Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அதேதான்! போனதடவை உள்ளூராட்சி தேர்தல் என அறிவிக்கப்பட்டபோது, தமிழரசு தனித்து போட்டியிடும், மற்றயவர்கள் தாம் போட்டியிட்டு தேர்தலின் பின் ஒன்று சேரலாம் என சட்டாம்பி பத்திரிகைகளுக்கு வஞ்கமாக அறிவித்தார். ஆனால் கூட்டுக்கட்சிகளுக்கு அறிவிக்காதது ஏன்? உண்மையிலேயே பிற கட்சிகளுக்கு விழும் வாக்கை தடுப்பதாக இந்த முடிவு எடுத்திருந்தால், அதை மற்றவர்களுக்கு விளக்கி கூறுவதில் என்ன தப்பு இருக்கிறது? தமிழரசுக்கு அதிக வாக்கு விழும், மற்றய கட்சிகளை கழற்றி விடவே இந்த முடிவு எடுத்தார் சுமந்திரன். இப்போ அவர்களை சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். தங்கள் முன்னைய முடிவை தவறாக புரிந்து கொண்டார்களாம் என இந்த சிவஞானம் கருத்து சொல்கிறார். பிரச்சாரங்களில் தங்களை விமர்ச்சிக்க கூடாதாம். தலைமை கட்சிக்கு கட்டுப்பட்டு செயற்படவேண்டுமாம். எதற்கு? மற்றயவர்களை தேர்தலின் போது விமர்ச்சித்தவர் யார், சுமந்திரன்தானே? இப்போ மற்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இவர்கள் யார்? நிற்க, கஜேந்திரன், செல்வத்தையும் சிறிதரனையும் சந்தித்து ஒன்று சேர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். கஜேந்திரனோடு சேர்வதையோ அல்லது கஜேந்திரனை இணைப்பதையோ சுமந்திரன் விரும்ப மாட்டார். காரணம் தன்னை விட திறமையானவர் வந்தால் தான் சர்வாதிகாரம் பண்ண முடியாது. அதே நேரம் சிறிதரனையும் ஓரங்கட்ட வேண்டும். எல்லோரும் இணைந்தால், தாங்கள் தனித்து விடப்படுவோம் என்பது நன்றாகத்தெரியும். ஆகவே அவர்களை தவிர்த்து மற்றவர்களை இணைக்க முயற்சிக்கிறார். சிவஞானம் எந்த முடிவும் எடுக்க வல்லமையற்றவர், சுமந்திரனின் ஊதுகுழல். அவர் சொல்வதை, தான் சொல்வதுபோல் வாயசைக்கிறார். பத்திரிகையாளர் கேட்ட பல கேள்விகளுக்கு மறுமொழி இப்போ கூற முடியாது என்றுவிட்டார். டக்கிலஸை சேர்க்கிற எண்ணமுமுண்டு. இந்த கூட்டு ஊர்போய் சேராது. ஆகவே இவர்களோடு சேர்வதை பலமுறை யோசனை செய்யவும். சுமந்திரன், சிவஞானம், சத்தியலிங்கம் உள்ள கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.
  2. ஹி, ஹி. அதொன்றுமில்லை, சுமந்திரன் தமிழர்களால் ஒதுக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு போய் விட்டார். அதை தூக்கி நிறுத்த எடுக்கப்படும் முயற்சி. அப்படி தமிழருக்கு என்ன நன்மை செய்துவிட்டார் சுமந்திரன் மக்கள் அவரை தங்கள் பிரதிநிதியாக தெரிவதற்கு? அதற்கான கூலியை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரோ போக மாட்டேனென அடம்பிடித்து இனத்தை இரண்டு படுத்துகிறார். அவர் இனத்துக்கு எதிராக என்ன துரோகம் செய்கிறாரென அவருக்கும், நன்மை பெறுவோருக்கும் தெரியும். அதனால் அவர்கள் தாம் செய்வதை மற்றவர்மேல் பழிபோட்டு நிஞாயப்படுத்துகின்றனர். அவர் முறையிடவில்லையாம், பாதுகாப்பு கொடுத்தார்களாம். அவுஸ்ரேலியாவில் உள்ள ஒருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளாராம், ஆனால் சுமந்து அங்கே எந்த பாதுகாப்புமில்லாமல் போய் வந்திருக்கிறார். அப்போ இந்த புலனாய்வு அவரை போகவேண்டாமென்று தடுக்கவில்லை. நாட்டிலே இனத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார், கூட்டங்களில் கலந்துகொள்கிறார், தடுக்கவில்லை. ஏன் முஸ்லீம் படுகொலையாளிகள் சுட்டுக்கொன்ற போலீசாரை, புலிகள் சுட்டுக்கொன்றதாக அப்பாவி இளைஞரை கைது செய்தது புலனாய்வு. உயிர்த்த ஞாயிறு குண்டுச்சம்பவம் நடைபெறப்போகிறது என பல எச்சரிப்புகள் வந்தபோதும் தடுக்க முடியாத வகையறா புலனாய்வு, சுமந்திரனை பாதுகாக்கிறதாம். ஸீரோவான சுமந்திரனை கீரோவாக்க முயற்சிக்கிறார் பாவம் ஒருவர். சிங்களத்துக்கு கழுவ வேண்டும், அதற்கு தமிழர் வாக்களிக்க வேண்டும். அவர் வந்த வேலை, கொடுக்கப்பட்ட வேலை முடிந்து விட்டது, இனி ஓய்வு பெற வேண்டியவர் அவர். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால்: சிங்களவருக்கு பயம், வெறுப்பு வருகிறதாம் என்று சொல்லும் இவர், தமிழரசை தனது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கிறார்?
