமல் எப்படி தப்பு செய்வதென்கிற பாடம் பிறகு அது தொடர்கதை ஒரு பன்னிரண்டு வயது மாணவியை பதினாறு வயது பையன் துஷ்பிரயோகம் போதாதற்கு நண்பர்களும் சேர்ந்து மாட்டுப்படார்கள் அவ்வளவு பேரும் அவர்களை போலீசார் அழைத்துச்செல்லும்போது ஏதோ பெரிதாக சாதித்த பெருமை ஒவ்வொருவர் முகத்திலும் சினிமாவில் துப்பாக்கியை நீட்டி சுட்டுவிட்டு ஊ என்று ஊதிவிட்டு சடடைப்பைக்குள் துப்பாக்கியை திணித்துக்கொண்டு வேகமாக உந்துருளியில் பறக்கிறார். அவர்தான் ஹீரோ. சிறையிலும் அவரின் ஹீரோஜிசந்தான். அங்கே சட்டம், தண்டனை, அதன் வலி, அவமானம் பெரிதாக காட்டப்படுவதில்லை. இதில் இளையோர் மயங்கி, அவ்வளவுதானே செய்துதான் பார்ப்போமே என்று தொடர்கிறார்கள்.
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
சொல்லத்தான் வந்தேன் தேவையில்லை என்றாகி விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அன்று அந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது, இன்று அது அப்படி நடந்திருக்காவிட்டால் இன்று இதை தவிர்த்திருக்க முடியாதுஎன எண்ணத் தோன்றும். அன்று உண்மை தெரியாமல் தவித்த உள்ளம் இன்று அது வெறும் தந்திரம் என தெளிவடைகிறது. நாம் ஒரு நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறோம், காலம் தன் நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறது. அறியப்படாத உண்மையுமில்லை, வெளிவராத ரகசியமுமில்லை. அன்று காதோடு காதாக பேசியது, இன்று கூரை மீதிருந்து அறிவிக்கப்படுகிறது. நேற்று தீயாகி எனப்பட்டவன் இன்று துரோகம் வெளிப்பட்டு நிற்கிறது.
-
முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் : அமைச்சர் சந்திரசேகர்
நல்லவேளை சம்பந்தர் தப்பிவிட்டார். ம், இத்தனை சௌகரியங்களையும் அனுபவித்துக்கொண்டே நாட்டை கொள்ளையிட்டவர்கள் சும்மா விடுவார்களா? இல்லை ஓய்வூதியத்துக்கு முன்னாலேயே இரண்டு மடங்காக சூறையாடிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் ஓய்வுபெறும் வயதையும் நிர்ணயிக்க வேண்டும்.
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
இப்படி எத்தனை அக்கினிச்சூளையை தாண்டி வந்தது நம் இனம்! கம்பன் வீட்டுக்கைத்தறியும் கவி பாடுமாம். ஆனால் இங்கு ஒரு இனவழிப்பை சந்தித்த இனத்தின் பிரதிநிதி, ஜானாதிபதி சட்டத்தரணி, அதை நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். அந்த இனத்தின் புதைகுழி என்று அடையாளம் கண்ட பின்னும் முன் கொண்டு சென்று நிஞாயம் தேட திறமையற்ற, நடக்கின்ற அனிஞாயங்களை தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட திராணியற்ற, தனது சக உறுப்பினர்களை அதட்டவும் பயமுறுத்தவும் மட்டுமே பயன்படும் வக்கீல். எது நடக்கிறதோ இல்லையோ, அவர் எங்கு போனாலும் அணியும் கோட் சூட் ஆதாரம் அவர் ஒரு திறமையான சட்டத்தரணி என்று காட்டுவதற்கு. அரசியல்வாதியின் எடுபிடி, அரசியல்வாதி போல பேசுவதில்லையா? ஜனாதிபதியின் ஏவல், தன்னால் எதுவும் செய்ய முடியும் என பந்தா காட்ட முடியுமென்றால், ஓடி ஓடி வக்கீலை காக்க வக்காலத்து வாங்கும் கோசானுக்கு சட்டம் தெரிவதில் என்ன சிக்கல்?
