Everything posted by Maruthankerny
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
கிருபன் அளவுக்கு அறிவு இருப்பவர்கள் இங்கிலீசு தெரிந்தவர்கள் திருக்குறளை புறக்கணிக்க வேண்டும் திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுத என்ன தகுதி இருக்கிறது? லண்டன் போனாரா? அல்லது யூனிவெர்சிடியில் குப்பை கொட்டினாரா?
-
கடனட்டை(Credit Card)
Global Entry அல்லது TSA Precheck இரண்டில் ஒன்றுதான் வைத்திருக்கலாம் ( ஒன்றுக்குத்தான் $120 க்ரெடிட் தருவார்கள்). TSA Precheck Domestic பயணங்களுக்கு சிறப்பு Global Entry அமெரிக்காவிற்குள் நுழையும்போதுதான் பெரிதும் பயன்படும். நியூ யார்க்கில் கஸ்டமில் எப்பபோதும் லைன் இருக்கும் அந்த லைனில் நிற்க தேவை இல்லை. குறிப்பாக உங்களுக்கு Connecting Flight இருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். நான் Amex Platinum தான் வைத்திருக்கிறேன் அண்ணளவாக $1000 வரையில் ஒரு வருடத்தில் திரும்ப பெற கூடியதாக இருக்கிறது ஆதலால் அதையே வைத்திருக்கிறேன். Delta Amex Platinum உண்டு அதுக்கு வருடாந்த பணம் நான் கட்டுவதில்லை என்பதால் வைத்திருக்கிறேன். Amex Platinum எடுக்கும்போது வீட்டில் வேறு ஆட்களின் பெயரில் எடுத்து என்னை Additional Add பண்ணியிருந்திருக்க வேண்டும் ...... யோசிக்காமல் எனது பெயரில் எடுத்துவிட்டேன் ..... இப்போ மாற்ற சொன்னால் அவர்கள் முடியாது என்கிறார்கள். Cancel பண்ணிவிட்டு வேறு பெயருக்கு புதிதாக எடுக்க சொல்கிறார்கள். அதை Cancel பண்ணினால் Capital Venture X தான் எடுப்பது என்று இருக்கிறேன். முன்பு மொபைல் பாஸ்போர்ட் ( Mobile Passport) என்று ஒரு ஆப் APP இருந்தது அது முற்றிலும் இலவசம் நீங்கள் அமெரிக்காவிற்குள் நுழையும்போது அந்த அப்பில் உங்கள் விமான போர்டிங் பாஸ் விபரங்களை கொடுத்தால் போதும். காஸ்ட்ரம் Custom வரிசையில் நிற்க தேவையில்லை அநேகமாகமான ஏர்போட்டுகளில் டிப்ளோமட் பாஸ்போர்ட் ( Diplomat Passport) விமான பணியாளர்கள் ( Crew Line) போகும் இடத்தால் போகலாம். இப்போதும் அது போட்டு அம்புக்குறி காட்டியிருக்கு ஆனால் அந்த ஆப் வேலை செய்யவில்லை. முன்பு அந்த ஆப் இருந்ததால் நான் Clear தான் Amex மூலம் எடுத்து வைத்திருந்தேன். Clear யிலும் சில நேரங்களில் இப்போது நீண்ட வரிசை அதனால் TSA Precheck இற்கு மாற வேண்டும். Global Entryயம் எடுக்க வேண்டும். இருவாரங்கள் முன்பு எங்கோ வாசித்தேன் Capitol Venture X இனி Airport Lounge Access தருவதில்லை என்று அதுதான் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். நேற்றும் வேலை செய்யும்போது இதுபற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன் .... இன்று உங்கள் இந்த பதிவை பார்த்ததும் நீங்கள் எனக்காக எழுதியது போல இருக்கு. எனது குழப்பத்திற்கும் யாரவது தீர்வு எழுத்துவார்கள் என்று காத்திருக்கிறேன். வாரகிழமை ஒருமுறை பூமியை சுற்றி வரவேண்டும் அதனால்தான் இதுபற்றி யோசித்தேன். எனக்கு Lounge Access ஒன்றுதான் இப்போது பிரியோசனமாக இருக்கிறது மற்ற சலுகைகள் பெரிதும் பிரியோசனமாக இல்லை. கார் ரெண்ட் ( Car Rental ) பண்ணும்போது Free Upgrade பண்ணிவிடுவார்கள் கொஞ்சம் வசதியான கார் குறைந்த செலவில் கிடைக்கும்.
