Everything posted by ஏராளன்
-
மன்னாரில் பறவைகள் கடத்தல்; இருவர் கைது
Published By: Digital Desk 3 12 Sep, 2025 | 11:35 AM மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர். கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். பறவைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224884
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
அததெரண கருத்துப்படம்
-
ஹெந்தலவிலுள்ள ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜப்பான் தூதுவர் விஜயம்
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 10:46 AM வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார். 1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும். வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/224878
-
கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்
இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது. சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும். இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்றமை ஊடாக "ஊழல்" என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmfgh7p9i00coqplpp6l3wrut
-
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயல்பட்டதாக பொலிஸார் தகவல்
12 Sep, 2025 | 10:08 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224874
-
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
நேபாளத்தின் 'ஜென் Z' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இப்போது வருந்துவது ஏன் - கள ஆய்வு 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது – கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 17 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது. மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது போல் தோன்றியது. ஜென் Z போராட்டங்களின் போது சேதமடையாமல் இருந்த ஒரே அரசு நிறுவனம், இந்த விமான நிலையம்தான் என்று சொல்லலாம். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், ஒரு பெரிய புயல் கடந்த பின்பு நிலவும் அமைதியையைத்தான் உணர்ந்தோம். இடையில், எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லும் விதமாக ராணுவ வாகனங்கள் சாலையில் தென்பட்டன. முழு நகரத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இரண்டு நாட்கள் நடந்த போராட்டங்களில் நேபாள அரசாங்கம் சரணடைந்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தலைவர்கள் ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல், நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் பல இடங்களில் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டது. அப்போது நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபோது, அவர்கள் எங்களை அனுமதித்தனர். என் அருகில் அமர்ந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், "ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நேபாளத்திற்கு வருக" என்றார். செவ்வாய்க்கிழமை நேபாள நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. குறிவைக்கப்பட்டுள்ள ஊடகங்கள் 'ஜென் Z' போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது. இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது. 2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது. ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர். நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், 'ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை' என்றார். காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இடைக்கால அரசாங்கம் குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்திய ஊடகங்கள் மீது வெளிப்படும் கோபம் சுமார் 48 வயதான தீபக் ஆச்சார்யா, தனது மகனுடன் எரிந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நின்றிருந்தார். நாங்கள் சில பெண்களிடம் பேச முயன்றபோது, அவர்கள் இந்தியைக் கேட்டவுடன் கோபமடைந்துவிட்டனர். அப்போது தீபக் ஆங்கிலத்தில்,'தயவுசெய்து நிறுத்துங்கள். இந்திய ஊடகங்களும் மோதி பிரசாரத்தின் ஓர் பகுதி' என்று கூறினார். அவர் அதை மிக உரத்த குரலில் சொன்னதால், அருகிலிருந்தவர்கள் கூட எங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினர். தீபக்கின் கோபத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், அவருடன் நீண்ட உரையாடலும் நடந்தது. "இந்திய ஊடகங்கள் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு எங்களது ஜனநாயகத்தையும் சிதைக்கின்றன. யார் பிரதமராக வேண்டும் என்பதை நேபாள மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் சுஷிலா கார்கி பிரதமராவார் என்று சொல்கின்றன. மோதியின் ஆட்சி நேபாளத்திலும் இருப்பது போல இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இந்திய அரசாங்கமோ, அங்குள்ள ஊடகங்களோ நேபாளத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாகப் பார்க்கவில்லை. இங்கே உள்ள இந்திய ஊடக செய்தியாளர்களின் பின்னணியைப் பாருங்கள், எல்லோரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் தொடர்புடையவர்கள்தான்" என்று தீபக் கூறினார். இது, தீபக் ஆச்சார்யாவின் கோபம் மட்டும் அல்ல, இந்திய ஊடகங்களுக்கு எதிரான அதிருப்தி நேபாளத்தில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சதித் திட்டங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதில் அமெரிக்காவின் பெயரும் அடிபடுகிறது. காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டிடமும் எரிந்து நாசமானது. தீர்வை விட அதிகமாகக் காணப்படும் குழப்பம் நாங்கள் நாடாளுமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் வழங்கத் தொடங்கினர். ஒருவர் தன்னை கிஷன் ரௌனியர் என்றும், மற்றொருவர் சோமன் தமாங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். 'ஏன் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கிறீர்கள்'? என்று கேட்டபோது, "அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். எங்களிடம் அதிக பணம் இல்லை, ஆனாலும் நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு சலூன் நடத்துகிறோம்" என்றார் தமங். கிஷன் ரௌனியர் ஒரு மாதேசி இந்து மற்றும் தமாங் ஒரு பஹாடி பௌத்தர். இருவரும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். அதிகமான சேதம் ஏற்பட்டதற்காக கிஷன் இப்போது வருந்துகிறார். "ஒவ்வொரு அரசு கட்டடமும் தீக்கிரையாக்கப்பட்டது. இது பெரிதாகிவிட்டது. இப்போது நாங்கள் வருந்துகிறோம். அடுத்து வரும் அரசு, ஊழல் இல்லாததாக இருக்குமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை," என்று கிஷன் கூறினார். ஜென் Z போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இப்போது கட்டடங்களை எரிப்பது தவறு என்று நினைக்கிறார்கள். திங்களன்று 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலை, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சற்று தளர்ந்தது போல தெரிகிறது. இருப்பினும், நேபாளத்தின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டடத்தின் முன் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த அந்தக் கட்டடத்தின் ஜன்னல்களிலிருந்து இப்போது புகை மட்டும் வெளியேறுகிறது. புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நேபாள மாவட்ட அலுவலகம். அங்கிருந்து இன்னும் புகை எழுகிறது. நேபாள அரசியலின் திருப்புமுனை நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர். மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார். "அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்" என்று நிராஜன் கூறுகிறார். அந்த 'மற்றவர்கள்' யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள். ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது. பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் 'ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது. இருவரும் வெளிப்படையாகவே, 'முடியாட்சி முறை, இந்துத் தேசம்' என்றனர். ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார். காத்மாண்டுவில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு சர்மா. இவர், 'ஜென் z ' போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள். இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள். நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை. வியாழக்கிழமை, 'ஜென் Z' போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை. அடுத்து என்ன? 239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அதை இனி எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. நிலத்தால் சூழப்பட்ட நாடான நேபாளம், இன்று தனது ஜனநாயகமும் பல பக்கங்களில் இருந்து நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டதைப் போலவே காட்சியளிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9ndqqyengo
