Everything posted by satan
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
போன வாரந்தான், இந்தியாவின் கால் கழுவுகிறார்கள், ஏதோ குடிக்கிறார்கள் என்று ஒருவர் அநாகரிகமாக வர்ணித்தார். இப்போ, உறவு சிறிதரனுக்கு முன் போய் இந்தியாவில் இறங்கி நின்று ஆதாரம் வெளியிடுகிறார். மாவையர் கூட்டத்துக்கு வருவதற்குமுன், அவரின் பதவியை பறிக்க அந்தரப்பட்ட சாணக்கியன் சுமந்திரன் கூட்டு, சிறிதரன் எங்கோ இருந்தார், நான் அவரோடு கதைக்கவுமில்லை, கட்சி எடுத்த முடிவை நான் அறிவித்தேன் என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் கொடுக்கும் சுமந்திரன், ஆதாரத்தை வெளியிட்டு எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிறார். பொய்யும் புரட்டும் பண்பாளர்களை ஒன்றும் பாதிக்காது. மாறாக தீயவர்கள் தாங்கள் மக்களின் உண்மையான தலைவர்கள் இல்லை, அதற்கு பின்னால் இருக்கும் அவர்களின் சுயநலத்தை திரும்ப திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்! சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும்.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
என்னது? அன்றே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் இருந்தாரா? ஐ .நா. பிரதிநிதி எப்போ அமெரிக்க தூதுவரானார்? சிலர் மற்றவரை முட்டாள்கள், தாங்கள் மேதாவிகள் என நினைத்து தங்கள் முட்டள்தனத்தை பகிரங்கப்படுத்துகிறது.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
என்னது? அப்பவே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்தாரா?
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
ஆமாம். அதன் காரணத்தை விளக்கினால், களத்தில பலருக்கு சௌகரியமாய், அவற்றை தெரிந்து வழக்கு. பிரச்சனை, நட்டஈடு என்று சிக்காமல் காரியத்தை ஆற்றலாம். அதிலும் விமானத்தில் என்றால் இன்னும் சிறப்பாய் பலர் முண்டியடித்து பயணசீட்டுக்கு பதிவர். பயணமும் இன்பமாய் இருக்கும், அனுபவமும் புதுமையாய் இருக்கும். இதை அக்குவேறு, ஆணிவேராய் விளக்குவதற்கு சிறியர், ஈழப்பிரியன் சரியான ஆட்கள் என்று நினைக்கிறன்.
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
உண்மைதான் சாமியார். எங்கேயாவது இயற்கை அழிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்தால், எங்கட சனம் வண்டிலிலை வெங்காயம், மிளகாய், அது இதென்று கொண்டுவந்து குவிச்சுப்போடும். காசு, உடை கொடுப்போர் சிலராகத்தான் இருப்பர். யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் போகும்போது இவற்றை கட்டியனுப்புவர். தாங்கள் உறவினர்களை சந்திக்கபோனாலும் இதே நிலைமைதான். ஞாபகம் வருதே....
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எங்கள் வீட்டில் இரண்டு மரங்கள் அப்பா கொண்டு வந்து வைத்தார். இவ்வளவு உயரமாக வருமென்று அப்போ நினைத்திருக்கவில்லை. ஒரு மரம் ஓரளவு உயரத்தில் பட்டுவிட்டது. ஊரிலுள்ளோர் அனைவரும் வந்து அதை மொட்டையடித்து விடுவார்கள், குளிர் காலத்தில் சுடு நீராவி பிடிப்பதற்காக. அப்பா அதை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இடப்பெயர்வின் பின் மீண்டும் வந்தபோது, அது நின்ற இடமே தெரியவில்லை, கவலையாக இருந்தது. நல்ல வேளை! அது இப்போ நின்றிருந்தால் முழு இடத்தையும் அடைத்திருந்திருக்கும்.
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
இப்போ, பல வீடுகளில் சாமிக்கு வைக்கவே பூ இல்லை. ஒவ்வொரு சமையல் செடி இளித்துக்கொண்டு நிக்குது.
