Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது - டேட்டிங் செயலியில் அறிமுகமானவருடன் முதல் சந்திப்பிலேயே அத்துமீறியதாக சர்ச்சை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் வீரர் டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று அதிகாலையில் (நவம்பர் 6) ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் தன்னிடம் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்திடம் தோல்வியுற்ற இலங்கை போட்டியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது. முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதி தன்னை ரோஸ் பேயிலிலுள்ள வீடொன்றில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயற்சித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ செளத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. ஆனால், அதில் கைதான இலங்கையரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. "கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை 5 நவம்பர் 2022), 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கீழ் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டுள்ளது. "ஆன்லைன் டேட்டிங் விண்ணப்பம் மூலம் பல நாட்களாக சம்பந்தப்பட்ட பெண்ணுடன் அந்த நபர் தொடர்பு கொண்டுள்ளார். பிறகு அந்தப் பெண் அவரைச் சந்தித்தார்; நவம்பர் 2ஆம் தேதி புதன்கிழமை மாலையில் அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று ரோஸ் பேவில் உள்ள முகவரியில் குற்றச் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து அளித்த அதிர்ச்சி; இந்தியா - பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு இலங்கையின் தோல்வியால் ஆஸ்திரேலியாவுக்கு 'பை பை' - ஏன் இப்படி நடக்கிறது? வீழ்ச்சியில் இருந்து திமிறி எழுந்த 'விராட் கோலி' மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை 6 நவம்பர் 2022) அதிகாலை 1 மணிக்கு முன்னதாக சிட்னி, சஸ்ஸெக்ஸ் தெருவில் உள்ள விடுதியில் இருந்த 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது பெண்ணின் அனுமதியின்றி அவருடன் உறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த இலங்கை பிரஜை இன்று பரமட்டா பிணை நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது," என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் தனுஷ்க குணதிலக்க வந்தது எப்படி? பட மூலாதாரம்,DHANUSHKA GUNATHILAKA TWITTER படக்குறிப்பு, தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் வீரர் டி20 உலக கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த தனுஷ்க குணதிலக்க, முதல் சுற்றுப் போட்டிகளின் போது உடல் உபாதைக்கு ஆளானார். இதனால் அவருக்குப் பதிலாக அசான் பண்டார, இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தனுஷ்க தங்கியுள்ளார். இந்த நிலையிலேயே, தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமான தனுஷ்க குணதிலக்க, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 8 டெஸ்ட் போட்டிகளிலும், 47 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 46 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. இவ்வாறு தோல்வியை தழுவிய இலங்கை அணி இன்றைய தினம் தாயகத்துக்கு வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த, ஏனைய அனைத்து வீரர்களும் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளனர். இலங்கை அணி என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,SLC இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க கைதான தகவலை இலங்கை அணியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முறைப்படி உறுதிப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலக்க நவம்பர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஐசிசியுடன் ஆலோசனை நடத்தி நீதிமன்ற நடைமுறைகளை மிகவும் நெருக்கமாக கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரிவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/sport-63532101
  2. சீனா - இந்தியாவைக் கையாள 8 பேர் : வெளிநாடு செல்லும் முன் ரணில் வியூகம் By NANTHINI 05 NOV, 2022 | 07:53 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். அத்துடன் எகிப்தில் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (நவ 6) அதிகாலை எகிப்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எகிப்தில் இவ்வாரம் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக முக்கிய சில தீர்மானங்களை எடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது. இதன்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியது. அதாவது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து ஆரோக்கியமான வெளிப்பாடுகளை இதுவரையில் காண முடியவில்லை. எனவே, இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே சிறந்த உத்தரவாதங்களை அளித்துள்ளனர். சீன மக்கள் காங்கிரஸின் வருடாந்த மாநாடு இடம்பெற்றமையினால் அவர்களுடன் கலந்துரையாட முடியாமல் போனது. தற்போது நிலைமை சீராகியுள்ள நிலையில் இது தொடர்பாக கலந்துரையாடி, இறுதித் தீர்மானம் எடுக்க முடியுமென அரசாங்கத்தின் சார்பாக சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்ததுடன், கிடைக்கப்பெற்றுள்ள வலியுறுத்தல்களை ஜனாதிபதியுடன் அவசரமாக கலந்துரையாடுவதாகவும் குறிப்பிட்டார். இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் வலியுறுத்தல்களை குறிப்பிட்டார். இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடி, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைச்சேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் ஜனாதிபதியின் குழுவில் உள்ளடங்குகின்றனர். நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முழு உலக நாடுகளும் அவதானித்து வருகின்றன. மேலும், பல நாடுகள் எமது நடவடிக்கைகளை முன்னுதாரணமாக கொள்வதற்கும் ஆர்வத்துடன் கண்காணித்து வருகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் செம்பியா முதலிடத்தில் உள்ளது. எனவே, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டங்களை மிகவும் அவதானத்துடன் செயல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் இதன்போது தெரிவித்தார். அத்துடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகையில், தலைவர் ஒருவருக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரம் போதாது. அதனை பயன்படுத்த சிறந்த அறிவும் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால், ஆட்சியை கைப்பற்றவும், அதனை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். இது நவம்பர் 2 எதிரணியினரின் போராட்டத்தின்போது வெளிப்பட்டதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139189
  3. சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் By DIGITAL DESK 5 05 NOV, 2022 | 10:26 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவின் - ஷங்காய் நகரில் வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமான ஐந்தாவது சீன சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி கண்காட்சியின் தொடக்க விழாவில் மெய்ந்நிகர் தொழிநுட்பத்தின் மூலம் காணொளியூடாக உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ' எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் சீன கம்யூனிசக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சீன சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி கண்காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு 'ஒரு பாதை - ஒரு மண்டலம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த கண்காட்சி வர்த்தக பன்முகப்படுத்தலிலும் மற்றும் உலகலாவிய ரீதியில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. இக்கண்காட்சி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீன வர்த்தக சந்தைக்குள் நுழைவதற்கு முன்னெடுக்கும் முயற்சியின் ஆரம்பமாக அமையும். இதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஆரம்பத்திலிருந்தே சீனா இதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. அது எமது நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பிரயோசனமாக அமைந்தது. எமது உணவு உற்பத்திகளை சீன சந்தைக்குள் ஸ்திரப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கப் பெற்றது. சீனாவுடனான எமது முதலாவது தொடர்பு இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் ஊடாகவே ஆரம்பமானது. அன்று அது மிக முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தமாக அமைந்தது. இவ்வாண்டுடன் அந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இவ்வாறு ஆரம்பமான தொடர்புகள் வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு, சுகாதாரம் என பல துறைகளில் விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இரு அரசாங்கங்களுக்குமிடையிலான ஒட்டு மொத்த வர்த்தகப் பெறுமதி 3.4 பில்லியன் டொலர்களாகும். சீனாவானது இலங்கையின் பிரதான பொருளாதார மூலமாகும். இந்த தொடர்பினை மேலும் மேம்படுத்த வாய்ப்புள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தக் கண்காட்சியை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிந்தமை தொடர்பில் நான் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.' என்றார். https://www.virakesari.lk/article/139194
