Everything posted by ஏராளன்
-
மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி
பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால். விபத்து ஒன்றில் வலது காலை இழந்த அவர், மனம் தளராமல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் குழுவின் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 2007ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற விசா பாராலிம்பிக் உலகக் கோப்பை போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில், அவர் தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பந்தயத்தில் அவர் 26.84 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை ஐரோப்பிய விண்வெளி முகமை தேர்வு செய்தது. இதைத் தொடா்ந்து, அவர் விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் விண்வெளிக்குச் செல்வதற்கு ஏற்ப என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அந்த முகமை ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், ஜான் மெக்ஃபால் விண்வெளிக்குச் செல்வதற்கு தடையாக எந்தவொரு தொழில்நுட்ப அல்லது மருத்துவக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஐரோப்பிய விண்வெளி முகமை, அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல அனுமதித்து மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கிப் பணியாற்ற உள்ளார். ஆனால், அவர் எப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்வார் என்ற தேதி இறுதி செய்யப்படவில்லை. மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி
-
இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
17 FEB, 2025 | 03:21 PM இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றமை இவரை பெருமைப்படுத்தும் விடயமாகும். அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
-
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்தது நிரூபணம் - தேர்தலில் போட்டியிட சிக்கல் வருமா?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் ப்ரீதம் சிங் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங், நாடாளுமன்றக் குழுவின் முன் சத்தியப்பிராமணம் செய்த போது பொய் கூறியுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரீதம் சிங் மீதான குற்றச்சாட்டுகள், அவர் தனது கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரயீசா கானை எப்படி எதிர்கொண்டார் என்பதுடன் தொடர்புடையது. முன்னதாக, வேறு ஒரு விவகாரத்தில் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியிருந்தார். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நேரத்தில் வெளியாகியுள்ளது. அந்த தேர்தல் நவம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 இடங்களில் ஒன்பது இடங்களை சிங்கின் தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீதம் சிங் தேர்தல் போட்டியிட சிக்கல் வருமா? சிங்கப்பூரில், குறைந்தபட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் (7,440 டாலர் ; 5,925 யூரோ) அபராதம் விதிக்கப்பட்டாலோ அல்லது ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலோ, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் பதவியை இழக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம். திங்களன்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி லூக் டான், மக்கள் நிரம்பிய நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். இந்த அமர்வு பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. "கான் ஒருபோதும் தனது பொய்யை ஒப்புக்கொள்வதை" சிங் விரும்பவில்லை என்பதை பல்வேறு சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார் . கான் தனது பொய்யைத் தொடர வழிகாட்டியதில் சிங்குக்கு "நேரடி மற்றும் நெருக்கமான ஈடுபாடு" இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். சிங் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 7,000 சிங்கப்பூர் டாலர் (5,200 டாலர்;4,200 யூரோ) அபராதம் விதிக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். உலகின் மிக ஏழ்மையான பகுதியாக இருந்து இப்போது மோசடிகளின் தாயகமாக மாறிய நகரத்தின் கதை டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு 48 வயதான சிங், விசாரணை முழுவதும் தான் குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஒரு முக்கியமான பிரச்னையைச் சமாளிக்க கானுக்கு நேரம் கொடுக்க விரும்பியதாக அவர் வாதிட்டார். ஆகஸ்ட் 2021-இல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவரிடம் காவல்துறை தவறாக நடந்துகொண்டதை தான் பார்த்ததாக கான் நாடாளுமன்றத்தில் கூறியதிலிருந்து இந்த விவகாரம் தொடங்கியது. பின்னர் தான் கூறியது உண்மை இல்லை என்பதை கான் ஒப்புக்கொண்டார். பிறகு, கான் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பொய் சொல்லி தவறாகப் பயன்படுத்தியதற்காக, அவருக்கு 35,000 சிங்கப்பூர் டாலர் (26,000 டாலர், 21,000 யூரோ ) அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். தான் கூறியது உண்மையில்லை என்று தெரிந்த பிறகும்,"அதே நிலைப்பாட்டை தொடருங்கள்" என்று ப்ரீதம் சிங் உட்பட அவரது கட்சியின் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின் போது கான் சாட்சியம் அளித்தார். தான் பொய் சொன்னதாக கான் ஒப்புக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கான் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த சிங், "இந்த விவகாரம் குறித்து கானிடம் பேசுவதற்கு முன், நிலைமையைக் கையாள அவருக்கு அதிக நேரம் கொடுத்ததாக" கூறினார் . அதனையடுத்து, சிங் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று முடிவு செய்த நாடாளுமன்றக் குழு , இந்த வழக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பியது. கானின் பொய்யைப் பற்றி கண்டுபிடித்த சிங், "ஒரு கட்டத்தில் தவறான தகவலை ரயீசா கான் விளக்குவதை விரும்பவில்லை" என்பதை சிங்கின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக நீதிபதி டான் திங்களன்று கூறினார். சிங்கின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டு தேர்தலின் போது, அவரது கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் இடங்கள் ஆறிலிருந்து பத்தாக உயர்ந்தது. 1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு எதிர்க்கட்சி அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாகும். தேர்தலுக்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். ரயீசா கான் ராஜினாமா செய்துள்ளதால், நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை அக்கட்சி இழந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்தது நிரூபணம் - தேர்தலில் போட்டியிட சிக்கல் வருமா?
