Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: கேய் மின்னலே படம்: அமரன் இசை: ஜி.வி.பிரகாஸ் வரிகள்: கார்த்திக் நீதா பாடியவர்கள்: கரிசரண் & சுவேதா மோகன் ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே சக்கரே என் சக்கரே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே சிநேகமோ……பிரேமாமோ…… ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ….. யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே……சக்கரே……சக்கரே…… கரைமீதிலே இரு பாதமாய் வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம் கடல் மீதிலே விழும் தூறலாய் நாம் தூறலம் தூரியே தீரலாம் இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒலி போல் சிரிப்பால் விரல் விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய் சிறு குடை மீறிய மலை போலவே நாள் போகுதே பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே என் உள்ளிலே என் உள்ளிலே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே சிநேகமோ……பிரேமாமோ…… ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ….. யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே……சக்கரே……சக்கரே……
  2. சந்திரிக்கா செம்மணி கொலைகள், பொருளாதார தடைகள் என தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர். இவர் ஒரு தீர்வு பொதியை தருவார் என தமிழ் மக்கள் எப்படி நம்புவது??
  3. மோடி ராஜ்யம் Modi RajyamSanthanakrishnan Renga Ramanujam · இந்தியாவும், பாகிஸ்தானும் சிலமணி நேர இடைவெளியில் சுதந்திரம் அடைந்திருந்தாலும் ஏறக்குறைய 78 ஆண்டுகள் ஆகியும் பாகிஸ்தானோடு இந்தியாவை இன்றைய நிலையில் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார வளர்ச்சி, கல்வி, மருத்து விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி, தொழில் நுட்பம், தொழில் உற்பத்தி திறன், பாதுகாப்பு தளவாடங்களின் வளர்ச்சி, விவசாயம் போன்றவற்றில் அபரித வளர்ச்சியடைந்து பாகிஸ்தான் இந்தியாவை எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு அபரித வளர்ச்சியை அடைந்துள்ளது. பாகிஸ்தான் எந்த வழியிலும் முன்னேற்றமடைய வில்லை . காரணம் ஆட்சியாளர்கள் ஜனநாயக முறைப்படி நாட்டை ஆளத்தகுதியற்றவர்கள். ‘ருசி கண்ட பூனை’ என்பதைப் போல ராணுவம் ஆட்சியை எப்படியாவது தன் வசம் வைத்துக் கொள்வதில் குறியாக உள்ளது. என்னதான் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தாலும் ராணுவத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தக்க சமயம் வரும்போது கவிழ்த்து விடுவார்கள். ராணுவமும் அவ்வப்போது இந்தியாவிடம் உரசலை ஏற்படுத்தியும், எட்டாக் கனியான காஷ்மீரை மையமாக வைத்து காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என அவ்வப்போது பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி மக்கள் தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எழுப்பக் கூடாது என்பதற்காக அவ்வப்போது இந்தியா மீது போரை வலுக்கட்டாயமாக திணித்து முடிவில் மரண அடி வாங்கிக் கொண்டு தெரு நாய் போல ஊளையிடும். இப்படித்தான் 1971 வங்கதேசத்தை ( அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இழந்தது. இன்றைய பங்களாதேஷ் உருவானதற்கு முழுக்க முழுக்க இந்தியாவின் உதவியால்தான். பாகிஸ்தான் எப்போதுமே இருப்பதை விட்டு விட்டு பறப்பதை எட்டிப்பிடிக்க நினைக்கும். மோதி ஆட்சிக்கு வந்த பின் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ( Art 370) விலக்கிக் கொண்டபின் அங்கு முறையான தேர்தல் நடைபெற்று ஆட்சி நடைபெற்று வருவதால் காஷ்மீரும் பாகிஸ்தானுக்கு இலவு காத்த கிளி போலாகி விட்டது. பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் காஷ்மீர் ஓரு closed chapter ஆகி விட்டது. முதலில் ஐ.