Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த இன்னுமொரு இந்திய விமானம் Published By: Digital Desk 3 01 Dec, 2025 | 09:53 AM விங் கமாண்டர் சஞ்சய் குமார் தலைமையிலான இந்திய விமானப்படையின் C-130J விமானம் நேற்று (30) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் இரண்டு BHISHM க்யூப்கள் மற்றும் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவும் வந்தடைந்தது. BHISHM க்யூப்கள் என்பது பேரிடர் பாதிப்பு பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களுக்கு விரைவாக கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, தன்னிறைவு பெற்ற தொகுதி மருத்துவ பிரிவுகள் ஆகும். ஒவ்வொரு க்யூபும் அவசர மருத்துவ சேவைகள், காயச்சிகிச்சை, அடிப்படை அறுவை சிகிச்சை, உயிர் காப்பு வசதிகள் போன்றவற்றை வழங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவை உடனடி மனிதாபிமான மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடியவை. வருகை தந்துள்ள இந்திய விமானப்படை மருத்துவக் குழு, BHISHM க்யூப்களின் செயல்பாடு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து இலங்கை மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளது. இதன்மூலம், இந்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு உதவி வழங்கும் கூடியதாக இருக்கும். பயிற்சி மற்றும் மீட்பு பணிகள் முடிந்த பின்னர், இந்த இரண்டு BHISHM க்யூப்களும் அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்த நாட்டின் பேரிடர் தயார்நிலை மற்றும் அவசர மருத்துவ செயல்திறனை மேம்படுத்த முடியும். https://www.virakesari.lk/article/232115
  2. மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு Dec 1, 2025 - 10:12 AM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://adaderanatamil.lk/news/cmimnxvv2028fo29n3v4dvtz7
  3. அத தெரண கருத்துப்படம்.
  4. தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றி Published By: Vishnu 30 Nov, 2025 | 10:49 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கடைசி வரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க 17 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, சிரேஷ்ட வீரர் விராத் கோஹ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் வெறும் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.) இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்களும் சிரேஷ்ட வீரர்களுமான ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். ரோஹித் ஷர்மா 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் ருத்துராஜ் கய்க்வாட் (8), வொஷிங்டன் சுந்தர் (13) ஆகிய இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். எனினும், 60 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் கே. எல். ராகுலுடன் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் 32 ஓட்டங்களைப் பெற்ற ரவிந்த்ர ஜடேஜாவுடன் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். விராத் கோஹ்லி 120 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 135 ஓட்டங்களைக் குவித்தார். 306ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விராத் கோஹ்லி குவித்த 52ஆவது சதம் இதுவாகும். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன். நண்ட்றே பேர்கர், கோபின் பொஷ், ஒட்னெல் பாட்மன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். மிகவும் கடுமையான 350 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. தென் ஆபிரிக்கா அதன் முதல் 3 விக்கெட்களை 11 ஓட்டங்களுக்கு இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும், மத்திய வரிசையில் மூவர் அரைச் சதங்கள் குவித்ததுடன் மேலும் இருவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தென் ஆபிரிக்க அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். 39 ஓட்டங்களைப் பெற்ற டோரி டி ஸோர்ஸியுடன் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களையும் 37 ஓட்டங்களைப் பெற்ற டிவோல்ட் ப்றவிஸுடன் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் 70 ஓட்டங்களைப் பெற்ற மாக்கோ ஜென்சனுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் மெத்யூ ப்றீட்ஸ் பகிர்ந்தார். மெத்யூ ப்றீட்ஸ் 72 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து கோபின் புஷ், ப்ரிநெலான் சுப்ராயன் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். சுப்ராயன் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் கோபின் பொஷ், நெண்ட்றே பேர்கர் (17) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போராட்டக் குணத்துடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கோபின் பொஷ் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/232090
