Everything posted by ஏராளன்
-
அதே வானம் அதே பூமி - சுப.சோமசுந்தரம்
அதே வானம் அதே பூமி புத்தக வெளியீட்டிற்கு பேராசானுக்கு வாழ்த்துகள்.
-
பக்கத்து வீடு
சும்மா கையால தொடுறதுக்கு ஏனண்ணை ஏணி?!😜
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 70க்கும் மேற்பட்டோர் பலி Published By: DIGITAL DESK 3 25 DEC, 2023 | 11:59 AM காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு மக்கள் வசிப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காயமடைந்த பலர் அருகில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகத்தில் இரத்தத்துடன் காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மூன்று வீடுகளிற்கு மேல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவு மக்கள் வசித்த குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகளையும் பேரப்பிள்ளையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஒருவர் தாங்கள் காசாவிலிருந்து தப்பிவெளியேறியவர்கள் என தெரிவித்துள்ளார். அவர்கள் அழிக்கப்பட்ட கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் வசித்தனர் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்ததில் அவர்கள் அனைவரும் எனது பேரப்பிள்ளைகள் மகள் கணவர் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றோம் பொதுமக்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றனர் பாதுகாப்பான இடம் இல்லை எங்களை காசாவிலிருந்து வெளியேற சொன்னார்கள் நாங்கள் மத்திய காசாவிற்கு வந்து உயிரிழக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172437
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் தின வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அண்ணை. எனக்கு வழிகாட்டினது கள உறவுகள் தானே!😜 மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை.
-
ஆஸி.யை வீழ்த்தி மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது இந்தியா
Published By: VISHNU 24 DEC, 2023 | 02:05 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியாவின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 274 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 122 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர். இங்கிலாந்துக்கு எதிராக வெதர்பி மைதானத்தில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அப்போதைய அணித் தலைவர் ஷுபங்கி குல்கர்னி, மினோட்டி தேசாய் ஆகியோர் பகிர்ந்த 106 ஓட்டங்களே இந்தியாவின் 8ஆவது விக்கெட்டுக்கான முன்னைய சாதனை இணைப்பாட்டமாக இருந்தது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 197 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 261 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனை அடுத்து 75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 219 (தஹிலா மெக்ரா 50, பெத் மூனி 40, அலிசா ஹீலி 38, பூஜா வஸ்த்ராக்கர் 53 - 4 விக்., ஸ்நேஹ் ரானா 56 - 3 விக்., தீப்தி ஷர்மா 45 - 2 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 406 (தீப்தி ஷர்மா 79, ஸ்ம்ரித்தி மந்தனா 74, ஜெமிமா ரொட்றிக்ஸ் 73, ரிச்சா கோஷ் 52, பூஜா வஸ்த்ராக்கர் 47, ஷஃபாலி வர்மா 40, ஏஷ்லி கார்ட்னர் 100 - 4 விக்., (அனாபெல் சதர்லண்ட் 41 - 2 விக்., கிம் கார்த் 58 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 261 (தஹிலா மெக்ரா 73, எலிஸ் பெரி 45, பெத் மூனி 33, அலிசா ஹீலி 32, ஸ்நேஹ் ரானா 63 - 4 விக்.), ஹார்மன்ப்ரீத் கோர் 23 - 2 விக்., ராஜேஷ்வரி கயக்வாட் 42 - 2 விக்.) இந்தியா (வெற்றி இலக்கு 75) 2ஆவது இன்: 75 - 2 விக். (ஸ்ம்ரித்தி மந்தனா 38 ஆ.இ., ரிச்சா கோஷ் 13, ஜெமிமா ரொட்றிக்ஸ் 12 ஆ.இ.) ஆட்டநாயகி: ஸ்நேஹ் ரானா. https://www.virakesari.lk/article/172379
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜
-
புதிய கொவிட் பிறழ்வு வேகமாக பரவுவதாக WHO எச்சரிக்கை
உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 வீதத்தால் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் Published By: DIGITAL DESK 3 23 DEC, 2023 | 06:09 PM உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி, 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 வீதத்தால் குறைந்துள்ளதோடு, 3,000க்கும் மேற்பட்ட புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17ஆம் திகதி நிலவரத்தின்படி, கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து மொத்தமாக 772 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 7 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வைத்தியசாலைகளில் 118,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 1,600க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 18ஆம் திகதி வரை கொவிட் வைரஸ் திரிபான BA.2.86 ஒமிக்ரோனின் புதிய துணை வகையான JN.1 வைரஸின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், JN.1 வைரஸின் ஆபத்து தற்போது குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், JN.1 பல நாடுகளில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும். தொடர்ந்து, JN.1 வைரஸ் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அது இடர் மதிப்பீட்டை தேவைக்கேற்ப புதுப்பிக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொவிட் தடுப்பூசிகள் JN.1 மற்றும் SARS-CoV-2இன் பிற மாறுபாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும். கொவிட்-19 வைரஸால் பரவும் சுவாச நோய் மட்டுமல்லாது இன்ஃப்ளூயன்ஸா, ஆர்எஸ்வி மற்றும் குழந்தைகளிடையே நிமோனியா பரவல் ஆகியனவும் அதிகரித்து வருகின்றன. இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்தல், கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/172341
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல் தொடரில் விலகும் ஹர்திக் பாண்டியா? காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஓல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து ஹார்திக் விலகினார். தொடர்ந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்த நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்பதால் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்டியா விலகும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/285791
-
உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் உள்ள துணிக் கடைகளில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து பறந்தனர். பட்டப் பகலில், பேருந்து நிலையத்திற்கு அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த இளைஞர், செய்வதறியாத தவித்து அந்த இளம்பெண் அழுகுரலில் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளே அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள்தான், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமியின் 22 வயது மகன் சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கெளசல்யா. சங்கர் கொலை வழக்கில், 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, கெளசல்யா மற்றும் சங்கரின் சகோதரர்கள் என மூன்று தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால், அந்த வழக்கு இன்று வரை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படவில்லை. 'சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை' படக்குறிப்பு, மார்ச், 2016இல் நடந்த தாக்குதலின்போது, காயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கெளசல்யாவும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிகு்கம்போது காதலித்து வந்துள்ளனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார். “இப்போது வரை என்னால் அந்த இழப்பைக் கடக்கவே முடியவில்லை. சிறைவாசிகள் காலையில் வெளியே வந்து, மாலையில் அறையில் அடைக்கப்படும்போது ஏற்படும் வெறுமையைப் போலத்தான் என் வாழ்வும் உள்ளது. சங்கரின் இழப்பு எனக்குத்தான். அவன் இல்லாத வெறுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என்றார் கெளசல்யா. சம்பவம் நடந்த இடத்திலேயே சங்கர் பலியான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளசல்யா, அதே ஆண்டு மே மாதம் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சங்கரின் குடும்பத்தினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் உயிர் பிழைத்த கெளசல்யா, சங்கரின் கொலைக்கு நீதி பெறுவதில் உறுதியுடன் இருந்தார். “என்னால், ஒரு சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை. அந்தச் சம்பவம் இன்னும் என்னைத் துறத்திக்கொண்டே இருக்கிறது. சங்கருக்கு பிறகு, ஒவ்வொரு முறையும், யாரோ ஒருவர் சாதியின் பெயரால் கொல்லப்படும்போதும், நானே கொல்லப்படுவதாக உணர்கிறேன். சங்கருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்,” என்றார் கெளசல்யா. சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். வழக்கை எப்படி நிரூபித்தது போலீஸ்? பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK சங்கரின் கொலை வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த 11 பேரில், 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சம்பவம் பட்டப் பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்ததால், சம்பவம் முழுவதும் அங்கிருந்த கடைகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலமாகவும், நேரடி சாட்சியான கெளசல்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபித்ததாகக் கூறினார் அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர். “இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகள் முக்கிய ஆதரமாக இருந்தன. இதற்காக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை இல்லாத அளவில், சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாகப் பெரிதாக்கி, சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டி நிரூபித்தோம். அது தவிர, கெளசல்யாவின் தந்தை சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும், இந்த சதித் திட்டத்திற்கு அவர் எப்படி மூளையாகச் செயல்பட்டார் என்பதை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் உரையாடல்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தை வைத்து நிரூபித்தோம்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்காக கெளசல்யாவின் தந்தைதான் தலைமறைவாக இருக்க ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்ததையும் உறுதி செய்ததாகக் கூறினார் அந்த விசாரணை அதிகாரி. “சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், அதை நிரூபிப்பதற்கும் நேரடி சாட்சிகள் உள்ளன. ஆனால், இந்த நோக்கத்தையும், கூலிப் படையினருக்கு சின்னச்சாமி மூளையாக இருந்தார் என்பதையும் நிரூபிப்பதுதான் சற்று சவாலாக இருந்தது. ஆனால், சின்னச்சாமி சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசிக்கு இந்தக் கூலிப்படையினர் அழைத்துள்ளனர். மேலும், பழனியில் அவர்கள் தங்கியிருந்த அறையை இவர்தான் புக் செய்துள்ளார்,” என்றார் அந்த அதிகாரி. கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை பட மூலாதாரம்,HANDOUT இந்த வழக்கின் விசாரணை மிகவும் துரிதமாக நடந்தது. சம்பவம் நடந்த மூன்று மாதங்களில், விசாரணையை முடித்து 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கடந்த 2017 நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு விசாரணை முழுவதுமாக முடிவடைந்து, டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அப்போதைய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் தீர்ப்பு வருவதால், அனைத்து தரப்பினரும் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். அதேநேரத்தில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். டிசம்பவர் 12ஆம் தேதி, 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த சிலர், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் மாமா பாண்டித்துரை விடுதலையானதற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த சிலர், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அழைத்துச் சென்றனர். “இது முழுக்க முழுக்க சாதி வன்மத்தில் நிகழ்த்தப்பட்ட கொலை. இதற்கு ஒரு கூட்டமே ஆதரவாக உள்ளது. இது மட்டும் இல்லை. அன்னலட்சுமியை சாதி சங்கத்தினர் ஒரு கூட்டத்திற்கு அழைத்து பாராட்டு விழா நடத்தி, வழக்கின் செலவிற்காகப் பணமும் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் யாரும் கருத்தில் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் சூழலில் எப்படி என்னால் நிம்மதியாக வாழ முடியும்?” எனக் கேட்டார் கெளசல்யா. உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட சின்னச்சாமி பட மூலாதாரம்,GETTY IMAGES அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, 2020இல் முடிவடைந்தது. இந்த வழக்கில், ஜூன் 22, 2020இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தன்ராஜையும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மணிகண்டனையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முறையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார் கெளசல்யா. “திருப்பூரில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஒவ்வொரு முறையும் என்ன நடக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தினர். நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். ஆனால், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, நான் ஒரு முறைகூட அழைக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்போதுதான் எனக்குத் தெரியும்,” என்றார் கெளசல்யா. ஆண்டுகள் ஓடினாலும், சங்கரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை எனக் கூறும் சங்கரின் சகோதரர் விக்னேஷ், அண்ணன் சாவுக்கு எப்படியாவது நீதியைப் பெற வேண்டும் என்றார். “அண்ணா சங்கர் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அவன் இருக்கும் வரை, அவன் தான் எங்களைப் பார்த்துக்கொண்டான். இப்போது, அவனும் இல்லை, எங்கள் அப்பாவும் சமீபத்தில் உயிரிழந்தார். அவன் இறப்புக்குக் கிடைக்கும் நீதி மட்டுமே எங்களுக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும்,” என்றார் விக்னேஷ். மூன்று ஆண்டுகளாகியும் விசாரணைக்கு எடுக்கப்படாத வழக்கு பட மூலாதாரம்,NATHAN G உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து தமிழ்நாடு அரசு சார்பிலும், கெளசல்யா சார்பிலும், சங்கரின் சகோதரர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை ஒரு முறைகூட அந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் கெளசல்யா. “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைப்பதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றும், இன்று வரை அவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. சிலர் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் வழியாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்கச் சொல்கிறார்கள். இதற்கு எப்படி கட்சிப் பிரமுகர்களை அணுகுவது என்று தெரியவில்லை,” என்றார் கெளசல்யா. மேலும், திமுக அரசு இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவதாக கெளசல்யா குற்றம் சாட்டினார். “ஆளுநர் தொடர்பான வழக்குகளுக்கு எல்லாம் அவசரம் காட்டும் திமுக அரசு, இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. இதுவொரு தனிநபர் கொலை வழக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் தீர்ப்பு, இதுபோன்ற மற்ற சம்பவங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்க பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் தயார் அன்னலட்சுமியிடமும் பிபிசி பேச முயன்றது. அப்போது அவர்கள், “எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்கிறோம்,” என்றனர். 'ஆணவக் கொலையில் திமுக அலட்சியம்' இந்த வழக்கில் கெளசல்யா சார்பாக மேல்முறையீடு செய்துள்ள எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், திமுக அரசு ஆணவக்கொலை வழக்கில் மற்ற கட்சிகளைப் போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “மற்ற கட்சிகளைப் போல் அல்ல திமுக. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்த பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி, ஆணவக்கொலை வழக்குகளில் மெத்தனம் காட்டுவது கவலையாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர். https://www.bbc.com/tamil/articles/cjkgn33kgyzo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் ரஷ்யா டிரோன் தாக்குதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷ்யா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். https://thinakkural.lk/article/285711
