Everything posted by ஏராளன்
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1076 பேர் கைது! 01 Nov, 2025 | 02:45 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை 9031) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1072 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும், போதை மாத்திரைகளுடன் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 20 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229230
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்!
01 Nov, 2025 | 01:00 PM அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிகிச்சை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட்காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அருமையாகக் கேட்ச் பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் அய்யரின் இடது விலாப்பகுதி மைதானத்தில் பலமாக அடிபட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவரால் களத்தடுப்பு செய்ய வர முடியவில்லை. ஆரம்பத்தில் அவர் இடது கீழ் விலா எலும்புப் பகுதியில் காயமடைந்திருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், சில 'ஸ்கேன்' பரிசோதனைகளுக்குப் பிறகு, காயம் விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறலை ஏற்படுத்தி, அதனால் உள்ளுறுப்பு இரத்தக்கசிவு (Internal Bleeding) உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அணியின் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஒரு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் உடனடியாக இரத்தக்கசிவைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை அளித்தனர். தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது உடல்நிலை சீரானதையடுத்து (Condition is Stable) வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229223
-
யாழில் செம்மணி புதைகுழி உட்பட பல விடயங்களுக்கு நீதி வேண்டி கவனஈர்ப்பு போராட்டம்
01 Nov, 2025 | 04:30 PM சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, "அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்" என்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/229243
-
80 வயது மூதாட்டியை தீவிலேயே விட்டு புறப்பட்ட சுற்றுலா கப்பல் - இறுதியில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள்' பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. "சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது" என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார். "பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்" அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சுசான் ரீஸ் என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை. கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது "என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக" உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார். தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார். "எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Coral Expeditions ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன. தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது. "காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது," என்று கேத்தரின் கூறினார். "அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்." "இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்." "அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று நம்புவதாக கேத்ரின் கூறினார். ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபிஃபீல்ட், "சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் 'மிகவும் வருந்துவதாகவும்', ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்" கூறினார். "குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது" என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் 'டெண்டர்ஸ்' எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) 'க்ரூஸ்' பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார். "பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்" என்று மாலின்சன் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85jk2znvno
-
கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை - ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது!
01 Nov, 2025 | 12:34 PM இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, வெள்ளிக்கிழமை (31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் மற்றும் கடற்படை விமான நடவடிக்கைகள் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது. மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே மேம்பட்ட கடற்படை ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை பெரிதும் எளிதாக்கும், மேலும் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு பதிலளிப்பதற்கான ஒரு கூட்டு அணுகுமுறையையும் எளிதாக்கும். https://www.virakesari.lk/article/229221
-
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 90 மில்லியன் டொலர் கடனுதவி
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேற்படி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கை;கான அதன் பணிப்பாளர் டக்காஃபுமி கடானோவும் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229201
-
ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? உணவாகச் சாப்பிடுவது நல்லதா?
பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன? ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன. கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும். தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன. அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன் தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது. "பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன். மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார். அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது." பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும். அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர். இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார். மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ. மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது. இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ. அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார். "பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்." படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா? புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன. அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன். இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ. "மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு." ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார். ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும். எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் எதிர் என்பிபி என இருக்கும் என நினைத்தால் என்பிபி எதிர் தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் என மாறிவிட்டதா?!
-
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
பிரித்தானியாவிலுள்ள இலங்கை வைத்தியர்களை நாடு திரும்பக் கோரிய சுகாதார அமைச்சர் 31 Oct, 2025 | 01:32 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். தான் அண்மையில் மேற்கொண்ட பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமூக வலைத்தள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தக் கலந்துரையாடலின்போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள எமது விசேட வைத்திய நிபுணர்களை, நாடு திரும்புவது குறித்துப் பரிசீலிக்குமாறு ஒரு விசேட வேண்டுகோளை விடுத்தேன். எமது சுகாதார சேவையில் தற்போது விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. அவர்கள் இலங்கைக்குத் திரும்பிப் பணியாற்றினால், அவர்களின் அனைத்து முந்தைய சேவைப் பலன்களுடன் சேர்த்து அதே பதவிகளில் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/229132