  5. இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்த சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் Nov 30, 2025 - 08:35 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுவதற்கு அவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக நன்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகள், குடிநீர் வசதிகள், நீர்ப்பாசன மறுமைப்பு மற்றும் ரயில் பாதை மற்றும் ரயில் சேவைகளை மீளமைப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்தத்தின் பின்னர் அழிந்த நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதன் மூலம் போக்குவரத்துக் கட்டமைப்பை மீளமைக்க துரித வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்பட்டது. இதற்காக, சேதமடைந்த அனைத்து வீதிகளையும் அடையாளம் காண்பது மற்றும் ரயில் பாதைகள் மற்றும் சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் புனரமைப்பதில் முதல் முன்னெடுப்பாக சேதத்தை மதிப்பிடுவதும், அதே நேரத்தில், புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வளங்களை (பௌதீக மற்றும் மனித வளங்கள்) அடையாளம் காண்பதும் ஆகும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அத்தோடு இந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmilur6kv027wo29nbekzenfp
  6. பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்: வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை – நொயெல் பிரியந்த Published By: Vishnu 30 Nov, 2025 | 08:03 PM (இராஜதுரை ஹஷான்) பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின்விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் மண்சரிவு அனர்த்தம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மின்விநியோக கட்டமைப்பு மற்றும் மின்னுற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கான மின்விநியோக சேவையை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பினையும், சேவையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு தான் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் தேசிய மின்கட்டமைப்பு 540 ஜிகாவாட்டாக வரையறுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, மஹியங்களை மற்றும் வவுனத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மாற்று வழிமுறைகள் ஊடாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது செயலிழக்கப்பட்டுள்ளது. மின்விநியோக இணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும்.தற்போது 72 சதவீதமளவில் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/232085
  7. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னையில் ஒரு காட்சி. 30 நவம்பர் 2025, 09:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? தஞ்சாவூர் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கும்பகோணம் தேவனாஞ்சேரியில் தொடர்மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் குடும்பத்தார் (மனைவி மற்றும் இரண்டு மகள்கள்) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த இளைய மகள் ரேணுகா (19 வயது) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படக்குறிப்பு,ஆலமன்குறிச்சியில் இடிந்து விழுந்த வீடும், பலியான ரேணுகாவும் கடலூர் திட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் எழுகின்றன. மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. திருவாரூர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக மழை தொடர்கிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன், தரிசுவேளி, கூனமடை, கீழநாலாநல்லூர், ராமாபுரம், துண்டாக்கட்டளை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். படக்குறிப்பு,திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது. நிரம்பிய நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர். விழுப்புரம் திட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூழ்நிலையை சமாளிக்க தீயணைப்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நிலைய பொறுப்பாளர் ஜமுனாராணி, "திட்வா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் சுமார் 200 வீரர்கள் விடுப்பு எடுக்காமல் தயாராக உள்ளனர். ஐந்து ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்பட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறினார். மேலும், மாவட்டத்தில் புயல் காரணமாக ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 112 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அவர் கூறினார். திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் வீதியில் நள்ளிரவில் தனம்மாள், சரவணன் ஆகியோரது வீடுகளின் மீது புளிய மரக்கிளை விழுந்தது. இதில் விஜயா (60) என்பவர் காயமடைந்தார். விஜயாவின் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புதுச்சேரி