-
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
ஏன் சிறியர் இவ்வளவு காலமும் இருந்த பெயர் தானே, அப்போ வராத பிரச்சனையா இனி வரப்போகிறது? எப்படியோ ஸ்ரீலங்கா பயணத்தை தொந்தரவு ஏதும் இல்லாமல் நன்றே கழித்துவிட்டீர்கள், அந்த வகையில் மகிழ்ச்சியே எனக்கு. வாடகை உயரும். ஏன், அதை விரிவாக்கம் செய்வதற்கு முன் விரிவாக்கம் செய்யும் நிறுவனத்தோடு குத்தகைக்காரர்கள் ஒப்பந்தம் ஏதும் எழுத முடியாதா? அதாவது ஏற்கெனவே அங்கு தொழில் புரிந்தவருக்கேமுன்னுரிமையென்று.
-
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல் : பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டார் நிலந்த ஜெயவர்தன
இந்த தொழிலுக்கே லாயக்கற்றவர்கள். இவர்களுக்கு பதவி உயர்வு வேறு கிடைத்திருக்கும் அப்போது. விசித்திரமான நாடும் அதன் சட்ட நீதி நிஞாயமும். இதில தங்களை நிஞாயப்படுத்தி மற்றவர்களை குற்றவாளியாக்குவதும் கண்டிப்பதும் அறிக்கை விடுவதும் கேலிக்குரியது. தங்களை புரிந்து கொள்ள முடியாத நிலை.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
புலிகளை தவறிழைக்க தூண்டினார்கள். ஊர்காவல் படை என்பது, கிழக்கில் தமிழ் முஸ்லீம் கலவரத்தை தூண்டுவதற்காக இராணுவப்பிரிவிலிருந்த ஒரு குழு. கிழக்கிலே தமிழர் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால், தமது அடாவடிகளை நடத்த முடியாது என்பதற்காக, அவர்களை திட்டமிட்டு எதிரிகளாக்கியது. அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்தார்கள், இதனால் புலிகளை தூண்டி முஸ்லீம் மக்களை தாக்க வைத்து, அந்த வெறுப்பை, பகைமையை கொழுந்து விட்டு எரிய பண்ணுவதற்காக, மிகுதி கொலைகளை முஸ்லீம் ஊர்காவற்படையே செய்து, புலிகள் மீது பழியைப்போட்டு வன்மத்தை வளர்த்தனர். அமைதியாக இருந்த கிழக்கில் ஊர்காவல் படை எதற்கு ஸ்தாபிக்கப்பட்டது? அவர்களால் ஏன் அந்த மக்களை காப்பாற்ற முடியவில்லை? முஸ்லீம் அரபு நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு இதை பயன்படுத்தியவர்கள், அதை ஏன் தடுக்க தவறினார்கள்? முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தமிழரிடம் இருந்து பறித்து தருவதாக கூறியே இத்தனை அனர்த்தங்களை அரங்கேற்றினார்கள். தூர நோக்கற்ற முஸ்லிம்கள், அற்ப வார்த்தையை நம்பி தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் அதை உணரும்போது இவர்களை தூக்கி விடுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். எமது சொந்த நிலங்களை பறிக்கிறார்கள், விகாரை அமைக்கிறார்கள். இவர்களுக்கு இது நடப்பதற்கு எத்தனை நேரமாகும்? எனது அதிகாரத்தை பாவித்து இதை சாதித்தேன் என்கிறார் ஹிஸ்புல்லா. நாளைக்கு இந்த அதிகாரம் வேறொருவர் கைமாறும். அதிகாரம் ஒன்றுமில்லை, தமிழரை அழிக்க உதவியதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம், அனுரா அரசு இதையும் விசாரிக்க வேண்டும், இதற்கு அனுமதியளித்தது யார், ஏன் என விசாரித்தால், அங்கும் ஒரு குடும்பமே சிக்கும். அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை பெற்றுக்கொடுத்த பெருமை ஹிஸ்புல்லாவை சாரும். அனுரா அமைதியான ஒரு நாட்டை உருவாக்க விரும்பினால், இவை எல்லாம் விசாரிக்கப்படவேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அல்லது குடியுரிமை பறிக்கப்படவேண்டும். எதிர் காலத்தில் இவர்கள் அரசியல் செய்யவோ, அரச தொழில் புரியவோ முடியாதவாறு சட்டமியற்ற வேண்டும், தடை விதிக்க வேண்டும்.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
