Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. நாளைக்கே, மது போதையில் வந்து செய்வதெல்லாம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்கிறீர்கள். மது போதை, அதில் எங்கே, என்ன வேண்டுமென தெரிந்திருகிறது அவருக்கு. அவர் நல்லவர், அவர் அருந்திய மதுதான் குற்றவாளி.
  2. முன்னர், மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று கூறிக்கொண்டு வந்த எந்த ஆளுநரோ, நம்ம தலைவர்களோ சொல்லாத உணர்வு பூர்வமான வார்த்தை. இவரை விரட்டாமல், மக்களுக்கு சேவை செய்ய விட்டால் சரி.
  3. இந்தப்பிரதேச விடுவிப்புக்கு பலர், தாமே காரணமென உரிமை கோரியிருந்தனரே? யாரோ செய்யும் செயல்களுக்கு தாம் உரிமை கோருவது, தாம் செய்யும் தவறுகளுக்கு மற்றவரை குற்றம் சுமத்துவது கையாலாகாதவரின் செயல்! ஒருவருடைய பாதிப்புகளையும் வலிகளையும் அதே பாதிப்புகளை அனுபவித்தவராலேயே முழுமையாக அடையாளம் கண்டு தீர்வை பெற முடியும். வெறும் பதவிகளுக்காக வருபவர்கள் அதன் பின்னாலேயே அலைவர். இனிவருங்காலத்தில் இப்படியானவர்களை மக்கள் இனங்கண்டு அரசியலுக்கு கொண்டுவரவேண்டும்.
  4. இது பாலின பிரச்சனையல்ல. சுயநலம், அதிகார புலம், பணப்பறிப்பு, ஒத்துவாழ விரும்பாமை,பேராசை, பொறாமை, பழிவாங்குதல்,அடுத்தவர் சுதந்திரத்தை பறிப்பது போன்ற பல வரையறைக்கு அப்பாற்பட்ட காரணங்கள். இதில் பாலின ஆதரவு, எதிர்ப்பு என்பது சிக்கித்தவிக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது குற்றம் ஏதுமறியா இவர்களின் குழந்தைகளே. ஏன் இவர்கள் இந்தக்குழந்தைகளை உலகிற்கு கொண்டுவருகிறார்கள்? திருமணம் செய்யாமலே இருக்கலாமே? தங்களது அகங்காரத்தோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டு.
  5. என்ன சிறியர்? கொஞ்ச நாளாக எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை உங்களால், ஏதாவது மனச்சிக்கலா?
  6. வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தனிச்சந்திப்புகளை எப்படி நடத்துவதென பயிற்சியளிக்கப்படுகிறது. மல்லுக்கு நிற்பவர்கள் போலிருக்கிறது இருவரையும் பார்க்க.
  7. இவரும் போதாக்குறைக்கு அனுராவுக்கு, அண்மையில் எச்சரிக்கை விட்டவர். காரணம் இதுதானோ? எல்லோரும் ஆதரவு தாறோம் எண்டு அனுராவின் காலில விழப்போகினம். அது சரி, இந்த தகவலை ஏன் இவ்வளவு காலமும் வெளியிடாமல் இருந்தவை? இவையள் அடிச்ச பணத்தை மீளப்பெற்று, அனுபவிச்ச சொகுசுக்குரிய பணத்தை வசூலிச்சு, வரப்பிரசாதங்களை குறைச்சாலே நாட்டுக்கடனை அடைத்து, முன்னேற்றவும் போதுமானது. எல்லாரும் சேர்ந்த கள்ளர். சிறை காணுமா இவர்களை அடைக்க? அவர்கள் பணம் அடிச்சு கும்மாளம் போட, மக்கள் தெருவில் லைனில் காத்து இருக்கிறார்கள்.