படக்குறிப்பு,புதுச்சேரியில் சீற்றத்தோடு காணப்படும் கடல் புதுச்சேரியில் திட்வா புயல் காரணமாக நேற்று (நவம்பர் 29) காலை 8:30 மணியிலிருந்து இன்று (நவம்பர் 30) அதிகாலை 5.30 மணி வரையிலும் சுமார் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன. புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு,காரைக்காலில் மழையால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்புத் துறையினர் காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இரு தினங்களாக காற்று பலமாக வீசுகிறது. காரைக்கால் பாரதியார் வீதி உள்ள பகுதியில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், காரைக்கால் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78v90l8kedo
  8. Published By: Vishnu 30 Nov, 2025 | 08:36 PM பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படைத்தளத்தில் இருந்து சுமார் 100 தொன் நிவாரணப் பொருட்கள், பயிற்றப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், மேலும் முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்திய உதவிக்கட்டமைப்பு உள்ளிட்ட அவசர உதவிகளை ஏற்றிய C-130 இலக்க விமானம் இன்று கொழும்புக்குப் புறப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள அவசர சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த மனிதாபிமான உதவி உடனடி நடவடிக்கையாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் அடங்கும் உதவிப் பொருட்களில் அவசர மருத்துவ உபகரணங்கள், தங்குமிட வசதிக்கான பொருட்கள், உணவுப் பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இது இலங்கை மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் முக்கியமான மனிதாபிமான உதவி நடவடிக்கையாக உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/232086
  9. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என்ற சாதனை ரோஹித் ஷர்மாவினால் முறியடிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவுடனான அப் போட்டியில் ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்களைப் பெற்றார். https://www.virakesari.lk/article/232088
  10. படக்குறிப்பு,மண்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சபப்டுகிறது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''பெரிய சத்தமொன்று வந்தது. நான் கதவை திறந்தேன். கதவை திறந்தவுடன் பூகம்பம் போல தோன்றியது. ஒரு வீடு அப்படியே உள்ளே புதையுண்டது. அந்த வீடு உள்ள போனதை நான் கண்ணால கண்டேன்" என இலங்கை கண்டியில் நிகழ்ந்த மண்சரிவிலிருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அலவத்துகொடை - ரம்புக்கேஹெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரியதொரு மண்சரிவு சம்பவம் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிபிசி தமிழ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றது. படக்குறிப்பு,ரஷிம் "நாங்கள் உடனே வெளியில் வந்தோம். நாங்கள் பள்ளிக்கு அருகில் வந்தவுடன்தான் ஆகப் பெரிய மண்சரிவொன்று வந்தது. பெரியதொரு மண்சரிவு அது. பெரியதொரு சத்தம் கேட்டது. என்னுடைய வீட்டை கட்டி நான்கு மாதம்தான் ஆனது. என்னுடைய லாரி வாகனம் எல்லாம் போய்ட்டது.'' என்று ரஷிம் கூறினார். ரம்புக்கேஹெல்ல கிராமமானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். கண்டி - மாத்தளை பிரதான வீதியின் அலவத்துகொடை நகர் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. படக்குறிப்பு,ரம்புக்கேஹெல்ல பகுதியானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். நடந்தது என்ன? நேற்று முன்தினம் நள்ளிரவு கடும் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென பாரிய சத்தமொன்று கேட்டுள்ளதுடன், ஒரு சில நொடிகளில் வீடொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டு ஒரு சில நிமிடங்களில் மற்றுமொரு பாரிய சத்தம் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்தே, மலைப் பகுதியில் பாரியதொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 பேர் வரை அந்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். எனினும், போலீஸார் மற்றும் கிராம சேவகரின் மதிப்பீட்டில் அந்த விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வீடுகள் மாத்திரமன்றி, வீடுகளிலிருந்து வாகனங்கள் கூட மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. ரம்புக்கேஹெல்ல பிரதேசத்தின் பாதி பகுதியே மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. தமது சொந்தங்களை தேடும் நோக்கில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மண்ணை அங்காங்கே தோண்டி தோண்டி தேடுகின்றனர். நேற்று அதிகாலை முதல் தேடுதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேரின் உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாவது தமது உறவுகளை தாம் கண்டுபிடிப்போம் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்கள் தேடி வருகின்றனர். படக்குறிப்பு,மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி மக்கள் கூறுவது என்ன? கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பௌத்த விகாரைகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவதானிக்க முடிந்தது. ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கிய போதிலும், தமக்கு பூரண ஒத்துழைப்பு இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் அந்த பிரதேச மக்கள். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாரியளவில் நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நீர் ஊடறுத்து செல்லும் இடங்களில் மண் சிறிது சிறிதாக சரிந்து வருவதை அவதானிக்க முடிந்தது. மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி என்பவர் கண்ணீர் மல்க, காணாமல் போனோர் தொடர்பில் பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ''அவர்கள் எல்லாருமே நல்ல மனிதர்கள். வசதிமிக்கவர்கள். பெரிய பெரிய வீடுகள் இருந்தன. நல்ல குடும்பங்கள். ஒரு வீட்டில 5 பேர் முதல் 8 பேர் வரை இருந்தார்கள். வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்து வீடுகளைக் கட்டினார்கள். அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள். எல்லாரும் இறந்து விட்டார்கள்,'' என்றார் லெட்சுமி. படக்குறிப்பு,தாஷிப் உடல்களை எடுக்க முயற்சிக்கின்ற போதிலும், எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்தைச் சேர்ந்த தாஷிப் தெரிவிக்கின்றார். ''இரவு 12 மணிக்கு தான் மண்சரிவு நடந்தது. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். எல்லாம் போய்விட்டது'' என தாஷிப் தெரிவிக்கின்றார். மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இன்றைய தினம் வானிலை சாதகமான நிலையில் காணப்பட்ட போதிலும், மீட்பு பணிகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமையை பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1m8nx1llyro
  11. மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைந்தால் வரலாறு காணாத அழிவு ஏற்படும் Published By: Vishnu 30 Nov, 2025 | 08:00 PM திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்திவிடும் என அச்சம் வெளியிட்டு வந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாற்று அணைக்கட்டின் மேல் பகுதி உடைப்பெடுத்து வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வருகின்றது. வெள்ளப்பெருக்கின் காரணமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், பூநகர், பூமரத்தடிச்சேனை தவிர்ந்த அனைத்து கிராம மக்களும் இடம்பெயந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மகாவலி கங்கையின் கிளையான வெருகல் ஆற்றை மேவியும், நாதனோடை என்ற பகுதியிலும் வெள்ள நீரானது அணைக்கட்டை மேவி பாய்ந்த நிலையில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் மாவிலாற்று அணைக்கட்டின் உடைப்பின் ஊடாகவும் வெருகலுக்குள் பெருமளவான வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் பிரதேச செயலகம், ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆகியவற்றில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் பிரதான வீதியில் 03அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. அதேபோன்று வெருகல் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 08 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இயங்திர படகின் மூலமே போக்குவரத்து இடம்பெறுகின்றது. அதைவிட இராணுவ கவச வாகனங்களின் உதவியுடனும்; அதிகாரிகள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகின்றது சேருவில பகுதியில் இருந்தே பௌசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெறுகிறது இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைக்குமாக இருந்தால் வெருகல், சேருவில, மூதூர், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகள் உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் பாரியளவான அழிவை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக பாதிக்கப்படும் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் சேமபுர, லிங்கபுரம், ஆதியம்மன்கேணி உட்பட பல பகுதிகளும் அதை அண்மித்த மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி போன்ற கிராமங்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். குறித்த கிராம மக்கள் பெருமளவானவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவிலாறு முழுமையாக உடைப்பு எடுக்லாம் என்ற அச்சத்தில் அந்த இடைத்தங்கல் முகாம்களையும் இடம்மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் கங்குவேலி கிராம மக்களின் ஒரு பகுதியினர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பின்னர் தோப்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கங்குவேலியின் பின்புறமாக உள்ள