Everything posted by nedukkalapoovan
-
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
நாங்க கன்றுக்குட்டியை கன்றுக்குட்டி என்கிறம். நீங்கள் இல்ல.. கன்றுக்குட்டி தான் மாடு என்றீங்க. கன்றுக்குட்டியை கன்றுக்குட்டியாக ஏற்றுக் கொண்டு போயிருந்தால்.. இந்த அநாவசிய வெட்டி ஒட்டல்கள் அவசியமில்லை. ஏனெனில்.. இவை ஏலவே மேற்கு சார்பு ஆட்களால் பலவகையாக எழுதப்பட்டு விடப்பட்டவை தான். அவை எப்போதுமே தாங்கள் தான் எல்லாம் முதலில் என்று எழுதித் தள்ளுபவர்கள். நாங்கள் பயங்கரவாதிகள். எங்களுக்கு சார்ப்பானவை எல்லாம் பயங்கரவாதம் சார்பானது என்று எழுதுபவர்களின் ஆக்கங்ளை ஒட்டி கன்றுக்குட்டியை மாடு என்று நிறுவ முற்படுவதை.. யாழ் கள வாசகர்கள் நன்கு உணரக் கூடிய பக்குவமானவர்கள். 😄
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
மேலே சரியான விளக்கம் அளித்த பின்னும்.. தவறான கற்பிதம் என்ற போர்வையில் புலிகளின் தனித்துவங்களை சிறுமைப்படுத்துவதை நாங்களும் அனுமதிக்கப் போவதில்லை. மீண்டும் சொல்கிறேன்.. உக்ரைன் களவெடுத்திருக்கும்.. தற்போதைய ஸ்ரெல்த் வகை வெடிமருந்தேற்றிய அதிவேக சிறிய வகை கடற்கல தாக்குதல்களின் முன்னோடிகள் புலிகளே. அதற்கு முன் நடந்த தாக்குதல்கள் படகுகள் வடிவமைப்புக்களும்.. தாக்குதல் வடிவங்களும் வேறு. முதலில் இதனை தாங்கள் வாசிச்சு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வீரகேசரியின் மேற்படி கட்டுரையில் சொல்லப்பட்டவை எவையும் மிகையாகத் தெரியவில்லை. களத்தில் அவதானித்ததையே வீரகேசரி ஒப்பிட்டுள்ளது. தமக்கு சந்தேகமானதை சந்தேகத்துடனேயே சொல்லியும் உள்ளது. மேலும்.. புலிகளைப் பற்றி எழுதினாலே.. சர்ச்சை.. விசாரணை என்ற சூழல் நிலவும் இன்றைய காலத்தில்.. வீரகேசரிக்கு.. புலிகளை வைச்சு வியாபாரம் செய்வது ஆபத்தாகவே முடியும். ஒருவேளை சுமந்திரன் போல்.. புலிகளால் எனக்கு ஆபத்து என்று அவிச்சால்.. அதற்கு இருக்கும் சொறீலங்கா அரச.. படை ஆதரவு.. நிச்சயம்.. புலிகள் பற்றிய யதார்த்தத்தை.. அவர்களின் திறமைகளை செப்புவதால் வராது.
-
தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
எங்கள் பணியிட வைத்தியசாலை மின்னஞ்சல் வழி வைத்தியசாலையின் எல்லா சேவையாளர்களுடனும் பகிரப்பட்ட மின்னஞ்சல் வழி வந்த செய்தியும் கூட.
-
உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா
ஒரு காலத்தில் பருப்பு ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்த ஹிந்தியா.. ஆசியாவின்.. சிலிக்கான் வலி கனவில்.. இன்று பருப்புக்கு கையேந்தும் நிலையிலும்.. ஐ ரி ஆக்களை உற்பத்தி செய்து.. அந்நிய நாடுகளுக்கு ஓட விடும் நிலையிலும் நிற்கிறது. நல்ல முன்னேற்றம்.
