Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு adminMay 5, 2024 யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2024/202451/
  2. 52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁
  3. சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். https://minnambalam.com/political-news/fir-has-been-registered-against-savukku-shankar/
  4. தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து May 3, 2024 — கருணாகரன் — ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு ஒரு கலந்துரையாடலை வலு உற்சாகமாகச் செய்திருந்தது. “தமிழ்ச்சிவில் சமூகத்தினர்(?)” என்ற பேரிலும் அரசியல் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று தம்மைக் கருதிக் கொள்வோரும் இதில் இணைந்துள்ளனர். மேலும் சில மதகுருக்களும் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்குப் பின்புலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனமொன்று செயற்பட்டு வருகிறது. அதுவே “மக்கள் மன்றம்” என்ற பெயருடைய ஒரு திடீர் அமைப்பை கடந்த மாதம் இதற்காகத் தோற்றியது. “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் காலத்தின்தேவை” என்றே இதற்கு நியாயம் சொல்லப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. 1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது. 2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது. 3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. 5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது. இதைப்படிக்கும் வாசகர்கள் சிரிக்க வேண்டாம். இதில் என்ன உண்டு? எந்தப் புதிய உள்ளடக்களும் இல்லையே. இதைத்தான் இந்தத் தரப்புகள் காலாகாலமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனவே என்று கோபித்துக் கொள்ளவும் வேண்டாம். ஏனென்றால் இவர்களால் இப்படித்தான் சிந்திக்க முடியும். இதற்கு மேல் புதிதாகச் சிந்திக்கக் கூடிய – யதார்த்தத்தை உணரக் கூடிய, காலமாற்றம், சூழல் மாற்றம், சமூக மாற்றம் பற்றிய அறிதிறன் ஆற்றல் இவர்களிடம் இல்லை. என்பதால் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள். ஆகவே இவர்களைக் கோபித்து எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், இவர்களுடைய இவ்வாறான தவறான சிந்தனை மிக ஆபத்தான விளைவுகளை மக்களுக்கு உண்டாக்கக் கூடியது. கடந்த காலத்திலும் இதுவே நிகழ்ந்தது. வரலாறு அதை நிரூபித்திருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம். இந்தப் பொதுவேட்பாளர் பற்றிய (முசுப்பாத்திக்) கலந்துரையாடல் நடந்து மறுநாள், கிளிநொச்சியில் நடந்த “தமிழ்த்தேசிய மேதினக் கூட்டத்தில்” கலந்து கொண்ட மனோ கணேசன், தாம் இந்தத் தீர்மானத்துக்கு வெளியே நிற்பதாகப் பகிரங்கமாகவே அறிவித்தார். மட்டுமல்ல, “வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழர்களை இந்தப் பொதுவேட்பாளர் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம். அந்தச் சூழலே வேறு” என்றும் சொன்னார். ஆக மனோகணேசனும் இந்தப் பொதுவேட்பாளர் என்ற “பகிடி” விவகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே இன்னொரு வேடிக்கையும் உண்டு. தமிழ்ப்பொது வேட்பாளருக்கு மனோ கணேசனின் பெயரைக் கடந்த வாரம் சிலர் பரிந்துரைத்திருந்தனர். ஆனால் மனோ கணேசனோ, பொதுவேட்பாளர் விடயத்தில் தாம் சம்மந்தப்படவே போவதில்லை என்று முகத்திலடித்துச் சொல்லி, அதிலிருந்து வெளியேறி விட்டார். மனோ கணேசனுக்கு இதில் பங்கெடுப்பது சிக்கலானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சியில் பங்கெடுக்கிறார். அப்படியிருக்கும்போது சஜித்துக்கு மாறாக அவரால் சிந்திக்க முடியாது. மட்டுமல்ல, 13 ஆவது திருத்தத்துக்கு சஜித் ஆதரவளிக்கிறார் என்ற சேதியையும் கிளிநொச்சியில் வைத்துச் சொல்லியிருக்கிறார் மனோ. ஆகவே மறைமுகமாக பொதுவேட்பாளர் விடயம் பயனற்றது என்பதையும் தமிழர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாம் என்பதையும் ஒரே மேடையில் வைத்துச் சொல்லாமற் சொல்லியுள்ளார் மனோ கணேசன். மனோவின் சிறப்பும் கவனிக்கத் தக்க அம்சமும் இதுதான். அவர் எப்போதும் துணிச்சலோடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தலைவர். “மனோ கணேசன் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையைப் பற்றித் தீர்மானிக்கும் ஆளல்ல. அவருடைய கருத்துப் பொருட்படுத்தத் தேவையற்றது” எனச் சில சிங்கங்கள் கர்ஜிக்கலாம். இன்று இலங்கைத்தீவில் பரவலாக அறியப்பட்ட தீர்மானச் சக்தியுடைய தமிழ்த்தலைவர்களில் மனோ கணேசன் முக்கியமானவர். அவரைப் பல சந்தர்ப்பங்களிலும் வடக்குக் கிழக்கு அரசியலில் தமிழ்த் தலைவர்களும் சேர்த்தே பயணித்திருக்கின்றனர். வடக்கில் தேர்தல் மேடைகள் தொடக்கம் முக்கியமான அரசியற் கலந்துரையாடல்கள், கட்டமைப்பு உருவாக்கங்கள், தீர்மானங்கள் எல்லாவற்றிலும் இணைத்தே வந்திருக்கின்றனர். அப்படித்தான் கிளிநொச்சி மேதினக் கூட்டத்திலும் மனோவின் பங்கேற்பு நடந்தது. என்பதால் மனோவை விட்டு யோசிக்க முடியாது. அவரைச் சுண்டித் தள்ளி விடமுடியாது. இதில் கவனிக்க வேண்டிய கேள்வி ஒன்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனைக் கலந்து கொள்ள வைத்து, அவர் மூலமாகச் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறாரா? என்பதுவே அது. இதை விட, இந்தத் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயம், மிகப் பலவீனமாக உள்ளது என்பதற்கு சில காரணங்களைப்பார்க்கலாம். 1. பொதுவேட்பாளர் என்பது தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை மட்டும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். குறைந்த பட்சம் இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மலையக மக்களையும் முஸ்லிம்களையும் கூட இதில் உள்ளடக்க முடியாதிருப்பது, தமிழர்கள் மேலும் தனிமைப்பட்டுச் சுருங்கிச் செல்வதையே காட்டுகிறது. குறுகிய சிந்தனைக்கு இதுவே சரியெனப்படும். ஆனால், அரசியல் ராசதந்திர முதிர்வுக்கு இது பொருத்தமானதல்ல. குறிப்பாக வெளியுலகம் இதைக்குறித்துச் சிந்திக்கும்போது அல்லது கவனிக்கும்போது “தமிழ்பேசும் மக்களாகக் கூடச் சேர்ந்து ஓரணியில் நிற்க முடியாத அளவுக்குத்தான் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சமூகங்கள் உள்ளனவா?” என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பும். 2. மட்டுமல்ல, ஜனாதிபதித்தேர்தலை கஜேந்திரகுமார் அணி நிராகரிக்கிறது. தமிழ் மக்கள் இதில் பங்கேற்கத் தேவையில்லை என்கிறார் கஜேந்திரகுமார். ஆகவே அவர்களுடைய கணிசமான வாக்காளர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அத்துடன், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் அங்கயன் ராமநாதன், வியாழேந்திரன் போன்ற தரப்புகள் பொது வேட்பாளரை ஏற்கப்போவதில்லை. மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்களும் உண்டு. (மஸ்தான் போன்றவர்களுக்குப் பெரும்பாலான தமிழ் வாக்குகளே கிடைக்கின்றன). அவர்களுடைய வாக்குகளும் பொ. வே க்குக் கிடையாது. இதை விடச் சமத்துவக் கட்சி, மாக்ஸிஸ, லெனினிஸ ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் நிலைப்பாடு என்ன என்று இன்னும் தெளிவாகவில்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அந்தக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவோரின் கட்டுரைகளும் உரைகளும் சொல்கின்றன. தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஆதரவு – எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடே உண்டு. இதை விட ஏற்கனவே சிறிலங்கா, சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, ஜே.வி.பி போன்றவற்றுக்கான வாக்குகளும் உண்டு. அவையும் இந்தப் பொ.வே விளையாட்டில் பங்கேற்காது. ஆகவே பொ.வே. பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை எந்தளவில் பிரதிபலிக்கும்? 3. பொதுவேட்பாளரை நிறுத்தித்தான் “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும்” என்றால் இதை விட வேறு பலவீனமான நிலை இல்லை எனலாம். வேறு வழிகள், வேறு முறைகள் ஏதுமில்லாத கையறு நிலையிலா தமிழ் மக்கள் உள்ளனர். சரி பிழைகளுக்கு அப்பால் 1977 லிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன் என்றும் சொல்லலாம். இன்னும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் முன்னிலைப் பாத்திரத்தை வகிக்கின்றன என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? அல்லது, புலம்பெயர் தேசங்களில் இன்னும் பெருவாரியான தமிழ் மக்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்? தமக்கு விடுதலை வேண்டும் என்றுதானே! அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை எனத்தானே! அப்படியிருக்கும்போது பொது வேட்பாளரை நிறுத்தித்தான் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை வெளியுலகத்துக்குப் புதிதாகக் காண்பிப்பது என்றால், இதை விட வேடிக்கை என்ன? தேசமாகத் திரள்வது, சமூகமாகச் சிந்திப்பது என்பதெல்லாம் குறித்த மக்களோடு இணைந்து நின்று களப்பணிகளைச் சிந்திப்பதன் மூலமே சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமும் கட்சிகளுக்கிடையில் உள்ள இணக்கப்பாடுகளும் முதலில் உருவாக்கப்படுவது அவசியம். அதைச் செய்வதற்கு இந்தச் சிவில் அமைப்புகளால் முடியவில்லை. ஏன் மதகுருக்களினாலும் முடியவில்லை. பதிலாக ஒவ்வொருவரும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விட்டனர். யாரோ, எங்கோ, எப்படியோ எடுக்கின்ற தீர்மானங்களுக்கு இங்கே காவடி ஆடுவோராக மாறியுள்ளனர். 4. தம்மால் வேறு விதமாகச் சிந்திக்க இயலவில்லை என்பதை மறைப்பதற்காகவே “ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக (பொது வேட்பாளர் விடயத்தை) கையாள்வதும் பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவதும்” இதனுடைய நோக்கமென்று சொல்கிறார்கள். இது எவ்வளவு பம்மாத்து? மாறாக தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், அதனுடைய (வெற்றியளிக்கக் கூடிய) எதிர்கால அரசியல் என்ன? அதை ஆய்வு ரீதியாக – விஞ்ஞானபூர்வமாக – முன்னெடுப்பதற்கான கட்டமைப்பு எப்படியாக இருக்க வேண்டும்? அதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்? முன்னெடுப்பு எப்படி என ஆய்வுக்குட்படுத்தி உருவாக்க வேண்டும். முக்கியமாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு அரசியலின் உச்சமே விடுதலைப் புலிகளின் அரசியலாகும். அது பெரும் சேதங்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. இனியும் அதைத் தொடர முடியாது. இவையெல்லாம் தந்த படிப்பினைகளிலிருந்து நாம் புதிய அரசியலை – சமாதானத்துக்கான – தீர்வுக்கான அரசியலைத் தொடர வேண்டும். அது நீண்டது. கடினமானது. உச்சமான பொறுமையைக் கோருவது. போரைப்போல விறுவிறுப்பற்றது. ஆனால், அதைத்தான் நாம் தொடர வேண்டும். கால நிர்ப்பந்தம், வரலாற்று நிர்ப்பந்தம் அதுவே. அதைச் செய்ய முடியாமலிருக்கும் தமது தவறையும் பலவீனத்தையுமே இந்த பொ.வே என்ற அவசர நடவடிக்கை காட்டுகிறது. அதாவது இவர்கள் யாரும் நடைமுறையில் களப்பணி செய்யத் தயாரில்லாதவர்கள். உண்மையையும் யதார்த்தத்தையும் எதிர்கொள்வதற்கான துணிவற்றவர்கள் என்பதால் “தமிழ் மக்கள் பேரவை”யைப்போல இப்பொழுது பொ.வே என்ற பலூனை ஊதிப்பெருப்பிக்கப் பார்க்கிறார்கள். ஒரு ஆறு மாதம் இவர்களால் தாக்குப் பிடிப்பது கடினம். பிறகு இதெல்லாம் காற்றுப்போகக் கைவிடப்படும் ஒன்றாகி விடும். ஆனால், இதையிட்டெல்லாம் இவர்கள் ஒரு போதும் பொறுப்புக் கூறுவதும் இல்லை, திருத்தம் செய்வதும் இல்லை. இப்படிப் பல விடயங்கள் உண்டு. உண்மையில் செய்ய வேண்டியது இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய அரசியலும் வேலைத்திட்டமுமே. கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில், புதிய சூழலுக்குரிய (போருக்குப் பிந்திய) அரசியலைப் பகுத்து அதை முன்னெடுக்க வேண்டும். அதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகிறது. சமாதானத்துக்கான – தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியுங்கள், அதில் ஈடுபடுங்கள் என. அதாவது மிக நிதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வுக்கான அரசியலை. நிச்சயமாக பகை வளர்ப்பு அரசியலை அல்ல. ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, போருக்கு முந்திய, போர்க்காலத்தைய பகை வளர்ப்பு என்ற தோற்றுப்போன, தோல்வியைத் தரக்கூடிய அரசியலையே. இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல. ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த காலத்தில் கூட இவர்களுக்கு எந்தச் சேதாரங்களும் ஏற்பட்டதில்லை. 30 ஆண்டுகாலப்போரை ஆதரித்த இவர்களின் உடலில் ஒரு சிறு கீறல் விழுந்ததில்லை. என்பதால்தான் இன்றும் போர்வீரர்களாக வெறிகொண்டு நிற்க இவர்களால் முடிகிறது. எனவேதான் தமிழ் அரசியல் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்லப்படும் ஈழத்தமிழர்களுடைய அரசியலானது, பெரும்பாலும் சிறுவர்களுடைய மணல் விளையாட்டைப்போன்றே உள்ளது எனக் கூறவேண்டியுள்ளது. கற்பனை அதிகம். முயற்சிகளும் அதிகம். நல்விளைவுகள் எதுவுமில்லாதவை. சிறுபிள்ளை மணல் விளையாட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியாவது இருக்கும். வெளியே பாதிப்பிருக்காது. இங்கே முன்னெடுக்கப்படும் தமிழ் அரசியலில் எதிர்விளைவுகளே அதிகம். குருதியும் கண்ணீருமே அதனுடைய விளைவு மொழி. இதைப்பொருட்படுத்தாமல் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். இது வன்மையான கண்டத்துக்குரியது என்று சொல்ல வேண்டியுள்ளது. https://arangamnews.com/?p=10695