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
ஆரம்ப காலங்களில் பல தமிழ் இயக்கங்களுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுத கொள்வனவுக்கான முகவர்களையும் பாலஸ்தீனியர்களே வழங்கினார்கள்
-
ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம்
@தமிழ் சிறி ஐயா வந்ததால் ஒரு 10 வருசமா குண்டும் குழியுமா கிடந்த வீதி ஒன்றை இரவோடு இரவாக போட்டுள்ளார்கள் நான் யாழ்ப்பாணம் போகும்போது மண் கொட்டிக்கொண்டு இருந்தார்கள் மறுநாள் வரும்போது முழுதாக முடித்து இருந்தார்கள். இவ்வாறான வசதி கையில் இருந்தும் .............. படிப்பறிவில்லாது பல்கலைக்கழகம் மட்டும் சென்று வந்த **** உள்ளூர் பதவிகளிலும் அரசியலிலும் இருப்பதால் நாடு நாறி கிடக்கிறது. சிங்களப்பகுதிகளில் வீதிகள் மிகுந்த சீராக இருக்கிறது எமது பகுதிகள் இராணுவ பயன்பாட்டுக்கு தேவையான வீதிகள் மட்டும் சீராக இருக்கிறது. (அதற்கு சிங்கள அரசு காரணம் மாதிரி தெரியவில்லை..... எங்களது குஷ்டாரோகிகள் அதிகாரிகளாக இருந்துகொண்டு அலுவலகம் காலைவந்து டீ குடித்து சாப்பிட்டுவிட்டு போவதுதான் காரணம்)
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
எங்களின் அறிவை பற்றி சிந்தித்துக்கொண்டு பறவைகள் விலங்குகளை பார்க்கும்போது எவ்வளவு பக்குவமாக வாழ்கிறார்கள் என்று ஆச்சரியமாக பார்க்க வேண்டி இருக்கிறது பணம் பணம் என்று தப்பு மேலே தப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் எவ்வளவு வெள்ள அழிவு வந்தாலும் தமிழ்நாடு திருந்துகிற எண்ணமே இல்லை மேலும் கழிவுநீர் அகற்ற என்று ஊழல்தான் செய்கிறார்கள்
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
அம்பானி எப்படி இப்போ திடீரெனெ மிகுந்த பணக்காரர் ஆகிறார் என்பது தெரிந்தால் ஸ்ரீலங்கா டெலிகாம் அவருக்குத்தான் போகவேண்டும் என்றே ஐ எம் எவ் சொல்கிறது......... கை நீட்டி கடன் வாங்கிய இலங்கை இனி மல்லுக்கட்ட பெரிதாக ஒன்றும் இல்லை
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
உங்கள் புரளியும் அதே புரளி போன்றதுதான் சக்கரைநோய்க்கு நிவாரணி என்றுதான் சொல்லப்படுகிறது நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் பாவற்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் மாறும் என்று தவறாக எண்ணுபவர்கள் போல்தான் உங்கள் எண்ணமும் "உணவே மருந்து" இதைத்தான் சொல்கிறார்கள் இதன் பொருள் நீங்கள் நோய்க்ளை உண்டாக்கிய பின்பு உணவு சாப்பிட்டால் நோய் குணம் ஆகும் என்பதல்ல மருந்துபோல உணவை சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்றுதான் சொல்கிறார்கள்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அப்போ முழு பைத்தியங்கள்தான் நாகசாகியிலும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் கருத்துக்களை சரியாக புரிய முடியவில்லை
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