-
புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும் - டில்வின் சில்வா
17 FEB, 2025 | 10:48 AM மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு சேவையாக இலங்கையின் புகையிரத சேவை மீளமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கண்டியில் தெரிவித்துள்ளார். கண்டியில் இருந்து தெமோதர நோக்கி பயணித்த 'எல்ல ஒடிசி - கண்டி புகையிரதத்தில் எல்லவுக்கு செல்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கண்டி ரயில் நிலையத்துக்கு சென்றபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும். அதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள் நமது நாட்டின் அரசு நிறுவனங்களையும் பொதுச் சேவையையும் புறக்கணித்தன. இதனால், அந்த நிறுவனங்கள் சரிந்தன. இடிந்து விழுந்த நிறுவனங்களில் ரயில்துறையும் அடங்கும். புகையிரதத் துறையினரின் அலட்சியத்தால் ரயில் சேவைகள் பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்தது. புதிய மலிமாவ அரசாங்கம் வந்த பின்னர் அனைத்து அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தலையிட்டு ரயில் சேவையை மீண்டும் பொது சேவையாக கட்டியெழுப்ப பாடுபட்டனர். இந்தச் சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகமானதாகவும் அதிக இலாபம் தரக்கூடியதாகவும் மாற்றப்படும் என்றார். புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும் - டில்வின் சில்வா
-
இந்தியா - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை: மத்திய அரசு ஏற்பாடு செய்ய கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
17 FEB, 2025 | 10:19 AM இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பலமுறை விளக்கியும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, தமிழக முதல்வர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது, மீனவர் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இரு நாட்டு எல்லைகளில் மீனவர் பிரச்சினை சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பினரும் பாதுகாப்பாக மீன் பிடிக்கின்றனர். அதேபோல, இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும், இதுவரை மீனவர் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தமிழக முதல்வர், விரைவில் மத்திய அரசின் இந்தப் போக்கை சரி செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பார். இவ்வாறு கனிமொழி பேசினார். பின்னர், பத்திரிகை இணையதளம் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பாஜக ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எதிர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு, ஊடகங்களை முடக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது" என்றார். இந்தியா - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை
-
'தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்' - மும்மொழிக் கொள்கை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சிகள்
கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 16 பிப்ரவரி 2025 "புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி" என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக என்ன சொல்கிறது? கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் கூறுவது என்ன? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்? தமிழுக்காக குழந்தைகளுடன் சிறைபுகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு தமிழ்நாடு மொழிப்போர் தியாகிகள் தினம்: இந்தித் திணிப்பை எதிர்த்து இத்தனை பேர் உயிரிழந்தது ஏன்? இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்? தர்மேந்திர பிரதான் கூறியது என்ன? உத்தரப் பிரதேசம் வாரணாசியில், காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு வாரணாசிக்கு சென்றுள்ளது. இந்த நிகழ்வை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன் என்று செய்தியாளர்கள் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினர். "புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்," என்றும் அவர் பதிலளித்தார். "பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, பல்வேறு பிரச்னைகள் இதற்கு காரணம். அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட போதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கிறதா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?" என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசியல் களத்தை சூடாக்கிய திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு16 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@DPRADHANBJP படக்குறிப்பு, காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் தமிழகத்திற்கு நிதி வழங்காதது குறித்து கருத்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின் கண்டனம் மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மும்மொழிக் கொள்கையை சட்டம் என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வி அமைச்சரால் கூற முடியுமா?" என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், "மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டும் தொணியை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்," என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?16 பிப்ரவரி 2025 டிரம்ப் புதினை சௌதி அரேபியாவில் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ஏன்? - பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@MKSTALIN/X படக்குறிப்பு,தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட கருத்து தமிழக தலைவர்கள் கூறியது என்ன? தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களைப் பாருங்கள். மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வதும், மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாட்டில் என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று திட்டவட்டமாக கூறினார். மத்திய அமைச்சரின் பேச்சைக் கண்டித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "அனைத்து மாநிலங்களையும் சமமாகக் கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதி. இது அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சாவால். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியளிக்கமாட்டோம் எனக் கூறுவது கொடுங்கோண்மை, ஆணவம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டித்துள்ளார். "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?" என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். "கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது" இது தேவையற்ற கருத்து என்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. "அரசியலமைப்புக்கு விரோதமான போக்கை அவர்கள் எடுத்துள்ளனர். கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றிருக்கிறதே தவிர, ஒன்றிய பட்டியலில் கல்வி இல்லை. ஒன்றிய பட்டியலில் கல்வி இருப்பதைப் போன்று ஏகாதிகாரமாக பேசுகிறார் மத்திய அமைச்சர். இருமொழிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது என்பது கொள்கை ரீதியிலான முடிவு. அதற்கு விரோதமாக தங்களின் கருத்தை திணிப்பதும், தங்களின் நிதி அளிப்புக்கு ஆதாரமாக இந்த கருத்தை முன்வைத்து பேரம் பேசுவதும் ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு கொந்தளிக்கும் சூழ்நிலையை அவர்கள் மீண்டும் உருவாக்கக் கூடாது," என்றார். "உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியை திணிக்க முயன்றாலும், அதன் விளைவுகளை உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது," என்று மும்மொழிக் கொள்கை தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக வீரமணி கூறினார். "மக்கள் வரிப்பணத்தை தான் அவர்கள் தருகிறார்களே தவிர, அது அவர்களின் சொந்தப் பணம் அல்ல. ஒரு கூட்டாட்சியில் இருக்கும் நாட்டை, மத்திய அரசின் ஏகபோக ஆட்சிக்கு ஏற்றவகையில் மாற்றுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை," என்றும் கூறினார் அவர். பட மூலாதாரம்,DMK படக்குறிப்பு,உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியை திணிக்க முயன்றாலும், அதன் விளைவுகளை உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது என அண்ணாதுரை கூறியதை மேற்கோள்காட்டினார் வீரமணி பாஜக கூறுவது என்ன? "உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். "அரசியல் அமைப்பின் படி நிர்வாக வசதிகளுக்காக இந்தியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, முதல்வர் முக ஸ்டாலின் கூறுவது போன்று மாநிலங்களால் இந்தியா உருவாக்கப்படவில்லை" என்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. "நாட்டு மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் பட்சத்தில், அதனை தமிழ்நாடு அரசு மட்டும் ஏற்க மறுப்பது இந்திய அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உள்ளாக்கும் செயல். புதிய கல்விக் கொள்கையை பின்பற்றும் மாநிலங்களுக்கு அதற்கான நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசு பின்பற்றாத போது அதற்கான நிதியை மட்டும் தமிழ்நாடு அரசு கேட்பது எந்த வகையில் நியாயம்," என்ற கேள்வியை முன்வைக்கிறார் அவர். மேற்கொண்டு பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் பிரதான மொழியையும் மூன்றாவது மொழியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துக் கொள்ளலாம். அந்த மொழியை பேசும் மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்த மொழியை இங்குள்ள மாணவர்களுக்கு கற்றுத் தரலாம். அதே போன்று தமிழ் மொழியையும் பிற மாநிலங்களுக்கு கொண்டு போய் சேர்க்க இயலும். ஆனால் இதனை தமிழ்நாடு அரசு செய்ய மறுக்கிறது," என்று குறிப்பிடுகிறார் அவர். "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைத் தவிர அனைத்து பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டும் அது எட்டாக்கனியாக உள்ளது" என்றும் அவர் குற்றம்சாட்டினார். கல்வியாளர்கள் கூறுவது என்ன? அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி மாநில செயலாளர் கே. யோகராஜன் பிபிசி தமிழிடம் பேசிய போது, இதில் இருக்கும் பல சிக்கலான கூறுகளை எடுத்துரைத்தார். "கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை முதலில் தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டு, அடிப்படை உரிமையை செயல்படுத்த நிதி வேண்டும் என்று கேட்க வேண்டும்," என்று கூறினார். "1990-களுக்கு முற்பாதியில், மாநிலங்கள் வரியை வசூலிக்கும் உரிமையைப் பெற்றிருந்தன. வரியை வைத்து, கல்விக்கு தேவையான நிதியை மாநில அரசுகள் ஒதுக்கின. ஆனால் வரி வசூலிக்கும் உரிமையானது மத்திய அரசிடம் சென்ற பிறகு, கல்விக்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு நிதியை மட்டுமே வழங்க முடியுமே தவிர, மாநில அரசுகள் அதனை எப்படி செலவிட வேண்டும்? எதன் அடிப்படையில் கல்வித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை," என்று தெரிவிக்கிறார். நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய பிறகும் உயிருடன் மீண்டு வந்தது எப்படி? இளைஞரின் திகில் அனுபவம்51 நிமிடங்களுக்கு முன்னர் இரான் 'ஷாவின்' ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரச விழா! 1971-ல் நடந்தது என்ன?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சட்டமன்றங்களற்ற யூனியன் பிரதேசங்களில் சமக்ர சிக்ஷா திட்டத்தை செயல்படுத்த 100% நிதியை மத்திய அரசே வழங்கும் அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன? "இந்தியையோ அல்லது இதர மொழியையோ கற்றுக் கொள்ளுமாறு மக்களை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. ஆனாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார் எழுத்தாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் சித்ரா. இந்திய அரசியல் அமைப்பு குறித்த 'இந்திய மக்களாகிய நாம்' என்ற புத்தகத்தின் ஆசிரியரான அவர் பிபிசி தமிழிடம் பேசினார். "கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசு கல்வி தொடர்பாக எத்தகைய கொள்கையை கொண்டு வந்தாலும், மத்திய அரசுடன் முரண்படாத வகையில் மாநில அரசு தான் உருவாக்கிய கொள்கையை செயல்படுத்தலாம். ஆனால், மத்திய அரசு இதற்கு மாறாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தால், பொதுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தால், அதிகாரம் அதிகம் கொண்ட மத்திய அரசின் கொள்கையை பின்பற்றியே ஆக வேண்டும்," என்று கூறுகிறார். "மத்திய அரசுடன் முரண்படுகையில், மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனாலும் அரசியலமைப்பு பிரிவு 74-ன் படி, குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்று மட்டுமே செயல்பட இயலும். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது," என்றும் தெரிவித்தார் வாஞ்சிநாதன் சித்ரா. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அரசியலமைப்பு மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்பதால் ஒத்திசைவு பட்டியலில் இடம் பெற்றுள்ள அம்சங்களிலும் மத்திய அரசின் முடிவே அதிக வலுப்பெறும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தி எதிர்ப்பு தமிழ்நாட்டில் பல காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, சி.ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்டாய இந்தி குறித்து அவர் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் 1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கான ஆணை இடப்பட்டது. இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும் பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் போராட்டங்கள் எதிரொலியாக, 1940ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. முதலில் சென்னை மாகாணத்தில் இருந்த (இப்போதைய) ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் (தற்போது) தமிழ்நாடு இருக்கும் பகுதிகளில் விருப்பப் பாடமென்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, தமிழ்நாட்டிலும் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. முடிவில் 1950ல் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ஆட்சி மொழியாக எதனைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. முடிவில் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்திக்கு எதிரான மன நிலை பல மாநிலங்களில் நிலவிய நிலையில், இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. "தொடரலாம்" என்று இருப்பதை "தொடரும்" என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது. இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுமென அறிவித்தார். ஆட்சி மொழிச் சட்டம் செயல்படுத்தப்படும் நாளான 1965ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. ஜனவரி 17ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு திருச்சியில் கூட்டப்பட்டது. எதிர்வரும் குடியரசு தினத்தைக் கொண்டாட ஏதுவாக, மொழி மாற்ற தினத்தை ஒரு வாரம் தள்ளிவைக்கும்படி அண்ணாதுரை கோரினார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆகவே ஜனவரி 25ஆம் தேதியை துக்க தினமாக அறிவித்தது தி.மு.க. அன்றைய தினம் சி.என். அண்ணாதுரையும் 3,000 தி.மு.கவினரும் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் நடந்த ஊர்வலத்தில் வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகம் அருகே மோதல் ஏற்பட்டது. முடிவில் அந்த அலுவலகப் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதையடுத்து மதுரை முழுவதும் கலவரம் பரவியது. அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. ஜனவரி 28ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கலவரங்கள் பிப்ரவரி மாதமும் தொடர்ந்த நிலையில், இந்திய அரசில் அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசனும் இந்தி விவகாரத்தில் தங்கள் அரசின் பிடிவாதத்தை எதிர்த்து பதவி விலகல் கடிதம் அளித்தனர். முடிவில், பிப்ரவரி 11ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. 'தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்'
-
முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி
முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த போராட்டம் இன்று (16) மூன்றாவது நாளாக தொடர்கின்றது பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். போராளியின் கொள்கை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் (16) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) உள்ளிட்டவர்கள் சென்று தமது ஆதரவை வழங்கியதோடு குறித்த முன்னாள் போராளியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்பட்டு செல்வதாகவும் இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது சாதகமாக அமைகின்ற பட்சத்தில் நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்துள்னனர். அரசியல் அமைப்பு இருப்பினும், உடனடியாக இதனை செயல்படுத்த முடியாத காரணத்தினால் உங்களது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை ஆகவே எங்களது இந்த முயற்சிக்கு உரிய ஒரு கால அவகாசத்தை கொடுத்து தங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கோரியுள்ளனர். இருப்பினும், தமிழரசு கட்சியினுடைய உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் மூன்று கட்சிகளையும் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வந்து குறித்த அரசியல் அமைப்பு விடயத்திலே தனது கோரிக்கைக்கு ஏற்ற வகையிலே தாங்கள் விடயங்களை கையாளுவதாக உத்தரவாதம் தரப்படும் பட்சத்தில் தான் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக குறித்த முன்னாள் போராளி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி
-
முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த கேப்பாபிலவு மக்கள்
Published By: VISHNU 16 FEB, 2025 | 09:44 PM முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஞாயிற்றுக்கிழமை (16) மறுக்கப்பட்டிருந்தது. மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதமரை சந்திக்க வந்த கேப்பாபிலவு மக்கள் அவரை சந்திக்க முடியாது ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி காணி உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். தாம் அமைச்சர் சந்திரசேகரனின் அழைப்பின் பேரில் காணி விடுவிப்பு தொடர்பாக வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை. என்ற கருத்து இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது இவர்களை நம்பாத தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த கேப்பாபிலவு மக்கள்
-
இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு பணிப்பு
Published By: DIGITAL DESK 3 16 FEB, 2025 | 04:51 PM இராணுவ மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவம் பணிப்புரை விடுத்துள்ளது. வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு பணிப்பு
-
காதலர் தினக் கதை
முன்னால் வீட்டுப் பூ வேலைக்காகது அண்ணை! அது காசுக்கு வாங்கி இருந்தால் தானாம்.....
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
ஐயா பெரியவர்களே சிறிசுகள் பாதுகாப்பாக இருப்பதை குழப்பிவிடாதீர்கள், வேறு மாற்றுவழிகளை(உங்கள் அநுபவம், நம்பகமான மருத்துவர்) பரிந்துரையுங்கள்.
-
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்; வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி
முடிவெட்ட போயிற்று(வெயிலில் பகல் நேரம் அநாவசியமாக வெளியே செல்வதில்லை) வரும்போது குளிக்க உதவும் தம்பி வரத்தாமதமாக சிறிது நேரம் போயிருந்தேன் அண்ணை. 2 மணிக்கூட்டம் 2.45 அளவில் ஆரம்பமானது. பிரதமர் வந்திறங்கிய பின்னர் புறப்பட்டுவிட்டேன். தொல்புரத்தில் உள்ள முன்னாள் கம்யூனிஸ்ட் அமரர் சுப்ரமணியம் ஞாபகார்த்த 'சத்தியமனை' நூலகத்திற்கும் பிரதமர் சென்றிருந்தார்.
