Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் : பங்களாதேஷை இலகுவாக வெற்றிகொண்டது இந்தியா Published By: VISHNU 21 JAN, 2024 | 10:25 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக ப்ளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா 81 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்தில் 2 விக்கெட்கள் குறுகிய நேரத்தில் சரிய இந்தியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (31 - 2 விக்.) ஆனால், ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 76 ஓட்டங்களையும் அணித் தலைவர் உதய் சஹரான் 64 ஓட்டங்களையும் பெற்று அணியை சிறந்த நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்தினர். மத்திய வரிசையில் சச்சின் தாஸ் (26 ஆ.இ.), ப்ரியன்ஷு மோலியா (23), அரவெல்லி அபினாஷ் (23) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் மாறுப் ம்ரிதா 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 54 ஓட்டங்களையும் அரிஃபுல் இஸ்லாம் 41 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் சவ்மி பாண்டே 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஷீர் கான் 35 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆதர்ஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை (21) போட்டிகள் இலங்கை எதிர் ஸிம்பாப்வே (ஏ குழு - கிம்பர்லி) நேபாளம் எதிர் நியூஸிலாந்து (டி குழு - ஈஸ்ட் லண்டன்) https://www.virakesari.lk/article/174430
  2. கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள CCTV நிகழ்ச்சி இன்று (ஜனவரி 22) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொலிஸாரின் சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர். முதல் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இதேவேளை, கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார். முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பஸ் பாதையில் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/288959
  3. பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோர் பொருட்களும் VAT வரிக்கு தகுதியானவை என பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார். VAT இல்லா கடைகளை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) தெரிவு செய்வதற்கு இது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில், போட்டி மற்றும் நியாயமான முறையில் ஈடுபடத் தயாராக உள்ளவர்களுக்காக VAT இல்லா பொருட்களான காய்கறிகள், அரிசி, குழந்தை பால் மாவு போன்றவற்றிற்காக நாடு முழுவதிலும் உள்ள கடைகளின் வலையமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/288954
  4. பாகிஸ்தானின் வெற்றியை ஷாஸெய்ப் கான், உபைத் ஷா இலகுவாக்கினர் Published By: VISHNU 21 JAN, 2024 | 10:16 AM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஈஸ்ட் லண்டன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற டி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஷாஸெய்ப் கான் குவித்த அபார சதம், உபைத் ஷா பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தானை 181 ஓட்டங்களால் அமோக வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார். இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் சார்பாக ஆரம்ப வீரராக சதம் குவித்த நான்காவது வீரரானார். இதற்கு முன்னர் பாபர் அஸாம் (2002இல் 2 தடவைகள்), இமாம் உல் ஹக் (2004), ஹசீபுல்லா கான் (2022இல் 2 தடவைகள்) ஆகியோர் ஆரம்ப வீரர்களாக பாகிஸ்தான் சார்பாக சதம் குவித்திருந்தனர். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 13ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தபோது 2ஆவது விக்கெட் சரிந்தது. ஆனால், ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான், அணித் தலைவர் சாத் பெய்க் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். சாத் பெய்க் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (151 - 4 விக்.) இந்நிலையில் ஷாசெய்ப் கானுடன் ஜோடி சேர்ந்த ரியாஸ் உல்லா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 46 ஓட்டங்களைப் பெற்றார். (235 - 6 விக்.) மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷாசெய்ப் கான் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைக் குவித்தார். பின்வரிசையில் உபைத் கான் 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் காலித் அஹ்மத 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பஷிர் அஹ்மத் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. நுமான் ஷா (26), சொஹெய்ல் கான் ஸுமாட்டி (20), ரஹிமுல்லா ஸுமாட்டி (20), ஹசன் ஈசாக்கில் (19) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் உபைத் கான் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ஸீஷான் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷாஸெய்ப் கான் https://www.virakesari.lk/article/174428
  5. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு 22 JAN, 2024 | 05:08 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுதராதர சாதாரண பரீட்சை - 2023க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாண்டிலிருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகல தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை அற்ற 15 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட பரீட்சாத்திகள் சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்தால் அவர்கள் விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு வருகை தர வேண்டியது கட்டாயமாகும். இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்துக்குள் பிரவேசித்து உரிய வழிகாட்டல்களை அறிந்து கொள்ள முடியும். பெப்ரவரி 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பத்துக்காக காலம் நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174527
  6. 22 JAN, 2024 | 02:36 PM அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவராவார் என பொலிஸார் தெரிவித்தனர் . இவரிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174512
  7. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் சிவனொளிபாதமலை சென்று வழிபட்டுள்ளார். இப்பயணத்தின் சிறந்த பகுதி இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள் என குறிப்பிட்டுள்ள ஜூலி சாங் தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், தமக்கு அவர்கள் காட்டிய கரிசனைகளும் இலங்கையர்களின் மீதான தனது மதிப்பை அதிகரித்துள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/288921