  8. ஒருவரை ஒருவர் காப்பாற்ற லஞ்சம்! ஆட்சி மாறும், தாம் நிராகரிக்கப்படுவோமென்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கவில்லை. மாறி மாறி நாம்தானே வரப்போகிறோம், ஒன்றுக்குள் ஒன்றாகிவிடுவோம் என நினைத்திருப்பார்கள். அதென்ன ரணில் இப்படி அனுராவுக்கு சாபமிடுகிறாரேயென யோசித்தேன், இங்கு இருக்கு பிரச்சனை. இங்கு யாரோ சொன்னார்கள், ரணில் ஊழல் செய்யாதவர் என்று. லஞ்சம் கொடுத்திருக்கிறாரே, எதற்கு? அதுவும் ஊழல், சட்ட விரோதமான செயல்தான். ஊழல் வேறு, லஞ்சம் வேறு, சட்ட விரோதம் வேறு என்றில்லை, எல்லாம் ஒன்றுதான். சட்டத்தை மீறும் செயல். மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு விளக்கம் கொடுத்து முடியேலை, கையோடு அடுத்த பிரச்சனை. இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்? எல்லோரும் இனவாதத்தை கையிலெடுத்தது ஏனென இப்போ விளங்குகிறது. பணம் இருந்தாற்தானே கொடுப்பதற்கு? எல்லாம் வழிச்சு, துடைச்சு, எடுத்து, கொடுத்தாயிற்று. ஆமா.... இந்த ஜனாதிபதிகள் ஏன் இவ்வாறு செய்தார்கள்? அப்படியெனில் இவர்கள் கொடுத்ததற்கு மேலாக எடுத்திருப்பார்களோ? இவர்கள், அரசியலில் திறமையும் அனுபவமும் உள்ளவர்களாம். சொந்த வீட்டுக்குள்ளேயே களவெடுப்பவர்கள், எத்தனை காவல் போட்டாலும், கமரா பூட்டினாலும் சொந்த வீட்டுக்கள்ளரை எப்படி கைது செய்வது? ஒவ்வொருக்கா விளக்கம் கொடுக்காமல், எல்லாவற்றுக்கும் ஒன்றாக சேர்த்து கொடுப்பது நல்லது. அனுராவின் ஆட்சி முழுவதும் இந்த கள்ளரை பிடிப்பதிலேயே முடியப்போகிறது, நீதிமன்றமும் மக்களின் வழக்குகளை கையாள முடியாது, வெள்ளை வேட்டிக்கள்ளரை விசாரிக்கவே நேரம் காணாது.
  9. இது அவர்களது இரத்தத்தில் ஊறிய குணமாக இருக்கலாம். தமது நாட்டிலேயே சிறு சிறு குற்றங்களுக்கெல்லாம் கையை துண்டிப்பது, காலை வெட்டுவது, தலையை கொய்வது. வீட்டுப்பழக்கந்தான் போகிற இடத்திலும் வரும்.
  10. என்னசொல்லி ஆசி வழங்கியிருப்பார்கள்? அதன் பலன் இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். இவர்கள் முன்னையவர்களுக்கும் இவ்வாறுதானே செய்தார்கள்? ஆசி பெறப்போகிறார்களோ, இவர்களை குளிர்விக்க போகிறார்களோ?
  11. அவர்களை உலகமெல்லாம் இழுத்து விட்டது அமெரிக்காதான்!
  12. இதைத்தான் சொல்லுறது, ஒருவருக்காவது தெரிவித்து வைத்திருக்க வேண்டுமென்று!