  4. டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து அளித்த அதிர்ச்சி; இந்தியா, பாகிஸ்தானுக்கு கோப்பை வாய்ப்பு எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அபாரமான ஆட்டத்தால் வெற்றிபெற்று கிரிக்கெட் உலகை மீண்டும் ஒருமுறை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது நெதர்லாந்து. இந்தப் போட்டியின் முடிவால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா வெளியேறி இருப்பதுடன், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 158 ரன்கள் எடுத்த நிலையில் அந்த ரன்களை எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி சுருண்டது. 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. சிறப்பான பேட்டிங், அற்புதமான பீல்டிங், கிரேட் கேட்ச்கள் என நெதர்லாந்து அணி ஆட்டம் முழுவதுமே ஆக்கிரமித்திருந்தது. போட்டியின் முடிவில் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, 'இது ஜீரணிக்க முடியாத தோல்வி' என்று கூறினார். அது உண்மைதான் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. ஆனால் அடுத்த உலகக் கோப்பை டி20 போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றிவிட்டது. அதாவது இந்த ஆண்டைப்போல இனி தகுதிச் சுற்றில் ஆட வேண்டியதில்லை. போட்டியில் என்ன நடந்தது? தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் முதலில் பேட்டி செய்தது நெதர்லாந்து. தொடக்க ஆட்டக்காரர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாகச் சமாளித்து ரன்குவித்தனர். அணியின் முதல் நான்கு வீரர்களுமே கணிசமாக ரன் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் முக்கியப் பந்துவீச்சாளர்களான ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய இருவரின் பந்துகளையும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது. நெதர்லாந்தின் காலின் ஆக்கர்மன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களை எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். பீல்டர்கள் சில அற்புதமான கேட்ச்களைப் பிடித்தார்கள். அதனால் தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணி 13 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரன்ரேட்டும் பாகிஸ்தானை விடச் சரிந்தது. வங்கதேசம் - பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி தென்னாப்பிரிக்க அணி போட்டியில் இருந்து வெளியேறிருப்பது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்குமே சாதகமாக அமைந்திருக்கிறது. இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், வங்கதேசமும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றாலே போதும். ரன் ரேட்டை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில் மழையால் ஆட்டம் ரத்தானால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிடும். ஏனென்றால் பாகிஸ்தானும், வங்கதேசமும் 5 புள்ளிகளைப் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்தச் சூழலில்கூட 5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா ரன்ரேட்டில் குறைந்துவிட்டதால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. உண்மையில் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டி அவ்விரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போராட்டமாக இருக்கும். வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் நடக்கும் இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிப்பவையாகவே கருதப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் உள்ளவையாக கருதப்பட்டன. முதல்போட்டி முடிவடைந்த நிலையி்ல் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்' என்ன? - எளிய விளக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? இலங்கையின் தோல்வியால் ஆஸ்திரேலியாவுக்கு 'பை பை' - ஏன் இப்படி நடக்கிறது? இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகள். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் என்ற நிலை இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா? பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்? நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க தோற்றுவிட்டதால் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது. வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா? வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்தியா - ஜிம்பாப்வே போட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை என்பதும் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டி எனக் கருதப்பட்டதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் மெல்பர்ன் மைதானத்தைப் பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துப்போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்து விடக்கூடாது என இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் இந்திய அணி தோற்றாலும் அதன் அரையிறுதி வாய்ப்பு பாதிக்கப்படப்போவதில்லை. காரணம், அதற்கு சற்று முன்பாக நடந்து முடியும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவில் எந்த அணியும் 6 புள்ளிகளுக்கு மேல் எடுக்கப் போவதில்லை. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வரலாறு உண்டு. ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவும் - ஜிம்பாப்வேயும் மோதுவதும் இதுவே முதல்முறை. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் போல ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல். ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்திய அணியின் தொடக்க இணை இந்தத் தொடரில் அடித்த சராசரி ரன்கள் 13 மட்டுமே. https://www.bbc.com/tamil/sport-63529301
  5. மட்டக்களப்பில் இரு வாரங்களில் 800 மாடுகள் உயிரிழப்பு : கால்நடை வளர்ப்பாளர்கள் சோகத்தில் By DIGITAL DESK 2 06 NOV, 2022 | 09:49 AM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீடக்கப்பட்தாக கால் நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்தனர். சித்தாண்டி மற்றும் கிரான் கால்நடை திணைக்களப் பிரிவுகளான சந்தனமடு ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியான சித்தாண்டி 4ஆம் பிரிவு, ஈரளக்குளம், ஆலையடி, சேரடி, வேறம் பெரியவெட்டை, மற்றும் வட்டுவான், வெள்ளா மைச்சேனை, கூளாவடி, கோரவெளி, மாதந்தனை, மயிலந்தனை மேச்சல் தரை போன்ற பிரதேசங்களில் ஒரு வயது தொடக்கம் ஒன்றரை வயது வரையிலானதும் கர்ப்பிணி மாடுகள், எருமை மாடுகள் மற்றும் பசுமாடுகளும் நோய் தாக்கத்தினால் உயிரிழந்து வருகின்றன. மாரடைப்பால் சுவாசிக்க முடியாது மாடுகள் இறந்து வருதவதாக கூறிய கால்நடை திணைக்கள அதிகாரிகள், அதற்காக தடுப்பூசி ஏற்றி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றிய பின்னரும் மாடுகள் வாயால் நுரை வெளியேறி மூக்கால் சுவாசிக்க முடியாது இறந்து வருவதாகவும் சுமார் இருவாரங்களில் 800 க்கு மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு மாடுகள் உயிரிழப்பதால் தாம் பலத்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் முதலில் உயிருடன் இருக்கின்ற மாடுகளை காப்பற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மாடு வளர்ப்போருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கவேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139229
  6. 2017 இன் உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை : இலங்கைக்கான ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை மீளாய்வுக்கு வந்துள்ளது - ஐரோப்பிய ஒன்றிய பணிப்பாளர் By NANTHINI 05 NOV, 2022 | 10:15 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை தற்போது மீண்டும் மீளாய்வுக்கு வந்துள்ளது. எனவே, இலங்கை அரசாங்கமானது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற துறைகளில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய தருணமாகவே இன்றைய காலகட்டம் காணப்படுவதாக தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப் பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்கள பணிப்பாளர் பயோலா பம்பலொனி, நெருக்கடியான சூழலில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது இன்றியமையாததாகும்; இவற்றை எதிர்கொள்வதற்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒத்துழைப்புகள் குறித்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெளிவுபடுத்தும்போதே பயோலா பம்பலொனி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பாக தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையின் முயற்சிகள் உண்மையாகவே இலங்கை மிக ஆழமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஆனால், அவற்றை வெற்றிகொள்வதற்கான ஒத்துழைப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும். கடந்த காலங்களில் காணப்பட்ட உள்நாட்டுப் போர், 2004 சுனாமி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய்களின்போது வழங்கப்பட்ட 1 பில்லியனுக்கும் அதிகமான உதவித் திட்டங்களை போன்று தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடியும். எவ்வாறாயினும், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களின் இறக்குமதிக்கு குறிப்பிடத்தக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியமானது தொடர்ந்து நாட்டின் வர்த்தகம், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துதல், இலங்கைக்கான மூலதனம் மற்றும் முதலீடுகளின் வாய்ப்புகளை பாதுகாத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்தை வரவேற்றோம். ஏனெனில், இது பொருளாதார மறுமலர்ச்சித் திசையின் ஒரு முக்கியமான படியாகவே அமைகின்றது. மேலும், கடன் வழங்கும் நாடுகளின் முறைசாரா குழுவாக கருதக்கூடிய பாரிஸ் கழகம் மற்றும் பாரிஸ் கழக உறுப்புரிமையற்ற நாடுகளும் ஜீ20 கட்டமைப்புக்கிணங்க, இலங்கை விடயத்தில் கடன் மறுசீரமைப்பு மற்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையில் செயல்பட பரிந்துரைக்கிறோம். அதேவேளை சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடு உரிமை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கையர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது. ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை என்பது மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஊக்குவிப்புகளுடன் கூடிய முன்னுரிமை வர்த்தக சலுகையாகும். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் உட்பட பல பொருட்களுக்கான பூஜ்ஜிய இறக்குமதி வரி நிலையாகவும் கூறலாம். இலங்கைக்கு இந்த சலுகை கிடைக்கப்பெற்றுள்ளது. ஒரு நாடு ஜி.எஸ்.பி. ப்ளஸ் தகுதிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்யும் போது, அது 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்து செயற்படுத்த உறுதியளிக்கிறது. 2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தபோது சர்வதேச தரத்துக்கேற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவருவதற்கு உறுதியளித்தது. அதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை கணிசமான அளவில் திருத்துவதற்கு அல்லது அதை இரத்து செய்து, அதற்கு பதிலாக பொருத்தமான ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான உறுதிமொழியாகவே அமைந்தது. இதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அர்ப்பணிப்பு இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை தற்போது மீண்டும் மீளாய்வுக்கு வந்துள்ளது. எனவே, இலங்கை அரசாங்கமானது அதன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற துறைகளில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய தருணமாகவே இன்றைய காலகட்டம் காணப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய ஆலோசனை கடினமான மற்றும் கட்டமைக்கப்பட்ட சீர்திருத்த திட்டத்துக்காகவும், முக்கிய கடன் வழங்குநர்களுடனான சிக்கலான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்காகவும் பெரும்பாலான அரசியல் சக்திகள் ஒன்றிணைந்திருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும். மறுபுறம் இந்த நெருக்கடியான சூழலில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது இன்றியமையாததாகும். அதேவேளை சிறந்த மற்றும் செயல்திறன்களை உள்ளடக்கிய அரச நிர்வாகத்தை வளர்ப்பதும், நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதும் முக்கியமாகின்றது. இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்த முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும். இதனால், நாடு மிக விரைவில் ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த பொருளாதார நிலைமைகளுக்கு திரும்பும் என்றார். https://www.virakesari.lk/article/139203
  7. டி20 உலகக் கோப்பை: இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போட்டிகளில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்' என்ன? எம் மணிகண்டன் பிபிசி தமிழ் 5 நவம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும். வேதனையை சாதனைகளாக மாற்றிய விராட் கோலி - மறுபிறவி எடுத்தது எப்படி? இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் சந்திக்கின்றன. அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளுமே தத்தமது போட்டிகளில் வென்றுவிடப் போராடும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மூன்று போட்டிகளுமே பரபரப்பாக இருக்கப் போகின்றன. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா? பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். ஆனால் அதுமட்டும் போதாது. மற்ற இரு போட்டிகளின் முடிவும் பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைய வேண்டும். நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது தென்னாப்பிரிக்க அணி தோற்றால் அது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமையும்.. ஏனென்றால் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை முந்திவிடும். இல்லையென்றால், கடைசியாக நடக்கும் இந்தியா - ஜிம்பாப்வே போட்டியில் இந்தியா தோல்வியடைய வேண்டும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்ற வேண்டும். இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்? நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது தென்னாப்பிரிக்க அணி தோற்றால் அப்போதே இந்திய அணி அரையிறுதிக்குச் சென்றதாகக் கருதலாம். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும். அதனால் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் மழைபெய்து ஆட்டம் ரத்தாகி ஒருபுள்ளியையாவது பெற வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு மழையால் ஆபத்து தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால் அது அந்த அணி தொடரை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்துவிடும். ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா மூன்று போட்டிகள் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வெல்லும்பட்சத்தில் மூன்று போட்டிகளில் வென்றுவிடும். அதிக வெற்றி என்ற அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். அடிலெய்டில் மழை வராமல் இருப்பதுதான் தென்னாப்பிரிக்காவுக்கு நல்லது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா? கணக்கீடுகளின்படி இருக்கத்தான் செய்கிறது. வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES நெதர்லாந்துடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டு புள்ளிகளைப் பெற முடியாமல் போய், பாகிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தினால், வங்கதேசம் அரையிறுதிக்குச் சென்றுவிடும். இந்தியாவை வென்றால் ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா? கணக்கீடுகளின்படி இதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஜிம்பாப்வே இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். அதே நேரத்தில் பாகிஸ்தான் - வங்கதேச ஆட்டம் மழையால் கைவிடப்பட வேண்டும். தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துடன் தோற்க வேண்டும். ஆனாலும் பெரிய வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுடன் தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்துடன் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும். இப்போதைக்கு அரையிறுதிக்கான எந்த வாய்ப்பும் இல்லாத ஒரே அணி நெதர்லாந்து மட்டும்தான். இந்தியா - ஜிம்பாப்வே போட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை என்பதும் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டி என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் மெல்பர்ன் மைதானத்தைப் பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துப்போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்து அது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், அதற்கு சற்று முன்பாக நடந்து முடியும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்து, இந்தியா கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டதாகவும் இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மாறக்கூடும். ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வரலாறு உண்டு. ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவும் - ஜிம்பாப்வேயும் மோதுவதும் இதுவே முதல்முறை. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் போல ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல். ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்திய அணியின் தொடக்க இணை இந்தத் தொடரில் அடித்த சராசரி ரன்கள் 13 மட்டுமே. https://www.bbc.com/tamil/sport-63529292
  8. பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது 06 NOV, 2022 | 07:04 AM இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்புகின்றது. இந்நிலையில் தனுஷ்க குணதிலக்க அணியில் இல்லாத நிலையிலேயே இலங்கை அணி நாடு திரும்புகின்றது. இருப்பினும் தனுஷ்க குணதிலக்க கடந்த மூன்று வாரங்களுக்கு முன் உபாதைக்குள்ளான நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஷேன் பண்டார இணைத்துக்கொள்ளப்பட்டார். ஆனால் அணி நிர்வாகம் அவரை அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பாது அணியுடன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139225
  9. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? நிதின் ஸ்ரீவeஸ்தவா பிபிசி செய்தியாளர், மெல்போர்னில் இருந்து (ஆஸ்திரேலியா) 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து அடிலெய்டுக்கு குவான்டாஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. ஒரு நாள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் எல்லா வீரர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எகானமி பிரிவில் கார்னர் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் விமானம் புறப்பட்டவுடன் தனது லேப்டாப்பை எடுத்து அதில் ஆழ்ந்து போனார். நடுவில் இரண்டு முறை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பிசினஸ் வகுப்பில் இருந்து எழுந்துவந்து அவரிடம் பேசிவிட்டு திரும்பிச் சென்றார். ராகுல் டிராவிட் வேலைசெய்யும் விதம் வித்தியாசமானது. பயிற்சியின் போது ஒவ்வொரு வீரரின் மீதும் கவனம் ஒரு கிரிக்கெட் வீரராக பல மணிநேரம் நெட்ஸில் பேட்டிங் பயிற்சி செய்ததைப் போலவே ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக இன்றும் வீரர்களுக்கான பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார். இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பயிற்சி நடக்கும் இடத்தை முதலில் வந்தடையும் ராகுல் டிராவிட் ஒவ்வொரு வீரரையும் கூர்ந்து கவனித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.