-
பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல : பெரியோர்களுக்கு அறிவுரை கூறுகிறார் பிரதமர் ஹரிணி
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 09:52 AM ( வீ. பிரியதர்சன் ) பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார். தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய சமூகத் தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து பாதுகாப்பது நமது பணியல்ல, மாறாக, அதனை புத்திசாலித்தனமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மாற்ற அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். இலங்கையின் கல்வி முறையை அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, மற்றும் உறுதியானதாக மாற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு பல்துறை சார்ந்த பணிக்குழுவை அமைத்துள்ளதை வலியுறுத்தினார். இந்த பணிக்குழுவில் அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224872
-
ஸ்வர்ணலதாவின் 10 சிறந்த பாடல்கள் - பட்டியலிட்ட பி.எச்.அப்துல் ஹமீத்
ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 11 செப்டெம்பர் 2025 தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா. கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார். ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார். பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பிடித்த 10 ஸ்வர்ணலதா பாடல்களை இலங்கையை சேர்ந்த மூத்த மற்றும் புகழ்வாய்ந்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் பிபிசி தமிழுக்கு பட்டியலிட்டார். இதில் அவர் எழுதிய பாடலும் இடம்பெற்றுள்ளது. 1. போறாளே பொன்னுத் தாயி Rajshri Tamil ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல். 1994-ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இந்த பாடல் வெளியாகியிருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியமைக்காக ஸ்வர்ணலதாவிற்கு 1994-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருதும், இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரது பாடல்கள் விருப்ப பட்டியலில் உள்ளமை விசேட அம்சமாகும். 2. மாலையில் யாரோ Ayngaran பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது. 1990-ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ''மாலையில் யாரோ'' பாடலும் பலரது விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது. வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார். திரையில் பானுப்பிரியாவின் காட்சிகளில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு, காட்சிகளை விடவும், ஸ்வர்ணலதாவின் மெல்லிய குரலே உயிரை வழங்கியிருந்தது. 3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் FB/KSChithra 2010-ஆம் ஆண்டு செப். 12-ஆம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்(வலம்). ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் வெளியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. கே.ஜே.யேசுதாஸின் குரலில் தனியாக இந்த பாடல் வெளியாகியிருந்ததுடன், ஸ்வர்ணலதாவின் குரலில் வேறொரு பாடல் தனியாக உருவாக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல், அந்த காலப் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தது. 4. என்னுள்ளே என்னுள்ளே Sun Music என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி. 1993-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கான வரிகள் வாலி எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலித்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வரவேற்பு காணப்படுகின்றது. 5. ஹய் ராமா 1995ம் ஆண்டு வெளிவந்த படமே ரங்கீலா. இந்த படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார். ரங்கீலா திரைப்படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். ஸ்வர்ணலதாவின் பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கும் இன்று வரை முக்கிய இடம் இருக்கின்றது என்பதே உண்மை. 6. பூங்காற்றிலே Track Musics India 'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல். உயிரே திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் வெளியான பாடல்கள் வரிசையில் பூங்காற்றிலே பாடல் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. உன்னிமேனன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார். மணிரத்னத்தின் இயக்கத்தின் 1998-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. 7. காதல் எனும் தேர்வெழுதி API Tamil Songs காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார். காதலர் தினம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அறிமுக கதாநாயகன் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரின் நடிப்பில், கதிரின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பிடித்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது. அனைத்து பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்ததுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் வெளியான ''காதல் எனும் தேர்வெழுதி'' பாடல் இன்றும் இளைஞர் யுவதிகளின் உதடுகளில் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு ஈடாக ஸ்வர்ணலதாவின் குரலும் அமைந்திருந்த அதேவேளை, இந்த பாடலின் காட்சிகளுக்கு அந்த குரல்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது மிகையாகாது. 8. திருமண மலர்கள் Star Hits ஜோதிகாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார். அஜித் மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே பூவெல்லாம் உன் வாசம். குடும்ப நண்பர்கள் எப்படி காதல்களாக மாறி இணைகின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பிடித்திருந்ததுடன், அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடலாக திருமண மலர்கள் தருவாயா பாடல் அமைந்துள்ளது. ஜோதிகாவின் காட்சிகளுக்கு, ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வாறே இணைந்ததாக காணப்படுவதுடன், அந்த காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார். 9. மயிலிறகே மயிலிறகே 2002- ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே தென்காசி பட்டணம். இந்த திரைப்படத்தில் மயிலிறகே மயிலிறகே பாடலை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடலுக்கு பீட்டர்ஸ் இசையமைத்திருந்ததுடன்,பாடலுக்கான வரவேற்பு இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றது. 10. சிஞ்ஞோரே சிஞ்ஞோரே API Tamil Songs 'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், இலங்கை போர் களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு திரைப்படமாக காணப்படுகின்றது. மணிரத்னத்தின் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், பி.எச்.அப்துல் ஹமீத்திற்கு இந்த பாடல் அவரது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாக விளங்குகின்றது. காரணம் அவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். தமிழ் வரிகளுடன், சிங்கள வரிகள் அடங்களாக எழுதப்பட்ட இந்த பாடலை, ஸ்வர்ணலதாவின் குரலிலும் கேட்கும் போது, அனைவருக்குமே ஆச்சரியம் தருகின்றது. பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய சிஞ்ஞோரே சிஞ்ஞோரே பாடலுக்கு ஸ்வர்ணலதா குரல் கொடுத்திருந்தார் ஸ்வர்ணலதா உலகை விட்டு விடை பெற்று 15 வருடங்கள் இந்திய சினிமாத்துறையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஸ்வர்ணலதா, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது 37வது வயதில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 1987-ஆம் ஆண்டு இசை ரசிகர்களுக்கு தனது குரலில் விருந்து வழங்கிய ஸ்வர்ணலதாவின் குரல் 2010-ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும், அந்த குரலின் பதிவுகள் என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07vkydy3jyo
-
iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?