-
தேவையானவை
நல்லவேளை! தக்க சமயத்தில் ஓடி வந்து நினைவூட்டியிருக்கிறார். இல்லையேன்றால் இந்த கலேபரத்தில் நிரந்தரமாகவே மறந்திருப்பியள் அவரை. பாவம், அப்பாவி மனுசி போல. அதுதான் அவ்வளவு இலகுவாக மறந்து விட்டார். இல்லையென்றால்; செய்தி கேட்ட உடனேயே, வேக வேகமாக எடுத்ததும் எடுக்காததுமாக ஓடி மறைந்திருப்பார்.
-
ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம்
இது வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் நிகழ்வுதானே!
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இல்லை, ஒத்த குண இயல்புடையவர்கள் அவ்வாறே இருப்பார்கள். அதிலும், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். எதிர்க்கருத்து வைக்க முடியாமல் ஒதுங்குவோர் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் உண்மையை ஏற்க மறுத்து, தான்பிடிச்ச முயலுக்கு மூன்று காலென்று காட்ட முயன்று, எந்தளவுக்கு எதிர்க்கருத்தாளரை வசை பாட முடியுமோ அந்தளவுக்கு பாடி, கேலி பண்ணி, மற்றவரின் கருத்துக்களை மூர்க்கத்தனமாக எதிர்ப்பவருடன் எந்தப்புத்திசாலியும் கருத்தாடி, தனது நேரத்தை வீணாக்கி, வாசிப்பவரை குழப்பமாக்கி, அவரோடு எங்களையும் ஒப்பிட வைக்க விரும்ப மாட்டார்கள் என்பதே யதார்த்தம்! இது, இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படித்தான். தானே ஒரு கருத்தை வைப்பார், அது பிழையென நிரூபிக்கப்படவுடன் உங்களையே தப்பு சொல்லி அடாவடி பண்ணுவார். இல்லை உங்களுக்கு பகிடியும் வெற்றியும் தெரியவில்லை என்று நழுவுவார். அதனாற்தான், பலதடவை நான் எச்சரிப்பது உண்டு. "நேரம் பொன்னானது." "ஒரு சொல் போதுமென்றால், இரு சொற்களை செலவு செய்யாதே, எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால், ஒரு சொல்லையும் விரயமாக்காதே." என்பது எவ்வளவு உண்மையானது என்பதை இங்கு அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
மனித மூளைக்கு வேலையுமில்லை, மதிப்புமில்லை. இது, ஒரு பரீட்சையில் பார்த்தெழுதுதல் போன்றது. கஸ்ரப்பட்டு படித்து, மீண்டும் உடலை வருத்தி உழைப்பவனுக்கு ஊதியம் குறைவு, கேள்வி அதிகம், மதிப்பும் சொல்லும்படி இல்லை பணி நிலையங்களில். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் எந்த கஸ்ரமும் இல்லாமல் பெற்று விடுகிறார்கள். இனி வருங்காலத்தில் பாடசாலைக்கு சென்று கஸ்ரப்பட்டு கல்வி கற்கும் தேவையும் வராது. அறிவு, தொழில் நுட்பம் வளர்வது முன்னேற்றமாக இருந்தாலும், உடலுழைப்பு இல்லாமை, அழிவு, களவு போன்ற சீர்கேடுகளையும் வளர்க்கிறது. வீட்டிலிருந்தபடியே அடுத்தவன் கஸ்ரப்பட்டு சேர்த்த செல்வத்தையெல்லாம் மிக கச்சிதமாக அவர்களின் சம்மதத்துடனேயே திருடி மறைந்து போகிறார்கள். நாங்கள் நினைப்பதையெல்லாம் வெளிப்படுத்திவிடும் தொழில் நுட்பம் வெகு விரைவில்.