  3. இன்றைக்கு சி. வி. கே. ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் ,தமிழ் தேசியம் என்று சொல்லும் கட்சிகள் உள்ளூராட்சித்தேர்தலில் மற்றைய கட்சிகளை விமர்ச்சிக்காமல் தமிழ்த் தலைமைக்கு கட்டுப்பட்டு பிரச்சாரம் செய்து போட்டியிட்டு அதன்பின் ஒன்று சேர்வது பற்றி பேசலாமாம். இவர் ஒரு பூம் பூம். சுமந்திரன் சொல்வதை காவிக்கொண்டு திரிபவர். ஊடகவியளாரால் கேட்கப் பட்ட பல கேள்விகளுக்கு இப்போ பதில் சொல்ல முடியாதென மறுத்துவிட்டார். நன்றாக தெரியும், தமக்கு தோல்வி. அதனால சேர்வோம், தேர்தலுக்குப்பின், ஆனால் மற்றைய கட்சிகளை விமர்ச்சிக்க கூடாதாம். தாங்கள் விமர்ச்சிக்கலாம். தாங்கள் வென்றபின் மற்றைய கட்சிகளை அடக்கியாள்வதற்கு திட்டம். இவர்கள் வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளிகளோடு கூட்டுச்சேரட்டும். மக்கள் தமிழரசை கைவிட்டு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களோடு கூட்டு சேர்ந்தால்; சேரும் கட்சிகளுக்கும் அதுவே நிலைமை. இவர்களை விட்டு, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்தால், அதுவே மக்களின் விருப்புமாகும். அவர்கள் ஒட்டுக்குழுக்களோடு சேரும் திட்டமுமுள்ளது. ஆகவே அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு ஒதுங்குவது, ஒதுக்குவதே இனத்துக்கு நன்மை பயக்கும். "துஷ்டரை கண்டால் தூர விலகு." என்பது பழமொழி.
  4. அனுர நாட்டில் அமைதியாக ஆட்சி நடத்த வேண்டுமானால்; மஹிந்த கோஷ்டி, அதன் தளபதிகளை சர்வதேச பாதுகாப்பு நீதிமன்றத்திடம் கையளிக்க வேண்டும். இல்லையேல் இவரது ஆட்சிக்கு ஆப்புத்தான்.
  5. சரி, பொறுத்திருந்து பாப்போம். இவ்வளவு காலமும் இல்லாத குழு மோதல் ஏன் இப்போ? போலீசார் ஏன் அவர்களை அவசரப்பட்டு சுட்டுக்கொல்கின்றனர்? நீதிமன்றம் கொண்டு சென்று விசாரணை செய்வதற்கு முதல், போலீசாரே ஏதோ ஒரு வழமையான குற்றச்சாட்டை உருவாக்கி தண்டனையளிப்பது ஏன்?