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
இலங்கை சனத்தொகையில் எந்த மாவட்டத்தில் அதிக சனத்தொகை - முழு விபரம் Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 04:44 PM இலங்கையின் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஒவ்வொரு பத்து ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்டுகிறது. இருப்பினும், 2020 ஆண்டின் போது முகங்கொடுக்க நேரிட்ட கொவிட்தொற்று மற்றும் அதற்கு பின்னர் முகங்கொடுக்க நேரிட்ட நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இத் தொகைமதிப்பானது 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது நான்கு கட்டங்களில் மேற்கொள்ளப்படும். முதலாவது கட்டம் "வரைபடம் தயாரிக்கும் கட்டம்" என அழைக்கப்படுவதுடன் அதன் போது நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் பிரிவினை அடிப்படையாக கொண்டு "தொகைமதிப்புக் கண்டம்" எனும் பெயரில் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. இரண்டாவது கட்டம் "நிரற்படுத்தும் கட்டம்” இதன்போது தொகைமதிப்புக் கண்ட வரைப்படங்களைப் அடிப்டையாக் கொண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள சகல கட்டடங்கள் மற்றும் அவற்றினுள் உள்ள தொகைமதிப்புக் கூறுகளை, ("வீடு","கூட்டு வசிப்பிடம்","வதிவிட நிறுவனம்", மற்றும் "வசிப்பிடம் அல்லாத கட்டடக் கூறு"என வகைப்படுத்தி) அடையாளங்கண்டு அதற்கான இலக்கம் ஒன்றினை வழங்கி நிரற்படுத்தப்பட்டது. இதன்போது அடையாளங்காணப்பட்ட சகல தொகைமதிப்புக் கூறுகளுக்கும் சிவப்பு நிறத்தினால் ஆன தொகைமதிப்பு லேபல் ஒன்று ஒட்டப்படும். மூன்றாவது கட்டம் அவ்வாறு தயாரிக்கப்பட்ட தொகைமதிப்புக் கூறுகளின் பட்டியலுக்கு ஏற்ப மூன்றாவது கட்டத்தின் போது தனி நபர் மற்றும் வீட்டுவசதிகள் தொடர்பான தகவல் சேகரிப்பானது 2024 ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 2025 ஆண்டு பெப்ரவரி மாதம் வரை 19 ஆம் திகதி அல்லது (2024 டிசம்பர் 18 ஆம் திகதி அவ்வாறு சேகரிக்கப்பட்ட மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "தொகைமதிப்பு தினம்" உதயமாகும் கணம் அதாவது 00.00 மணி நள்ளிரவு 12.00) "தொகைமதிப்புக் கணம்" என கருதப்படும். தகவல்கள் தொகைமதிப்புக் கணத்தினை அடிப்படையாக கொண்டு இற்றைப்படுத்தப்படும். இறுதிக் கட்டத்தின் போது சேகரிக்கப்படும் வெளியிடப்படும். தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு லங்கையில் தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, இம் முறை தொகைமதிப்பில் தரவு சேகரிப்பு செயல்முறை கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. நபர்களின் வாழ்க்கைத் தகவல்கள், கல்வி, எழுத்தறிவு, உடல் மற்றும் மன நிலைமைகள். குடிபெயர்வு நிலை போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு நபரிடமிருந்தும் தனித்தனியாகப் பெறப்பட்டன. அதன்படி. ஒட்டுமொத்தமாக ஒரு தனிநபரின் சமூக, பொருளாதார மற்றும் மக்களியற் தகவல்களின் தொகுப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் மூலம் டிப்படையாகக் கொண்டு முதலாவது சுற்றில் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிறப்பு, இறப்பு மற்றும் வசிப்பிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்கமையத் திருத்தங்கள் இரண்டாவது சுற்றின் போது மேற்கொள்ளப்பட்டது. இது 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து 2024 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களைக்கொண்ட காலத்தினுள் மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்புத் தகவல்களுக்கு ஏற்ப இலங்கையின் சனத்தொகை மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கூறுகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக 2025.10.30 ஆம் திகதி அன்று தெகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. சனத்தொகைப் பரம்பல் மற்றும் ஆண்,பெண், பாலின அமைப்பு 2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையினை நகரம், கிராமம், மற்றும் பெருந்தோட்டம் எனும் மூன்று பிரிவுகளாக பிரித்து தரவு சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், 2024 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது அவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு நகரம், கிராமம், நகரப் பெருந்தோட்டம், மற்றும் கிரமியப் பெருந்தோட்டம் என நான்கு பிரிவுகளாக தரவு சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த நான்கு பிரிவுகளும் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டன. நகரப் பெருந்தோட்டப் பிரிவு மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும். கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும். நகரப் பிரிவு மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, “நகரப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும். கிராமப் பிரிவு பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, “கிராமியப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும். 2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது மாநகர சபை மற்றும் நகர சபையின் மூலம் நிர்வாகிக்கப்படுகின்ற சகல பிரதேசங்களும் "நகரப் பிரிவு" என்றும், அதன்படி 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது "நகர- பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள், 2012 ஆம் ஆண்டின் போது “நகரப் பிரிவு” என்பதன் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, 2012 தொகைமதிப்பின் போது “பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள் 2024 தொகைமதிப்பின் போது கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு என கருதப்பட்டுள்ளது. “கிராமம்” எனும் பிரிவை அடையாளங்காண்பதில் 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை. அதன் பிரகாரம் பிரிவு அடிப்படையிலான சனத்தொகையைப் போன்று மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை விபரங்கள் அட்டவணை 1 இன் மூலம் காட்டப்பட்டுள்ளது. 2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. 2012 தொகைமதிப்பின் போது பதிவாகிய 20,359,439 சனத்தொகையை விட இம் முறை சனத்தொகையானது 1,422,361 இனால் அதிகரித்து காணப்படுகிறது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது கிராமப் பிரிவின் சனத்தொகை 1,343,596 இனால் அதிகரித்தும், நகரப் பிரிவின் சனத்தொகை 114,733 இனால் அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் பெருந்தோட்டப் பிரிவுகளில் மாத்திரம் 35,968 சனத்தொகையில் குறைவடைந்திருப்தைக் காணலாம். சனத்தொகையின் 'பாலின அமைப்பு' என்பது பாலினத்தின்படி சனத்தொகைகுள் நபர்களின் பரவலாகும். இம்முறைத் தொகைமதிப்பிலே கணக்கிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையினை விட 757,112 இனால் அதிகமாக காணப்படுகிறது. விகிதாசாரமாகக் காட்டினால் இலங்கையின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 51.7 வீதம் பெண்களாவர் என்பதுடன் நூற்றுக்கு 48.3 வீதம் ஆண்களாவர். 2012 தொகைமதிப்புடன் ஒப்பிடும்போது, இம்முறை நகரம் மற்றும் கிராமப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் பெருந்தோட்டப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் அதிகமாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் போது, நகரப் பிரிவுகளில் பெண்களின் சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. சனத்தொகைத் தகவல்கள் இம்முறை தொகைமதிப்பின் போது இலங்கையின் மொத்த சனத்தொகை 21,781,800 என பதிவாகியுள்ளது. அதில், 51.7 சதவீதம் பெண்கள் மற்றும் 48.3 சதவீதம் ஆண்களும் காணப்படுகின்றனர். நாட்டில் 15 வயதிற்கும் குறைந்தவர்களின் சனத்தொகை 2012-2024 ஆண்டிற்கான தொகைமதிப்புக் காலவரையறையினுள் 25.