Everything posted by ஏராளன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பெரிய பூனைக்குட்டி வளர்க்கிறாரோ?!
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் கோரிக்கையின் பேரில், ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, தினேஷ் ஷாஃப்டரின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர். சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தினேஷ் ஷாஃப்டர் தனது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். பின்னர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவே உயிரிழந்துள்ளார். https://thinakkural.lk/article/254740
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஓடர் குடுக்கிற கணவர்களுக்கு பயம் வரும் தானே?! காசையும் குடுத்து ____ இழக்கலாமா?
-
சிரிக்கலாம் வாங்க
வட்டுக்கோட்டைப் பக்கம் போறவை கவனமா போங்கோ! இப்ப தான் அப்பா நாயிடம் கடி வாங்கி வந்திருக்கிறார். ஊசி போடுவதென்றால் நாய்க்கு ஊசி போட்ட அட்டையை கொண்டு வரட்டாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதைத்தான் பனங்காய் சூப்புறதா?!
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது. ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரை தோண்டி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக, இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜெயசூரிய அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்படி, இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது. பெப்ரவரி 17ஆம் திகதி, கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவொன்றை நியமிப்பதற்காக விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழு பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/254547
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
நலன்புரி கொடுப்பனவு திட்டம் : பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பது சந்தேகத்துக்குரியது - இராதாகிருஸ்ணன் Published By: DIGITAL DESK 3 12 MAY, 2023 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 17 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற நியதி காணப்படும் போது மலையக மக்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே இவ்விடயத்தில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான சிறந்த நலன்புரி கொடுப்பனவு திட்டமாக அஷ்வசும் புதிய செயற்திட்டம் காணப்படுகிறது. பல இலட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் ஊடாக நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6 ஆயிரம் ரூபா குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே அரச நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டன.இந்த தொகை தற்போது 17,772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 46 சதவீத அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மாத வருமானம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை மதிப்பிட்டு ஒரு குடும்பத்தின் நிலையை மதிப்பிட முடியும். மாதம் 17 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் பெறும் தரப்பினருக்கு அல்லது குடும்பத்துக்கு இந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வரையறை காணப்படுவதால் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவிலும் மலையக மக்களில் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.குடும்ப அடிப்படையில் மலையக மக்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்குமா என்பதை நிதியமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயத்துறை வீழ்ச்சி,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த நலன்புரி திட்டத்துக்கு உலக வங்கி வழங்குகிறது.ஆகவே இந்த நிதி தொகை நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். நுவரெலியா வைத்தியசாலையில் அண்மையில் 34 பேருக்கு கண் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவர்களில் 10 பேருக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/155170
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அக்கா அந்த நடைமுறைகள் கொஞ்ச காலம் எடுக்கும், உறுதியில் பிரச்சனைகள் இல்லையா என்பதை பிரதேச சபையின் சட்டத்தரணி ஆராய்ந்து தான் பெயர் மாற்ற அனுமதி தருவார்கள். தோம்பு எல்லாம் சரி பார்த்திருப்பார்களே?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் அனுதாபத்திற்காக நாடகமாடினேன்- மே 9 சம்பவம் குறித்து மகிந்த ஹகந்தகம 11 MAY, 2023 | 11:50 AM கடந்தவருடம் ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலிற்குள்ளான கொழும்பு மாநாகரசபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த ஹகந்தகம தான்அவ்வேளை தன்மீது அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காகவும் அங்கிருந்து தப்புவதற்காகவும் நடித்ததாக தெரிவித்துள்ளார். கடந்தவருடம் மே 9 ம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள அவர் என்னை ஒரு அரசியல் தலைவராக மாற்றியமைக்காக அரகலயவிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். அரகலயவின் பின்னர் இடம்பெற்ற விடயங்களால் நான் தற்போது பிரபலமாகிவிட்டேன் எனக்கு தற்போது விளம்பரம் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்று நடந்தது ஒரு சதி என தெரிவித்துள்ள அவர் பேரவாவியில் குளிப்பது எனக்கு புதிய விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/155028
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி செய்யப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். தேடலின் பின் செய்திகளை இணைக்க முடிகிறது. நிர்வாகிகளுக்கு நன்றி.