-
தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS Foundation Trust Tamil Heritage Month is an exciting opportunity to celebrate the invaluable contributions of Tamil Biomedical Scientists and laboratory professionals. Tamil is a Dravidian language that's been around for over 2000 years, spoken in places like Sri Lanka, Southern India, Singapore, and by diaspora Tamils. This month offers a unique occasion to embrace our rich cultural heritage and acknowledge the exceptional work of those who operate at the heart of healthcare. This celebration recognises our past and helps shape a more inclusive and promising future for Biomedical Scientists. Sonia Justinsuthakaran, Biomedical Scientist, Blood Transfusion & Haematology, Charing Cross Hospital Tamil Heritage Month to me is a way to mark the existence of the Tamil language, culture and people. As one of the oldest languages in the world, I think it is important to remember how special our mother-tongue is and to share a little bit of our culture wherever we go. Whether it's with our colleagues at work, our partner or our children, we have to make sure that with a rich culture like Tamil, we have to keep it alive for as long as we can and enable our future to do so too. Alagammai Nachiappan, Biomedical Scientist, Biochemistry, Royal Sussex County Hospital. I work as a Biomedical Scientist in clinical biochemistry at University Hospital Sussex NHS Trust. I am an Indian Tamil who has migrated to the UK and am very pleased to witness Tamil Heritage Month being celebrated at the IBMS. From a young age, I developed a passion for Tamil by reading Thirukural, which describes the art of living sensibly, and poems by Bharathiyar. One of my favourite poems by Bharathiyar is “achamillai achamillai,” which asserts that an individual should not fear under any circumstances. My passion for Tamil has played a key role in my growth and development, contributing to my successful life. Mathumitha Kumareshan, Final year student - Coventry University Tamil Heritage Month holds great meaning for me as it is a moment to celebrate the rich history, culture, resilience, and strength of Tamil communities worldwide. It serves to foster a sense of unity and belonging within the global Tamil diaspora. Moreover, this month allows us to reflect on and appreciate the diverse contributions of Tamils, showcasing the enduring spirit that unites us across borders. https://www.ibms.org/resources/news/tamil-heritage-month-2024/
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
வீரகேசரியின் ஒப்பீட்டில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. ஸ்ரெல்த் வகை அதிவேக வெடிமருந்து கடற்கலங்களை களத்தில் வடிவமைத்து வெற்றிகரமாகப் பாவித்த பெருமை புலிகளையே சாரும். அந்த வடிவமைப்பு சிங்களத்தால் போரின் பிற்பாடு விற்கப்பட்டிருக்கலாம். உக்ரைனிடமும் அது போய் சேர்ந்திருக்கும். ஏனெனில்.. தமிழினப் படுகொலையில்.. உக்ரைன் கூட்டுக் கொலையாளிகளில் ஒன்று. நேரடியாக களத்தில் சிங்களப் படைகளோடு நின்ற நாடுகளில் ஒன்று. எங்கள் வரலாற்றை நாமே மறைக்க முற்படும் போது.. நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியான். நாம் பாவிக்கும் போது பயங்கரவாதம்.. உக்ரைன் பாவிக்கும் போது.. ஆகோ ஓகோ. எம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து எவரும் வரத்தேவையில்லை. நம்மாக்களே போதும். புலமை வித்துவத்தை காட்டுறன் என்ற போர்வையில் சொந்த இனத்தை சிறுமைப்படுத்திச் சீரழிக்க. அது சோள வரலாறு தொடங்கி புலிகள் வரை இதே தான் கதி.