எம்பியாக இருந்துமட்டும் என்னத்தை சாதித்தவராக்கும்? வரே வா அப்படி வழிக்கு என்று சொல்வார்கள். நேற்றுத்தான் சுமந்திரன், சாணக்கியன் இதை சொன்னால் விளைவு என்ன என்கிற மாதிரி கதை. இன்று இப்படி. சாணக்கியன் சிங்கள கட்சியிலிருந்து பதவிக்காக கட்சி தாவி இப்போ கிழக்கின் முதலமமைச்சர் பதவி கனவில், யாரிலும் நோகக்கூடாது என்று காத்திருக்கிறார். அன்று ஹிஸ்புல்லா சொன்னார், அதாவது கிழக்கில் முஸ்லீம், முதலமைச்சராக வந்தால் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள் என்றார், அதே இன்று, ரவுப் கக்கீம் சொல்கிறார். தமிழரசுக்கட்சிகளோடு பல விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறார்களாம், முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் என்றால் அது கிழக்கு மாகாணம் தானாம், அதை தாங்கள் காத்துக்கொள்ள வேண்டுமாம். அப்போ சாணக்கியன் என்ன செய்வாரென ஆரூடம் கூறியாச்சு. முதலில் சாணக்கியன் தமிழரசில் போட்டியிடும்போதே தூஷண பிக்கரை கூட்டி வந்து அப்பாவி மக்களை பயமுறுத்தி வாக்கு சேர்த்தவர். அப்பவே அடித்து சொன்னேன் சாணக்கியனின் தந்திரத்தை. அங்கே முஸ்லிம்கள் காகித ஆலையை ஆட்டையைப்போட கங்கணம் கட்டுகிறார்கள். சிறீநாத், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்க போராடுகிறார்கள். சாணக்கியன் கனவில் மிதக்கிறார். இருந்து பாருங்கள், சாணக்கியன் கிழக்கின் முதலமைச்சர் ஆனால், இருக்கும் தமிழரின் நிலங்களும் பறிக்கப்படும். அவர்களுக்கு தமிழரும் தேவையில்லை, நிலங்களும் தேவையில்லை, பதவி மட்டும் வேண்டும். அதற்காகவே சாணக்கியன், சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு நுழைந்தனர். சிங்கள மக்களோடு வாழ்வது அதிஷ்ட்டம் என்றவர், வடக்கு கிழக்கில் எனது உயிருக்கு ஆபத்து இராணுவம் மற்றும் அதிரடிப்படையின் பாதுகாப்பு வேணும் என்று சிங்களத்திடம் கேட்டு பெற்று விட்டு, வடக்கு கிழக்கிலே வாக்கு கேட்க்கும் வெட்கம் கெட்டவர், சிங்களத்திடம் எதிர்த்து கேள்வி கேட்க்கும் தைரியம் இருக்கா? சொன்னாரே, மன்னாரில் மனித புதை குழி தோண்டினார்கள், அப்போ நானும் அங்கிருந்தேன், அதன் பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். செம்மணி புதைகுழி வெளிவந்தவுடன் பேட்டி கொடுக்கிறார். ஏன் அவரால் அதை முன்கொண்டு செல்ல முடியவில்லை? இவர் சட்டத்தரணிதானே? தமிழரின் பிரதிநிதி என்று வேறு அதிகாரம் செலுத்துகிறார். அப்போ ஏன் அவரால் முடியவில்லை? நீங்களும் அப்பப்போ சுமந்திரனுக்கு எதிரும் புதிருமாக கருத்துக்களை பதிந்து நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நடிப்பு அவர்களை காப்பாற்றாது.