  5. வீசா நடைமுறையில் தலையிடுமாறு ரணிலிடம் கோரியுள்ள சுற்றுலாத்துறையினர் சுற்றுலா விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தில் தலையிடுமாறு இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பங்குதாரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) வலியுறுத்தியுள்ளனர். 2024 ஏப்ரல் 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறையின்படி, அனைத்து சுற்றுலா விசா விண்ணப்பங்களையும் ஒரு தனியார் நிறுவன இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது முன்னர் பயன்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் இயக்கப்பட்ட மின்னணு பயண அங்கீகார (ETA) அமைப்பை மாற்றுகிறது. இந்நிலையில், புதிய செயன்முறையில் சுற்றுலாப் பங்குதாரர்கள் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்படி, மின்னணு பயண அங்கீகார அமைப்பு மூலம் முன்பு கிடைத்த ஒற்றை நுழைவு 30 நாள் விசா இனி வழங்கப்படாது. தற்போது, ஆறு மாத பல நுழைவு விசா மட்டுமே 100.77 டொலர் கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த விசா கட்டணம், ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணமாகும். இது, இலவச அல்லது மலிவான விசாக்களை வழங்கும் பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுக்கிறது. அத்துடன், புதிய இணையத்தளத்தின் விண்ணப்பச் செயல்முறை சிக்கலானது என்று தொழில்துறை பங்குதார்கள் விமர்சித்துள்ளனர். இதன் காரணமாக. 2024ஆம் ஆண்டில் தொழில்துறையின் 2.3 முதல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கு பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர் https://akkinikkunchu.com/?p=275698
  6. தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பயணம் மற்றும் தரைவழிப்பயணம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான படகுச் சேவை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பு வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அதனை நிறைவேற்றி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்று சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார். நில வழித்தட திட்டத்திற்கு மேலதிகமாக தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது உட்பட எரிசக்தி துறையின் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் எண்ணெய் குழாய் இணைப்பதே இந்தியாவின் நோக்கமாகும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=275707
  7. கனடாவில் கைதான தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல் கனடாவின் டர்ஹாம்(Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இரு தமிழர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு தமிழர்கள் கைது இந்த மோசடி தொடர்பில் Ajax நகரை சேர்ந்த லக்சாந்த் செல்வராஜா (வயது 27) மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் (வயது 25)ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் இருவருக்கும் எதிராக 40 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://akkinikkunchu.com/?p=275733
  8. உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள் Vhg மே 03, 2024 இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன் உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். அதேபோல யாழ்ப்பாண தமிழ்த் தேசிய உணர்வாளன் உமாகரன் ராசையா அவரும் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். https://www.battinatham.com/2024/05/2.html
  9. 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி Vhg மே 04, 2024 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/05/13.html
  10. ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்! இனியபாரதி. சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கோசங்களை எழுப்பினர். அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினர். அரசஅதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். (ச) https://newuthayan.com/article/ஊடக_சுதந்திர_தினத்தை_முன்னிட்டு_யாழில்_போராட்டம்!
  11. யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான் May 3, 2024 தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துதல் அளித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல பகுதிகள் போராட்டக்களமாகவே மாறிவருகின்றது. அதுவும் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களின் வீரம் செறிந்த ஆற்றல்களைக் கொண்டிருந்தவர்கள் ஆண்ட பகுதிகள் எல்லாம் இன்று தமது இருப்புக்காக போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவருகின்றனர். இன்று மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 225நாட்களையும் தாண்டி பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில் வாகரை பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு வாகரை மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையினையும் காணமுடிகின்றது. மட்டக்களப்பு வாகரை பிரதேசம் என்பது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தளமாகயிருந்த பிரதேசமாகும். வடகிழக்கிற்கு இணைப்பு பாலமாகயிருந்து இக்கட்டான யுத்த காலத்தில் வடக்கிற்கு போராளிகளை அனுப்பிவைப்பதற்கான முக்கிய தள பகுதியாகயிருந்ததுடன் கிழக்கின் ஒரு கட்டளை மையமாகவும் இருந்துவந்தது. இன்று வாகரையில் நடக்கும் சம்பவங்களும் செயற்பாடுகளும் அங்கு தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. வாகரை பிரதேச செயலகப்பிரிவானது 589 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதுடன் 16 கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டது. வாகரைப் பிரதேச செயலகம் எனப்படும் கோறளைப்பற்று வடக்கு பிரிவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதியை உள்ளடக்கியது. இப்பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் அதன் எல்லைகளாக வடக்கில் வெருகல் ஆற்றையும் திருகோணமலை மாவட்டத்தையும், கிழக்கில் வங்காள விரிகுடா கடலையும், தெற்கில் கோறளைப்பற்று மத்தி பிரிவையும், மேற்கில் பொலன்னறுவை மாவட்டத்தையும் கொண்டுள்ளது. அனைத்து வளங்களையும் இந்த பகுதி கொண்டிருக்கின்றபோதிலும் இங்குள்ள வளங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு பதிலாக அப்பகுதி வளங்களை தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மையினத்தவர்களுக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யுத்தம் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தெற்கினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினருக்கு வளமிக்க சுமார் 1500 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாக இல்மனைட் அகழுதல், இரால் பண்ணை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இல்மனைட் அகழ்வு செய்யப்படுமானால் வாகரை பிரதேசத்தின் பல பகுதிகள் அழியும் நிலைமைமையும் ஏற்படும் என வாகரை பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல தடவை வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்திய மக்கள் மட்டக்களப்பு நகருக்கும் வருகைதந்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகத்தினை தாண்டியதாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். குறிப்பாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகத்தினை அடக்கி ஒடுக்குவதற்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர்.ஒரு பகுதியில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்தவேண்டுமானால் அங்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர். தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு தேவையானவற்றினை மேற்கொள்ளல், ஆசைகாட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல், கொள்ளையர்களை அரசியலுக்குள் கொண்டுவந்து தமது தேவைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் போன்ற பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றது. வாகரையில் இல்மனைட் அகழ்வு என்பது வாகரையின் கரையோரப்பகுதியை முற்றாக அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. வாகரை பகுதியின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையினை அண்டியுள்ளதால் அதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. யுத்த காலத்தில் தமிழிழீ விடுதலைப் புலிகளின் பொருண்மிய துறையின் பெரும்பங்களை வாகரை கடற்பகுதியே பூர்த்திசெய்துவந்தது.இதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் விருத்தியடைந்ததுடன் பொருண்மியமும் வளர்ச்சிபெற்றது.யுத்ததிற்கு பின்னர் குறித்த செயற்பாட்டினை பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான ஜெயம் என்பவர் பொறுப்பேற்று அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெயற்பட்டதன் காரணமாக வாகரை மக்கள் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லமுடியாத நிலையிருந்தது. எனினும் பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் காரணமாக அந்த நிலைமை தளர்ந்து வாகரை மக்கள் கடற்பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் நிலையேற்பட்டது. எனினும் தொடர்ச்சியாக வாகரை பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கடலை நம்பியே வாகரையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் இன்று வெருகல் தொடக்கம் வாகரையின் காயன்குடா வரையான பெருமளவான கடற்பகுதியில் இல்மனைட் அகழ்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதற்காக தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கடற்பகுதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வாகரை பகுதிகளின் மக்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமல்ல அப்பகுதியையே அழிக்கும் நிலையுறுவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் அரசாங்கம் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையினை எடுத்துவருகின்றது. இந்த திட்டத்திற்கு பின்புலமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் செயற்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கதிரவெளி தொடக்கம் காயன்குடா வரையிலான மக்கள் இந்த இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடிவரும் நிலையில் வறிய மக்களின் நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு பொருட்களையும் பணத்தையும் வழங்கி எதிர்ப்பு நிலையினை மாற்றுவதற்கான முயற்சிகள் பிள்ளையான் போன்றவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு எதிராகவும் வாகரை பிரதேச மக்கள் போராடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதேபோன்று வாகரையில் இரால் பண்ணை என்ற திட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இரால் பண்ணை ஆரம்பிக்கப்படுமானால் வாகரையில் நன்னீர் மீன்பிடியை நம்பியுள்ள சுமார் 15ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாகரை பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரான தபேந்திரன் தெரிவிக்கின்றார். “கடந்த காலத்தில் 2500 நிலப்பரப்பினை ஆற்றினை அண்டிய வகையில் இந்த இரால் வளர்ப்புக்கு ஒதுக்க நடவடிக்கையெடுக்கத்தபோது நாங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி அதனை தடுத்து நிறுத்தினோம். ஆனால் இன்று அந்த திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த ஆற்றினை நம்பியே அந்த 15ஆயிரம் குடும்பங்களும் உள்ளன.