நா , பின்னர் உலக நாடுகள் எல்லாமே சேர்ந்து கொண்டு காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பக் கூடாதெனவும், Kashmir is integrated part of India என செருப்பால் அடித்தது போல கூறி விட்டதால் இப்போது மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது. அவர்கள் கவனத்தை திசை திருப்பவே எல்லை தாண்டி தீவிரவாதிகளை அனுப்பி காஷ்மீரில் அவ்வப்போது வாலை ஆட்டுகிறது..தற்போது வாலை மட்டுமல்லாமல் உடலையே வெட்ட வேண்டிய தருணம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
  4. கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம் சிவதாசன்எதிர்பார்த்தபடியே லிபரல் கட்சி வெற்றீவாகை சூடியிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் இவ்வெற்றி மகத்தானது. நான்காவது தடவையாக அது ஆட்சியமைக்கப்போகிறது. இத் தேர்தலில் பல திருப்பங்கள், அதிர்ச்சிகள் எதிர்பாராதவாறு கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லியேவ் , கடந்த 20 வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த தொகுதியை இழந்திருக்கிறார். அது போலவே என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் தனது தொகுதியை இழந்திருக்கிறார். ட்றம்ப் என்ற புயல் வந்து இவர்களை ஒதுக்கியிருக்கிறது. லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்ணி முன் பின் எதுவித அரசியல் அனுபவமுமில்லாதவர். கனடிய மக்கள் அவரிடம் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ட்றம்ப் புயல் இன்னும் ஓயாமல் இருக்கும்போது. இது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவா அல்லது பொய்லியேவ் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவா? தர்க்க ரீதியாகப் பார்த்தால் பொய்லியேவைப் பதவியிலிருந்தும் தொகுதியிலிருந்தும் துரத்தியிருப்பது பண்டம் காலம் கடந்துவிட்டது (product expired) என்பதனாலாகவிருக்கலாம். கனடியர் அனைவரையும் பிரதிநிதித்த்துவப்படுத்திக்கொண்டிருந்த புரோக்கிரஸ்சிவ் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிராந்திய கன்சர்வேட்டிவ் கட்சியாக மேற்குக் கனடாவிற்குள் கொண்டுபோய் முடக்கியதிலிருந்து அக்கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கியிருந்தது. அக்கட்சியின் அதி தீவிரவாத அரசியல்வாதி ஸ்டொக்வெல் டே அவர்களின் அரசியல் வளர்ப்பு பிள்ளை தான் பொய்லியேவ். நீண்டகாலம அரசியலில் இருந்தாலும் எதையும் கற்காதவர். பலமான எதிரி முன்னர் அவரது பலவீனம் இனம்காணப்பட்டு விட்டது. ட்றூடோ என்ற கண்ணன் அரசியலுக்கு வந்தபோது ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. தனது வயதுக்கேற்ற இளம் தலைமுறையின் முற்போக்கு கொள்கைகளை, புரிந்தும் புரியாமலும், அவர் நடைமுறைப்படுத்தினார். கோவிட் வந்து குறுக்கே படுத்துக்கொண்ட்போதுதான் கண்ணனுக்கு விடயமே புரியவாரம்பித்தது. பொருளாதாரத்தைத் தக்க வைக்க வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அள்ளிக்கொடுத்தார். பெரும்பாலான பணியாளர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய வசதி செய்து கொடுத்தார். கோவிட் முடிந்தபின் தொழில்களைத் தொடர்ந்து நடத்த கடன்களைப் பெறுவதற்காக வட்டி வீதத்தைக் குறைத்தார். பணியாளர்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க தற்காலிகம் என்ற பெயரில் குடிவரவாளர்களைக் கொண்டுவந்தார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்தியாவிலிருந்து , தருவித்து கடற்கரைகளை நாசப்படுத்தினார். இதற்கு ட்றூடோ மட்டும் காரணமல்ல. அவர் தொடர்ந்தும் தீராமல் விளையாடிக்கொண்டிருக்க அமைச்சரவை உதவிப் பிரதமர் தலைமையில் தமக்குள் ஒரு சிற்றரசை நடத்திக்கொண்டிருந்தது. 