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் விசேட சுற்றிவளைப்பு சோதனை Published By: VISHNU 22 DEC, 2023 | 04:27 PM மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (22) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர். பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://www.virakesari.lk/article/172298
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! இந்தியன் பிரிமீயர் லீக்கின் (ஐ.பி.எல்) மினி ஏலம் நேற்றைய கடந்த (19) திகதி டுபாயில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இது தொடர்பில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தன. அதில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மிட்சல் ஸ்டார்க் அதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றார். இந்நிலையில் “கொல்கத்தா அணி அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது” என ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை இது தொடர்பாக அவர் கூறுகையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. பந்துவீச்சில் இருக்கும் பலம் அந்த அணியின் துடுப்பாட்டத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன். கொல்கத்தா அணியில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த துடுப்பாட்ட வரிசையை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான். துடுப்பாட்ட வரிசை மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் முதல் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து. கொல்கத்தா அணியின் பலவீனம் துடுப்பாட்ட வரிசையே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2024க்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முழு அணி நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ். பாரத், ஸ்டார்க். , அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், சாகிப் ஹுசைன். https://ibctamil.com/article/ipl-2024-ab-de-villiers-about-kkr-team-csk-auction-1703253255
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
யாழில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 30 பேர் கைது யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசேட சோதனை இந்நிலையில் பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் இன்று (22.12.2023) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆறு பேர் போதைப் பொருள் குற்றப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுவரும் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மோப்ப நாயின் உதவியுடன் தீடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது. https://tamilwin.com/article/special-anti-narcotics-operation-in-jaffna-1703252285
-
செய்யாத குற்றத்திற்கு சிறைத் தண்டனை அனுபவித்த நபர் 48 வருடங்களின் பின் விடுதலை
Published By: DIGITAL DESK 3 22 DEC, 2023 | 12:09 PM அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. 22 வயதில் சிம்மன்ஸ் சிறை தண்டனை பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை நீதிமன்றம் இரத்து செய்தது. இதனையடுத்து, சிம்மன்ஸ் விடுதலையானார். க்ளின் சிம்மன்ஸ் அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் (National Registry of Lxonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராவார். அவர் கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார். ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும். தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறைத் தண்டனை அனுபவித்ததை குறித்து சிம்மன்ஸ் கூறியதாவது, பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள். ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் என தெரிவித்தார். மேலும், அவர் இழந்த இளமை பருவங்களை யார் தருவார்கள்? என சிம்மன்ஸ் விடுதலை குறித்து பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/172271
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இப்பவே 4 பேர் தயார் தானே! ஈழப்பிரியன் அண்ணை சுவியண்ணை கிருபனண்ணை ஏராளன் அப்பிடியே 15-20 பேர் வந்து குதிப்பினம் பாருங்கோ.
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
உலகக் கோப்பை அணியில் புறக்கணக்கப்பட்ட வீரரின் சதத்தால் தென்னாப்பிரிக்க தொடரை வென்ற இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்ல இந்தியாவுக்கு உதவியிருக்கிறது. வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் பாரல் நகரின் போலந்த் பார்க்கில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்து. 297 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 78 ரன்களில் தோற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES கணக்குத் தீர்த்தது இந்திய அணி இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டிகளில் நிலைத்தன்மை ஆட்டத்துக்கு தடுமாறி வந்த சஞ்சு சாம்ஸன்(108) நேற்று முதல் சதத்தை பதிவு செய்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சஞ்சு சாம்ஸனின் முதல் சதம் வீணாகப் போகாமல் இந்திய அணியின் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது என்றென்றும் அவருக்கு மறக்காத வண்ணங்களைச் சேர்க்கும். இந்தத் தொடரில் அற்புதமாக பந்துவீசி முதல் போட்டியில் 5 விக்கெட், இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்த அர்ஷ்தீப் சிங்கிற்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே கே.எல்.ராகுல் கேப்டன்ஷியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க வந்திருந்தபோது, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் அதே கே.எல்.ராகுல் தலைமையில் இளம் அணி புறப்பட்டு வந்து ஒருநாள் தொடரை வென்று, டி20 தொடரை சமன் செய்து, தென் ஆப்பிரி்க்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் சாம்ஸன், திலக் வர்மா அமைத்த கூட்டணி முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பந்துவீச்சில் வாஷிங்டன் வீசிய 10 ஓவர்களும், அர்ஷ்தீப் ஓவர்களும் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் குறைவுக்கும், விக்கெட் சரிவுக்கும் காரணம் என்று கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்சன் பற்றி கேப்டன் ராகுல் கூறியது என்ன? வெற்றிக்குப்பின் கேப்டன் ராகுல் கூறுகையில் “உலகக் கோப்பை பைனல் தோல்வி தென் ஆப்பிரிக்க வந்த எனக்கு எங்கள் அணி வீரர்கள் அருமையான வெற்றியை அளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சாம்ஸன் அருமையாக ஆடி வருகிறார். துரதிர்ஷ்டமாக அவருக்கு 3ஆவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்க முடியவில்லை. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கெனவே 3ஆவது இடத்தை ஜாம்பவான்கள் நிரப்பியுள்ளனர். இனிமேல் 3வது இடத்துக்கான வாய்ப்பு சாம்ஸனுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்தார். சுந்தர், அர்ஷ்தீப் நிகழ்த்திய மாயாஜாலம் வாஷிங்டன் சுந்தர் நீண்டகாலத்துக்கு பின் ஒருநாள் தொடரில் இடம் பெற்று நேற்று தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தண்ணிகாட்டினார் என்றுதான் கூற முடியும். 10 ஓவர்கள் வீசிய சுந்தர் 38 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதிலும் மார்க்ரம், முல்டர் ஆகிய இரு விக்கெட்டுகளும் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்க உந்துகோலாக இருந்த விக்கெட்டுகளாகும். டி20 தொடரில் சொதப்பலாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் ஒருநாள் தொடரில் பந்துவீச்சுக்கான ரிதத்தை பிடித்துவிட்டார் என்றுதான் கூற முடியும். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் ரன்களை வழங்கினாலும், லைன் லென்த்தை அடையாளம் கண்டபின் தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தனது சீமிங், ஸ்விங் பந்துவீச்சில் சிம்மசொப்னமாகவே அர்ஷ்தீப் இருந்தார். அதிலும் பேட்டிங்கில் நங்கூரமிட்ட சோர்சியை(81) ஸ்விங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கவைத்து விக்கெட் எடுத்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நங்கூரமிட்ட பார்ட்னர்ஷிப் சாம்ஸன்-திலக் வர்மா இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு பொறுப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 136 பந்துகளில் 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் சேர்ந்தபின் ரன் ரேட் மிகவும் மந்தமாக 11 முதல் 30 ஓவர்கள் வரை 73 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். டி20, ஒருநாள் தொடரில் பெரிதாக சோபிக்காத திலக் வர்மா இந்த ஆட்டத்தில் பொறுமையாக பேட் செய்தார். தனது முதல் பவுண்டரியைக்கூட 39 பந்துகளில்தான் அடித்தார். அதிலும் 9 ரன்களில் இருந்து பவுண்டரி அடித்து 13 ரன்களாக திலக் வர்மா உயர்த்தினார். அதன்பின் சாம்ஸனும், திலக் வர்மாவும் களத்தில் நங்கூரமிட்டபின் ரன்கள் குவியத் தொடங்கின. 31 முதல் 40 ஓவர்களில் 73 ரன்களை இருவரும் வேகமாகச் சேர்த்தனர். திலக் வர்மா பொறுமையாக பேட் செய்து 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெற்றியுடன் முதல் சதம் சாம்ஸனின் ஒருநாள் போட்டி அதிகபட்சமே 86 ஆகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் மிகுந்த பொறுமையாக, தனக்கே உரிய ஸ்டைலில் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து சாம்ஸன் மிகுந்த நிதானத்துடன் பேட் செய்து முதல் சதத்தை 110 பந்துகளில் பதிவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். சாம்ஸன் மீது நிலைத்தன்மையற்ற பேட்டர் என்ற விமர்சனம் நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த பதிலடியாகவே தனது சதத்தின் மூலம் சாம்ஸன் வழங்கியுள்ளார் என்றுதான் கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் ரன் வேகம் இந்திய அணிக்கு ஃபினிஷ் டச் கொடுத்தது ரிங்கு சிங்கின் பேட்டிங்தான். அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்களும், சிறிய கேமியோ ஆடிய சுந்தர் 14 ரன்களும் சேர்த்தனர். இந்தத் தொடர்முழுவதும் அக்ஸர் படேல் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்திய அணி முதல் பவர்ப்ளேயில் 59 ரன்கள் சேர்த்தாலும், அடுத்த 20 ஓவர்கள் மந்தமாக ரன் சேர்த்தது. ஆனால் கடைசி 20 ஓவர்களில் மட்டும் 164ரன்கள் சேர்த்தது, கடைசி 10 ஓவர்களில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. இந்திய அணிக்கு மாற்றத்துக்காக ரஜத் பட்டிதார், சுதர்ஷனுடன் சேர்த்து தொடக்க ஆட்டக்காரராக் களமிறக்கப்பட்டார். அதிரடியாக பட்டிதார் தொடங்கினாலும், 22ரன்களில் பர்கர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த இரு போட்டிகளில் அரைசதம் அடித்த சுதர்ஷன் இந்த ஆட்டத்தில்10 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிம்மசொப்னமான சுந்தர், அர்ஷ்தீப் இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை அர்ஷ்தீப், சுந்தர் இருவரின் பந்துவீச்சும் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் குறிப்பிட வேண்டும். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு உகந்தது என்பதை மாற்றும்வகையில் சுந்தர் நேற்று பந்துவீசினார். தனது பந்துவீச்சில் துல்லியத்தன்மையை மாற்றாமல், லைன் லென்த்தில் வீசி தென் ஆப்பிரி்க்க பேட்டர்களை சுந்தர் திணறடித்தார். தனது சீனியர் அக்ஸர் படேலே வீட சுந்தர் அருமையாகப் பந்துவீசினார். அதிலும் தனது பந்துவீச்சின் வேகத்தில் வேறுபாடுகளைக் காண்பித்து பேட்டர்களை திணறடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்து லேகாத்தான் டர்ன் ஆகியது என்றாலும், பேட்டர்கள் பேட்டை வைக்க அச்சப்படும் “கிரே ஏரியா” வில் பந்தை பிட்ச் செய்து திணறடித்தார்.சுந்தர் வீசிய 10 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே வழங்கினார், 31 டாட் பந்துகளை வீசியுள்ளார். ஏறக்குறைய 5 ஓவர்கள் மெய்டனாகவே எடுத்துக்கொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஓவர்கள் மெய்டன்கள் அதேபோல அர்ஷ்தீப் சிங்கும் தனது முதல் ஸ்பெல்லில் மட்டுமே ரன்களைக் கொடுத்தார். அதன்பின் லைன்லென்த்தனை கண்டறிந்தபின் அதிலிருந்து நகற்றாமல் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். 9 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் ஒரு மெய்டன் கொடுத்து 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 39 டாட் பந்துகள் என்றால், ஏறக்குறைய 7.3 ஓவர்களை அர்ஷ்தீப் மெய்டன்களாக வீசி, தனது 10 பந்துகளில் மட்டும்தான் 30 ரன்களை கொடுத்தார் என்று எடுக்கலாம். தென் ஆப்பிரிக்காவின் ஆறுதல் இதுதான் தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை இந்த ஒருநாள் தொடரில் அவர்களுக்கு கிடைத்த ஒரு ஆறுதல், கண்டுபிடிப்பு என்பது டோனி சோர்சி மட்டும்தான். 3போட்டிகளில் ஒரு சதம், இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் என சோர்சி தேர்ந்த பேட்டர் போன்று பேட் செய்தார். எதிர்கால தென் ஆப்பிரிக்க அணிக்கு நிரந்தரமான இடத்துக்கு அச்சாரமிட்டுள்ளார். இதைத் தவிர இளம் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பெரிதாக 3 போட்டிகளிலும் சோபிக்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் மார்க்ரமின் ஸ்வீப் ஷாட் குறிதத் மோசமான ஆலோசனைதான் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். ஏனென்றால் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் என்று வலுவாக இருந்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 20 ஓவர்களில் 77 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றி தருணம் கிடைக்கவில்லை தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ துரதிர்ஷ்டமாக எங்களால் வெற்றியோடு முடிக்கமுடியவில்லை. அருமையான ஆடுகங்கள், எங்களுக்கு வெற்றிக்கான அந்தத் தருணம் கிடைக்கவில்லை. இந்த ஆடுகளத்தில் 290 ரன்கள் சேஸிங் செய்யக்கூடியதுதான், ஆனால், மொமென்ட்டத்தை தவறவிட்டோம். டாஸ் வெற்றி பெரிதாக பங்காற்றவில்லை. அடுத்துவரும் டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது, இரு அற்புதமான இடங்களில் நடக்கும் போட்டி சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரிந்த விக்கெட்டுகள் அதிலும் 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டிலிருந்து 6-வது விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரி்க்கா, அதேபோல, 26 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு சோர்சி, ஹென்ட்ரிக்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்து 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் என்று வலுவாகத்தான் இருந்தனர். ஆனால், அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சில் லைன்லென்த்தை பிடித்தபின் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட் படுத்துவிட்டது. அர்ஷ்தீப் வீசிய 9-வது ஓவருக்கு திணறிய ஹென்ட்ரிக்ஸ் அதே ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் பந்துவீச அழைக்கப்பட்டவுடன் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். அக்ஸர் ஓவரை எதிர்கொண்டு ஆட திணறிய டூசென், பந்து டர்ன் ஆகாது என்ற நினைப்பில் பேக்ஃபுட் எடுத்து ஆட முற்பட்டு கிளீன் போல்டாகினார். கேப்டன் மார்க்ரம், சோர்சியுடன் சேர்ந்து சிறிது நேரம் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுந்தர் பந்துவீச்சை அடிக்க திணறிய மார்க்ரம், அற்புதமான பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தமாக வாஷிங்டன் சுந்தரின் ஆப்ஸ்பின்னை சமாளித்து ஆட தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற முடியும். https://www.bbc.com/tamil/articles/cg3x5y1v5q0o