அங்கு இரால் வளர்ப்பு நடைபெற காணிகள் வழங்கப்படுமானால் முதலாளிகள் இலாபம் ஈட்டுவார்கள் ஆனால் ஆற்றினை நம்பியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரத்தினை இழப்பார்கள். அத்துடன் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சுமார் 45ஆயிரம் கால்நடைகள் உள்ள மேய்ச்சல் தரை பாதிக்கப்படுவதுடன் வாகரையினை தாங்கிய நிலையில் உள்ள கண்டல் தாவரங்களும் அழிக்கப்படும் நிலையேற்படும். இதேபோன்று ஆற்றினை சூழவுள்ள காடுகளும் அழிக்கப்பட்டுத்தான் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கடல்நீரை ஆற்றுக்குள் பாய்ச்சிதான் இரால் பண்ணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசத்தினை அழிக்கும் செயற்பாடுகளாகவே நாங்கள் பார்க்கின்றோம். யுத்த காலத்தில் நாங்கள் போராடி பாதுகாத்த பகுதியை இன்று இலகுவில் அழிக்கும் நிலையினை பார்த்துக்கொண்டு நாங்கள் பொறுமையாக இருக்கமுடியாது.எமது நிலத்தினை பாதுகாப்பதற்கு நாங்கள் உயிரைகொடுத்து போராடவும் தயாராகயிருக்கின்றோம்” என்று தபேந்திரன் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் வாகரை பிரதேசத்தின் இந்த அழிவின் பின்னணியில் பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செயற்படுவதாக வாகரை பிரதேச மக்களும் அரச உயர் அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் வாகரை பிரதேச மக்களின் இந்த போராட்டத்தினை வடகிழக்கு தழுவிய போராட்டமாக முன்னெடுத்து வாகரை பிரதேச மக்களின் இருப்பினை தக்கவைப்பதற்கு தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அனைவரும் முன்வரவேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்போல் யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும். கிழக்கில் தமது இருப்பினை தக்கவைப்பதற்கு வடகிழக்கு இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஓரளவாவது நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். https://www.ilakku.org/யாழ்-தொடக்கம்-வாகரை-வரைய/
  12. காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை maheshMay 3, 2024 காசாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், போர் முன்மொழிவு தொடர்பில் தமது நிலைப்பாடு பாதகமாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பான (ஹமாஸ்) அமைப்பின் நிலைப்பாடு பாதகமாகவே இருப்பதாகவும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் ஒசாமா ஹம்தான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு நேற்று (02) குறிப்பிட்டிருந்தார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தமது அமைப்பின் நோக்கமாக இருந்து வருகிறது என்று ஹமாஸ் மூத்த அதிகாரி சுஹைல் அல் ஹின்தி ஏ.எப்.பி. இடம் குறிப்பிட்டுள்ளார். இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். காசாவின் தெற்கு விளிம்பில் உள்ள ரபாவில் 1.5 மில்லியன் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அந்தப் பகுதியிக்கு தரைப்படையை அனுப்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக குறிப்பிட்டிருந்தார். ‘உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நாம் ரபாவுக்குள் நுழைந்து ஹமாஸ் படைப்பிரிவுகளை ஒழிப்போம்’ என்று நெதன்யாகு இந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய ஹமாஸ் அதிகாரி ஹின்தி, ‘எல்லாவற்றையும் அழித்து வரும் பலஸ்தீன மக்கள் மீதான இந்தப் பயங்கரப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் அனைத்து பலஸ்தீன போராட்டக் குழுக்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளன. ஆனால் அது எந்த விலை கொடுத்ததாகவும் இருக்காது’ என்று குறிப்பிட்டார். ‘எந்த சூழ்நிலையிலும் வெள்ளைக் கொடியை உயர்த்தவோ அல்லது இஸ்ரேலிய எதிரியின் நிபந்தனைகளுக்கு சரணடையவோ முடியாது’ என்று அவர் வலியுறுத்தினார். காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்கும்படி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கல் ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி வருகிறார். 40 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீனர்களுக்காக பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்தை மத்தியஸ்தர்கள் ஹமாஸிடம் முன்வைத்துள்ளனர். இந்த முன்மொழிவுக்கு விரைவில் பதிலளிப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. ‘ஹமாஸ் ஆம் என்று குறிப்பிட்டு இதனைச் செய்ய வேண்டும்’ என்று ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்த பின்னர் ஏழாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் தெரிவித்தார். பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், ‘பலஸ்தீன மக்கள் மீது அக்கறை செலுத்தி அவர்கள் படும் வேதனையை உடன் நீக்கும் உண்மையான நோக்கத்தை ஹமாஸ் கொண்டிருந்தால் இந்த உடன்படிக்கையை அவர்கள் ஏற்பார்கள்’ என்றார். காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கெய்ரோவில் இடம்பெற்று வருகிறது. உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு தேவையான நெகிழ்வுப் போக்கை அனைத்து தரப்புகளும் காண்பிக்க வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹசாமிஹ் ஷுக்ரி அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்த முயற்சியாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டபனே செஜோர் கெய்ரோ பயணித்த நிலையில் அவரை சந்தித்தபோதே சுக்ரி இதனைத் தெரிவித்தார். எனினும் மற்றொரு தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் உடன்படும் என்பதில் சந்தேகம் நீடிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இஸ்ரேல் தமது படை நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் ஹமாஸிடம் இருந்து இன்னும் ஓர் இரு நாட்களில் போர் நிறுத்தம் குறித்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கட்டார் மத்தியஸ்தர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் முன்மொழிவில் ‘உண்மையான சலுகைகள்’ இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆரம்ப போர் நிறுத்தத்தை தொடர்ந்து ‘நிலையான அமைதி’ மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றம் ஆகியவை உள்ளடங்குகிறது. எனினும் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஹமாஸ் நிபந்தனை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் 28 பேர் பலி இந்நிலையில் மத்திய காசாவின் பிராதான சந்தியில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் மீது பலஸ்தீன போராட்டக் குழுக்கள் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதன் இரவு தொடக்கம் காசாவில் இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றையும் இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளன. மத்திய காசாவின் அல் சஹ்ரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அங்கு குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து மூன்று சிதைந்த உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு நகரான கான் யூனிஸில் கா அல் குரைன் பகுதில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்தாக வபா குறிப்பிட்டது. அதேபோன்று காசா நகரின் தெற்கில் உள்ள அல் செய்தூன் பகுதியின் இஷ்தைவி குடும்பத்திற்கு சொந்தமான குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய குண்டு மழையில் இருவர் கொல்லப்பட்டதோடு காணாமல்போன பலரும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 51 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,596 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 77,816 பேர் காயமடைந்துள்ளனர். https://www.thinakaran.lk/2024/05/03/world/58082/காசா-போர்-நிறுத்தத்-திட்/
  13. கணவன் படுகொலை: மனைவி தவறான முடிவு வவுனியா, நெடுங்கேணி் - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவியான 37 வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அண்மைக்காலமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்திருந்தனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/கணவன்-படுகொலை-மனைவி-தவறான-முடிவு/175-336686
  14. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது. நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது. இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும். மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன. இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார். https://globaltamilnews.net/2024/202323/
  15. தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன? April 30, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ்த்தேசியக் கட்சி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர். கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டுக்கும் இதொரு நல்ல முடிவாக அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு (இனப்பிரச்சினை, சமூக, பொருளாதாரப் பிரச்சினை உட்பட அனைத்துக்கும்) தீர்வை எட்டுவதற்கு ஒரு சரியான கட்டமைப்பும் மாற்று அரசியலும் வேண்டும் எனவும். “கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு பொதுச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும். நிரந்தரத் தலைமைக்குப் பதிலாக அதில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகளுக்குச் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தனித்த முடிவுகள் எடுக்கப்படாமல், முடிவுகள் திணிக்கப்படாமல், கூட்டாகவே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். மக்களுக்கான அரசியலானது செயற்பாட்டரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பல நியாயமான கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய தரப்புகளால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது. அத்துடன் “அரச ஆதரவு நிலைப்பாடு என்றால் அது எந்த அடிப்படையிலானது? அதனுடைய முன்னேற்றமென்ன? அரச எதிர்ப்பு என்றால் அதன் தாற்பரியமென்ன? அது தருகின்ற அரசியல் வெற்றிகள் என்ன? இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன? அது எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? அதனை அடைவதற்கான வழிமுறைகள் என்ன?” என்ற கேள்விகளையும் இவை எழுப்பியிருந்தன. இதையெல்லாம் தமிழரசுக் கட்சி பொருட்படுத்திக் கொள்ளவேயில்லை. அதனுடைய மூத்த தலைவர்களான இரா. சம்மந்தன், மாவை சேனாதிராஜா தொடக்கம் சுமந்திரன், சிறிதரன் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலையாளர்கள் வரையில் அனைவரும் பொதுக் கூட்டமைப்பு ஒன்றுக்கான அடிப்படைகளைப் புரிந்து கொள்ள மறுத்தனர். இவர்கள் எவரும் கூட்டமைப்புக்கான அரசியற் பண்புடனும் அதற்குரிய மனப்பாங்குடனும் செயற்படவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்தியும் முதன்மைப்படுத்தியுமே வந்தனர். தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற வகையிற் செயற்பட்டும் வந்தனர். இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து நொறுங்கியது. 