1 மில்லியன் புதிய குடிவரவாளர்கள் நாட்டுக்குள் வந்தது பற்றி குடிவரவு அமைச்சருக்கே தெரியாது என்ற நிலைமை. பஞ்சாப்பிலிருந்து படிக்கவென்று காணி பூமிகளை விற்று கனடா வந்த பலர் கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்குள் சென்று விட்டார்கள். கனடாவில் வேலை வாய்ப்பு, வீட்டு வசதிகள் எல்லாம் கைக்கெட்டாமல் போனபோது பழி ‘இந்திய’ மாணவர்களின் தலைகளில் பட்டுத் தெறித்து ட்றூடோ தலையில் விழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவின் அம்புகள் சரமாரியாக வந்து ட்றூடோ கோட்டைக்குள் விழ அமைச்சர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். அவரைப் பதவியிலிருந்து இறக்கினால்தான் பொய்லியேவ் அம்புகளிலிருந்து தாம் தப்பிக்கலாம் என அவர்கள் கனவு கண்டார்கள். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் விதி வேறு திட்டத்தை வைத்திருந்தது. கோவிட்டினால் தூக்கியெறியப்பட்ட ட்றூடோவைக் காப்பாற்ற விதி ட்றம்பை அனுப்பியது. மார்க் கார்ணியைக் கொண்டு பொய்லியேவ் படையெடுப்பை மட்டுமல்ல உள்ளக சதிகாரர்களையும் ஏக காலத்தில் தகர்த்தெறிந்து தனது அவமானத்தைத் துடைத்துக்கொண்டார். ஒரு ராஜ தந்திரிக்குரிய ஞானம் இப்போது தான் அவருக்குப் பிறந்திருக்கும் என நினைக்கிறேன். இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடையவில்லை மாறாக அதன் தலைவரே படு தோல்வியை அடைந்திருக்கிறார். மக்கள் நிதானமாகச் சிந்தித்தே வாக்களித்திருக்கிறார்கள். அறியாத, தெரியாத, முன் பின் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது அதனைக் கண்காணிப்பதற்காக பலமான எதிர்க்கட்சியையும் சேர்த்தே மக்கள் பாராளுமன்றைத்தை அமைக்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்க்கட்சியின் தலைவர் பொய்லியேவாக இருக்கக்கூடாது என்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே கட்சித் தலைமையை வேறு யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒன்ராறியோ மாகாண முதல்வர் ட்க் ஃபோர்ட்டைக் கட்சியும் அதன் முன்னரங்க காவலர்களும் வேண்டுமென்றே புறந்தள்ளியமையே முக்கியமான காரணமாகப் படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரது உள்வட்டப் பரிவாரங்கள் சில இருக்கின்றன. இவைகளில் பலவற்றை அரசியலுக்குள் கொண்டு வந்ததே முதல்வர் டக் ஃபோர்ட் தான். அப்படி இருந்தும் நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணத் தேர்தலின்போது “மாகாண கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எந்தவித உதவிகளையும் யாரும் செய்யக்கூடாது” என பொய்லியேவ் மிகவும் இறுக்கமான கட்டளை இட்டிருந்தார் எனப்படுகிறது. டக் ஃபோர்ட்டைப் புறந்தள்ளுவது கனடாவில் அதிக ஆசனங்களைக் கொண்ட (122) ஒன்ராறியோ மாகாணத்தையே முற்றாகப் புறந்தள்ளுவதற்குச் சமன் என்பதை அறியாத முட்டாளாக அவர் இருந்திருக்கிறார் என்றால் அரசியலில் ஒரு ஞானசூனியம். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நோர்த் ஐலண்ட்-பவல் றிவர் தொகுதியில் இந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஆரன் கண் என்பவர் ஒரு தீவிர வெள்ளைத் தீவிரவாதி. சுதேசிகளின் உரிமைக்கோரிக்கைகளை எள்ளிநகையாடும் இவரது தீவிரவாத கொள்கைகளுக்காக மாநில லிபரல் கட்சி இவரது கட்சி விண்ணப்பத்தை 2021 இல் நிராகரித்திருந்தது. 2025 இல் இவர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு விண்ணப்பித்தபோது இவரது விண்ணப்பத்தை நிராகரிக்கும்படி பல சுதேசிய தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் பொய்லியேவிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு இத்தீவிரவாதியை பாராளுமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார் பொய்லியேவ். எனவே கணிசமென்க் கூறமுடியாதெனினும் பல சுதேசியர்களின் வாக்குகளை அவர் இழந்திருக்கிறார். பாலஸ்தீன இனப்படுகொலை விடயத்திலும் யூதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பாலஸ்தீனியர்களைப் பயங்கரவாதிகள் எனவும் அவர்கள் தமது போராட்டங்களைக் கனடியத் தெருக்களுக்குக் கொண்டுவந்து இங்கும் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாகவிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார். இதன் மூலம் முஸ்லிம்கள் உட்படக் கணிசமான மிதவாதப் போக்குடையோர் லிபரல் சாய்வை எடுக்க பொய்லியேவே காரணமாக அமைகிறார். மேற்கூறிய காரணங்களை விடவும் பிரதான மாரணமான ட்றம்ப் என்ற எதிரியைத் தனது மானசீக குருவாக வழிபட்டதன் விளைவே பொய்லியேவை மக்கள் ஒரு ‘இன்ஸ்டண்ட்’ தேசத்துரோகியாக ஆக்கியமை. ட்றம்ப் பற்றவைத்தை கனடிய தேசிய எழுச்சியின் முன் ட்றூடோவின் மீது பொய்லியேவ் சுமத்திய அனைத்துப் பழிகளும் பொசுங்கிப்போகுமென பொய்லியேவ் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலுக்கு முன் சில நாட்களில் தான் அவரது கட்சியின் விஞ்ஞாபனமே வெளியிடப்பட்டது என்றால் அவரது தலைமை ட்றம்பைத் தாங்கக்கூடிய ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தோரில் பலர் இளையோர் என்கிறார்கள். பொய்லியேவ் விற்ற வரிக்குறைப்பு – இமிகிரேஷன் – கிரைம் வாய்பாட்டை இவ்விளையோர் மனப்பாடம் செய்திருக்கலாம். அவர்கள் இன்னமும் தமது பெற்றோரின் வீடுகளில் வாழ்வதற்கு ட்றூடோவே காரணம் என அவர்கள் முற்றாக நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அப்பெற்றோரின் ஓய்வூதியங்களை வழங்குவதற்கான மூலம் இளையோர் இறுக்கும் வரியே தான் என்பதை அவர்களது முதிரா மூளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ட்றூடோ லிபரல் கட்சியை வெகுதூரம் இடது பக்கம் தள்ளிப்போயிருந்தது உண்மை. உலகம் முழுவதும் woke கலாச்சாரம் ஃபாஷனாக வந்துகொண்டிருக்கும்போது லிபரல் கட்சியின் இடது கூடாரம் ட்றூடோவின் மிதவாதப் போக்கைச் சாதகமாகப் பாவித்து கட்சியை இடது பக்கத்திற்குத் தள்ளியது. கப்பல் கவிழப்போகிறது என அறிந்ததும் அவர்கள் ட்றூடோவைத் தள்ளி விழ்த்திவிட்டுத் தப்பப் பார்த்தனர். ஆனால் கப்பல் அவர்களை அமிழவிட்டு ட்றூடோவை மட்டும் காப்பாற்றி விட்டது. மார்க் கார்ணி ஒரு practical man. அவரை உட்புகுத்தியது ட்றூடோவாக இருந்தாலும் இதன் சூத்திரதாரி, பணம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம் தான். ட்றூடோ நகர்த்திய இடது பக்கத்திலிருந்து அவர் கட்சியை மத்திக்குக் கொண்டு வருவார். பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த அவர் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளுக்கான பாதைகளைத் திறக்க வேண்டும். எரிபொருளும், கனிமங்களும் இப்புதிய சந்தைகளைச் சென்றடைவதற்கான பாதைகளை உருவாக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சில