-
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
பெற்ற மகனும் கட்டிய மனைவியும் நடக்கப்போவது தெரியாமல் நிம்மதியாக தூங்க, பாதகன் சொல்லிக்கொள்ளாமலேயே பிரிந்து சென்றான். அவன் உடலை மறைத்த நயவஞ்சக சீடர், அவர் ஞானம் எய்திவிட்டார் என்கிற பொய்யுரைக்க அந்தப் பொய்யில் மதத்தை தோற்றுவித்து வயிறு வளர்த்தனர் அவர்தம் சீடர். அதன் உண்மையை புரிந்துகொண்ட சிங்களம் தன் பங்குக்கு புத்தனை வைத்து கொலை, கொள்ளையடிக்கிறது. புத்தன் தான் கடவுளல்ல, தான் ஒரு ஞானி என்பதை வெளிப்படுத்தாமல் மறைத்ததும் நயவஞ்சகமே!
-
விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? - அசேப எதிரிசிங்க
சிங்களவர்களின் அழிவுக்கும் காரணமான, அவர்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டியுங்கள், அவர்கள் மேலும் விசாரணையை கோருங்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக, செல்வாக்கிற்காக நாட்டு மக்களை பலி கொடுத்ததும் வளங்களை அழித்தும் சூறையாடிய, காலத்திற்கும் எங்களை எதிரிகளாக்கிய இனவாதிகளே காரணம். எங்களது, உங்களது இழப்பில், பகைமையில் குளிர் காய்ந்தது அவர்கள் மட்டுமே. அவர்கள் தண்டிக்கப்பட்டாலேயே இப்படியானதொரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். சிங்களவரை ஏமாற்றி போர் செய்வதும் பின்னர் அவர்களை வைத்து தப்புவதும் நிறுத்தப்பட வேண்டும். நீங்கள் ஒன்றும் நாட்டில் தேசியம் வளர வேண்டுமென்று இங்கு குரல் எழுப்பவில்லை, அப்படியிருந்திருந்தால்; எப்பவோ எழுப்பியிருப்பீர்கள். இப்போ உங்களுக்கு சன்மானம் தரப்பட்டிருக்கிறது, உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது, சிங்கள மக்கள் உண்மையை அறிந்து குரல் கொடுக்காமல் தடுப்பதற்கும் அவர்களை அதிலிருந்து திசை திருப்புவதற்கும். இப்போ மக்கள் உங்களை கேட்க வேண்டிய கேள்வி; இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தாய், இதுவரை உனக்கு இதுபற்றி தெரிந்திருக்க வில்லையா என்கிற கேள்வியே. இனவாதிகளின் செல்வாக்கு அழிந்து விட்டதால், காலம் கடந்து விட்டதால் நீங்கள் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள், இன்னும் எந்தெந்த பாம்பு எந்த புற்றிலிருந்து கிளம்பி வரப்போகிறதோ தெரியவில்லையே. உண்மை தானாகவே கிளம்பியிருக்கிறது, உண்மையை விழுங்கிய மண் வெளியே தள்ளுகிறது. போராடுங்கள், தலை குனிவது அவற்றை மறைக்க அவற்றுக்கு தடைபோட முயலும் நீங்களுந்தான்.