12 செப்டெம்பர் 2025, 04:48 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8jvn60ym4o
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
நடத்துங்கோ அண்ணை, பங்கேற்பாளர்கள் வருவினம்.
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
உப்பிடித்தான் 2015 ல ஹெலில போய் இறங்கினவர், 2025 ல கார்ல போயிருக்கிறார்.
-
இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?
நேபாளத்தில் கொந்தளிப்பு இந்தியாவின் நெருக்கடியை அதிகரிப்பது ஏன்? Getty Images இந்தியாவும் நேபாளமும் வரலாற்று ரீதியாகப் பகிரப்பட்ட வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன . கட்டுரை தகவல் அன்பரசன் எத்திராஜன் உலக விவகார செய்தியாளர் 11 செப்டெம்பர் 2025, 13:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சமீபத்திய ஆண்டுகளில் எழுச்சியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது நெருங்கிய அண்டை நாடாக நேபாளம் மாறியுள்ளது. சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினருடனான மோதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சிக்கிறது. நேபாளத்தில் நடந்த சம்பவங்கள், கடந்த ஆண்டு வங்கதேசத்தையும், 2022 இல் இலங்கையையும் ஆட்டிப்படைத்த கொந்தளிப்பை பலருக்கும் நினைவூட்டின. தெற்காசியாவில் வங்கதேசமும் இலங்கையும் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் தொடர்புகள், பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த உறவுகளின் காரணமாக நேபாளத்துடனான இந்தியாவின் உறவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,750 கிலோமீட்டர் (466 மைல்) க்கும் அதிகமான எல்லையை, நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார். "நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதைப் பிளக்கிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது," என்று மோதி செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். Getty Images நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். "நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிக முக்கியமானவை" என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோதி, "நேபாளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரும் அமைதியை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். செவ்வாயன்று, சூழலை மதிப்பீடு செய்வதற்காக தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கும் மோதி தலைமையேற்றார். 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் போலவே, நேபாளத்தில் ஏற்பட்ட இச்சம்பவமும் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, டெல்லிக்குப் பயணம் செய்ய நேபாள பிரதமர் ஒலி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ராஜினாமா செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேபாளம் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவை கவலையில் ஆழ்த்துகிறது. "சீனாவின் பெரிய ராணுவ தளமான Western Theatre Command நேபாளத்தின் மறுபக்கத்தில்தான் உள்ளது. இந்தோ - கங்கை சமவெளிகளுக்கான (வட இந்தியாவின் சமவெளி) நேரடி வழி நேபாளம்தான்," என்று நேபாளம் தொடர்பான நிபுணரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா பிபிசி-க்கு தெரிவித்தார். Getty Images நேபாள கூர்க்காக்கள் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்தியாவில் நேபாளத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் இந்த அமைதியின்மை பாதிக்கிறது. இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் நேபாளிகள் வேலை செய்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நேபாளம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எல்லையைத் தாண்டிய சமூகங்கள் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்குமிடையே மக்கள் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறார்கள். 1950 ஒப்பந்தத்தின் கீழ் நேபாளிகள் இந்தியாவில் எந்தத் தடையும் இன்றி வேலை செய்யலாம். இந்த ஏற்பாடு பூட்டானுடன் சேர்த்து இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மட்டுமே உள்ளது. மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 32,000 புகழ்பெற்ற கூர்க்கா வீரர்கள், பல ஆண்டுகளாக அமலில் உள்ள சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். "எல்லை திறந்திருப்பதால், சமூகங்கள் ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றன. இரு தரப்பிலும் உள்ள குடும்பங்கள் தினமும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன" என்கிறார் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா தப்லியால். இமயமலைக்கு அப்பால் அமைந்துள்ள முக்திநாத் கோயில் உட்பட பல முக்கிய இந்து புனிதத் தலங்களும் நேபாளத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்து யாத்திரிகர்கள் இந்தக் கோவிலுக்குச் செல்கின்றனர். இதற்கிடையில், நேபாளம் இந்திய ஏற்றுமதிகளை குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியா– நேபாளத்தின் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. Getty Images நேபாளம் முக்திநாத் கோயில் உட்பட பல முக்கியமான இந்து புனிதத் தலங்களைக் கொண்டுள்ளது. புதன்கிழமை காத்மாண்டுவில் ஓரளவு அமைதி திரும்பியிருந்தாலும், நாட்டை ஆண்ட மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் மீதும் போராட்டக்காரர்களிடையே கோபம் நிலவி வருவதால், இந்தியா மிக எச்சரிக்கையுடன் ஒரு ராஜ்ஜிய சமநிலையைப் பேண வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு, ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN–UML), ஷேர் பகதூர் தியூபாவின் நேபாள காங்கிரஸ், பிரசந்தா (புஷ்ப கமல் தஹால்) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய மூன்று கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இமயமலையால் பெரிதும் சூழப்பட்ட நாடான நேபாளத்தின் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தை முன்னிட்டு, இந்தியாவும் சீனாவும் அங்குள்ள செல்வாக்குக்காக போட்டியிடுகின்றன. இதனால், வலிமையான இந்த இரண்டு ஆசிய நாடுகளும் நேபாளத்தின் உள்நாட்டுக் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒலிக்குப் பதிலாக எந்த விதமான நிர்வாகம் உருவாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. புதிய அரசாங்கத்தின் வடிவம் நிச்சயமற்றதாக இருப்பதால், "இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்" என்றும் "நேபாளத்தில் வங்கதேசம் போன்ற இன்னொரு சூழ்நிலை அவர்கள் விரும்பவில்லை"என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார். வங்கதேசத்தின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது. ஆனால், ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் வழங்கிய முடிவால், தற்போதைய வங்கதேச இடைக்கால நிர்வாகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் முன்பே சில வேறுபாடுகள் இருந்துள்ளன. அவற்றையும் இப்போது மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் நேபாளம் உரிமை கோரிய பகுதிகளை தனது வரைபடத்தில் இந்தியா இணைத்தது. இதனால் நேபாளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பின்னர், அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கொண்ட தனது சொந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராஜ்ஜிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்தன. சமீபத்தில், நேபாளம் உரிமை