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
அநேகமாக, மாரி காலத்தில் தோட்ட வயல்களெல்லாம் நீரில் மிதந்துவிடும். மேட்டுக்காணிகள், வீட்டுத்தோட்டங்களில் இருந்தே இவைகள் சந்தைக்கு எடுத்து வருவார்கள். இப்போ வீடுகளுக்குள் வீடு, அதைவிட பாரிய வெள்ளம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய நிலை. தோட்டக்காரர் சிலவேளைகளில் அதிக லாபம் எடுத்தாலும், பலவேளைகளில் பருவம் பிந்திய முந்திய மழை, வறட்சி அவர்களை நிலையான சந்தோஷத்தில் இருக்க விடுவதில்லை. இயற்கையால் அதிக அழிவுகளை சந்திப்பவர்கள் விவசாயிகளே!
-
தண்டனை அறிவிப்பை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்த ட்ரம்ப்
அப்போ, செய்தி உண்மைதான். இதுவே இலங்கையில் என்றால்; குற்றச்சாட்டு எல்லாம் மறைந்து விடும். சுனாமி பண முறைகேட்டு வழக்கு மஹிந்தவுக்கு எதிராக வந்தபோது ஜனாதிபதியாக போட்டியிட்டு வென்றார், தாக்கல் செய்த வழக்கு காணாமல் போய்விட்டது. அடுத்து, ஆயுத கொள்வனவில் முறைகேடு சம்பந்தமாக கோத்தாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள். அவர் ஜனாதிபதியானதும் அந்த வழக்கும் மாயமானது. கொள்ளை அடித்து வாக்கு வாங்க செலவழிக்கிறது, பின் மக்களை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்குகிறது. இதுகளையும் அநுர கவனிக்க வேண்டும். கொஞ்ச நாளா, எனக்கு உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்பு வேண்டும் என்று அலறினார், கூட இருந்தவர்களையும் தட்டிவிட்டார். பொன்சேகாவின் பேட்டியோடு எல்லாரும் அடங்கி விட்டார்கள்.
-
பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
ஜனாதிபதி சட்டத்தரணி என்றால்; ஏதோ பாண்டித்தியம் பெற்றதுபோல் புலுடா விடுவது போல் இதுவும் ஒன்று. சும்மாவே தனக்குள்தான் கட்சி என்பதுபோல், தொடக்க காலத்தில் இருந்து இருக்கும் வயதில் மூத்தவர்களை கட்டிப்போட நினைக்கும் சாணக்கியனுக்கு, இந்த ஒரு பதவிகாணும். மணி கட்டின மாதிரி துள்ளுவதற்கு .அவருக்கு அனுபவமோ, பக்குவமோ இல்லை. ஏதோ கொம்பு முளைச்சமாதிரி துள்ளுறார், கவுண்டு விழுந்தாலும் விழலாம். பதவி வரும்போது பணிவு வரவேண்டும். இது அதிகார மோகம் உச்சத்துக்கு ஏறி யாரோடு பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதையறியாமல் தான் வந்த பாதையை உணராமல் அறிக்கை விடுவார். அத்தைக்கு பவுசு வந்தா அர்த்தராத்திரியில் எழும்பி குடை பிடிக்குமாம். மக்கள் போட்ட பிச்சையில் வந்து நின்று கொண்டு, வடக்கையும் எங்களிடம் தாருங்கள் நாங்கள் திருத்துகிறோம் என்று அறிக்கை விட்டவரல்லோ. அப்போ, கிழக்கிலே ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் நிறைவாக இருக்கிறது. இப்போ, வடக்கிலதான் பிரச்சனை என்பது உண்மையை ஏற்றுக்கொள்ளாத தன்மை. அதிலிருந்து அவரது அறிவை புரிந்து கொள்ளுங்கள். துள்ளுற மாடு பொதி சுமக்காது.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அதற்கு முன்னாலேயே போட்டாயிற்று. பிரதமமந்திரி பதவி என்று பேட்டி கொடுத்ததை, யாரோ போட்டுக்கொடுத்து விட்டானுகள். பறந்து வந்தது அடுத்த அறிவிப்பு. அவருக்கு பதவியேதுமில்லை. கேவலம் என்னவென்றால், வடக்கின் வசந்தத்தோடு சேர்த்து சொன்னது. இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கருதுகின்றனர். பாவம் அவர்கள். ஒரு கட்சியின் யாப்பை பின்பற்றத்தெரியாதவரெல்லாம் சட்ட மேதையாம். அவர்களுக்கு சட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். சாம்பல் குளித்த நரி, ஒருநாள் மெத்த மழையில் மொத்தமாய் நனைந்து சாயம் வெளுக்காமலா போகும்? அதுவரை ஏமாற்றட்டும். ஏமாளிகள் இருக்கும்வரை, ஏமாற்றுபவரும் இருக்கத்தான் செய்வர்!