  6. அனுரா அரசு, கடந்த அரசுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்தகாலத்தில் ஆயுததாரிகள் கலாச்சாரம், அவர்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உருவாக்கம், தண்டனை விலக்கு, எல்லாம் அளவுக்கு மிஞ்சி அளித்து, தமது அரசை கட்டியெழுப்பி, தம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து நாட்டை சூறையாடினார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேக்க யாருக்கும் முடியவில்லை. ஆயுத கலாச்சாரம், அச்சுறுத்தல், காட்டுச்சட்டங்கள், வடக்கில் பயங்கரவாதம் மீளெழுகிறது எனும் பிரச்சாரத்தின் மூலம் பிரச்னைகளை திசைதிருப்பல். இப்போ, அனுராவின் ஆட்சி மாற்றத்திற்கு தமிழரின் ஆதரவு, எல்லோரும் சமம் எனும் அவரின் கூற்று, கடந்த ஆட்சியாளரை கதிகலங்க வைத்துள்ளது. தமது அரசியல் மூலதனம் எனும் இனப்பிரச்சனை ஒழிக்கப்பட்டால்; தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் தமது ஊழல்கள் வெளிவந்தால் நிரந்தர சிறை அல்லது குடியுரிமை பறிப்பு நிகழலாம். பாதாள உலகத்தை வளர்த்து, போதைப்பொருள், வன்முறை கலாச்சாரத்தால் பயனடைந்தவர்கள், அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்படப்போகிறார்கள். அதனால் சாட்சிகளை அழித்தல், அரசாங்கத்தின்மீது பழிபோடல், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கல், இனக்கலவரத்தை ஏற்படுத்தல், ஜே .வி. பி .யை சாட்டி தாங்கள் அரங்கேற்றிய தமிழருக்கெதிரான கொடுமைகளை நேரடியாக அரசாங்கத்தின் தலையில் கட்டுதல். போன்றவற்றின் மூலம் அரசை கலைப்பது, ஆட்சியை கைப்பற்றுவது. முடிந்தால் அனுராவையே கொலை செய்வது போன்றன அரங்கேற ஒத்திகை நடக்கிறது. நாட்டில் அநேக ஆயுதப்படைகள் கடந்த ஆட்சியாளருக்கே விசுவாசமானவர்கள். காரணம்: அதிக சலுகைகள், லஞ்சம், ஊழல், தண்டனையிலிருந்து விடுதலை, விலக்களிப்புகள் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் எஜமானரையே ஆட்சிக்கு அமர்த்த விரும்புவார்கள். அனுர, சட்டங்களை கடுமைப்படுத்த வேண்டும், இராணுவம் போலீசை கண்காணிக்க வேண்டும். விசேடமாக கோத்தாவின் நன்மதிப்பைப்பெற்ற சவேந்திர சில்வா போன்ற தளபதிகள். மஹிந்த கோஷ்ட்டியின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படவேண்டும். எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தால் ஒரு சில மாதங்களில் இவற்றை அடக்கி சாதகமான நாட்டை உருவாக்கலாம். விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் அஞ்சினால், ஜனாதிபதி பதவி பறிபோவதுடன் கொலை செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம். கடந்த கால அரசுகளுக்கு கைகொடுக்க இந்தியா வந்தது. அனுராவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே.
  7. "நெல்லுக்கிறைத்த நீர் கசிந்துருகி புல்லுக்கும் அங்கே பாய்ந்தது." மனிதாபிமானம், இப்படியான சிக்கல்களை உருவாக்குகிறது. இவர்கள் எங்கே போனாலும் திருந்த மாட்டார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள், வடக்கில் ஆமி போலீசோடு முள்ளிவாய்க்கால் பேரழிவு நிறைவடையும் வரை நின்று சண்டித்தனம், சமூக சீரழிவு, களவு, சுகம் அனுபவித்தவர்கள் இன்று கலியாணம் என்கிற பெயரிலும், வேறு வழிகளிலும் கனடாவில் உள்ளனர். அதற்காக எல்லோரும் அப்படியானவர்கள் என்று நான் முத்திரை குத்தவில்லை. எத்தனையோ நல்ல உள்ளங்கள், தங்கள் வீடுகளை ஏழைகளுக்கு குடியிருப்பதற்கோ, சொந்தமாகவோ கொடுக்கிறார்கள். ஏழைப்பிள்ளைகளை பொறுப்பெடுத்து படிப்பிக்கிறார்கள். தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீடு பராமரிப்பதற்காக மாதாந்த வருமானமாக பணம் அனுப்புகிறர்கள். ஆனால் சில அற்பங்கள் தங்களை பிரபல்யப்படுத்த இப்படியான இழி வேலைகளை செய்து தங்களை முதன்மைப்படுத்துகிறார்கள். ஒரு முசுறு கடிக்க கூட்டோடு நசுக்கப்படுவது இயல்பு.
  8. வெளிநாட்டுப்பானம், உள்நாட்டுக்காரரை அப்படி செய்ய வைக்குதோ என்னவோ? எதுக்கு குடி வாங்கிக்கொடுக்கிறார்கள்? ஏதாவது பயனுள்ள, உள்ளளவும் நினைக்கத்தக்க பரிசை கொடுக்கலாமே? இவர்களால், அவர்கள் குடிகாரராகி, வீணான பிரச்சனைகளில் மாட்டி விடுகிறார்கள்.