கூடவே பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேயையும், ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுத்துகிறார். "இந்தியா மேட்ச் எப்பவும் இப்படித்தான்" - அலுத்துக் கொண்ட வங்கதேச கேப்டன் விராட் கோலி: வெற்றியின் முகவராக மீண்டும் உயிர்த்தெழுந்த நாயகன் 'நானும் ரிஸ்வானும் மோசம்' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கவலை பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது. ஆனால், ஆட்டத்தின் நடுவே இந்திய இன்னிங்ஸ் முடிந்ததும், வீரர்கள் பீல்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். திடீரென ராகுல் டிராவிட் ஒரு பேட் மற்றும் பந்தை கொண்டு வந்து கேஎல் ராகுலுக்கு ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சி அளிக்கத்தொடங்கினார். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் தொடங்கி ஒரு ஓவருக்கு பிறகு, குயின்டன் டி காக், அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு அவுட்ஸ்விங்கரை அடித்தார். கேஎல் ராகுல் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்து அவரை ஆட்டமிழக்கச்செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் டிராவிட் வீரர்களின் டக்அவுட்டில் அமர்ந்திருந்த ராகுல் டிராவிட் பெரிய திரையின் பக்கம் திரும்பி ஒருமுறை ரீப்ளேயை பார்த்துவிட்டு மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். முன்பு ராகுல் டிராவிட்டுடன் கிரிக்கெட் விளையாடியவரும், டிராவிட்டின் பயிற்சியை உன்னிப்பாக கவனித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான டேரன் சமி, "ராகுல் இப்போது செட் ஆகிவிட்டார்" என்று கருதுகிறார். "டிராவிட் போன்ற கடினமாக உழைக்கும் வீரர்களை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். முன்பு ஜூனியர் அணிக்கு பயிற்சி அளித்தபோது டிராவிட் அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அதிலிருந்து அனுபவத்தை பெற்று தற்போது பாதிக்கும் மேற்பட்ட சூப்பர் ஸ்டார் வீரர்களை கொண்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இது ஒரு பெரிய சவால்," என்று டேரன் சமி கூறியுள்ளார். சவாலான நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றவர் டிராவிட் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த, பெர்த்தில் இருந்து அடிலெய்டு செல்லும் அதே விமானத்தின் பிஸினஸ் கிளாஸின் முதல் இருக்கையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அமர்ந்திருந்தது தற்செயல் நிகழ்வு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் டிராவிட்-விராட் கோலி ராகுல் டிராவிட்டிடம் பயிற்சியளிக்கும் பணி ஒப்படைக்கப்பட்ட சூழ்நிலையும் சவாலானது என்றே சொல்லலாம். "நாங்கள் 18 வீரர்களுடன் செல்கிறோம். அவர்கள் அனைவருமே திறமையானவர்கள். சிறந்தவர்கள்.ஆனால் 11 வீரர்கள் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்கள். விளையாட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் பலநேரங்களில் கடுமையான விஷயங்களை வீரர்களிடம் சொல்லவேண்டி இருக்கும். ஆனால் நாம் அனைவரும் ப்ரொபெஷனல்கள்," என்று 2021 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவிற்கு பயிற்சியாளராக தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன், ராகுல் டிராவிட் தெரிவித்தார். இந்தியாவின் டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியைப் பார்த்தால், டிராவிட்டின் சவால்களை புரிந்துகொள்ளமுடியும். பழைய மற்றும் இளம் வீரர்களை ஒற்றுமையாக வைத்திருக்கும் சவால் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் சென்ற அணியில் 18 வீரர்களில் 7 பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய 8 வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். நட்சத்திர வீரர்களை ஒற்றுமையாக வைத்து வெற்றிகளை பெறுவது மட்டுமல்லாமல், அணியில் இளம் வீரர்களுக்கு இடமளிக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். " முன்பு கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின்போது ராகுலை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தபோது எனக்குள் உருவான கருத்துதான் இப்போதும் அவர்மீது எனக்கு உள்ளது," என்று கிரிக்கெட் குறித்து எழுதும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல விளையாட்டுப் பத்திரிகையாளரான ஷாஹித் ஹாஷ்மி குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் டிராவிட்-ரோஹித் ஷர்மா "டிராவிட் ஒரு சிறந்த வீரர். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் கிட்டத்தட்ட 500 போட்டிகளில் 23,000 ரன்களுக்கு மேல் எடுத்தார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு பயிற்சியாளராக இருக்கும் போது நீங்களும் பிரபலமானவராக இருக்க வேண்டும். டிராவிட்டிடம் அனுபவமும், வெற்றியும், புகழும் உள்ளது. அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்," என்று அவர் மேலும் கூறினார். அணியுடனான ராகுல் டிராவிட்டின் உறவு மிகவும் வலுவாக உள்ளது. போட்டியின் முதல் மூன்று பந்தயங்களிலும் கேஎல் ராகுல் தோல்வியடைந்தார். அவருக்கு பதிலாக வேறொரு வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனத்திற்கும் அழுத்தத்திற்கும் டிராவிட் அடிபணிந்திருந்தால், வங்கதேசத்திற்கு எதிரான நான்காவது போட்டியில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்திருக்காது, மேலும் அவரது தன்னம்பிக்கையும் திரும்பியிருக்காது. விராட் கோலி பார்முக்கு திரும்பிய கதையில் எங்கோ ஒரு இடத்தில் ராகுல் டிராவிட்டின் பங்கும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. சென்ற ஆண்டு முதல் டிராவிட் அவரை தொடர்ந்து ஆதரித்தார் மற்றும் ஆசிய கோப்பைக்குப் பிறகு விராட், ஃபார்முக்கு திரும்பினார். நெட்ஸில் விராட் கோலி மணிக்கணக்காக பேட்டிங் பயிற்சி செய்வதை ராகுல் டிராவிட் பார்த்துக் கொண்டே இருப்பார். இடையில் ஆலோசனைகளையும் வழங்குவார். போட்டிகளின் போது ட்ரிங்க்ஸ் பிரேக் அல்லது ஓவர் பிரேக் போது டிராவிட் அடிக்கடி மைதானத்தில் இருக்கும் வீரர்களிடம் ஓடிசென்று முக்கிய செய்திகளை தானே கொடுப்பார். இந்த நாட்களில், ராகுல் டிராவிட் வெற்றியைக் கொண்டாடும் விதமும், வீரர்களைக் கட்டிப்பிடிக்கும் விதமும், அவரது அமைதியான இயல்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும் புதியதாகவும் இருக்கிறது. "ராகுலின் தன்னபிக்கையே அவரது மிகப்பெரிய பலம். இது பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமானது" என்று முன்னாள் கேப்டனும், தலைமை தேர்வாளருமான கே.ஸ்ரீகாந்த் கருதுகிறார். https://www.bbc.com/tamil/sport-63513130
  10. ரயில் பராமரிப்புப் பணிகளுக்கான உபகரணத் தட்டுப்பாடு என்று யாழில் செய்தி இணைக்கப்பட்டிருக்கு.
  11. செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல் By DIGITAL DESK 5 05 NOV, 2022 | 09:58 PM (எம்.எப்.எம்.பஸீர்) ட்ரான்ஸ் வேர்க் ஸ்கயார் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும், கொழும்பு - கோட்டை கிரிஷ் திட்டத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சனிக்கிழமை (05) உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சி.ஐ.டி. அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு - கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில், கிரிஷ் திட்ட அலுவலகத்தில் வைத்து ஜனாதி சிறிவர்தனவை வெள்ளிக்கிழமை (04) பகல் சி.ஐ.டி.யினர் கைது செய்தனர். செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும், ஜானகி சிறிவர்தனவின் வெளிநாட்டு பயணம் தடைச் செய்யப்பட்டிருந்த பின்னணியில் அவரை இவ்வாறு சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதன்படி அவரிடம் விசாரணைகலை முன்னெடுத்த சி.ஐ.டி.யினர் சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போதே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சனிக்கிழமை ஜானகி சிறிவர்தன மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மன்றில் ஆஜரானார். பாதிக்கப்பட்ட தரப்புக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் சட்டத்தரணி பசன் வீரசிங்கவுடன் பிரசன்னமானார். சி.ஐ.டி.யினருக்காக, சி.ஐ.டி.யின் வணிக குற்ற விசாரணைப் பிரிவு இலக்கம் ஒன்றின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆஜராகினர். இதற்கு முன்னர் திலினி பிரியமாலி ,இசுரு பண்டார மற்றும் திகோ கூறுப் நிறுவன பணிப்பாளர்களில் ஒருவரான கசுன் பெரேரா ஜா எல பகுதியைச் சேர்ந்த தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளரான நல்லையா ஜெயமோகன், கடவத்தை சிறி அரந்தக சமாதி அரண விகாரையில் வசிக்கும் பொரளை சிறிசுமன தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளரான நல்லையா ஜெயமோகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நால்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139212
  12. உலக அழகி போட்டியில் மோசடி ; பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து குற்றச்சாட்டு By T. SARANYA 04 NOV, 2022 | 03:58 PM நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முடிந்ததாக லீலானி மெக்கோனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் உலக அழகிகளுக்கான போட்டியில், மோசடி நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் உலக அழகிகளுக்கான இந்த போட்டியில், மிஸ் டெக்சாஸ் பட்டம் வென்ற அழகி ஆர்'போனி கேப்ரியல் வெற்றி பெற்றார். இந்த போட்டியில், ஸ்பான்சர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தற்சார்பு நடவடிக்கை காரணமாகவே, ஆர்'போனி கேப்ரியல் நியாயமற்ற முறையில் வென்றார் என்று லீலானி மெக்கோனி தெரிவித்துள்ளார். மேலும், பிரியங்கா சோப்ரா மீதும் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதேபோல, உலக அழகி போட்டியில், பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக இந்திய டிவி அமைப்புகள் சில எடுத்த நடுநிலை தவறிய சார்பு நடவடிக்கையால் அவர் பட்டம் வென்றார் என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 2000 ஆம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியை நடத்தும் ஸ்பான்சர் நிறுவனமாக இந்தியாவை சார்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இருந்ததால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முடிந்தது. உலக அழகி போட்டியில், பிகினி ஆடை சுற்றில் பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக போட்டியை நடத்தும் நடுவர்கள் விதிகளை மீறியுள்ளனர் என்று லீலானி மெக்கோனி கூறினார். இதுபோன்ற பல சம்பவங்களை அவர் தெரிவித்துள்ளார். இறுதியில், உலக அழகி போட்டியில் பிரியங்கா சோப்ரா தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வெளிப்படையான விஷயமாக இருந்தது. உலக அழகி போட்டியில் முறைகேடு நடந்தது என்று லீலானி மெக்கோனி தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து அவர் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். இந்நிலையில், அவர் பதிவிட்ட இந்த வீடியோவிற்கு ஆதரவாக பல முன்னாள் அழகிகள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.அவர் அப்போதே இதை பற்றி கூறியிருக்கலாம், ஆனால் 22 ஆண்டுகள் தாமதமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்று சிலர் கூறியுள்ளனர். இந்த வீடியோவிற்கு ஆதரவாக ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலக அழகி பட்டம் வென்ற பிறகு கேட்ட கேள்விக்கு பிரியங்கா சோப்ரா தவறாக பதிலளித்து சர்ச்சையை கிளப்பினார். அவரிடம் 'இன்று வாழும் மிக வெற்றிகரமான நபராக யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, 'அன்னை தெரசா' என்றார். ஆனால், அன்னை தெரசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே(1997இல்) காலமானார் என்பதை அறியாமல் அவர் தவறாக பதிலளித்தார்" என்று இந்த வீடியோவிற்கு ஆதரவாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக, பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. நன்றி தினத்தந்தி https://www.virakesari.lk/article/139128
  13. ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 06:51 PM ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என ஈரான் கூறியுள்ளது. யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விhமனங்களை ரஷ்யாவுக்கு நாம் விநியோகித்தோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைய்ன் அமீர் அப்தோலாஹியன் கூறினார் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்தது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக யுக்ரைனும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் கூறிவந்தன. ஆனால் இதை ஈரான் நிராகரித்து வந்தது. ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 400 ட்ரோன்களை யுக்ரைனில் பொதுமக்களுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்துகிறது எனவும், மேலும் சுமார் 2000 ட்ரோன்களை வாங்குவதற்கு ரஷ்யா கட்டளை கொடுத்துள்ளது எனவும் யுக்ரைன் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139221
  14. "தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நாளை நடத்தப்படாது" - என்ன நடந்தது? 4 நவம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ். பேரணி - கோப்புப்படம் தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக கங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையால் அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பில் இடம்பெற்ற நிபந்தனையில் கூறியிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென் மண்டல தலைவர் இரா. வன்னியராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நான்கு சுவர்களுக்கோ நடத்துமாறு கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதனால் நவம்பர் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஏன்? ஆர்.எஸ்.எஸ். வரலாறு என்ன? காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள் ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி? இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார். ஆனால், "இந்த அணிவகுப்பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார். https://www.bbc.com/tamil/india-63513383
  15. அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 07:52 PM அமெரிக்காவின் பவர்போல் லொத்தர்சீட்டிழுப்பின் ஜக்பொட் பரிசுதொகை 160 கோடி டொலர்களாக (சுமார் 57,231 கோடி இலங்கை ரூபா, சுமார் 13,117 கோடி இந்திய ரூபா) அதிகரித்துள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றுக்கான மிகப்பெரிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும். புளோரிடா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை இரவு 10.59 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு காலை 8.29 மணிக்கு) இச்சீட்டிழுப்பு நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் (Powerball) லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக வெல்லப்பட்ட ஆகக்கூடுதலான பவர்போல் ஜக்பொட் பரிசுத் தொகை 1.186 பில்லியன் டொலர்களாகும். கலிபோர்னியா, புளோரிடா, டென்னஸி மாநிலங்களிலிருந்து 3 டிக்கெட்டுகளுக்கு இப்பரிசுத் தொகை கிடைத்தது. 2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வௌ;வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும். இந்த ஜக்பொட் பரிசை வெல்வதற்கான நிகழ்தகவு 292.2 மில்லியனில் ஒன்று என பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த 1.6 பில்லியன் (160 கோடி) டொலர் பரிசுத் தொகையை வெல்பவர்கள் அமெரிக்க வரித்துறைக்கு அத்தொகையில் சுமார் 40 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். ஒருவரே இப்பரிசுத் தொகையை வென்றால், அவர் சுமார் 782.4 மில்லியன் டொலர்களை ஒரே தடவையில் பெறலாம். அல்லது 29 வருடங்களுக்கு தவணை அடிப்படையில் பரிசுப்பணத்தைப் பெறலாம். https://www.virakesari.lk/article/139222
  16. கோவை கார் வெடிப்பு: "தப்பு செஞ்சா முகத்தை காட்டுவாங்களா?" - சந்தேக நபர்களின் குடும்பங்கள் பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள், தவறு செய்வதாக இருந்தால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பகுதியில் முகத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு செயல்படுவார்களா என்று அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்த விவகாரத்தை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கை என்ஐஏ ஏற்கும் முன்பே கோவை காவல்துறை விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்திருந்தது. இதில் இஸ்மாயில் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஃபிரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், முகம்மது ரியாஸ், முகம்மது தால்கா (காரை விற்றவர்) ஆகியோர் சம்பவத்துக்கு முந்தைய நாள் முபினின் வீட்டில் இருந்து சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில்தான் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசுவதை கைதான சந்தேக நபர்களின் குடும்பங்கள் தவிர்த்து வந்தன. இந்த நிலையில், அதில் உள்ள சிலர் தற்போது ஊடகங்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். கோவை கார் வெடிப்பு: சம்பவ பகுதியில் என்ஐஏ - ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை கோவை கார் வெடிப்பு: அதிமுக இன்னும் அரசியல் செய்யாமல் அமைதி காப்பது ஏன்? கோவை சம்பவம்: திமுக, பாஜகவின் அரசியலால் சாதகம், பாதகம் யாருக்கு? ஜமேஷா முபினின் வீட்டில் உள்ள சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவியதாக கூறப்படுவோரில் இஸ்மாயில் சகோதர்கள் முக்கியமானவர்கள் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமது பிள்ளைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அவர்களின் தாயாரான மைமூன் பேகம். "எங்களுடைய பிள்ளைகளும் ஜமேஷா முபினும் சிறு வயதில் இருந்தே நன்கு அறிமுகமானவர்கள். வீட்டை காலி செய்ய வேண்டும் என்று முபின் சொன்னதால் என் பிள்ளைகளை உதவிக்காக அனுப்பி வைத்தேன்," என்று மைமூன் கூறினார். போலீஸ் சந்தேகத்துக்கு என்ன காரணம்? இதில் ஃபிரோஸ் என்பவர் 2020ஆம் ஆண்டுவரை துபாயில் பணியாற்றியவர். அவரது நண்பர்களில் ஒருவர் முகம்மது ரஷீத். இந்த முகம்மது ரஷீதுக்கு 2019ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை சந்தேக்கிறது. இத்துடன் தற்போது என்ஐஏ கைது செய்துள்ள நான்கு பேரும் சித்தாந்த ரீதியாக ஒரே மாதிரியாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பதால் அது குறித்து அடிக்கடி தங்களுக்குள்ளாக பரஸ்பரம் பாராட்டிக் கொள்பவர்கள் என்றும் காவல்துறை தரப்பு கூறுகிறது. அந்த அடிப்படையில் இவர்கள் ஒரு ஸ்லீப்பர் செல் போல இயங்கினார்களா அல்லது இவர்களை யாரேனும் மூளைச்சலவை செய்தார்களா என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வந்தாலும், குற்றச்செயல், குற்றச்சதி தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரிகள் தனியாகவும் தேவைப்படும்போது என்ஐஏ புலனாய்வுக்கும் உதவியாக விசாரணையை நடத்தி வருகின்றனர். மற்றொரு சந்தேகம், ஜமேஷா முபின் வாங்கி சிறிய ரக கார் தொடர்பானது. அந்த கார் 10 பேரின் கைகளுக்கு மாறி பிறகு மலிவான விலைக்கு முபின் வசம் வந்துள்ளது. அதுவும் அந்த காரை முபினுக்கு விற்க உதவியவர் முகம்மது தால்கா. இந்த நபரின் தந்தை நவாப் கான், 1998ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தண்டிக்கப்பட்டு தற்போதும் சிறையில் இருப்பவர். எனவே, இந்த கோணத்தையும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். காரை விற்றவர் குடும்பம் எழுப்பும் கேள்வி இருப்பினும், புலனாய்வாளர்களின் இந்த கூற்றை திட்டவட்டமாக மறுக்கிறார் தால்காவின் தாயார் ஹஃப்சத் பீவி. எனது பிள்ளை சிறிய அளவில் கார்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருபவன். அதனால் தமது விற்பனை விவரத்தை சரியாக பராமரிப்பது இல்லை. விற்கும் வண்டிக்கு கமிஷன் மட்டுமே வாங்குவான். அந்த கார் முபின் கைக்கு போகும் முன்பு 9 பேர் வசம் கைமாறியிருக்கிறது. ஆனால், இதை சந்தேகமாகக் கருதி அவனை போலீஸார் பிடித்துச் சென்று விட்டனர்," என்கிறார் ஹஃப்சத் பீவி. இதேவேளை முபினின் உறவினரான அஃப்சர் கான், ஆன்லைன் மூலம் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குவதில் உதவியதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து நைட்ரோ கிளிசரின், PETN பவுடர், கருப்புத்தூள், சல்ஃபர், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் முபினுக்கு எப்படி வந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய புலனாய்வாளர்கள், சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதன்படி, சம்பவ நாளன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், அக்டோபர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் கார் வெடித்த சம்பவத்தில் தமது மகன் தால்காவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தால்காவின் தாயார் ஹஃப்சத் பிவி கூறினார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், வெடிப்பு சம்பவத்தில் தீயில் கருகிய காரை தால்கா தமது கூட்டாளி முகமது மீரான் குட்டியுடன் சேர்ந்தே முபினுக்கு விற்றுள்ளதாக கூறினார். இதற்காக முதலில் 16 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை கட்டாயப்படுத்தியதும் கூடுதலாக முபின் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் தெரிவித்தார். உண்மையில் இப்படியொரு பேரம் நடந்த தகவலையே தாங்கள்தான் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து தால்காவை சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பிறகு முபினின் வீட்டை தால்காதான் காட்டினார். அன்று மாலையில் அவரை விடுவித்தனர். ஆனால், மீண்டும் அக்டோபர் 24ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு தால்காவையும் காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்து விட்டனர் என்கிறார் ஹஃப்சத். தால்காவின் தந்தை 1993ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பில் கைதாகி கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அப்போது தால்கா 5 மாத குழந்தையாக இருந்தார். தந்தையின் விடுதலைக்காக நடந்த போராட்டத்திலும் அவன் கலந்து கொண்டதில்லை. இப்படிப்பட்ட சூழலில் முழு ஆவணங்களுடன் கூடிய ஒரு காரை அவன் விற்றது தவறா? என கேள்வி எழுப்பினார் ஹஃப்சத் பீவி. இந்த விவகாரத்தில் தால்காவின் தந்தை மீதான வழக்கை வைத்து, இப்போது எனது மகன் பழிவாங்கப்படுகிறானா என்ற சந்தேகம் எழுகிறது என்கிறார் ஹஃப்சத் பீவி. சந்தேக நபர்களில் இஸ்மாயில் சகோதரர்கள் முக்கியமானவர்கள். இந்த சகோதரர்களின் தாயார் மைமூன் பேகம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மூத்த மகனின் பெயர் ஃபிரோஸ் இஸ்மாயில். அவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். மற்றொரு சகோதரர் பெயர் நவாஸ் இஸ்மாயில். "இந்த இருவரும் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் தவறு செய்திருப்பதாக தெரிய வந்தால் நிச்சயம் நானே நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பேன். எனது பிள்ளைகள் பெயர் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்படுவதாக அறிந்தபோது, அவர்களை நானேதான் போலீஸிடம் தகவல் தெரிவிக்க வைத்தேன். கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்து போனது ஜமேஷா முபின் என்பதை நாங்கள் சொல்லித்தான் காவல்துறையே அறிந்தது. எனது மூத்த மகனின் பிள்ளைக்கு நோட்டு புத்தகம் வாங்கும்போதுதான் ஜமேஷா முபினுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது," என்கிறார் மைமூன் பேகம். டான்பாஸ்கோ அன்பு இல்லம் அருகே அக்டோபர் 22ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டிற்கு அருகே வந்து பெரோஸை அழைத்தார் ஜமேஷா முபின். தன்னை வீட்டை காலி செய்ய உதவிடும்படி அப்போது அவர் கேட்டுள்ளார். ஆனால், இதய பிரச்னை இருப்பதால் கனமான பொருட்களை சுமக்க முடியாது என்று அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஃபிரோஸுக்கு வேலை உள்ளதாகவும் இரவில் அனுப்பி வைப்பதாக தாம் தான் கூறியதாக புலனாய்வாளர்களிடம் மைமூன் கூறியுள்ளார். பிறகு வீட்டை காலி செய்யும்போது நவாஸ் சும்மாதான் இருக்கிறான். அவனையும் ஃபிரோஸின் நெருங்கிய நண்பர் ரியாஸையும் அழைத்துச் செல்லும்படி ஜமேஷா முபினிடம் கூறியதாக மைமூன் தெரிவித்தார். காணொளிக் குறிப்பு, கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு இத்தனைக்கும் முபினின் வீடு கூட ஃபிரோஸுக்கு தெரிந்திருக்கவில்லை. முபினின் சித்தி பையன் அசாருதீன் உக்கடம் ஜி எம் நகர் பேக்கரியில் இருந்து ஃபிரோஸுக்கு முபினின் வீட்டை காட்டி விட்டு சென்றுள்ளார். அவர் பொருள் எடுத்து வைக்க வரவில்லை. இதையடுத்து, முபினின் வீட்டிற்கு சென்ற ஃபிரோஸ், நவாஸ், ரியாஸ் ஆகியோர், வீட்டை காலி செய்யும்போது அதில் உள்ள மின்விசிறி, பீரோ போன்றவற்றை எடுக்காமல் ஏன் சிலிண்டரை மட்டும் எடுக்கிறாய் என முபினிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனது மனைவி வந்தவுடன் நாளை எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களை எடுத்து காரில் வைத்துவிட்டு வந்து விட்டனர். என் மகன்கள் தவறு செய்பவர்களாக இருந்தால், முகத்தை மறைந்திருப்பார்கள். முகத்தை மறைக்காமல்தான் பொருட்களை எடுத்து வைப்பார்களா என்று மைமூனும் கேள்வி எழுப்புகிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் 9.30 மணிக்கு டிவியில் பார்த்து தான் முபின் சென்ற கார் வெடித்த சம்பவத்தை எனது மகன்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். சந்தேகமாக இருக்கிறது என என்னிடம் ஃபிரோஸ் சொன்னதும் நாங்கள் உளவுப்பிரிவு ஆய்வாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தோம். தவறு செய்திருந்தால் எனது பிள்ளைகளே இப்படி செய்திருப்பார்களா என்று கேட்கிறார் மைமூன் பேகம். இதன் பிறகு காவல்துறையினர் முபினின் வீட்டை காண்பிக்கும்படி சொல்லி எனது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்திய பிறகு எனது பிள்ளைகளை திருப்பி அனுப்பினர். அன்றைய தினம் காவல்துறையினர் வந்து பழுதடைந்த லேப்டாப்பையும் மூணாவது மகனின் மொபைல் டேப்பையும் கொண்டு சென்றனர். இதையடுத்து இரண்டு பிள்ளைகளை கைது செய்து விட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் என்கிறார் மைமூன் பேகம். மூன்றாவது நபர் கைது எப்படி நடந்தது? பட மூலாதாரம்,NIA காரில் சிலிண்டர் வைக்க உதவியவர்களில் ஃபிரோஸின் நெருங்கிய நண்பர் ரியாஸும் ஒருவர். அவரும் இப்போது போலீஸ் காவலில் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில் என் ஐ ஏ சோதனையின் போது உக்கடத்தில் ரஷித் அலி கைது செய்யப்பட்டார். ரஷித் அலியின் செல்போனில் என் மகன் நவாஸின் செல்போன் எண் இருந்ததால், அவனிடம் விசாரித்து விட்டு அனுப்பியுள்ளனர். நவாஸ் தோல் பிரச்னை காரணமாக திருச்சூரில் ஹிஜாமா சிகிச்சை பெற்று வந்தார். திருச்சூர் போகும் போது இரண்டு மாதங்களுக்கு முன்பு வியூர் சிறையில் இருக்கும் ரஷித் அலியை பார்த்துள்ளதாக தெரிவித்தார். நவாஸ் இளங்கலை அனஸ்தீஸ்யா படித்துவிட்டு எம்பிஏ முடித்து விட்டு தற்போது வெளிநாட்டில் வேலை தேடி வருகிறார். இந்த நிலையில், தனது மகன் முகமது ரியாஸின் தாயார் ஜுனைத் பேகம் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பெரோஸ் மற்றும் நவாஸ் உடன் வீடு காலி செய்ய பொருள் எடுத்து வைக்கும் போது, நான் செல்போனில் எங்கே இருக்கே என விசாரித்தேன். அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக என்னிடத்தில் தெரிவித்தவன். அதுபோலவே 30 நிமிடங்களில் வீட்டுக்கு வந்த பிறகு அயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலையில் ஃபிரோஸிடம் இருந்து செல்பேசியில் அழைப்பு வந்து அதில் பேசிய பிறகே கார் வெடிப்பு சம்பவம் பற்றியே ரியாஸுக்கு தெரிய வந்ததாக அவரது தாயார் கூறுகிறார். ஜமேஷா முபின் வீட்டில் என்ன இருந்தது? இதற்கிடையே, ஜமேஷா முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்த சில குறிப்புகள் அடங்கிய காகிதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அல்லாவின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம் என்றும் சிலேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு, முபின் எழுதியதாக சந்தேகிக்கப்படும் குறிப்புகள் இது தவிர அரபி மொழியில் சில வாசகங்களும் சிலேட்டில் எழுதப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த நாளில் காவல் துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் தொடரும் பதற்றமான சூழலுக்கு முடிவு காணும் வகையில் இந்து, முஸ்லிம் மதப் பெரியவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டை மேட்டில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த 3 ஜமாத் சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோட்டை சங்கமேஸ்வரன் கோவிலில், அதன் நிர்வாகிகளை சந்தித்து மதப் பெரியவர்கள் கலந்துரையாடினர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இனயத்துல்லா, "இஸ்லாம் எப்போதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். நாங்கள் அனைத்து மக்களுடன் நல்லிணகத்தை பேணவே விரும்புகிறோம். ஜமாத்கள் ஒன்றிணைந்து அனைத்து மக்களுடன் இணைந்து நற்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம். எவ்விதமான பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதத்தை தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம். நாங்கள் ஆன்மிகவாதிகள். எங்களை அமைதியாக வாழவிடுங்கள்," என்று கேட்டுக் கொண்டார். அனைத்து ஜாமத், இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சபீர் அலி, கோவை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைவரும் விரும்புகிறோம். அதேசமயம், இந்த விவகாரத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்," என்கிறார். முபின் மனைவி கொடுத்த தகவலால் துலங்கிய துப்பு இதற்கிடையே, ஜமேஷா முபின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த கோட்டை மேடு வீட்டுக்கு குடி வந்ததாக போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. முபினின் மனைவி மற்றும் உறவினரிடம் புலனாய்வாளர்கள் பேசியபோது, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் முபின் பணத்திற்கு ஆசைப்பட்டதில்லை. அவர் மிகவும் அமைதியானவர். 2019ஆம் ஆண்டு என்ஐஏ சோதனைக்கு பிறகு அவரை யாராவது ஒருவர் மூளச்சலவை செய்து இச்சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். கோட்டைமேடு பகுதிக்கு குடியேறும் முன்பு முபின் உக்கடம் அல் அமின் காலனி பகுதியில் வசித்து வந்திருக்கிறார். ஜமேஷா முபினுக்கும் உள்ளூரைச் சேர்ந்த நஸ்ரத்துக்கும் 2017இல் திருமணம் நடந்துள்ளது. தெரிந்த உறவினர் மூலமாக ஏற்பட்ட அறிமுகத்துக்குப் பிறகு இந்த திருமண ஏற்பாடு கைகூடியது. முபினின் வழக்கமான செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததில்லை என அவரது மாமியார் குர்ஷித் கூறுகிறார். நஸ்ரத்தின் தாயார் குர்ஷித் கூறும் போது, தனது மகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. முதலில் அவரது பெற்றோருடன் இருந்த முபின் பின்னர் தங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தார். குழந்தைகளை முபின் அடித்ததில்லை. அவர் அது போன்று செய்வாரா என்பதும் தெரியவில்லை. புத்தக கடைக்கு வேலைக்கு சென்ற அவர், நெஞ்சு வலி காரணமாக பிறகு அந்த வேலைக்கு செல்லவில்லை. கடந்த ஒரு மாதமாகதான் கார் ஒட்டி பழகினார். 5 வேளை தொழுகை, அடிக்கடி குர்ஆன் வசனம் ஓதிக் கொண்டு இருப்பார். அதிகமாக பேச மாட்டார் என்று கூறினார். அவரது உறவினர் அசாருதீன் மட்டுமே அடிக்கடி வீட்டிற்கு வந்து போவார். இந்த தகவலை ஜமேஷா முபீனின் மனைவி நஸ்ரத் புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே அசாருதீன், பிறகு அஃப்சர் கான் என ஒருவர் பின் ஒருவராக புலனாய்வாளர்களின் கைது நடவடிக்கை விரிவடைந்தது. விசாரணையில் முபினுக்கு வெடிமருந்துகள் வாங்கிக் கொடுத்ததில் முக்கியமானவர்களாக இருவரும் செயல்பட்டதாக தெரிய வந்திருப்பதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/india-63524578
  17. வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு : இருவர் கைது By T. SARANYA 05 NOV, 2022 | 12:51 PM (K.B.சதீஸ்) வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 - 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர். அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/139188
  18. பொலிஸார் உடல் ரீதியில் இடையூறு: ஹிருணிகா உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு By DIGITAL DESK 5 05 NOV, 2022 | 06:18 PM (எம்.எப்.எம்.பஸீர்) ஆர்ப்பாட்டத்தின் இடையே பொலிஸார் தமக்கு தேவையற்ற விதத்தில் உடல் ரீதியிலான இடையூறுகளை விளைவித்ததாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமசந்ர உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அவர்கள் இவ்வாறு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி மருதானை எல்பிஸ்டன் திரையரங்கு அருகே இருந்து அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்ட பேரணி நடாத்தப்பட்டது. இதன்போதே பொலிஸார் இவ்வாறு உடல் ரீதியிலான இடையூறுகளை தமக்கு விளைவித்ததாக ஹிருணிகா உள்ளிட்டோர், சில பொலிசாரின் சீருடை இலக்கங்கள், வீடியோக்களையும் இணைத்து இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன் வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139217
  19. டி20 உலக்கோப்பை: இலங்கையின் தோல்வியால் தகர்ந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை - தொடரும் வரலாறு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இலங்கை அணியின் தோல்வியால் தவறிப் போயிருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு இலங்கைக்கும் கிடைக்கவில்லை. மாறாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்கிறது. ஆஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேறியது மூலம், போட்டியை நடத்தும் அணி டி20 உலகக் கோப்பையை வெல்லாது என்ற நிலை நீடிக்கிறது. பலமான அணிகள் உள்ள குரூப்-1 பிரிவில் அதிக ரன்ரேட் கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிப்போட்டிக்குச் சென்றுவிட்டது. இன்னொரு அணி எது என்று முடிவு செய்யும் ஆட்டம் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் மோதிய இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் வென்றாலும் தோற்றாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாத நிலைதான். ஆனால் இங்கிலாந்து அணிக்கு இது வாழ்வா சாவா போராட்டம். போட்டியில் தோற்றால் போட்டியைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான் என்ற நிலை. இரு அணி வீரர்களிடம் இருந்த வெற்றிக்கான வேட்கையின் அளவில் இருந்து வேறுபாட்டை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இங்கிலாந்து அணிக்கு மட்டுமே வெற்றி தேவையாக இருந்தது. அதுவே அந்த அணிக்குச் சாதகமாகவும் அமைந்தது. இங்கிலாந்து எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது? குரூப் 2 பிரிவில் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்த நிலையில், நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுமே 7 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மூன்று அணிகளும் மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியும் பெற்றிருக்கின்றன. வேதனையை சாதனைகளாக மாற்றிய விராட் கோலி - மறுபிறவி எடுத்தது எப்படி? இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு ஆனால் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் மட்டுமே அரையிறுதிக்குச் செல்கின்றன. அதற்குக் காரணம் ரன் ரேட். நியூஸிலாந்து அணி 2.113 ரன்ரேட்டை கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி 0.473 ரன்ரேட்டையும், ஆஸ்திரேலிய அணி மைனஸ் 0.173 ரன் ரேட்டையும் பெற்றிருக்கின்றன. ஆஸ்திரேலிய அணியை விட கூடுதலாக ரன்ரேட்டைப் பெற்றிருப்பதால் நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைந்ததற்கு முக்கியமான காரணம் அந்த அணி நியூஸிலாந்து அணியுடன் மோதிய போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுவே நியூஸிலாந்து அணி அதிக ரன்ரேட் பெற்றதற்கும் காரணமானது. இதுதவிர இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகவும் நியூஸிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES பலமான நியூஸிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, பலம் குறைந்ததாகக் கருதப்படும் அயர்லாந்து அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய நேர்ந்தது. மழையால் ஆட்டங்கள் ரத்தானதும், தடைபட்டதும்கூட புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தின. போட்டியில் என்ன நடந்தது? டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே சிக்சருடன் கணக்கைத் தொடங்கிய அந்த அணியின் நிசாங்காவும் மெண்டிஸும் அதிரடியாக ஆடினர். ஆனால் 4-ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். இதன் பிறகு நிசாங்கா அதிரடியைத் தொடர்ந்தார். ஆயினும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சில ஓவர்களில் கட்டுப்பாடாகவே ரன்களைக் கொடுத்தனர். 9-ஆவது ஓவரில் தனஞ்செயா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எல்லைக் கோட்டுக்கு அருகே தலைக்கு மேலே வந்த பந்தை அற்புதமாகப் பிடித்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பிறகு இலங்கையின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. 11-ஆவது ஓவரில் அசலங்கா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். காணொளிக் குறிப்பு, டி20 உலக்கோப்பை: பாகிஸ்தான் வெற்றி பெறுவதால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? எனினும் மறுமுனையில் பொறுப்பாக ஆடி வந்த நிசாங்கா அரை சதம் அடித்தார். 67 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத்தின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறைந்த இலக்காக இருந்தாலும் இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கியது. பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களைக் குவித்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10-ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அந்த நேரத்தில் மிக எளிமையாக இங்கிலாந்து அணி வென்றுவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கடைசி நேரப் பதற்றம் மிகவும் மெதுவாகவே ரன் எடுக்கத் தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. 15 ஓவர் முடிவில் 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. அதன் பிறகு 30 பந்துகளுக்கு 29 ரன்களை அந்த அணி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் 15 ரன்களுக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 18-ஆவது ஓவரின் இறுதியில் சாம் கரன் ஆட்டமிழந்தபோது கடைசி 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்றானது. அப்போது பெவிலியனில் இருந்து இங்கிலாந்து வீரர்களிடையே பதற்றைக் காண முடிந்தது. இருப்பினும் ஒன்றும் இரண்டுமாகத் தட்டி எடுத்து, அந்த அணி ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமையன்று குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. பி பிரிவின் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும். https://www.bbc.com/tamil/sport-63525893
  20. நன்றி ஈழப்பிரியன் அண்ணை. நம்ம பசங்க தானே. வெற்றி தோல்வி நம்ம கையில் இல்லை, விளையாடும் அணிகளின் அன்றைய நாள் திறமை வெளிப்பாட்டில் இருக்கு.