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
IPL 2024 தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று (19) துபாயில் நடைபெற்றது. இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது. 2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக விளையாடும் அணிகளின் விபரம் பின்வருமாறு, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் MS Dhoni (C) Devon Conway Ajinkya Rahane Aravelly Avanish Ruturaj Gaikwad Shaik Rasheed Moeen Ali Shivam Dube Rajvardhan Hangargekar Ajay Mandal Daryl Mitchell Nishant Sindhu Rachin Ravindra Mitchell Santner Deepak Chahar Tushar Deshpande Mukesh Choudhary Mustafizur Rahman Matheesha Pathirana Simarjeet Singh Prashant Solanki Shardul Thakur Maheesh Theekshana Sameer Rizvi டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் David Warner (C) Ricky Bhui Yash Dhull Prithvi Shaw Rishabh Pant Abishek Porel Harry Brook Shai Hope Tristan Stubbs Lalit Yadav Axar Patel Mitchell Marsh Sumit Kumar Khaleel Ahmed Kuldeep Yadav Lungi Ngidi Vicky Ostwal Jhye Richardson Swastik Chikara Praveen Dubey Mukesh Kumar Anrich Nortje Rasikh Salam Ishant Sharma Kumar Kushagra குஜராத் டைட்டன்ஸ் அணியில் Shubman Gill (c) David Miller Robin Minz Wriddhiman Saha Sai Sudharsan M Shahrukh Khan Matthew Wade Kane Williamson Azmatullah Omarzai Abhinav Manohar Rashid Khan Vijay Shankar Rahul Tewatia Spencer Johnson Kartik Tyagi Josh Little Mohammed Shami Darshan Nalkande Noor Ahmad Sai Kishore Mohit Sharma Jayant Yadav Umesh Yadav Sushant Mishra கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் Shreyas Iyer (c) Srikar Bharat Manish Pandey Rahmanullah Gurbaz Ramandeep Singh Nitish Rana Jason Roy Sherfane Rutherford Rinku Singh Venkatesh Iyer Sunil Narine Anukul Roy Andre Russell Vaibhav Arora Gus Atkinson Harshit Rana Mujeeb Ur Rahman Chetan Sakariya Mitchell Starc Suyash Sharma Varun Chakravarthy Angkrish Raghuvanshi Sakib Hussain லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியில் KL Rahul (c) Quinton de Kock Nicholas Pooran Ayush Badoni Devdutt Padikkal Ashton Turner Krishnappa Gowtham Deepak Hooda Arshin Kulkarni Kyle Mayers Krunal Pandya Marcus Stoinis David Willey Arshad Khan Mohsin Khan Ravi Bishnoi Manimaran Siddharth Mayank Yadav Yudhvir Singh Mohsin Khan Amit Mishra Naveen-ul-Haq Shivam Mavi Mark Wood Yash Thakur மும்பை இந்தியன்ஸ் அணியில் Hardik Pandya (c) Rohit Sharma Ishan Kishan Nehal Wadhera Tim David Vishnu Vinod Suryakumar Yadav Dewald Brevis Shreyas Gopal Mohammad Nabi Tilak Varma Piyush Chawla Anshul Kamboj Shams Mulani Romario Shepherd Jason Behrendorff Jasprit Bumrah Gerald Coetzee Kumar Kartikeya Akash Madhwal Dilshan Madushanka Arjun Tendulkar Nuwan Thushara Naman Dhir Shivalik Sharma பஞ்சாப் கிங்ஸ் அணியில் Shikhar Dhawan (c) Harpreet Singh Rilee Rossouw Jonny Bairstow Prabhsimran Singh Jitesh Sharma Sam Curran Liam Livingstone Shivam Singh Atharva Taide Rishi Dhawan Shashank Singh Sikandar Raza Chris Woakes Arshdeep Singh Nathan Ellis Vidwath Kaverappa Kagiso Rabada Rahul Chahar Harpreet Brar Harshal Patel Prince Choudhary Ashutosh Sharma Tanay Thyagarajan Vishwanath Singh ராஜஸ்தான் ரோயல் அணியில் Sanju Samson (c) Shubham Dubey Yashasvi Jaiswal Tom Kohler-Cadmore Rovman Powell Jos Buttler Shimron Hetmyer Dhruv Jurel Riyan Parag Kunal Singh Rathore Ravichandran Ashwin Donovan Ferreira Nandre Burger Avesh Khan Yuzvendra Chahal Navdeep Saini Kuldeep Sen Abid Mushtaq Trent Boult Prasidh Krishna Sandeep Sharma Adam Zampa சன்ரைஸஸ் ஹைதராபாத் Aiden Markram (c) Mayank Agarwal Fazalhaq Farooqi Marco Jansen Heinrich Klaasen Bhuvneshwar Kumar Umran Malik Mayank Markande T Natarajan Glenn Phillips Nitish Kumar Reddy Abdul Samad Abhishek Sharma Anmolpreet Singh Sanvir Singh Upendra Yadav Pat Cummins Travis Head Shahbaz Ahmed Jaydev Unadkat Wanindu Hasaranga Akash Singh Jhatavedh Subramanyan Rahul Tripathi Washington Sundar ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் Faf du Plessis (c) Shahbaz Ahmed Finn Allen Manoj Bhandage Michael Bracewell Akash Deep Josh Hazlewood Kedar Jadhav Dinesh Karthik Siddarth Kaul Virat Kohli Rajan Kumar Mahipal Lomror Glenn Maxwell Wayne Parnell Harshal Patel Suyash Prabhudessai Anuj Rawat Karn Sharma Himanshu Sharma Avinash Singh Mohammed Siraj Vijaykumar Vyshak Sonu Yadav https://thinakkural.lk/article/285384
-
புதிய கொவிட் பிறழ்வு வேகமாக பரவுவதாக WHO எச்சரிக்கை
புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285478
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
போதைப்பொருள் : 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது - டிரான் அலஸ் 21 DEC, 2023 | 03:48 PM (எம்.மனோசித்ரா) போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த 4 நாட்களில் 731 சந்தேகநபர்களும், பெயர் பட்டியலில் இல்லாத 8458 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்புக்களில் இதுவரை 431 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும், 162 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கில் 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது 3 வகைகளின் கீழ் அவற்றுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவது பாரியளவில் போதைப்பொருள் கட்டத்தலில் ஈடுபடுபவர்களாவர். இரண்டாவது அவற்றை விநியோகிப்பவர்கள். மூன்றாவது போதைப்பொருள் பாவனையாளர்கள். நாம் போதைப்பொருள் பாவனையாளர்களை விடுத்து ஏனைய இரு பிரிவினரையும் இலக்காகக் கொண்டே எமது சுற்றுவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதான போதைப்பொருள் கடத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் அடுத்த இரு பிரிவினரையும் கட்டுப்படுத்துவது மிக இலகுவானதாகும். போதைப்பொருளை விநியோகிப்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவினரால் 4665 சந்தேகநபர்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த 4 நாட்களில் இவர்களில் 731 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்களின் போது பட்டியலில் இல்லாதவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒட்டு மொத்தமாக 8458 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை) இவர்களில் 346 பேரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது. 