Everything posted by Kavi arunasalam
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று. இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!
- கருத்துப்படம் 25.03.2025
From the album: கிறுக்கல்கள்
- நானும் ஊர்க் காணியும்
இதை முன்னரே நான் வாசித்ததாக நினைவு. இல்லையென்றால் எனக்கென்னவோ நடந்திருக்கிறது- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தாய்க்குப் பின் தாரம் படத்துக்குப்பின் எம்ஜிஆரோடு ஏற்பட்ட மோதலால் ரஞ்சனை கதாநாயகனாகப் போட்டு தேவர் எடுத்த படம்தான் நீலமலைத் திருடன். இந்தப் படத்தில் இடம் பெற்ற “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…” பாட்டு அந்நாளில் மிகப் பிரபலமாக இருந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும் போது, ஜிக்கியின் குரலில் உள்ளம் கொள்ளை போகிறது.- தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் வசம் இருந்த கோண்டாவில, கொக்குவில, இணுவில, யாப்பன, கொடிகாம, மிருசுவில எல்லாம் இப்பொழுது தமிழர்கள் வாழும் இடங்களாகத்தானே இருக்கின்றன. அது போல் நாங்கள் வாழும் பகுதிகள் அவர்கள் வசம் போயும் இருக்கின்றன. இன்று சிவனொளி பாதம் நான்கு மதங்களாலும் உரிமை கொண்டாடப்படுகின்றது. கதிர்காமக் கந்தனும் ஓரளவு அந்தவகைக்குள் அடங்குகிறார். தமிழர், சிங்களவர், வேடுவர் என பலரும் வழிபடும் தளமாக அது இருக்கிறது. சிங்களவர்கள் எப்படி அழைத்தாலும் தமிழர்களுக்கு அது கதிர்காமம்தான். அத்தோடு கந்தன் தமிழர்களின் முப்பாட்டன் அல்லவா? பல காரணங்களுக்காக குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை அவரவர்கள் தேவைகளுக்காக நடக்கின்றன. இதில் சில அரசின் திட்டமிடல்களூடாகவும் நடந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் முன்னைய அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நியாயம், அப்போ கைகலப்பில் ஈடுபடலாம் என்கிறீர்களா? பேசிப் பார்த்தோம் பலனில்லை. போராடிப் பார்த்தோம், பரம்பதம் விளையாட்டு மாதிரி இன்னும் கீழே போய் இருக்கின்றோம். சரி,மறக்கவும் வேண்டாம். மன்னிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம் என்று நியாயமாக நீங்களே சொல்லிவிடுங்களேன்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜிக்கியின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. தமிழ்ப் படங்களில் பாடுவதை கணவனுக்காக இடையில் நிறுத்திவிட்டார். “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்….” பட்டுக்கோட்டையார் ஆரம்பத்தில் இசையில் மனம் துள்ளும் என்பார், இறுதியில் காதல், இன்பத் தேனையும் அள்ளும் என்பார். நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவர் ஏ.எம். ராஜா இறந்தபின் ஐரோப்பிய மேடைகளிலும் இவர் பாடியிருந்தார். அப்பொழுது இவர் பாடிய, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்…” பாடலைப் பாடும் போது அவர் உணர்ச்சி மிகுந்து உச்ச தொனியில் பாடிய இந்த வரிகள் கண்கலங்க வைத்தன “கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ-என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ வாழ்கவென்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறையச் சம்மதம்”- தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன். புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார். பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது. அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன. சட்டப்படி சீட்டு நடத்தும் ஒருவர் ஊரில் இருந்தார். அவரது காணியின் அடி உறுதியில், காணியின் பெயர் புத்தர் கோயில் என்றிருக்கிறது. அந்த அடி உறுதி நிச்சயமாக பருத்தித்துறை காணி பதிவு அலுவலகத்தில் இருக்கும். நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.- பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
- கருத்துப்படம் 23.03.2025
From the album: கிறுக்கல்கள்
- துரோகி ( காட்டிக் கொடுப்பவன் )
வியாபாரி இன்னும் ஒரு கௌதாரிக்கு நல்ல உணவு கொடுத்து வளர்ககப் போகிறான்.- தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
‘பம்மாத்து’ என்பதே எங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்ததுதான்- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
“தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ ஒரு மகனுக்கு சகலதும் அவரெண்டால் விந்தையுண்டோ” ஆழ்ந்த இரங்கல் நெடுக்ஸ்.- மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!
