Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நிலவிற்கு மிக அருகில் சென்றது சந்திரயான் 3 monishaAug 18, 2023 16:12PM ஷேர் செய்ய : சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவிற்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதுமையை நிகழ்த்த வேண்டும் என்று மாபெரும் கனவோடு கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ. தொடர்ந்து சந்திரயான் 3 சுற்று வட்டப்பாதையை இஸ்ரோ கண்காணித்து வந்ததோடு பூமியிலிருந்து சுற்றுப்பாதையை அதிகரித்து நிலவை நோக்கிப் பயணிக்க செய்தது, தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையையும் இஸ்ரோ குறைத்துக் கொண்டே வந்தது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற சவாலை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறது இஸ்ரோ. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டரை இஸ்ரோ வெற்றிகரமாக பிரித்து எடுத்தது. தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. https://x.com/isro/status/1692484515963588645?s=46&t=Bh4dZIVPcm7fCpQS3JeoGQ இந்நிலையில் லேண்டரை நிலவிற்கு மேலும் அருகில் கொண்டு செல்வதற்கான பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அதன்படி ”டீ பூஸ்டிங்” முறையில் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவிலிருந்து 113 கி.மீ அருகிலும் 157 கி.மீ தொலைவிலும் உள்ள சுற்றுப்பாதையில் லேண்டர் நிலவை சுற்றி வருகிறது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். https://x.com/isro/status/1692476417093890282?s=46&t=Bh4dZIVPcm7fCpQS3JeoGQ இந்நிலையில் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான தென் துருவத்தின் புதிய புகைப்படங்களை லேண்டர் பகிர்ந்துள்ளது. https://minnambalam.com/india-news/chandrayaan-3-get-more-closer-to-moon/
  2. மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியின் இறுதி முடிவு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு களவிஜயம் செய்திருந்தார்கள். களவிஜயத்தின் பின்னர் இது தொடர்பாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். நேற்று (10) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தார்கள் அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவாவும், வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தார்கள். தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகவே அவர்கள் இந்த மாதம் 17 ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்ய இருக்கின்றார்கள். அதனை தொடர்ந்து 21 ஆம் திகதி இந்த அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படுமென தெரிவித்தார். http://www.samakalam.com/மனிதப்புதைகுழி-அகழ்வுப்/
  3. வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது Editorial / 2023 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:46 - 0 - 92 க. அகரன் வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். https://www.tamilmirror.lk/வன்னி/வவனய-இரடட-படகல-பரதன-சநதக-நபர-கத/72-322077
  4. சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) இடம்பெறுகின்றது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை (31) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்த ச கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) பி.ப 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது. https://thinakkural.lk/article/266229
  5. வவுனியா தோணிக்கல் தீ வைப்பு – வாள்வெட்டு – கொலை – சந்தேக நபர்கள் கைது! adminAugust 1, 2023 வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31.07.23) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வவுனியா காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் வவுனியா பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குற்றச்செயல்களுக்கு உதவிய 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வொன்று நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி வீட்டிற்கு தீவைத்து எரித்திருந்தனர்.இதன்போது, வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதி உயிரிழந்தனர். சம்பவத்தில் காயமடைந்த 02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டிற்கு தீ வைப்பதற்கும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதற்கும் முகமூடி அணிந்த குழுவொன்று வரும் சிசிடிவி காட்சிகள் காவற்துறையினருக்கு கிடைத்திருந்த நிலையில் விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2023/193553/
  6. கிரைமியாவில் ரஷ்ய ஆயுதக் களஞ்சியம் மீது உக்ரேன் தாக்குதல் Published By: Sethu 24 Jul, 2023 | 10:48 AM கிரைமியாவிலுள்ள ரஷ்ய ஆயுதக்களஞ்சியம் ஒன்றின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கிரைமிய வான்பரப்பில் எதிரிகளின் 11 ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டிஸான்கோய் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை கொண்டது. https://www.virakesari.lk/article/160764