2010 இல் ஒரே அணியாக இருந்த கூட்டமைப்பு, உடைந்து இப்பொழுது ஏழு துண்டாக நிற்கிறது. கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி, சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா என ஒவ்வொரு தரப்பாக வெளியேறி, இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவையும் தனித்து நிற்கும் சூழல் உருவாகியிருக்கிறது. மட்டுமல்ல, கூட்டமைப்பில் உச்சச் செல்வாக்கைச் செலுத்தி வந்த தமிழரசுக்கட்சி அரசியல் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரசுடன் மென்னிலை எதிர்ப்பையும் உள்வளையும் ஆதரவையும் கொண்டிருப்போர். ஐக்கிய இலங்கைக்குள் ஏனைய சமூகத்தினருடன் இணைந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட முயற்சிப்பவர்கள். மறுதலையாக மாவை சேனாதிராஜா, சிறிதரன், அரியநேந்திரன், ஸ்ரீநேசன் போன்றோர் தீவிர அரச எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் ஆதரவு என்ற நிலைப்பாட்டையுடையவர்கள். கற்பனாவாதத் தன்மையுடையவர்கள். தமிழரசுக் கட்சியின் இந்த இரட்டைநிலை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் பிரதிபலித்தது. இப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சிறிதரன் அணியும் மென்போக்கைக் கொண்ட சுமந்திரன் அணியும் தலைமைத்துவப் போட்டியில் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம். இதனால் உரிய – பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முடியாதிருந்தது. இதற்கு நல்ல உதாரணம், ‘நல்லாட்சிக் காலம்’ என வர்ணிக்கப்பட்ட 2015 – 2020 வரையான மைத்திரி – ரணில் ஆட்சியின்போது சுமந்திரனும் சம்மந்தனும் வெளிப்படையாகவே அரச ஆதரவு நிலைப்பாட்டிலிருந்தனர். ஏனையோர் அதை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த ஒற்றையாட்சிக் கோட்பாடு பற்றிச் சுமந்திரன் தமிழ்மக்களுக்கு வியாக்கியானம் செய்து வந்தார். இதனை கூட்டமைப்பிலிருந்த சுரேஸ், செல்வம், சிறிதரன் போன்றோர் விமர்சித்து வந்தனர். இவ்வாறான நெருக்கடிகள் நிறைந்த பின்னணியில்தான் DTNA இன் உருவாக்கம் 2023 இல் நிகழ்ந்தது. அது தடுமாற்றங்களிலிருந்து விடுபட்டு, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதியதொரு வழிமுறையைக் காண்பதாக இருக்கும் என நம்பப்பட்டது. இதற்குக் காரணம், DTNA இல் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியன ஆயுதப்போராட்ட அரசியலிலும் ஜனநாயக வழிமுறை அரசியலிலும் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவை. அவற்றின் தலைவர்களுக்கு இவை இரண்டிலும் தொடர்ச்சியான அரசியல் அனுபவமுண்டு. ஆகவே இரண்டு அனுபவங்களின் வழியாகவும் புதிய அரசியலை – குறிப்பாகச் செயற்பாட்டு அரசியலை – DTNA யினால் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக தமிழ்ப்பரப்பில் செயற்பாட்டு அரசியலை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் மக்களிடம் இருந்தது. போராட்ட அரசியலுக்கு முன்னரும் பின்னரும் செயற்பாட்டு அரசியல் இல்லை. இரண்டு காலகட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசுக் கட்சியிடத்திலும் தமிழ்க் காங்கிரஸிடமும் செயற்பாட்டு அரசியற் பாரம்பரியமோ அனுபவமோ இல்லை. ஆனால், விடுதலைப் போராட்ட இயக்க அனுபவங்களுக்கூடாகப் பயணித்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்றவற்றுக்கு செயற்பாட்டு அரசியற் பாரம்பரியம் இருந்தது. ஆகவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும். அது கற்பனாவாத (மிதவாத) அரசியலில் இருந்து விடுபட்டு, நடைமுறை அரசியலை, மக்களுக்கான அரசியலை நோக்கிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாகும். TNA யிலிருந்து வெளியேற்றத்துக்குப் பின்னர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு DTNA இன்னும் தன்னைத் தனித்த அடையாளமாகக் காட்டவில்லை. அதாவது, கொள்கை ரீதியாகவும் கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றிலும் தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட வேறுபட்டதாக உணர முடியவில்லை. இந்தப் பின்தங்கிய நிலை தொடருவதற்கான காரணம் என்ன? தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட்டு வெளியேறிய பின் DTNA இன் புதிய செயற்பாட்டுப் பரப்பு, புதிய செல்வாக்குப் பரப்பின் விரிவாக்கம் எதுவாக உள்ளது? DTNA இன் புதிய பெறுமானங்கள், அது பெற்றுக் கொண்ட – உருவாக்கிய நல்லடையாளங்கள் என்ன? இந்தக் கேள்விகளை DTNA விடம் ஏன் எழுப்ப வேண்டியிருக்கிறது என்றால் – 1. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த ஒரு (TNA) கட்டமைப்பிலிருந்து வெளியேறி, புதிய அணியாக DTNA செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக முன்னதற்கும் பின்னதற்குமான வேறுபாட்டை அது காண்பிக்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் அதை முன்னெடுத்துச் செல்லும் அணுகுமுறைகள் எப்படியானவை எனவும் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டுக்குமிடையிலான அரசியல் வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்துவதோடு, பிரிந்து சென்று புதிதாக இயங்குவதற்கான நியாயத்தையும் சொல்வதாக இருக்கும். ஆனால், அப்படி எதையும் இதுவரையில் உணரமுடியவில்லை. 2. குறிப்பிட்ட அளவுக்கு அவ்வப்போது தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறது DTNA. அதேவேளை அது மீண்டும் தமிழரசுக் கட்சியோடு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு) இடைநிலைச் சமரசத்துக்கும் முயற்சிக்கிறது. இந்தத் தத்தளிப்பு நிலை அல்லது தடுமாற்றம் ஏன்? ஏனென்றால், DTNA உம், தமிழரசுக் கட்சியைப் போலச் செயற்பாட்டு அரசியலை விட்டு, பிரமுகர் அரசியலிலும் முற்று முழுதான கற்பனாவாத அரசியலிலும் மூழ்கிப்போயுள்ளது. அதனால்தான் அதனால், கொள்கை, கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றால் தனித்துவப்படுத்திக் காண்பிக்க முடியவில்லை. 3. இதனை மறைத்துக் கொள்வதற்காக அது தீவிர அரசியலைப் பேச முற்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் என்ற கதையாடலே தமிழ்த்தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத தடுமாற்றத்தின் விளைவுதான். அதொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல, தமிழ் மக்களுடைய அல்லது தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் மீட்சிக்கான வழிமுறையும் அல்ல. மட்டுமல்ல, தீவிர அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டே, அதனுடைய தலைவர்கள் அதிதீவிர அரசியலை முன்னெடுக்கின்றனர். இந்த அதிதீவிர அரசியல் தமக்குரிய அதிகாரத்தையும் எதிர்காலத்தையும் தமிழ்ச்சமூகத்திடமிருந்து பெற்றுத் தரும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அதைப் பேசுவதற்கும் அந்த வழியில் செயற்படுவதற்கும் கஜேந்திரகுமாரின் அணியும் சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரின் அணியும் இருக்கிறதே. பிறகேன் இவர்கள் (DTNA)? தேவையேற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படத் தயார் என DTNA இன் தரப்பிலிருந்து சித்தார்த்தன், செல்வம் போன்றோர் சொல்லியிருக்கின்றனர். அதாவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு ஒற்றுமையாக – ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அதற்காகவே இப்படிச் சிந்திக்கிறோம் என்கிறார்கள். அப்படியென்றால், பிரிந்து செல்வதற்கு காரணமாக இருந்த நிலவரங்களை தமிழரசுக் கட்சி சீராக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது எதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மீளிணைவைப் பற்றி DTNA சிந்திக்கலாம்? அப்படியாயின் தனித்து இயங்குவதில் DTNA க்கு உள்ள தயக்கம் – அச்சம்தான் காரணமாக இருக்க வேணும். நிச்சயமாக. இன்னும் மக்கள் DTNA ஐ பிறிதொரு சக்தியாக அடையாளம் காணவில்லை. ஒரு தேர்தல் வருவதற்கு முன்பு, மக்களிடம் கணிப்பீடு வரமுன்னர் எப்படி இப்படிச் சொல்லமுடியும்? என்று DTNA தரப்பில் கேள்வி எழுப்பப்படலாம். தமது கூட்டணிக்குப் பெயர் சூட்டப்பட்ட விதத்திலிருந்து, முன்னெடுக்கப்படும் அரசியல், அவ்வப்போது கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சியினருடனான பொது நிகழ்வுப் பங்கேற்புகள் வரையில் DTNA தனித்துத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக தான், இன்னும் கூட்டமைப்பின் நிழலாக இருக்கிறேன் என்றே காட்ட முற்படுகிறது. தனித்து DTNA என நின்றால், பின்னடைவைத் தந்து விடுமோ என்ற அச்சம் அதற்குண்டு. இந்த அச்சத்துக்குக் காரணம், DTNAதான். ஏனென்றால், தமிழ் அரசியல் அரங்கில் விடுதலைப்புலிகள் இல்லாது போன 2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளிலும் DTNA இன் கட்சிகளால் (இயக்கத்தினரால்) ஒரு புதிய அரசியலை, தங்களுடைய தனித்துவ அடையாளத்துடன் முன்னெடுக்க முடியவில்லை. அப்படிச் செய்வதற்கு முன்பு புலிகள் தடையாக இருந்தனர். அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். 2009 க்குப் பிறகு அப்படிச் சொல்ல முடியாது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியைக் கூட DTNA உள்ளிட்ட பிற சக்திகள் எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லையே. அதை மேவிச் செல்லவும் முடியவில்லையே. 4. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது வெறும்கோது மட்டுமே. அதிலிருந்து அனைத்துத் தரப்பினரும் வெளியேறி விட்டனர். தமிழரசுக் கட்சி மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற லேபிளில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிளவுண்டு சிதையக் கூடிய நிலையில். உள்முரண்பாடுகள் முற்றி நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது. இந்த வாய்ப்பான சூழலில் DTNA தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். தனக்கு வெளியே உள்ள சக்திகளையும் இணைத்துக் கொள்ளலாம். தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் சமரசம் செய்வதற்கு முயற்சிப்பதை விட அதற்கு வெளியே உள்ள சக்திகளை இணைத்துத் தன்னை விரிவாக்கம் செய்வதே பயனுடையது. ஆனால், அது அப்படிச் செய்யவில்லை. அதில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை. இது ஏன்? 