  9. ம் ..... அவர்கள் இருந்த காலத்தில், அவர்களை அழிக்கிறோமென சொல்லி, முப்பது ஆண்டுகளும், பலகோடி ரூபாக்களும், பல நாடுகளின் உதவி, ஆலோசனைகளும் தேவைப்பட்டன. அவர்களை அழித்துவிட்டோமென விழா கொண்டாடி, இல்லாதவர்களுக்கு தடை விதிக்கிறார்களாம்.
  10. அவர்களை விட அவர்களது பணம் பேசுகிறது. அரச கருவிகளும் அவர்கள் பக்கம். வித்தியா வழக்கிலும் போலீசாரே குற்றவாளிகளுக்கு உதவினர். இவர்களின் துணிவிலே இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், அதிலும் கொலை மிரட்டல் விடுகிறார்கள். தாங்கள் தங்கள் பணத்தினால் தப்பி விடுவோம் என்று சவால் வேறு விடுகிறார்கள். பாப்போம் எங்கே போய் முடிகிறது என்று? எப்படியும் ஒருநாள் சிக்கத்தான் போகிறார்கள்!
  11. சுமந்திரன், சி. வி .கே. சிவஞானம் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் வரை அது நடைபெற வாய்ப்பேயில்லை. அவர்களுக்கு, யாராவது திறமையானவர்கள், சட்டம், அரச மொழி தெரிந்தவர்கள் வந்தால்; ஒவ்வாமை, பயம் கவ்விக்கொள்ளும். நிறை குடம் தழம்பாது, குறை குடம் எப்போதும் தழம்பிக்கொண்டேயிருக்கும். தமிழரசுக்கட்சியை அழிக்க வந்தவர், ஓரளவு அழித்தும் விட்டார். நீங்கள் தமிழரசை தனியே தள்ளி விட்டிட்டு வேறு அரசை தெரிந்தெடுங்கள்.
  12. ம் ..... நம்பிற்றோம்! இது உங்களின் வழமையான பாணி. முன்பு தமிழருக்கு எழுதிய வசனம், இப்போ மஹிந்தவின் விசுவாசிகளுக்கு எழுதி, சாட்சிகளை அழியுங்கள். நாட்டை குண்டுகளால் அழித்து, அரசை பிடித்து ஊழல்களை மறைத்தவர்கள், புதிதாக யோசிக்க தோன்றவில்லை. நீதிமன்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து, நாமல் முந்திக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். இப்போ என்னடா வென்றால், நாட்டை பொறுப்பேற்க தான் தயாராம். இதை வைத்தே இவரை விசாரிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆதாரம். போலீசாரிடம் இல்லாத கைக்குண்டா என்ன? குறித்த போலீசாரை விசாரணை செய்ய வேண்டும்!
  13. நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள், எப்போ நாட்டுக்கு வந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்கிற விபரம் எதுவும் எனக்கு தெரியாது. அதை நான் கேட்கவுமில்லை. சிலர் நாட்டுக்கு வருகை தந்து போடும் அலங்கோலங்களை எழுதினேன். அதற்கு உங்களுக்கு கோபம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. சிலர் இங்கு வந்து செய்யும் கூத்துக்களை பார்த்தால், அவர்களால் சிலர் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்தால், இவர்களை ஏன் கனடா அரசு அடிக்கடி நாட்டுக்கு வர அனுமதியளிக்கிறது என்று தோன்றுகிறது? அங்கே சும்மா கொடுக்கும் பணத்தை கொண்டுவந்து இங்கு கொழுத்தாடு பிடிக்குதுகள். கனடா போவதற்கு முன்னும் அவர்கள் அப்படித்தான். அது அவர்களின் பிறவிக்குணம். வருடக்கணக்கில் வந்து வேலை வெட்டி இல்லாமல் பிரச்சனை கொடுக்கிறார்கள் என்றால்; அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்? காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு?