-
யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 16 பிப்ரவரி 2025, 14:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். மறுபுறம், ஐரோப்பிய தலைவர்கள் நாளை பாரிஸில் அவசர உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். யுக்ரேன் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகளாவிய ராஜ தந்திரத்தில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன. இதனால், யுக்ரேன் குறித்த முக்கியமான முடிவுகளில் ஐரோப்பா ஓரங்கட்டப்படுவதாக கவலைகள் எழுந்துள்ளன. அதை நிவர்த்தி செய்வதே பாரிஸில் நாளை நடக்கவுள்ள உச்சிமாநாட்டின் நோக்கம். டிரம்ப் புதினை சௌதி அரேபியாவில் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன? 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் அவசரமாகக் கூடும் ஐரோப்பிய தலைவர்கள் சௌதி அரேபியாவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இந்த முக்கியமான பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதையொட்டி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசரமாகக் கூடி விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அவசர உச்சிமாநாட்டில், ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுப்பதில் இருந்து ஐரோப்பிய நாடுகள் தவிர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேனின் நிலைமை குறித்து விவாதிக்க பிப்ரவரி 17ஆம் தேதியன்று நடக்கவுள்ள இந்த உச்சிமாநாடு 'பெரிதுபடுத்தப்படக் கூடாது' என்றும் இத்தகைய சந்திப்புகள் வழக்கமான ஒன்றுதான் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் அளித்த பேட்டியில், "நமது தேசியப் பாதுகாப்பைப் பொருத்தவரை, இந்த விவகாரம் மிகவும் அரிதான ஒன்று" என்றார். அத்துடன், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் வலுவான பங்கைக் கொண்டிருப்பது மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆப்ரகாம் லிங்கனின் மனைவி அமெரிக்க வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்பட்ட 'முதல் பெண்மணி' - ஏன் தெரியுமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் 'யுக்ரேனிய-அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுத் திட்டம் அவசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், 'ஐரோப்பிய நாடுகளின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கா போருக்கு விரைவான தீர்வை நாடுகிறது' என்ற அதிகரித்து வரும் கவலைகளை கீயர் ஸ்டார்மரின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா தவிர்க்கக்கூடாது என்று பிரிட்டனுக்கான ஜெர்மன் தூதர் மிகேல் பெர்கர் கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமை காலையில் பிபிசி ரேடியோ 4இல் பேசிய மிகேல் பெர்கர், அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிகமாக சமரசம் செய்திருக்கலாம் என்று தெரிவித்தார். குறிப்பாக, "யுக்ரேன் நேட்டோவில் சேர அனுமதிக்கப்படாது, யுக்ரேனில் அமெரிக்க ராணுவம் இருக்காது என்ற ரஷ்யாவின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது" என்று கூறினார். இதன் மூலம், பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கத் தேவைப்படும் இரண்டு முக்கிய அம்சங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், "நாம் ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸிகியும் அதையே வலியுறுத்தினார். "சமாதான உடன்பாட்டை அடைவதற்கு ரஷ்யாவிடம் என்ன கேட்க வேண்டும் என்பது குறித்து யுக்ரேனிய-ஐரோப்பிய-அமெரிக்க கூட்டுத் திட்டம் இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது" என்று அவர் தெரிவித்தார். யுக்ரேனின் முதுகுக்குப் பின்னால் செய்யப்படும் எந்த ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியின் எச்சரிக்கைகளை பெர்கரும் எதிரொலித்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?8 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் 'ஷாவின்' ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரச விழா! 1971-ல் நடந்தது என்ன?16 பிப்ரவரி 2025 அமெரிக்கா - ஐரோப்பா இடையே பிரிட்டன் பாலமாக இருக்குமா? யுக்ரேன் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவை ஓரங்கட்டுவது, சூடான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. "எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் நீடிக்கக் கூடியதாகவும் நியாயமான ஒன்றாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஐரோப்பாவின் ஈடுபாடு அவசியம்" என்று பிரிட்டனின் தொழில் மற்றும் வர்த்தக செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் பேசியபோது, "ஐரோப்பாவின் ஆதரவு இல்லாத தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியாது. நீடித்த அமைதியைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்கு வகிக்க வேண்டியது மிகவும் முக்கியம்," என்று ரெனால்ட்ஸ் கூறினார். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஐரோப்பாவை விலக்கி வைப்பது, அந்தக் கண்டத்தின் மூலோபாய பாதுகாப்பு நலன்களை முழுமையாக நிவர்த்தி செய்யாத ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கலாம் என்பதே ஐரோப்பிய தலைவர்களிடையே உள்ள முதன்மையான கவலைகளில் ஒன்று. ரஷ்யாவுடனான அவசர ஒப்பந்தம் ஆக்கிரமிப்புக்கு வெகுமதி அளிக்கக் கூடியதாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒன்றாகவும் இருக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக அதிபர் டிரம்பை விமர்சித்து வரும் சில ஐரோப்பிய தலைவர்களுக்கும் இடையில் பாலமாக இருக்க முயலும் இடத்தில் தாம் இருப்பதாக பிரிட்டன் கருதுவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் நேற்றிரவு கூறியதாக பிபிசி அரசியல் செய்தியாளர் ஹேரி ஃபார்லே குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பிரிட்டன் மற்றும் அதன் பாதுகாப்பு செலவினங்கள் மீது இவை அனைத்தும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. "பிரிட்டன் தொழிலாளர் கட்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடக்கூடிய ஒரு திட்டத்தை வகுக்க உறுதி அளித்துள்ளது. ஆனால், அது எப்போது நடக்கும் என்பதற்கான உடனடி காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த