மகாவலி அணைக்கட்டு நேற்று (29) இரவு உடைத்து இரவு ஊரூக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. வீட்டுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது அதேபோன்று லிங்கபுரம் பகுதியிலும் ஆதியம்மன் கேணியின் பின்புறமாகவுள்ள மகாவலி அணைக்கட்டு சிறியளவில் உடைப்பெடுத்ததால் அங்கும் 3 அடிக்கு மேல் ஊருக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிவரை 17926 குடும்பங்களைச் சேர்ந்த 57858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16000 குடும்பங்களைச் சேர்ந்த 52416 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 1926 குடும்பங்களைச் சேர்ந்த 5442 பேர் 27 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 478 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மலைநாட்டில் உற்பத்தியாகின்ற மகாவலி கங்கையானது கிழக்கே குறிப்பாக வெருகல், மூதூர் ஆகிய பகுதிகளில் பல கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அந்தவகையில் வெருகலில் பகுதியில் இரு கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அதிக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலப்பகுதிகளில் மகாவலி கங்கையை மேவி பாய்கின்ற அல்லது உடைப்பு எடுக்கின்றபோது குறிப்பாக நாதனோடை அனைக்கட்டு உடைத்து வெருகல் பகுதி வெள்ளத்தில் மூழ்குவது வழமை. இது ஒவ்வொரு வருட இறுதியிலும் வழக்கமாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நாதனோடை அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் போடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தின் தாக்கம் கடந்த சில வருடங்கள் குறைவாக காணப்பட்டன. இந்நிவையில் மகாவலி கங்கையின் கிளையினால் வெளியாகின்ற பெருமளவான நீரை மறித்து மாவிலாறு அணைக்கட்டு கட்டப்பட்டு அதன் ஊடாக விவசாயத்திற்கு தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. இது கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் உயரமுடையதாக காணப்படுகின்றது. மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாகவும் ஏணைய நீர்த்தேக்கங்கள் திறந்து விட்டதன் காரணமாகவும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்துள்ளது. மேலதிக நீர் கடலுடன் கலப்பதன் மூலம் பாதிப்பு இல்லாத சூழல் உருவாகும் ஆனால் கடலுடன் கலப்பதற்கு குறித்த நீர் குறிப்பிட் தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் நீரின் அளவு மிகவும் அதிகம் என்பதால் அணைக்கட்டை மேவி பரவ வேண்டி ஏற்படுவதோடு அணைக்கட்டையும் உடைக்கும் நிலையும் உருவாகிறது. https://www.virakesari.lk/article/232084
  12. திட்வா புயல் - இலங்கையின் தற்போதைய நிலவரத்தை காட்டும் 20 புகைப்படங்கள் படக்குறிப்பு,வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான திட்வா புயலால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலரையும் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு,நுவரெலியாவிற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மண் சரிவால் மூடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,கடைகளைச் சூழ்ந்துள்ளா மழை வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,மீட்புப் பணிகளுக்காக படகுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74x3zxelw3o
  13. கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கழிமுக அகலப்படுத்தும் நடவடிக்கை இலங்கை கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க ஏற்கனவே விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/navy-personnel-missing-disaster-site-chundikulam-1764506135
  14. புதிய இணைப்பு Update - 06:47 விபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/extreme-weather-helicopter-accident-1764506677
  15. மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு மாவிலாறு உடைப்பை தொடர்ந்து சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து விமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டு வருதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அவசர கலந்துரையாடலின் போது ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்த ஒருவர், தங்கவெளி கிராமத்தில் உள்ள சுமார் 1,000 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்காலிக தங்குமிடம் இதற்கிடையில், நேற்று (29) இரவு மூதூர் மற்றும் நீலபொல பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் கிண்ணியா நகரம் தற்போது முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரங்களில் இருப்பதாகவும், அவர்களை மீட்க கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவில்ஆறு குளக் கரை உடைப்பு சோமபுர, சிறிமங்கலபுர, கல்யாறு மற்றும் தெஹிவத்த பகுதிகளைப் பாதித்து வருகிறது, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை சேருநுவரவில் உள்ள நவோதயா பாடாசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் சேருவில ராஜமகா விஹாரையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட உள்ளனர். https://tamilwin.com/article/immediate-action-rescue-1000-people-mavil-aru-1764502671