இணக்கப்பாடுகளைக் காணவேண்டும். கார்ணியின் முதல் நடவடிக்கையாக இருக்கப்போவது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது. இரண்டாவது அமெரிக்காவிடம் வாங்கிய பணமுறிகள் (Bonds), அடமானக் கடன்கள் (Mortgage Backed Securities) போன்றவற்றை மீளக் கையளித்து தமது முதலீடுகளைத் திரும்பப்பெறுவது. தற்போதுள்ள அமெரிக்காவின் கடனின் பெரும்பங்கு யப்பான், சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமுமே இருக்கிறது. இவற்றில் யப்பானைத் தவிர இதர நாடுகள் ஏககாலத்தில் தமது பணமுறிகளைக் காசாக்க முற்படுவார்களானால் அமெரிக்க பொருளாதாரம் ஓரிரவில் முடங்கிப்போவதற்குக காரணமாகலாம். இது மட்டும் தான் உடனடியாகப் பாவிக்கக்கூடிய கார்ணியின் துரும்புச் சீட்டு. ஏனையவற்றைப் பாவிக்க பத்து வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் இணக்கப்பாடு கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. எனவே கார்ணி தன் துரும்புச் சீட்டைப் பாவித்தாரேயானால் ட்றம்ப் சீனாவுடன் சமரசத்திற்கு வரத் தயங்க மாட்டார். ஏனெனில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா அமிழும்போது அது ஏனைய நாடுகளையும் இழுத்துக்கொண்டுதான் போகும். எனவே கார்ணியின் இந்த துரும்புச் சீட்டு பலனளிக்கப் போவதில்லை. சியலில் முன் பின் அனுபவமில்லாத கார்ணியின் இரைச்சல்களை உடனடியாக பகுத்துணர முடியாதுள்ளது. ஆனால் ஒன்று அவரது ஆட்சி முழுமையான நான்கு வருட ஆட்சியாக இருப்பதற்கான சாத்தியமில்லை. அதற்கடுத்த ஆட்சி கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியாக அமையவேண்டுமாகில் அதன் தலைமை மேற்கு கனடாவிடமிடமிருந்து பறிக்கப்பட்டு ஜான் ஷறே அல்லது பீட்டர் மக்கே போன்ற மிதவாதிகளிடம் கையளிக்கப்படவேண்டும். ட்றம்ப் நாட்டில் நடைபெறவிருக்கும் மத்திய தேர்தல்களைத் தொடர்ந்து அவரது சிறகுகள் கத்தரிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் கார்ணி நான்கு வருடங்களை இலகுவாகத் தாண்ட முடியும். இத்தேர்தல் மூலம் கிடைத்த இன்னுமொரு அதிர்ச்சி என்.டி.பி. கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கின் தோல்வி. இதற்கு ஒரே ஒரு காரணம் பாலஸ்தீனம் பற்றிய இவரது நிலைப்பாடு. இறுதி விவாதத்தின்போதும் அவர் “பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை” என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தவர். இதே நிலைப்பாட்டை இவர் முன்னரும் தெரிவித்திருந்தார். 2023 இல் இவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் இவரது நிலைப்பாட்டிற்கும் சம்பந்தமிருக்கலாமோ என்று ஐயப்பட்டபோது இத் தோல்வி அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கனடாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் மிகவும் கேவலமாக மதிக்கும் தொழிற் பட்டியலில் கடைசியாக இருப்பதுதான் அரசியல்வாதி. பழைய வாகன விற்பனையாளர்கூட அரசியல்வாதிகளைவிட மேன்மையாக மதிக்கப்படுபவர்கள். இனிமேல் ஜக்மீத் சிங்க் தலை நிமிர்ந்து வாழலாம். தமிழ் வேட்பாளர்களை / வெற்றியாளர்களைப் பற்றி எதுவும் இல்லையா என்கிறீர்கள். It’s party time. அடுத்தூர்வதகுதொப்பதில். (Image Credit: CNN) https://veedu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/?fbclid=IwY2xjawKDWHxleHRuA2FlbQIxMQBicmlkETFHVnJoVnk4S1ZyWFRQTTRqAR7-2fZVNQuGUbLJjeQKxeQL-myiMvWp9kYDt53dFRd5FwEgwClMhALb4kTiWQ_aem_8PA3MO0gSJ5VN88iQICCTA#google_vignette
  5. நிச்சயமாக அழுத்தம் தான் காரணம்.