5. தமிழரசுக் கட்சியை DTNA இன்னும் விமர்சிப்பதற்குக் காரணம், அதில் முன்னணிப்பாத்திரம் வகிக்கின்ற – எதிர்காலத்தில் முன்னணியில் திகழப்போகின்ற – சுமந்திரன், சிறிதரன் போன்றோருடன் DTNA வினரால் உடன்பட்டுப் பயணிப்பதில் உள்ள நெருக்கடியே! இந்த விமர்சனத்தைக் கூட சுரேஸ் பிரேமச்சந்திரனும் ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி போன்றோரும்தான் செய்கின்றனர். அபூர்வமான சந்தர்ப்பங்களில் செல்வம் அடைக்கலநாதன் ஏதாவது சொல்வார். சித்தார்த்தன் எதுவுமே பேசுவதில்லை. ஆனால் DTNA என்ற வகையில் தமிழரசுக் கட்சி மீதான விமர்சனங்களுக்கு அனைவரும் உடன்பாடு கொண்டேயுள்ளனர். அந்தளவுக்குக் கசப்பான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. முக்கியமாகச் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை விடச் சிறிதரனும் சுமந்திரனும் அரசியல் வரலாற்றில் ஜூனியர்கள். ஜூனியர்களாக இருந்தாலும் ஏனையவர்களை விட இருவரும் செல்வாக்கோடும் அரசியல் அதிகாரத்தோடும் தற்போதுள்ளனர். கூட்டமைப்பில் எல்லோரும் இணைந்திருந்த காலத்திற் கூட சுமந்திரனும் சிறிதரனும் ஏனையவர்களை மிஞ்சும் வகையிலேயே, அவமதிக்கும் வகையிலேயே நடந்து கொண்டனர். சிறிதரன் பல சந்தர்ப்பங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், சாடியிருக்கிறார். கிளிநொச்சியில் ஏனைய கட்சிகளின் செயற்பாட்டை அவர் முற்றாகவே மட்டுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுமிருந்தார். அத்துடன், தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் தொடர்ச்சியாகவும் காட்ட முற்படும் சிறிதரனுக்கு ஏனையவர்களை, விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருந்தவர்கள் என்ற கடந்த கால வரலாற்றைத் தோண்டியெடுத்து முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சுமந்திரனுக்கு இது வேறு வகையில் இருந்தது. அவர் சம்மந்தனின் தொடர்ச்சியாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தினருடனும் இணைந்து பெறக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்தித்தும் பேசியும் வந்தார். இது தமது கடந்த கால வரலாற்றின் நிழலை மறைத்து புதிய (அரச எதிர்ப்பு – தமிழ்த்தேசிய) அரசியலைத் தீவிர நிலையில் முன்னெடுக்கும் சுரேஸ், செல்வம் போன்றோருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. மட்டுமல்ல, கூட்டமைப்பில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளுக்கும் சமநிலையான அடையாளத்தையும் உரிமையையும் வழங்குவதற்குச் சுமந்திரன் ஏற்புடையவராகவும் இருக்கவில்லை. அத்துடன் ஏனையவர்கள் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு – அனுசரித்து – நடக்க வேண்டும் என்று சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சம்மந்தன், மாவை சேனாதிராஜா வரையில் அனைவரும் நடந்து கொண்டனர். அதாவது தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதை அனுசரித்து ஏனையவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றவிதமாகச் செயற்பட்டமை. இதையெல்லாம் முறியடிக்கக் கூடிய ஒரு செயற்திட்டத்தைக் கூட DTNA உருவாக்கவில்லை. பதிலாக அது கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சிறிதரன் போன்றோரின் அதிதீவிர அரசியலின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பின்னோடி எந்தப் புதிய சாதனைகளையும் DTNA வினால் நிகழ்த்த முடியாது. தன்னை இழப்பதில்தான் அது போய் முடியும். குறைந்த பட்சம் தம்முடைய முன்னோடித் தலைவர்கள் பத்மநாபா, உமா மகேஸ்வரன், சிறிசபாரத்தினம் போன்றோரின் அரசியற் தொடர்ச்சியையாவது பேண முற்படலாம். அதாவது விஞ்ஞானபூர்வமான, சமகாலத்தன்மையுடைய அரசியலொன்றைப் பகுத்தாய்ந்து முன்னெடுக்கும் விதமாக. காலம் எதிர்பார்த்து நிற்பது அதையே. அதையே DTNA செய்ய வேண்டும். அல்லது, அதுவும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்தான் தள்ளப்படும். 00 https://arangamnews.com/?p=10689
  16. பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன் May 2, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இம்முறை அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு என்ன காரணம்? பதில் – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இரு நிலைகளில் தமிழா் தரப்பில் முன்னிலைக்கு வந்தது. ஒன்று – கடந்த காலங்களில் குமாா் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் தமிழ் வேட்பாளா்களாக ஜனாதிபதித் தோ்தல்களில் போட்டியிட்டிருந்தாா்கள். அவா்கள் பொது வேட்பாளா்கள் அல்ல. தமிழ் வேட்பாளா்கள். பொது வேட்பாளா் என்பவா் தமிழ்ப் பொதுக் கருத்தைப் பிரதிபலிப்பவராகவும், தமிழ் மக்களின் கூட்டு உளவியலைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும்தான் கருதப்படுகின்றாா். அந்த வகையில் பாா்க்கும் போது “தமிழ்ப் பொதுவேட்பாளா்” என்பவா் தமிழ்த் தேசிய ஐக்கியத்தை குறியீடாகக் காட்டும் ஒருவராக இருக்க வேண்டும். அவா் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒன்றிணைப்பாா். தமிழ் பொது வேட்பாளா் என்ற கருத்துருவம் தமிழ் ஐக்கியம்தான். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தோ்தலின் போது மு.திருநாக்கரசு இந்தக் கருத்தை முன்வைத்தவா். அப்போது அவா் அதில் ஒரு பேரம்பேசலுக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தாா். 2015 ஆம் ஆண்டுத் தோ்தலிலும் அவா் அதனை எழுதியிருந்தாா். 2019 இல் தமிழ் மக்கள் பேரவை சாா்பில் அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்தது. ஆனால், அந்த முயற்சியில் எல்லாத் தலைவா்களையும் நாம் சந்தித்தோம். பொதுவேட்பாளருக்கான சில பெயா்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், பிரதான ஒரு கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி அதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மறைமுகமாக அதற்கு எதிராகக் காணப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்போதும் பகிஷ்கரிப்பு என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தது. கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் ஒரு துலக்கமான முடிவு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் ஆதரித்தாா். இந்தப் பின்னணியில் ஒரு கட்டத்துக்கு அதனை செயலுருப்படுத்தக்கூடிய ஒரு சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதனால், அந்த விடயம் அப்படியே விடுபட்டுவிட்டது. பின்னா் இந்த முறை இது தொடா்பில் பேசத் தொடங்கியவா் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். அவருக்குப் பின்னா் இப்போது வெவ்வேறு தரப்புக்கள் முன்னெடுக்கின்றன. மக்கள் மனு என்ற சிவில் அமைப்பு இதனை முன்னெடுக்கின்றது. இது குறித்து இரண்டு கருந்தரங்குகளை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியிருக்கின்றது. இப்போது சிவில் அமைப்புக்கள் இவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரை தோ்தல் களத்தில் இறக்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது தொடா்பாக ஆராய்ந்துவருகின்றன. கேள்வி – தமிழ்க் கட்சிகள் பலவும் பொது வேட்பாளா் என்ற விடயத்தில் இணங்கிச் செயற்பட்டுவருகின்றாா்கள். ஆனால், இந்தக் கட்சிகள் அனைத்தும் இந்த இலக்கில் பற்றுறுதியுடன் இறுதிவரையில் செயற்படுவாா்கள் என நினைக்கின்றீா்களா? பதில் – ஒரு அரசியல் இலக்கை நோக்கி எல்லோரும் ஒரேவிதமான பற்றுறுதியுடனும், விசுவாசத்துடனும் இயங்குவாா்கள் என எதிா்பாா்க்கத் தேவையில்லை. சிலா் முழு விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அரை விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அதனை ஒரு டீலாகக்கூட முன்னெடுக்க முடியும். அரசியலில் இவ்வாறு பல்வகையான போக்குகள் இருக்கும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் இதனை ஒரு பேர வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்து இருந்தது. மக்கள் மனு அவ்வாறான பேர வாய்ப்பு குறித்து உரையாடவில்லை. அதனை அவா்கள் தமிழா் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் என்ற வகையில் கோட்பாட்டு ரீதியாகத்தான் உரையாடிவருகின்றாா்கள். சிவில் சமூகங்கள் இதனை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றன. அவா்கள் இதில் தெளிவாக இருக்கின்றாா்கள். தமிழ்ப் பொது வேட்பாளா் எனப்படுபவா் முதலாவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக இருப்பாா். தமிழ் மக்களை பல்வேறு வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றிணைப்பாா். தமிழ்க் கூட்டு உளவியலை அவா் பிரதிபலிப்பாா். இதுவரை காலமும் தமிழ் மக்களுடைய வாக்குகள் வெற்றுக் காசோலைகள் போல யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தான் போயிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த 3 ஜனாதிபதித் தோ்தல்களிலும் தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் ஒன்றாக நின்றிருக்கின்றாா்கள். அதாவது ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களிப்பது என்ற விடயத்தில் அவா்கள் ஒன்றாக நின்றுள்ளாா்கள். ராஜபக்ஷக்களுக்கு எதிராக என்று சொல்லிக்கொண்டு தமிழ் வாக்குகள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வெற்றுக்காசோலைகளாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த வெற்றுக்காசோலையை அா்த்தமுள்ளதாக மாற்றலாம். எவ்வாறென்றால் – தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிக்கும் வாக்காக நாம் அதனை மாற்றலாம். அதாவது, தமிழ் மக்களின் கோரிக்கை என்ன என்பதற்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக இதனை மாற்றலாம். பேர வாய்ப்பு என்பது அடுத்த கட்டம். தற்போது ஜனாதிபதித் தோ்தலில் மூவா் போட்டியிடுவாா்கள் என்பது உறுதியாகியிருக்கின்றது. ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு இடையிலான போட்டியில் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் சிங்கள வாக்குகள் சிதறலாம். அந்த இடத்தில் தமிழ் வாக்குகள் ஒரு நிா்யகரமான பாத்திரத்தை வகிக்க முடியும். இதனை ஒரு பேரவாய்ப்பாகப் பயன்படுத்த முற்படுபவா்கள் சுட்டிக்காட்டுகின்றாா்கள். ஆனால், தமிழ் மக்கள் இதனை தமக்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன். அந்த வகையில் தமிழ்ப் பொது வேட்பாளா் தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவா் ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க முடியாது. அதாவது, கட்சியைக் கடந்து, தனிநபா் என்பதைக் கடந்து ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பவராக அவா் இருக்க வேண்டும். சில கட்சிகள் இப்போதும் கேட்கின்றன, ஏன் அவசரப்படவேண்டும் என்று. அவ்வாறு கேட்பவா்கள் யாா் என்றால், பொது வேட்பாளா் குறித்து சந்தேகம் உள்ளவா்கள்தான். பொது வேட்பாளா் குறித்து முடிவெடுப்பதாக இருந்தால் இப்போதே முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு அருமையான சந்தா்ப்பம். இதனை பிறகு பாா்க்கலாம் எனச் சொல்பவா்கள் யாா் என்று பாா்த்தால், அவா்கள் டீலுக்குப் போவதற்கான வாய்ப்பை எதிா்பாா்த்துள்ளவா்கள். எந்தவொரு பிரதான சிங்கள வேட்பாளரும் தமிழ் வேட்பாளா்களுடன் டீலுக்கு வரத் தயங்குவாா்கள். அவ்வாறு வந்தால்கூட, அது ஒரு பகிரங்கமான டீலாக இருக்காது. அது அவருக்கான சிங்கள வாக்குகளைப் பாதிக்கும். அதனால், அவா்கள் தனிப்பட்ட முறையிலான பேரங்களுக்கு முன்வரலாம். https://www.ilakku.org/பொறுத்திருக்கக்-கேட்பவா/
  17. தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் – சிறீதரன் உணா்வுச்சிக உரை May 2, 2024 “இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப் போடும், ஆயிரக்கணக்கான பொது மக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:- “கட்சியின் இயக்கத்தை முடக்கி, உட்கட்சி ஜனநாயகத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பில் கருத்துரைக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதால் என்னை இன்று நீதிமன்றில் நிறுத்தியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் கடந்தும் கட்சியைத் தளம்பலற்றுக் கொண்டுசெல்வதற்காக நான் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள், எதிர்கொண்ட சமரசப் பேச்சுகள், அது சார்ந்து நான் முன்னெடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன். அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தையும் கட்சித் தலைமையின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி எனது புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்றார். https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சியையும்-அத/
  18. புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! இனியபாரதி. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதனடிப்படையில் இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/புங்குடுதீவில்_ஆரம்பமான_மனித_எலும்புக்கூடு_அகழ்வு_பணி!