-
கற்பனைக் குதிரை – 75
சிவஞானம் யார் இதை சொல்வதற்கு? இந்தப் பதவிக்காக சுமந்திரனை தூற்றியவரும், அது கிடைத்தவுடன் வாயை அடக்கியவருந்தான் சிவஞானம்! தான் அந்தபதவிக்கு பொருத்தமானவரா என்று கூட யோசிக்க முடியவில்லை அவரால். தலைவர் பதவியாகட்டும் செயலாளர் பதவியாகட்டும் பெயர் இவர்களுடையது, அதிகாரம் சுமந்திரனின் கையில்த்தான் இருக்கும். அவர்களுக்கு, அது பரவாயில்லை, தங்கள் பெயர் இருந்தால் போதுமென்றிருப்பவர்கள். அண்மையில் கூட சுமந்திரன் சொன்னார். கட்சியில் சிறிதரன் பதவியை பற்றி ஊடகவியலாளர் கேள்வி கேட்டபோது, நான் சிறிதரனுக்கு தூரவே இருந்தேன், கட்சியில் முடிவெடுத்தார்கள், அதை வெளியிட அவர்களுக்கு முதுகெலும்பில்லை அதை சொல்வதற்கு, நான் பேச்சாளராக இருப்பதால் நான் அறிவித்தேன் என்றார். சரி, முதுகெலும்புள்ளவருக்கு, சரி பிழை தெரியாதா அல்லது அது பிழை என்று சொல்ல அவருக்கு முதுகெலும்பு இல்லையா? அப்போ அந்தப் பதவியிலிருந்து ஏன் இன்னும் விலக மாட்டேனென அடம்பிடிக்கிறார்? அவருக்கு தெரியும். கட்சிக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு எதிராக அன்று சம்பந்தனோ, வேறெவரோ நடவடிக்கை எடுத்திருந்தால்; சுமந்திரன் என்றொருவரை யாரும் நினைத்துப்பார்த்துக்கூட இருக்க மாட்டார் இன்று, அதே நேரம் தான் செய்தது கட்சிக்கு எதிராக வேண்டுமென்றே செயற்பட்டேன் என்பதும் தெரியும். அதனால் தனக்கு எதிராக வரக்கூடியவர்களை, தனது தன்னிச்சையான செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை விரட்டி விட வேண்டும் என்கிற ஒரே கொள்கையில் செயற்படுகிறார். அதே நேரம், சிங்களம் காலால் இட்ட பணியை, தான் தலையில் வைத்து கொண்டாடிய படியாலே எந்த அரசு ஆட்சிக்கு வந்தபோதும் தனக்கென்று ஒரு ஆசனத்தை, மரியாதையை, கட்சியை கடந்து பெற முடிந்தது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். ஆகவேதான் தனக்கு பிரதமமந்திரி பதவியேற்க அழைப்பு வருமென அறிவித்து காத்திருந்தார். அது கைகூடவில்லையாயினும் மனந்தளராமல் குறுக்கு வழிகளை கையாண்டு கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறார். இந்த அனுபவத்தில், தன்னை கேள்வி கேட்கத்துணியாத, விமர்ச்சிக்காத, தான் இட்ட கட்டளையை தலையால் செய்யக்கூடிய, பதவி மட்டும் போதுமென்று அலைகிற கூட்டத்தை தன்னோடு சேர்த்துக்கொண்டால், தனது பதவிக்கு ஆபத்தில்லை என நினைக்கிறார். அப்படி ஏதும் வந்தாலும் கூட, அவர்களுக்கு முடிவு எடுக்கவோ, அறிவிக்கவோ முதுகெலும்பில்லை, நான் பேச்சாளராக இருப்பதால் அவர்களின் முடிவை அறிவித்தேன் என்று தப்பிக்கொள்வார். ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களின் நல்மதிப்பை பெற்றிருந்தது உண்மை. காரணம் பெயர், வேறு தெரிவுகளும் மக்களுக்கு இருக்கவில்லை. இருபத்திரண்டு ஆசனங்களை பெற்ற கட்சி இன்று, எத்தனை பெற்றிருக்கிறது? விழுந்தவன் மீசையில மண் ஒட்டேல என்பதுபோல், நாம் தான் வெற்றி என்கிறார்கள்,தம் தனிப்பட்ட நிராகரிப்பை மறைத்து. ஒரு காலத்தில் வேறு கட்சியில் தோற்றவர்கள் தமிழரசில் சேர்ந்து வெற்றியீட்டி பின் வெளியேறி தோற்ற வரலாறுமுண்டு. வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டால்; எந்த அடாவடியும் பண்ணி விட்டு பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. இன்று அப்படியில்லை. வீட்டுக்குள் புகுந்திருப்பதெல்லாம் கரு நாகங்கள் என்பது மக்களுக்கு தெரியும். இன்று மக்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றன. இளம் செயற்திறனுள்ள உறுப்பினர்கள் இருக்கிறார்கள், தங்களோடு நின்று, தங்களுக்காக, பிரச்சனைகளுக்காக பேசுபவர்களை தெரிந்துகொள்கிறார்கள். இனிமேல் தமிழரசு என்பது அவர்களுக்கு தேவையில்லை. அதனால் தாம் பட்ட கஸ்ரங்கள், இழப்புகள், தனிமை, கையறுநிலை, துரோகம் எல்லாம் அனுபவித்து விட்டார்கள். அது இனிமேல் தமக்கு உதவாது என்பதும் தெரியும். மக்கள் பலபேர் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். அதற்கு காரணம்; சுயநலமிக்க, முன்னோக்கு இல்லாமல், பதவிக்கு அலையும் நபர்கள். ஆகவே இன்னொரு தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை. இதே சாணக்கியன், இதே தேர்தல் தொகுதியில், சிங்கள கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின் இங்கு உள்ளீர்க்கப்பட்டு, முதல் தேர்தலில் தூஷணப்பிக்கரை அழைத்து, வலிந்து ஒரு நாடகம் நடத்தி, அப்பாவி மக்களை பயங்காட்டி வென்றார். அந்த காணொளியை பாத்தாலே அப்பட்டமாக தெரிகிறது. இந்தமுறை இவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கான விசாரணை இவரது வெற்றியை நிர்ணயித்தது. அதற்கு அனுரா வேண்டுமென்றே இதை ஆரம்பித்ததும் காரணம். இல்லையென்றால், சந்திரகாந்தன் சிறையிலிருக்கும்போதே வெற்றியடைய வைக்கப்பட்டவர். அதை மறந்து சாணக்கியன் ஆட வெளிக்கிட்டால், தமிழரசுக்கட்சியையே மக்கள் நிராகரிப்பார்கள். எதற்கும் அடக்கி வாசிப்பது நல்லது. நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான், மற்றவர்களை அடக்கவும், விமர்சிக்கவும் தொடங்கி எல்லாவற்றுக்கும் தானே காரணம் என்று அடுத்த சுமந்திரனாக அடக்கியாள வெளிக்கிட்டால், வெகு சீக்கிரம் பாடம் படிப்பார்.