  6. சிவம் டுபேயின் நோ போலுடன் அதிஸ்டம் சி எஸ் கேக்கு என நினைத்தேன். பிழைத்து விட்டது. நல்ல ஒரு call மட்டும்.( பொறுத்த நேரத்தில்)
  7. பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரீட்சித்து பார்த்துள்ளார்கள்.
  8. பாகிஸ்தானிலும் இப்படியான நெடுஞ்சாலைகளை இந்தியா தேடிக்கொண்டு இருக்கிறது. அங்கும் இதே பயிற்சிகளை செய்யவுள்ளனராம். பயிற்சி முடிந்ததும் சண்டை முடிந்தாக இந்தியா அறிவிக்க உள்ளது.😁
  9. ஜேர்மனை விட்டு விட்டீர்கள். அமெரிக்காவை கிண்டினால் ஜேர்மன் தான் அதிகம்.
  10. ரஞ்சித், ஜஸ்டின் இன்னும் பல பெரதெனிய காய்கள் (மன்னிக்கவும் பேச்சு வழக்கில்) சாட்சியாக உள்ளார்கள்.எனது மச்சானுக்கு பேரும் பிரபாகரன் தான். இதே பல்கலைகளகத்தில் படித்தவர் . வடக்கு கிழக்கில் எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும் அறை கதவை திறந்து சாத்துவது அவரை தான் இந்த ஜே வி பி குண்டர்களால் . ஒரே காரணம் இந்த காடையர்கள் சொல்வது அவரது பெயரும் பிரபாகரன் என்பதாகும். சில நோய்கள் அவரை சூழ்ந்து கொண்டாலும் அதே கண்டி மாவட்டத்தில் அதி உயர் பதவி வகிப்பதோடு எனக்கு அடிக்கடி சொல்வது " என்னை ஒரு முறை தான் கொல்ல முடியும்" என்று.
  11. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கல் ஆணைக்கழுவினால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த திடீர் மரணம், பகுடிவதையின் விளைவாக ஏற்பட்டதாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்தும் அமைச்சு உன்னிப்பாகக் கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எதிராக அமைச்சு அதிகபட்ச நடவடிக்கையை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் சமூக ஊடகத் தகவல்கள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். தற்போதைய பொலிஸ் விசாரணைகள் மற்றும் பிற உள்ளக விசாரணைகள் இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வெளிப்படுத்தும் வரை, பல்வேறு நபர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திடீர் மரணம் குறித்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Daily Ceylonசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி...சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் க...