  19. சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார். மேலும் விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “விஜயதாச ராஜபக்சவுக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம். அவர் இப்போது எம்மவர். அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/சுதந்திரக்-கட்சியின்-ஜனா/
  20. பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்! இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 40க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன. ஏட்டிக்கு போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை சதாம் வீதியில் நடக்கவுள்ளது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் கன்னங்கர மாவத்தை பகுதியில் நடக்கவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியின் மேதினக் கூட்டத்தை கம்பஹாவில் நடக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கொட்டகலையிலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலாவாக்கலை நகரிலும், தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளன. http://www.samakalam.com/பலத்தைக்-காட்ட-ஏட்டிக்கு/
  21. 2024 நாடாளுமன்றத் தேர்தல் “வீதிகளில் பார்க்கும் ஜனநாயகம்” : டி.அருள் எழிலன் ஏப்ரல் 2024 - டி.அருள் எழிலன் · அரசியல் மொத்த இந்தியாவையும் காவி மயமாக்கி வரும் மோடி நாட்டின் தலைநகரான டெல்லியின் அடையாளங்களையும் மாற்றி வருகிறார். டெல்லி மக்களவை வளாகத்தில் ஒரு காந்தி சிலை இருக்கிறது. நியாயமாக இந்தப் பத்தாண்டுகளில் மோடி அந்தச் சிலையைக் கடாசி விட்டு அதில் சாவர்க்கர் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியமாக அதைச் செய்யவில்லை. காந்தி சிலையை விட்டு வைத்திருந்தார். ஏன் தெரியுமா? பிரதமர் மோடியின் இந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் மொத்த எதிர்க்கட்சிகளும் இந்த காந்தி சிலையின் கீழ்தான் போராடிக் கொண்டிருந்தனர். எங்கே இந்த காந்தி சிலையை அகற்றி விட்டால் இவர்கள் மக்களிடம் சென்று போராடத் தொடங்கி விடுவார்கள் என்று மோடி அதை அகற்றாமல் விட்டார். இது வேடிக்கையாக நான் முன்பே எழுதியதுதான் என்றாலும் இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பிரதான காரணம் இதுவே. மோடி வீழ்த்தவே முடியாத தலைவர், பாஜக வெல்லவே முடியாத கட்சி என்ற கதையை வளர விட்டதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு. மிக எளிதாக வீழ்த்த முடிகிற ஒருவரை வளர விட்டு அது இன்று குடியரசு விழுமியங்களுக்கே உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்து அனைத்தையும் அழிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. இதற்கிடையில் தேர்தல் போன்ற பாவனையில் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ”தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப்பாதை” இது தேர்தல் அமைப்பை நிராகரிக்கக் கூடிய மாவோயிஸக் குழுக்களின் தேர்தல் பற்றிய பார்வையாக இருந்தது. மொத்தமாக இந்தத் தேர்தல் அமைப்பில் பங்கேற்கும் அனைவரையுமே திருடர்கள் எனச் சுட்டிய தீவிர கம்யூனிஸ்டுகளே இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். காரணம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் ஜனநாயகமும் இந்திய அரசியலைமைப்பும் இருக்குமா என்ற அச்சம்தான். முதலாளித்துவத் தேர்தல் அமைப்பில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கவேனும் நாம் இருக்க வேண்டுமே என்ற பதற்றம்தான் காரணம். அந்த அளவுக்கு அச்சம் நிறைந்த தேர்தலாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தியத் தேர்தல் கமிஷன் தரவுகள்படி இந்தியாவில் ஆறு தேசியக் கட்சிகளும் 57 மாநிலக் கட்சிகளும் 2 ஆயிரத்து 597 அங்கீகரிக்கப்படாத சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன. ஏதோ ஒருவகையில் கோடிக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சிகளின் அடையாளம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். இந்தியாவில் உள்ளூராட்சித் தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை எல்லாத் தேர்தல்களுமே திருவிழாதான். மதப்பண்டிகை போலவே மக்களும் வாக்களிப்பதை ஒரு தெய்விகக் கடமையாகவே கருதிச் செய்கிறார்கள். ஆனால் ஒரு வாக்குச் சீட்டை இயந்திரத்தின் வழியே செலுத்துவதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதங்கள் அதை மிக மோசமான மோசடியான தேர்தல் என்பதையே உணர்த்துகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது தேசியக் கட்சியாகக் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. இன்னொரு தேசியக் கட்சியாக இருந்த இடதுசாரிகள் கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஜனதாக் கட்சி உட்பட வேறு சில கட்சிகள் தேசிய அளவில் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சவால் கொடுக்கும் சக்திகளாக இல்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. சொல்லப் போனால் ஒரு தேசியக் கட்சிக்கு முதன் முதலாக விடை கொடுத்தது தமிழ்நாடுதான். கேரளத்தில் இடதுசாரிகளின் வெற்றி இரண்டு தேசியக் கட்சிகளின் ஆதிக்கங்களுக்கு வழி வகுத்தது. தமிழ்நாட்டில் முழுமையாக தேசியக் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு மாநிலக் கட்சிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. மோடி ஒரு பிராண்டாக மாறியது எப்படி? 2014-ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு வளர்ச்சி என்பதை முன் வைத்து குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்தவர் மோடி. ஆர்.எஸ்.எஸ் அவரைப் பிரதமர் வேட்பாளராக டெல்லிக்கு அனுப்பி அதற்குரிய வேலைகளையும் செய்தது. இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே ஒரே ஒரு முகம்தான். ஆனால் பாஜகவுக்கும் ஒரு முகம்தான். அது மோடியாக முன் வைக்கப்பட்டது, ஆனால் அது ஆர்.எஸ்.எஸ் என்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்பின் ஒரு வெகுசனத் தேர்தல் அமைப்பு என்பதை ஏனோ யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்றிருந்த அதிருப்திகளை மோடி பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது முறையும் வென்று பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தப் பத்தாண்டுகளில் கீழ் மட்டம் முதல் ஆர்.எஸ். எஸ் என்ற சிந்தாந்த அமைப்பையும், பாஜக என்ற அரசியல் கட்சியையும் இந்திய அரசு என்ற நிறுவனத்துடன் ஆழமாகப் பிணைத்து விட்டார். இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கட்டமைப்பாக மக்களவை, நீதித்துறை, தேர்தல் ஜனநாயகம், ஊடகங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிடுகிறோம் அல்லது நம்பிக்கொண்டிருக்கிறோம். மோடி முதன் முதலாகக் கையில் எடுத்தது இந்த அமைப்புகளை அல்ல. அவர் முதன் முதலில் ராணுவத்தை ஒற்றைத் தலைமையின் கீழ்க் கொண்டு வந்தார். மோடியின் விசுவாசிகளே ராணுவத் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. பின்னர் தேர்தல் அமைப்பின் மாற்றம், நீதித்துறையில் மாற்றம் என ஒவ்வொன்றாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். விசாரணை அமைப்புகள் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் பலவீனமானவை எனக் காட்டின. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது பாஜகவுக்கென இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டமைப்பு இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களிலும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் பாஜக இல்லை அவர்கள் குஜராத்திலும், உத்தரபிரதேசத்திலும் மட்டுமே இருந்தனர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றத் துவங்கி விஸ்தரித்துக்கொண்டனர். இப்போது பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி செய்கிறது. இந்திய வாக்காளர்களில் வெறும் 30 சத வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் பாஜக எப்படி இத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்கிறது? நமக்கு மரபார்ந்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அதிலொன்று இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதுதான். என்னதான் இருந்தாலும் பாஜக இப்படி எல்லாம் செய்யாது என நம்பினோம். இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் பாஜக எதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என நினைத்தோமோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள். ராமர்கோவில், காஷ்மீர் 370 சிறப்புச் சட்டம் ரத்து, இன்னும் எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டும்தான். அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மிக முக்கியமானது. அதை எல்லாம் மனத்தில் வைத்துத்தான் 400 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். உண்மையில் 400 தொகுதிகளில் வென்றால் அவர்கள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிய மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை மாற்றுவார்கள். மற்றவை எல்லாம் மிக எளிதாகச் செய்யக் கூடிய வேலைகள். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான சட்டத்திருத்தங்களை பாஜக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. சீர்படுத்தும் அமைப்புகளையும் விசாரணை அமைப்புகளாக மாற்றியது. அமலாக்கத்துறை, ஐ.டி. தேர்தல் பத்திர நன்கொடை எனச் சத்தமில்லாமல் நடந்த சட்டத்திருத்தங்களின் விளைவை இன்று இந்தியா அனுபவிக்கிறது. தேர்தல் பத்திரங்களின் மூலம் பத்தாயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது பாஜக, தேர்தல் கமிஷனரை நியமிக்கும் உரிமையை பாஜக தனக்கேயான தனியுரிமையாக்கியுள்ளது. குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாவிட்டாலும் கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்கத்துறையும், போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறையும் கொண்டுள்ளது. குற்றப்பத்திரிகையை 90 நாள்களுக்குள் செய்யாவிட்டாலும் ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறை வைக்கும் அளவுக்குக் கொடூரமான அமைப்புகளாக இவை மாற்றப்பட்டு விட்டன. அதிகாரம் பொருந்திய உச்சநீதிமன்றத்தையே பலவீனமாக்கி இந்த அமைப்புகளை பாஜகவின் காவல்நிலையங்களாக மாற்றி விட்டார் மோடி . ஒரே மாத இடைவெளிக்குள் இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாடு முழுக்க எழுத்தாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், சமுகச் செயற்பாட்டாளர்களும் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. “இந்திய மக்களில் 20 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் எங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 ரூபாயைக் கூட எங்களால் எடுக்க முடியவில்லை. தேர்தல் விளம்பரங்களுக்குள், மாநிலத் தலைவர்களுக்கு பிளைட் டிக்கெட் போடக்கூடக் காசில்லாமல் இருக்கிறோம். இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய்” எனக் கொதித்துப் போய் காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஒரு கட்சியின் நிலையே மோடியின் இந்தியாவில் இதுதான்.உண்மையில் மோடியை மிக எளிதாக வீழ்த்தியிருக்க முடியும் எதிர்க்கட்சிகளின் போராட்டமின்மை, பத்தாண்டுகளில் இந்தச் சட்டத்திருத்தங்களின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ளாமை. ஒருங்கிணைப்பின்மை, நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்காமை என வாய்ப்பை நழுவ விட்டு விட்டு இப்போது வாசல் வரை வந்து விட்ட டாங்கிகளுக்கு நடுவில் அன்பின் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோம். மிசாவைவிட மோசமான காலம் இது. மோடி ஆட்சியின் கீழ் இன்றைய இந்தியாவைப் பலரும் மிசாக் காலத்துடன் ஒப்பிடுகிறார்கள். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மிசா (MISA) சட்டத்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்தார். 1976-ஆம் ஆண்டு நாடு முழுக்க அதை அமல்படுத்தினார். அப்போதைய எதிர்க்கட்சியினர் லாலு, கலைஞர் கருணாநிதி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்குள் மிசாவின் கொடுமைகளை இந்திய மக்கள் குறிப்பாக வட இந்திய மக்கள் உணர்ந்து இந்திராகாந்தியை வீட்டுக்கு அனுப்பினார்கள். 1978-ஆம் ஆண்டு 9-ஆவது அட்டவணையில் இருந்து இச்சட்டமே நீக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அதிகாரக் குவிப்பு நோக்கங்களுக்கு அப்பால் மிசாவுக்கு வேறு நோக்கங்கள் இல்லை,மேலும் மிசா மதத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் மிசாக் காலக் கொடுமைகளைக் கடந்து வரவும் முடிந்தது, இந்திரா காந்தியை மிசாவுக்காகத் தண்டிக்கவும் முடிந்தது. அன்று ஒரே ஒரு மிசா சட்டம் இருந்தது. இன்று ஏராளமான மிசா சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இந்து மதத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஒவ்வோர் அமைப்பும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் அமைப்பாக உருவாகி நிற்கிறது. இந்தப் பத்தே ஆண்டுகளில் பல தேசியக் கட்சிகள் பாஜகவில் கரைந்துவிட்டன. அல்லது பாஜகவின் நிழலில் வாழும் கட்சிகளாக மாறிவிட்டன. அன்று மிசாவுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது இன்று நீதித்துறையின் அணுகுமுறை நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்து விட்டது. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதி முக்கியமான வழக்குகளில்கூட நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஆதரவான போக்கையே கொண்டிருந்தது. தேர்தல் கமிஷனரை நியமிக்கும் அதிகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விலக்கி வைக்கும் நடைமுறையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் அதன் பாதகத்தை அனுபவிப்பது அரசியல் கட்சிகள். இதை எல்லாம் பேசுவதற்கான ஒரே ஓர் அமைப்போ தீர்ப்பாயங்களோ இன்றைய இந்தியாவில் இல்லை. தேர்தல் களம் மிகவும் நெருக்கடியோடும் சிக்கல்களோடும் அதிகார நெருக்கடிகளோடும் நடைபெறும் இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு அல்லது பாஜகவின் சாதனை என்ற வார்த்தையே களத்தில் இல்லை. மோடி அரசு என்றுதான் ஒன்றிய அரசு நிறுவனங்களே விளம்பரங்கள் கொடுக்கின்றன. புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றுதான் அவர்கள் புதிய கோஷத்தை வைக்கிறார்கள். 400 தொகுதிகளை இலக்கு வைத்துள்ள பாஜகவின் எண்ணங்களுக்கு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் மூலம் வடிவம் கொடுத்தன. இந்தியா கூட்டணியைப் பலவீனமாக்கிக் காட்டும் ஊடகங்களின் சித்திரங்களுக்கு அப்பால் இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின், ஆம் ஆத்மி,காங்கிரஸ், சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ் என இந்தியாவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் முதன் முதலாக இணைந்து எதிர்கொள்ளும் தேர்தலாக இது உள்ளது. துவக்கத்தில் புதிய நாடாமன்றக் கட்டடத் திறப்பும், ராமர்கோவில் திறப்பும் தமக்கு 400 தொகுதிகளை வென்று கொடுக்கும் என நினைத்த மோடி பாஜகவுக்குக் கூட்டணி தேவை இல்லை என்றே கருதினார். நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை ஒரு புதிய குடியரசின் உருவாக்கம் போல மோடி காட்ட முயன்றார். மோடியின் எல்லா நிகழ்வுகளும் சடங்குகளும் இந்திய மக்களை நம்பவைக்கும் முயற்சி அல்ல, அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. கடந்த பத்தாண்டுகளில் அவர் தரித்த பேரரசன் வேடம், முனிவர் வேடம், தலைமை பீடாதிபதி வேடம், ராமரை அர்ப்பணிக்கும் அர்ச்சகர் வேடம் என அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. இந்து தேசியவாதத்தின் அடையாளப் பிம்பம். ஆனால் துரதிருஷ்டமாக இதை அனைத்து இந்துக்களும் பெரும்பான்மை இந்துக்களும் நம்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. மோடியின் அரசியல் நாடகங்களில் இதுவும் ஒன்று என்பதாகவே வட இந்திய மக்களே போதுமான ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. அதன் பின்னர்தான் பாஜக வெற்றி பெற வலிமையான கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்தது. ஆனால் அதற்கு மேற்குவங்கத்தை தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தனது கூட்டணியை இறுதி செய்து விட்டது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாஜகவால் இன்றுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. அதைவிட முக்கியமானது மோடியின் என்.டி.ஏ கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மோடியின் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் சிபி ஐயும் பெரிய கட்சிகளை உடைத்து மோடியிடம் ஒப்படைத்த கட்சிகள். தலைமைக்குத் துரோகம் இழைத்துத் தன்னோடு வந்தவர்களுக்குரிய நியாயத்தைக்கூட பாஜக செய்யவில்லை. மகாராஷ்டிராவில் ஷிண்டேவையும், அஜித் பவாரையும், பிகாரில் பராஸ் பாஸ்வானையும், நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தவர்களையும் நட்டாற்றில் விட்டிருக்கிறது பாஜக. இந்தியா முழுக்க பிராந்திய வாரியாகச் செல்வாக்குப் பெற்ற இந்தக் கட்சிகளின் வாக்குவங்கியைத் தன்னுடையதாக மாற்றி வெல்வதே பாஜகவின் வெற்றிச் சூத்திரம், எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையை இழந்தது ஏன்? திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்தான் கடந்த 55 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன. 1967-ஆம் ஆண்டு தேசியக் கட்சிகளுக்கு விடை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவை உருவாக்கினார். அதிமுகவுக்கென்று சிந்தாந்தப் பின்புலங்கள் எதுவும் இல்லை. பிம்ப அரசியல் வழியே நகர்ந்து வந்த அதிமுக 80 –களில் சில சாதியினரின் நலன்களுக்காகவும், 2000 மில்லேனியம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு நலன் என்ற அடிப்படையிலும் செயல்பட்டது. ஆனால் அதிமுகவின் இருப்பே திமுக எதிர்ப்பு, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் உருவானதுதான். அதன் பிம்ப அரசியல் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிமுக என்ற கட்டமைப்பின் 90 சதம் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டமைப்பு எத்தகையது என்பதும் முந்தைய தலைவர்களுக்கு இருந்த கவர்ச்சிகரமான அம்சங்கள் எதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாமல் இருப்பதும் அவரது பலவீனம். ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் துரதிருஷ்டமாகத் துரோகத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழ்நாட்டு மக்களோ அதிமுக தொண்டர்களோகூட நம்பவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து இரவோடு இரவாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த சசிகலாவைத் தடுத்து பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். பின்னர் பன்னீர் சசிகலாவுக்குத் துரோகம் செய்தார். அவரைச் சிறைக்கு அனுப்பும் உத்தரவு வந்தபோது நம்பிக்கைக்குரிய விசுவாசி என நம்பிப் பழனிசாமியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஊழல் வழக்கில் சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்குத் துரோகம் செய்தார். ஆனால் இது அனைத்தின் பின்னாலும் பாஜக இருந்தது. இதை முடித்துக் கொடுத்தவர் அப்போதைய பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆளுநர் வித்யாசாகர் ராவும். எடப்பாடி பழனிசாமி மோடியின் தயவில் ஆட்சியில் இருந்து பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் பாஜக கூட்டணியைத் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் அண்ணாமலையின் நடவடிக்கைகளில் அதிருப்தியாகி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிமுக சொல்கிறது. ஆனால், அரசியல் தளத்தில் அதிமுகவோ எடப்பாடி பழனிசாமியோ பாஜகவை எதிர்ப்பதில்லை. பாஜக கொண்டு வந்த காஷ்மீர் 370 ரத்து, குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் சட்டங்கள் என எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுத்த அதிமுக தனிநபர்களை எதிர்ப்பதை பாஜக எதிர்ப்பாகக் காட்ட முயல்கிறது.ஒன்றிய பாஜக அரசு திமுகவுக்கு எதிராகக் கட்டமைக்கும் கதைகளையே அதிமுகவும் பேசுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பேசும் எது ஒன்று குறித்தும் அதிமுக பேசுவதில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இரண்டாம் இடம் யாருக்கு என்பதற்காகவே பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டம்மி வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. வென்றே ஆகவேண்டும் என்ற வேட்கை அதிமுகவுக்கு இருந்திருந்தால் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் ஆனால் பாஜக இரண்டாம் இடம் வரட்டும் என்பதற்காகப் பலவீனமான வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது. திமுக கூட்டணி முன்பே உருவான கூட்டணி இந்துத்துவ எதிர்ப்பையும் பாஜக எதிர்ப்பையும் திவீரமாக அரசியல் களத்தில் வைக்கும் கட்சிகள் எனவே திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் பேசவே இல்லை,. அவர்களுக்கிருந்த இரண்டு வாய்ப்பு ஒன்று பாஜக அல்லது அதிமுக இதில் பாமகவைக்கூடத் தன் பக்கம் தக்கவைத்துக்கொள்வதில் அதிமுக ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை முக்கியமான ஒன்றாகவே அதிமுக கருதவில்லை. காரணம் டெல்லி செல்லும் எம்.பிக்கள் அவர்கள் வாக்களிக்கும் முறைகளால் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து கொள்வதும், கட்டமைப்பில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்ளவும், அதனால் பாஜகவுக்கு மறைமுகமாக உதவி புரிவதுமே அதிமுக எடப்பாடி பழனிசாமியின் நோக்கம். இதனால்தான் பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார் என்பதை எவரும் நம்பவில்லை. அந்த நம்பிக்கை உருவாகும் விதமான அரசியலும் இனி அதிமுகவில் சாத்தியமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகம் ஜீவித்திருக்குமா என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் மோடியும் பாஜகவும் மிகப்பெரிய அளவு அச்சம் அடைந்திருக்கிறார்கள்.அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தொலைக்காட்சிகள் மட்டுமே கருத்துக்கணிப்புகள் மூலம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கின்றன. நிச்சயம் மோடியால் பெரும்பான்மையைப் பெற முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தியா கூட்டணிக் கட்சிகள் புயல் போல இந்தி மண்டலங்களில் தேர்தலை ஒரு போர் போல நடத்தினால் மோடி எளிதில் வீழ்த்தப்படுவார். கைதுகள், வங்கிக்கணக்குகள் முடக்கம் இதை எல்லாம் கடந்து மக்களை நம்பி வீதிக்கு வந்தால் வெற்றி நிச்சயம். இதுவே வரலாறு உணர்த்தும் உண்மை. ஏனெனில் எப்போதும் இந்தியாவில் ஜனநாயகத்தை நாம் வீதிகளில் பார்க்க முடியும் அதிகார பீடங்களில் அல்ல. https://uyirmmai.com/article/uyirmmai-april-2024-arul-ezhilan-article-06/
  22. தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி AaraApr 30, 2024 08:58AM கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை மையமாக வைத்து ஆபாச புயல் வீசி வருகிறது. இதுபற்றி விசாரிக்க விசாரிக்க பல திடுக்கிடும் அதிர்ச்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஹசன் உள்ளிட்ட தொகுதிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்கு மூன்று நாள் முன்பிருந்தே… எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் ஹசன் பகுதியில் சமூக தளங்களில் வெளியாயின. இதைக் கண்டு அதிர்ந்துபோன பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் ஏஜெண்ட், ‘எங்களது வேட்பாளரை மையப்படுத்தி மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரவ விடப்பட்டுள்ளன’ என்று போலீசில் புகார் அளித்தார். ஆனால், இந்த வீடியோக்கள் பரவிய நிலையில், ஏற்கனவே பிரஜ்வல் வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண் கொடுத்த புகாரில் இப்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதே பெண் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த அடுத்த நாள் 27 ஆம் தேதி காலை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துவிட்டார். இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் பற்றி விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. கர்நாடகா முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல பெண்கள் அமைப்பு சார்பிலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சர்ச்சையால் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள பாஜகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. வரும் மே 7 ஆம் தேதி கர்நாடகாவில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்ல நாடு முழுதும் பாஜகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக புறப்பட்டுள்ளது. மோடி மௌனம் ஏன்? விளாசிய பிரியங்கா இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். “இந்துப் பெண்களின் தாலி பற்றி பேசிய பிரதமர் மோடி அவர்களே… சில நாட்களுக்கு முன் நீங்கள் யாருக்காக வாக்கு சேகரித்தீர்களோ அவர்தான் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். இதுபற்றி ஏன் மௌனம் காக்கிறீர்கள்? இந்த பெண்களின் நிலை பற்றி பேச முடியாத உங்களுக்கு, பெண்களின் தாலி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று கிழித்தெடுத்திருக்கிறார் பிரியங்கா. கர்நாடகாவின் உள் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணி அமைத்ததை விரும்பாத, பாஜகவினர் சிலர்தான் இந்த வீடியோக்களை வெளியே விட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு தேவ கவுடா குடும்பத்திலேயே சிலர் ஆதரவாக இருந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. யார் இந்த பிரஜ்வல்? 33 வயதே ஆன பிரஜ்வல் இப்போதைய ஹசன் தொகுதி எம்பி.யாக இருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனும் ஹோலேநரசிபூர் தொகுதி எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல். ராஜா வீட்டு காளைக் கன்றுக்குட்டியான பிரஜ்வால் 2014 இல் இருந்தே தனது தாத்தா தேவ கவுடாவுக்காக அரசியல் பணிகளில் இறங்கினார். பெங்களூருவில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயிலப் போன அவர் பாதியில் படிப்பை முடித்துவிட்டு அரசியலில் இறங்கினார். தான் 1991, 1998, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹசன் மக்களவைத் தொகுதியை தனது பேரன் பிரஜ்வலுக்காக 2019இல் விட்டுக் கொடுத்தார் தேவ கவுடா. வீடியோ விவகாரம் புதிதல்ல… பிரஜ்வல் பற்றிய ஆபாச வீடியோக்கள் இன்று தேசம் முழுதும் பேசுபொருளானாலும், கர்நாடகாவில் இதுபற்றி விவாதம் முதன் முறையாக 2023 ஜூன் மாதத்திலேயே வெளி வந்திருக்கிறது. அப்போது, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் எம்பி. பிரஜ்வல் சார்பில் ஊடகங்கள் மற்றும் மூன்று தனியார் நபர்களுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், “மேற்குறிப்பிட்டவர்களால் பிரஜ்வலுக்கு எதிராக போலிச் செய்திகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஒளிபரப்புதல், வெளியிடுதல் மற்றும் பரப்புதல் போன்ற அச்சுறுத்தல் உள்ளது” என்று அதற்குத் தடை கேட்டது பிரஜ்வல் தரப்பு. ஜூன் 2, 2023 பிரஜ்வல் பற்றிய அவதூறுகளை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் பிரஜ்வல் ஊடகங்களைத் தவிர மூன்று தனி நபர்களையும் குறிப்பிட்டிருந்தார். அந்த 3 பேரில் ஒருவர் பிரஜ்வல் வீட்டில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி, 2023 மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டவரான கார்த்திக். அனைத்து ரகசியங்களும் அறிந்த டிரைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் குடும்பத்தில் ஒருவராக அறியப்பட்டவர் கார்த்திக். அவர் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தாயார் பவானி மீதும் கடுமையான புகார்களை கூறினார். ‘நரசிபுரா பகுதியில் இருக்கும் எனக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை என்னையும் என் மனைவியையும் கடத்திச் சென்று அடைத்து வைத்து மிரட்டி தங்களுக்குச் சொந்தமாக பிரஜ்வலும் அவரது தாயாரும் மாற்றிக் கொண்டனர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்று போலீசிலும் புகார் கொடுத்தார் கார்த்திக். அந்த டிரைவர் கார்த்திக் தான் இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் வெளியீட்டுக்கு பின்னால் இருப்பார் என்று கருதுகிறது பிரஜ்வல் தரப்பு. ஏனென்றால் பிரஜ்வல் கல்லூரி காலம் தொட்டே அவருக்கு நெருக்கமானவர் கார்த்திக். தாத்தா பிரதமராக இருந்தவர், சித்தப்பா கர்நாடக முதலமைச்சர், அப்பா எம்.