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாக 4.5 சதவீத அலகுகளில் குறைந்துள்ளது. அதேபோல், இந்த காலகட்டத்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சனத்தொகை 7.9 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக 4.7 சதவீத அலகுகளினால் அதிகரித்துள்ளது. ஆம் ஆண்டில் 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகையானது மொத்த சனத்தொகையில் 66.7 சதவீதமாக காணப்படுகிறது, இது 2012 இல் 66.9 சதவீதமாக காணப்பட்டது. அதன்படி 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகைக்கான சதவீதம் 2012-2024 தொகைமதிப்பு காலவரையறையினுள் இந்த சதவீதம் 0.2 அலகுகளில் குறைந்துள்ளது. பதினைந்து வயதுக்குட்பட்ட மற்றும் அறுபத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சனத்தொகைக்கான கூட்டுத்தொகையைக் தங்கிவாழ்வோர் என கருதப்படும். 2012 ஆம் ஆண்டு தொகைமதிப்பின் பிரகாரம் கணக்கெடுப்பின்படி 49.4 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 49.8சதவீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை சனத்தொகையின் இனப்பரம்பல் தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட இனத்தை அவர்களது இனமாக அடையாளம் காணப்படுகின்றன. அதன்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 74.1 சதவீதம், அல்லது சனத்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சிங்களவர்கள் என்றும், 12.3 சதவீதம் பேர் இலங்கை தமிழர்கள் என்றும், 10.5 சதவீதமானோர் இலங்கைச் சோனகர்/முஸ்லிம் என்றும், 2.7 சதவீதமானோர் இந்திய தமிழர்கள்/மலையக தமிழர்கள் என்றும் பதிவாகியுள்ளன. மேலும், மீதமுள்ள சதவீதமானது சனத்தொகை சதவீதத்தில் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட பிற இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவாகியுள்ளது. 0.3 தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட சமயத்தை அவர்களது சமயமாக அடையாளங்காணப்படுகின்றன. நாட்டில் மொத்த சனத்தொகையில் 69.8 சதவீதம் பௌத்தர்கள் என்பதுடன் 12.6 சதவீதம் இந்துக்கள் ஆவர். 10.7 சதவீதம் இஸ்லாமியர்கள், 5.6 சதவீதம் றோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் 1.3 சதவீதம் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் இந்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் அந்த சதவீதம் 0.02 என்ற சிறிய எண்ணிக்கையைக் கொண்டு காணப்படுகிறது. 2024 தொகைமதிப்பில் இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் சதவீதங்களை 2012 தொகைமதிப்புடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுதல் மற்றும் 2012 - 2024 ஆம் ஆண்டுக்கான சராசரி அதிகரிப்பு விகிதம் அட்ட வணை 06 இல் காட்டப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இனரீதியான பரம்பல் வரைபடம் 04 இல் காட்டப்பட்டுள்ளது. இனத் தொகுதிகளுக்கிடையில் 2012- 2024 காலப்பகுதிக்குள் சனத்தொகையில் கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைச் சோனகர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் அவர்களின் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 1.5 நாட்டின் மொத்த சனத் தொகை வளர்ச்சி வேகத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகமானதாகும். அதற்கடுத்ததாக கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைத் தமிழர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் 2012- 2024 காலப்பகுதியினுள் அவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 1.3 ஆகும். 2012 2024 காலப்பகுதியில் சனத்தொகையில் சிங்களவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 0.4 ஆகும். இக்காலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் நூற்றுக்கு 2.6 என்ற மிகக் குறைவான வருடாந்த வளர்ச்சி விகிதத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இலங்கையின் வேறு இனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் இக் காலப் பகுதியில் அந்தச் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் அதன் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு - 3.1 ஆகும். இம்முறைத் தொகைமதிப்பில் (2024) மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குடிசனத் தொகைமதிப்பின் போது இனத் தொகுதிக்கு ஏற்ப சனத்தொகை வீகிதாசாரம் மாவட்ட மட்டத்தில் அட்டவணை 7 இல் காட்டப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியிலான சனத்தொகை பரம்பல் கம்பஹா மாவட்டம் அதிக சனத்தொகை (2436142) மாவட்டமாகவும், முல்லைத்தீவு குறைவான சனத்தொகை (122619) மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிகமானோர் பெண்கள் என்பது முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டுத் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிலேயேகும். அதன்போது தொகைமதிப்பு முழுமையாக நடைபெற்ற 18 மாவட்டங்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 50.2 வீதமானோர் பெண்களாவர். இருப்பினும் பதிவுகளுக்கமைய 1981, 2001, 2012 மற்றும் 2024 தொகைமதிப்புகளின்போது மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட பால்நிலை விகிதாசாரம் அட்டவணை 2 இல் வழங்கப்பட்டுள்ளது. 2024 தொகைமதிப்பின் போது, நாட்டின் 25 மாவட்டங்களையும் கருத்தில் கொள்ளும்போது, சகல மாவட்டங்களிலும் பால்நிலை விகிதாசாரம் 100 விடக் குறைவான மதிப்புகளைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (1) 1981 தொகைமதிப்புத் தொடர்பாக தற்போது காணப்படும் மாவட்ட எல்லைகளுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. (2) 2001 தொகைமதிப்புத் தொடர்பாகத் தொகைமதிப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த மாவட்டங்களுக்கு மட்டும் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. இம்முறை தொகைமதிப்பின் போது அதிகூடிய பால்நிலை விகிதாசாரம் மொனராகலை மாவட்டத்தில் 97.9 சதவீதம் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த தொகைமதிப்பில் மிகக் குறைந்த பால்நிலை விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88.0 சதவீதம் பதிவாகியுள்ளது. வீட்டுவசதிகள் தொடர்பான தகவல்கள் வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்கள் நபர்கள் வசிக்கும் வீட்டுக் கூறுகளில் இருந்தே சேகரிக்கப்படும் என்பதுடன், இதன் போது வீட்டுக் கூறின் தகவல்கள் மற்றும் குடித்தனத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இலங்கையில் வசிக்கும் வீட்டுக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை 6,030,541 ஆகும். அதிகமான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (28 சதவீதம்) மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றது என்பதுடன், குறைவான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (51 சதவீதம்) வட மாகாணத்தில் பதிவாகியுள்ளன. நாட்டிலுள்ள வீட்டுக்கூறு 4.32 வகைகளினுள் 95.66 சதவீதமான வீட்டுக்கூறுகள் தனி வீடுகளாகும் என்பதுடன் இணைந்த வீடுகளாகும். எஞ்சிய வீட்டுக் கூறுகளில் 82 சதவிதம் ஏனைய வீட்டுக் கூறுகளாக பதியப்பட்டுள்ளது. இலங்கையில் வீட்டுக் கூறுகளில் 97.9 சதவீதம் மாத்திரம் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையுள்ள பொருட்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதுடன், எண்ணிக்கையில் 2.1 சதவீதமானவற்றின் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையற்ற களிமண் பலகை/ கிடுகு/பனையோலை போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வீட்டுக்கூறுகளில் 98.1 தன்மையுள்ள பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1.7 சதவீதமானவற்றின் கூரைகள் சதவீதத்திலும் கூரைகள் நெடுவாழ்வுத் நெடுவாழ்வுத் தன்மையற்ற கிடுகு/ பனையோலை/ வைக்கோல் போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள மொத்த வசிக்கும் வீட்டுக்கூறுகளில் காணப்படும் மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும் என்பதுடன், குடித்தனத்தின் அளவு (வழமையாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை) 3.5 ஆகும். இலங்கையில் உள்ள மொத்த குடித்தனங்களில் 38.9 சதவீதமானவர்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்புச் சபையிடமிருந்து விநியோகிக்கப்படுகின்ற நீர்ஆகும். நாட்டில் மொத்தக் குடித்தனங்களில் 97.4 சதவீதமானோர் வெளிச்சத்தினைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக மின்சாரம் காணப்படுகிறது . மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கையில் 92.2 சதவீதமானோர்க்கு தமது குடித்தனத்தில் தனியான பாவனைக்கு (வீட்டுக் கூறினுள் அல்லது வீட்டுக் கூறிற்கு வெளியில்) மலசலகூடம் காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/229096
-
நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?
இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்? பட மூலாதாரம், Griet Van Malderen கட்டுரை தகவல் இசபெல் கெர்ரெட்சன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று. அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது. "அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார். மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது. 'எல்லாமே ஒரு போராட்டம்தான்' "இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென். "இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்." காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார். மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார். 'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை' இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார். "பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார். மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார். அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்." பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார். "இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன." இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது. "ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன." பட மூலாதாரம், Griet Van Malderen படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன மீண்டும் கடற்கரைக்கு பயணம் 2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின. "கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது." பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது." 2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்." நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது. "இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர். இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார். சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1dkp7793o
-
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025]
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா, வளத்துடன் வாழ்க.
-
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்
தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் ஜொலித்த இலங்கை இராணுவ வீர வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி பாராட்டு 31 Oct, 2025 | 11:38 AM இந்தியா ராஞ்சியில் ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் வியாழக்கிழமை (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர். இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர், அதில் 30 பேர் இலங்கை இராணுவ உறுப்பினர்கள் என்பது சிறப்பு அம்சமாகும். அந்த இராணுவ வீர வீராங்கனைகள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 27 பதக்கங்களை இலங்கைக்கு வென்றுத்தந்துள்ளனர். இந்த சிறப்பான விளையாட்டு வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் இராணுவத் தளபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு முன்னேற்றத்திற்காக ரூ. 6 மில்லியனுக்கு மேற்பட்ட சிறப்பு நிதியுதவியும் வழங்கினார். இதன்போது பதக்கம் வென்ற 18 வீர, வீராங்கனைகளுக்கு அவர்களின் அடுத்த நிலைக்கான நிலை உயர்வும் இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/229117
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, புதிய அணி உலக சம்பியனாவதை உறுதிசெய்தது 30 Oct, 2025 | 11:30 PM (நெவில் அன்தனி) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா மூன்றாவது தடவையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதமும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் பெற்ற அரைச் சதமும் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டி முடிவை அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வராற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாகப் போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை புதன்கிழமை வீழ்த்தி முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற தென் ஆபிரிக்கா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 339 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. உபாதைக்குள்ளான ப்ரத்திக்கா ராவலுக்குப் பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷபால் வர்மா 10 ஓட்டங்களுடனும் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 2 விக்.) ஆனால், சிரேஷ்ட வீராங்கனைகளான ஜெமிமா ரொட்றிகஸ், ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறப்பான நிலையில் இட்டனர். அஹாமன்ப்ரீத் கோர் தசை இழுப்புக்குள்ளான சொற்ப நேரத்தில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார். அவர் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது தீப்தி ஷர்மா அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து அநாவசியமாக விக்கெட்டை தாரைவார்த்தார். அவர் 24 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் புகுந்த ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று கவனக்குறைவான அடி தெரிவால் ஆட்டம் இழந்தார். அவர் 4ஆவது விக்கெட்டில் ரொட்றிகஸுடன் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா ரொட்றிகஸ் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். ஆமன்ஜோத் கோர் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களைக் குவித்தது. ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த அபார சதம், எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியன அவுஸ்திரேலியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. அவர்களின் முயற்சிகள் ஜெமிமா ரொட்றிகஸின் அபார சதத்தினால் வீணடிக்கப்பட்டுவிட்டது. உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அணித் தலைவி அலிசா ஹீலி வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், ஃபோப் லிச்ஃபீல்ட், எலிஸ் பெரி ஆகிய ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஃபோப் லிச்ஃபீல்ட் 93 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார். பெத் மூனி 24 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 3 ஓட்டங்களுடனும் எலிஸ் பெரி 77 ஓட்டங்களுடனும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஏஷ்லி கார்ட்னர் 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிகஸ் https://www.virakesari.lk/article/229089
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
30 ஆண்டுகள் கழித்து அணு ஆயுத சோதனை நடத்தவுள்ள அமெரிக்கா! - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 31 Oct, 2025 | 12:34 PM அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தற்போது அணு ஆயுத சோதனைகளில் இறங்கியிருக்கும் நிலையில், ட்ரம்ப் அமெரிக்க அணு ஆயுத சோதனையைத் தொடங்குவது குறித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இறுதியாக 1992ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய அமெரிக்கா, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இச்சோதனையை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு உலக நாடுகளை பதற்றமடையச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “ஏனைய நாடுகள் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் அதற்குச் சமமாக நமது அணு ஆயுதங்களை சோதிக்கத் தொடங்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். அமெரிக்கா மற்றைய நாடுகளை விட அதிகமான அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சீனா தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சமமான இடத்தை எட்டிவிடும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை ட்ரம்ப் சந்திப்பதற்கு சற்று முன்பு அவர் சமூக ஊடகத்தில் இதனை பதிவிட்டுள்ளார். சோவியத் ரஷ்யா - அமெரிக்கா இடையே 1990இல் பனிப்போர் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்தன. அந்த போரில் சோவியத் ரஷ்யா தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை நடத்த ஐ.நா தடை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே போர் தொடங்கி நீடித்து வருகிறது. இதற்கு மத்தியில் ரஷ்யா அணுசக்தி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. “புரெவெஸ்ட்னிக்” (Burevestnik) என்கிற அதிநவீன அணுசக்தி ஏவுகணையை சோதித்ததோடு, நேற்று (30) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி ட்ரோனை சோதனையிட்டது. ரஷ்யாவின் இத்தகைய அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து, தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை குறிப்பிட்டார். அதில், ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளுக்கு இணையாக அணு ஆயுத சோதனைகளைத் தொடங்குமாறு அமெரிக்க இராணுவத்துக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/229125
-
கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் - ஐங்கரநேசன்
31 Oct, 2025 | 06:35 PM வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவில் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர். தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஓர் அரசியல் சொல்லாடல் அல்ல. இது ஓர் இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229190
-
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!
முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் Published By: Digital Desk 1 31 Oct, 2025 | 04:07 PM வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இன்று முதல் இலவசமாக பொலித்தீ பைகள் வழங்கப்படாது என நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீ பைகளின் விலையும் இன்று முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை (நவ. 01) முதல் பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என ஏற்கனவே வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளையதினம் முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/229133
-
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 11:42 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர். இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. https://www.virakesari.lk/article/229118
-
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
31 Oct, 2025 | 04:03 PM தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ள சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்வது சாதாரணமான ஒரு பயணமாக மாற்றமடைந்து வரும் தற்கால சூழ்நிலையில், 16 வயதிற்குட்பட்ட பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் மாணவ சிறார்களுக்கு விரத மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முற்படும் பெற்றோர் குறிப்பாக அத்தகைய யாத்திரைக்கு பொறுப்பான குருசுவாமிகள் சில முக்கியமான விடயங்களை பரிசீலித்து அம்முடிவை மேற்கொள்வது அவசியமாகும். "மகரஜோதி" தரிசன பருவகால யாத்திரை என்பது நவம்பர், டிசம்பர், ஜனவரியை சார்ந்ததாக, கார்த்திகை, மார்கழி, தை மாதமென 60 தினங்களை கொண்ட விரதகால யாத்திரையாகும். இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் அரசாங்க பாடசாலைகளிலும் வருட இறுதிப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை என்பவை நடப்பது வழமை. இக்காலப்பகுதியில் விரதமாலை அணியும் நிலையில், மாணவர்களின் கல்வி, பரீட்சை சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும். அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவில் முழுமையாக தேவைப்படும் நிலையில் 16 வயதிற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்கல்வி என ஏராளமான கல்விச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவ பருவ சிறார்களின் யாத்திரை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில், சாதாரண குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்தவர்கள் திட்டமிட்டு செயற்படவேண்டியது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக அமையும். பொதுவாகவே 11 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இந்து சமய சைவ சமய ரீதியாக தீர்த்த யாத்திரை என்பது சொல்லப்பட்டது அல்ல. ஆனால், பக்தி மார்க்கத்தில், தமது நேர்த்திக்கடன், பிரார்த்தனை என்று அனுப்புவோரும் இத்தகைய விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியே அனுப்பினாலும் ஒருமுறை யாத்திரை அனுப்பலாம். தொடர்ந்து மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஏன் தொடர்ந்தே செல்ல வேண்டும் என்ற மனநிலையும் பிடிவாதமும் முறையல்ல. இவ்விடயத்தில் தற்போது சபரிமலை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாச்சார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பன மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். நமது சமயத்தில் பெற்றோர் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக, சமய பற்றுள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக, சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவே கூறுகிறது. அவர்கள் வெறுமனே சாமியார்களாகவோ, 18 வயதில் 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற துறவியாக மட்டுமே உருவாக காரணமாக அமைந்து அவர்களினதும் நமது சமூகத்தினதும் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/229152
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களில் 10 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmheoaqth01b3o29nqg3z56h8
-
கடலில் தொலைந்த அலைச்சறுக்கு பலகை: 2,400 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
பட மூலாதாரம், Alvaro Bon படக்குறிப்பு, அல்வரோ போன் கட்டுரை தகவல் லானா லாம் சிட்னி 30 அக்டோபர் 2025 சுமார் 18 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் ஒரு படகிலிருந்து தவறி விழுந்த, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சர்ப்ஃபோர்டு (அலைச்சறுக்கு பலகை), கடலில் சுமார் 2,400 கிமீ (1,490 மைல்கள்) தூரம் மிதந்து சென்று, நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்குத் தீவில் உள்ள ராக்லான் துறைமுகத்தில் கைட்சர்ஃபிங் (kitesurfing) செய்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்வரோ போன் என்பவர், கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைக் கண்டுபிடித்தார். அவர் தான் கண்டுபிடித்தது குறித்துப் பல ஆன்லைன் சர்ஃபிங் குழுக்களில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பலகையின் உரிமையாளரின் நண்பர் அதைக் கண்டு, இருவரையும் இணைத்து வைத்தார். இந்தப் பலகை இந்த வாரம் அதன் ஆஸ்திரேலிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். அந்த உரிமையாளர், லியாம் என்று மட்டுமே அறியப்படுகிறார். மே 2024-இல் இந்தப் பலகை படகில் இருந்து காற்றில் பறந்து சென்றது. "அவரால் நம்பவே முடியவில்லை," என்று போன் பிபிசியிடம் கூறினார். அதன் வடிவமைப்பாளர் தற்போது சர்ஃப் போர்டுகளைத் தயாரிப்பதில்லை என்பதால், அந்தப் பலகைக்கு மாற்று இல்லை என அவர் மேலும் கூறினார். சுமார் பத்து ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வரும் 30 வயதான போன், ராக்லானில் தினசரி கைட்சர்ஃபிங் செய்கிறார். பலகையைக் கண்ட நாளன்று வலுவான நீரோட்டங்கள் காரணமாகத் தன் காற்றாடிச் சறுக்குக் கயிற்றை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். கடலில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொள்வதை விட தனது பட்டத்தை இழப்பது மேல் என்ற என சட்டென அவர் முடிவெடுத்தார். அவர் துறைமுகத்தின் தொலைதூரப் பகுதிக்கு சென்றபோது புகுந்தபோது, கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த