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
33 இலட்சம் பேருக்கு ஜூலை முதல் நலன்புரிக் கொடுப்பனவு - மிக வறியவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா வழங்க தீர்மானம் Published By: DIGITAL DESK 5 10 MAY, 2023 | 08:50 PM (எம்.மனோசித்ரா) நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும், பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன. தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/154972
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஆசை தான், ஆனால் வாய்ப்புகள் குறைவு.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வீடு இல்லாமல் வெறும் வளவு. இப்போது இன்னொரு பெரியம்மாவை வீடுகட்டி இருக்கவிட்டிருக்கு. எங்களது அம்மாவின் மூத்த அண்ணாவின் இரண்டு பிள்ளைகள் ஒரு தொடர்பும் இல்லை, அங்கே பிறந்து வளர்ந்தவர்கள். இடைக்கிடை வந்து தங்கிப் போனால் தானே நிலமை தெரியும். சொந்த தம்பியார் எடுத்தது பரவாயில்லை யாரும் உரிமை கோராதவிடத்து. வட்டுக்கோட்டையில் சம்பந்தமே இல்லாதவர்கள் எடுத்துவிட்டார்கள், இப்போது சட்டத்தரணி ஊடாக உரிமைகோரல் நடக்கிறது உரித்துடையவர்களால்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இந்திரவிழாவிற்கு ஒரு முறை நண்பர்களோட போய் கதிரை ஒன்றில் இருத்திவிட்டு அவங்கள் சுத்தப் போயிட்டாங்கள். கூட்டமும் நமக்கு ஆகாது. அதற்கு பிறகு போவதில்லை. புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வீடு வைத்திருப்பது ஏதோ ஒரு வகையில் தாயகத்திற்கு பயனே. உங்கள் சந்ததிகளையும் தாயகத்தோடு தொடர்பில் வையுங்கள். மலேசிய அம்மம்மாவின் சீதன வளவை இன்றுவரை விற்காது வைத்துள்ளார்கள் பிள்ளைகள். தற்செயலாக அங்கு வசிக்க முடியாதவிடத்து இங்கு வந்து வாழலாம் என்ற எண்ணத்தில்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகம் கவனிக்கலையோ என கவலைப்பட்டேன், நன்றி இணையவன் அண்ணை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணை அங்கயும் இதே பெயரில் போவினமோ?!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணை நம்மடையாக்கள் ஆபிரிக்கா வரை சேவை விரிவு செய்துவிட்டார்களா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தேங்காய் விழுந்து மயக்கம் வந்து ஆளும் விழுந்திருக்கும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நான் அரைமயக்கத்தில நினைவு வாறத எழுதிறன். 2002/2003 காலத்தில கொஞ்சநாள் தொழிநுட்ப கல்லூரிக்கு போனனான். அப்ப காலைல 20ரூபா கொண்டு போனால் 10இடியப்பம் 10ரூபா, உழுந்துவடை 5ரூபா, பால் தேநீர் 5ரூபா. இப்ப 10 இடியப்பம் 120ரூபா, உழுந்துவடை 50ரூபா, பால் தேநீர் 80ரூபா. மொத்தச் செலவு 250ரூபா.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்போது ஐம்பது சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கும் மதிப்பு இல்லை.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அரச மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் காத்திருப்பு, அலைக்கழிப்பு, நேரமுகாமைத்துவம் இன்மை என பல குறைபாடுகள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் அவற்றையே நாடுகின்றனர். இப்ப வசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளையே நாடுகின்றனர். அங்கே சிறந்த வைத்திய நிபுணர்களை இலகுவில் சந்தித்து வைத்தியம் செய்யலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த தகராறு பெரிய பிரச்சனை இல்லை அண்ணா! ஆனால் புதிய செய்திகளை இணைக்க முன் அது இணைக்கப்பட்டுள்ளதா என தேடிப் பார்த்துவிட்டு இணைக்க @நிழலிஅண்ணை சொன்னவர். வீணாக யாழுக்கு பாரத்தை கொடுக்காமல் இருக்கத் தான் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
@இணையவன், @நிழலி, @நியானி, @nunaviIan நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். தேடலை சொடுக்க கீழுள்ள படத்தில் இருப்பது போல் வருகிறது. இது முன்னரும் வருவது பின்பு சரி செய்யப்படுவது. இதனால் ஒரே செய்தி திரும்பத் திரும்ப பதியப்படுகிறது. நேற்றில் இருந்து இப்போது வரையான ஊர்ப்புதினச் செய்திகளைக் கவனியுங்கோ.
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
சமூக நலச்சட்டம் வெள்ளியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டி Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:51 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பொருளாதார நிலையை பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய சமூக நலச்சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். குறித்த சட்ட மூலம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் , எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமூக நலச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அத்தோடு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கு பொறுத்தமானவர்களும் இதன் ஊடாக தெரிவு செய்யப்படுவர். அதே போன்று எவரேனுமொருவர் இதனைப் பெற தகுதியுடையவராக இருந்தும் , அவருக்கு அவை கிடைக்கப் பெறாவிட்டால் மேன்முறையீடு செய்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் இதில் காணப்படுகிறது. 1945ஆம் ஆண்டு முதல் நாட்டில் சமூக நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறிருந்தும் தற்போது நாட்டிலுள்ள மொத்த குடும்பங்களில் 50 சதவீதமானோர் இவற்றை எதிர்பார்த்துள்ளனர். எனவே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்களை குறிப்பிட்டவொரு காலப்பகுதியில் மாத்திரம் நடைமுறைப்படுத்தி , குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே இதன் இலக்காகும். மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 15 000 ரூபாவும் , அதற்கு அடுத்த கட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு 8500 ரூபாவும் வழங்கப்படும். இந்த நலன்புரி தொகையைப் பெறும் குடும்பங்களை 3 ஆண்டுகளுக்குள் அரசாங்கத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்க்காத குடும்பங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/154658
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அது சரி.