  13. நீங்கள் சொன்னபின் இந்த பழமொழியைத்தான் நினைத்தேன். இவர், புதுதும்புத்தடியை தூக்கி அடுத்த வீட்டையல்லோ கூட்டினவர். அது தும்புத்தடியின் பயன்பாட்டு காலத்தை பொறுத்து தூக்கியெறியும்போது தெரியும், கூட்டி துடைச்சுதா இல்லையா என்பது. இவர் அடுத்த தேர்தலில் வெல்லுற வழியை பாக்க வேணும், நெடுகிலும் வாயால வடை சுட்டுக் கொண்டு பாராளுமன்றம் போகேலாது. இப்போ ஒரு புது யுக்தி; தான் முதலில் தேசியபட்டியலின் மூலம் பாராளுமன்றம் போனாராம், அப்போ கட்சியில் சொன்னவர்களாம், நீங்கள் எப்போதும் தேசியப்பட்டியல் உறுப்பினராகவே இருந்து விடுங்கள் என்று. அதற்கு தான் மறுப்பு தெரிவித்து தேர்தலில் நின்று மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றம் போவேன் என்று சொல்லி தேர்தலில் நின்று வென்று பாராளுமன்றம் தெரிவானாராம். அந்த தும்புத்தடி இப்போ தூக்கியெறியப்பட்டுவிட்டது. இப்போ தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிமேல் ஆசை வந்துவிட்டது இவருக்கு. பாராளுமன்றம் போக என்னென்ன திட்டம் எல்லாம் போடுறார் பதவியாசை இல்லாத ஞானி. சவால் விடுகிறார், குழப்பத்தை உருவாக்குகிறார், எச்சரிக்கிறார். இவ்வளவுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவர்.
  14. இது சரியான கருத்து, சிங்கள அரசியல் வாதிகளும் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றனர். உண்மையான சமூகத்தை நேசிக்கும் மக்களின் பிரதிநிதி, இதைத்தான் சொல்லவேண்டும், செய்ய வேண்டும். அதைவிட்டு, பட்டி தொட்டியெல்லாம் மைக் பிடிச்சு கூவக்கூடாது பதவிவிலகுங்கோ பதவிவிலகுங்கோ என்று. அதை சொல்லவேண்டியது அவர்களை தெரிந்தெடுத்த மக்களே. இவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். ஏன் நிராகரித்தார்கள் என்று யோசித்து திருந்துவதை விடுத்து, தான் ஏதோ மக்களை வழிநடாத்துகிறவர் மாதிரி உளறிக்கொண்டு திரியிறார்.
  15. சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
  16. நாங்கள் முன்பே கூறியதுதான். சிவஞானத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரோ. பதவிக்காக எந்தப்பக்கமும் இழுபடும் தன்மையானவர்கள். வேலியில போன ஓணான்களை பிடித்து, அவர்களின் பின்புலம்அறியாமல், வீட்டுக்குள்ள சேர்த்த மாவையரால, வீடு இரண்டாகி கலேபரமாயிருக்கு. இளையவர்கள், சட்டம் நுணுக்கம் தெரிந்தவர்கள், உதவியாக இருக்கும் என்று நினைத்திருப்பார். அவரோ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தெரியாமல், எதுக்கெடுத்தாலும் கோட்டு வாசலில் போய் நிக்கிறார்கள். அப்போ கட்சி பிரச்சனையை சுமுகமாக தீர்க்கத்தெரியாதவர், நீதிமன்ற பிரச்சனையை எப்படி கையாளுவார்? அரைகுறையால் இருந்ததையும் கெடுத்து விட்டதுதான் மிஞ்சியது. இந்த திறமையில் மோடி "உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்." என்று அனுராவுக்கு கூறியது கேவலமாம். இருந்தாலும், சுமந்திரன் தந்திரமாய் பாராளுமன்றம் போனால், ரொம்ப மூக்குடைபடுவார். அவரது திட்டம், தமிழ்தேசியக்கட்சியை பிரித்து, தமிழரசுக்கட்சியை உடைத்து, தமிழரை சிங்களத்துக்கு அடிமையாக்குவது. அதை அவர் செவ்வனே செய்ய சில நாசகாரிகளை தெரிந்தெடுத்து வைத்திருக்கிறார், இன்னும் கொண்டுவருவார். இவர் ஆட்டம் நீடித்தால்; அடுத்த தேர்தலில் மக்கள் தமிழரசுக்கட்சியை துடக்கு கழித்து விடுவார்கள்.