61 பேரிடம் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 697 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா, ஹஷீஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 431 மில்லியன் ரூபாவாகும். அதே போன்று கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள், காணி, கட்டடங்கள், தங்கம் மற்றும் பணம் என்பவற்றின் பெறுமதி 162 மில்லியன் ரூபாவாகும். இந்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும். கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும். 2024 ஜூன் 30ஆம் திகதியாகும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். எனவே இரு வாரங்களில் சுற்றிவளைப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது. எவ்வித அறிவிப்புக்களும் இன்றி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோரை களமிறக்கி சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் மத்தியில் வீண் அச்சம் ஏற்படும். அதனைக் கருத்திக் கொண்டே முன்னரே அறிவித்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான போதைப்பொருள் கட்டத்தல்காரர்களை தப்பிக்கச்செய்வது எமது நோக்கமல்ல. கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் புலனாய்வு பிரிவினரால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களும் பிரத்தியேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/172219
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இலங்கையில் 4 நாட்களில் 8,000 பேர் கைது, கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் - என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை இலங்கை போலீசார் ஆரம்பித்துள்ளனர். இடைக்கால போலீஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவியேற்று, ஓரிரு தினங்களிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் போலீஸார் 24 மணிநேர சோதனைகளை நடாத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, இதுவரை 8,000-திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிழல் உலக கோஷ்டிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளின் போது, எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார். ''பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் போலீஸார் மற்றும் முப்படைகளுடன் இணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். நாடு தற்போது யுத்தத்திற்கு சமமாக ஒரு நிலைமையையே எதிர்நோக்கியுள்ளது. பேசிக் கொண்டு மாத்திரம் இருக்காது, இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்தியுள்ளோம்," என்கிறார் டிரான் அலஸ். மேலும், "இந்த உண்மையான தேடுதல் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமக்கு கிடைக்கும் அனைத்து விதமான தகவல்கள் குறித்தும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்," என அவர் கூறுகின்றார். ''தமது குழந்தைகள், குடும்பம் தொடர்பில் சிந்தித்து, இந்த பேரழிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு போலீஸாரிடத்திலிருந்து எந்தவித மன்னிப்பும் கிடையாது. சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் தொடர்பிலும் இவ்வாறான நடவடிக்கைகளே எடுக்கப்படும். போலீஸாருக்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் குற்றங்களுக்காக அந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே போலீஸார் தமது ஆயுதங்களை பயன்படுத்த வேண்டி ஏற்படும்," என்கிறார் அவர். "இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடக்கும். தமது குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் என குடும்பத்தின் மீது அன்பு கொண்ட அனைவரும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்," என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, இடைக்கால போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர் கைது நடவடிக்கைகள் நாட்டில் நிலைக்கொண்டுள்ள குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய, கடந்த சில நாட்களாக 24 மணிநேர தொடர் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக, இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாங்களில் மாத்திரம் 2,008 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், யுக்திய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 17-ஆம் தேதி முதல் நேற்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதி வரை 6,583 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன், மேலும் பல சந்தேக நபர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குழுக்களுக்கு சொந்தமான சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். பேருந்துகள், கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள், தங்காபரணங்கள், பணம் உள்ளிட்ட சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதுடன், இந்த சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். புதிய சோதனை நடவடிக்கைகளின் நோக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் வலையமைப்பை வீழ்த்துவதே, போலீஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கைகளின் நோக்கம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். ''இந்த யுக்திய தேடுதல் நடவடிக்கை கடந்த 17-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் திணைக்களத்தின் முழுமையான படையணி இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதே எமது திட்டம். இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும்," என்கிறார் நிஹால் தல்துவ. ''இந்த போதைப்பொருள் வலையமைப்பில் இதற்கு முன்னர் நாம் அடையாளம் கண்டுக்கொண்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வலையமைப்பை வீழ்த்தி, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோன்று, இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யும் இயலுமை கிடைக்கும்," என்கிறார். ''அதன்பின்னர், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். கைது செய்யப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் எதிர்கால தேடுதல்களை முன்னெடுப்போம்," என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். படக்குறிப்பு, சோதனையில் ஈடுபட்டிருக்கும் போலீசார் இதுவரை நடந்த தேடுதல்கள் என்ன செய்தன? போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. 2005-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் 'போதைக்கு முற்றுப்புள்ளி' என வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் போலீஸாரினால் 'ஒபரேஷன் க்ளீன் அப்’ தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த பெருந்தொகையான போதைப்பொருட்களை அரச புலனாய்வு பிரிவு, போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகி, பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பல சந்தேகநபர்களை பாதுகாப்பு பிரிவினர் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். இவ்வாறான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த பின்னணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இடைக்கால போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இணைந்து தற்போது யுக்திய திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c88250jz41vo