  7. ‘சந்திராயன் -3’க்கு பெருமை சேர்க்கும் தமிழர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர். விழுப்புரத்தில் உள்ள வீர முத்துவேலின் தந்தை பழனிவேல் கூறியதாவது: வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். பின், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘இஸ்ரோ’வில் பணிக்கு சேர்ந்தார். இடையே, சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது திறமையால் உயர்ந்து, தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பழனிவேல் கூறினார். https://akkinikkunchu.com/?p=250309
  8. உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்க தீர்மானம் - தனது முடிவை நியாயப்படுத்துகின்றார் பைடன் Published By: Rajeeban 08 Jul, 2023 | 11:12 AM உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது என்ற அமெரிக்காவின் முடிவை ஜனாதிபதி ஜோபைடன் நியாயப்படுத்தியுள்ளார். பொதுமக்களை கொன்ற வரலாற்றை கொண்ட கொத்துக்குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது என்ற மிகவும் கடினமான முடிவை அவர் நியாயப்படு;த்தியுள்ளார். கொத்துக்குண்டுகளை வழங்குவா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு நீண்டகாலம் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் வெடிபொருட்கள் முடிவடைவதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொருத்தமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என உக்ரைன் தலைவர்கள் இதனை வரவேற்றுள்ள அதேவேளை மொஸ்கோ இதனை சாடியுள்ளது. உலகின் 120 நாடுகள் கொத்துக்குண்டுகளை தடை செய்துள்ளன. அடுத்தவாரம் நேட்டோவின் உச்சிமாநாடு இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் நேசநாடுகளிற்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டுகள் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் உணர்ந்திருந்ததால் உக்ரைனிற்கு அவற்றை வழங்கும் நடவடிக்கைகளை நீண்டகாலமாக தவிர்த்துவந்தோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் ஆட்டிலறிகள் இல்லாத நிலை உருவாகின்றது அமெரிக்கா உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளை விநியோகங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த நிலையிலும் உக்ரைனை பாதுகாப்பற்ற நிலையில் விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டுகள் நீண்டகாலம் வெடிக்காமல் மண்ணில் புதையுண்டு இருக்ககூடியவை என்பதால் சர்ச்சைகள் காணப்படுகின்றன. https://www.virakesari.lk/article/159491
  9. முல்லைத்தீவு மனித புதைகுழி: 13 உடலங்கள் இனங்காணப்பட்டன சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/வன்னி/முல்லைத்தீவு-மனித-புதைகுழி-13-உடலங்கள்-இனங்காணப்பட்டன/72-320506
  10. உக்ரேனின் தாக்குதலில் கிரைமியா பாலம் சேதம்: ரஷ்யா தெரிவிப்பு Published By: Sethu 22 Jun, 2023 | 05:37 PM கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரேனையும் இணைக்கும் பாலமானது உக்ரேனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு நடந்த தாக்குதல் சோங்கார் பாலத்தை தாக்கியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட உக்ரேனிய ஆளுநர் சேர்ஜி அக்சினோவ் தெரிவித்துள்ளார். சோங்கார் பாலம், உக்ரேனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது. கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன் பின்னர், அப்பிராந்திய தலைநகரை உக்ரேன் மீளக் கைப்பற்றியது. https://www.virakesari.lk/article/158358
  11. ரஸ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல் - மூன்று கிராமங்கள் மீட்பு - உக்ரைன் Published By: Rajeeban 12 Jun, 2023 | 10:56 AM ரஸ்ய படையினருக்கு எதிரான பதில்தாக்குதலில் மூன்று கிராமங்களை ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மூன்று கிராமங்களை மீள கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரைனின் பதில் நடவடிக்கைகளில் அந்த நாட்டிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றிஇது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் வெற்றியை கொண்டாடுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பிளகோடட்னே என்ற பகுதியில் கட்டிடங்களிற்கு வெளியே உக்ரைன் படையினர் உக்ரைன் கொடிகளை ஏற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. டொனெட்ஸ்க் பிராந்தியம் மீண்டும் உக்ரைனின் கொடியின் கீழ் என உக்ரைன் படையினர் கோசமெழுப்பும் வீடியோவும் வெளியாகியுள்ளது. உக்ரைன் படையினரின் பதில் தாக்குதல்கள் மீள ஆரம்பமாகியுள்ளதை சனிக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிசெய்திருந்தார். மூன்று கிராமங்களை இழந்துள்ளதை மொஸ்கோ இன்னமும் உறுதிசெய்யவில்லை மாறாக தாக்குதல்களை முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/157498
  12. திரியை தூக்கியது பற்றி நிர்வாகம்தான் பதில் சொல்லவேண்டும்.🤓 நான் பெருமாள் கறுப்பரின் பெருமிதம் பற்றிக் கூறியபோது கறுப்பர் என்பதற்கும் கறுவல் என்பதற்குமான வித்தியாசம் என்னவென்றுதான் விளங்கப்படுத்தினேன். இது வெறும் தமிழ் இலக்கண விளக்கம் மட்டுமில்லை இல்லை. வேற்றினத்தவரை அடையாளப்படுத்தும் சொற்கள் கவனமாகப் பாவிக்கப்படவேண்டும். ஒரு இனத்தை இழிவுபடுத்தும் வகையில் பாவிப்பது கூடாது என்பதற்கான விளக்கம் மட்டுமே.