ஆனால் பெரிதாக எந்தச் சேதமும் இல்லாத, கிரீம் நிறத்தில் இருந்த 7 அடி 6 அங்குல (229 செமீ) பலகையைக் கண்டார். அவர் அதை மணல் மேடுகளில் மறைத்து வைத்து, சில நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து, அதை துறைமுகத்துக்கு எடுத்துச் சென்றார். பலகையைச் சுத்தம் செய்த பிறகு, அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார். பலகையின் வடிவமைப்பாளரின் தனித்துவமான கையொப்பத்தைக் காட்டும் படங்களை அவர் பதிவிட்டார். "நிச்சயமாக இது தினமும் பயன்படுத்தப்படும் பலகை அல்ல... இது கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மிதந்து வந்திருக்க முடியுமா என்று யோசிக்கிறேன்?" என்று அவர் எழுதினார். "அந்த செய்தியில் நான் அந்தப் படங்களையும் பதிவிட்டேன். பின்னர் நான் ராக்லானில் மீண்டும் அலைச்சறுக்குச் சாகசத்துக்குச் சென்றேன் என்று நினைக்கிறேன்," என்று போன் கூறினார். திரும்பி வந்தபோது, மர்மமான பலகை பற்றிய பதில்களால் அவரது தொலைபேசி நிரம்பி வழிந்தது. நூற்றுக்கணக்கானோர் அந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், இந்த அசாதாரண கண்டுபிடிப்பு குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். லியாமின் நண்பர் பலகையைக் கண்ட பிறகு, லியாம் அதன் உரிமையாளர் என்பதைக் நிரூபிக்கப் பலகையின் படங்களை போனுக்கு அனுப்பினார். மேலும், ஒரு குடும்ப நண்பரைத் தொடர்புகொண்டு அதை எடுத்து வர ஏற்பாடு செய்தார். தனது விதியினால் ஏற்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு குறித்துப் போன் தத்துவார்த்தமாகப் பேசினார். "ஒவ்வொரு கதைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது... நான் சர்ஃப் போர்டைக் கண்டுபிடித்த அதே நேரத்தில், என் காற்றாடிச் சறுக்கை இழந்தேன்," என்று அவர் கூறினார். "ஒருவேளை அதுதான் அர்த்தமாக இருக்கலாம்... சில சமயங்களில் நீங்கள் சிறந்தவற்றைக் கண்டுபிடிக்கச் சில விஷயங்களை விட்டுவிட வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7nd17v4nxo
-
இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?
31 Oct, 2025 | 03:36 PM “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிஸ்டல் ரக துப்பாக்கியை மறைத்து வைப்பதற்கு ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி கடவத்தை பிரதேசத்தில் வைத்து ஒக்டோபர் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்டபுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக கம்பஹா நீதிமன்றில் 5 வழக்குகள் காணப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் கைதுசெய்யப்பட்ட போது இந்த பெண் சட்டத்தரணி, அந்நாட்டுக்குச் சென்று குடு சலிந்துக்காக வாதிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருடன் வாட்ஸ்அப் ஊடாக தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “தருன்” என்பவர் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/229148
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
"என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை" - ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு ஜெமிமா கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார். கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் " மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை கடந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஒரு புதிய சாம்பியன் உருவாகப் போகிறது." இந்திய இன்னிங்ஸின் 49வது ஓவரில் சோஃபி மோலினோவின் பந்து வீச்சில் அமன்ஜோத் கௌர் ஒரு பவுண்டரி அடித்தவுடன், வர்ணனையாளர் கூறிய சொற்கள் இவை. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை விவரிக்க இதைவிட சிறந்த சொற்கள் இருக்க முடியாது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடித்த அற்புதமான சதமும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீருடன் நிறைந்த 89 ரன்களும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தன. அமன்ஜோத் வெற்றிகரமான ஷாட்டை அடித்ததும், ஜெமிமா ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்தார். அதே நேரத்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, தன்னைச் சுற்றியிருந்த வீராங்கனைகளை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் ஆடத் தொடங்கினார். ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌரின் கண்ணீர் மல்கிய கண்கள், அவர்கள் இணைந்து வரலாறு படைத்ததைப் வெளிப்படுத்தின. அவர்களின் கூட்டணி, பல சாதனைகளை முறியடித்து, இந்தியாவை மூன்றாவது முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. அதுவும், முந்தைய 15 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அவர்கள் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியிலும், ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் இணைந்து விளையாடத் தொடங்கும் வரை ஆஸ்திரேலியா தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்தது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் அகாடமியில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 339 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இது மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி வரலாற்றில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த ஸ்கோராகக் கருதப்படுகிறது. பின்னர் ஆஸ்திரேலியா இந்திய தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவை 9.2 ஓவர்களில் 59 ரன்களுக்கு வெளியேற்றியது. அதனால், ஒரு கட்டத்தில் இந்தியா போட்டியிலிருந்து முற்றிலும் வெளியேறியதாகவே தோன்றியது. மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யப்போவது குறித்து தெரியாது- ஜெமிமா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து ஜெமிமா நீக்கப்பட்டார். அப்போது தான் போட்டியின் சூழலே மாறத் தொடங்கியது. ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் தொடர்ந்து வேகமாக ரன்கள் குவித்து, ரன் விகிதத்தின் அழுத்தத்தை சமாளித்தனர். கடினமான சூழ்நிலையிலும், ஜெமிமா 56 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 65 பந்துகளில் அரைசதத்தை எட்டியதும், இன்னும் வேகமாக விளையாடத் தொடங்கினார். சதம் அடிக்க முடியாவிட்டாலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தனர். இது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் சிறந்த மூன்றாவது விக்கெட் கூட்டணியாக அமைந்தது. ஜெமிமா மிகுந்த மன உறுதியுடன் களத்தில் நின்றதால், போட்டிக்குப் பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவரைப் பற்றி பெருமையாகப் பேசியார். "ஜெமிமா முழுப் பொறுப்பையும் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டது போல இருந்தது. நாங்கள் இருவரும் பேட்டிங் செய்தபோது, ஒருவரையொருவர் ஊக்குவித்தோம். ஜெமிமா அழுத்தத்தை அதிகரிக்க விடாமல், என்னை எளிமையாக விளையாடச் செய்தார். அவருடன் பேட்டிங் செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர், தான் ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், என்னையும் தொடர்ந்து ரன்கள் எடுக்கத் தூண்டினார். எல்லா பாராட்டுக்களும் அவருக்கே சொந்தம்"என போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார். இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் களமிறங்கிய ஜெமிமாவுக்கு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டியது குறித்த தகவல் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் கிடைத்தது. "நான் சாதாரணமாக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மூன்றாவது இடத்துக்கும் அனுப்பப்படுவேன். இந்த முறை இன்னிங்ஸ் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்"என போட்டிக்குப் பிறகு அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதியில் ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி சாதனை படைத்தனர். "நான் அணி வெற்றி பெற உதவ விரும்பினேன்" ஆனால் ஜெமிமா களமிறங்கிய தருணத்திலிருந்தே, இந்தியாவை இறுதிப் போட்டிக்குத் கொண்டு செல்லாமல் பெவிலியனுக்குத் திரும்பமாட்டேன் என்ற உறுதியுடன் விளையாடியதை போல தோன்றியது. அதனால்தான் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி போன்ற பெரிய மேடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதம் அடித்த பிறகும் அவர் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. இந்தியா வெற்றியடையும் வரை காத்திருந்தார். போட்டி முடிந்ததும் அவர் ஆட்ட நாயகர் பட்டத்தைப் பெற்றபோது, 127 ரன்கள் கொண்ட அவரது அற்புத இன்னிங்ஸின் கதையைச் சொல்ல எந்த வார்த்தைகளும் தேவைப்படவில்லை. அவர் சிந்திய கண்ணீரே அந்தக் கதையைச் சொன்னது. "நான் ஒரே ஒரு விஷயத்தை தான் நினைத்தேன். அணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். இன்று அது எனது 50 அல்லது 100 ரன்களைப் பற்றியது அல்ல. இந்தியா வெற்றி பெறுவதே முக்கியம்"என்று ஜெமிமா கூறினார். இந்த வெற்றியின் அடித்தளம் என, ஹர்மன்ப்ரீத் கவுருடன் இருந்த தனது கூட்டணியை அவர் விவரித்தார். "கடைசி வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் கிரீஸுக்கு வந்ததும், நாங்கள் நல்ல கூட்டணியை உருவாக்குவது பற்றிப் பேசினோம். தொடர்ந்து ரன்கள் எடுக்க முடிவு செய்தோம்," என்று ஜெமிமா கூறினார். ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் கூட்டணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு அணி நாக்அவுட் ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டுவதில் வெற்றி பெற்றது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை அடித்தார். ஜெமிமாவின் கடினமான பயணம் உலகக் கோப்பையின் அரையிறுதிக்குச் செல்வது எவ்வளவு கடினமான பயணமாக இருந்தது என்பதை ஜெமிமா போட்டிக்குப் பிறகு பகிர்ந்தார். "கடந்த நான்கு மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன. ஆனால் நான் என்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாங்கள் முக்கியமான தருணங்களில் வெற்றியை இழந்துவிட்டதால், இந்த முறை அணியை வெற்றியடையச் செய்வதே என் ஒரே இலக்கு"என அவர் கூறினார். 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெமிமா, அவற்றில் மூன்று சதங்களை அடித்துள்ளார், மேலும் அந்த மூன்று சதங்களும் இந்த ஆண்டில் அவர் பெற்ற வெற்றிகள். அதே நேரத்தில், 2022 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதில் ஏற்பட்ட தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "கடந்த முறை நான் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த முறை நான் மிகவும் நல்ல ஃபார்மில் இருந்தேன்," என்று ஜெமிமா கூறினார். "ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதேன். மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும் இருந்தேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு சவால் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது"என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். சிரமங்களை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் கண்ணீருடன் காணப்பட்டார். ஜெமிமாவைப் போலவே, ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இந்த உலகக் கோப்பை ஒரு கடினமான பயணமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில், இந்தியா அரையிறுதிக்கு செல்ல முடியாது என தோன்றியது. ஆனால் ஆறாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், ஹர்மன்ப்ரீத் கவுரின் அணி வலுவாக மீண்டு வந்தது. அத்துடன், இந்த முறை வரலாற்றை உருவாக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடமாட்டோம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தியது. அரையிறுதிக்கு முன் சிறந்த ஃபார்மில் விளையாடி வந்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ஏற்பட்ட காயம், இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. உலகக் கோப்பையின் போது ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி, அணியின் பீல்டிங் குறைபாடுகள், எதிர்பார்த்த ரன்கள் கிடைக்காதது போன்றவை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் இந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தனது ஒரு இன்னிங்ஸிலேயே அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பதிலளித்ததாகத் தோன்றியது. இப்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையிலான இந்திய அணி, நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அகாடமி மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn09xvkxzk0o
-
வடக்கில் பொருளாதாரத் திறனை உருவாக்கும் நோக்கில் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026”