கோரும் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லிபுலேக் கணவாயில் இந்தியா – சீனா வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த மாதம் சீனாவுக்கு சென்றிருந்தபோது, இந்தக் கணவாயை வர்த்தகப் பாதையாக பயன்படுத்துவதை எதிர்த்து, சீனத் தலைமையிடம் ஓலி இந்த பிரச்னையை எழுப்பியிருந்தார். எந்தவொரு முரண்பாடுகளையும் சரி செய்ய இந்தியா புதிய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். மேலும், தங்கள் அரசியல் அமைப்பின் மீது கோபமாக இருக்கும் நேபாள இளைஞர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். "நேபாளத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நேபாள மாணவர்களுக்கு உதவித் திட்டங்களை அதிகரிப்பது, வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்," என்று பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார். இந்நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருப்பது, அண்டை நாடுகளில் உருவாகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உறுதியின்மையை கையாள்வதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா ஏற்கனவே அண்டை நாடுகளுடன் சந்தித்து வரும் சிக்கல்களின் நடுவே வெடித்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன நிலையில், ஒருபுறம் வங்கதேசத்துடனான உறவுகள் பதற்றத்தில் உள்ளன, மறுபுறம் மியான்மர் உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது. "இந்தியா தனது பெரும் அதிகாரக் கனவுகளில் கவனம் செலுத்தி, அண்டை நாடுகளை புறக்கணித்துவிட்டது. ஆனால் அந்த இலக்கை அடைய விரும்பினால், முதலில் ஒரு பாதுகாப்பான, நிலையான அண்டை நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் அசோக் மேத்தா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lx0rjkpk9o
-
வெளிநாடுகளில் இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது
மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது Published By: Vishnu 11 Sep, 2025 | 06:33 PM இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: "இந்த குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என்றார். இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலக குற்றங்களை ஒழிக்க பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. https://www.virakesari.lk/article/224853
-
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !
இலங்கை: திருட வந்ததாக கருதி தாக்கப்பட்ட இளைஞர் தற்கொலை - என்ன நடந்தது? LOGESH ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 செப்டெம்பர் 2025 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக கருதி பிரதேச மக்களினால் தாக்குதல் நடத்தப்பட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டி - புசல்லாவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஊடகப் பிரிவு பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றது. எனினும், இந்த இளைஞரின் உயிரிழப்புக்கு தாக்குதல் சம்பவமா அல்லது சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டமை காரணமா என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது. நடந்தது என்ன? மலையகத்தின் புசல்லாவை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி), கொழும்புவில் வேலை செய்து வந்துள்ளார். ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு கடந்த 6ம் தேதி இரவு கொழும்புவிலிருந்து வெலிமடை நோக்கி பயணிக்கும் பேருந்தில் வருகைத் தந்துள்ளதாக அவரது நண்பரான ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இவ்வாறு வருகைத் தந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், பேருந்தில் அசந்து தூங்கியுள்ளார்.'' Getty Images சித்தரிப்புப் படம் ''தனது சொந்த ஊரான புசல்லாவை தாண்டி, ரம்பொடை எனும் இடத்தில் வைத்தே ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் எழுந்துள்ளதுடன், தான் இறங்கும் இடத்தை தாண்டி பயணித்துள்ளமையை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரம்பொடை பகுதியில் இறங்கிய அவர், தனது உறவினர் வீடொன்றை நோக்கி சென்றுள்ளார்.'' என்கிறார் ஸ்ரீகுமார் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது உறவினர் வீட்டை நோக்கி சென்ற ரவிச்சந்திரன் புவனேஸ்வரனுக்கு, உறவினர் வீட்டை தேடிக்கொள்ள முடியாத நிலையில், அவர் வேறொரு வீட்டை தட்டியுள்ளார் என்கிறார் ஸ்ரீகுமார். ''அந்த வீட்டிலுள்ளவர்களிடம் தனது உறவினர்கள் குறித்து வினவிய நிலையில், அவர்கள் உறவினர்கள் என கூறப்படும் நபர்களை அழைத்து வினவியுள்ளனர். எனினும், உறவினர்கள் என கூறப்படுவோர், ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தெரியாது என கூறிய நிலையில், பிரதேச மக்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை திருடன் என கூறி அவரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.'' என்கிறார் ஸ்ரீகுமார். இவ்வாறு பிரதேச மக்கள் தாக்கிய நிலையில், அங்குள்ள இளைஞர்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தாக்கும் காட்சிகளை தமது தொலைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்து, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், கொத்மலை போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், போலீஸார் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் புவனேஸ்வரனிடம் விசாரணைகளை நடத்திய நிலையில், அவரின் புசல்லாவையிலுள்ள உறவினர்களுக்கு விடயம் தொடர்பில் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்ததாகவும் அப்போது இந்த தகவலை அவர் பகிர்ந்ததாகவும் ஸ்ரீகுமார் கூறுகிறார். அதனைத் தொடர்ந்தே, அடுத்த நாள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். Getty Images சித்தரிப்புப் படம் ''போலீஸிலிருந்து கூட்டிக் கொண்டு வரும் போதே அவர் எங்களிடம் , 'மாமா வீடு இருக்குனு சொல்லி தான் இரவில் போயிட்டேன். இவ்வளவு காலத்துக்கு நான் இப்படி அடி வாங்கியது இல்லை. அவமானமாக்கிட்டேன்.' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.'' என ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், இரவு உணவு கூட உட்கொள்ளாத நிலையிலேயே இவ்வாறு தவறான முடிவை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார். தாக்குதல் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்திய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். போலீஸார் கூறுவது என்ன? ரவிச்சந்திரன் புவனேஸ்வரனின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியது. தாக்குதல் நடத்தி, வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டமை, இந்த மரணத்திற்கான காரணம் என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என கூறிய போலீஸார், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் புசல்லாவை போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். முக்கிய குறிப்பு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன. 0707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும். இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும். இந்தியாவில் உதவியை நாடுபவர்கள் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/224853 Sri Lanka SumithrayoSri Lanka SumithrayoSri Lanka Sumithrayo is a government approved charity founded in 1974, by late Mrs. Joan De Mel and was incorporated by Act of Parliament No.10 of 1986.