பாதிக்கப்பட்ட அந்தப் பயணிகளில் நானும் ஒருவன். வெள்ளிக்கிழமை மதியம் 2.40க்கு யேர்மனிக்குப் பயணிக்க இருந்தேன். இன்று விமானம்இல்லையென காலையில் செய்தி வந்திருந்தது. ஒருவாறு இன்று (சனிக்கிழமை) காலை 7.05க்கு புறப்பட்ட விமானத்தில் இடம் கிடைத்தது. யேர்மனிக்கு வந்தபின் செய்திகளைப் பார்த்தால், “யேர்மனிக்கான பல விமானங்கள் இன்று பறக்கவில்லை என இருந்தது”- வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்
குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பாக இருக்கிறது என்று ஆளுனரே சொல்லிவிட்டாரே. இதற்குமேல் என்ன செய்ய இருக்கிறது?- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
- யாழ்-27
- ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? கச்சேரி முன் கைகட்டி நிற்பானேன்?- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
குமாரசாமி, செய்தியிலேயே சந்தித்தற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறதே- இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
- கருத்துப்படம் 15.03.2025
From the album: கிறுக்கல்கள்
- தின்னாதே
ஒஸ்ரியாவில் லின்ஸ் நகரில் உள்ள பல் பொருள் அங்காடியான HOFER க்கு வார இறுதியில் ஒரு பெண் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தாள். முள்ளங்கி வாங்குவதற்காக அவள் ஒரு கட்டு முள்ளங்கியை எடுத்த போது அதில் இருந்து ஒரு முள்ளங்கி தரையில் விழுந்து விட்டது. அவள் தனது கையில் இருந்த முள்ளங்கிக் கட்டை எடுத்த இடத்தில் திரும்ப வைத்துவிட்டு கீழே விழுந்த முள்ளங்கியை எடுத்துக் கொண்டாள் அத்துடன் புதிதாக இன்னுமொரு முள்ளங்கிக் கட்டையும் எடுத்துக் கொண்டாள். வாங்கிய பொருட்களுக்கு பணத்தைச் செலுத்திவிட்டுப் புறப்பட்டால், வாசலில் இடைமறித்துக் கொண்டு அங்காடியில் பணியில் இருந்த பெண் டிடெக்டிவ் நின்றாள். "நீங்கள் தரையில் விழுந்த முள்ளங்கியை எடுத்து முதலில் உங்கள் ஜக்கெற்றுக்குள் போட்டீர்கள். பின்னர் அதை எடுத்து உங்கள் வாயில் போட்டு விட்டீர்கள். இந்தக் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு குற்றச்செயல்" என்று அந்த டிடெக்டிவ் கூறினாள் . ‘என்னது, ஒரு முள்ளங்கியை வாயில் போட்டது குற்றமா?’ என அவள் திகைத்து நின்றாள். பல்பொருள் அங்காடியில் இலவச சிற்றுண்டி தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அங்காடியில் உணவு உட்கொள்வது ஒரு நிபந்தனையின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது அந்தப் பொருளுக்கான பணம் செலுத்தப்பட்டதின் பின்னரே அவற்றை உட்கொள்ள முடியும். இந்தச் செயலுக்காக அந்தப் பெண்மணி 246யூரோக்களும் 03 சென்ற்களும் செலுத்த வேண்டியிருந்தது. திருட்டை க் கண்டுபிடித்தற்கான செலவு 246 யூரோக்கள். முள்ளங்கியின் விலை 3 சென்ற்கள்.- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
விளங்க நினைப்பவன், எதற்காக அதை எழுதினேன் என்பதை ஏன் விளங்க நினைக்கவில்லை?- கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
- கருத்துப்படம் 25.03.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.