பன்னிரெண்டாம் அறிவோடு வாசித்து அடுத்தவனை எப்படி சொறியலாம் என்று சிந்தித்தால் அப்படிதான் விளங்கும் நாங்கள் சாதாரண மனிதர்கள் சாதாரண மனிதர்களுக்குத்தான் இங்கு கருத்து எழுதுகிறோம். ஹோமோசெஸுவாலிட்டி இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் அது அவர்கள் சொந்த பிரச்சனைஆனால் மேற்கு இப்போது ஊக்கிவிப்பது அதுவல்ல பச்சிளம் குழந்தைகளை கூட மூளை சலவை செய்து ஹார்மோன்களை ஊசிகள் மூலம் ஏற்றி ஆணை பெண்ணாக்குவது பெண்ணை ஓநாய் ஆக்குவது தவளை ஆக்குவது உகாண்டா எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கி இருந்தது ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை ஓரளவு என்றாலும் தெரிந்து கொள்வது நல்லது. இதை நான் பன்னிரெண்டாம் அறிவுடையவர்களுக்கு எழுதவில்லை இங்கிருக்கும் மற்றவர்கள் எழுந்தமாத்திரத்தில் சில முடிவுகளை கொள்ளாது ஒரு விடயத்தின் ஆரம்பம் அழிவு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவர்கள் சொந்த முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் நிர்வாகத்தினர் சில விடயங்களை முடிந்தால் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கவும் எழுதுகிறேன் இங்கு வேண்டும் என்றே சீண்டல் கருத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது. தலைப்புக்கும் சம்மந்தம் இன்றி கருத்துக்கும் சம்மந்தம் இன்றி ஒரு பெரிய பந்தியே தனிமனித தாக்குதலை மட்டுமே முதன்மைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது நான் வசித்தபின்பும் கோமாளிகளுடன் என் நேரத்தை செலவு செய்ய வேண்டாம் என்றே கடந்து சென்றேன். சாதிவெறி மதவெறி ஆதிக்கவெறி இனவெறிகளில் ஊறியவர்கள் திருந்தினால்தான் அதிசயம் அடுத்தவர்கள் கை ஓங்கும்போதும் அடுத்தவர்களை சுரண்டி பிழைக்கவும் அதி கல்விமான்கள் போல வேடமிட்டு கோட் சூட் போட்டுகொண்டு பொய் வேஷமிடுவார்கள் தவிர இவர்கள் ஒருபோதும் திருந்தியதில்லை இப்போது தென் ஆப்ரிக்க இஸ்திரேலுக்கு எதிராக கொண்டுவந்த இனஅழிப்பு வழக்கில் கூட மேற்கு நாடுகள் காமாஸ் மீது நடத்திய தாக்குதலில்தான் 23 ஆயிரம் அப்பாவிகள் இறந்ததாகவும் அத்தனை மசூதிகளும் மருத்துவமனைகளும் அழிந்ததாக சுத்த பொய்யை இந்த உலகமே பார்த்துக்கொண்டிருந்தை எந்த வெட்கமும் இன்றி சொல்கிறார்கள் தந்தை பெரியார் சொன்னது போல ஆயிரம் அறிவுள்ளவர்களுடன் வாதிடலாம் ஆனால் மானம் சூடு சுரணை வெட்கம் இல்லாதவர்களுடன் வாதிட முடியாது என்பதுபோல. இந்த ஆதிக்க வெறி பிடித்த மேற்கு நாடுகளிடம் இருந்து ஒரு நியாத்தை எதிர்பார்க்கும் ஈழத்தமிழர்கள் காஸ்மீரிகள் மியன்மார் முஸ்லிம்கள் குர்திஸ்கள் பாலஸ்தீனியர்கள்தான் மூடர்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆதிக்க வெறி என்பது எந்த வடிவில் இருந்தாலும் நான் அதற்கு எதிரிதான் நான் கடவுளை கூட நல்லவனாக எண்ணியதில்லை. இல்லது இருக்கவேண்டும் அல்லது சுத்த அயோக்கியனாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இந்த மனநோய்க்கு வைத்தியம் பார்க்க போகிறோம் என்று உகாண்டா அறிவித்திருந்தது மன நோய்க்கு வைத்தியமா? அதை எப்படி உகாண்டா செய்யலாம்? உடனேயே பொருளாதார போர் ஆயுதப்போர் மற்றும் என்ன எல்லாம் இருக்கிறதோ செய்வதுக்கு தயாராகுங்கள் என்று அறிவித்து இருக்கிறார்கள் கருணை மனிதநேயம் மற்றும் இன்ன பிற நற்குணங்கள் எல்லாம் கொண்ட பி. கு இந்த கேடுகெட்ட விடயங்களை புரிந்துகொள்ள மீனுக்கு இருக்கும் நாலு அறிவே போதும் எந்த இன்டெலிஜென்ஸ் ரிபோர்டும் தேவை இல்லை நாகரீகமாக வளர்ந்த மனிதர்கள் ஆடை போடுவது தண்டனைக்கு உரிய குற்றம் அதன் காரணத்தை புரிய கூடியதாக இருக்கிறது ஓநாய் ஏன் ஆடை போட வேண்டும் என்றுதான் புரியவில்லை