-
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்
உலகின் பணக்காரர் பட்டியலில் லேரி எலிசன் : எலான் மஸ்க்கை முந்தினார்! Published By: Digital Desk 3 11 Sep, 2025 | 12:31 PM ஒரேக்கிள் (Oracle) நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (Larry Ellison), உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் குறியீட்டின் படி, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட எலிசனின் நிகர மதிப்பு உயர்ந்துள்ளது. ஒரேக்கிள் நிறுவனப் பங்குகள் 43 வீதம் வரை உயர்ந்ததன் காரணமாக, 81 வயதான எலிசனின் மொத்த நிகர மதிப்பு $393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எலிசன் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க் $385 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். ஓரேக்கிள் நிறுவனத்தின் கிளவுட் வணிகத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், ஒரேக்கிள் பங்குகள் ஒரு நாளில் $101 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, அதன் சந்தை மதிப்பு $947 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. லேரி எலிசன் ஒரேக்கிள் நிறுவனத்தின் 41 வீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அவரது செல்வத்தின் பெரும்பகுதி இந்த நிறுவனத்தின் முதலீடுகளிலிருந்தே வருகிறது. உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்ஹெச் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் போன்றோர் சில நேரங்களில் அவரை முந்தியிருந்தாலும், மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருந்தார். ஆனால், தற்போது ஒரேக்கிள் பங்குகளில் ஏற்பட்ட பெரும் ஏற்றம், எலான் மஸ்கின் ஆதிக்கத்தை முறியடித்துள்ளது. லேரி எலிசன் யார் ? நவீன தொழில்நுட்பத்தின் ஜாம்பவானான ஒரேக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், நவீன தொழில்நுட்ப உலகில் முக்கியமான நபர்களில் ஒருவராவார். லோரன்ஸ் ஜோசப் எலிசன் என்பது இவரது இயற்பெயர், 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தார். சிக்காக்கோவில் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்த இவர், பொருளாதார ரீதியாக மிகவும் சவாலான சூழலில் இருந்து பெரும் வெற்றியாளராக உருவெடுத்தவர். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்த பின்னர், கல்வியை நிறுத்திவிட்டு மென்பொருள் துறையில் பணியாற்றத் தொடங்கினார். 1977 இல், வெறும் $2,000 அமெரிக்க டொலர் முதலீட்டில், தனது நண்பர்களான பொப் மைனர் (Bob Miner) மற்றும் எட் ஓட்டிஸ் (Ed Oates) ஆகியோருடன் இணைந்து ஒரேக்கிள் (Oracle) என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் தொடர்புசார் தரவுத்தளம் (relational database) பற்றிய ஆய்வுக்கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, ஒரேக்கிளை உருவாக்கி, தரவுத்தள துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். 2014 வரை ஒரேக்கிளின் தலை நிறைவேற்று அதிகாரியாகப் (CEO) பணியாற்றிய எலிசன், தற்போது நிர்வாகத் தலைவராகவும் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (CTO) இருந்து நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை வழங்கி வருகிறார். தொழில் வாழ்க்கையைத் தாண்டி, எலிசன் தனது சாதாரண வாழ்க்கையில், ஹவாய் தீவில் உள்ள லானா தீவின் பெரும்பாலான பகுதிகளை சொந்தமாக வைத்துள்ளார். படகுப் பந்தயம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சொத்துகளில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளார். மனிதநேயப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், உடல்நலம், காலநிலை மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள எலிசன் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியுள்ளார். எலிசனின் குடும்பமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மகன் டேவிட் எலிசன், ஸ்கைடான்ஸை வாங்கியதைத் தொடர்ந்து பாரமவுண்ட் குளோபல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அவரது மகள் மேகன் எலிசன், புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளராகவும், அன்னபூர்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார். https://www.virakesari.lk/article/224800
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
கார்ல்டன் இல்லத்தை அடைந்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை அவதானிக்க முடிகின்றது. https://adaderanatamil.lk/news/cmffcu4k100deo29nv7ba43pz
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டாக்களை வழங்கிய இராணுவ அதிகாரி கைது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லுதினன் கேர்னல் ஒருவர் இன்று (11) மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவின் மல்லாவியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 260 தோட்டாக்களை குற்றவாளியான கமாண்டோ சலிந்தவுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் உள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmffbyfoe00ddo29njrhb1egp
-
கொஞ்சம் ரசிக்க
ஐபோன் 17 தொடர் வெளியிட்ட உடனே இந்த மீம் பொருத்தமாக வந்திருக்கு! ஐபோன் 16e புதிது நேற்று என் கைக்கு வந்தது! விலை 140000 ரூபா என்றதும் வடிவாக பார்த்திட்டு திரும்ப பத்திரமாக பெட்டியில் வைத்து கொட்த்துவிட்டேன்!!
-
பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு!
"அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரமில்லை" தீவிரமடையும் பாமகவின் உள்கட்சி மோதல் PMK 11 செப்டெம்பர் 2025, 06:09 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பொதுக்குழு தீர்மானத்தின் படியும், தேர்தல் ஆணைய உத்தரவின் படியும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே கட்சியின் தலைவர் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறினார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரிடமிருந்து விளக்கம் கேட்டிருந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவருக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அன்புமணி எந்த பதிலும் அளிக்காத நிலையில், மீண்டும் அவருக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அன்புமணியிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் இன்று காலை அறிவித்திருந்தார். PMK "கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி நீக்கப்படுவதால் கட்சிக்கு பின்னடைவா என்று சிலர் கேட்கின்றனர். பயிரிடும் போது களைகள் வரும், அதை அகற்றிட வேண்டும், இப்போது களை நீக்கப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் பேசினார். அன்புமணி சில தொண்டர்களுடன் தனிக்கட்சி போன்று செயல்படுவதாகவும், அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தயாராக இருப்பதாக ராமதாஸ் கூறினார். "அவர்கள் யார் என்று சொல்ல இந்நேரத்தில் தேவை இல்லை. அன்புமணியோடு இருந்தால் நன்மைகள் இருக்கும் என்று நினைத்து அவருடன் இருக்கலாம். அவர்களும் என்னோடு இருந்தவர்கள் தான், நான் இல்லாமல் அவர்கள் வளர்ந்திருக்க முடியாது. மூத்த தலைவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை சொன்ன போது, அவர் எதையும் கேட்காமல், மதிக்காமல் போனார். பழ கருப்பையா கூட தந்தையிடம் மகன் தோற்பது, தோல்வி அல்ல என்று கூறியிருக்கிறார்." என்று ராமதாஸ் பேசினார். 'அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை' அன்புமணி ராமதாஸை பாமகவிலிருந்து நீக்க, ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று, கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலு, அன்புமணியை நீக்குவதாக கூறுவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்று கூறினார். அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பதில் தருவதாக கூறி பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " பாமக விதிகளின் படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், செயலாளருக்கே நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. கட்சியின் நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. இன்றைய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வருகிறார். ஆகஸ்ட் 9ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொறுப்புகள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அது ஒரு மனதாக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினோம். அதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை பொதுக்குழு தீர்மானங்களின் படி நீட்டித்து அறிவித்தது. எனவே, தலைவராக அன்புமணி ராமதாஸ், பொருளாளராக திலகபாமா, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். எனவே கட்சி நிறுவனரின் இன்றைய அறிவிப்பு செல்லாது,ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் பாலு தெரிவித்தார். "கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். ஆனால் வேறு பொறுப்புகளில் யாரேனும் நியமிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்தால், அந்த தகவல்களை பாமக நிர்வாகிகள் பகிர வேண்டாம்." என்றும் அவர் வலியுறுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m41kkd0r4o
-
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
கத்தாரில் இஸ்ரேல் குறிவைத்த ஹமாஸ் தலைவர் எங்கே? - உலக நாடுகளை பகைத்து நடத்திய தாக்குதல் தோல்வியா? Getty Images ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா கட்டுரை தகவல் டேவிட் கிரிட்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்த ஐந்து கீழ்மட்ட உறுப்பினர்களில் மூவரின் உடல்களை, கத்தார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, அவர்களோடு ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். தனது பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்த இந்த தாக்குதல் தோல்வியடைந்ததாக ஹமாஸ் கூறியுள்ளது. சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை. "இதுவரை... எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை," என்று ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி புதன்கிழமை மாலையில் தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் நடவடிக்கை "அரச பயங்கரவாதம்" எனக் கருதப்பட வேண்டியதாகவும், கத்தாரின் பிராந்திய கூட்டாளிகள் "கூட்டாகப் பதில்" அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் "பயங்கரவாத மூளையாக இருந்தவர்களை" குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமானது என்று தெரிவித்தார். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில், காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 64,656 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. AFP மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் முக்கிய பிராந்தியக் கூட்டாளியாக இருக்கும் கத்தாரில், பெரிய அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ளது. 2012 முதல் ஹமாஸ் அரசியல் பணியகம் அங்கு செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் கத்தார் மத்தியஸ்தராகவும் இருந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதல், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசித்த குடியிருப்பு வளாகத்தை குறிவைத்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தைப் பற்றி ஆலோசித்து வந்தனர். இந்த நடவடிக்கையை "ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்" என அழைத்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் முடிவுகள் குறித்து தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் புதன்கிழமை வந்த தகவல்கள், அந்த தாக்குதல் அவர்கள் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தின. சில அதிகாரிகள், ஹமாஸ் தலைவர்கள் கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ், இந்த "கொடூரமான குற்றத் தாக்குதலில்" தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் கூறியது. கலீல் அல்-ஹய்யாவின் மகன் ஹுமாம், ஹய்யாவின் அலுவலக இயக்குநர் ஜிஹாத் லபாத், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மோமன் ஹசௌனா, அப்துல்லா அப்துல் வாஹித், அகமது அல்-மம்லுக் ஆகியோர் தான் அந்த ஐவர். "பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது," என்று ஹமாஸ் கூறியிருந்தாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை. புதன்கிழமை மாலை, ஹுமாம் அல்-ஹய்யா, லபாத், ஹசௌனா, மேலும் கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கார்ப்ரல் பத்ர் அல்-ஹுமைடி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. "காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றும், "பல்வேறு இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலீல் அல்-ஹய்யாவின் இருப்பிடத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிப்படவில்லை. அவர் இன்னும் பொதுவெளியிலும் தோன்றவில்லை. கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு "பாதுகாப்பான புகலிடத்தை" வழங்கியதால், அவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். "பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கத்தார் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நான் கூறுகிறேன், அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையெனில், நாங்களே நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் எச்சரித்தார். இதற்கு பதிலளித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது, "நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது நெதன்யாகு தான். அவர் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வருபவர்," என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த ஆண்டு, காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நெதன்யாகுவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டும் குற்றவியல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகக் கூறி, ஐசிசி நீதிபதிகள் இருவருக்கும் கைது வாரண்டுகளை பிறப்பித்தனர். ஆனால் இஸ்ரேலிய அரசும், அந்த இருவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இஸ்ரேலின் சமீபத்தியத் தாக்குதல், காஸாவில் மீதமுள்ள 48 பணயக்கைதிகள் மீதான நம்பிக்கையை "கொன்றுவிட்டது" என தாம் அஞ்சுவதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஷேக் முகமது தெரிவித்தார். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒரு பணயக்கைதியின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், அவர்கள் "இந்த போர்நிறுத்த மத்தியஸ்தத்தையே முழுமையாக நம்பியிருந்தனர், அவர்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை" எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் நடவடிக்கை "போருக்கு முடிவு காணும் கதவைத் திறக்கக்கூடும்" என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறினார். மேலும், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் உறுதிப்படுத்தினார். அதேசமயம் காஸா மக்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கத்தார் இப்போது ஹமாஸ் அலுவலகத்தை மூடுமா என்ற கேள்விக்கு, தனது அரசு "எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வருகிறது" என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் "விரிவான உரையாடல்" நடத்தி வருவதாகவும் ஷேக் முகமது கூறினார். இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்திலும் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் இறையாண்மை கொண்ட நாடான கத்தாருக்குள் ஒருதலைப்பட்சமாக குண்டுவீசுவது, அமைதியை நிலைநாட்ட எங்களுடன் கடினமாகவும் துணிச்சலாகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்படும் ஒரு நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கை. இது இஸ்ரேலின் இலக்குகளையோ அல்லது அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது", "ஆனால், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு நியாயமான குறிக்கோள்"என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வரவிருக்கும் தாக்குதல் குறித்து கத்தாருக்குத் தெரிவிக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது "மிகவும் தாமதமாகிவிட்டது" என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்கா "தாக்குதல் நடந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான்" கத்தாரைத் தொடர்பு கொண்டதாக ஷேக் முகமது தெரிவித்தார். கத்தாரின் சக அரபு நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதன்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஒற்றுமையை வெளிப்படுத்த தோஹாவிற்கு விமானம் மூலம் சென்றார். கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம், இஸ்ரேலின் "குற்றவியல் தாக்குதல்" மத்திய கிழக்கின் "பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை" அச்சுறுத்துவதாக கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டபுள்யூஏஎம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்தது. வியாழக்கிழமையன்று தோஹாவுக்கு வரவிருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், இஸ்ரேலின் "கொடூரமான ஆக்கிரமிப்பு" நடவடிக்கைக்கு பதில் தேவைப்படுவதாகக் கூறினார். ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, பிராந்திய ரீதியான பதிலை விவாதிக்க விரைவில் கத்தாரில் ஒரு உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931lw7e8zwo
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் Published By: Digital Desk 3 11 Sep, 2025 | 02:24 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை (11) காலை முதல் வருகை தந்திருந்தனர். இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர். சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேறுவார் என்ற தகவல் வெளியான நிலையிலேயே அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் ஆதரவாகளர்களும் அசரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். இதேவேளை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224815
-
யாழில் இராணுவ வாகனத்துடன் விபத்து - இளைஞன் படுகாயம்
11 Sep, 2025 | 10:12 AM யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/224784
-
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
சார்லி கக்: டிரம்பின் கூட்டாளி சுட்டுக் கொலை - 3000 பேர் முன்னிலையில் நடந்த சம்பவம் Reuters கொல்லப்படுவதற்கு முன், யூட்டா பல்கலைகழகத்தில் சார்லி கக் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் ஜூட் ஷீரின், ஆனா ஃபகே 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் பேசி வந்தார். பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளியை தேடும் பணி வீடு வீடாக நடைபெறுவதாக போலீஸார் கூறுகின்றனர். சார்லி கக் இறப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப் பட்டது. அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டிரம்ப் கூறியது என்ன? சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார். யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான சார்லி கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர். 2012 ஆம் ஆண்டில், 18 வயதில், அவர் தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாணவர் அமைப்பான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ (TPUSA) ஐ நிறுவினார். அவரது சமூக ஊடக பதிவுகள் மற்றும் தினசரி போட்காஸ்ட் பெரும்பாலும் திருநங்கை அடையாளம், காலநிலை மாற்றம், குடும்பம் போன்றவை குறித்ததாக இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வீடியோ பதிவில், "சார்லி கக்கின் கொடூரமான படுகொலை குறித்து வருத்தமும் கோபமும் கொண்டுள்ளேன்" என்று கூறியுள்ளார் சார்லி கக் - தனது 18 வயதில் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற பழமைவாத குழுவை நிறுவினார், அவர் ஒரு தேசபக்தர், அவரது மரணம் "அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட தருணம்" என்று டிரம்ப் கூறினார். யூட்டா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சார்லி கக் பங்கேற்று பேசி வந்தார். யூட்டா பல்கலைகழக காவல் தலைமை அதிகாரி ஜெஃப் லாங், இந்நிகழ்வு திறந்த வெளியில் நடைபெற்றதாகவும், 3 ஆயிரம் பேர் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் ஆறு அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் கட்டடங்களால் சூழப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சார்லி கக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததாக ஒக்லஹாமா மாகாண பிரதிநி மார்க்வேனே முல்லின்ஸ் கூறினார். சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பல்கலைகழக வளாகத்தில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து ஒருவர் கிர்கை சுட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. அந்த காட்சிகளை பிபிசி ஆராய்ந்த போது, அந்த கட்டிடம் சார்லி கக் சுடப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பது தெரிய வந்தது. எனினும் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்ய முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவர் துப்பாக்கிச் சூடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, சுடப்பட்டதாக கூறுகின்றனர். சுடப்பட்டவுடன், மேடையில் அவர் கீழே விழுந்தார். கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர். சார்லி கக் சுடப்பட்ட பிறகு, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். சார்லி கக் சுடப்பட்ட உடனே ஒரு நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளில் சுட்டவர் பதிவாகியுள்ளார். அவர் முழுவதும் கருப்பு நிற உடை அணிந்திருப்பதும், பல்கலைகழக வளாகத்தில் ஒரு மேற்கூரையிலிருந்து சுட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. யூட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார், சார்லி கக்கின் மரணத்தை "அரசியல் கொலை" என்று அவர் குறிப்பிட்டார். தலைவர்கள், முன்னாள் அதிபர்கள் அஞ்சலி சார்லி கக்கின் உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அமெரிக்க முன்னாள் அதிபர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர், "நாம் திறந்த மனதுடன் விவாதிக்கவும், பயம் இல்லாமல் பேசவும் முடிய வேண்டும். அரசியல் வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜிராஜியா மெலோனி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய் ஆகியோரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ளனர். சார்லி கக் யார்? சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார். யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர். சிகாகோவின் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸில் வளர்ந்த ஒரு கட்டிடக் கலைஞரின் மகன் கக். அரசியல் செயல்பாட்டில் தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு சிகாகோவுக்கு அருகிலுள்ள ஒரு சமூகக் கல்லூரியில் பயின்று, பாதியில் நின்று விட்டார். உயர்மட்ட அமெரிக்க ராணுவ அகாடமியான வெஸ்ட் பாயிண்டிற்கு தேர்வாக முயன்று தோல்வியுற்றார். பின்நவீனத்துவம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் விவாதங்களில் ஈடுபடும்போது கக் கல்லூரி பட்டம் கூட பெறாதவர் என்று குறிப்பிடப்பட்டார். Reuters 2024-ம் ஆண்டு அரிசோனாவில் சார்லி கக் ஒரு மாநாட்டில் பேசினார். 2012 -ல் அதிபர் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் TPUSA -ல் அவரது பங்களிப்பு தொடங்கியது. லாப நோக்கற்ற அந்த அமைப்பின் நோக்கம் "நிதிப் பொறுப்பு, சுதந்திர சந்தைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மேம்படுத்த" மாணவர்களை ஒழுங்கமைப்பதாகும். TPUSA இப்போது 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கக் குடியரசுக் கட்சி நிகழ்வுகளில் பேசி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், அதிதீவிர பழமைவாதிகளிடையே பிரபலமாக இருந்தார். அவரது தினசரி பழமைவாத பேச்சு வானொலி நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. Getty Images டொனால்ட் டிரம்ப் ஜூனியர், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே டி வான்ஸ் ஆகியோருடன் ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சார்லி கக் பங்கேற்றார். ஒரு ஆர்வமுள்ள மேடை பேச்சாளரான, சார்லி கக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றினார். ட்ரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் எனும் பிரசாரத்தைக் குறிக்கும் வகையில், அவர் எழுதிய தி மாகா கோட்பாடு 2020 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையான நூலாக இருந்தது. கடந்த ஆண்டு தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் TPUSA முக்கிய பங்கு வகித்தது. பல்லாயிரக்கணக்கான புதிய வாக்காளர்களை பதிவு செய்ய உதவியதற்கும், ட்ரம்புக்கு ஆதரவாக அரிசோனா மாகாணத்தில் நிலைமைகளை மாற்றியதற்கும் அவர் வெகுவாக பாராட்டப்பட்டார். சார்லி கக் ஜனவரி மாதம் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். டிரம்ப் ஆட்சிக் காலங்களில் வெள்ளை மாளிகைக்கு அவர் அடிக்கடி வருவது வழக்கம். புதன்கிழமை, கக்கின் மரணத்தை அறிவித்த டிரம்ப் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்: "தி கிரேட், மற்றும் லெஜண்டரி, சார்லி கக் இறந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட யாரும் புரிந்து கொள்ளவில்லை" என்றார். Reuters 2018-ம் ஆண்டு சார்லி கிர்குடன் அதிபர் டிரம்ப். அதிபரும் அவரது உதவியாளர்களும் டிரம்பின் பிரசாரத்துக்கு சார்லி கக்கின் பங்கை அங்கீகரித்தனர். அவர் குடியரசுக் கட்சி மாநாடுகளில் பேசினார். கக்கின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அரிசோனாவில் கக் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் டொனால்ட் டிரம்ப் உடன் கிரீன்லாந்திற்கு பயணம் செய்தார். டிரம்ப் அப்போது ஆர்க்டிக் பிராந்தியத்தை அமெரிக்கா சொந்தமாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். சார்லி கக்கின் சுவிசேஷ கிறிஸ்தவ மதம் மற்றும் குடும்பம் அவரது அரசியலில் முக்கிய பங்காற்றியது என்று கூறலாம். அவர் ஒரு முன்னாள் மிஸ் அரிசோனாவை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழமைவாத செயல்பாடுகளின் எதிர்காலமாகவும், தீவிர பிரிவினைவாத நபராகவும் பார்க்கப்பட்டார். குடியரசுக் கட்சி அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்குக்கு மிகப்பெரிய பாராட்டு டிரம்பிடமிருந்தே வந்தது என்று கூறலாம். டிரம்பின் இந்த வார்த்தைகள் சார்லி கக்கின் பாட்காஸ்டின் தொடக்கத்தில் ஒலிபரப்பட்டது. அதில் டிரம்ப், "நான் சார்லிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர் ஒரு நம்பமுடியாத இளைஞர், அவரது உணர்வு, இந்த நாட்டின் மீதான அவரது அன்பு, இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த இளைஞர் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குவதில் அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்." என்று கூறியுள்ளார். சார்லி கக் தனது நிகழ்வுகள் மற்றும் அவரது பாட்காஸ்ட்களில் பல அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை விவாதித்துள்ளார் - துப்பாக்கி கட்டுப்பாடு அவற்றில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு, "துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும் சில துப்பாக்கி இறப்புகள் நிகழ்ந்தாலும், இரண்டாவது சட்டத் திருத்தத்தை (துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது) தக்க வைத்துக் கொள்ள அந்த விலையை கொடுக்க வேண்டியுள்ளது" என்று அவர் பேசியிருந்தார். அவரது சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன. அவர் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து சந்தேகத்தையும் பரப்பினார், திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பினார் என்று பிபிசியின் செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2020 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் தவறான கூற்றையும் அவர் வழிமொழிந்தார். சிபிஎஸ் செய்தியின் படி, வெள்ளை மக்களின் இடத்தை சிறுபான்மையினர் பிடித்துக் கொள்வார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கிரேட் ரிப்ளேஸ்மென்ட் சதி கோட்பாட்டையும் அவர் முன்னிலைப்படுத்தினார். சார்லி கக் சுடப்பட்டது குறித்து பேசும் போது, அவர் வெவ்வேறு கருத்துகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தார் என்று சிலர் வலியுறுத்தினர். "அவரது செயல்பாடுகள் பிளவைக் கடந்து மக்களை அணுகுவது, பிரச்னைகளை தீர்க்க வன்முறைக்கு பதில் பேச்சைப் பயன்படுத்து என்ற நோக்கில் இருந்தது. " என பாப்டிஸ்ட் தலைமைத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் வொல்ஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rvw7434v9o
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் 2025 – இலங்கை அணி அறிவிப்பு Published By: Digital Desk 1 11 Sep, 2025 | 12:54 PM சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2025க்கான இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது. மகளிருக்கான உலகக் கிண்ணப்போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. குவஹாத்தியில் நடைபெறும் ஆரம்ப போட்டியில்; இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டியின் தலைவராக சாமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணைத்தலைவராக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில், ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே,ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, இமேஷா துலானி, தேவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224808