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
இது புலிகளது வடிவமைப்பு. இது உக்ரைனது. புலிகளை பிரதி செய்த உக்ரைன் Published By: DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM https://www.virakesari.lk/article/137295 ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிமருந்து நிரப்பப்பட்ட அந்தப் படகை, ரஷ்ய கடற்படையினர் பின்னர் நடுக்கடலில் வெடிக்க வைத்து அழித்தனர். இந்தப் படகின் வடிவமைப்பும், பயன்பாட்டு நோக்கமும், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகளை முன்மாதிரியாவை கொண்டிருந்தது. உக்ரேனின் இந்தப் புதிய ஆயுதம், ரஷ்ய கடற்படையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான கடற்புலிகள் கையாண்ட போர் உத்திகளை, உக்ரேன் தனக்குரிய பாணியில்- தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையாளத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணம். இலங்கைக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள், பயன்படுத்திய கரும்புலிப் படகுகள் ஆட்களால் இயக்கப்படுவது. பெரும்பாலும் அவை வெளியிணைப்பு இயந்திரங்களைக் கொண்டது. ஆனால் செவஸ்டபோல் துறைமுகம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உக்ரைன் படகு, ஆட்களின்றி பயணம் செய்யக் கூடியது. ‘வோட்டர் ஜெட்’ எனப்படும் ஒற்றை நீருந்து விசை இயந்திரத்தினால் செயற்படக் கூடியது. ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் உடையார்கட்டுப் பகுதியில், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கடற்புலிகளின் படகு கட்டுமான மையத்தில் இதே வடிவத்தை கொண்ட மற்றும் நீருந்து விசையில் இயங்கும் ஒற்றை இயந்திர படகுகள் வடிவமைப்பு நிலையில் மீட்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட பெரும்பகுதி மூழ்கிய நிலையில், பயணம் செய்யக் கூடியதாக இந்தப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் முனையில், குண்டுத் தலையாக (war head) ஆட்டிலறி குண்டு அல்லது மோட்டார் குண்டு, பொருத்தப்பட்டது. படகில் நிரப்பப்பட்ட வெடிபொருளை வெடிக்கச் செய்வதற்கு அதுவே வெடிப்பு ஊக்கியாக இருந்தது. ஆனால், காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது மோதிய கரும்புலிப்படகு வெடிக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது குண்டுத் தலை செயலிழந்தால், அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இதன் பின்னர் கடற்புலிகள் தங்களின் கரும்புலிப் படகுகளில் இரண்டு குண்டுத் தலைகளைப் பொருத்தினர். செவஸ்டபோல் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உக்ரேனின் ஆளில்லா குண்டுப் படகிலும், அதேபோன்று இரண்டு குண்டுத் தலைகளே பொருத்தப்பட்டிருந்தன. கடற் கரும்புலிகளின் படகுகளில் இல்லாத நவீன சோனார் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் அதில் பொருத்தப்பட்டிருந்தன. உக்ரேன் இந்த படகுகளை எப்போது வடிவமைத்தது என்று தெரியவில்லை. ஆனால், இதனை உக்ரேனின் புதிய ஆயுதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனினும், இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே, விடுதலைப் புலிகள் இந்த வகை குண்டுப் படகுகளை கடற்படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் இந்தப் படகுகளை கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தது இத்தாலி தான். இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானிய கடற்படைக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு, வெடிமருந்து நிரப்பிய படகுகளை இத்தாலி பயன்படுத்தியது. ஆனால் ஜப்பானிய விமானப்படையின் ‘கமிகாசி’ எனப்படும் தற்கொலைப்படை விமானிகளைப் போல, இத்தாலிய கடற்படையினர், செயற்படவில்லை. அவர்கள் ஆறு சிறிய படகுகளில் 330 கிலோ வெடிபொருட்களை நிரப்பி, சுடா குடாவில் (Suda