  17. நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடப்போகிறேன் என்று அன்று அறிக்கை விட்டார், இன்று அடக்கி வாசிக்கிறார். அவர் இவரை நேர்மையற்றவர் என்கிறார், இவரோ அவரை சாடுகிறார். அதை விட வேறு பலரும் தம்மை இராணுவம் எனக்காட்டி அதிலும் தமது சம்பளத்தை பிடித்துக்கொண்டதாக கூறுகின்றனர். கிழக்கிலே விசாரணை ஆரம்பிக்க, இவர்க்கு வேற்குது போலிருக்கே!
  18. அனுரா, ஆரம்பத்திலேயே வைச்சார் பாருங்கள் குட்டு. சஜித்துக்கு வாக்கு கேட்டவர், பதவி அனுரா குடுக்க வேணும்? முதலமைச்சர் கனவும் இருக்கு இரண்டு பேருக்கு.
  19. அதுதான். மக்களின் பிரதிநிதிகள், ஒருவரை ஒருவர் பொறுத்து போகத்தெரியாது, மதிக்க தெரியாது, கொள்கைகளுக்கு அமைவாக நடப்பது கிடையாது, ஒற்றுமையாக அமைதியாக செயற்படத்தெரியாது. சின்னப்பிள்ளைகள் மாதிரி கோள் சொல்வது, அடம்பிடிப்பது, ம்..... என்றால் கோட்டுக்கு போவது. இவர்கள் எப்படி மக்களை வழிநடத்தப்போகிறார்கள்? சாதாரண மக்கள் தங்கள் நீதிமன்ற விடயங்களுக்காக காத்திருக்கிறார்கள், இவர்களோ காலத்தை, பணத்தை, சக்தியை விரையமாக்கிக்கொண்டு கடமைகளை செய்யாது குழுச்சண்டை, தகுதிக்கு மீறிய அதிகாரம். மற்றைய கட்சிகளில் அப்படியில்லையே. முன்பெல்லாம் தமிழரசுக்கட்சியின் ஒற்றுமையை பாராட்டுவார்கள். இப்போ இவர்கள் செய்வதெல்லாம் கேலிக்கூத்து. கூத்தாடியள்!
  20. சிவநேசதுரை சந்திரகாந்தனை நோக்கி கையை காண்பித்திருப்பாரோ? அதுபற்றி தனக்கு தெரிந்தவற்றை சொன்னேன் என்கிறார். சின்ன மீன்களை பிடித்தால், பெரிய மீன் தானாகவே வந்து மாட்டும்.
  21. அதன் பின்னும் நடந்தது, இன்னும் தொடருது. இவர் ஏன் அதை நிறுத்தவில்லை? அப்போ, இவர் அந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை தீர்க்கவில்லை. எல்லோருக்கும் அனுரமேல் காதல். எப்போ கூப்பிடுவார், குசலம் விசாரிக்கலாமென தவியாய் தவிக்கிறார்கள். தாங்கள் கடந்த எஜமானருடன் கூடிகூத்தடித்துவிட்டு இப்போ எல்லாம் அனுரா தலையில். அவரொருத்தர் அனுரா சொன்னதை செய்யேல்லை என்கிறார். நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினை, ஊழல், பொருளாதாரப்பிரச்சனை தலைதூக்க முடியவில்லை. முன்பிருந்தவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் ஆட்சி முடிந்து போகும்போதோ அல்லது மீண்டும் ஆட்சியேறியபோதோ யாரும் கேள்வி கேட்க்காமல் நிபந்தனையில்லா ஒத்துழைப்பு கொடுத்து, நாட்டை அழித்தார்கள் சுருட்டினார்கள். அனுர வந்தது வரேல்லை சவால் விடுகிறார்கள், எச்சரிக்கிறார்கள், காலக்கெடு விதிக்கிறார்கள்,குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுக்கு அனுரா மசியாவிட்டால், பாராட்டிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று, ஒன்று சேர அழைப்பெடுப்பார்கள். இதெல்லாம் இவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாமல் தோற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தம்மை பெரியவர் என காட்டும் மாயை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.