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஈரானில் தேர்தல் என்றாலும் நடக்கிறது சவூதியில் அணைத்து வளங்களையும் மன்னர் சொத்துக்களாக்கி ஒரு கூறு கெட்ட குடும்பமே வாழ்ந்துவருகிறது குர்திஸ் மக்கள் மீதும் ஈரான் மீதும் குண்டுகளையும் இவர்களின் இரசாயனங்களை கொட்டி அப்பாவி மக்களை கொல்லுமட்டும் சதாம் ஹுசேன் சிறந்த ஜனநாயகவாதி. இனி நான் குண்டுகள் வீச மாடடேன் என்றால் பேரழிவு ஆயுததாரி
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
தண்ணி இல்லாத இடத்தில சின்ன வீட்டை கட்டி என்ன பிரயோசனம்? சின்னவீடே தண்ணியிலே மிதக்கணும்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இப்போ? என்று எந்த காலத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை ஈரான் மீதான மேற்குலகின் ஆதிக்க வெறி யுத்தத்தை கடந்த 60 வருடமாக பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் செய்தே வருகின்றனர் நாகரீகமாக ஆறாறிவு மனிதன் வளர தொடங்கி ஆடைகள் அணிய தொடங்கியபின் மீண்டும் வேடுவர்கள் காட்டுவாசிகளாக மாறி பெண்கள் ஆடைகள் இல்லாமல் அலைவதும் கண்டவர்கள் கண்டவர்களுடன் தெருநாய்கள்போல பாலியல் கொளவ்தும் சுதந்திரம் எனும் மூளைசலவைக்கு ஆளாகாமல் போகிறார்களே எனும் ஆத்திரம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் மேலே கூவுவதுபோலவும் இருக்கலாம்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
நீங்கள் ஏன் இதை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை இறைமை இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கொன்று போடலாம் தவறில்லை என்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்று புரியவில்லை? ஈரானை யார் வளர்த்தார்கள் எனும் கேள்விக்கு இப்போதைய ஈரானை கடந்த 100 வருடங்களாக இந்த பூமியில் மனித அழிவுகளை செய்துவரும் மேற்கு நாடுகள்தான் வளர்த்தார்கள் என்று எழுதினேன். அதில் ஏதும் தவறு இருப்பின் விவாதிக்கலாம்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் கடந்த 10 வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேசியமயமாகி வரும் பால் சக்கரை ஐம்ப் லோனில் இறக்குமதி ஆகி வரும் அவற்றை ஒன்றாக போட்டு பொங்கி சிங்கள பேரினவாதி ஒருவரையும் அழைத்துவந்து மாலை போட்டு தொடக்கி வைத்தால் அதுதான் தேசிய நல்லிணக்க பொங்கல்
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
நீங்கள் எழுதியதை யாரிடம் கேட்க வேண்டும் ?
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
வியடனமில் ஈரான் நேபாம் குண்டுகளை மக்கள் மீது வீசிய காலத்துக்கு முன்பா பின்பா?