Bay) பிரித்தானிய கடற்படையின் 3 கப்பல்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ‘யோர்க்’ என்ற பிரித்தானிய கடற்படையின் பாரிய போர்க்கப்பலின் மீது இரண்டு படகுகள் மோதி வெடித்தன. மூன்றாவது படகு எண்ணெய் தாங்கி கப்பல் மீது மோதி வெடித்தது. ஏனைய மூன்று படகுகளும், தொழில்நுட்ப காரணங்களாரோ மனித காரணங்களாலோ வெடிக்கவில்லை. இந்த தாக்குதலை நடத்திய இத்தாலிய கடற்படையினர், பிரித்தானிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள், போரில் எதிரியிடம் சிக்கும் மரபைக் கொண்டிராதவர்கள். அவர்கள், கடற்படைக் கப்பலின் மீது மோதி வெடித்து, சாகும் வகையில்- தங்களின் உத்தியை வடிவமைத்தனர். இத்தாலிக்குப் பின்னர் 1948இல், எகிப்தின் அமீர் பாரூக் என்ற போர்க்கப்பலை இஸ்ரேலியப் படையினர் சிறிய வெடிபொருள் படகு ஒன்றை வெடிக்க வைத்து மூழ்கடித்திருந்தனர். அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளே இந்த போர் உத்தியைக் கையாண்டிருந்தனர். பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியில், குறைந்தளவு வசதிகள், தொழில்நுட்பங்களைக் கொண்டு தான், விடுதலைப் புலிகள் கரும்புலிப் படகுகளை வடிவமைத்தனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் போர் உத்திகளை, பல நாடுகளின் கடற்படையினர் ஆர்வத்துடன் அறிந்து கொள்வதற்கு முயன்றனர். பல நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் இதுபற்றி கேட்டறிந்துள்ளனர். கடற்புலிகளின் படகுகளின் திறன் மற்றும் வடிவமைப்பு குறித்து, அவர்கள் நேரிலும் ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். உக்ரைனிய கடற்படை அதிகாரிகள் அல்லது நிபுணர்களும் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொண்டனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் வடிவமைப்பு மற்றும் உத்திகளைப் பிரதி செய்திருக்கின்றனர் அல்லது அதனை முன்னோடியாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள், தங்களின் படகில், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கு இரண்டு குண்டுத் தலைகளை, படகுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறார்கள். ஆனாலும், அந்தப் படகு இலக்குத் தவறி ரஷ்யப் படைகளிடம் சிக்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், வெடிபொருள் நிரப்பிய படகுகளைப் பயன்படுத்தியவர்கள், யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான். சவூதி அரேபிய கடற்படைக்கு எதிராக அவர்கள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி அவர்களின் ஆயுத அணிவகுப்பு ஒன்றில் ஆளில்லா வெடிமருந்துப் படகுகளும் இடம்பெற்றிருந்தன. இந்தப் படகுகளிலும் நவீன தொழில்நுட்பம் காணப்படுகிறது. இதனை, வடிவமைத்துக் கொடுத்திருப்பது ஈரான் தான் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஈரான், ஆளில்லா விமானங்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. அவற்றை தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்புகளில் திருத்தங்களைச் செய்திருக்கிறது. அதுபோவே ஆளில்லா தாக்குதல் படகுகளையும் ஈரான் வடிவமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எவ்வாறாயினும், இவ்வாறான வெடிபொருள் நிரப்பிய படகுகளை கொண்டு தாக்கும் உத்திகளை கையாண்ட, அதில் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்றவையெல்லாம் நாடுகளாகவே இருந்து வருகின்றன. விடுதலைப் புலிகள் மட்டுமே, அதிலிருந்து வேறுபட்டு விளங்குகின்றனர்.
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
இந்த திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில்.. இலங்கை பிரஜைகள் அல்லாதோரிடம் இலங்கையில் பிறந்தார்கள் என்ற ஒற்றைக்காரணத்தை காட்டி தகவல் திரட்ட சொறீலங்கா அதிகாரிகளுக்கு வளர்ந்த நாட்டு தகவல் பாதுகாப்புச் சட்டங்கள் இடமளிக்காது.