  16. மாவிலாறு அணை உடைந்துள்ளது மூதூர், வெருகல், சேருவில கடும் பாதிப்பு..! 30 Nov, 2025 | 04:42 PM மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர், வெருகல், சேருவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றில் அதிக நீர் ஓட்டம் மற்றும் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மாவிலாறு நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி ஒரே நீர்த்தேக்கமாகக் காணப்பட்டது. மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் . பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் நீர்ப்பாசன இயக்குநர் நாயகம் கேட்டுக்கொள்கிறார். கடற்படையினர் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கங்கை பாலத்திற்கு அருகாமையில் உள்ள முறிஞ்சாறு உடைப்பு எடுத்தன் காரணமாக மூதூர் பயணம் உப்பாறு பாலம் வழியாக போக முடியாமல் தடைப்பட்டுள்ளது. வெருகல் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. ஈச்சிலம்பற்று வைத்தியசாலை பாதிக்கப்பட்டுள்ளது. கங்குவேலி பாடசாலை மற்றும் முத்துவிநாயகர் விவசாய சம்மேளன கட்டிடம் முமுமையாக நீரில் மூழ்கி உள்ளன. மூதூர் - இறால் குழி , நாவலடி பிரதேச மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர் இவர்கள் அந்- நஹார் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாபிநகர், வேதத்தீவு மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மகாவலி கங்கை பெருக்கெடுப்பால் மாவிலாறு அணை உடைந்ததால் மூதூர், வெருகல், சேருவில மக்களின் வயல்கள், வீடுகள், கால் நடைகள் அழிவடைந்துள்ளன. https://www.virakesari.lk/article/232062
  17. கந்தப்பளை - எஸ்கடேல் பகுதியில் மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 04:47 PM நுவரெலியா - இராகலை பிரதான வீதியில் கந்தப்பளை, எஸ்கடேல் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். மண்ணில் புதையுண்டவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே இன்றைய தினம் வானிலை வழமைக்கு திரும்பி மழை இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரையில் மண்ணில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை பொலிஸாரும் பொது மக்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியை, தரம் 9 தரம் 6 கல்விபயிலும் இரண்டு மகன்கள் மற்றும் வயோதிப பெண் ஒருவர் என நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/232060
  18. கொத்மலை அனர்த்தத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண், காயமடைந்த இருவர், வெளிநாட்டவர்கள் உட்பட 24 பேர் இந்திய விமானப்படையின் ஒத்துழைப்புடன் மீட்பு 30 Nov, 2025 | 04:45 PM கொத்மலை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டுசென்றுள்ளனர். இன்று (30) இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI 17 (Indian Ac) ஹெலிக்கொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232059
  19. செயலிழந்துள்ள தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் தடையின்றி பராமரிக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, விரைவில் தகவல் தொடர்பு வசதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் பந்துல ஹேரத், TRCSL அதிகாரிகள் மற்றும் மொபைல் போன் சேவை வழங்குநர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுகர்வோருக்கு சிறப்பு சலுகை (Mobitel) மொபிடெல்: 7677 என்ற எண்ணுக்கு 'YES' என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள், 300 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் 3 நாள் பேக்கேஜ் பெறலாம். கூடுதலாக, SLT-Mobitel லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு வசதிகளையும், ஃபைபர், ஹோம் 4G LTE மற்றும் ADSL உள்ளிட்ட பிராட்பேண்ட் பயனர்களுக்கு வரம்பற்ற இணைய அணுகலையும் வழங்குகிறது. (Hutch) ஹட்ச்: எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் சலுகை. #3111# ஐ டயல் செய்வதன் மூலம் சலுகை பெறலாம். இதற்போது நுகர்வோருக்கு சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (Dialog) டயலொக் மற்றும் எயார்டெல்: எந்த நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள், 250 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் இலவச சலுகை #006# ஐ டயல் செய்வதன் மூலம் பெறலாம். https://tamilwin.com/article/announcement-regarding-the-broken-telephone-lines-1764496286 வடக்கு, கிழக்கு, தெற்கில் சில மாகாணங்களில் Dialog நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி இணைப்புகள் மட்டுமே செயலிழந்தது. Mobitel, Hutch இரண்டும் இயங்கியது.