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் லோவென் ஜெருசலேமிலிருந்து மற்றும் சான் செடோன் பதவி, பிபிசி 21 ஜனவரி 2024 பாலத்தீன தனி நாட்டை உருவாக்கும் யோசனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனி பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனையை பெஞ்சமின் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுட்டிக்காட்டியிருந்தார். நெதன்யாகுவின் இக்கருத்துகள் அமெரிக்காவுடனான பிளவை ஆழப்படுத்துவதாகத் தோன்றுகிறது. பாலத்தீன பிரச்னையில் இரு நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இஸ்ரேல் - பாலத்தீன நீண்ட கால பிரச்னைக்கு ”இரு நாடுகள் தீர்வு” முன்வைக்கப்படுகிறது. இதில், பாலத்தீன தனிநாடு வலியுறுத்தப்படுகிறது. பாலத்தீன தனி நாட்டை அமைப்பது நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், இந்த விவகாரத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் “வெவ்வேறு விதங்களில் பார்ப்பதாக” கடந்த வாரம் வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு இரு தலைவர்களும் முதல் முறையாக தொலைபேசி வாயிலாக பேசினர். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “இரு நாடுகள்” தீர்வு எட்டப்படுவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தார். "இரு நாடுகள் தீர்வில் பல வகைகள் உள்ளன. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுக்கு சொந்த ராணுவம் இல்லை," என்று அவர் கூறினார். மீண்டும் உறுதிப்படுத்திய நெதன்யாகு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆனால், தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ‘இரு நாடுகள்’ தீர்வு மீது தனக்கிருக்கும் எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்தி வந்துள்ள நெதன்யாகு, மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் அழிக்கப்பட்ட பின்னர், காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது பாலத்தீன இறையாண்மை கோரிக்கைக்கு முரணானது. காஸா மீதான பாதுகாப்பு கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான உரையாடலில், பிரதமர் நெதன்யாகு தனது கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியான ஜோர்டானின் மேற்கே இஸ்ரேல் "பாதுகாப்புக் கட்டுப்பாட்டை" வைத்திருக்க வேண்டும் என்று சனிக்கிழமையன்று பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் நெதன்யாகுவின் அறிக்கை "ஏமாற்றம் அளிப்பதாக" இன்று (ஜன. 21) கூறினார். ஆனாலும் அவருடைய கருத்து ஆச்சரியமளிக்கவில்லை என கிரான்ட் ஷாப்ஸ் தெரிவித்தார். நெதன்யாகுவின் கருத்துகள், காஸா நெருக்கடியைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி செயல்முறைகளுக்கான நம்பிக்கையையும் குறைக்க வழிவகுக்கும். காஸாவிற்குள் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இன்னும் 130 பணயக் கைதிகளின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், இஸ்ரேலில் சொந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் மத்தியிலும் நெதன்யாகு போரை தொடர்வதை ஆதரிக்கிறார். இதன் மூலம் மற்ற நாடுகளிடமிருந்து இஸ்ரேல் தனிமைப்பட்டு வருவதையும் நெதன்யாகு அதிகரித்து வருகிறார். அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மேலும் 240 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது. இன்னும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமையன்று டெல் அவிவில் கூடி, பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். இஸ்ரேல் மக்களின் கோரிக்கை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இஸ்ரேல் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அக்டோபர் 7-ம் தேதி பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒருவரின் உறவினரான கில் டிக்மேன் கூறுகையில், "அன்புள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீங்கள் அவர்களை (பணயக்கைதிகளை) மீண்டும் இங்கு கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார். "நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இஸ்ரேல் குடிமக்களுக்கு வெற்றியை கொண்டு வர முடியும் என்று எங்களுக்குத் தெரியும். பணயக்கைதிகளை இஸ்ரேலுக்கு அழைத்து வாருங்கள்" என்றார். கான் யூனிஸில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் ஹமாஸின் உயர்மட்ட அதிகாரிகளைத் தேடுவதாகக் கூறி இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸாவுக்குள் நுழைந்துள்ளன. கான் யூனிஸில் பணயக்கைதிகளை வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சுரங்கப்பாதையை தாங்கள் சோதனை செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. இருப்பினும் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட போது அவர்கள் அங்கு இல்லை. இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் கவனம் இப்போது தெற்கு காஸாவை நோக்கி உள்ளது. இஸ்ரேல் தனது படையினரையும் பீரங்கிகளையும் தெற்கே முன்னேற்ற முயன்றபோது ஹமாஸ் குழுவினர் முன்னேறியதால், வடக்கு நகரமான ஜபாலியாவைச் சுற்றி மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் காஸா மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், ஹமாஸை விட மேம்பட்ட இஸ்ரேல் ராணுவம் இன்னும் அப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அக்டோபர் 7 முதல் அப்பிரதேசத்தில் 25,105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 60,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவை நிர்வகிக்கும் ஹமாஸின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. https://www.bbc.com/tamil/articles/c90458vykq7o
  9. Published By: NANTHINI 22 JAN, 2024 | 11:37 AM நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல வீடுகளிலுள்ள தொலைப்பேசிகளுக்கு அழைப்பெடுத்து, தம்மை பொலிஸார் எனக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முற்படும் கும்பலொன்று தலைமறைவில் இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முல்லேரியா, நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இதுபோன்ற அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/174499
  10. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடக்கும் நிலையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாக அயோத்தியுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ராமர் கோவில் பணிகளை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள், ராமர் சிலை தேர்வு குறித்து பிபிசியிடம் பேசியுள்ளார் கோடீஸ்வர ஷர்மா. பட மூலாதாரம்,SHRI RAM JANMBHOOMI TEERTH KSHETRA படக்குறிப்பு, சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர். கேள்வி : அயோத்தி ராமர் கோவிலின் கட்டிடக்கலை வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்க முடியுமா? கோடீஸ்வர ஷர்மா : ராமர் கோவில் கட்டுமான பணிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையே கட்டுமான பணிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு. கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன. சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர். 1991 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த கோவிலின் மாதிரி உருவாக்கப்பட்டது. அதன் படியே சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அதற்கு பிறகு, அறக்கட்டளை பொறுப்பேற்று, முதலில் உருவாக்கப்பட மாதிரியில் சிறிய மாற்றங்கள் செய்து கோவிலை கட்டியுள்ளது. மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். கும்பாபிஷேக நிகழ்வில் எத்தனை மக்கள் பங்கேற்பார்கள்? அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது? கோடீஸ்வர ஷர்மா : அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரபலங்கள் தங்குவதற்கு அயோத்தி மற்றும் ஃபைசாபாத் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ஆசிரமங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு 30 - 35 உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோவிலில் 19ஆம் தேதி மாலையோடு தரிசனம் நிறுத்தப்பட்டு சிலைகளை அங்கிருந்து புதிய கோவிலுக்கு மாற்றுவதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 20, 21, 22 ஆகிய தேதிகள் தரிசனம் கிடையாது. 