-
சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்
சூளைமேட்டு படுகொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்கிளசை சொறீலங்கா அரசு எப்படி பாதுகாத்து அமைச்சர் பதவி கொடுத்து.. ஏவலாளியாக வைச்சிருக்குதோ.. அந்தளவுக்கு இல்லை என்றாலும்.. தாயகம் திரும்பும் சாந்தனை சொறீலங்கா அதிகாரிகள் துன்பப்படுத்தாமல்.. அவரை சுதந்திரமாக வாழ அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
ஹிந்தியாவிடம் அடியும் குத்தும் வாங்கின தமிழர்களே.. ஹிந்தியாவை நட்பு நாடென்று கொண்டிருக்கினம். தற்போதைய ஜே வி பி கூட ஹிந்திய எதிர்ப்பை கைவிட்டிட்டுது. மகிந்தவின் வாலும் முன்னாள் ஜே வி பி ஆளுமான உவர் விமல்.. இன்னும் ஹிந்தியக் கடுப்பில் காலம் கழிக்கிறார்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
மீண்டும் தவறான புரிதல். புலிகள் தான் இதனை கண்டுபிடித்தார்கள் முதலில் பாவித்தார்கள் என்று எழுதப்படவில்லை. சம காலத்தில் புலிகள் தான் இதனை தமக்கான வசதிக்கு ஏற்ப.. நவீன மயப்படுத்தி தமது திறமைகளையும் உள்ளடக்கி பாவித்தார்கள். குறிப்பாக கடல் நீர்மட்டத்தோடு பயணிக்கத்தக்க.. ஸ்ரெல்த் தர வகைக்கான சிறிய அதிவேகக் கடற் கலங்களை பாவித்து வெற்றிகரமாக இஸ்ரேலிய தயாரிப்பு இலக்குகளையே தகர்த்த பெருமை புலிகளைச் சாரும். இதே வகை தாக்குதலை கொப்பி பண்ணி.. அல்குவைடா அமெரிக்க போர் கப்பலுக்கு எதிராக மத்திய கிழக்கில் நடத்தியது. இப்போ.. உக்ரைனின் வடிவமைப்பில் புலிகளின்.. ஸ்ரெல்த் வடிவமைப்பும்.. கடல் மட்டத்தில் பயணிக்கும் தந்திரங்களும்.. அதிவேகமும்.. உள்வாங்கப்பட்டிருக்குது. நீங்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போர்.. 1960 களில் நிற்கிறீர்கள். அதன் பின்னான நவீன இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சிகளின் பின்னும்.. வெற்றிகரமான தாக்குதல்களை நடாத்திய பெருமை புலிகளுக்கு உண்டு. மேலும்.. ஆழமற்ற கடலிலும் இலக்குகளை தாக்கவல்ல கடற்கலங்களை தயாரித்த பெருமையும் புலிகளுக்கு உண்டு. பிரச்சனை என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. தேவைக்கும் எதிரிகளின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்ப மீள்வடிமைப்பதும்.. இலக்கை வெற்றிகரமாக அடைவதுமே... இராணுவ தொழில்நுட்ப முன்னோடியாவது. அந்த வகையில் புலிகள் மேற்குலகால் கூட வியக்கப்பட்ட பல தொழில்நுட்ப மறுவடிவமைப்பு முன்னோடிகள் என்றால் மிகையல்ல. குறை அழுத்த.. எளிமையான.. அதிக எண்ணிக்கையான.. மிதிவெடிகள் தயாரிப்பில் கூட புலிகள் முன்னோடிகளாக விளங்கியதுண்டு.. குறிப்பாக ஜொனி மிதிவெடிகள். இதனை ஹிந்திய இராணுவ எழுத்தாளர்களே குறிப்பிட்டும் உள்ளனர். ஜொனி மிதிவெடிகளே.. மணலாற்றுக் காட்டில் ஹிந்திய படைகளின் முன்னோற்றங்களுக்கு மிகப் பெரிய தடையாக இருந்தன. சிறிய படையான புலிகளின் பெரும் தடுப்புச் சுவரானது.