எல்.ஏ. என்று அதிகாரம் குவிந்த குடும்பத்தில் பிறந்த பிரஜ்வல் அதற்கேற்ப எல்லா ஆட்டங்களையும் ஆடினார். அவரது எல்லா விஷயங்களையும் அறிந்தவர்தான் டிரைவர் கார்த்திக். பல ரகசியங்கள் அறிந்த டிரைவர் கார்த்திக் நில பிரச்சினையால் ரேவண்ணா குடும்பத்தின் மீது ஹசன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் தேவகவுடா குடும்ப செல்வாக்கு காரணமாக பாஜக ஆட்சியில் கூட போலீஸ் நடவடிக்கை ஏதும் இல்லை. இந்த பின்னணியில்தான் 2023 ஜூன் மாதம் தன்னைப் பற்றிய ஆபாச படங்களை கார்த்திக் வெளியிடுவார் என்று தடை கேட்டு நீதிமன்றத்தை நாடினார் பிரஜ்வல் ரேவண்ணா. டிரைவர் மூலம் பாஜகவுக்கு வந்த ஆபாச படங்கள்! இந்த நிலையில்தான் கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் கடுமையாக கள அரசியல் செய்து வந்த லோக்கல் பாஜகவுக்கு இந்த மேட்டர் பெரும் சாதகமாக இருந்தது. கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் ஹோலே நரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்ற வழக்கறிஞரும் உள்ளூர் பாஜக தலைவருமான தேவராஜ கவுடா, ரேவண்ணா குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த டிரைவர் கார்த்திக்கை அணுகினார். பிரஜ்வல் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை பென் டிரைவில் பாஜக பிரமுகர் தேவராஜ கவுடா வாங்கியிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தேவராஜ் கவுடா, ‘என்னை அழுக்கு மனிதன் என்று ரேவண்ணா சொல்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் எவ்வளவு அழுக்கு மனிதன் என்று அவர் வாங்கி வைத்திருக்கிற ஸ்டே ஆர்டரில் இருந்தே தெரிகிறது. ஒருநாள் அந்த அழுக்கெல்லாம் வெளியே வந்து தேவ கவுடாவின் குடும்பமே நாற்றமெடுக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார் தேவராஜ கவுடா. பாஜக -ஜேடியூ கூட்டணிக்குப் பிறகும் கூட அவர் ரேவண்ணா பற்றியும் பிரஜ்வல் பற்றியும் தொடர்ந்து விமரிசித்து வந்தார். இந்த பின்னணியில்தான்… பிரஜ்வலின் ஆபாச ஆட்டங்கள் அடங்கிய வீடியோக்களை அவரது முன்னாள் டிரைவர் கார்த்திக் மூலம் பெற்று… சரியாக ஹசன் தொகுதி தேர்தலுக்கு முன்பாக சமூக தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்களில் கூறுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து தேவராஜ கவுடாவிடம் கேட்டபோது, “ரேவண்ணாவின் மகனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பற்றி அந்த டிரைவரிடம் இருந்து எனக்கு தெரியவந்தது. அவருக்கு எப்படி வீடியோக்கள் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஓப்பனாக கூறியிருக்கிறார். இதுமட்டுமல்ல… “பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரை மீடியாவின் முன் கொண்டுவர நினைத்தேன். ஆனால் அவர்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை சம்பந்தப்பட்டதால் அதைத் தவிர்த்துவிட்டோம். பெண்கள் மீதான மரியாதைக்காக, நான் வீடியோக்களை வெளியிடவில்லை. அது அவர்களின் வீடுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? பாஜக -ஜேடியூ கூட்டணி அமைந்த பிறகு கூட பிரஜ்வாலுக்கு ஹசன் லோக்சபா டிக்கெட் வழங்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் விஜயேந்திரருக்கு கடிதம் எழுதினேன்” என்று பேட்டியளித்துள்ளார் தேவராஜ் கவுடா. குமாரசாமி- ரேவண்ணா மோதலும் ஒரு காரணம்! தேவ கவுடாவின் குடும்பத்துக்குள் அதிகார மையங்கள் இருக்கின்றன. குறிப்பாக மூத்த மகன் ரேவண்ணாவுக்கும், அவரது தம்பியான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. குமாரசாமியின் முயற்சியைத் தோற்கடித்துதான் 2019 இல் தேவ கவுடாவின் எம்பி தொகுதியான ஹசன் தொகுதியை தனது மகன் பிரஜ்வலுக்கு வாங்கினார் ரேவண்ணா. இந்த நிலையில் ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்ற இதை குமாரசாமியே ஊக்குவித்திருக்கலாம் என்றும் கர்நாடக அரசியலில் பேசப்படுகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோ விவகாரம் பற்றி பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, “ உண்மை வெளிவரட்டும், யார் தவறு செய்தாலும், நாட்டின் சட்டப்படி அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். இதில் ஏன் குடும்பப் பெயரைக் கொண்டுவருகிறீர்கள்? சம்பந்தப்பட்ட தனி நபரைப் பற்றிப் பேசுங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சினை அல்ல… இது ரேவண்ணாவின் குடும்ப பிரச்சினை. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் குமாரசாமி. நீக்கப்படும் ரேவண்ணா, பிரஜ்வல்? இதற்கிடையே, “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைக் காப்பாற்ற பிரஜ்வல் மற்றும் எச்.டி.ரேவண்ணாவை 24 மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சமுருத்தி மஞ்சுநாத் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கும், அகில இந்திய தலைவர் தேவ கவுடாவுக்கும் எழுதிய கடிதத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவு தொடர்பாக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் கட்சி தொண்டர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவே கவுடா, மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் உரிய முடிவு எடுக்க வேண்டும். 19 ஜேடி(எஸ்) எம்எல்ஏக்கள் முக்கியமா அல்லது ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா முக்கியமா என்பது குறித்து அப்பா-மகன் இருவரும் இப்போது முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஜேடியூ கட்சியில் இருந்து ரேவண்ணா, பிரஜ்வல் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்த ஆபாச புயலால் கர்நாடக அரசியலும், தேவ கவுடா குடும்பத்திலும் திருப்பங்கள் அதிகரிக்கின்றன. https://minnambalam.com/political-news/prajwal-revanna-sex-abuse-allegations-full-backround/
  23. 40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம் லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39,000 சனத்தொகையையும் 29 கிராம சேவகர் பிரிவுகளையும் 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகம். இந்நிர்வாக அலகானது 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 திகதிய, 93/600/034(1) இலக்க 93.03.31 திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 93.07.09ஆம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. அதனடிப்படையில், தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது. கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. அந்தவகையில்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப் பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல. 2002இல் உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006இல் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க முடியுமாயின், 34 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்தும் வெளிவருகிறது. உண்ணா விரதங்களையும், போராட்டங்களையும் நடத்தியதுடன், பல்வேறு நிருவாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும், இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தினார். கோட்டபாய அரசாங்கத்தில் அவரினால் கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்திக் கொடுக்க முடியவில்லை. 2019இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபொழுது ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு தரம் உயரும் என்று முழக்கமிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ போய் இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கிறார். வியாழேந்திரன் அமைச்சராக இப்போதும் இருக்கிறார். அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்து அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து பிரதி அமைச்சரான கருணா எனும் வி.முரளிதரன் கல்முனை விடயத்தில் பல உறுதிப்பாடுகளைக் கூறியிருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த தேர்தலில் கல்முனை தமிழ்ப் பிரிவினைத் தரமுயர்த்துவேன் என்ற தேர்தல் அறைகூவலுடனேயே போட்டியிட்டார். அவரது இந்த உறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்பாறைக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவமே இல்லாமல் போனது. கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான துருப்புச் சீட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர் அரசியலில் அரசுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதான் வரலாறு. இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர் ஆளும் கட்சியென்று மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்குத் தமிழ்த் தேசியத் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு நில அளவை செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். கிராமங்களின் வீதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம் தற்போது இஸ்லாமாபாத் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன. நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக இப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடி நடைபெறுவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது மிகக் குறைவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகப் பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்ற போதும், 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகவே இருந்துவருகிறது. இது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கவலைக்குள்ளாகும் செயலாகும். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993 முதல் இற்றை வரை உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதி வளம் அற்றதாக இயங்கும் இந்த பிரதேச செயலகத்திற்குக் கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் தமிழர் அரசியலில் சாத்தியங்கள் கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை நாட்டில் ஏற்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்டர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக் குழப்பம் உள்ளிட்ட பல அதனைக் குழப்பியடித்தது. ஏற்கெனவே 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர் பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்று. கல்முனை தமிழ்ப் பிரிவு 34 வருடங்களைத் தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். காலத்தையும் கடத்துகிறார்கள். மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தினைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை. அந்தவகையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவே அமைந்திருக்கிறது. இன விரோதம் வலுத்தேவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் கல்முனையில் உருவாகியிருக்கின்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டுத் தடுக்கப்படுவது கவலையானதே. இவ்வாறான சம்பவங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும். அடிக்கடி ஒரு பொரி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர் தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதும்தான் தமிழ் மக்களின் நிலைப்பாடு. ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று பொது வெளியில் பேசிக்கொண்டு உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே அனைவருடையதும் கனவு நிலைப்பாடாகும். இலங்கையில் இனப் பிரச்சினை உருவான வேளை, சிறுபான்மை, தமிழ் என்றிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் காலப்போக்கில் பிரிந்து இரு துருவங்களானார்கள். அதன் பின்னர் தமிழ் பேசும் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள். முயற்சி செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/40-வருடங்களாக-உரிமை-மறுக்கப்படும்-பிரதேச-செயலகம்/91-336332
  24. யாழில் ஆரம்பமான புதிய கட்சி! இனியபாரதி. ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை(29) ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் . கல்வி ,வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பல தரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம். எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அபைப்பிற்குட்பட்டு செயற்படுத்த இருக்கின்றோம். தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். .இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம். தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கெண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். (ச) https://newuthayan.com/article/யாழில்_ஆரம்பமான_புதிய_கட்சி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.