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Published By: DIGITAL DESK 3 21 DEC, 2023 | 04:15 PM (எம்.வை.எம்.சியாம்) குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணி தொடக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை நான்கு நாள் முடிவில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்செவன அடுக்குமாடி குடியிருப்பில் முப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சுமார் 920 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் இரு பஸ்கள், இரு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள், 4 காணிகள் மற்றும் வீடொன்றும் உள்ளடங்குவதாகவும் இந்த சொத்துக்களை சந்தேகநபர்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் பெயர்களில் கொள்வனவு செய்து அதனை மறைத்து வைத்திருந்ததாகவும் இது தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே 2 கிலோ 400 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் ,ஒரு கிலோ 200 கிராம் ஐஸ், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 12 கிராம் ஹஷீஷ், 5 கிலோ 200 கிராம் மாவா, 17,054 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 73,833 கஞ்சா சொடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172227
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள், யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்ய தளபதிகளால் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். 21 டிசம்பர் 2023, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போரில் ரஷ்ய தளபதிகளின் தவறான போர் உத்திகள் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ரஷ்ய படைகளின் குற்றச்சாட்டு பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. போருக்கு சென்ற போது தங்களது மூத்த அதிகாரிகள் தங்களை ‘இறைச்சி’ என்று அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர் ரஷ்ய ராணுவ வீரர்கள். ‘தகுதியற்ற’ தளபதிகள் மற்றும் அவர்களது ‘மீட்-கிரைண்டர்’ உத்திகள் யுக்ரேன் போரில் ஏற்பட்டுள்ள ரஷ்ய தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தப் போர் தொடங்கியபோது, ரஷ்யா தனது 155-ஆவது கடற்படை மற்றும் காலாட்படையை ஒரு உயர்தர பிரிவாகக் கருதியது. ஆனால் போர் முன்னேற்றம் அடைந்த சமயத்தில் தான், இந்தப் பிரிவின் பலவீனங்கள் போர்க்களத்திலேயே அம்பலமாக தொடங்கின. பிபிசி புலனாய்வின் படி, இந்த படைப்பிரிவில் மட்டும் ஒரே தாக்குதலில் குறைந்தபட்சம் 60 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி கொல்லப்பட்ட ராணுவவீரர்களில் 25 வயதாகும் ரமாஸ் கோர்காட்ஸேவும் ஒருவர். இவர் ரசியாவின் கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர். ராப் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட ரமாஸ் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். போருக்கு செல்வதற்கு முன்பு “ ரஷ்யா உங்களுடன் நிற்கிறது. ரஷ்ய ராணுவவீரர்கள் உங்களுக்காக சண்டையிடுகிறார்கள்” என்ற பாடலை கூட ரமாஸ் கோர்காட்ஸே பாடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். ராணுவ சீருடையில் தான் இருப்பது போன்ற போட்டோக்களை கூட அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு படத்தில் யுக்ரேனுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கடைசியாக உண்ட பீட்சா மற்றும் பீருடன் இருக்கும் படமும் அடங்கும். அவர் தனிப்பட்ட முறையில் போர்களை எதிர்த்தாலும், அரசு உத்தரவின்படி அக்டோபர் 2022 இல் தென்கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் 155 வது கடற்படை காலாட்படை பிரிவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான், இந்த பிரிவு பூச்சா மற்றும் இசியம் பகுதிகளில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதை ரஷ்யா மறுத்தது. ரமாஸ் கோர்காட்ஸேவின் தாய் ரஷ்ய செய்தி ஊடகமான மகடன் பிராவ்தாவிடம், “யுக்ரேனில் அவனுக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் என்னிடம் சொன்னான், ‘இறப்பது மோசமான விஷயம் அல்ல, ஆனால் என்னைப் போன்றவர்களை சுடுவதே மோசமான விஷயம்’ என்று அவரது மகன் தன்னிடம் கூறியதாக” தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,INSTAGRAM படக்குறிப்பு, ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்கியது உக்ரேனிய இராணுவம் புதிய ரத்தமும் சதையும் கோர்காட்ஸே விரைவிலேயே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான பாவ்லிவ்கா மற்றும் வுலேடாரைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார். இந்த போரின் ரத்தக் களரியான மோதல் ஒருகாலத்தில் 15 ஆயிரம் சுரங்க தொழில் குடும்பங்கள் வாழ்ந்த பகுதியான வுஹ்லேடரில் நடைபெற்றது. இந்த பகுதி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்க உக்ரேனிய ராணுவம் இந்த இடத்தை தான் பயன்படுத்தியது. அதே நேரத்தில், கோர்காட்ஸே அருகிலுள்ள வோல்னோவாகா பகுதியில் ஏற்பட்ட அழிவு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதற்கு பின், வுலேடார் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தனது தாய்க்கு அவர் அனுப்பும் தகவல்கள் நின்று விட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 155 வது படைப்பிரிவின் வீரர்கள் பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். காட்டிக்கொடுத்த கடிதங்கள் தங்களது பிரிவுகளில் இருந்து வீரர்கள் காணாமல் போகும் செய்திகள் மிக வழக்கமானதாகி விட்டது என்று 155 ஆவது படைப்பிரிவு வீரர்கள் கடிதம் ஒன்றை எழுதினர். நவம்பர் மாத தொடக்கத்தில், 155 ஆவது படைப்பிரிவின் வீரர்கள் ரஷ்ய மாகாணமான பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக் கோஜெமியாகோவுக்கு டெலிகிராம் வழியாக அந்த கடிதத்தை அனுப்பினார்கள். அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. போர்க்களத்தில் நிலவும் குழப்பமான சூழலை விவரித்தும், இராணுவ தளபதிகளை கடுமையாக விமர்சித்தும் அந்த வீரர்களால் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. "எதிர்பாராத தாக்குதல்களுக்கு" மத்தியில் நான்கு நாட்களில் மட்டும் "சுமார் 300 பேர் வரை உயிரிழப்புகள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்" என்று அந்த வீரர்கள் தெரிவித்திருந்தனர். மேலதிகாரிகள் தங்களை 'இறைச்சி' என்று அழைப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படையினரின் கூற்றுக்களை நிராகரிக்கும் ஒரு அரிதான பொது மறுப்பு வெளியிட நிர்பந்தமாக அமைந்தது. “ஆம், அங்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன, கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்த கடிதத்தில் இருப்பது போல் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்று தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் ஓலெக் கோஜெமியாகோவ். இந்த வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுப்பதற்கான உறுதியையும் வழங்கினார் கவர்னர். போர் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பிபிசி - ஐ புலனாய்வு பிரிவு ஆய்வு செய்தது. யுக்ரேனின் உளவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள், அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதைக் காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெவ்வேறு நாட்களில், யுக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் பல கவச வாகனங்களை பாவ்லிவ்காவுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் வைத்து ஒரே பகுதியில் வெடிக்கச் செய்துள்ளது. இது ரஷ்யர்கள் ‘தரைவழிப் போரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை' என்பதை உறுதிப்படுத்துவதாக கூறுகிறார் 2004 இல் ரஷ்ய கடற்படையினருடன் பணிபுரிந்த பாதுகாப்பு ஆய்வாளர் டைஃபன் ஆஸ்பர்க். “பயன்படுத்த ஒரே ஒரு திறந்தவெளி சாலை மட்டுமே உள்ள இடத்தில் எங்கு சுடுவது என்று யுக்ரேன் படைகளுக்கு தெரியும்” என்று கூறுகிறார் அவர். கண்ணிவெடி அகற்றப்படாமலும், வான்வழி உளவு செயல்பாடுகள் இன்றியும், போதிய உளவுத்துறை இன்றியும் நடைபெறும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தற்கொலைச் செயலாகும்" என்கிறார் அவர். “கீவை கைப்பற்றும் முயற்சியில் ஏற்கனவே 155வது படைப்பிரிவு பெரும் இழப்பை சந்தித்து விட்டது” என்கிறார் லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த