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஒருபுறம் செம்மணி புதைகுழி, மறுபுறம் புலம்பெயர்ந்தோரின் எழுச்சி, தன்னை விரட்டுகிறது என்பது சிங்களத்தின் கவலை, பயம். எத்தனை நாடுகளை சீரழித்து, அடிமைப்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொண்ட நாடுகள் இன்று மனிதாபிமானிகள். ஆனால் அடிமை, அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் வழியில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தாங்களும் செய்த கொடூரங்களை மறைக்க இப்படி கூச்சல் போடுவது வழமை. இலங்கை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஐ .நா .அமர்வுகளில் போது பல நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்து அறிக்கைகள் தாயாரித்தது. அதற்கு யாரும் சாதாரணப்பட்டவர்கள் உடன்படுவது இல்லை. சமூக ஊடகங்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், சட்ட விடயத்தை கையாண்டவர்கள், சட்டத்தரணிகள் போன்ற விடயம் தெரிந்தவர்களே. இலங்கை அரசுக்காக இவ்வாறான அறிக்கைகளை தயாரித்து அவர்களை காப்பாற்றி பாராட்டும் பெற வைத்திருக்கிறார்கள். அவர்களே இலங்கை அரசு செய்த அடூழியங்களை நிஞாயப்படுத்துகிறார்கள், கண்டும் காணாததுபோல் இருந்தார்கள், இதற்கு அவர்களுக்கு ஊதியமுமுண்டு.
-
விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? - அசேப எதிரிசிங்க
ம், செம்மணியை கண்டவுடன் ஆளாளுக்கு பதறியடித்துக்கொண்டு கிளம்புகிறான்கள். அவ்வளவு பயம். புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன் நடந்த இனப்படுகொலைகளையும் ஆராய வேண்டும். தமிழருடைய சம உரிமைகளை பறித்து, இனவன்முறை, ஆயுத காலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்களை முதலில் தண்டிப்போம். பின்னர் புலிகளை தண்டிப்போம். மக்களை, நிராயுத பாணிகளாக நின்றவர்களை, அஹிம்சை வழியில் போராடியவர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்தவர்கள், நீதியை சரியாக நடைமுறைப்படுத்த தெரியாதவர்கள் செய்த ஊழியாட்டம் இன்னும் அரசகதிரையில் பதவிகளோடு இருக்கிறது, அதற்கு உதவிகள், அவகாசம் வழங்குகிறது சர்வதேசம், மனித உரிமை நிறுவனங்கள். ஆனால் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகளாக்கி, தடைகளை ஏற்படுத்தி, சேர்ந்து அழித்துவிட்டு அந்த மக்களை ஆபத்தில் தள்ளிய ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாடுகளையும் தண்டியுங்கள் முடிந்தால். இவ்வளவு நாட்களும் இவற்றை கதைக்காமல் எங்கே போயிருந்தார்கள் இவர்களெல்லாம்? உண்மை மறைந்து விட்டதென நிம்மதியாக உறங்கபோயியிருப்பார்களோ? இவர்களிடம் ஏற்றுக்கொள்ளல், பொறுப்புக்கூறல் இல்லை. தம்மை மறைக்க பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவதிலேயே கண்ணாக இருக்கிறார்கள். நாடு எப்படி முன்னேறும்? அனுராவுக்கு வாக்குபோடடவர்களும் விரும்புவது, நாட்டில் சமாதானம், ஒற்றுமை, முன்னேற்றம். இல்லையென்றால்; இன்று மஹிந்தவோ, மைத்திரியோ, ரனிலோ தான் அரச கதிரையில் இருந்திருப்பார்கள், கோத்தாவும் விரட்டியடிக்கப் பட்டிருக்க மாட்டார். அதை புரிந்து பேசினால் நல்லது. மஹிந்தவே தான் இழைத்த குற்றத்திற்கு மின்சாரகதிரையே தனக்கு தண்டனை, அதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார். இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டியிருக்கு?