22ஆம் தேதி சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, விருந்தினர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்படும். 23ஆம் தேதி காலை முதல் பொது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பட மூலாதாரம்,CHAMPAT RAI படக்குறிப்பு, 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் 72 ஏக்கர் இருந்தபோதிலும், கோவில் 2.7 ஏக்கரில் ஒரு மூலையில் கட்டப்பட்டுள்ளது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : ஒட்டுமொத்த காலியிடத்தில் கட்டுமான பணி நடக்கவில்லை. இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும். முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும். சிலை பிரதிஷ்டைக்கான தினமாக ஜனவரி 22 தேர்வு செய்யப்பட்டது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : ஜோதிடம் மற்றும் ஆகம சாஸ்திரங்களின் படி சிறந்த முகூர்த்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 22ஆம் தேதி 12.22 முதல் 12. 40 வரை நல்ல நேரம் என்பதை நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது. பால ராமரின் சிலையை நிறுவது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது. அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும். முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன. முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் சிமெண்ட் மற்றும் இரும்பு பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சொல்கிறதே, அதற்கான காரணங்கள் என்ன? கோடீஸ்வர ஷர்மா : அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன. ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும். இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை. கட்டுமானம் முடிக்கப்படுவதற்கு முன்பே கோவில் திறக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறதே, விஎச்பியின் சார்பில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? கோடீஸ்வர ஷர்மா : 1951ஆம் ஆண்டு கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே சோம்நாத் கோவிலை ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். நமது நாட்டில் இவை அனைத்தும் வாஸ்து மற்றும் கோயில் சாஸ்திரங்களின்படியே நடக்கிறது. எதுவும் அறிவியலற்ற முறையில் செய்யப்படுவதில்லை. அனைத்துமே முறைப்படி மட்டுமே செய்யப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு கோவில் தொடர்பானவர்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cv27rddn21do
  11. அஹ்மத் பந்துவீச்சிலும் மெக்கின்னி துடுப்பாட்டத்திலும் அபாரம்; ஸ்கொட்லாந்தை கவிழ்த்தது இங்கிலாந்து Published By: VISHNU 21 JAN, 2024 | 10:08 AM (நெவில் அன்தனி) ஸ்கொட்லாந்துக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண பி குழு போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. ஸ்கொட்லாந்தை 174 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மீதம் இருக்க 3 விக்டெக்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பர்ஹான் அஹ்மதின் துல்லியமான பந்துவீச்சு, அணித் தலைவர் பென் மெக்கின்னியின் அபார துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை சுலபமாக்கின. ஜேட்ன் டென்லி, பென் மெக்கின்னி ஆகிய இருவரும் 94 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பென் மெக்கின்னி 68 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் ஜேட்ன் டென்லி 40 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட நோவா தெய்ன் 22 ஓட்டங்களையும் லூக் பென்கின்ஸ்டீன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் ஹம்சா ஷெய்க் ஆட்டம் இழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இப்ராஹிம் பைஸால் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெமி டன்க் (40), அணித் தலைவர் ஓவென் கல்ட் (48) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தினர். அடுத்த அதிகப்பட்ச எண்ணிக்கையாக 26 உதிரிகள் கிடைத்தது. பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மத் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் லூக் பென்கென்ஸ்டீன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பென் மெக்கின்னி https://www.virakesari.lk/article/174427
  12. ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது எறிகணை தாக்குதல் - 27 பேர் பலி Published By: RAJEEBAN 22 JAN, 2024 | 07:54 AM ரஸ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார். எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர். அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது. எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174486
  13. பட மூலாதாரம்,IRANIAN ARMY/WANA/REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், லீஸ் டூசெட் பதவி, சர்வதேச தலைமை செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம். கடந்த வாரம், இதுவரை நடந்திராத வகையில், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு, பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. அப்போது, அது ஏற்கெனவே பதற்றமாக உள்ள எல்லை வழியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்கெனவே பதற்றத்தால் சூழப்பட்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பிரச்னையை அதிகரித்தது. இதில், இரானின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அது, இதன் மூலம் நாட்டிற்குள் உள்ள தனது மக்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதுதான். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களின் பேராசிரியரான வாலி நாஸ்ர் பேசுகையில், "இரான் தனது ராணுவத்தில் ஏவுகணைகள் இருப்பதை மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் இந்தத் தாக்குதல்கள் மூலம் காட்டியுள்ளது," என்றார். "காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரானின் இந்தச் செயல்பாடு, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்." மற்ற ஆய்வாளர்களைப் போலவே, வாலி நாஸ்ரும், "இந்த நேரத்தில் இரான் மேலும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பாது,” என நம்புகிறார். பதற்றம் பரவுவதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதல், மூன்று மாதங்கள் ஆகியும் நிற்கவில்லை. இதற்கிடையில், இந்தப் பதற்றம் இஸ்ரேல் மற்றும் காஸாவை தாண்டி அப்பகுதி முழுவதும் பரவக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடந்தன. ஏமனில் இருந்து ஹூத்தி ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர். ஆனால் இரானோ, அதன் முக்கிய நட்பு சக்தியான ஹிஸ்புல்லாவோ, இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவோ இந்த விஷயத்தை அதிகரிக்க விரும்பவில்லை. மத்திய கிழக்கில் உள்ள இரான், அதன் நட்பு சக்திகளைக் கொண்டு, ஒரு பிணாமி யுத்தமாக இந்த மோதலை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில், இரானின் நிலைப்பாடு