  12. Magisha Baheerathan's PostMagisha Baheerathan is with Prabagini Baheerathan. My newest independent song with Stephen Zechariah, “Thanga Thaali” is now out on all platforms! Make sure to check it out and let me know how you like it! The whole team did an amazing job with the music video and production - honoured to be a part of this project 🙌🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1/16/1f64c_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> https://youtu.be/VTav-PHAVMI?si=U5beXbpikBd6-X2z Song Name - Thanga Thaali Music Composed and Produced by Stephen Zechariah Singers : Stephen Zechariah | Magisha Baheerathan Lyrics by Stephen Zechariah Keys : John Naveen | Kumar Rhythm Production By Deluxshion Nadhaswaram : G. Padmanaban | Shivakumar Additional Programming By Smith Asher Recorded & Mixed By Deluxshion at Kade Productions, Singapore Mastered by Avinash Sathish at Jovi Records
  13. காலிமுகத்திடலில் பேரணி - ரணில் எதிர்ப்பு! http://seithy.com/siteadmin/upload/ranil-wickremesinghe-201124-seithy.jpg எதிர்வரும் மேதின நிகழ்வை தேசிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்றுவருகின்றேன். அப்படி இருந்தம் ஊர் முழுதும் என்னைதான் ஆளுங்கட்சியினர் திட்டி தீர்த்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை. அதேபோல மே முதலாம் திகதியை நினைவுகூர வேண்டும். அரசியல் நிகழ்வுகளுக்கு காலிமுகத்திடலை வழங்குவதில்லை என முடிவெடுத்தோம். அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கின. தற்போது மே தினத்தை காலிமுகத்திடலில் நடத்தி அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி மீறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=332700&category=TamilNews&language=tamil
  14. மிக அமைதியான நாடு. அமெரிக்கா (நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம். அதே நேரம் அகதிகளை ஏற்கும் நாடுகளில் கனடாவும் முதன்மை பெறுகிறது. எம்மவர்கள் பலர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் அமைச்சர்(Bob Ray) ஒருவர் கூறும் போது குறுகிய காலத்த்தில் முன்னேறி நல்ல நிலைக்கு (பணக்காரர்களாக) வந்த ஒரு சமூகமாக குறிப்பிடுகிறார். கனடாவின் சுத்தமான நீரே அவர்களின் இலகுவான வருமானம் மிக நீண்ட கால நோக்கில். பெற்றோலியம், யூரேனியம் என்பன சொல்லவே தேவை இல்லை.
  15. ஏனைய அரசுகளும் இவற்றை தான் செய்தன. அப்போ இவர் பா.உறுப்பினராக இருந்தார். இப்படியான எந்த கருத்தையும் அரசுக்கு எதிராக அப்போ வைத்ததாக தெரியவில்லை.
  16. யாரிந்த இந்தியர்களுக்கு மிக வேண்டப்பட்டவர்கள்?? கட்சி, குழு என பேர், ஊர் இல்லாதவர்களாக உள்ளார்கள்.
  17. ஸ்சப்பா. பையன் விரல் நுனி என்றால் கந்தப்பு விரல் நகமாக இருக்கிறார். (தகவல் திரட்டலில்)🙂
  18. நிச்சயமாக. ஒரு சமயம் யாழில் கூட தேசிய தலைவரின் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க விட்டு விட்டு ஊராரின் பிள்ளைகளை போராட்டத்துக்கு அழைத்துள்ளார் என எழுதியோரும் உள்ளனர்.
  19. அனிதா ஆனந்தையும் சேர்த்து 3 தமிழர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என எமது இணைய தளங்கள் பெருமை கொள்கின்றன. இவர் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தையையும் பஞ்சாப்பை சேர்ந்த தாயாரையும் உடையவர். கனடாவில் பிறந்தவர். என் டி பியின் ஜாக்மிட் சிங் இந்தியாவில் பிரிவினை வாதத்தை ஊக்குவித்தவர். தனது தொகுதியில் தோற்றுள்ளார்.தனது கட்சி தலைமையை விட்டு விலகி உள்ளார். ஜாக் லெயிட்டன் கட்டியமைத்த கட்சியை சுக்கு நூறாக்கி விட்டார். பொலிவியரின் கட்சி 144 ஆசனங்களை பெற்ற போதும் கட்சி தலைவர் பொலிவியர் தோல்வி அடைந்துள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்டவர்கள் 91 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மிக நீண்ட வாக்கு சீட்டாக கூட கனடிய வரலாற்றில் இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.