  13. ஆம். செய்திகள், கட்டுரைகள் இலக்கணத் தமிழில்தான் வருகின்றன. எழுத்தில் எப்படி வரும் என்பதற்கு கொடுத்த விளக்கத்தை மறுக்க முடிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்ட்டால் இதில் குத்திமுறிவதில் பிரயோசனம் இல்லை.
  14. கறுவல் என்று செய்திகளில் கறுப்பினத்தவரைச் சுட்டிய ஒரு இணைப்பைக் கொடுக்கமுடியாத நீங்கள்தான் விதண்டாவாதம் செய்கின்றீர்கள். குற்றம் புரிந்த தமிழனை பொதுவாக “தமிழன்” என்றுதானே சொல்கின்றீர்கள். கடும் கண்டனத்திற்காக ஒரு இழிவழக்கைப் பாவித்திருக்கலாமே. இதற்கு மேல் குத்திமுறிய எனக்கு நேரம் இல்லை!
  15. கறுப்பர்கள் பார்க்காவிட்டால் இழிவாக எழுதுவதில் பிழை இல்லை என்பது போல இருக்கின்றது உங்கள் கருத்து. நான் கறுவல் என்பதற்கும் கறுப்பர் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைத்தான் சொன்னேன். White என்றால் வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும். செவலை, சிவலை, வெள்ளை என்பதெல்லாம் பேச்சுவழக்கில்தான். இந்தப் புரிதல் இருந்தால் சரி.
  16. நாதம்ஸ் இணைத்த செய்தியை நான் பார்க்கவில்லை. வழமையான சொந்தச் சரக்காக இருந்திருக்கவேண்டும்! ஆனால் எந்த ஒரு ஊடகமும் செய்திகளில் கறுவல் என்று பாவிப்பதில்லை. கூகிளில் தேடிப் பார்த்துத்தான் சொல்கின்றேன். இலங்கைத் தமிழர்கள்தான் பட்டப்பெயராக அல்லது அடைமொழியாக கறுவல் என்று பாவிப்பவர்கள். கறுவல் செல்லத்துரை, கறுவல் மாடு, கறுவல் நாய் என்று சொல் வழக்கு உண்டு. ஆனால் கறுப்பினத்தவரைக் குறிக்க கறுவல் என்று பேச்சுமொழியில் சொல்வது கூட அவர்களை இழிவாகப் பார்க்கும் தன்மையில் இருந்தே வருவது. அதை எழுத்தில் கறுப்பினத்தவரைக் குறிக்கப் பாவிப்பது இழிவழக்குத்தான். அப்படி இல்லை என்றால் கறுவல் என்று பாவித்த ஒரு செய்தியையோ, கட்டுரையையோ காட்டுங்கள்.
  17. கறுப்பர் என்பது பெருமிதம் ஆனால் கறுவல் என்று சொல்லுவது இழிவழக்கு. இந்த வித்தியாசம் தெரியவேண்டும்😎 இன்று UK Post Office 30 வருடத்திற்கு முன்னர் கறுப்பரைக் குறிக்க பாவித்த சொல் இனவாதம் என்று செய்தி வந்துள்ளது.