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரைக் கைதுசெய்வதன் மூலம் தீர்வு வழங்கலுக்கான அரசாங்கத்தின் தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது - அம்பிகா சற்குணநாதன்
தங்களுடைய இருப்புக்கும் பாதுகாப்பும் குறித்த வேலைகளை செய்த பின்னர் பின்பு இப்படி வெட்டுவோம் வீழ்த்துவோம் என்று பதவிகளை தக்கவைப்பது கொழும்பு எலீட்டுகளின் லீலை என்பதை கடந்த 40 வருடமாக பார்த்து வருகிறோம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புலிகேசி ஒரு பயந்த நகைசுவை சுபாவம் கொண்டவரே தவிர சேலன்ஸ்கிபோல கொடியவன் அல்ல ........ செலென்ஸ்கி மிக கொடூரமானவன் அவனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. செலென்ஸ்கி ஒரு சியோனிஸ்ட் அவனுக்கு உக்ரைன் மக்கள் இறப்பு என்பது ஆனந்தமானது உக்ரைனுக்கு உதவிக்கு என்று கொடுத்த மில்லியன் டாலர்களை சுருட்டிக்கொண்டு இருக்கிறான். மார்ச் மாதம் தேர்தல் வைக்க வேண்டும் .... அப்படி நடந்தால் உக்ரைன் மக்கள் அடித்தே துரத்துவார்கள் என்பது அவனுக்கு நான்கே தெரியும் என்பதால் இந்த போரை சாட்டி அவன் தேர்தலை வைக்கப்போவதில்லை. இனி மேற்கு அண்ணர் வாக்கு சாவடிகளை களவாடும் வேலை எல்லாம் செய்து முடித்த பின்னர்தான் ஒரு சுத்துமாத்து தேர்தலை வைப்பார்கள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பொதுமக்கள் குடியிருப்புக்கள் வழிபாட்டு தலங்கள் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் மீது சர்வாதிகாரி புட்டின் நடத்தும் இவ்வாறான தாக்குதல்களை கண்டிப்பதோடு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நானும் கேட்டு கொள்கிறேன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சிலர் இஸ்திரேல் பாலஸ்தீன பிரச்சனையை அக்டோபர் 7ஆம் திகதியில் தொடங்கிய பிரச்சனைபோல பேசிக்கொண்டு இருப்பது போலவே உங்கள் கருத்தும் எனக்கு தெரிகிறது மன்னிக்கவும். ரஷியா நேரடியான படை நடவடிக்கை தொடங்கு முன்பே உக்ரைன் எவ்வளோ ஊடுருவல் தாக்குதல்களை ரசிய நிலப்பரப்பில் செய்து இருக்கிறது. உக்ரைன் அரசுகளால் மிக கீழ்த்தரமாக நடத்தப்பட்ட ரஷ்ய எல்லைப்பகுதி மக்கள் ஏற்கனவே உக்கரைனுடன் இனி சேர்ந்துவாழ முடியாது என்று போராடி பிரிந்து தனித்துவமாக ரசிய ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்கள் கிரிமியா மக்களை கூட தேர்தலின் மூலம் உக்ரைனில் இருந்து பிரிவதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். மேற்குலகிடம் விலை போய் தமது தனித்துவத்தை இழந்து சொந்த சகோதர்களான ரசியர்களை மேற்குலகின் விருப்புக்கு அழிவுக்கு உடப்படுத்தும் துரோக தனத்தை எதிர்த்து தனியாக வாழவிடுங்கள் என்று பிரிந்த மக்களை வகை தொகை இன்றி உக்ரைன் இராணுவம் கொன்று குவித்து இருக்கிறது. இப்போது ரசியா கைப்பற்றி வைத்திருக்கும் பெரும்பாலான நிலப்பரப்பு ரசிய ஆதரவு மக்கள் வாழும் பகுதியாகவே இருக்கிறது. இது புட்டின் தொடங்கிய போர் அல்ல .... ரசியா மீது திணிக்கப்பட்ட போர் மேற்குலகின் டிவி பெட்டியை பார்த்துக்கொண்டு நாங்கள் எழுதிக்கொண்டு இருந்தால் அப்பாவி பலஸ்தீன குழந்தைகளை காமாஸ் தீவிரவாதிகள் என்றுதான் எழுதிக்கொண்டு இருப்போம் சிலர் யாழ்களத்தில் அப்படிதான் எழுதுகிறார்கள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செலென்ஸ்கிக்கும் உக்ரைனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அதோடு இஸ்திரேலி சியோனிஸ்ட்டுக்களுக்கும் யூதர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்றும் தேடி