போர் நிபுணர் வில்லியம் ஆல்பர்ட்க். "அந்த வீரர்களுக்கு போதுமான பயிற்சி அல்லது போதுமான உபகரணங்கள் கூட தரப்படவில்லை என்பது போல் தெரிவதாக" கூறுகிறார் அவர். இதர ராணுவ ஆய்வாளர்கள் வுலேடருக்கு முன்தயாரிப்பின்றி படைகளை அனுப்பும் முடிவை, ‘மீட் - கிரைண்டர் உத்தியை’ கொண்டு விவரிக்கின்றனர். பட மூலாதாரம்,OK.RU படக்குறிப்பு, 7000 கிலோமீட்டர் வரை பயணித்து யுக்ரேன் சென்றுள்ளார் ஸ்வெட்லானா ஒரு தாயின் பயணம் தனது மகன் குறித்த எந்த தகவலுமே டிசம்பர் வரை வராததால் கோர்காட்ஸேவின் தாயார் ஸ்வெட்லானா விரக்தியில் இருந்தார். எனவே, அவரே கோர்காட்ஸேவை தேடுவதற்காக போர்ப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தார். யுக்ரேன் செல்ல 7000 கிலோமீட்டர் வரை பயணித்ததாக அவர் கூறுகிறார். அதை தாண்டி அங்கே சென்றடைந்த போது தான் தனது மகன் இறந்துவிட்டார் என்பது அவருக்கு தெரிந்தது. கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படுவதற்கு முந்தைய நாள், பாவ்லிவ்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கோர்காட்ஸே நுழைந்துள்ளார். அப்போது ஆளில்லா விமானம் வீசிய கைக்குண்டு வெடித்ததில் அவரது கால்கள் வெடித்து சிதறியுள்ளது. பின் அவர் காயம் காரணமாக இறந்துள்ளார். படக்குறிப்பு, 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு 155 படைப்பிரிவில் எத்தனை பேர் இறந்துள்ளனர்? உயிரிழப்புகள் குறித்து ரஷ்யாவின்அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், பிபிசி ரஷ்ய சேவையின் ஓல்கா இவ்ஷினா, ரஷ்யாவின் சுயாதீன செய்தி இணையதளமான மீடியாஜோனா மற்றும் இறந்தவர்களைக் கணக்கிடும் தன்னார்வலர்களின் வலையமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதிகாரபூர்வ அறிக்கைகள், சமூக வலைதள பதிவுகள், ஊடக அறிக்கைகள் மற்றும் ரஷ்யாவில் உள்ள கல்லறைகளின் போட்டோக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 155-ஆவது கடற்படை காலாட்படை பிரிவில் மார்ச் 6, 2022 முதல் பிப்ரவரி 22, 2023 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 157 ஆக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாவ்லிவ்கா மற்றும் வுலேடார் பகுதிகளில் நடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 தாக்குதல்களில் தான் அதிக வீரர்கள் இறந்துள்ளதும் இந்த தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. குறைந்தது 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு. “தற்போது கிடைத்துள்ள எண்ணிக்கையை விட 155-ஆவது படைப்பிரிவில் இறந்துள்ள போர்வீரர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள தரவுகளை விட ரஷ்ய இழப்புகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக” கூறுகிறார் ஓல்கா இவ்ஷினா. பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், இந்த போரில் இழப்புகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டும் என தெரிவித்துள்ளது. இதில் தோராயமாக 70 ஆயிரம் இறப்புகளும் அடக்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. முடிவு என்ன? ரஷ்யா வுலேடார் மீது அடுத்த தாக்குதலை அறிவித்த அதே சமயத்தில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தனது சொந்த நகரமான யாகோட்னோய் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது கோர்காட்ஸேவின் உடல். அதிலிருந்து சில நாட்கள் கழித்து, 155 வது படைப்பிரிவின் வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு கடிதத்தில் , தரைவழி நிலை குறித்து மேலும் பேரழிவு தரக்கூடிய மதிப்பீடு குறித்து கூறப்பட்டுள்ளது. ரஷியாவின் கடற்படை வீரர்கள் குறித்து அதிபர் புதினிடம் கேட்டபோது, “கடற்படை வீரர்கள் தற்போது நன்றாகவே பணிபுரிந்து வருவதாகவும், தைரியத்துடன் சண்டையிட்டு வருவதாகவும்” கூறியுள்ளார். கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. சமீபத்தில் கூட கவச வாகனங்கள் வெடி வைத்து தகர்க்கப்படக்கூடிய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/czkjln27ynmo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இவ்வளவு ஏலத் தொகை கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை! - மிட்செல் ஸ்டார்க் 20 DEC, 2023 | 09:34 PM ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய மதிப்பின்படி, 24 3/4 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறார். 33 வயதான இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட்டுகளை (10 ஆட்டம்) கைப்பற்றியிருந்தார். இந்த ஏலம் தொடர்பில் அவர் கூறுகையில், உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (அவுஸ்திரேலியா பெண்கள் அணியின் தலைவர்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார். ஏலத்தில் எனது தொகை விபரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லிவிட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்லில் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/172173
-
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் - டக்ளஸ்
தவிச்ச வடக்கிற்கு தண்ணீர் வழங்கும் பாலியாறு Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 11:50 AM மு.தமிழ்ச்செல்வன் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாணம் மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர் திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிசெல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமான காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவையினை நிலத்தடி நீரில்மட்டுமன்றி ஆறுகள்,குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்துள்ளது. பாலியாறு இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள் கலக்கிறது. பாலியாறு குடிநீர் திட்டம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும். 1 இலட்சத்து 18,363 ஏக்கர் ( 479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1,317 மில்லி மீற்றர் சராசரி மழைவீழ்ச்சியிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2,562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக கடலில் சேர்கிறது. பல மில்லியன் ரூபாக்கள் செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக பெறப்படும். பயன்பெறும் பிரதேசங்கள் அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னாள் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்படவுள்ளது. திட்டத்தின் ஏனைய நன்மைகள் பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். • 358 ஹெக்டயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம் • வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி • சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம் • மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி • சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை • நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல் • நீர் தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை திட்டத்தின் சவால்கள் • பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2,562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும். • நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது • இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல் வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம் மேற்படி இந்த திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம் பாலியாறு திட்டம் என பல திட்டங்கள ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின. ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதல் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை. ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே. https://www.virakesari.lk/article/172130