  20. திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - 55 பேர் விமானம் மூலம் மீட்பு! 30 Nov, 2025 | 03:27 PM திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர். இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவருகின்றதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/232051
  21. திடீரென ரத்தான Flights.. உலகளவில் எதிரொலித்த பிரச்னைக்கு என்ன காரணம்? | Airbus A320
  22. Sri Lankaவில் மழை நின்ற பின்னும் குறையாத ஆபத்து; தொடர்ந்து Death Counts அதிகரிப்பது ஏன்? திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 228 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அரசும் 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் மீட்பு பணிக்கு உதவி வருகிறது. இந்த சூழலில் மின்சாரம், தகவல் தொடர்பு சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை பற்றி இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள். #SrilankaRains #SirlankaFlood #DitwahCylone இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  23. நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை வழங்கலாம். முதற்கட்ட நிவாரணமாக இன்றைய தினம் காலை 11 மணிக்கு, பாரவூர்தி செல்ல இருக்கிறது. தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை சேகரிப்பு பணி தொடர்ந்து நடைபேறும். சேகரிப்பு மையம் தொடர்பான அனைத்து பணிகளும் யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும். நன்றி. A Relief Supply Collection Centre has been established at the Faculty of Medicine, Jaffna for the public to donate essential items. From 7.00 a.m. today, the collection point will be functioning at the main entrance area (Aadiyapatham Road). Those who wish to extend their support may contribute urgently needed items such as: - Baby food (biscuits, milk powder, rusks) - Sanitary items (sanitary pads & diapers for women and children) - Baby soap - Disinfectants - Mosquito nets - Plastic sheets - Bed sheets - Tea - Milk powder - Sugar - Mosquito coils - Biscuit varieties - Packaged food items - Bottled water As the first phase of relief, a lorry carrying supplies will depart at 11.00 a.m. today. The collection process will continue until further notice. All activities related to the collection centre are being coordinated by the Student Union of the Faculty of Medicine, Jaffna. Thank you. தன்னார்வலர்களால் எம்மிடம் கையளிக்கப்படும் இடரனர்த்த உதவிப்பொருட்களை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொள்வதற்காக, உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் சேகரிப்பு மையம் - யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் (இராமநாதன் வீதி) அமைக்கப்பட்டுள்ளது. ☎️தொடர்புகளுக்கு - லஜிதன் : +94 76 205 6557 (தலைவர், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) - கஜேந்திரன் : +94 76 090 0982 (தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்) பேரனர்த்தத்துக்குள்ளாகியிருக்கிற எங்களது மக்களை மீட்டெடுக்கும், உயரிய பணியில் உங்களையும் பங்காளர்களாக அன்புரிமையுடன் அழைக்கின்றோம். - ஒருங்கிணைப்பாளர் : ம.தனுஷன் (உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்) +94 77 530 2813
  24. 30 Nov, 2025 | 04:02 PM சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஞாயிற்றுக்கிழமை (30) இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக மேலதிக ஒருங்கிணைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துரித நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கவனத்திற்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக - தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக - சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. 1. பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர் ஒழுங்கமைப்பில் வழங்க முடியும். மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும் எனவும், அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார். 2. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல் அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீரான உணவு விநியோகத்தில் வினைத்திறனான ஒத்துழைப்பினை வழங்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். 3. அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு தாம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலகங்களின் தேவைக்கு ஏற்ப மேலும் பங்கிட்டு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. மேற்படி பிரதேச செயலாளர்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பான திருத்தப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய தெளிவூட்டல்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடையூறும் அற்ற வகையில் சமைத்த உணவு வழங்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் பங்குபற்றியதுடன், நேரடியாக இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வை. தர்சினி, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் ஆ. நளாயினி ஆகியோர் பங்குபற்றினார்கள். https://www.virakesari.lk/article/232056
  25. மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பு - தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின! 30 Nov, 2025 | 12:43 PM திருகோணமலை மாவட்டம் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று (30) அதிகாலை உடைப்பெடுத்ததால் வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன. மகாவலி கங்கையின் நீர்வரத்து அப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களாக தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்ந்த பொதுமக்கள் அங்கிருந்து அனர்த்தப் பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232031 மாவிலாற்றுப் பகுதியில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டர்கள் 30 Nov, 2025 | 12:52 PM மாவிலாற்றுப் பகுதியில் இலங்கை விமானப்படையானது ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த பெல்–412 ஹெலிக்கொப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிக்கொப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிக்கொப்டர் ஆகியன மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. https://www.virakesari.lk/article/232032

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.