-
யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்
தானே சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரம் தயாரித்து, தானே மணல் அகழ்ந்திருக்கிறார் என்றால்; அவர் எவ்வளவு பெரிய கேடி. ஆமா, இவ்வளவும் நடந்துகொண்டிருக்கு, இதற்குரிய அதிகாரிகள் இதனை கண்டுபிடிக்காமல் தூங்கிக்கொண்டிருந்தார்களா? அவர்களும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும். புலிகளின் விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர் தொடங்கி, இன்றுவரை சட்ட விரோத பனைமரம் மற்றும் ஏனைய விலை உயர்ந்த மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்றன. அதை யாரும் தட்டிக்கேட்கவில்லை, தடுக்கவுமில்லை. நேற்று, ஒருவர் திடீரென தோன்றி, ஏதோ இன்றுதான் பனைமரம் சட்ட விரோதமாக தறிப்பது போலவும், அதுவும் அர்ச்சுனா தன்னை கேள்வி கேட்டதாலேயே, அது நடந்தது, தன்னால் தடுக்க முடியாமல் போனது போலவும் ஒரு காணொளி வெளியிட்டு அர்ச்சுனாவை சாடியிருக்கிறார். இதில தான் புலிகளின் காலம் தொடக்கம் வேலை செய்ததாகவும், தனது திறமையினால் கட்சி அபிமானம் இல்லாமல் சேவை செய்வதாகவும், அடிக்கொரு தடவை அந்த காணொளியில் அர்ச்சுனாவை கேலி பண்ணி போட்டிருக்கிறார். இளம், துடிப்பான பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டவுடன் இவர்களுக்கு பயம் வந்து, அவர்களை துரத்தியடித்துவிட்டால், இஷ்டம் போல் ஆடலாமென கனவு காண்கிறார்கள். வேலை செய்ய முடியாவிட்டால், விலகி மற்றவர்களுக்கு இடம் விடலாம். ஆனால் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலக்க இவர்களால் முடியாது. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டுமென்றே மக்கள் இவர்களை தெரிந்தெடுத்து, சமூகத்தில் நடக்கும்அநீதிகளை, அதிகாரிகளின் முறைகேடான செயல்களை, பாராமுகத்தை முறையிட்டுள்ளார்கள். அவர்கள் ஒன்றும் தானாக உங்களை குறை சொல்லவில்லை. மக்கள் கொடுத்த முறைபாட்டையே அவர்கள் கேட்கிறார்கள். காரணம்; அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதனாலேயே இன்று பலகாலம் அரங்கேறிய சட்ட விரோத மண் அகழ்வை கண்டு பிடித்து விசாரணை செய்ய முடிந்தது. இதுவும் சட்ட விரோதம். அருச்சுனா வருவதற்கு முதல், சட்ட விரோத பனை மரம் தறித்தலை நீங்கள் அனுமதித்திருந்தீர்கள், அல்லது உங்கள் பொறுப்பை சரியாக செய்யவில்லை. கேள்வி கேட்ட அருச்சுனாவை பழிவாங்க துடிக்கிறீர்கள். சட்ட விரோதிகள், அதை அனுமதித்தவர்கள், இப்போ காணொளிகளோடு தம்மை பரிசுத்தப்படுத்த அலைகிறார்கள்.
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
அதுமட்டுமில்லை சாமியார், சாதாரணமாக இந்த கால பருவத்தில் மரக்கறி, வெங்காயம், மிளகாய் பரவலாக விலை உயர்ந்துதான் இருக்கும். போன வருடம் இதே போன்று பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா விலைபோனது. மழைக்காலம், மேட்டுநில உற்பத்திகளே வரும். இந்த முறை அளவுக்கதிகமான மழை, காற்று, மேட்டுநில உற்பத்திகளும் பாதிப்படைந்து உள்ளது. இப்போ விவசாயம் செய்வது கொஞ்சம் கஸ்ரம். பசளை, கூலி, எரிபொருள் கொடுத்து செய்வது கட்டுப்படியாவதில்லை. மக்கள் விவசாயம் செய்ய பின்னடிப்பதற்கு இதுவும் காரணிகள். முன்பெல்லாம் உயர் படிப்பு படிக்க முடியாதவர்கள் விவசாயத்தில் இறங்கி விடுவார்கள். இப்போ வெளிநாடு போக வேணும். அந்தரத்தில் அந்நிய தேசத்தில் அந்தரிகிறார்கள்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அடி ஆத்தி, இதுக்குத்தானா நாங்கள் இவ்வளவு அலறித்துடிக்கிறோம்? ஐயாவுக்கு குசும்பு கூடிப்போச்சு. கால நேரந்தெரியாமல் விளையாடத்துடிக்கிறார். விமானம் குண்டு போட்டு அழிச்ச இடத்துக்கு முதலாளாய் ஓடினவராச்சே. தழைத்தோங்கின மரங்களை பருவகாலம் மாறமுதல் கத்தரித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டாம்? மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை கொடுத்து, உடனடியாக அவர்களை வெளியேற்றும், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். என்ன அரசாங்கங்களோ? தேவையில்லாதவற்றுக்கு செலவழிப்பார்கள், மக்களின் பாதுகாப்பை கவனத்திற் கொள்ளவில்லை. பிறகு இயற்கையை குற்றம் சொல்லுறது!