சில நாட்களில் ராணுவத் தலைவர்கள் பிரிட்டன் தனது பாதுகாப்பு செலவினங்களை 2.5 சதவீதத்திற்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்" என்கிறார் ஹேரி ஃபார்லே. முன்னாள் ராணுவத் தலைவர் லார்ட் டான்னட் பிபிசியிடம் பேசியபோது, "பிரிட்டன் ராணுவம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்றார். யுக்ரேனில் எதிர்கால அமைதி காக்கும் பணிகளை வழிநடத்த முடியாத நிலையில் பிரிட்டன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, "பிரிட்டனின் பாதுகாப்பு செலவினங்களைக் கணிசமாக உயர்த்தத் தவறினால், கீயர் ஸ்டார்மரை வரலாறு புறக்கணிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார். நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய பிறகும் உயிருடன் மீண்டு வந்தது எப்படி? இளைஞரின் திகில் அனுபவம்15 பிப்ரவரி 2025 டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?14 பிப்ரவரி 2025 யுக்ரேன் விவகாரத்தில் நிலவும் இருவேறு கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விவகாரத்தில் இருவேறு கருத்துகள் நிலவுவதாகக் கூறுகிறார் பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர். அதில் ஒன்று, ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான யுக்ரேனின் எதிர்ப்பு தொடர்வதை "முடிந்த வரைக்கும்" மேற்கு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற நேட்டோவின் நீண்டகால நிலைப்பாடு. ஃபிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, பொருளாதாரத் தடைகள் மற்றும் நீடித்த போர் காரணமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையான சிக்கலில் உள்ளதாகவும் யுக்ரேன் இன்னும் சில மாதங்கள் மட்டும் தாக்குப்பிடிக்க முடிந்தால், ரஷ்யாவின் தாக்குதல் முடிந்துவிடும் என்றும் அதன் விளைவாக யுக்ரேன் இப்போது இருப்பதைவிட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வலுவான நிலையில் இருக்கும் என்றும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், "இந்த நிலையெல்லாம் மாறிவிட்டதாக மற்றுமொரு கருத்து நிலவுகிறது. அதன்படி, டிரம்ப் நிர்வாகத்திற்கு அதற்கான நேரமோ பொறுமையோ இல்லை. இந்தப் போர் உடனடியாக முடிவடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். புதினுடனான ஒப்பந்தத்தில் அவர் கவனம் செலுத்தி வேகமாக முன்னேறி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார் ஃபிராங்க் கார்ட்னர். மேலும், "ஐரோப்பாவும் யுக்ரேனும் இந்தப் புதிய, கடினமான சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முயல்கின்றன. அதனால்தான் பல சந்திப்புகள் நடக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு அவசரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நெருக்கடியான பெரிய விஷயம் நடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க தலைவர்கள் அவசரமாக ஒன்று கூடுகின்றனர்" என்றார் கார்ட்னர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், யுக்ரேன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, "ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்த விளாதிமிர் புதினுக்கு இதன் மூலம் வெகுமதி அளிக்கும் ஆபத்து இருந்தாலும்கூட, வெள்ளை மாளிகை ரஷ்யாவுடன் அந்த ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன" என்றும் பிராங்க் கார்ட்னர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரேனின் பாதுகாப்புக்கு நீண்ட காலத்திற்கு இதே அளவிலான ஆதரவை வழங்குவது குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நேட்டோவின் எதிர்காலத்தையும், ஐரோப்பாவின் பாதுகாப்பு முற்றிலும் அதன் கைகளிலேயே விடப்படுமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதற்கிடையே, நேட்டோவில் வலுவான ஐரோப்பிய பங்கு இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்த பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், யுக்ரேனின் எதிர்காலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தால் எழுதப்படக் கூடாது என்றும், அது ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த விவாதங்கள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, சௌதி அரேபியாவில் ரஷ்ய பிரதிநிதிகளைச் சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த மாறி வரும் சூழலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த உத்திகளை வகுக்க ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சிமாநாட்டை நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு, வரும் ஆண்டுகளில் ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மறுவடிவமைக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
16 ஆண்டுகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமாகப்படுகிறது அண்ணை. அவருடைய நெருங்கிய நட்புகளாவது முயன்று பார்க்கலாமே? அவர் நேரடிப்போராளி இல்லைத்தானே? மனித உரிமைச் செயற்பாட்டாளர் தானே?
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
உயரந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாட்டில் கைது செய்ததில் உள்ள முரண்களைச் சுட்டி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதா?!
-
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (High Commissioner for Canada) வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா துறையில் அபிவிருத்தி அவசியம். பாதை வலையமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள்பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பவையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள், தமது பயண பொதிகளை பேருந்துகளில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டு கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்றனர் என கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர் அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை தான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியகக் கூடியதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணை, எனக்கும் வருவதில்லை! என் புரிதலின்படி நமக்கு நாமே முகப்புத்தகம் போல விருப்பக் குறி இடக்கூடாதென!