  14. நாட்டில ஒரு குழப்பம், அதிகரித்த துப்பாக்கிச்சூடுகள் களை கட்டப் போகின்றன. இனவாதத்தையும், ஊழலையும் பெருக்கி அதில் சுகம் கண்ட அரசியல் வியாதிகள் சிறை செல்லும் நிலைமை வரும்போது, நாட்டில் அமைதியை குழப்பி, தங்களை காட்டிக்கொடுக்கக் கூடியவர்களை கொலை செய்து, சாட்சிகளை அழிக்கவும், மக்களை அரசுக்கெதிராக கிளப்பவும், போலீசார், இராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் குற்றவாளிகள், தாங்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை அடையாளம் காட்ட போலீசாரை அழைத்துச்சென்ற போது, குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து போலீசரை தாக்க முற்பட்ட வேளை, பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் குற்றவாளிகள் உயிர் இழந்துள்ளனர் என்கிற கதைகள் வெளிவரப்போகின்றன. இராணுவ ஆட்சிக்கும் முயற்சிக்கலாம். தமிழருக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட கொலைகள், இயற்றிய சட்டங்கள் இப்போ அவர்களுக்கெதிராகவே திரும்பப்போகின்றன. முந்துகிறவன் பிழைப்பான். மஹிந்த கோஷ்டியோடு ஒட்டிக்கொண்டுதிரிந்தவர்கள் தங்களை மஹிந்தவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளட்டும். விமல் வீரவன்சவின் பாதுகாப்பும் சந்தேகமே.
  15. கனடா??? பெரும்பாலும் கனடாவில் இருந்து வருபவர்கள் ஊரிலும் சரி, அரசியலிலும் சரி அதிகமாக சிக்கலை தோற்றுவிப்பவர்கள். ஊரில் நடக்கும் அடாவடிகளையும், சொல்லும் தெனாவட்டான கதைகளையும் வைத்துச் சொல்கிறேன். போலீசார் இவர்களின் கைக்கூலிகள். நாங்கள் செய்வதை செய்துவிட்டு கனடாவிற்கு போய் விடுவோம், எங்களை யாரும் ஒன்றும் பண்ண முடியாதென சவால் வேறு விடுகிறார்கள். கனடா அரசாங்கம் இவர்கள் மேல் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள், ஏன் அடிக்கடி செல்கிறார்கள், தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். இது மனித உரிமை மீறல் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் நாட்டுக்கு வந்து, ஏழைகளுக்கு மனஉளைச்சலையும் அலைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அங்கே கஸ்ரப்பட்டு உழைப்பவர்களாக தெரியவில்லை.
  16. சத்தியமூர்த்தி, சி. வி. கே. சிவஞானம் இன்னும் சிலர், சுமந்திரன் எதை சொல்கிறாரோ அதற்கே தலையாட்டுபவர்கள். அவர்களுக்கென்று ஒரு இலட்சியம் கிடையாது, இந்தப் பதவி தருகிறேன் என்றால், தலையாலும் நடப்பார்கள். இல்லை மீண்டும் பதவியை பறித்தாலும் தலையை ஆட்டுவார்கள். பாராளுமன்றத்தேர்தலின் போது, பதவிக்காக அலைபவர்கள் என்று சிலரை விமர்ச்சித்தார்கள், அதிலும் களத்தில் ஒருபடி மேலே போய், நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலைபவர்கள் என்றார்கள். இப்போ, முன்னெப்போதும் இல்லாத பதவிகளை உருவாக்கி, இறுக்கிப்பிடித்திருப்பவர் யார்? சுத்துமாத்து பண்ணி பாராளுமன்றம் போகத்துடிப்பது யார்? இவர் முன்பு பாராளுமன்றம் போய் என்னத்தை சாதித்தார்? தன்னைவிட யாராவது நல்லது செய்து விடுவார்களோ, தனது சுத்து மாத்து வெளிவந்து விடுமோ என அஞ்சுகிறார். சரி, சத்தியலிங்கம் தனது சுகயீனத்துக்கு மருத்துவ சான்றிதழ் கொடுத்தாரா? விடுப்புக்கு விண்ணப்பித்தாரா? செயலாளர் பதவியை வகிக்க முடியாதவர் எப்படி மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்? கட்சியிலிருந்து விலகுவது மக்களுக்கு நல்லது, விலக வேண்டும்! சும்மா கட்சிக்குள்ளிருந்து குழி பறிப்பு, பிரித்தாளுதல் செய்யாமல். அது இருக்க, ஏதோ மாவையில் மரியாதை வைத்திருந்ததுபோல், இந்த சிவஞானம் மூக்கால் அழுதார். ஆனால் கடந்த வருடங்களில் இவர் அளித்த பல நேர்காணலில். மாவை அப்படி செய்தார், இப்படி செய்தார், எனக்கு அறிவிக்கவில்லை, நான் போகவில்லை, கேட்கவில்லை என்று புறணி பாடியவர், அவருக்கே ஆப்பு இறுக்கினார். இங்கு, மாவையர் எல்லோரையும் அனுசரித்து போய் கட்சியின் ஒருமைப்பாட்டை காத்தவர், எல்லோரின் விமர்சனத்தையும் அவதூறுகளையும் தாங்கிக்கொண்டவர். கட்சி இரண்டுபடக்கூடாதென்று எல்லாவற்றையும் சகித்தார், ஏளனப்படுத்தப்பட்டார். கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில், அவரை பகிரங்கமாக சுமந்திரன் விமர்சித்தபோதும் வாயே திறக்கவில்லை சுமந்திரனுக்கு எதிராக. மீண்டும் அவரை சமாதானப்படுத்தும் விதமாக சுமந்திரன் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்விலும் கலந்து கொண்டு ஒற்றுமையை காட்டினார். சிவஞானத்துக்கு வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, அறிவுமில்லை, பக்குவமுமில்லை. பதவி கொடுத்தால் போற்றுவார், இல்லையென்றால் தூற்றுவார் அவ்வளவுதான் அவரிடமுள்ள அறிவு. இதுகளை வைத்துக்கொண்டு உரிமை பெறுவதென்பது முடியுமா? "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது."
  17. அது மானஸ்தர்களுக்குத்தான் பொருந்தும். அது இருக்க, மக்கள் விரும்பாத இடத்து தான் பாராளுமன்றம் போகப்போவதில்லை என்று சொன்ன சத்தியவான், வெகுவிரைவில் பாராளுமன்றம் போகப்போகிறார். எதற்கு? அனுராவிற்கு ஆலோசனை வழங்க. ஆனால் யார் இவரை மதிக்கப்போகிறார்கள்? ஏற்கெனவே அனுராவோடு சேர்ந்துபடம் எடுத்தால் பதவி கிடைக்காது என்று அடித்துக்கூறிவிட்டார்கள். இப்போ தந்திரமாக பூந்தால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? நேரடியாகவே சொல்வார்கள், நீங்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அவர்களுக்கு பின்னால் திரிந்தீர்கள் என்று. அப்போதும் இந்த மனிதனுக்கு ரோசம் வராது கண்டியளோ. இவர்களும் இவர்களின் கொள்கைகளும் பதவிகளும். நாங்கள் எப்பவோ சொன்னது யாரும் காதில வாங்கவில்லை. இப்போ அப்படியே நிறைவேறுகிறது.
  18. இவர் அவரை பதில் தலைவராக்க, அவர் இவரை பொதுச்செயலாளராக்க, ஒருவரை ஒருவர் புகழ சரியாக இருக்கும். ஆனால் மக்கள் இவர்களை மதிக்கவோ, தெரிந்தெடுக்கவோ போவதில்லை. தங்களுக்குள் தாங்களே பதவிகளை உருவாக்கி பகிர்ந்து மகிழட்டும்.
  19. சுமந்திரனோடு சேர்ந்து கூத்தடித்ததால் சாணக்கியனுக்கும் அதே நிலை.
  20. அனுர அரசுக்கு தமிழரின் ஆதரவு என்பது, எந்த சிங்கள தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் தமிழரை அரவணைக்கவும் அவர்களுக்கு இயலாத காரியம். இரு இனத்தையும் பரம எதிரிகளாக வைத்திருக்குமட்டும் தங்கள் அரசியலுக்கு பாதகமில்லையென்றே நினைத்திருந்தனர். அனுரவோ தமிழர் தன்னை ஆதரிப்பது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இங்கே சவாலாகப்போவது இந்த விகாரை விவகாரம். இங்கே அனுரவின் திறமை வெளிப்படுமானால் சிங்கள மக்களின் எதிர்ப்பை ஊதுவார்கள். அதையும் கடந்து செய்ய முடியும் அனுரவால் ஆனால், அவரும் முயற்சிப்பது போல் தெரிகிறது. அதை நிறைவேற்ற முடியாவிடில் சிங்களம் அனுரவையும் தமிழர் வழங்கிய ஆதரவையும் ஏளனம் செய்யும். அவரை செய்யவும் விடமாட்டார்கள், தடைகளை ஏற்படுத்தி தடுக்கவே செய்வார்கள். தாங்கள் தீர்க்காத பிரச்சனையை யாரும் தீர்க்கக்கூடாது, தடைகளை ஏற்படுத்துவது. அப்போ யார்தான் தீர்ப்பது? யாருக்கும் துணிவு இல்லை. மக்களால் முடியும். இவர்கள் கலவரங்களை ஏற்படுத்த முனையும்போது, எதிர்த்து நிற்கவேண்டும். மக்கள் ஓரளவு சிந்திக்கிறார்கள். ஏற்கெனவே கஜேந்திரன் குமாரின் வீட்டை முற்றுகையை ஏற்படுத்தவும், தையிட்டிக்கு பெருமெடுப்பில் மக்களை திரட்டி வர முயற்சித்தும் பயனளிக்கவில்லை. ஊழையிட்டு விட்டு அடங்கி விட்டார்கள். இனி அப்படி முயற்சிக்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பல ஊழல் மோசடிக்காரரே இதன் பின்னால் உள்ளனர். அவர்களில் ஒருவரை விகாரை பிரச்சனையில் கைது செய்து அவரது ஊழலை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் போதும், மற்றவர்கள் தாங்களாகவே பொறியில் தலைவைக்க விரும்பாமல் விலகுவர்.
  21. ஒருதடவையாவது இவர் தனது அரசியல் பதவிக்காலத்தை அமைதியாக, முழுமையாகவே கழிக்கவில்லையே, அது ஏன்? கணக்கன் கணக்கறிவானாம் தன் கணக்கை தானறியானாம். வெறும் சொல் மட்டுந்தான், அதிலிருந்து வெளிவர வகை தெரியாது. அப்படியேதும் அசம்பாவத்தில் இவர் ஜனாதிபதியானாற்தானுண்டு.
  22. ஆமா, சட்டப்படி, தார்மீகப்படி, கொள்கைப்படி, நடைபெற்ற போட்டியில் தெரிவு செய்யப்பட்ட தலைவரை ஏற்காமல் நீதிமன்ற வாசற்படி ஏறியதற்கும் நீங்கள் கூறும் இவர்கள்தான் காரணம். கட்சியில் நடைபெற்ற இழுபறிகள், குழிபறிப்புகள் வேறு யாருக்கும் தெரியாது, அவிழ்த்து விடுங்கோ. ஆமா..... நீங்கள் வந்து போனபின்தான் அவர் விழுந்தார், அதற்கு முதல் நீங்கள் சொல்வதுபோல் சுகவீனமுற்றிருந்ததாக செய்தி வரவில்லையே. அவர் சுகவீனமுற்றிருந்தால் வைத்தியசாலையிலல்லவா அனுமதிக்கப்பட்டிருப்பார்? ஒரு மரணச்சடங்கிற்கு ஏன் போகிறோம்? எங்கள்அனுதாபத்தையும், ஆதரவையும், ஆறுதலையும் உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு தெரிவிக்கவே. ஆனால் சம்பந்தப்பட்டவரின் மரணத்திற்கு காரணமானவர்களால் அதை கொடுக்க, தெரிவிக்க முடியுமா? அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் அங்கு சமூகமளிக்கும்போது, உறவுகளின் மனநிலை எப்படியிருக்கும்? இவர்கள் அவரை நோகடிக்காமல் இருந்திருந்தால்; தமது உறவு இன்று எங்களோடு இருந்திருப்பாரே, என்கிற வேதனை வராதா? அவரை, நிஞாயத்துக்கு மாறாக பதவியிலிருந்து இறக்கி அவமானப்படுத்தியவர்கள் உள்ளத்தில், உண்மையான மரியாதை, கவலை இருக்குமா? போலிக்கு போய் தம்மை முதன்மைப்படுத்தவா? உறவுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட எவருமே பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வீட்டில் இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் தெரிந்திருக்கும். அதுதான் பாத்தோமே, மரணச்சடங்கில் சி. வி .கே. எப்படி காட்சியளித்தாரென்று. முகத்தில் வெறுப்பு, கவலையில்லை. மறுபக்கம் முகத்தை திருப்பி கையால மறைத்துக்கொண்டிருந்தாரே, இதற்கு போகாமலே இருந்திருக்கலாம்.