-
டியாகோகார்சீயாவில் 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் - 12 பேர் தற்கொலைக்கு முயற்சி
உக்ரைன் ஆக்களுக்கு இன்னும் 18 மாதங்களுக்கு வீசா நீட்டிப்பும்.. பிற வீசாக்களுக்கு விண்ணப்பிக்கவும்.. கல்வி.. சுகாதாரம்.. பொதுச் சேவைகளை பயன்படுத்த அனுமதியும் வழங்கியுள்ள பிரிட்டன்.. இந்த ஈழ அகதிகளை மட்டும் இப்படி நடத்த என்ன காரணம்..????! இதில எம்மவர்கள் சிலர்.. உக்ரைனுக்கு சப்போட்...???!
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
உக்ரைனே.. கடற்கரும்புலிப் படகுகள் பாணியில் தான் படகுகளை.. வடிவமைச்சு ரடாரில் சிக்காது இலக்கை தாக்கும் புலிகளின் தந்திரத்தை களவெடுத்திருக்கினம். அதேபோல்.. தான் வான்புலிகளின் தந்திரமும் பாவிக்கப்பட்டிருக்குது.. உக்ரைனால். தாளப் பறந்து போய் தாக்குவது. ரடார் அலைகளில் சிக்காதிருக்க இந்த உக்தியை புலிகள் போர்க்களத்தில் பயன்படுத்தினார்கள்.. வலிமையான எதிரியின் முன் தம் திறமையால் வீரத்தால்.. அவர்கள் போராடினார்கள். என்ன உக்ரைனுக்கு.. மேற்குலக நாடுகள் எல்லா வளங்களையும் வசதிகளையும் அளிப்பதால்... தானியங்கி ஆக்கி இருக்கினம். நாங்கள் சுயமாகப் போராடிய இனம் என்பதால்.. அதிக.. உயிர்கொடைகளை செய்ய வேண்டி இருந்தது. வலி கூடியதாக இருந்தது.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வேடிக்கை என்னவென்றால்.. வகுப்பறையில் ஆசிரியைகளை ஏற்றுக் கொள்ளும் மாணவர்களும் பெற்றோரும்.. அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆசிரியையை ஏற்றுக் கொள்ள தயங்குவது எங்கேயோ இடிக்குதே..?! எல்லாம் குத்தியரின் திருவிளையாடலாகத்தான் இருக்கும். தனக்கு வேண்டியவரை உள்ள போட.. இப்படி புரளியை கிளப்பி விட்டிருப்பார். அவர் பெயருக்குத்தான் மீன்பிடி அமைச்சர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை முடிசூடா சுயம்பு மன்னன். எல்லாத்துக்குள்ளும் தன் மூக்கை நுழைப்பதே அவரின் கொள்கை. இதனால் தான் முன்னர் அடிவாங்கிக் கொண்டு ஹிந்தியாவுக்கு ஓடினவர்.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கம் தான் ஆண்கள் தலைமைத்துவப் பாடசாலைகளின் பெருக்கத்திற்கு அடிகோள். யாழ் மத்திய கல்லூரி கிறிஸ்தவ மிசனரி வழி வந்த ஒன்று. ஆனாலும் அங்கு ஆரம்பப் பிரிவு கலப்பு தான். மேலும் யாழ் மத்திய கல்லூரியில் பெருமளவிலான ஆசிரியைகள் பன்னெடுங்காலமாக.. மகத்தான சேவை ஆற்றி இருக்கினம்... சேவை ஆற்றிக் கொண்டும் இருக்கினம். அந்த வகையில் கல்லூரியின் தனித்துவத்தையும் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் முன்னேற்றங்களையும் மற்றும் மாணவர்களை நல்ல சமூகப் பிரஜைகளாவும் ஆக்கக் கூடிய எவரும் அதிபர் பதவியில் அமர்வதில் சிக்கலில்லை. ஏனெனில் கல்லூரி இப்போ கிறிஸ்தவ மிசனரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில்.. ஒரே ஒரு பெண் ஆசிரியை தான் இருந்தார். ஆனால்.. இப்போ சரி பாதி பெண் ஆசிரியைகள். மேலும் இலங்கையின் நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் பெண்களே அதிகம். வீட்டில் அம்மா செல்லமெல்லாம்.. இந்த பெண் அதிபர் நியமனத்தை ஏற்றுக் கொண்டு.. போய் படிக்கிற வேலையை பாருங்க. தேவை தரமான கல்வி... உயர்ந்த ஒழுக்கம்.. ஓயாத விளையாட்டு... யாழ் மத்தியின் மைந்தனாகவும் இருந்த ஒருவனாக இக்கருத்தைச் சொல்வதில் பெருமைபட முடிகிறது. விடாப்பிடியாக.. என்னை யாழ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று சேர்ப்பித்ததே என் அம்மா. போர்ச் சூழல் கருதி... இடை நடுவில் யாழ் இந்துவுக்கு பாய்ந்தது வேறு விடயம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது. என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும்.