-
இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி
இலாபம் அடைவதற்காக நாடகம் ஆடுகிறார் அதானி : வெளியான குற்றச்சாட்டுமன்னார்(mannar) காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி விலகுவது இலாபகரமான முதலீட்டிற்காக நடத்தப்படும் நாடகம். காற்றாலை திட்டத்திலிருந்து அதானி(adani) நிறுவனம் விலகியிருப்பது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதற்காக மக்கள் போராட்டக் கூட்டணி நடத்திய சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவா(Duminda Nagamuwa) இவ்வாறு கூறினார். இலங்கையின்(sri lanka) மன்னார் பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய காற்றாலை மின்சார திட்டத்தை செயல்படுத்துவதில்லை என்று இந்தியாவின் அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாகவும், அதானி செயல்படுத்தவிருந்த திட்டம் ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களின் பெரும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும் நாகமுவா கூறினார். மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..!பரிந்துரைக்கப்பட்ட கேள்வி நடைமுறைக்கு புறம்பாக அதானி நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்கியதே பொதுமக்களின் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்றும், அதிக விலைக்கு திட்டத்தை வழங்கியதால் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடும், தொடர்புடைய திட்டத்தால் நாட்டின் இறையாண்மைக்கு ஏற்படும் சேதமும் சூழ்நிலையின் மிகவும் தீவிரமான அம்சங்கள் என்று நாகமுவா கூறினார். உலகின் 16 முக்கியமான பறவை இடப்பெயர்வு மண்டலங்களில் ஒன்றுஇந்தத் திட்டம் செயல்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள மன்னாரில் உள்ள விடத்தல் தீவு பகுதி, காலநிலை மாற்றத்தின் போது உலகின் 16 மிக முக்கியமான பறவை இடம்பெயர்வு மண்டலங்களில் ஒன்றாகும் என்று துமிந்த நாகமுவ தெரிவித்தார். மேலும், 30 நாடுகளிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் இந்தப் பகுதி வழியாக நாட்டிற்குள் இடம்பெயர்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் பகுதியில் சுமார் ஒரு மில்லியன் பறவைகள் சுற்றித் திரிவதால், சுற்றுச்சூழல் பிரச்சினையை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், இது உலகத்தின் மற்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கிறது என்றும், எனவே இதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். ஹம்பாந்தோட்டை மிகவும் பொருத்தமானதுமன்னார் பகுதியை விட காற்றாலை மின் திட்டத்தை செயல்படுத்த ஹம்பாந்தோட்டை(hambantota) மிகவும் பொருத்தமானது என்று மொரட்டுவ பல்கலைக்கழகம் செய்த சமன்பாடு தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பகுதி கைவிடப்பட்டு மன்னாரில் இது அமைக்கப்படுவது இங்கு இந்தியாவின் தலையீடு இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது என்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிர்வாக உறுப்பினர் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்தார். இலாபம் அடைவதற்காக நாடகம் ஆடுகிறார் அதானி : வெளியான குற்றச்சாட்டு
-
கொழும்பு உயர்நீதிமன்றில் யாழ். பல்கலைத் துணைவேந்தருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு!
யாழ். பல்கலை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை: நிர்வாகம் எடுத்த தீர்மானம்யாழ். பல்கலையின் 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த வகுப்புத்தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. பேராசிரியர் ரகுராம்அதனை அடுத்து தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார். பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டது. இந்நிலையில் முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. மாணவன் மீதான வகுப்புத்தடைஇந்த வகுப்புத் தடை யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதி எஸ்.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் , இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/law-student-s-suspension-lifted-1739700195#google_vignette
-
போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை
பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் - எம்.ஏ.சுமந்திரன் உறுதிPublished By: DIGITAL DESK 2 16 FEB, 2025 | 02:05 PM பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு இன்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள். இதன்போது குறித்த பகுதியில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபான நிலையத்தினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்கள். குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார். இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது சிலர் இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் - எம்.ஏ.சுமந்திரன் உறுதி
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். செய்திகள் - பிரதீபன் யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்16 FEB, 2025 | 12:26 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு கடந்த வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அந்நிலையிலையே நேற்று சனிக்கிழமை (15) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்
-
இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி
இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையின் மன்னார் பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்தைக் கைவிட அதானி கிரீன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 15 பிப்ரவரி 2025 இலங்கையின் மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட அதானி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மற்றும் இலங்கை தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளனர். இலங்கையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாகன இறக்குமதி - விலை இரட்டிப்பாகும் என்ற அச்சம் ஏன்? இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - நடுக்கடலில் என்ன நடந்தது? காற்றாலை மின் திட்டத்தைக் கைவிட தீர்மானம்மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட தீர்மானித்துள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜீன் ஹேரத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்தை மீள் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்ததாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8,700 கோடி) முதலீட்டில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தது. காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டது ஏன்?மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பல அனுமதிகள் கிடைத்துள்ள போதிலும், சுற்றாடல் ஆய்வு அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால், இந்த அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திட்டத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இலங்கை மின்சார சபையின் காற்றாலைகள் இந்தத் திட்டம் குறித்து அரசாங்கத் தரப்புடன் கடந்த இரண்டு வருட காலமாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 484 மெகாவாட் திட்டமாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவுடன் 14 தடவைக்கும் அதிகமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை, வரி விலக்குக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் அனைத்து விடயங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதானி கிரீன் நிறுவனத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின்சார திட்டம் தொடர்பான கட்டமைப்பு உள்ளிட்ட முன்னோடி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அண்மித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தமது நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு அதிகாரிகள் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தேச திட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு மற்றும் திட்டக் குழு மீண்டும் நியமிக்கப்பட்டமையினால், இலங்கையின் சுயாதீன உரிமைக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தில் இருந்து வெளியேற தமது நிறுவனத்தின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ளதாக அதானி நிறுவனம் குறிப்பிடுகின்றது. தமது நிறுவனம் எப்போதும் இலங்கைக்காக நிற்கும் என்றும், மீண்டும் அபிவிருத்தி வாய்ப்புக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் அழைப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் நிறுவனத்தின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் இந்தியாவுக்கு விற்க உள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன? ஒரு மணி நேரம் பறக்க ரூ. 34 லட்சம் செலவா?15 பிப்ரவரி 2025 வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்15 பிப்ரவரி 2025 இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா? பட மூலாதாரம்,PMD SRI LANKA அதானி கிரீன் நிறுவனம், மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தில் இருந்து வெளியேறுகின்றமை தொடர்பில் இதுவரை மின்வலு அமைச்சுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவிக்கின்றார். ''எமக்கு இதுவரை அறிவிக்கவில்லை. அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. நானும் அந்தக் கடிதத்தைக் கண்டேன். அது முதலீட்டு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம். முதலீட்டு சபையினால் எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனத்தினால் எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எதையும் கூற முடியாது" என்று அமைச்சின் செயலாளர் கூறுகின்றார். இலங்கையில் அதானி குழுமத்தின் மற்ற முதலீடுகளின் நிலை என்ன?மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 500 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் கையெழுத்திட்டுள்ளது. மேலும், கொழும்பு துறைமுக நகர் கொள்கலன் முனையத்தை ஒன்றிணைந்த வகையில் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் அதானி நிறுவனம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கையெழுத்திட்டது. சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன?14 பிப்ரவரி 2025 டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தத் திட்டத்தின் ஊடாக 51 சதவீத பங்குகள் அதானி நிறுவனத்திற்கு கிடைக்கப் பெறவுள்ளன. அதானி நிறுவனத்தின் இலங்கை முகவரான ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு 34 சதவீத பங்குகளும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 15 சதவீத பங்குகளும் உரித்தாகின்றன. இந்தத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் முந்தைய ஆட்சியாளர்களால் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதானி மின் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகள்அதானி நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட காற்றாலை திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக மன்னார் பகுதியில் உத்தேசிக்கப்பட்ட திட்டத்திற்கே இவ்வாறு எதிர்ப்புகள் எழுந்திருந்தன. வலசைப் பறவைகளின் வருகைக்கு இந்தத் திட்டத்தின் ஊடாகப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக சூழலியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். மன்னார் வழியாகவே இந்த வலசைப் பறவைகள் நாட்டிற்குள் வருகை தருவதாகக் கூறப்படுகின்றது. 30 நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இலங்கைக்குள் வருகை தருவதுடன், ஓராண்டுக்கு சுமார் 15 மில்லியன் பறவைகள் வருவதாகக் கூறப்படுகின்றது. படக்குறிப்பு, எந்தவொரு காரணத்திற்காகவும் காற்றாலை மின்சார திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமைக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் மன்னார் மாவட்ட மீனவ சங்கத்தின் தலைவர் ராஜா குரூஸ் அத்துடன், மன்னார் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, எந்தவொரு காரணத்திற்காகவும் காற்றாலை மின்சார திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமைக்க இடமளிக்க மாட்டோம் என்று கூறினார் மன்னார் மாவட்ட மீனவ சங்கத்தின் தலைவர் ராஜா குரூஸ். படக்குறிப்பு, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை சந்தியோ மார்கஸ் காற்றாலை திட்டத்தினால் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றமையினால், இந்த திட்டத்திற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை சந்தியோ மார்கஸ், பிபிசி தமிழிடம் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். ''இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கெனவே 30 காற்றாலைகள் பொருத்தப்பட்டுள்ளன. அது பல்வேறு பாதிப்புகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எதிர்நோக்கிய சிரமங்களை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம். அதனை நிவர்த்தி செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பின்னர் காற்றாலை மின் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளோம்." என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
உலகெங்கும் அதிகளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகள் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. டென்மார்க் நாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 15-49 வயதுடைய 20 லட்சத்துக்கும் அதிகமாக பெண்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்திரைகள், உடலுக்குள் பொறுத்திக்கொள்ளும் பொருட்கள், ஊசிகள் உள்ளிட்ட கருத்தடை நடைமுறைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கெனவே அச்சங்கள் இருந்தாலும், அது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு 4,760 பெண்களுக்கு மற்ற நோய்களுடன் கூடுதலாக பக்கவாதமும், ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் ஒவ்வொரு 10,000 பெண்களுக்கும் ஒரு கூடுதல் மாரடைப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற கருத்தடைகளின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்கள் அவற்றை பரிந்துரைக்கும்போது இந்த சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி