Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. பஹ்ரெய்னில் பாப்பரசர் பிரான்சிஸ் By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 02:12 PM பஹ்ரெனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்து கலந்துரையாடினார். பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாள் விஜயம் மேற்கொண்டுநேற்று வியாழக்கிழமை பிற்பகல் பஹ்ரெய்னை சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ஷாகீர் றோயல் அரண்மனையில், கலந்துரையாடலுக்கான பஹ்ரெய்ன் மன்றத்தின் நிகழ்விலும் பாப்பரசர் இன்று பங்குபற்றினார். பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபா, முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீபா, எகிப்திய தலைநகர் கெய்ரோவின் அல் அஸ்ஹர் பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய கற்கை நிலையத்தின் இமாம் ஷேக் அஹம்த் அல் தாயீப் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, சக்கரக்கதிரையை பாப்பரசர் பிரான்சிஸ் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139126
  2. அரை இறுதி வாயிலுக்குள் ஒரு காலை வைத்துள்ள நியூஸிலாந்து By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 03:51 PM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 35 ஓட்டங்களால் அவசியமான வெற்றியை நியூஸிலாந்து ஈட்டிக்கொண்டது. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் இப்போதைக்கு 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அரை இறுதி வாயிலுக்குள் ஒரு காலை நுழைத்துள்ளது. அப் போட்டியில் அயர்லாந்து வீரர் ஜொஷ் லிட்ல் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்த போதிலும் அவரது அணி இறுதியில் தோல்வியைத் தழுவயது. தற்போது நடைபெறும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டி, நியூஸிலாந்தின் நிகர ஓட்ட வேகமான நேர்மறை 2.133 ஐ விட சிறந்த நிகர ஓட்ட வேகப் பெறுதியை அவுஸ்திரேலியா பதிவுசெய்தால் அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெறும். அல்லது நியூஸிலாந்து முதலாவது அணியாக தகுதிபெற்றுவிடும். எனவே தனது நிலை குறித்து திட்டவட்டமாக அறிந்துகொள்ள அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முடிவுவரை நியூஸிலாந்து காத்திருக்க வேண்டியுள்ளது. இது இவ்வாறிருக்கு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டவேண்டும் என எதிர்பார்த்த நியூஸிலாந்துக்கு கிடைத்த வெற்றி திருப்தி தருவதாக அமைந்திருக்காது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டவேண்டும் என்பதை அறிந்திருந்த நியூஸிலாந்து, ஆரம்பம் முதல் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. முதல் 3 ஓவர்களில் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூஸிலாந்து, படிப்படியாக 7 ஓட்டங்களிலிருந்து 9 ஓட்டங்கள் வரை உயர்த்திக்கொண்டது. பின் அலன் (32), டெவன் கொன்வே (28) ஆகிய இருவரும் 35 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அலன் ஆட்டமிழந்த பின்னர் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸுடன் 2ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களை கொன்வே பகிர்ந்தார். கொன்வே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட க்ளென் பிலிப்ஸ் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். (114 - 3 விக்.) அதனைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் டெரில் மிச்செலும் 4ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது 19ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்சனை கெரத் டிலேனி எடுத்த பிடி மூலம் ஆட்டமிழக்கச் செய்த லிட்ல், அடுத்த 2 பந்துகளில் ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் களம் விட்டு வெளியேறச் செய்து ஹெட்- ட்ரிக்கை பதிவு செய்தார். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பதிவான இரண்டாவது ஹெட் - ட்ரிக் இதுவாகும். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திக் மெய்யப்பன் முதலாவது ஹெட்-ட்ரிக்கைப் பதிவுசெய்திருந்தார். அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து சார்பாக பதிவான 2ஆவது ஹெட் - ட்ரிக் இதுவாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெம்ஃபர் கேர்ட்டிஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதுவரை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் ப்றெட் லீ, கேம்ஃபர், வனிந்து ஹசரங்க, கெகிசோ ரபாடா, கார்த்திக் மெய்யப்பன், ஜொஷ் லிட்ல் ஆகிய அறுவரே ஹெட் - ட்ரிக் பதிவு செய்துள்ளனர். ஜொஷ் லிட்ல் ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்ததால் அதிர்ச்சி அடைந்த நியூஸிலாந்து ஒருவாறு ஓட்ட வேகத்தை சிறப்பாக கடைப்பிடித்து இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டுவந்தது. கேன் வில்லியம்சன் 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். டெரில் மிச்செல் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அயர்லாந்து பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெரத் டிலேனி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது. அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி (37), போல் ஸ்டேர்லிங் (30) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்டெக்ளை இழந்த அயர்லாந்தினால் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ முடியாமல்போனது. ஒன்பது ஓவர்கள் நிறைவில் 70 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மிகச் சிறந்த நிலையில் இருந்த அயர்லாந்து 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது. மத்திய வரிசையில் ஜோர்ஜ் டொக்ரெல் (23) மார்த்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். நியூஸிலாந்து பந்துவீச்சில் லொக்கி பேர்குசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 26 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டிம் சௌதீ 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கேன் வில்லயம்சன். https://www.virakesari.lk/article/139132
  3. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு By T. SARANYA 04 NOV, 2022 | 03:42 PM ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானையை உயிரிழந்துள்ளது. நைரோபி, உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆப்பிரிக்காவில் உள்ளன. யானைகளை அழிவில் இருந்து காக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானை கொண்டிருந்தது. 60 முதல் 65 வயது கொண்ட இந்த யானை கென்யாவின் டிசவோ கிழக்கு தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக பெண் யானை டிடா உயிரிழந்துவிட்டதாக கென்ய வனத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானையாக கருத்தப்பட்ட டிடா வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிகழ்வு வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/139143
  4. டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக ஊழியர்கள் வழக்கு By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 05:21 PM டுவிட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு அந்நிறுவனத்தின் புதிய அதிபர் இலோன் மஸ்க் முன்வைத்துள்ள திட்டத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல்நிலை கோடீஸ்வரரான இலோன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை, கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி பூர்த்தி செய்தார். அதன்பின் டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால் உட்பட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கியதுடன் பணிப்பாளர் சபையையும் இலோன் மஸ்க் கலைத்தார். டுவிட்டரின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றுள்ள இலோன் மஸ்க், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,000 ஊழியர்களில் சுமார் 3,700 பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஊழியர்கள் பணியிலிலிருந்து நீக்கப்படுவார்களா என்பது குறித்து, கலிபோர்னியா மாநில நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை (04) மின்னஞ்சல் ஊடாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தீர்மானத்துக்கு எதிராக கலிபோர்னியாவிலுள்ள சமஷ்டி நீதிமன்றமொன்றில் ஊழியர்கள் பலரினால் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (03) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் தீர்மானமானது, அமெரிக்க சமஷ்டி அரசாங்க சட்டம் மற்றும் கலிபோர்னியா மாநில சட்டங்களை மீறுவதாக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் 60 நாட்கள் முன்னறிவிப்பு இன்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு தடை விதிக்கும் சட்டத்தின் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை இலோன் மஸ்க் பின்பற்றுவதற்கும், வழக்குத் தொடுக்கும் உரிமையை கைவிடச் செய்யும் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு ஊழியர்களை வற்புறுத்துவதிலிருந்து நிறுவனத்தை கட்டுப்படுத்துவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/139156
  5. கோவை கார் வெடிப்பு: அதிமுக இன்னும் அரசியல் செய்யாமல் அமைதி காப்பது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை மிகப் பெரிய அரசியல் விவாதமாக பாஜக மாற்றிய நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இது தொடர்பாக பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. இந்த அமைதிக்கு என்ன காரணம்? கோயம்புத்தூரில் தீபாவளி தினத்தன்று கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த விவகாரம் அடுத்த ஒரு வாரத்திற்கு மேல் மிகப் பெரிய அரசியல் சர்ச்சைகளில் ஒன்றாக உருவெடுத்தது. சிலிண்டர் வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக தமிழ்நாடு அரசும் உளவுத் துறையும் தோல்வியடைந்ததாகக் குற்றம் சாட்டியது. கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் ஒரு தற்கொலைப் படை தாக்குதல் எனச் சித்தரித்துப் பதிவிட்டார் அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. அண்ணாமலை. இதற்குப் பிறகு தினமும் அறிக்கைகள், பேட்டிகள், ஊடக சந்திப்புகள் என இந்த விவகாரத்தை ஆறவிடாமல் வைத்திருந்தது அக்கட்சி. ஆளும் கட்சியான திமுகவும் தமிழ்நாடு காவல்துறையும் பதிலளிக்கத் துவங்கிய நிலையில், ஒரு பிரதான எதிர்க்கட்சிக்கான குரலில் பேசியது பாஜக. கோவை விவகாரம் தொடர்பாக, சிபிஎம், காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்தன. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பு ஒரே ஒரு அறிக்கையோடு நிறுத்திக் கொண்டது. கோவை சம்பவம்: திமுக, பாஜகவின் அரசியலால் சாதகம், பாதகம் யாருக்கு? கோவை சம்பவம்: ஆளுநர் ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - 10 தகவல்கள் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா? சிலிண்டர் வெடிப்பு நடந்த தினத்தன்று எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது. உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவே இது பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி. அதேபோல அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம், "டி.ஜி.பி., நேரில் ஆய்வு செய்கிறார் என்றால், இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. இது, திமுக ஆட்சியில் 1998இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது. முதல்வர் உடனடியாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, தமிழக மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, அதிமுகவின் இரு அணிகளில் இருந்தும் கோவை சிலிண்டர் வெடிப்பு குறித்து பெரிதாக அறிக்கையோ, பேட்டிகளோ வரவில்லை. படக்குறிப்பு, கோப்புப் படம் அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதைக் கடுமையாக விமர்சிப்பார். அரசுக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும் கொடுப்பார். ஆனால், இந்த முறை அந்தப் பாத்திரத்தை பா.ஜ.க. எடுத்துக் கொண்டதைப் போல இருந்தது. "இப்போது மட்டுமல்ல, இந்த ஆட்சி வந்ததிலிருந்தே தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதைப் போல மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனும் பேசி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எழுந்த அதிகாரப் போட்டியின் காரணமாக பிரதான எதிர்க்கட்சியின் பணியை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவருமே சரியாகச் செய்யவில்லை. எப்படி கட்சியைக் கைப்பற்றுவது என்பதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள். டி.டி.வியும் சசிகலாவும்கூட இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை." என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா. "1972ல் திமுகவை பிரதான எதிரி என அறிவித்து கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். அந்த நிலையிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஜெயலலிதாவும் திமுக எதிர்ப்பைத்தான் முன்னிறுத்தி இயங்கினார். ஆனால், அவர் இறப்பிற்குப் பிறகு கட்சி எதார்த்த நிலைக்கு வந்துவிட்டது. வன்ம அரசியலைக் கைவிட்டது. ஆகவே, வலுவான திமுக எதிர்ப்பு என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது," என்கிறார் அவர். காணொளிக் குறிப்பு, கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு ஆனால், இந்த ஒரு விஷயத்தால் பிரதான எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் போய்விடாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஜி.சி. சேகர். "அதிமுக தற்போது பொதுவாகவே எந்தப் பிரச்னையைப் பற்றியும் பெரிதாக பேசுவது கிடையாது. வழக்குத் தொடர்வார்களோ என்ற பயம் இருக்கிறது. எடப்பாடி தரப்பு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆகிய இரண்டுமே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், அண்ணாமலைக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இமேஜ் வந்துவிட்டது" என்கிறார் ஜி.சி. சேகர். அ.தி.மு.கவின் வாக்குகள் இப்போது எடப்பாடி கே. பழனிச்சாமி, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் என பல்வேறு திசைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. எதிர்ப்பை கையில் எடுக்க வேண்டும். ஆனால், அந்தத் துணிச்சல் அவர்களிடம் இல்லை என்கிறார் துரை கருணா. இந்த விவகாரம் குறித்து அழுத்தமாகப் பேசினால், இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சம் காரணமா? "இப்போது அ.தி.மு.கவிடம் இஸ்லாமிய வாக்குகள் கிடையாது. அவை முழுவதுமாகப் போய்விட்டன. ஆகவே அந்த அச்சம் காரணமல்ல" என்கிறார் துரை கருணா. ஜி.சி. சேகரும் அதே கருத்தை முன்வைக்கிறார். "இஸ்லாமிய வாக்குகள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கணக்கெல்லாம் இவர்களிடம் இல்லை. இவர்கள் ஜெயலலிதாவின் கட்சி என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்" என்கிறார். கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் குரல் கொடுத்ததால், அ.தி.மு.கவின் அமைதி கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. மின் கட்டண உயர்வு குறித்து போராட்டங்களை நடத்தியது தவிர, பொதுவாக தி.மு.க. ஆட்சியில் எழும் பிரச்சனைகள் குறித்து நீடித்த போராட்டங்கள் எதையும் அ.தி.மு.க. முன்வைக்கவில்லை. ஆகவே, பல பிரச்சனைகளில் அ.தி.மு.கவின் எதிர்ப்பு என்பது வெறும் அறிக்கையாகவே கடந்து போகிறது. இதன் காரணமாக, வெகுசில பிரச்சனைகளில் பா.ஜ.க. சற்று உரத்த குரலை எழுப்பினாலும் அது பெரும் ஊடக கவனத்தைப் பெறுகிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் மறுக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன். "தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தினமும் ஒரே பிரச்சனையை பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று கிடையாது. அதற்குப் பிறகு எவ்வளவோ பிரச்சனைகள் வந்துவிட்டன. வெள்ளம், தேயிலை போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்." என்கிறார் வைகைச் செல்வன். இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியைப் போல பா.ஜ.க. செயல்படுவது குறித்துக் கேட்டபோது, "தாங்கள்தான் எதிர்க் கட்சி என்று சொன்னால், அப்படி ஆகிவிடுமா? அண்ணாமலை அரசியலுக்குப் புது வரவு. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இதுபோல போராட்டங்களை நடத்துகிறார். ஆனால், அ.தி.மு.க. 7 முறை ஆட்சியைப் பிடித்த இயக்கம். நாங்கள் அப்படியிருக்க வேண்டியதில்லை. ஆனால், கோவையில் அமைதி திரும்பாவிட்டால், போராட்டம் நடத்துவோம்" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதைப் போலச் செயல்பட்டாலும், அப்படி வெளியில் சொல்வதில்லை. அ.தி.மு.க. அழித்து அந்த இடத்தில் தாங்கள் வளர வேண்டுமென நனைக்கவில்லை என்கிறார்கள் அக்கட்சித் தலைவர்கள். ஆனால், இது எவ்வளவு நாளைக்கு என்பதைப் பார்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/india-63509312
  6. ஆனாலும் அவுஸிற்கு கொஞ்சம் பயங்காட்டிட்டாங்கள்!
  7. நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ். பேரணி - கோப்புப்படம் நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஏன்? ஆர்.எஸ்.எஸ். வரலாறு என்ன? காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள் ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி? இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார். ஆனால், "இந்த அணிவகுப்பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார். https://www.bbc.com/tamil/india-63513383
  8. உடல் நலம்: மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மழைகாலத்தில் மழை நீரை சேகரித்து குடிப்பதும், சமைப்பதும் பல வீடுகளில் வாடிக்கையாக உள்ளது. மழை நீரில் சாதாரண குழாய் நீரை விட சத்துகள் அடங்கியிருப்பதாக பொதுவான நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகிறது. மழைநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், அதனை முறையாக சேகரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சரியான அக்கறை காட்டவில்லை என்றால், அதனால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மழைநீரில் பிரத்தியேகமான தனிமங்கள், தாதுபொருட்கள் எதுவுமில்லை என்றும் மழைநீர் பெய்யும் இடங்களை பொறுத்துதான் அதன் தரம் இருக்கும் என்பதால், எல்லா இடங்களில் கிடைக்கும் மழைநீரிலும் ஒரே மாதிரியான தாதுக்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது என்கிறார் இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் இந்துமதி. நீரை சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றி விளக்கிய அவர், ''மழை நீரை எங்கிருந்து சேமிக்கிறோம் என்பதை பொறுத்துதான் மழை நீரின் தரம் அமையும். வனப்பகுதியில் பெய்யும் மழை நீரும், காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதியில் பெய்யும் நீரும் ஒரே தரத்தில் இருக்காது. மழைக்காலப் பூஞ்சை: கட்டடங்களுக்கு என்ன பாதிப்பு? உடலுக்கு என்ன சிக்கல்? இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு முதுகெலும்பு சார்ந்த நோய்கள் வருவது ஏன்? தவிர்க்க என்ன வழி? தூய்மையான குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழை நீரை சேமிக்கலாம். அனல் மின் நிலையம் இருக்கும் பகுதியில், நீங்கள் வசிக்கும் பட்சத்தில் அங்கு மழை நீரை சேமித்தால்,மாசுபாட்ட காற்றில் உள்ள துகள்கள் அந்த நீரில் கலந்திருக்கும். அதனால், தூய்மையான பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்களா, அங்குள்ள மழைநீரை நீங்கள் சேமிக்கிறீர்களாக என்பதுதான் முதல் கேள்வி,''என்கிறார். ''சேமிப்பதற்கு தூய்மையான கலன்களை பயன்படுத்தவேண்டும். அதனை உடனே அருந்துவதை பரிந்துரை செய்வதில்லை. ஏனெனில், மாசுபாடு காரணமாக மழைநீரில் அல்கலைன் என்ற நீர்க்காரத்தன்மை அதிகமாக இருக்கும். பட மூலாதாரம்,INDHUMATHI படக்குறிப்பு, பேராசிரியர் இந்துமதி நீர்காரத்தன்மை எந்தளவில் உள்ளது என்பதை பொறுத்துதான் தண்ணீரின் தரத்தை மதிப்பிடமுடியும். வெள்ளம் ஏற்பட்டு, குடிநீருக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்ற சமயத்தில், நீரை சேகரித்து, துணியில் வடித்து குடிக்கலாம். பொதுவாக மழைநீரை நன்கு காய்ச்சி குடிப்பதுதான் சிறந்தது,''என்கிறார் இந்துமதி. மழை நீரின் தரம் மற்றும் சேமித்துவைத்திருக்கும் கலனை பொறுத்து, ஒருவாரம் முதல் இரண்டு மாதங்கள் வரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என்கிறார் அவர். ''மழைநீரை வடிகட்டுவதற்கு பலவிதமான வடிகட்டிகள் கிடைக்கின்றன. மணல், கார்பன், ஸ்பாஞ் வகை மற்றும் கிருமிகளை நீக்குவதற்கான வடிகட்டிகள் உள்ளிட்டவை அடிப்படையாக பயன்படுத்தப்படும் வடிகட்டிகள். ஒரு சிலர் மழைநீரை நீண்ட நாட்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்த சேமிப்பார்கள். அதனால், முதலில் சேகரித்தவுடன் வடிகட்டிகளில் தூய்மைபடுத்திதான் மழைநீரை பயன்படுத்தவேண்டும்,''என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மழைநீரை குடிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவற்றை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தொற்று நோய் நிபுணர் விஜயலட்சுமி, அமிலத்தன்மை மழைநீரில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு நேரடியாக மழைநீரை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்கிறார். ''மழைநீரை முறையாக சேமிக்கவில்லை என்றால், அதில் இருந்து வாடை வரும், அதில் பூஞ்சை வளரும். அந்த நீரை குடிப்பதற்கு, சமைப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வெள்ளம் ஏற்பட்ட காலங்களில், நேரடியாக கலங்கலான மழைநீரை குடித்த மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டனர்,''என்கிறார் விஜயலட்சுமி. படக்குறிப்பு, மருத்துவர் விஜயலட்சுமி மேலும், ''தண்ணீரால் பரவும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் அதிகரிக்கும். மழைநீராக இருந்தாலும் குழாய்நீராக இருந்தாலும், காய்ச்சாமல் நீரை குடித்தால், அதில் நுண்கிருமிகள் இருந்தால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்கத்தால் பலவிதமான நோய்கள் ஏற்படும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி, வயிற்றுபோக்கு, மஞ்சள்காமாலை, மூளைகாய்ச்சல், நிமோனியா காய்ச்சல் வரை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது,'' என்கிறார். https://www.bbc.com/tamil/science-63509589
  9. அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்ட திலினியை கூட தெரிவு செய்வார்கள் - தேர்தல் ஆணையாளர் By RAJEEBAN 04 NOV, 2022 | 12:22 PM அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார். பிரியமாலி நாளை தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும் ஆம் அவர் வெற்றி பெறுவார் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணபுர்வு என்பது மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது,இதனை உயர்த்துவதற்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான பொருத்தமான நபர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கவேண்டும்,இதனை மாற்றாமல் எங்களால் ஊழல்மோசடி நிறைந்த அரசியல் முறைமையையோ அல்லது சமூகத்தையோ தெரிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மொடல்கள் நடிகர் நடிகைகள் பாடகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் அவர்களிற்கு அதிக வாக்குகளை வழங்குகின்றனர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான நபர் ஒருவர் விடுதலையான பின்னர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139107
  10. டிசம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பில்லை- இலங்கையை கைவிட்டது சீனா - இந்துஸ்தான் டைம்ஸ் By RAJEEBAN 04 NOV, 2022 | 11:46 AM இலங்கையுடன் சீனா கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காததன் காரணமாக டிசம்பரில் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்காது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா தனது கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் குறித்து கவனம் செலுத்துவதாலும் இலங்கையுடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காததன் காரணமாகவும் டிசம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்காது என்பதால் இலங்கை பாரிய அரசியல் நெருக்கடியை நோக்கி தள்ளப்படுகின்றது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கை டிசம்பர் காலக்கெடுவை தவறவிடும, சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடனை பெறுவதற்காக மார்ச் வரை காத்திருக்கவேண்டும் என அமெரிக்காவின் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை அந்நியசெலாவணி தேய்மானம் ஆழ்ந்த மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை காரணமாக இலங்கையின் கடன் மேலும் அதிகரித்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடன்வழங்கிய ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் கடன் மறுசீரமைப்பு நல்லிணக்கம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே இலங்கையுடன் ஆரம்பித்துள்ள போதிலும் சீனா இன்னமும் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. சீனா கம்யுனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாடு குறித்து தொடர்ந்து கவனம் நீடிப்பதால் தன்னிடம் கடன் வாங்கிய இலங்கை குறித்து கவனம் செலுத்துவதற்கு சீனாவிற்கு நேரம் போதுமானதாகயில்லை என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த கடன் 2021 இல் 36 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது இதில் சீனாவிற்கு 7.1 பில்லியன் கடனை செலுத்தவேண்டும்,( 20 வீதம் ) என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் 2021 டிசம்பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 115.3 வீதமாக காணப்பட்ட மொத்த பொதுக்கடன் 2022 ஜூனில் இது 143.7 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதில் இரு தரப்பு கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 வீதமாகயிருந்து 20.4 வீதமாக அதிகரித்துள்ளது. தற்போது நடைமுறைகளிற்கான தருணம் நாங்கள் முன்னோக்கி செல்லவேண்டும் எங்களால் டிசம்பரிற்குள் சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்றால் இதன் அர்த்தம் என்னவென்றால் நவம்பரில் எங்களால் சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடிந்தால் எங்களால் பெரும் சாதகநிலையை பெறமுடியும் எனஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்பதையும் இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மாநாட்டின் பின்னர் சீனாவின் கவனம் அது தொடர்பான விடயங்களில் காணப்படுவதால் எங்களால் டிசம்பர் ஆரம்பத்திற்குள் இதனை சாதிக்க முடியுமா என்பது தெரியவில்லை,ஆனால் நாங்கள் ஜனவரியை இலக்காக கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மார்ச் மாதம் சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த கூட்டம் இடம்பெறும்வரை தாக்குபிடிப்பதற்கு இலங்கை;கு 850 மில்லியன் டொலர் நிதி உதவி தேவை. இல்லாவிட்டால் ஜூலை ஆகஸ்ட் மாதம் போல பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் காணப்படும் இலங்கையின் எதிர்கட்சிக்கு தானாக எழுந்து நிற்பதற்கான செல்வாக்கு இல்லை,என்பதால் தீவிர இடதுசாரிகள் அரசியலில் முக்கியத்துவம் பெறும் நிலை காணப்படும். இலங்கைக்கு அவசியமான 850 மில்லியன் டொலர் நிதிஉதவியை யார் வழங்கப்போகின்றார் என்பதே கேள்வி எனவும் இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் சீனா இன்னமும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை,இந்தியா ஏற்கனவே கொழும்புடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது முன்கூட்டிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை தனது வெளிநாட்டுக்கடன்களில் இந்தியாவிற்கு 1.7 பில்லியன் டொலர்களை இரு தரப்பு கடனாக செலுத்தவேண்டியுள்ளது இலங்கை முற்றாக வீழ்ந்துவிடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மோடி அரசாங்கம் மேலும் நான்கு பில்லியன் டொலர் அவசர உதவியை வழங்கியுள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தில் போட்டியாளர்களான இந்தியா சீனாவை வைத்து காய்களை நகர்த்துகின்ற போதிலும் இந்தியா இந்த உதவியை வழங்கியுள்ளது. இலங்கை சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கையை அகற்றி தனது நாட்டின் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் நாட்டிற்காக இலங்கை காத்திருக்கலாம். இலங்கையின் அரசியல் பொருளாதார எதிர்காலம் இருள்மயமானதாக காணப்படுகின்றது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139102
  11. கடந்தகால 4 வரைபுகளை பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் அரசியலமைப்பு - டிலான் By T. SARANYA 04 NOV, 2022 | 11:48 AM (ரொபட் அன்டனி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரசியல் தீர்வுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குமாயின் அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம். ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்று டலஸ் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பானது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். 13 பிளஸ் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தேர்தல் முறை மாற்றம், மற்றும் ஜனாதிபதி முறைமை நீக்கம் ஆகிய மூன்று விடயங்களும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகவும் அதில் அரசியல் தீர்வை உள்ளடக்கப் போவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் தமது தரப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே டிலான் பெரேரா இந்த விடயத்தை கூறினார். புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி அறிவித்ததும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் அறிவித்திருந்தார். இதேவேளை தற்போதைய ஜனாதிபதி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்டு அதனூடாக பிரதான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு ஒரு வரைபும் உருவாக்கப்பட்டது. அந்த வரைபை தற்போது அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்ற கருத்தும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக டிலான் பெரேரா எம்.பி. தொடர்ந்து கேசரிக்கு கருத்து வெளியிடுகையில், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமே இந்த அரசியலமைப்பின் இறுதி திருத்தமாக இருக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். எனவே உடனியாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்படவேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி கூறியதை வரவேற்கின்றோம். ஆனால் அது நேர்மைத் தன்மையுடையதாக காணப்படுவது அவசியமாகும். அவ்வாறான ஒரு முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். அந்த செயற்பாடுகளில் எம்மை இணைத்துக்கொள்ளாவிடினும் நாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்குவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது நிச்சயமாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸை நோக்கி பயணிக்க வேண்டும். அதேபோன்று தேர்தல் முறை மாற்றம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மாற்றம் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பு முறையை உருவாக்கவது கடினமான விடயமான விடயமல்ல. ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்றார். இலங்கையில் தற்போது இரண்டாவது குடியரசு யாப்பு அமுலில் இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு கொண்டுவரப்பட்டு டொமினியன் அஸ்தஸ்துடன் நாடு ஆட்சிசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி முறைமையை திசைமுகப்படுத்தியதாக இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. அதுவே தற்போது அமுலில் இருக்கிறது. அந்த இரண்டாவது குடியரசு யாப்பில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவேதான் புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாகவலியுறுத்தப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/139097
  12. மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது 04 NOV, 2022 | 11:28 AM உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் கேள்வி குறைந்ததாலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 94.45 டொலர் வரை குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/139098
  13. குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் By RAJEEBAN 04 NOV, 2022 | 10:44 AM குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அவர் நோயாளி குறித்த முழுமையான விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்டவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நோயாளி எங்கிருந்து வந்தார் என்பது உட்பட ஏனைய விபரங்களை அசேல குணவர்த்தன அடுத்த சில தினங்களில் வெளியிடுவார் என ஹேரத் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்டுள்ள நபர் துபாயிலிருந்து வந்தவர் 20 வயது என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/139090
  14. காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 2023 டிசம்பருக்குள் முடிவிற்கு கொண்டுவரப்படும் -அமெரிக்கத் தூதரிடம் நீதியமைச்சர் விஜயதாஸ வாக்குறுதி By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 11:39 AM (நா.தனுஜா) காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கும் நபர்கள் குறித்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை வரவேற்பதாக நீதியமைச்சரிடம் தெரிவித்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தற்காலத்திற்குப் பொருந்தக்கூடியவகையில் சட்டக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்தக்கூடியவாறான பல்வேறு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்தும் தனது பாராட்டை வெளிப்படுத்தினார். அதேவேளை நாட்டில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடிகளை இல்லாதொழிக்கும் நோக்கில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளையும் அமெரிக்கத்தூதுவர் பாராட்டினார். மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்கத்தூதரகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்றமைக்காக நீதியமைச்சருக்கும், அக்கட்டடத்தை நிர்மாணிப்பதில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் நோக்கில் நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவை வழங்கலையும், அதன் முன்னேற்றத்தையும் அமெரிக்கத்தூதுவர் பாராட்டினார். அவருக்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கும் நபர்கள் குறித்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139075
  15. உயிரிழந்த தோட்டத் தொழிலாளிக்கு முதன்முறையாக 40 இலட்சம் ரூபா நஷ்ஈட்டை பெற்றுக்கொடுப்பு By DIGITAL DESK 2 04 NOV, 2022 | 11:26 AM தோட்ட நிர்வாகத்தின் அழுத்தத்தின் பேரில் பலவந்தமாக பணிக்கு அமர்த்தப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த நமுனுகல கனவரெல்ல தோட்ட தொழிலாளி ஹர்ஷன் கணேஷ்மூர்த்தியின் மரணத்துக்கு நட்டஈடாக 40 இலட்சம் ரூபாவை கடுமையான போராட்டத்தின் மூலம் நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்கான காசோலையை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று குறித்த குடும்பத்தினருக்கு வழங்கி வைத்தனர். நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனம் உயிரிழந்த இளைஞனுக்கு மரண சடங்கிற்கான செலவு உட்பட 15000 ரூபாய் மாத்திரமே நட்ட ஈடு வழங்க முடியும் என தெரிவித்திருந்தது. இத்தொகையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அக்குடும்பத்தினருக்கு அறிவித்திருந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படும் வரையில் இளைஞனின் பூதவுடல் அடக்கம் செய்யபடாது என தெரிவித்த செந்தில் தொண்டமான் இளைஞனின் பூதவுடலை தொழிற்சாலையில் வைத்து, நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இச்சம்பவம் குறித்து நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாடிற்கு இ.தொ.கா இடமளிக்காமையால் தொழில் அமைச்சில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் திகதி தொழில் அமைச்சில், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய நட்ட ஈட்டை வழங்குவது தொடர்பில் இ.தொ.கா தோட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உயிரிழந்த இளைஞனுக்கு 40 இலட்சம் ரூபாய் தருவதாக இப்பேச்சுவார்தையின் மூலமாக முடிவு செய்யப்பட்டது. இந்த நட்டஈடு தொகை குறித்து இளைஞனின் குடும்பத்தார் மற்றும் தோட்ட மக்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் விருப்பத்திற்கு அமைய இ.தொ.காவின் தொடர் போராட்டத்தினால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நட்ட ஈடாக 40 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139073
  16. டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் பாபர் ஆஸம் - 'நானும் ரிஸ்வானும் மோசம்' 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக் கோப்பை போட்டியில் தானும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானும் சரியாக ஆடவில்லை என்பதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஒப்புக் கொண்டிருக்கிறார். உலகக் கோப்பை தொடரில் பாபர் ஆஸம் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு ஆதரவாகவும் நம்பிக்கை தரும் வகையும் ஏராளமானோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பேட்டிங்கில் இந்தியாவின் விராட் கோலியுடன் அவ்வப்போது ஒப்பிடப்படும் பாபர் ஆஸம், விராட் கோலி முன்பிருந்தது போலவே ஒரு மோசமான கட்டத்தை கடந்து வருகிறார் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். டி20 உலகக் கோப்பை போட்டியில் பலமான தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் குரூப்-2 பிரிவில் இருந்து எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது குழப்பமாகி இருக்கிறது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. 20 ஓவர்களில் இருந்து 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டபோது, குறிப்பிட்ட இலக்கை தென்னாப்பிரிக்க அணியால் எட்ட முடியவில்லை. வேதனையை சாதனைகளாக மாற்றிய விராட் கோலி - மறுபிறவி எடுத்தது எப்படி? இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி? இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு எனினும் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டது பற்றியோ, அல்லது ஈரமான மைதானத்தால் பந்துகள் பவுண்டரிக்குச் செல்லாதது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா புவுமா எந்தக் குறையும் சொல்லவில்லை. அதேபோல் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது குறித்து கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் "பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது ஒரு விழிப்புக்கான அழைப்பு" என்று கூறினார் பவுமா. "பந்துவீச்சிலும் ஃபீல்டிலும் சிறப்பாகச் செயல்படவில்லை" என்று தங்களுடைய குறையை பவுமா ஒப்புக் கொண்டார். பாபர் ஆஸம் கவலை பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரலாறு நேற்றைய போட்டி வரைக்கும் தொடர்ந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்களுடைய நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுடனான போட்டி முடிந்து பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், "கடந்த இரு போட்டிகளிலும் 100 சதவிகித ஆட்டத்தை அணியினர் வெளிப்படுத்தியுள்ளனர்" என்று கூறினார். "நானும் ரிஸ்வானும் சரியாக ஆடவில்லை" என்று அவர் ஒப்புக் கொண்டார். பாபர் ஆஸம், ரிஸ்வான் எப்படி ஆடியிருக்கிறார்கள்? பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களும் நம்பிக்கை நட்சத்திரங்களுமான ரிஸ்வானும் பாபர் ஆஸமும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடவில்லை. தென்னாப்பிரிக்காவுடனா போட்டியில் பாகிஸ்தான் வென்ற போதும் பாபர் ஆஸம் 15 பந்துகளில் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ரிஸ்வான் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். ஷதாப்கான், இப்திகார் அகமது உள்ளிட்டோரின் ஆட்டமே பாகிஸ்தான் அணி 185 ரன்களைக் குவிக்க உதவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கு முன்பு நெதர்லாந்துடனான போட்டியிலும் பாபர் ஆஸம் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகிவிட்டார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் ஓரளவு நின்று ஆடி 49 ரன்களைக் குவித்தார். ஜிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியிலும் பாபர் ஆஸம் 4 ரன்களைத்தான் எடுத்தார். ரிஸ்வான் 14 ரன்களை எடுத்தார். இந்தியாவுடனான போட்டியில் பாபர் ஆஸம் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் அந்தப் போட்டியில் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். இப்திகார் அகமது ஷான மசூத் ஆகிய இருவரின் ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி அந்தப் போட்டியில் 159 ரன்களை எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக பாபர் ஆஸம் இந்தத் தொடரில் முறையே 0,4,4,6 ரன்களையும், ரிஸ்வான் 4, 14, 49, 4 ரன்களையும் எடுத்திருக்கிறார்கள்.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் அந்த அணி ஓரளவு ரன்களைக் குவித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாபர் ஆஸம் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு ஆதரவாகவும், நம்பிக்கை வைத்தும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிடுகின்றனர். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா? பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும். இந்தியாவுக்கு என்ன சிக்கல்? இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும். அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குச் சென்றுவிட்டதா? தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம். வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா? வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும். மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு? இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. குரங்கில் மனித விந்தணுவைச் செலுத்தி நடந்த சோதனையில் என்ன கிடைத்தது தெரியுமா? அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/sport-63509331
  17. கூகுள், பேஸ்புக், அமேஸானின் மொத்தப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவன பெறுமதி அதிகரிப்பு By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 11:43 AM கூகுள், பேஸ்புக், அமேஸான் நிறுவனங்களின் கூட்டு சந்தைப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நிறைவடைந்த பங்குச்சந்தை விற்பனைகளின் பின்னர் அப்;பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.307 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என யாஹூ நிதியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் மொத்த சந்தைப்பெறுமதி 1.126 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது. அமோஸானின் சந்தைப் பெறுமதி 939.78 பில்லியன் டொலர்களாகவும் பேஸ்புக்கின் தாய் நிறுவுனமான மேட்டாவின் சந்தைப் பெறுமதி 240.07 பில்லியன் டொலர்களாகவும் இருந்தது. அதாவது இம்மூன்று நிறுவனங்களினதும் மொத்த சந்தைப் பெறுமதி 2.306 பில்லியன் டொலர்களாகும். நான்காவது காலண்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி 8 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139101
  18. விந்தணுக்கள் பெண் கருமுட்டையை நோக்கி நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? - அறிவியல் உண்மைகள் லாரா பிளிட் பிபிசி முண்டோ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனித கருத்தரித்தல் செயல்முறையை ஒரு கட்டுக்கதை அல்லது ஒரு விசித்திரக் கதை போல நம்மில் பலர் கற்றிருப்போம். ஒரு பெரிய தலையும் மெல்லிய வாலும் கொண்ட கோடிக்கணக்கான தேரை குஞ்சுகள் போன்றவை, ஒரே குறிக்கோளுடன் தனிமை சூழலில் வெறித்தனமாக நீந்தும் காட்சி நமக்குப் பரீட்சயம். விந்தணுக்கள் என அழைக்கப்படும் இவற்றின் வருகையை எதிர்பார்த்து பொறுமையாகக் காத்திருக்கும் முட்டை மறுமுனையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஒரு மாரத்தான் ஓட்ட சாதனையை நிறைவு செய்ய, கோடிக்கணக்கான விந்தணுக்களில் எந்த விந்தணு வேகமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பானதாக இருக்கிறதோ அதுவே முட்டையில் மோதி அதனுள்ளே ஊடுருவி அதன் பிறகு கரு உருவாகத் தொடங்குகிறது. பொதுவாக கருத்தரித்தல் செயல்முறை என வரும்போது அது இந்த கதை அல்லது காட்சி மூலமே பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், விந்தணுவை கருமுட்டைக்கு எதிர் தரப்பில் இயங்கக் கூடிய தீவிர ஏஜென்ட் போல இந்த கதை பறைசாற்றுகிறது. ஆனால், இந்த விந்தணுவின் பங்கையோ இந்த கருத்தரித்தல் நிகழ்வு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையோ இந்தக் கதை சரியாக பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. இனப்பெருக்கத்தில் இரண்டும்-குறிப்பாக பெண் இனப்பெருக்க பாதை முக்கிய பங்கு வகிக்கிறது. "விந்தணுக்களின் பயணம் எளிதானதல்ல" உடலுறவின்போது விந்து வெளிப்படுதலுடன் இந்த கதை ஆணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த விந்தணு உற்பத்தியாகி, பெண்ணின் யோனியில் கோடிக்கணக்கான விந்தணுக்கள் டெபாசிட் செல்கிறது. (சராசரியாக விந்து வெளியேறும் போது சுமார் 250 மில்லியன் விந்தணுக்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது). யோனிக்குள் நுழைந்ததும் விந்தணுக்கள் முதலில் கருப்பை வாயின் தடையை கடக்க வேண்டும் என்று இந்த நடைமுறையின் விரிவாக்கத்தை பிபிசி முண்டோ சேவையிடம் விளக்குகிறார் அமெரிக்க அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அலுவலகத்தின் அறிவியல், தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் பரிணாம உயிரியலாளர் கிறிஸ்டின் ஹூக். பட மூலாதாரம்,GETTY IMAGES "இனப்பெருக்கப் பாதையில், ஒரு பெண்ணின் பார்வையில் சொல்வதென்றால், அதை நான் 'செக்பாயின்ட்டுகள்' என்று அழைப்பேன். விந்தணுக்கள் கருத்தரித்தல் இடத்தை அடைய வேண்டும். ஆனால், அந்த இடம், விந்தணு யோனிக்குள் நுழையும் இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது," என்கிறார் அவர். விந்தணுக்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டால் (பெரும்பாலானவற்றில் டிஎன்ஏ பாதிப்பு அல்லது பிற குறைபாடுகள் இருந்தால்), அவை இந்தத் தடையைக் கடந்து செல்ல முடியாது. பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவத் துறையின் அறிவியல் இயக்குநர் டேனியல் பிரிசன், "இது மிகவும் முக்கியமான தேர்வு செயல்முறையாகும். ஒரு விந்து வெளிப்படும்போது உற்பத்தியாகும் பல மில்லியன் விந்தணுக்களில், சில நூறு மட்டுமே முட்டையை அடையும்," என்கிறார். விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி? உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்ன? சுருங்கி விரிதலும் உச்சகட்ட சுரத்தலும் இருப்பினும், விந்தணுக்களால் தாமாகவே கருத்தரித்தல் சாத்தியம் ஆவதற்கான கருமுட்டைக் குழாய்களின் (முட்டை குழாய்கள் என்றும் அழைக்கப்படும்) முடிவான கட்டத்தை அடைய முடியாது, ஏனென்றால் அந்த கட்டத்தை அடையக் கூடிய அளவுக்கு வலுவான சக்தியை அந்த விந்தணுக்கள் கொண்டிருக்காமல் இருக்கலாம். விந்தணுவின் வால் பக்கங்களுக்குச் செய்யும் இயக்கமானது, அது முன்னோக்கிச் செல்லும் சக்தியை விட பத்து மடங்கு பெரிய சக்தியைக் கொண்டுள்ளது. இந்த கட்டத்தைத்தான் "விந்து நீந்துவதில்லை, ஆனால் பெரும்பாலும் கருப்பையின் சுருக்கங்களால் உந்தப்படுகிறது" என்று விளக்குகிறார் டேனியல் பிரிசன். "நீந்துதல் என்பது ஒரு சிறிய பகுதி மட்டுமே, அது முட்டையை அடையும் போது மட்டுமே நடக்கும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண் உச்ச கட்ட நிலையில் வளைந்து கொடுப்பது விந்தணுவின் இயக்கத்திற்கு உதவும் என சுட்டிக்காட்டுபவர்களும் உள்ளனர். மறுபுறம், கருப்பை மற்றும் கரு முட்டைகளுக்குள் உள்ள சுரப்புகளும் விந்தணுவின் பாதையை மாற்றியமைத்து, அவற்றின் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது தடுக்கும், அவற்றின் நிலைத்தன்மையையும் அது மாற்றும். சுருக்கமாக சொல்வதெந்றால்,, "இது கருமுட்டையின் இயந்திர நடவடிக்கை மற்றும் ஒத்திசைவு இயக்கத்தைப் போல- அது ஒரு உப்பு அல்லது பிசுபிசுப்பான திரவம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை pH - இரண்டும் பெண் இனப்பெருக்க மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது கருத்தரித்தல் நிகழ்வதை கட்டுப்படுத்துகிறது. அதாவது: எந்த விந்தணுவானது கருமுட்டையைச் சந்திக்க அனுமதிக்கப் போகிறது என்பதை இந்த கட்டம்தான் தீர்மானிக்கிறது" என்று அமெரிக்காவில் உள்ள ஸ்மித் கல்லூரியின் உயிரியல் பேராசிரியரான விர்ஜினா ஹேசன். "யோனி இருக்கும் சூழலின் pH, விந்தணுக்களுக்கு உகந்ததை விட குறைவாக உள்ளது. ஆனால் விந்தணுக்களின் சவ்வுகள் மற்றும் நொதிகளில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட இந்த அமிலத்தன்மை அவசியம் (...) அவை அதிக இயக்கம் பெற வாய்ப்பளிக்கும். ஒரு வேகமான வளர்சிதை மாற்றம், ஓசைட்டின் வெளிப்புற புரத அடுக்கில் ஊடுருவக்கூடிய திறன் (முதிர்ச்சியடையாத கருமுட்டை), இருந்தால் இது ஊடுருவுவது மிகவும் கடினம்" என்று ஸ்பெயினில் உள்ள யூஜின் குழுமத்தின் ஆராய்ச்சியாளர் ஃபிலிப்போ ஜம்பெல்லி விளக்குகிறார். சில ஆராய்ச்சியாளர்கள் பெண் உச்சநிலையில் இருக்கும் போது உள் தசை சுருக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் விந்தணு மேல்நோக்கி பயணம் செய்வதில் பங்களிப்பை வழங்ககக்கூடும் என்று கருதுகின்றனர், ஆனால் மற்றவர்கள் இந்த கருத்துருவை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்று சுட்டிக்காட்டுகின்றனர். குறுகிய பயணம் இதற்கிடையே பெண்ணின் முட்டை, வெற்றி பெறும் விந்தணுவின் வருகைக்காக செயலற்ற முறையில் காத்திருப்பதில்லை என்ற கூற்றை கவனிக்க வேண்டும். முட்டைக்கு தன்னிச்சையாக நகரும் திறன் இல்லை என்றாலும், குழாய்களுக்குள் இருக்கும் சிலியா (ஒரு வகையான முடி) கருப்பையில் தொடங்கும் ஒரு குறுகிய பயணத்தில் கீழ்நோக்கி நகர உதவுகிறது. "முட்டை கருப்பையை நோக்கி ஃபலோபியன் குழாய் வழியே நகர்கிறது, விந்தணுக்களை ஈர்க்கும் மற்றும் அதை நோக்கி தீவிரமாக வழிநடத்தும் கெமோஅட்ராக்டன்ட்ஸ் எனப்படும் வேதியியல் மூலக்கூறுகள் அதை சாத்தியமாக்கும்," என்கிறார் ஜாம்பெல்லி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தரித்தல் பற்றி நாம் கற்றுக்கொண்டது யதார்த்தத்துடன் பொருந்தவில்லை. முட்டையால் இந்த மூலக்கூறுகளின் விளைவை "ஈர்க்கவோ மறுதலிக்கவோ முடியும். அதே போல் ஒவ்வொரு விந்தணுக்கள் எங்கு செல்கின்றன என்பதையும் அதனால் மாற்ற முடியும்," என்கிறார் ஹேசன். விந்தணுவிற்கும் கருமுட்டைக்கும் இடையிலான சந்திப்பை ஊடுருவலின் செயலாக விவரிப்பதும், அப்போதுஎன்ன நடக்கிறது என்பதை துல்லியமாக சித்தரிப்பதும் கூட முடியாத காரியம்தான். ஏனெனில் முட்டையால் மட்டுமே விந்தணுக்களை ஈர்க்க முடியும் அல்லது அதன் ஊடுருவலை கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் - ஒற்றை விந்தணு கூட திறன் பெற்றதாக அமைந்து முட்டைக்குள் ஊடுருவிச் செல்ல வாய்ப்புண்டு. உண்மையில் பரஸ்பர தொடர்புகளின் ஒரு செயல்முறையாக இதை பார்க்க வேண்டும். இரு தரப்பினரும் ஒரு செயலில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கிறார்கள். தொடர் ஏற்பிகள் மற்றும் ரசாயன பொருட்கள் என பல கூறுகள் இந்த செயல்முறைக்குள் அடங்கியிருக்கின்றன. தனித்து விடப்பட்ட சூழல் ஆய்வாளர்கள் சொல்வது போல் விந்தணு உருவாகும் சூழல் உண்மையில் தனித்து விடப்பட்ட களமாக இருக்கிறதா? ஹேசனின் கருத்துப்படி, இது மீண்டும் ஒரு துரதிருஷ்டவசமான பெயரடை ஆகும். ஏனெனில் ஓர் ஆண் பார்வையிலேயே இது நிகழ்வு எப்போதும் விவரிக்கப்படுகிறது. "நீங்கள் அதை ஒரு போட்டியாகக் கருதினால் அது தனித்து விடப்பட்டதாகவும் இணைந்து நடப்பதற்கானதாகவும் தோன்றாது," என்று அவர் கூறுகிறார். "சாத்தியமான சந்ததிகளின் தலைமுறையை உருவாக்கும் செயல்முறையை இந்த சூழலே ஊக்குவிக்கிறது, எனவே இது இலக்கின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இரு தரப்பும் ஒன்று கூடி சாதித்தால்தான் கடைசியில் நம் கையில் ஒரு குழந்தை வருகிறது," என்கிறார் ஹேசன். பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த சூழல் முடிந்தவரை பல சந்ததிகளை உருவாக்கக்கூடிய சிறந்த குழந்தையை உருவாக்கவே முயற்சிக்கிறது, எனவே விந்தணு பயணிக்கும் சூழல் தனித்து இயங்கக் கூடியதாக இருக்க முடியாது. "இதை ஓர் பெண்ணின் பார்வையில் பார்ப்பதாக இருந்தால், கருப்பை சிறந்த சந்ததியைப் பெறுவதில் தாய்க்கு நன்மை செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்கிறது," என்கிறார் அவர் புதிய தொழில்நுட்பங்கள், பழைய யோசனைகள் கருத்தரித்தல் செயல்முறையின் சில விவரங்கள் ஒப்பீட்டளவில் சமீபத்தில் அறியப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கு நன்றி கூற உகந்தவை. விந்தணு இயக்கத்தின் சிறிய முக்கியத்துவம் போன்ற பல தகவல்கள் பல தசாப்தங்களாக அறியப்பட்டே வந்திருக்கின்றன. அமெரிக்க மானுடவியலாளர் எமிலி மார்ட்டின் கருத்தரித்தல் பற்றி பேசுவதற்குப் பயன்படுத்தப்படும் மொழியின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர், கலாசார மதிப்புகள் எவ்வாறு உலகைப் பற்றிய கண்டுபிடிப்புகளை விவரிக்கின்றன, இயற்கையை உணர உதவியுள்ளன என்பதையும் அவர் அழகாக விளக்கியிருக்கிறார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட இவரது கல்வி உரை, இந்த விஷயத்தில் அறிவியல் நூல்களில் மறைந்திருக்கும் பாலின நிலைப்பாடுகளை விரிவாக பகுப்பாய்வு செய்கிறது. இது பெண்ணியத்திற்கான விளக்கக் குறிப்புரைகளாகவும் உள்ளன. பிபிசி முண்டோ ஆலோசித்த வல்லுநர்கள் அறிவியலிலும், கல்வியில் முடிவெடுக்கும் பகுதிகளிலும் பெண் பிரதிநிதித்துவம் இல்லாததையும் சுட்டிக்காட்டுகின்றனர். "அறிவியல் தொடர்பாக மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டவர்களின் எண்ணிக்கை போதிய வகையில் இல்லாதிருப்பது, பிரதிநிதித்துவம் தொடர்பாக நீங்கள் எழுப்பும் கேள்விகளிலும் நீங்கள் கண்டுபிடிக்கப்போகும் விளக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்" என்கிறார் கிறிஸ்டின் ஹூக். நாம் பயன்படுத்தும் சொற்களை கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஹேசன் வலியுறுத்துகிறார். அதைப் பற்றிப் பேச நடுநிலை மொழிப்லுலமை வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்: உதாரணமாக, "கருத்தரித்தல் அல்ல கருவுருதல்" என்ற வார்த்தையையே நாம் பயன்படுத்த வேண்டும் என்கிறார் அவர். ஆனால் கருத்தரிப்பின் பொறிமுறையைப் பற்றிய நமது புரிதலில் பாலின சார்புகளை அகற்றுவதென்பது, அறிவியல்பூர்வ தவறான தகவலை சரிசெய்வதற்கும் உயிரியல் செயல்முறைகளை துல்லியமாக விவரிக்கவும் உதவ வேண்டும் என்பது அவசியமில்லை என்பது அவரது பார்வை. சரியான வார்த்தையைப் பயன்படுத்துவது, தற்போதுள்ள கருத்தரிப்பு உதவி சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகை செய்வதற்கும் ஒரு அடிப்படை படியாக அமையும் என்கிறார் விர்ஜினா ஹேசன். https://www.bbc.com/tamil/science-63491549
  19. ம்ம்.😄 அட கடவுளே, தவறாக இருந்தால் மன்னிச்சு. முக்கியமாக வெளிநாட்டு உறவுகளும் உள்நாட்டில் கொஞ்ச உறவுகளும் தான் உதவி செய்கிறார்கள். இதுவரை 56 பேர் நன்கொடை அளித்துள்ளார்கள். வருடாந்த பங்களிப்பாக நான் 6000ரூபாவும், தம்பியார்(பிரதேச சபை உறுப்பினர்) தன்னுடைய மாதசம்பளம் 15000ரூபாவை அம்மா அப்பா பெயரால் தந்தவர். என்னிடம் இருக்கு, என்றாலும் தந்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.😜 வெல்ல முதலே ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாதாம், அதால பொறுமையா இருப்பம். கிருபன் அண்ணை ஏமாற்றமாட்டார்.💪
  20. வெற்றி பெற்ற பிறகு எங்கட சங்கத்துக்கு 18 பேரும் 5 பவுண்ஸ் தாங்கோ!🤭
  21. துருக்கியில் பணவீக்கம் 85.51 சதவீதமாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 02:05 PM துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும். துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார். விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் வட்டி வீதமானது தனது மிகப் பெரிய எதிரி என ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் கூறுகிறார். துருக்கிய மத்திய வங்கி கடந்த மாதம் 3 ஆவது தடவையாக வட்டி விதத்தை குறைத்தது. 12 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதமாக வட்டி வீதம் குறைக்கப்பட்டது. வட்டி வீதங்கள் அதிகரிப்பதால் பணவீக்கம் குறைவடையாமல் மேலும் அதிகரிக்கிறது என ஜனாதிபதி ஏர்டோவான் வாதாடுகிறார். இது பாரம்பரிய பொருளியல் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். துருக்கியில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139030
  22. காசி - தமிழ் சங்கமம் நடத்தப்படுவது அரசியலுக்காகவா அரசு நிகழ்வுக்காகவா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 நவம்பர் 2022, 02:38 GMT பட மூலாதாரம்,LEA GOODMAN/GETTY IMAGES படக்குறிப்பு, காசி தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பை உறுதிப்படுத்தவும், அதை மீண்டும் கண்டந்து புதிய தலைமுறையிடம் சேர்க்கவும் 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளதாக இந்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன் உண்மையான நோக்கம் குறித்து பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் அதை புரிந்து கொள்ள முற்படுகிறது இந்த கட்டுரை. இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நேரத்தில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருத்துக்கு இந்த திட்டம் வலுவூட்டும் என்றும் பழமையான மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திடும் பணியாக இந்த திட்டம் அமையும் என்று இந்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது. ஆனால் இந்த திட்டத்தால் தமிழ் மொழி வளர்ச்சியை விட சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிக்கும் போக்குதான் அதிகரிப்பதாக எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கின்றன. காசி தமிழ் சங்கமம் திட்டம் என்பது என்ன? இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காசி தமிழ் சங்கமம் மூலம் ஒரு மாத காலத்துக்கு இன்றைய வாரணாசியான காசியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அறிஞர்கள் இடையே கல்வி ஞான பரிமாற்றங்கள் - கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை இந்த சங்கத்தின் அங்கமாக நடைபெறும் என்று செய்திக்குறிப்பு கூறுகிறது. காசியில் உள்ள வர்த்தகம், ஆன்மிக தலங்களை பார்வையிடுதல், கர்நாடக சங்கீதம், கிராமிய கலைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள இணைப்புகள், இரண்டு பகுதிகளின் பாரம்பரிய அறிவு, கலை, தொழில், விவாதங்கள், கருத்துரைகள்,வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் உரைகள் நிகழ்த்தப்படும். சங்கமத்தின் முடிவில், தமிழ்நாட்டு மக்கள் காசியின் ஆழமான அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் அதுபோல காசி மக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், வருகைகள், உரையாடல்கள் போன்றவற்றின் ஆரோக்கியமான அறிவுப்பகிர் அனுபவங்களின் பரிமாற்றத்தின் மூலம், தமிழகத்தின் கலாசார செழுமையை அறிந்து கொள்வார்கள் என்றும் இந்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிகழ்வை நடத்துவது யார்? பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அறிவுசார் ஒருங்கிணைப்பாளராகவும், சுதந்திர இந்தியாவின் அமுத பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சகம் பொறுப்பேற்று ஒரு மாத நிகழ்வை நடத்தும். பங்கேற்பவர்கள் யார்? இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 பேர் ஒரு குழுவாக 8 நாட்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். சுமார் 2500 பேர் கொண்ட அத்தகைய 12 குழுக்கள் ஒரு மாத காலத்திற்கு காசியில் தங்கியிருந்து நிகழ்வில் பங்கேற்கும். இணையத்தில் பதிவு செய்யபவர்களில் இருந்து 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பங்கேற்பாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களின் பயணச் செலவு, தங்கும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். நரேந்திர மோதி தமிழின் பெருமையை தொடர்ந்து பேசுவது ஏன்? பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்: மு.க.ஸ்டாலின் வழக்கமான ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ரயில் பெட்டிகளில் - ராமேஸ்வரம் , சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று நகரங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் குழுக்கள் புறப்படும். காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES தொல்லியலாளர் பத்மாவதியிடம் பேசுகையில், 10ஆம் நூற்றாண்டு காலம் தொட்டே காசிக்கும், தமிழநாட்டுக்கும் தொடர்புகள் இருந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றன என்கிறார். ''சோழர்காலத்தில் வாரணாசி மடம் என்ற பெயரை குறிப்பிட்டு எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசி என்ற பெயர் கொண்ட ஊர்களும் இங்கு உண்டு. காசியில் தமிழ் மக்கள் இன்றளவும் வாழ்கிறார்கள். காசி விஸ்வநாதர் கோவிலுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்,''என்கிறார். மேலும், "ஆன்மிக பயணமாக வடநாட்டில் இருப்பவர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவதும், தென்னாட்டில் இருப்பவர்கள் காசிக்கு செல்வதும் இன்றும் நீடிக்கும் ஒரு பழக்கமாக உள்ளது. இந்த பயணம் தொன்றுதொட்டு நடந்து வந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன," என்கிறார் அவர். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ மதத்தை பின்பற்றிய புலவர் குமரகுருபரர், தமிழகத்தில் இருந்து காசிக்கு சென்று மடம் அமைத்தவர். பிற்காலத்தில் அந்த மடம் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டாலும் அதனை காசி மடம் என்று அழைக்கும் சொல்லாடல் தற்போதும் நீடிக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார். எதிர்ப்புக்கான காரணம் என்ன? தற்போது காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடத்தப்படுவதற்கான தேவை குறித்து பேசிய பேராசிரியர் அருணன், ''தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு குறைந்தபாடில்லை. அதனை தணிப்பதற்கு தமிழ் மொழியை சிறப்பிக்கும் தோற்றத்தை பாஜக உருவாக்குகிறது. பாரதிய பாஷா சமிதி என்பது இந்திய மொழிகளை வளர்த்தெடுப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு. தமிழ் மொழியை வளர்க்கும் நிகழ்வு, தமிழ் பண்பாட்டை உயர்த்தும் நிகழ்வாக பாஷா சமிதி இந்த திட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தால், அதனை தமிழகத்தில் நடத்தியிருக்கலாம். சமஸ்கிருதத்தின் பீடமாக கருதப்படும் காசியில் ஏன் நிகழ்வை நடத்த வேண்டும் என்பது பேராசிரியர் அருணனின் கேள்வி. அத்துடன், இந்த நிகழ்வில் இந்து மதத்தின் ஆன்மிக தலைமையகமாக கருதப்படும் காசியில் நடத்துவதால் கிடைக்கும் பயனை விட, தமிழ்நாட்டின் கீழடியில் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்,'' என்கிறார். மேலும், "தமிழ் மொழி, பண்பாட்டின் சிறப்பை உலகம் முழுவதும் உணர்த்த, காசியை தேர்வு செய்வது என்பது பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகதான்," என்கிறார் அருணன். பட மூலாதாரம்,ARUNAN/FB படக்குறிப்பு, பேராசிரியர் அருணன் ''இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்த நிகழ்வை நடத்துவதாக இருந்தால், ஏன் 'இந்து மத நகரமாக' அறியப்படும் காசியில் நடத்த வேண்டும்? அவ்வாறு நடத்தினால், தமிழகத்திற்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பை அறிவதை போல, தமிழகத்திற்கும் கிறித்தவ மதத்தின் தலைமையாக கருதப்படும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள தொடர்பு, இஸ்லாமிய மதத்தின் முக்கியத்தலமான மெக்காவுக்கும் உள்ள தொடர்பு என பிற நகரங்களையும் சேர்க்க வேண்டும் தானே? அங்கும் தமிழ் மொழியின் தாக்கம் இருப்பதற்கான வரலாற்று ரீதியான ஆய்வுகள் உள்ளதா என அறிய வேண்டும் தானே?'' என்கிறார் பேராசிரியர் அருணன். "தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பினால், மத்திய அரசு கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்ட இடங்களின் அறிக்கைகளை வெளியிட்டு, இந்திய வரலாற்றின் வரிசையை ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருந்து தொடங்காமல், தமிழகத்தில் இருந்து தொடங்கிகிறது என்று அறிவிக்கட்டும்," என்கிறார் அவர். பனாரஸ் இந்து பல்கலைகழகம் என்ன சொல்கிறது? காசி தமிழ் சங்கமத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழத்தின் பங்கு இருப்பதாக அரசின் செய்தி குறிப்பு தெரிவித்தாலும், அங்குள்ள இந்திய மொழிகள் துறை ஆசிரியர்களிடம் இந்த நிகழ்வு குறித்து கேட்டோம். ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர், ''இதுவரை அதிகாரபூர்வமாக எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. எங்களின் பங்களிப்பு என்ன என்றும் தெரியவில்லை. ஒரு மாதம் இங்கு நிகழ்வுகள் நடக்கும் என செய்திகளில் வந்த தகவல்கள் மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். நாங்கள் எந்த வகையில் இந்த நிகழ்வில் பங்கேற்கப்போம் என்று தெரியவில்லை. இந்த நிகழ்வு முழுமையாக அரசு நிகழ்வாக இல்லாமல், அரசியல் நிகழ்வாகத்தான் நடத்தப்படுகிறது,'' என்கிறார். பனாரஸ் பல்கலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு குறித்த முன்னெடுப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் சென்னையில் உள்ள ஐஐடியில் தான் தொடக்கவிழா நடைபெற்றது என்றும் கூறுகிறார் அந்த பேராசிரியர். ' 'ஐஐடி நிர்வாகம் காசி தமிழ் சங்கமத்திற்கான இணைய தளத்தை உருவாகியுள்ளது. இந்த நிகழ்வில் 12 குழுக்கள் உருவாக்கப்பட்டு, இதில் பங்கெடுக்க நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நடவடிக்கைகள் எதிலும் எங்களுடைய கருத்துக்கள் கேட்கப்படவில்லை,'' என்கிறார் அந்த பேராசிரியர். காசி தமிழ் சங்கமம் அரசியல் நிகழ்வா? பட மூலாதாரம்,@NARAYANANTBJP/TWITTER படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி, பாஜகவின் மாநில துணைத் தலைவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் தேவை குறித்து கேட்டபோது, ''இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் போது, பல மொழிகள் பேசினாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை தன்மையை மேலும் ஊக்குவிக்க நடக்கும் நிகழ்வுகளில் காசி தமிழ் சங்கமமும் ஒன்றாகும்," என்கிறார். "இந்த நிகழ்வில் பங்குபெறும் 2,500 நபர்களும் ஒற்றுமை தூதுவர்களாக செயல்படுவார்கள். காசியில் உள்ளவர்கள் தமிழகத்தின் பெருமையை அறிந்துகொள்ளவர்கள். தமிழர்கள் காசிக்கு நேரடியாக சென்று அங்குள்ள அனுபவத்தை பெறுவார்கள் என்பதால், இரு பகுதிகளில் உள்ள மக்கள் ஒற்றுமையை உணர்வார்கள். தமிழ்மொழியின் சிறப்பை மெருகேத்தும் நிகழ்வாக இது அமைகிறது,'' என்கிறார் அவர். காசியில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுவது குறித்து கேட்டபோது, ''தமிழத்திற்கும் காசிக்கும் உள்ள பாரம்பரிய தொடர்பை இன்றைய தலைமுறையிடம் கொண்டுசேர்க்க போகிறோம். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்த நகரம் ஒரு நெருங்கிய நகரம் என்ற உணர்வு தொன்றுதொட்டு இருக்கிறது. நாங்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல, நாத்திகவாதியான ஈவெரா பெரியார் கூட தன்னுடைய வாழ்நாளில் ஒரு சில மாதங்கள் காசியில் கழித்துள்ளார் என்பது வரலாறு என்பதை இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் பலரும் அறிந்தவர்கள்தான். அரசியல் ஆதாயத்திற்காக பேசுபவர்கள் நாங்கள் அல்ல. மொழி அரசியல் செய்பவர்கள் திமுகவினர்தான்,''என்கிறார் நாராயணன். https://www.bbc.com/tamil/india-63485721
  23. வெற்றி பெற்றா பிறகு வங்கிக் கணக்கில கொட்டப்போகிறது.🤫
  24. நிதி அமைச்சு, மத்திய வங்கிக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் 03 NOV, 2022 | 09:44 PM இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திறைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று (03) இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கால நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இலங்கை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மட்ட அனுமதியை பெறுவதும் மற்றொரு முக்கிய ஒரு மைல்கல்லாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இங்கு கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, “இலங்கை ஒரு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இந்தச் செயல்பாட்டில் தொடர்ந்து ஆதரவளிக்கும் எங்கள் இருதரப்பு பங்காளிகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் எமது இலக்கை மையமாகக்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களும் அரச கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் என்பதோடு, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும் நமது அபிவிருத்தி செயல்முறையை மீண்டும் தொடங்கவும் உதவும். இந்த அரசாங்கம் சமூக மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. நமது குடிமக்கள் முக்கியமான பொதுமக்கள் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. இங்கு உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்கள் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலும் இலங்கையின் நிதிப் பாதுகாப்பை மீட்டெடுக்கும். இலங்கையின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்ற இந்த ஆக்கபூர்வமான கூட்டத்தில் எங்களுடன் இணைந்ததற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். 2022 செப்டெம்பர் 01 ஆம் திகதி, இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆதரவுடன் நான்கு வருட வேலைத்திட்டத்திற்காக அதிகாரிகள் மட்ட இணக்கம் எட்டப்பட்டது. 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமானது பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மீட்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே வேளையில் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்கும் மற்றும் இலங்கையின் நிலைத்தன்மை மற்றும் நிதி கட்டமைப்பை பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையில் இலக்கு ரீதியான சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது: இதில் முதல் விடயம் நிதி சீர்திருத்தம். வருமான நிர்வாக சீர்திருத்தங்களுடன் இணைந்து, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து எழும் நிதி அபாயங்களைக் குறைத்து, மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு விலைப் பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதுடன் வருமான இலக்கு அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிடுகிறது. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க, தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேம்படுத்துவதும் இதில் அடங்கும். இரண்டாவது விடயம், அரச கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதாகும். இலங்கையின் கடன் நிலைமை சர்வதேச நாணய நிதியத்தால் நீடிக்க முடியாததாகக் கருதப்பட்டு, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. மூன்றாவதாக, விலை ஸ்திரத்தன்மையை வழமை நிலைக்கு கொண்டு வருவது மற்றும் வெளிப்புற பாதுகாப்பை மீண்டும் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனமாக செயற்படுவதை வலுப்படுத்துவதற்கான கொள்கைக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் சட்டம் ஒன்று விரைவில் அமைச்சரவையின் அனுமதியை பெற்று நிறைவேற்றப்பட உள்ளது. வேலைத்திட்டத்தின் நான்காவது விடயம், இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முக்கிய நிபந்தனையான நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகும். இலங்கையின் வங்கி முறைமை போதுமான அளவு மூலதனமாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் அதன் அரச வங்கிகளின் தாங்கும் தன்மை மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலமும் இது அடையப்படும். இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, இலங்கையின் சட்ட கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டு வருதோடு, இலங்கையின் வளர்ச்சித் திறனை மேம்படுத்த விரிவான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை செயல்படுத்தும். ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். https://www.virakesari.lk/article/139067
  25. பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு By T. SARANYA 03 NOV, 2022 | 04:02 PM 5 பொருட்களின் விலைகளை இன்று வியாழக்கிழமை (03) முதல் குறைத்துள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோ 96 ரூபாவினாலும் டின் மீன் (உள்ளூர்) 105 ரூபாவினாலும் நெத்தலி 200 ரூபாவினாலும் பருப்பு கிலோ 17 ரூபாவினாலும் வெள்ளை சீனி 22 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோதுமை மா கிலோவின் புதிய விலை 279 ரூபாவாகவும், டின் மீன் (உள்ளூர்) விலை 585 ரூபாவாகவும் நெத்தலி ஒரு கிலோ 1,300 ரூபாவாகவும் பருப்பு கிலோ 398 ரூபாவாகவும் வெள்ளை சீனி கிலோ 238 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/139035
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.