மி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தில், பல்வேறு நாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்கள் இரானின் ஆதரவுடன் செயல்படுகின்றன. காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூத்தி குழுக்கள், இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் ஆகியவை அனைத்தும் இரானின் ஆதரவுடன் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்களில் பெரும்பாலானனவை மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் ராணுவ பலமே இரான் வழங்கும் ஆயுதங்களும், பயிற்சிகளும்தான். இருந்தபோதிலும், இந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் தங்களுக்கென தனியான குறிக்கோள்களும், நோக்கமும் உள்ளன. சமீப காலமாக, இந்தக் குழுக்குள் அனைத்தும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இவை சில நேரங்களில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. அதனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பழிவாங்கும் நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்க, இந்த அச்சுறுத்தல்களைக் குறைக்கவும் அவர்கள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரான்-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் பாகிஸ்தானின் எல்லையை முதலில் தாக்கிய பின், அண்டை நாடுகளான இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தொடங்கியது. இதில், இரான், பாகிஸ்தான் மீது மட்டும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை. அது தனது நட்பு நாடுகளான இராக் மற்றும் சிரியா மீதும் தாக்குதல் நடத்தியது. இரான் அதைச் சுற்றியுள்ள நாடுகள்தான் எதிர்ப்பில் இருந்து காக்கும் நாடுகள் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். இரானின் இந்த அதிநவீன, அதி தீவிர படை, இராக்கின் வடக்கில் உள்ள சூர்திஸ்தான் பகுதியில் பல ஏவுகணைகளை ஏவியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் புலனாய்வு மையத்தைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல்களைள் நடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது. அதைத் தவிர, ஐஸ்(இஸ்லாமிய அரசு) உட்பட சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்ததாகவும் இரான் தெரிவித்தது. இரானின் கூற்றுப்படி, அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும், ஒரு எதிர்வினை காரணமாக இருந்தது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விளக்கமளித்த இரான், தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள இரான் வம்சாவளியைச் சேர்ந்த பலூச் கிளரச்சியாளர்களைக் குறிவைத்ததாக இரான் கூறியது. "தாக்குதல் தவிர்க்க முடியாதது" என்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான செயத் முகமது மராண்டி கூறுகிறார். கடந்த மாதம் இரானின் சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த தாக்குதலில் 22 இரான் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இரானின் தெற்குப் பகுதியில் பலூச் தேசியவாதிகளின் தளங்கள் இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை 'பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்' என பாகிஸ்தான் கூறியது. பல தசாப்தங்களாக எல்லையின் இருபுறமும் பதற்றம் நீடித்தது, ஆனால் இப்போது அது அதன் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இரான் தலைவர்களுக்கு கடினமான காலம் பட மூலாதாரம்,IRIB இராக் மற்றும் சிரியா, காஸாவிற்கு அருகில் உள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. பேராசிரியர் மராண்டி பேசுகையில், "இராக் மற்றும் சிரியாவில் நடந்த தாக்குதல்கள், கெர்மானில் நடக்கும் சம்பவங்களுக்கான பதில்" என்றார். கடந்த மாதம் அங்கு நடந்த ஒரு அரசியல் படுகொலையை அவர் குறிப்பிடுகிறார். இங்கே, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மூத்த நபரான சையத் ராசி மொசாவி படுகொலை செய்யப்பட்டார். இந்த மாதத் தொடக்கத்தில் காசிம் சுலைமானியின் கல்லறை மீது இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராக்கில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரானின் உயர்மட்ட தளபதி சுலைமானி. இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றது. 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நடந்த மிக ஆபத்தான தாக்குதல் இது. இந்தப் பிராந்தியத்தைப் பற்றி விரிவான பகுப்பாய்வு செய்த அம்வாஸ் மீடியாவின் ஆசிரியர் முகமது அலி ஷபானி, "இந்தத் தாக்குதலுக்குக் கூடுதலாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரான் மீது அழுத்தம் இருந்தது," என்றார். மேலும், இனிவரும் காலங்களில் மேலும் பதற்றமான சூழலை காண்போம், என்றார். இரானில் அதிகாரத்தில் இருக்கும் உச்ச மதத் தலைவர்களுக்கு இது கடினமான நேரம். ஏனெனில் நாட்டில் பெண்கள் அதிக சுதந்திரம் கோரி பெரிய இயக்கங்களை நடத்தினர். சர்வதேச தடைகளால் இரானின் பொருளாதாரமும் அழுத்தத்தில் உள்ளது. ஊழல் வழக்குகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த மோதலில் பல முரண்பாடுகள் உள்ளன. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் பதற்றம் கொண்டுள்ளது. இருவரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இப்போது இரானின் வியூகம் என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES எதிரிப் படைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இரு தரப்பிலும் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. கடந்த வாரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் பதற்றம் ஏற்பட்டால், பிராந்தியத்தில் நீண்ட கால மோதல் ஏற்படலாம். இராக்கில் உள்ள இரான் தளங்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல்களால் இரானின் முக்கியமான உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கடலில் முக்கியமான கடல் வழித்தடங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES இருந்தபோதிலும், இரானும் அதன் நட்பு நாடுகளும் தோல்விகளைவிட வெற்றிகளைப் பெறுவதாக நம்புகின்றன. காஸாவில் பாலத்தீனர்களுடன் நிற்பது வளைகுடா நாடுகளில் இரானின் புகழை அதிகப்படுத்தியுள்ளது. ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை தற்போது உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சிந்தனைக் களமாகச் செயல்படும் சத்தம் ஹவுஸில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான திட்ட இயக்குநராக இருக்கிறார் சனம் வகில், "இரான் ஒரு பரந்த விளையாட்டை விளையாடுகிறது. காஸாவை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் இன்னும் ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்று உணர்கிறது. எனவே அதுவொரு நீண்ட போரை எதிர்பார்க்கிறது, தயாராகிக் கொண்டிருக்கிறது," என்றார். இரானின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று அமெரிக்காவை அதன் கொல்லைப்புறத்தில் இருந்து விலக்கி வைப்பது. மேலும், அது இஸ்ரேல், அமெரிக்காவுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/ce5j85rjl4no