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
ம், பாராளுமன்றத்தில் புத்த மதத்திற்கு முன்னுரிமை! ஆமா சாமி, தமிழருக்கெதிரான சட்டம் யாப்பு! ஆமா சாமி, எல்லாம் அமுலாக்கியபின் சர்வதேசம் தலையிடவேண்டும்! தீர்வை பெற்றுத்தரவேண்டும்! கோசம். அப்போதே, தமது எதிர்ப்பை காட்டி வெளிநடப்பு செய்யவில்லை, ஜெனிவாவில் போய் நம் பிரச்சனையை எடுத்துச்சொல்ல மாட்டோம், அதற்கும் அமெரிக்கா போக வேண்டும். அப்போ மக்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? ஏன் மக்களிடம் வாக்களிக்கும்படி கேட்க்கிறார்கள்?
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
இவரது பாடல்களை நான் என்னை மறந்து ரசிப்பதுண்டு. அதிலும், எனக்கு மிகவும் பிடித்த இவரது பாடல் கடன்மீன்கள் படத்தில் பாடிய "தாலாட்டுதே வானம்." இவருக்கு இவ்வளவு வயதென்று நான் அறிந்திருக்கவில்லை. இவரது புகைப்படத்தை இன்றுதான் காண முடிந்தது. அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.
-
சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் கோரிக்கை!
ஆமா! இது எவ்வளவு காலமாக, சட்ட விரோதமாக நடைபெறுகிறது. மக்கள் போராடி, முறையிட்டு களைத்துப்போய், இளங்குமரனை நாடி, அவர் ஓடி பிடித்தபின், இப்பதான் நித்திரையிலிருந்து எழுந்து வந்ததுபோல் அறிக்கை விடுகிறார்கள். தொழிலதிபர் பதினான்கு வருடங்களாக இந்த தொழிலை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்போ, இப்போதான் அகப்பட்டிருக்கிறார். இல்லையென்றால் நமக்கென்ன என்று எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். எல்லாத்துக்கும் ஒருவர் வந்து கேள்விகேட்கவேண்டும். இளங்குமரனின் நடவடிக்கைகளை அடக்கி, கலைத்துவிட்டு தாம் தம் தொழிலை தொடர்வதற்காகவே அவரொருவர் இருவரை கூட்டிவந்து, அவர்கள் நிஞாயமாக அகழ்கிறார்கள், நான் அவர்களிடம் இருந்து பெற்று தொழில் செய்கிறேன் என்று சோடித்து, மாட்டி விட்டிருக்கிறார். அதில் அதிகாரிகளையும், அவர்கள் வழங்கிய அனுமதிகளையும் ஆதாரமாக காட்டியிருக்கிறார். இனி எல்லோரும் பதில் சொல்லவேண்டியவர்களாவர். போலீஸ் மா அதிபர் சொல்கிறார், இது பொலிஸாரின் வேலை இல்லையாம். கடற்தொழில் அமைச்சர் சொல்லுறார் இளங்குமரன் பொலிஸாருக்கு அறிவித்திருக்கலாமென. பொறுத்திருந்து பாப்போம். யார் பொறுப்பு, யார் பிரச்சனை, யார் மாட்டுறார் என்று.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மருதங்கேணியரை சொல்லுறியளோ? கள உறவுகள் எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இந்தப்படத்தை பாத்தபோது நான் நினைச்சேன், அனுராவுக்கு சாரதிவேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு வந்திருக்கிறார், வழியில் இவரையும் சந்தித்திருப்பார் என்று. பிரதமர்..... பிரதமர்!