பாருங்கள். ரஸ்யா உக்ரைன் விரும்பினாலும் போரினால் கோடிக்கணக்கான பணத்தை லாபம் பார்க்கும் கூட்டம் ஏன் போரை நிறுத்தவேண்டும்? இந்தியாவுக்கும் மொக்கு மோடிக்கும் கொம்பு சீவி இப்போது லாபகமாக இந்தியாவையும் போருக்கு இழுத்து செல்லும் வேலை மிக நன்றாக நடக்கிறது ஹிந்தியாவை பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத வேலை என்றாலும் சுற்றி எதிரிகளை உருவாக்கி விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு ஆயுதங்கள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு காலை எழுந்தால் காலைக்கடன் முடிக்க கூட வசதி இல்லை. இத்தாலிக்கும் குளை அடித்து இப்போ பெரும் ஆயுத வியாபாரம் செய்து நீங்கள் துருக்கியை விட பலமாகிக்கொண்டு இருக்கிறீர்கள் அதுதான் பாதுகாப்பு என்று நம்பவைத்து ஆயுதம் விற்கிறார்கள். தைவானை கைகாட்டி பிலிப்பைன்ஸ் ஜப்பானுக்கு விற்கக்கூடிய இரும்பெல்லாம் விற்கப்படுகிறது உங்கள் வரிப்பணத்திற்கும் செலவுவைக்க பல பல பெயர்களில் நேவி கப்பல் ஓடடம் நடக்கிறது இவற்றையெல்லாம் பின்தொடர்ந்தால் ....... ஒரே ஒரு குழுதான் கடந்த 100 வருடமாக எந்த மனித நேயமுமற்று மக்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது அவர்கள் ஒரே இலக்கு பணம் அதன்மூலம் அதிகாரம். இன்று இஸ்திரேல் செய்துகொண்டு இருக்கும் அக்கிரமத்தை ரஸ்யா நினைத்திருப்பின் கிவையே தரைமடடம் ஆக்கி இருப்பார்கள் கைப்பற்றிய கீவ் அணுமின் நிலையத்தை கூட விட்டுவிட்டு பின்வாங்கினார்கள் உக்ரைனில் இருப்பவர்களும் பாதிக்கு மேல் ரஷ்யர்கள்தான் டிசம்பர் தொடக்கத்தில் செலென்ஸ்கி (25ஆம் புலிகேசி) இங்கு அமேரிக்காவுக்கு வந்தபோது 10 அதி உயர் விமான எதிர்ப்பு மிஸைல் ( பல மில்லியன் பெறுமதியான) கொடுத்து அனுப்பினார்கள் ரசியர்கள் 8 ட்ரான்களை வேண்டும் என்றே அனுப்பி 8 மிசைல்களை வேண்டும் என்றே அடிக்க வைத்து வீணடித்து விட்டார்கள் பல ஆயிரம் மில்லியன்கள் ஒரு வாரத்தில் புகையாகி போனதில் எனது வரிப்பணமும் உண்டு என்பதுதான் எனக்கு உறுத்தல் ஆன விடயம்
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
இந்தியாவுக்கு ஆயிர கணக்கில் இனி பாட சென்று விபச்சார விடுத்துதிகளில் இருந்து மீட்டு வராதவரை ஓகே. கலைதுறை என்பது பொதுகவே உலகம் பூரா ஓரிருவருக்கு அபராத வெற்றியையும் ஆயிரக் கணக்கவனவர்களுக்கு வாழ்வை சீரழித்த கதையாகவே தொடர்கிறது
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு பொதியை பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் குறித்த பொதியை ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா? எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும். இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள் தலைக்குள் வைத்தது பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள் அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள் உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான். 24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors) பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும். இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள் இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால் இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே யார் தங்கத்துடன் வருகிறார் என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான் மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) .