  18. ஒரே வழி. அங்கு டொக்டர்களாக இருக்கும் பழைய நண்பர்களுடன் நல்ல நண்பர்களாக இருக்கவேண்டும் அல்லது குடும்ப உறவுக்குள் டொக்டர்கள் இருக்கவேண்டும். என்னுடன் படித்த ஐந்து நண்பர்கள் டொக்டர்களாக இருக்கின்றார்கள்! கைகால் முறிவுக்கு ஒருத்தர்! நரம்புப் பிரச்சினைக்கு ஒருத்தர்! இன்னொருத்தர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்! இவர்களை நம்பிப் போகலாம் என்று இருக்கின்றேன்😊
  19. கோவில் கட்டுவது பணம் சம்பாதிக்கவும், பந்தா காட்டவும்தானே. இது புதிது இல்லையே. கோவில்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் தினமும் பூஜையோடு நடந்தால் பிரயோசனமாக இருக்கும். ஆனால் அர்ச்சனைகள்தான் தினமும் நடக்கின்றன!
  20. அட உங்கள் மூளை கிரகித்துவிட்டது🤡 அகல் நியூஸ் உங்கள் பினாமித் தளம் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் முன்னர் ஒருவர் திண்ணையில் எழுதியிருந்தார். அதை அடிக்கடி மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா!
  21. உன்க பெர், உன்க பீனமி அக்ல் நியுஸ்ல இக்கு.🤓
  22. மின் ஒலி இதய வரைவி அறை - தமிழ் சுத்தமாகத்தானே இருக்கு! ஆனால் தமிழருக்கு சுத்தத் தமிழ் விளங்காது🤪
  23. சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  24. நான் ஆபிரிக்காவில் இடைநடுவில் இருக்கும்போது அப்பா ஒரு கடிதம் எழுதினார். அதில் “பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கென வாழவேண்டும்” என்று எழுதியிருந்தார். இவர் அங்குபோய் சிம்பிளாக வாழ முடியாமல் படாடோபமாக இருந்திருக்கின்றார். எத்தனை கோடி என்றாலும் கரையத்தானே செய்யும். தனிய ஒரு பரோபகாரரிடம் வாங்கினால் மற்றைய பரோபகாரர்கள் தங்கள் பின்னிருக்கும் ஒளிவட்டம் மங்கிவிடும் எனக் கவலைப்படுவார்கள்! அதனால் எல்லோரும் உதவவேண்டும். பணத்தைச் சேருங்கள். ஒரு தொகையைக் கேட்கிறேன்!😉 பரோபகாரி - பிறர்க்கு உதவி புரிவோன் பரதேசி - அலைந்து யாசகம் பெறுபவர் இலண்டனில் பண்ணை போட பல மில்லியன் பவுண்ட்ஸ் தேவைப்படும் என்பது தெரியாதா?😛 பண்ணையை அமைத்து வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை கொடுக்கவேணும் என்பதுதானே மிஷன். அதனால் எனக்கு புத்தகம் வாசிக்க நேரம் எப்போதும் இருக்கும்😎 நானும் நாட்டுக்கு இன்னும் சில வருடங்களில் இறங்குவதாகத்தான் திட்டம். நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிட்டால் செலவுகள் கூடும். பிஸினஸ் பிளானை புதுப்பிக்கவேண்டும்! கட்டாயம் சொல்கின்றேன்! என்மேல் பூரண நம்பிக்கை உங்களுக்கு இருக்கு என்று எனக்குத் தெரியும். காசு விசயத்தில என்னைப்போல நியாயவான் ஒருத்தரும் இல்லை. 😇 டக்கென்று மாத்திவிடுங்கோ! இது மோசடி செய்யும் பிளானோடு இருப்பவர்களின் வழி! நம்வழி நேர்மையான வழி. எல்லாக் கணக்கு வழக்கும் பகிரங்கமாக இருக்கும். சோஷல் மீடியாவில் லைவ் கமராவில் பண்ணையை எப்பொதும் பார்க்க வழி செய்வோம்! நல்லவர் இல்லையெண்டாலும் நம்பிக்கையும் நாணயமும் நிறைந்தவர்😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.