  14. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன் Published By: VISHNU 21 JAN, 2024 | 01:38 PM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எண்மர் செயற்பட்டனர். இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்கள் வாக்களித்தனர். அதன்படி, இன்று 21 ஆம் திகதி ததிருகோணமலை நகரமண்டபத்தில் இடம் பெற்ற வாக்களிப்பில் 327 பேர் கலந்துகொண்டனர். முன்னதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர். எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் இறுதியானது. இந்நிலையில் அண்மைய நாட்களில் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமைக்கு போட்டியிடும் சக வேட்பாளரான சிறீதரனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதன் காரணமாக சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சீனித்தம்பி யோகேஸ்வரனும் தனது வாக்கை சிறிதரனுக்கு அளித்துள்ளார். https://www.virakesari.lk/article/174449
  15. தனிமடலில் கேளுங்கோ அக்கா.
  16. பதனீரைப் பயன்படுத்தி பனங்கட்டி வந்தது. இப்பொழுது பனஞ்சீனியும் வந்திருக்கிறது. பனஞ்சீனி இலங்கையிலும் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டது. பனங்கட்டியினைச் செய்யும் முறையிலிருந்து சற்று வேறுபட்டு பனஞ்சீனி செய்யும் முறை அமைகிறது. பனம்பாணியினைக் காய்ச்சும் விதத்திலும் பின் அதனை இறுகச் செய்து பதப்படுத்தும் முறையிலும் சில வேறுபாடுகள் இருப்பதுதான் முக்கியம் எனலாம். மூலம் என்பது பதனீரே ஆகும். யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் காலத்திலே பனஞ்சீனிக் கென்று ஒரு தொழிற்சாலையானது பொலிகண்டிப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்ததாம். இங்கு பனஞ்சீனி செய்வதற்கான பதனீரினை -உடுப்பிட்டி, கொற்றாவத்தை, பருத்தித்துறை, சிங்கைநகர் போன்ற இடங்களில் பெற்று குழாய் மூலமாக பொலிகண்டியில் அமைந்திருந்த பனஞ்சீனித் தொழிற்சாலைக்கு கொண்டு வந்திருப்பதாகச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இப்படியாகப் பெறப்பட்ட பதனீரின் மூலம் பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்னும் செய்தி மிகவும் காத்திரமான செய்தியாகவே இருக்கிறதல்லவா! அந்தத் தொழிற்சாலை அங்கு இருந்திருக்கிறது என்பதற்கான எச்சங்கள் இன்றும் இருப்பதாக வடமராட்சி மக்கள் தெரிவிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கது. பிரித்தானியர் காலத்தின் தொடர்ச்சியோ தெரியவில்லை மீண்டும் பொலிகண்டியில் பனஞ்சீனித் தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் தொடங்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கை பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறது. அத்துடன் சண்டிலிப்பாயிலும் பனஞ் சீனி செய்யப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கையினைக் கண்ணுற்றதால் ஆர்வமேற்பட்டு திருவடிநிலை, மந்துவில், கருவம்பானை ஆகிய இடங்களில் முயற்சி எடுக்கப்ப ட்டபோதும் அது பொருந்தி வராமலே ஆகிவிட்டது, முயற்சி என்பது விடாமல் நடந்தபடி இருந்தது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டில் கீரிமலையில் ஆரம்பிக்கப்பட்ட பனம் பொருள் உற்பத்தி நிலையத்தில் சாத்தியமாகியது எனலாம். இலங்கையின் விஞ்ஞான சபையினரும், இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரும் இணைந்து எடுத்த முயற்சியினால் பனஞ்சீனி உற்பத்தி என்பது புத்து யிர்ப்பினைப் பெற்றது என்று அறியக்கூடியதாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் பனஞ்சீனித் தொழிலானது முன் நோக்கிச் செல்லத் தொடங்கிய தெனலாம். 1972 - 1973 ஆண்டுகளில் சிங்கைநகர் பனம்பொருள் உற்பத்தி நிலையத்தால் பனஞ்சீனியின் உற்பத்தியானாது நல்ல வெளிச்சத்தைக் காட்டும் நிலைக்கு வந்தது. மக்களின் ஆதரவும் பெருகியது. 1974 - 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தொழிற்சாலைகள் எழுச்சி பெற்று பனஞ்சீனி உற்பத்தி சிறப்பான ஒரு நிலையினை அடைந்தது என்பது நோக்கத்தக்கதாகும். இந்த வகையில் சரசாலை, அச்சுவேலி, பருத்தித்துறை, சண்டிருப்பாய், மந்துவில் ஆகிய இடங்களில் பனஞ்சீனியை உற்பத்தி செய்வதற்காக பாரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன என்பதுதான் முக்கிய செய்தியாகும். சிறப்பாகச் செயற்பட்டு, நல்ல உற்பத்தியினையும் கொடுத்து, மக்களின் மனதிலும் இடம்பிடித்து நின்ற பனஞ்சீனித் தொழில் - ஆட்சியிலிருந்த அரசின் கொள்கைகளாலும், நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தச் சூழ்நிலை காரணமாகவும், தொடரமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டது என்பதும் நோக்கத்தக்கது. இலங்கையில் பனஞ்சீனி உற்பத்தி என்று நோக்கும் பொழுது, இந்தியாவின் சீனித் தொழில் நிபுணரான பேராசிரியர் றாவ் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இலங்கையின் சீனித் தேவைபற்றி அவர் ஆராய்ந்தார். அதன் படி அவர் பனஞ்சீனியைச் செய்வதையே பெரிதும் விரும்பினார் என்றுதான் அறியக் கூடியதாக இருக்கிறது. "சீனியை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கலிருந்து விடுபட வேண்டுமானால், இயற்கை மூலவளங்களைப் பாவிக்க வேண்டும். பனையிலி ருந்து தரமான பனங்கட்டி, பனஞ்சீனி செய்யலாம் " என்று அவர் தன் மனக்கருத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் அமையாது "யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற பனை வளத்தைக் கொண்டு, நல்லதொரு பனஞ்சீனி ஆலையை ஆரம்பிக்கலாம்" என்னும் அவரின் கூற்றும் மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் எடுக்க வேண்டும். இந்திய நிபுணர் கூறியதோடு, அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஜேர்மனியின் பொருளாதார நிபுணர்களும் யாழ்ப்பாணத்தில் "பாரிய சீனித் தொழிற்சா லையினை அமைக்கலாம்" என்று அறிவுறுத்தியமையும் மனங்கொள்ளல் வேண்டும். தமிழ்நாட்டில் பனஞ்சீனியைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் மிக்கவர்கள் பலர் மாநிலம் தோறுமே இருக்கிறார்கள். பனஞ்சீனியின் பயன்பாடும் அங்கு இருக்கிறது. சித்த வைத்தியத்தை பெரிதாக எண்ணுகின்றவர்கள் பலர் இருக்கின்ற காரணத்தால் பனஞ்சீனி பற்றிய புரிதல் அங்கு இருக்கிறது. “நேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ்” என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடங்கி இருக்கிறார். திருச்செங்கோட்டையைச் சேர்ந்த இவர் கணணித்துறையில் பட்டம் பெற்ற ஒரு பொறியியலாளராவார். இவரின் தாத்தா பனங்கட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இவரின் அப்பாவே ஒரு துணைக் கலெக்டராவார். தாத்தாவின் உணர்வு பேரனான சரவணனுக்குள் ஏற்பட்ட காராணத்தால் படித்த படிப்பினை ஒரு பக்கம் வைத்து விட்டு பனையின் பக்கம் வந்துவிடார். இவரும் மனைவியுமாக இணைந்து பனங்கட்டி, பனஞ்சீனி செய்வதில் ஈடுபட்டு நிற்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது. இவர்களின் விடா முயற்சியினால் பலரும் பயன் அடைகிறார்கள். பனஞ்சீனியும் விற்பனைக்கு உகந்த விதத்தில் உற்பத்தி செய்ய்யப்பட்டும் வருகிறது. தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், இயங்குகின்றன. இந்தச் சங்கங்கள் வாயிலாக பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பனங்கட்டியைப் போலவே பனஞ்சீனியையும் பானங்களுக்கும், இனிப்பான பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம். பனஞ்சீனியில் செய்யப்படுகின்ற அத்தனையும் நல்ல சுவையினைத் தருவதோடு உடலின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாகவும் இருக்கும் என்பதுதான் முக்கியமாகும். பதனீரின் அவதாரங்களில் பனங்கற்கண்டு அதாவது கல்லாக் காரமும் ஒரு நிலை எனலாம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பனங்கல்லாக்காரம் நிச்சயம் இருக்கும். அதற்குக் காரணம் அதன் பயன்மிக்க மருத்துவக் குணமேயாகும். ஆயுள் வேதம், சித்த மருத்துவம் இரண்டுமே பனங்கற்கண்டை விதந்தே கூறுகின்றன. ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாக இவை தெரிவிக்கின்றன. தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டவுடன் யாவரும் நாடுவது பனங்கற்கண்டையேயாகும். சங்கீதம் பாடுகிறவர்கள் பனங்கற் கண்டை மிகவும் பத்திரமாகவே வைத்திருப்பார்கள். குரலில் கரகரப்பு வந்ததும் வாயில் போட்டு உமிழ்வார்கள், அடைப்பும் போய் குரலும் தெளிவாகிவிடும். இருமலுக்கு மிகவும் உகந்ததாக கல்லாக்கரம் விளங்குகிறது. கண்ணில் வெப்பம் காரணமாக சிவப்பாக மாறும் நிலை ஏற்படும் பொழுது கல்லாக்கரத்தை நீரில் கரைத்து கண்ணில் விட்டு விட்டால் அந்த நிலை மாறியே விடுகிறதாம் என்றும் கூறுவார்கள். கல்லாக்காரத்தில் மிளகினைக் கலந்து பயன்படுத்தி வந்தால், எமக்கு வருகின்ற இருமல், சலக்கடுப்பு, தொண்டையில் வரும் கரகரப்பு, உள்நாக்கு வளருதல் ஆகியன சுகமாகும் என்று அறியக்கூடியதாக இருக்கிற து. நோய்களைக் குணமாகும் . உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு பனங்கற்கண்டு உதவி நிற்கிறது. இதனால் சின்னமுத்து வந்தால் பனங்கற்கண்டையே கையிலெடுத்தார்கள் என்பதும் நோக்கத் தக்தக்கது. தமிழ்நாட்டிலே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்களிலும், சுபமுகூர்த்த வேளைகளிலும் வந்திருக்கும் உறவினர்களுக்கும் பனங்கற் கண்டைக் கொடுத்தும் மகிழுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும். பனங்கற்கண்டானது யாழ்ப்பாணத்தில் முன்னர் உற்பத்தியாகி இருந்தபொழுதும், பனம் பொருள்களை நவீன முறையில் உற்பத்தி செய்யும் வகையில் கீரிமலையில் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையத்தில் தான் பின்னர் செய்யப்பட்டது என்று அறிகின்றோம். எனினும் பனங்கற்கண்டு உற்பத்தியானது சீராக இருக்கவில்லை என்பதைத்தான் கருத்திருத்த வேண்டி இருக்கிறது. இலங்கைக்கு பனங் கற்கண்டின் தேவை மிகவும் வேண்டியே காணப்பட்டது. குறிப்பாக இலங்கையின் ஆயுள்வேதக் கூட்டுத்தாபனம் விரும்பியே நின்றது. இதனால் அதன் தேவையினைப் பூர்த்தி செய்ய இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பனங்கற்கண்டு போதாதிருந்தததால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அவசியம் ஏற்படலாயிற்று. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடி, கொட்டங்காடு, சிறுநாடார் குடியிருப்பு, சாத்தான்குளம், அடைக்கலநாதபுரமும் இந்தியாவின் வங்காளமும் பனங்கற்கண்டு உற்பத்தியில் முன்னணி வகித்திருந்தன என்பதும் நோக்கத்தக்கது. யாழ்பாணத்தில் பனைவள மிருந்தும் பனங்கற்கண்டை, இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் மனமிருத்தல் வேண்டும். பனங்கற்கண்டு மருத்துவப் பயன்பாடு மிக்கதாக அமைந்திருப்பதால் அதன் உற்பத்தியிலும் கவனம் செல்லுத்துவதில் அக்கறை கொள்ளுவது அவசியமேயாகும். பதனீரின் நிறைவாகக் கழிவுப் பாகு அமைகிறது. பெயர் என்னவோ கழிவுப் பாகு என்று இருந்தாலும் அதுவும் பயனையே அளித்து நிற்கிறது என்பதுதான் முக்கியமாகும். இந்தக் கழிவுப்பாகில் ஊட்டச் சத்து இருக்கிறதாம். பதனீரில் காணப்படுகின்ற சத்து கழிவுப்பாகில் வந்து சேருகிறதாம். இதனுடை கறுப்பு நிறத்தால் இது மக்களால் ஒதுக்கப்படுகிறது. இப்பாகில் கந்தகம் கலந்து காணப்படுகின்ற காரணத்தால் அதனைப் பயன்படுத்தாமல் மக்கள் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இதனை உரிய முறையில் சுத்தீகரித்து எடுத்தால் சுவை மிக்கதான பாகினைப் பெறக்கூடியதாகவே இருக்கும். இப்படியான பாகினை பானங்களுக்கும், இனிப்புப் பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். மருத்துவத்துக்கும் கழிவுப்பாகு உதவி நிற்கிறது என்பதும் முக்கியமாகும். புகையிலை பதப்படுத்தலிலும் கழிவுப்பாகினைப் பயனாக்குகின்றனர். பால் கறக்கும் மாடுகளுக்குக் கொடுக்கப்படும், புண்ணாக்கு, புல்லு, தவிட்டுடன் கழிவுப்பாகினைக் கலந்து கொடுத்தால் பால் நன்றாகவே சுரக்குமாம். மற்றைய கால்நடைகளுக்கும் கொடுக்கும் பொழுது அவையும் சிறப்பாக உழைக்குமாம் என்பதும் நோக்கத்தக்கது. இவற்றை விடக் கட்டிடப் பயன்பாடு, எரிபொருள், வினாகிரி உற்பத்தி என்ற வகையிலும் கழிவுப்பாகு பயனாகி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும் http://www.tamilmurasuaustralia.com/2022/06/blog-post_95.html
  17. பட மூலாதாரம்,X/REALSHOAIBMALIK AND INSTAGRAM/MIRZASANIAR 20 ஜனவரி 2024, 10:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அவர் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்துள்ளார். ஷோயிப் மாலிக், சனா ஜாவேத் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பட மூலாதாரம்,SCREENGRAB இது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், சானியா மிர்சா - ஷோயிப் மாலிக் உறவு என்ன ஆயிற்று என்பது குறித்து சானியாவின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். 2010-ம் ஆண்டில் சானியா - ஷோயிப் திருமணம் ஷோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஷோயிப் மாலிக் உடனான திருமணத்திற்கு முன்பு, சானியா மிர்சா தனது குழந்தைப் பருவ நண்பரான சோராப் மிர்சாவுடன் நிச்சயம் செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் சோராப் – சானியாவின் நிச்சயம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஷோயிப், சானியா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. சானியா, ஷோயிப் தம்பதிக்கு ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த புதன்கிழமையன்று, சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார். பட மூலாதாரம்,INSTAGRAM/MIRZASANIAR திருமணம் மற்றும் அதில் ஏற்படும் விவாகரத்து மிகவும் கடினமானது. ஆனால், நாம் எப்போதும் கடினமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சானியா தனது பதிவில் கருத்து தெரிவித்திருந்தார். அந்தப் பதிவைப் பார்த்த பல பயனர்கள் ஷோயிப், சானியா இடையிலான உறவு முற்றிலும் மோசமடைந்து இருக்க வேண்டும் என்றும் இருவரும் விவாகரத்து செய்திருப்பார்கள் என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். சனா ஜாவேத் யார்? பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான சனா ஜாவேத், உருது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் 2012இல் ஷெர்-இ-ஜாத் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பட மூலாதாரம்,INSTAGRAM/SANAJAVEDOFFICIAL காதல் நாடகமான கானியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகு அவர் அங்கீகாரம் பெற்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் அவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. அவரது சமூக நாடகங்களான ருஸ்வாய், டன்க் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றன. அவர் 2020இல் பாகிஸ்தானிய நடிகரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான உமைர் ஜஸ்வாலை திருமணம் செய்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் பிரிந்ததாக சியாசட் இதழ் தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேலும் சனா, உமைர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக ஊடக கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் பட மூலாதாரம்,SCREENGRAB சில நெட்டிசன்கள் ஷோயிப் மாலிக் செய்துகொண்ட மூன்றாவது திருமணத்திற்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஏராளமான நெட்டிசன்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர். ஷோயிப்பின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அஜிசியா என்ற பதிவர், “அந்தப் பெண் உங்களை முழு நாட்டையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். மக்கள் அவரது தேசிய உறுதிப்பாட்டையே கேள்வியெழுப்பினர். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அவரை ஏமாற்றிவிட்டீர்கள். வாவ் மேன்... வாவ் மேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார். ஹீபா அர்மான் என்ற பதிவர், “ஆச்சர்யமாக இருக்கிறது. நடந்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை!” என்று பதிவிட்டுள்ளார். எக்ஸ் சமூக ஊடகத்தில், #ShoaibMalik, #Divorce, #SaniaMirza ஆகிய ஷேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. சானியாவின் தந்தை கூறியது என்ன? மறுபுறம், சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி மீதான விவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, தனது மகள் 'குலா' கொடுத்துவிட்டதாக கூறினார். இஸ்லாத்தில் 'குலா' என்பது ஒரு பெண் தன் கணவனை விருப்பத்துடன் விட்டு விலகுவது என்று பொருள் ஆகும். இதுகுறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், “இந்த திருமணத்திற்கு முன்பு தனது மகள் சானியாவும், 41 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் ‘குலா’ மூலம் விவாகரத்து பெற்றுள்ளனர" என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c972d663043o
  18. மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் சம்பவ இடத்தில் பலி 20 JAN, 2024 | 11:15 AM மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் . நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், சிறிய ரக பஸ்ஸொன்று மன்னார் - யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது . இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி பஸ் சாரதியை அயலவர்கள் தாக்க முயன்ற போது இலுப்பைக்கடவை பொலிஸார் அதை தடுத்து பஸ் சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் . அத்துடன் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . https://www.virakesari.lk/article/174373
  19. 20 JAN, 2024 | 09:49 AM மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் இரு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்தே குறித்த படகுகளுடன் போதைப்பொருள் தொகையை கைப்பற்றியுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் ரகத்தை சேர்ந்தது என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174370
  20. கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி. மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே எல்லாவற்றையும் வெல்லும் என்கிறான் மன்னன். காவற்படையே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. மாதவியுடனான வாழ்க்கையை மறந்து, செல்வம் அனைத்தையும் இழந்து கண்ணகி காலில் இருக்கும் சிலம்புகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மதுரை வருகிறார்கள். அதே நேரம் அரண்மனையில் அரசியின் சிலம்பும் காணாமல் போகிறது. ஒரு சிலம்பை விற்க கோவலன் கடைவீதியில் பொற்கொல்லனைத் தேடி வருகிறான். அரசியின் சிலம்பு போலவே கண்ணகியின் சிலம்பும் இருப்பதால், தீர விசாரிக்காமல் கொல்லப்படுகிறான் கோவலன். படுகொலையை அறிந்த கண்ணகி இன்னொரு ஒற்றைச் சிலம்புடன் நீதி கேட்கிறாள். குற்றத்தை அறிந்த மன்னன் அப்பொழுதே இறந்து விழ, அரசியும் இறக்கிறாள். கொற்றவை கோலம் கொண்டு கண்ணகி மதுரையை அழித்த பின்னர் சேர நாடு நோக்கிச் செல்கிறாள். === ஓரிடத்தில் மக்களை விலைக்கு வாங்கும் சந்தையில் கண்ணகியும், கோவலனும் புக நேர்கிறது. அதைப்பார்த்து கோவலன் பதறி 'நான் உன்னை இங்கே கூட்டி வந்திருக்கலாகாது. உன்மனம் என்ன பாடுபடும்' என்கிறான். ; கண்ணகி அதற்கு பதில் சொல்கிறாள்; 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் பெண்டிர் தன் கணவர்களை நம்பி இருக்க வேண்டியதில்லை. ஒருவகையில் அதுவும் நல்லதுதான்'. கோவலன் அவளின் மனவோட்டம் அறிந்து தலை கவிழ்கிறான். 'பயிரென்பதன் பொருட்டுப் பிறவெல்லாம் களையப்படும் மண்ணை மருதமென்றனர் மூதாதையர். பச்சை பொலிந்து தலைகுனிக்கும் ஒவ்வொரு செடிக்கும் இறந்த களைகளின் உதிரமே உணவு.' - இது போல பல வரிகள் கொற்றவையில் கவிதையாக உள்ளது. அறமே தலையாயது என்று பாண்டிய நெடுஞ்செழியனின் அமைச்சர் கூற, "மறமன்றி இம்மண்ணில் அறம் இருக்க முடியாது" என்று கோப்பெருந்தேவி சொல்ல மன்னன் அதையே பின்பற்றுகிறான். இறுதியில் அறமே வெல்கிறது. === சிலப்பதிகாரம் தோன்றிய தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் இல்லை. மலையாள நாடான சேர நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் உண்டு. முனைவர். வி. ஆர். சந்திரன் அவர்கள் எழுதி, எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்த்த 'கொடுங்கோளூர் கண்ணகி' எனும் நூல் கண்ணகி கோவில் பற்றி விளக்குகிறது. கொடுங்கல்லூர் அம்மை கண்ணகியாகவே வழிபடப்படுகிறாள். கையில் சிலம்புடன் சிலை உள்ளது. மேலும் பல பகவதி கோவில்கள் கண்ணகி கோவில்களே என்று சந்திரன் அவர்கள் கூறுகிறார். மலைவாழ் மக்களான குறும்பர்களே கண்ணகியை முதலில் கண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கொடுங்கல்லூர் அம்மைக்கு 'குறும்பா தேவி' என்ற பெயரும் உண்டு. மீன மாதம் நடக்கும் பரணித் திருவிழாவில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. முன்பு குறும்பாடு என்னும் செம்மறியாட்டை பலி கொடுக்கும் வழக்கமும் இந்த கோவிலில் இருந்திருக்கிறது. முற்காலத்தில் வஞ்சி என்னும் பெரிய ஊராக இருந்துள்ளது கொடுங்கல்லூர். போர்களை மிகப்பெரிய அளவில் சந்தித்த இடமாக வஞ்சி இருந்த்துள்ளது என்று குறிப்பிடுகிறார் முனைவர் சந்திரன். கொற்றவை நாவலுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியது 'கொடுங்கோளூர் கண்ணகி' புத்தகம். http://ippadikkuelango.blogspot.com/2024/01/kotravai.html
  21. 20 JAN, 2024 | 09:26 PM வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு பெண்கள் இன்று (20.01) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்கள் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை. இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174418