Published By: Priyatharshan 31 Oct, 2025 | 03:52 PM ( வீ.பிரியதர்சன் ) வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் முகாமைத்துவக் கழகம் மற்றும் அதன் யாழ்ப்பாணக் கிளை இணைந்து வடக்கில் முதலீடு செய்யுங்கள் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ளன. இந்த “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ” வடக்கு மாகாணத்தை போட்டித்திறனுள்ள முதலீட்டு மற்றும் வர்த்தக மையமாக மாற்றுவதற்கான ஒரு மூலோபய தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை முன்னுரிமைத் துறைகளில் உள்ள வணிக வாய்ப்புக்களுடன் இணைக்கும். இரு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாடு அரசாங்கத் தலைவர்கள், தனியார் துறைநிர்வாகிகள், முதலீட்டாளர்கள், தூதர்கள், தொழில்முனைவோர், படைப்பாளிகள், புதுமையானவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒரே மேடையில் இணைக்க உதவும். இந்த மாநாடு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது, இதில் முக்கிய உரைகள், துறைகளுக்கேற்ப குழு விவாதங்கள், திட்டக் கண்காட்சிகள், சந்திப்புகள், அமர்வுகள் மற்றும் முதலீட்டாளர்கள் சுற்றுப் பேச்சுகள் ஆகியன இடம்பெறும். பலதுறைகளில் முதலீடுகளை இந்த மாநாடு வெளிப்படுத்தக்கூடியதாக அமைகின்றது. குறிப்பாக வேளாண்மை மீன்பிடி, மற்றும் விலங்கு வேளாண்மை, பாரம்பரியம், சுற்றுலாத்துறை தொழில்கள், சுகாதாரம் சித்தமருத்துவம், கல்வி, தகவல்தொழில்நுட்பம், ஆகியவற்றை குறிப்பிடலாம். அத்துடன், இணைப்பு மதிப்பூட்டல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியனவும் இதில் அடங்கும். இதேவேளை, வடக்கிற்காக 3 புதிய தொழில்துறை மண்டலங்களை உருவாக்கும் இலங்கை முதலீட்டு சபைத் திட்டங்கள் மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் அடங்கும். முகாமைத்துவக் கழகம் இந்த முயற்சியை ஒரு நிகழ்வாக அல்லாமல் நீடித்த முயற்சியாக்கும் வருடாந்த வடக்கு முதலீட்டு அமைப்பாக நடத்தப்படும். நிரந்தர வடக்கு முதலீட்டு அமைப்பு உருவாக்கப்படும். வடக்கு பிராந்திய முதலீட்டு வாய்ப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் யாழ்ப்பாணக்கிளையின் தலைவர் அநுராகவன், Mr. Anu Rakavan, Chairperson, The Management Club, Jaffna “ இலங்கையை உலகத்திற்கு எவ்வாறு மாற்றமுடியும். இதற்கு முன்னர் நாம் அதனை செய்துள்ளோமா ? ஆம் 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் மைதானங்களுக்குள் ஒரு இளம் அணி நுழைந்த போது, அது வலுவிழந்த அணியாக இருந்தது. அதற்கு பல தடைகள் காணப்பட்டன. ஆனால் நாம் அனைவரையும் தோற்கடித்து, சவால்களையும் எதிர்கொண்டு வென்றோம். இலங்கையை உலகெங்கிலும் உள்ள அனைத்து பின்தங்கிய அணிகளின் விருப்பமான அணியாக மாற்றினோம். அது எவ்வாறு நடந்தது. நல்லதொரு தலைவர் இருந்தமையாலா ? அல்லது எங்களிடம் நல்ல யுக்தி காணப்பட்டதாலா ? அல்லது எங்களிடம் அர்ப்பணிப்புள்ள அணியின் உறுப்பினர்கள் காணப்பட்டமையாலா? அதற்கு அப்பால் சிறந்ததொரு இணைவு காணப்பட்டமையே அதற்கான பதிலாகும். அதேபோல் இலங்கையை உலகிற்கு முன்மாதிரியாக காண்பிப்பதற்கு எம்மிடம் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதற்கான உபாயத்துடன் பணியாற்றி வருகின்றோம். இருப்பினும் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு பிரஜைகளும் இலங்கையை வெற்றியான நாடாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த மாநாட்டின் ஊடாக அனைத்து பிரஜைகளும் தேசிய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பங்களிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய முன்வர வேண்டும்” என்றார். இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் திட்ட தலைவர் இந்திரா கே. ராஜபக்ஷ, “இலங்கை முகாமைத்துவக் கழகம் மற்றும் எங்கள் கிளையான யாழ்ப்பாணக் கிளை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெறுமனே மாநாடு மாத்திரமல்ல, இது ஒரு மாற்றத்திற்கான தருணமாகும் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு, புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்கும் முயற்சியும் கொண்ட தருணமே இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட முகாமைத்துவக் கழகம் முகாமையாளர்களுக்கிடையில் சிறியதொரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வடக்கு மாகாணம் நீண்டகாலமாக ஏராளமான இயற்கை வளங்கள், படித்த இளைஞர்கள் துடிப்பான தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் உண்மையான ஆற்றல் மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடைவெளியை குறைக்கவும் பார்வையை யதார்த்தமாகவும் சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுவதற்கு நாங்கள் ஒன்று கூடுகின்றோம்.” என்றார். முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, கைத்தொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட அரச தனியார் வலையமைப்பால் அனுசரணை வழங்கப்படும் இந்தமாநாடு, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கல்வியியலாளர்கள் தொழில் முனைவோர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Left to Right: 1. Mr. Anu Rakavan, Chairperson, The Management Club, Jaffna 2. Professor A. Atputharaja, Vice Chancellor, University of Vauniya 3. Dr. Prasad Jayasuriya, Director - Tourism Planning, Development and Investor Relations, Sri Lanka Tourism Development Authority 4. Mr. M. Piiratheepan, Government Agent – Jaffna 5. Mr. Indhra K Rajapaksa, Project Chair The Management Club (TMC) 6. Mr. Fayaz Saleem, Founder Emeritus -The Management Club (TMC) 7. Mr. Roger Talayaratna, President, The Management Club (TMC) 8. Mr. Damith Pallewatte, Managing Director / CEO- Hatton National Bank (HNB) 9. Ms. Renuka Weerakone, Director General- Board of Investment of Sri Lanka (BOI) 10. Mrs. Shanthi Bhagirathan, Vice President - Admin BOM and Project Co-Chair- The Management Club 11. Mr. Murali Prakash, Advisory BOM- The Management Club (TMC) 12 .Mr. Nasser Majeed, Advisory BOM- The Management Club (TMC) 13. Mr. Chandima Hulangamuwa, Vice President – Finance / BOM - The Management Club (TMC) https://www.virakesari.lk/article/229154