  23. இந்த உளறுவாய் சொல்லுது, கட்டி முடிந்த விகாரையை இடி இடி என்று சொல்கிறீர்கள், இப்படி சிங்களவர் சொன்னால் நீங்கள் இடிப்பீர்களா? என்கிறார். இவருக்கு வரலாறு தெரியாவிட்டால், வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். தம்புள்ள நகரில் முப்பது ஆண்டு பழமை வாய்ந்த, கோவில் காணியில், கட்டிய பத்திரகாளி அம்மன் ஆலயம் இடிக்கப்பட்டதே? முதலில், பொதுமக்களின் காணியில் விகாரை கட்டவில்லை, மக்கள் யாரும் தங்கள் காணி என்று பிக்குவிடம் வந்து கேட்கவில்லை என்கிறார். தங்கள் ஆலயத்தில் வழிபாடு செய்யசென்றவர்களை வழிபட விடாமல் துரத்தவில்லையா? நீதிமன்றம் அது மக்களின் காணி, அங்கே கட்டிடப்பணிகள் ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என்று தடையுத்தரவு போட்டும் ஏன் கட்டினார்கள்? மக்கள் தங்கள் காணியை விடுவிக்கும்படி போராடவில்லையா? பிறகு சொல்கிறார் மக்கள் காணியில் தான் கட்டியிருக்கிறது, எட்டு ஏக்கர் எல்லாம் இல்லை, ஒரு சின்ன விகாரை கட்டியிருக்கிறார்களாம். சின்னனோ, பெரிதோ அடுத்தவர் காணியில் இவர்களுக்கு எதற்கு விகாரை? அதற்கு மீள் காணியோ, நஷ்ட்ட ஈடோ பெற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்கிறார். பௌத்த மக்கள் யாரும் இல்லாத இடத்தில விகாரை எதற்கு? அந்த மக்களிடம் அனுமதி பெற்றார்களா? கட்டிட அனுமதி பெற்றா கட்டினார்கள்? அல்லது அந்த மக்களை தங்கள் சொந்த நிலங்களில் வாழ விட்டார்களா? துரத்தியது யார்? கலவரம் வெடிக்குமாம். ஏன் தமிழர் காணாத கலவரங்களா? முடிந்தால் தொடங்கிபார்க்கட்டும்? இப்படியே சொல்லிச்சொல்லி நிலம் பிடிப்பார்கள், அதற்கு ஒரு காரணம் இவர் சொல்வார். ஆமிக்காரர் நல்லவர்களாம். மக்களின் காணிகளில் முகாங்களும், கொட்டல்களும் கட்டி சொந்த மக்களை குடியிருக்க விடாமல் அகதிகளாக அல்லல் பட விட்டது யார்? அப்போ இத்தனை லட்சம் மக்களை கொன்றவர்கள் யார்? ஏலியன்களா? இவரை இதற்காகவா மக்கள் தெரிந்தார்கள்? பௌத்த சம்மேளனம் அறிக்கை விட்டிருக்கிறது, இதோடு சேர்த்து பதினெட்டு ஏக்கர் என நினைக்கிறன் அது தமக்கு வேண்டுமாம். எதற்கு? அப்படியொன்று இல்லவேயில்லை என்கிறார் இந்த விவரம் கெட்டது. ஆமி ஏன் இன்னும் பொதுமக்கள் காணிகளை தடுத்து அடைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இவரிடம் பதில் இருக்கிறதா? தனது காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பாராம், வேண்டுகிறவர்கள் அதில் விகாரை கட்டினாலென்ன, மசூதி கட்டினாலென்ன, கோவில் கட்டினாலென்ன அதுபற்றி தனக்கு கவலையில்லையாம். ஆம். பணம் முக்கியம் என்பவருக்கு எதுபற்றியும் கவலையில்லை. ஆனால் இங்கு மக்கள் விகாரைக்கு காணி விக்கவில்லை. அடாத்தாக பிடித்திருக்கிறார்கள். இனக்கலவரம் யாரால் ஏன் வந்தது என்பதற்கு விளக்கம் கூறுவாரா இவர்? அதற்கு பயந்தவர் தலைவரின் பெயரை உச்சரிக்க கூடாது. தமிழ் மக்கள் பிரதிநிதியாய் வாக்கு கேட்டிருக்க கூடாது. இவர் சொல்லுற காரணம், பேசுற பேச்சு இரத்தம் கொதிக்க வைக்கிறது. சிங்களவரோடு சமாதானமாக வாழவேண்டுமாம், பிறகேன் நான் தமிழேண்டா என்கிறார்? வல்வெட்டித்துறையில் யாரோ அனுராவை கட்டிப்பிடித்தார்களாம், சந்திரசேகரன் சொன்னாராம், தாங்கள் அடிக்கத்தொடங்கினால் ஓடுவதற்கு இடமில்லையாம். ஏன் அவர் அப்படி பேசினார்? முரணாக இல்லை இவர் பேச்சு? இவருக்கு எங்கே, எப்படி, என்ன பேசவேண்டுமென்பது தெரியாது. எல்லோர் பேச்சிலும் குறுக்கீடு செய்து முரண்டு பிடிக்கிறது. ஒரு கார், காணொளியில் அரசியல் செய்ய நினைக்கிறார். இதை சொல்லியா மக்களிடம் வாக்கு கேட்டார் இவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கே சமர்ப்பணம் இவர் பேச்சு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.