-
கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரம் - ம.பி அதிர்ச்சி
இதை தான் காலம் காலமாச் சொல்லிக் கொண்டிருக்கினம். சட்டத்தை அமுலாக்குபவனும் சட்டத்தை மதிப்பவனும் உருவாகினாலும்.. மனிதத்தை இனங்காணாத மிருகங்களாக மனித உருவில் மிருகங்கள் உலாவரத்தக்க சூழ்நிலைகள் களையப்படாமல்.. இவற்றைக் கட்டுப்படுத்துவது இலகு அல்ல. அனுமதியின்றி.. ஒரு பெண்ணை தொட்டால் கடுமையான தண்டனை என்ற மத்திய கிழக்கு நடைமுறைகள் வராமல்.. ஹிந்தியாவில்.. தெற்காசியாவில்.. பெண்களுக்கான பாலியல் பாதுகாப்பு என்பது பலவீனமாகவே இருக்கும்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
யோகேஸ்வரன்: இதோ 1000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் சிங்கள எஜமான அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார். அவரின் மனைவியும் அதே. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இனப்படுகொலைகளை.. வெண் புறா.. வெண்டாமரைக்குள் மறைக்க.. உதவினார்.. செம்மணி புதைகுழிகள் கூட கண்ணில் படவில்லை.. போய் சேர்ந்தார். அமிர்தலிங்கம்: ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் வகைதொகையின்றி இறந்து கொண்டிருக்க.. ஹிந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்தபடியே முன்னேறுவதாக ஹிந்திய விசுவாச அரசியலை முன்னெடுத்தார்.. போய் சேர்ந்தார். நீலன் திருச்செல்வம்: யாழ்.. மற்றும்.. வன்னியை ஆக்கரமிக்கும் சந்திரிக்காவின் வெண்புறா வேச இன அழிப்புப் போர் நீண்ட போது.. மக்கள் பட்டினி கிடந்தும் இடம்பெயர்ந்தும் செத்துக் கொண்டிந்த போது.. சந்திரிக்காவை சமாதான தேவதையாக சித்தரிக்க.. ஈயன் பொக்ஸ்.. விலகி நினறு விட்ட போதும்.. சிங்களம் கிழித்தெறிந்த போதும்.. புலிகள் நிராகரித்து நின்ற போதும்.. தன் வித்துவத்தையும் சிங்கள விசுவாசத்தையும் காட்டப் போய்.. போய் சேர்ந்தார். இப்ப.. மிஸ்டர்.. சுமந்திரன் அந்தப் பட்டியலில் வந்து குந்தி இருக்கிறார். என்ன தமிழ் மக்கள் கேடயம் இழந்த நிலையில் இருப்பதால்.. இவரால்.. சிங்கள விசுவாசத்தை தமிழர்களின் வாக்குகளை வைச்சே காட்ட முடியுது. இதில் எல்லாமே அரைகுறை.. இனவிரோத சட்டாம்பிகள் தான் கூடிய இனத்துரோகத்தைச் செய்திருக்கினம். அது காசுக்கு கட்சிக்காரனை காப்பாற்ற சாட்சிக்காரனை குற்றவாளி ஆக்கிற குணத்தின் பரினாமம் என்றால் வேறில்லை. இவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதனால் தான் சிலது துர்மரணங்களை பரிசாக்கிக் கொண்டன.