  21. யாழில் கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 8 பேர் உயிரிழப்பு By NANTHINI 05 NOV, 2022 | 12:19 PM யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் 2774 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ 5) ஊடகங்களை சந்தித்தபோது இத்தரவினை வெளிப்படுத்தி அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் இன்று நவம்பர் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2774 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இவ்வருட ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கிறபோது, ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக டெங்கு பரவல் அதிகரித்து, மே, ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது. பின்பு நோய்ப்பரவலில் குறைவான நிலை காணப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துச் செல்வதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/139180
  22. ஆபீஸ் சிண்ட்ரோம்: இளமையில் முதுமையை ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்கள் பலர் ஆபீஸ் சிண்ட்ரோம் என்ற நோய் குறியீடால் அவதிப்படுவதாகவும், அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணியாற்றுவதால் இளமை காலத்தில் முதுகெலும்பு தேய்மானம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் பி.ஆர்.அஸ்வின் விஜய் கூறுகிறார். 'ஆபீஸ் சிண்ட்ரோம்' பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், அலுவலகங்களில் எர்கோனாமிக் நாற்காலி தேவை என்றும் அத்துடன் பணியாளர்களும் எளிய உடற்பயிற்சிகளை செய்தால்தான் ஆபீஸ் சிண்ட்ரோம் பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறுகிறார் மருத்துவர் அஸ்வின் விஜய். ஒரு வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்யும் நிலையில் இருப்பவர்கள் அதிக பணிச்சுமையால் இறப்பதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் தொடக்கப்புள்ளியாக 'ஆபீஸ் சிண்ட்ரோம்' அமைகிறது என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய். பேட்டியில் இருந்து... ஆபீஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்? அலுவலக பணிகளில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, வங்கி அல்லது பிற அலுவலகங்களில் சரியான முறையில் அமராமல் வேலைசெய்வதால் ஏற்படும் அதிகப்படியான வலிகள் ஆபீஸ் சிண்ட்ரோம் எனப்படும். ஆபீஸ் சிண்ட்ரோம் என்பது நோய் அல்ல. அது பிற எலும்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு வித்திடும் நோய்குறியீடு. ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகளை கவனிக்காமல் போனால், தண்டு வட பாதிப்பு, மூட்டு பாதிப்பு, தசைநார் வலி மற்றும் ஆபீஸ் சிண்ட்ரோம் முதுகு எலும்பு அலர்ஜி என்று சொல்லப்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் உள்ளிட்டவை ஏற்படும். கவனிக்காமல் போனால், இளமை காலத்தில் ஒரு நபர் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்பதால்தான் இதன் அவசியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகள் என்ன? எட்டு மணி நேரத்திற்கு அப்பால், 14 மணிநேரம் வரை அமர்ந்த நிலையில் வேலை செய்வது போன்றவற்றால் அதிகப்படியான முதுகு, கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் முழங்கால் வலி, விரல்கள், கைகள் மற்றும் கால்களின் உணர்வின்மை ஏற்படும். தசை வலி, டென்னிஸ் எல்போ போன்ற தசைநார் பகுதியில் வலி, தலைவலி, வறண்ட கண்கள், தலைசுற்றல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தீராத உடல்சோர்வு உள்ளிட்டவை ஆபீஸ் சிண்ட்ரோமின் அறிகுறிகள். அரசு கோப்பு தேக்கம்: விடுதலைக்கு பின்னும் மாதக் கணக்கில் சிறைவாசம் அனுபவித்த நாகை பெண்கள் உலக அல்சைமர் நாள்: முதியவரை மழலையாக மாற்றிய பாதிப்பு மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா? - ஆய்வு எழுப்பும் கேள்விகள் ஆபீஸ் சிண்ட்ரோம் வராமல் தடுப்பது எப்படி? நம் வேலை நேரத்தையும், நம் உடல்நலத்திற்கான நேரத்தையும் நாம் முதலில் முடிவு செய்து விட வேண்டும். அலுவலக வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் நாம் பணிபுரியும் இடத்தில் சரியான முறையில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது அவசியம். முதலில் நீங்கள் அமரும் நாற்காலி சரியான முறையில் உள்ளதா என்று பாருங்கள். கணினியில் வேலை செய்வது அல்லது அமர்ந்து செய்யும் பணியில் இருப்பவர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் எழுந்து சில நிமிடம் நிற்பது, சிறிய தூரம் நடப்பது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES கண்களை மூடி சில நொடிகள் கழித்து விழிப்பது, கை,கால்களை அசைக்கும் எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளும் உள்ளன. சில நிமிடங்களில் நீங்கள் புத்துணர்ச்சி அடைய அவை உதவலாம். அலுவலகத்தில் எந்த வாய்ப்பும் இல்லை என எண்ணுபவர்கள், வேலைக்கு செல்வதற்கு முன்னர், கட்டாயம் சிறிய உடற்பயிற்சிகளை குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் செய்ய வேண்டும். மிகவும் எளிமையான யோகா பயிற்சிகள் செய்தால் கூட உங்களுக்கு பலன் நிச்சயம். தொடர்ந்து ஒரு மாதம் யோகா பயிற்சிகளை செய்தால் நீங்களே மாற்றங்களை உணர முடியும். நாம் பணி செய்வது நமக்கான பொருளாதாரத்தைத் தருகிறது, அதே சமயம், அந்த பணியை தொடர்ந்து செய்வதற்கு, 'நம் உடல்' என்ற இயந்திரம் வேலை செய்ய, உடற்பயிற்சிகள் நாம் செய்ய வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய் குறியீடாக ஆபீஸ் சின்ட்ரோம் மாறியுள்ளது. இதற்கான சிகிச்சைகள் என்ன? என்னிடம் சமீபத்தில் ஒரு இளைஞர் வந்தார். அவருக்கு வயது வெறும் 24 தான். தினமும் 14 மணி நேரம் வேலை செய்தவர். அவருக்கு முதுகு,கழுத்து பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதுகு எலும்பு தேய்மானம் ஆகியுள்ளது என்பதை எக்ஸ்ரேவில் உறுதி செய்தோம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 60 வயதில் வரும் நோயாளிகளிடம் தான் இதுபோன்ற தேய்மானத்தை நான் பார்த்திருக்கிறேன். பட மூலாதாரம்,DR. ASHWIN VIJAY படக்குறிப்பு, டாக்டர் அஸ்வின் விஜய் 24 வயதில் ஒரு இளைஞருக்கு தேய்மானம் இருந்ததை நம்ப முடியவில்லை. முதலில் ஒரு மாதம் அவர் வேலைக்கு விடுப்பு எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவரை குணப்படுத்துவதற்கு சில மாதங்கள் தேவை. ஆனால் அவர் தொடர்ந்து கணினி வேலையில் இருந்தால், சிகிச்சை அளிப்பது பலனிக்காது என்பதால் ஓய்வு எடுப்பதை தான் தற்போது அவர் வேலையாக செய்யவேண்டும். சிகிச்சை என்றால், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அல்லது இரத்த பரிசோதனைகள் மூலம் பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பதை பொறுத்துதான் பிற சிகிச்சைகளை முடிவு செய்வோம். முதலில் எளிமையான உடற்பயிற்சிகளை சொல்லித் தருவோம், உணவு பழக்கத்தில், ஊட்டச்சத்து மிகுந்த, பழங்கள், பச்சை காய்கறிகள்,மாமிசம் போன்றவற்றில் எதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வோம். ஓய்வும், உடற்பயிற்சியும் ஆபீஸ் சிண்ட்ரோம் பிரச்னையில் இருப்பவர்களுக்கு தீர்வைத் தரும். ஆனால் நீண்ட நாட்கள் கவனிக்காமல் இருப்பவர்களுக்கு ஒருவேளை வாழ்நாள் முழுவதும் சிகிச்சைகள் தேவைப்படலாம், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். https://www.bbc.com/tamil/science-63433014
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.