  22. இந்தியாவை தொடர்ந்து 5வது நாடாக நிலவில் கால் பதித்த ஜப்பான் - சாதனையிலும் ஒரு சோதனை பட மூலாதாரம்,JAXA படக்குறிப்பு, நிலவில் தரையிறங்கிய ஜந்தாவது நாடு ஜப்பான் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 45 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பான் விண்கலம் வெற்றிகரமாக சந்திரனைத் தொட்டுவிட்டது. ஆனால், அதன் சூரிய சக்தி அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலால், அதனால், நீண்ட நேரம் அங்கிருக்க முடியாது. நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் அனுப்பிய ஒரு ஸ்மார்ட் தரையிறங்கி கலன் (ஸ்லிம்) சந்திர மேற்பரப்பில் அதன் மையப் பகுதியில் மெதுவாக தன்னை நிலைநிறுத்தியது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா மற்றும் இந்தியாவுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தை காப்பாற்ற ஜப்பான் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத காரணங்களுக்காக, விண்கலத்தில் உள்ள சூரிய மின்கலங்கள் மின்சாரத்தை உருவாக்காது. இது ஸ்மார்ட் தரையிறங்கி கலனை, முழுவதுமாக அதன் பேட்டரிகளை நம்பியிருக்கச் செய்கிறது. மேலும், அந்த பேட்டரி படிப்படியாக குறையும். அதன் முடிவில், அந்த ரோபோ அமைதியான நிலைக்குச் சென்றுவிடும். அதனால், எந்தக் கட்டளைகளையும் பெற முடியாது. பூமியுடன் தொடர்புகொள்ள முடியாது. விண்கலத்தை சரி செய்யும் பணியில் உள்ள பொறியாளர்கள், ஹீட்டர்களை அணைத்துவிட்டு, விண்கலத்தில் உள்ள படங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். தரையிறங்கும் மென்பொருள் எவ்வளவு நன்றாக வேலை செய்தது என்பதைத் தெரிவிக்கும் தரவையும் அவர்கள் மீட்டெடுக்கிறார்கள். ஜப்பானிய விண்வெளி ஏஜென்சி (ஜாக்ஸா) அதிகாரிகள் ஸ்லிம் விண்கலம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக அந்தத் திட்டத்தை கைவிட மாட்டார்கள். சூரிய மின்கலங்கள் சூரியனைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. சந்திரனில் ஒளி கோணங்கள் மாறுவதால், விண்கலத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,REUTERS ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஜப்பான் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதாகக் கூற முடியுமா என்ற கேள்விக்கு, கூற முடியும் எனக் கூறியுள்ளார். "இத்திட்டம் வெற்றிபெறவில்லை என்றால், மிக அதிக வேகத்தில் நிலவின் மேற்பரப்புடன் மோதியிருக்கும். பின், விண்கலம் முற்றிலும் செயலிழந்திருக்கும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஆனால், விண்கலம் இன்னும் எங்களுக்கு தரவுகளை சரியாக அனுப்புகிறது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது." ஸ்லிம் விண்கலம், இரண்டு சிறிய ரோவர்களை எடுத்துச் சென்றது. திட்டமிட்டபடி தரையிறக்கத்திற்கு முன்பு, அந்த இரண்டு ரோவர்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியது. அகச்சிவப்பு(Infrared) கேமராவை சுமந்து செல்லும் இந்த விண்கலம், அடுத்த பதினைந்து நாட்களில் அங்கு நிலவியல் ஆய்வுகளில் ஈடுபட இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் நேரத்தில் அந்த ஆய்வை எவ்வளவு செய்ய முடியும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது. பட மூலாதாரம்,JAXA இதுவரை பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில், சந்திரனில் தரையிறங்குவது மிகவும் கடினமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முயற்சிகள் பாதி மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஜப்பான் விண்வெளி நிறுவனமான (ஜாக்ஸா) புதிய துல்லியமான வழிசெலுத்தல் தொழில்நுட்பங்களில் நம்பிக்கை வைத்துள்ளது. தரையிறங்கி கலனில் உள்ள கணினி, நிலவில் தரையிறங்கும்போது ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க விரைவான பட செயலாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. பொறியாளர்கள் தங்களின் இலக்கு இடத்திலிருந்து 100மீ (330 அடி) தூரத்திற்கு செல்ல விரும்பினர். தற்போது, ஸ்லிம் விண்கலம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என்பதை விண்கலத்தில் பதிவாகியுள்ள தரவுகளை ஆராய்வார்கள். விண்கலத்தில் உள்ள தொழில்நுட்பங்கள், வடிவமைக்கப்பட்டது போல் வேலை செய்தன என்பது ஆரம்ப அறிகுறிகள். "விண்கலத்தின் தரவுகளின்படி, ஸ்லிம் நிச்சயமாக 100மீ துல்லியத்துடன் தரையிறக்கத்தை அடைந்துவிட்டதாக நம்புகிறேன். நிச்சயமாக, நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தது போல், தகவலைத் துல்லியமாக பகுப்பாய்வு செய்ய ஒரு மாதம் ஆகும்" என்றார் குனினாகா. பட மூலாதாரம்,NASA/LRO ஜப்பான் ஏற்கனவே இரண்டு முறை தனது விண்கலத்தை விண்கற்களில் தரையிறக்கியுள்ள நிலையில், தற்போது நிலவில் தரையிறக்கம் செய்துள்ளது மற்றுமொரு சாதனையாக கருதப்படுகிறது. இது அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (நாசா) ஆர்ட்டெமிஸ்(Artemis ) திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின்படி, மனிதர்களை சந்திர மேற்பரப்பில் தரையிறக்கும் ஒரு முயற்சி. கடந்த ஆண்டு, ஐஸ்பேஸ் என்ற தனியார் ஜப்பானிய நிறுவனம் இதேபோல் விண்கலத்தை நிலவில் தரையிறக்க முயன்றது. அதன் ஹகுடோ-ஆர்(Hakuto-R) விண்கலம், நிலவுக்கு மேலே உள்ள உயரம் குறித்து உள் கணினி குழப்பமடைந்து செயலிழந்தது. ஜப்பானின் இந்த தரையிறக்கம் குறித்து பேசிய இங்கிலாந்தின் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தி்ன் பேராசிரியர் சிமியோன் பார்பன், "என்னைப் பொறுத்தவரை, இது துல்லியமான தரையிறக்கத்தைப் பற்றியது. இது ஒரு பெரிய வெற்றி. அவர்களாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். அதேபோல், ஸ்பேஸ்வாட்ச் குளோபல் என்ற டிஜிட்டல் இதழைச் சேர்ந்த டாக்டர் எம்மா காட்டி, ஜப்பான் கொண்டாடுவதற்கு நிறைய இருக்கிறது என்று கூறினார். "இது அவர்களுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்தது; இது ஒரு கௌரவம். ஒரு நாடாக ஜப்பானுக்கு இது முக்கியமானது; அவர்கள் வைத்திருக்கும் அனைத்து முதலீட்டிற்கும் இது முக்கியமானது. சீனா அல்லது அமெரிக்கா போன்று பெரிய நாடுகளாக இல்லாத நாடுகளால், இதனை செய்ய முடியும் என்பதற்கான சான்று இது," என்றார் எம்மா காட்டி. https://www.bbc.com/tamil/articles/crgj5qp555zo
  23. ஓமண்ணை இன்னும் வழக்கம்பரையில் இருந்து பொன்னாலைச் சந்தி வரை ஒரு 5 கிலோமீற்றர் காப்பற் போடவேணும். ஆனால் எங்கட இடத்திற்கு கிட்ட வந்து நிறுத்திவிட்டார்கள். விரைவில் போடுவார்கள் என நம்புகிறேன்.
  24. மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது. சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டொல்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது. மீன் பிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டொல்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டொல்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 2024 ஜனவரி 22 முதல் பெப்ரவரி 20 வரை அனைத்து விதமான வர்த்தக ரீதியான மீன்பிடி பணிகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது. உள்ளூர் மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தடை தொடரும் என அரசு அறிவித்தது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக பிரான்ஸ் மீன்பிடிக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிஸ்கே விரிகுடா (Bay of Biscay) எனப்படும் பிரான்சின் வடமேற்கு கரையோர பிரிட்டனியில் உள்ள ஃபினிஸ்டியர் பகுதியிலிருந்து அண்டை நாடான ஸ்பெயினின் கடல் எல்லை வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய முடியாது. பல மில்லியன் யூரோக்கள் இதனால் கடல் வணிகத்தில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இழப்பை ஈடு செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளது. https://thinakkural.lk/article/288799
  25. நிலவில் தரையிறங்கிய 5 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதமளவில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது. தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயற்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. https://thinakkural.lk/article/288790

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.