-
அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்
இப்ப எல்லாம் பணத்தேவை கருதி தான் எல்லாமே ஊரில நடக்குது. சொந்த மகள்மாரின் மகன்மாரின் வாழ்க்கையையே தங்களின் சொந்த தேவைக்கான.. பணத்துக்காக விலை பேசிற தாய் தகப்பனை காண முடியுது.. நீங்க என்னடான்னா.
-
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு
இப்ப பழைய படி.. ஆளாளுக்கு பதவிக்கு வந்ததும் சனாதிபதி பதவியை ஒழிப்பென்று என்று கிழப்பிட்டாங்கள். சந்திரிக்கா இதனை ஆரம்பிச்சா.. கடைசியில் ரணிலாரும் கூவினார். ஆனால் எல்லாரும் பதவிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை ஒழிக்க மனசு வைக்கினமே இல்லை. இப்ப சஜித்தும் தொடங்கிட்டார். வேடிக்கை என்னவென்றால்.. பதவிக்கு வந்து.. 100 நாளைக்குள் சனாதிபதி பதவியை ஒழிப்பன் என்ற மைத்திரி.. மீண்டும்.. சனாதிபதியானால்.. ஒழிப்பாராம். சனத்தை முழு மடையர் என்று நினைக்கிறாங்கள்.. சொறீலங்கா அரசியல் வியாதிகள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார்.
-
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி தோல்வியடைந்தது
சீனாவில இருந்து பெற்றோல்.. பாகிஸ்தானில இருந்து உருளைக்கிழங்கு.. மாம்பழம்.. ஹிந்தியாவில இருந்து முட்டை.. வெங்காயம். அப்ப நாட்டில என்னத்தை தான் உற்பத்தி பண்ணுறியள்..??! யாழ்ப்பாணத்தில் போர் காலத்தில் கூட உருளைக்கிழங்கு.. உள்ளூரில விளைஞ்சது. இப்ப பாகிஸ்தான் உருளைக்கிழங்கு விக்கினம். போர் காலத்தில வித்த உள்ளூர் கருவாடு போய்.. இப்ப இந்தோனிசியா.. தாய்லாந்தில் இருந்து கருவாடு யாழ்ப்பாணத்திற்கு வருகுது..??! இந்தக் கொடுமைகளை என்னென்பது..?! சொறீலங்கா சின்ன வெங்காயம்.. கண் எரியுமாமில்ல... பெரிய வெங்காயம் தானாம் வேணும். இது நான் சொல்லேல்ல.. யாழ்ப்பாணப் பெண்டிர் பேசிக் கொண்டதில் இருந்து.
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
பாவம்.. பழிக்கடா ஆகிட்டார். ஆனால் பங்கு போட்டுக் கொண்ட மிச்சப் பேர்.. எஸ்கேப். மகிந்த குடும்பம் உட்பட. ஏனெனில்.. அணிலார் அவையள்ள கை வைக்க விடமாட்டார். எல்லாம் ஒரு புரிந்துணர்வு தான். 😛
-
இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை
மலேசியா.. மத்திய கிழக்கு.. இந்த விசயத்தில் எப்பவோ எல்லைகளை திறந்துவிட்டு.. இப்போ கல்வியில் நன்கு முன்னேறிப் போய்விட்டன. இவைக்கு இப்பதான் விடிஞ்சிருக்குது. அதுகும்.. என்ன சுயலாபத்துக்கோ..??!