Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் செயற்பாடுகள் ஈழத்தமிழருக்குக் கற்றுத்தரும் பாடங்கள் சிவா செல்லையா கடந்த 50 வருடகாலத்தில் உலகின் மனிதகுல வரலாற்றில் பாரிய இனப்படுகொலைகள் வெவ்வேறு நாடுகளில் நடந்தேறி உள்ளன. அவ்வினப் படுகொலைகள் ஆட்சியாளர்கள் தமது நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை. ரூவண்டா, தென்ஆபிரிக்கா, கென்யா, உகண்டா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும், நீதி வழங்கலில் ஏற்பட்ட தாமதங்களும் ஈழத்தமிழர்களுக்குப் பாதிய நம்பிக்கையீனத்தை இந்த உலகில் ஏற்படுத்தி உள்ளது. வளம்மிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காகவும், நவீன காலணித்துவ மேலாண்மையை விருத்தி செய்வதற்காகவும், உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் அகப்பட்டே சிறுபான்மை இனங்கள் ஆட்சியாளர்களால் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டமையை ஆபிரிக்கக் கண்டத்தில் கண்கூடாகக் காணலாம். இனப்படுகொலைக்குப் பின்பான சமூகத்தில் உலக வல்லரசுகள் நிலைமாறு நீதி, நல்லிணக்கம் என்ற பெயரில் காலூன்றுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனப்படுகொலைக்குப் பின்பான இத்தகைய நிலைமாறு நீதி, நல்லிணக்கச் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைவன : (1) நாடு சார்ந்த காரணிகள். (2) நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்புக் காரணிகள். (3) சனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள். (4) சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள். (5) பிரதேசவாதம். (6) அரசியல் கூட்டுக்கள் . ஆபிரிக்க நாடுகளில் இனப்படுகொலைச் சம்பவங்களுக்கு பின்னணியில் ஆட்சியாளர்களுக்கு உலக வல்லரசுகள் ஆதரவு வழங்கியமை புலனாகின்றது. குறிப்பாக ஆபிரிக்காக் கண்டத்தில் சீனாவின் தடம்பதிப்பு இனப்படுகொலைகளின் நிழலிலேயே நிகழ்ந்து உள்ளது. சீனா உலகின் முதல்நிலை வல்லரசாகும் முதலீடு. ஆபிரிக்காக் கண்டத்தின் பல இனப்படுகொலைகளுக்கு காரணமாக அமைந்து உள்ளது. இவ் இனப்படுகொலைகளுக்கான நீதி வழங்கலில் நாடுசார்ந்த காரணிகள், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக் காரணிகளான ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, சீனப் பொருளாதார ஒத்துழைப்பு என்பன செல்வாக்குச் செலுத்தி உள்ளன. இதனால் இடைக்கால நீதி வழங்கும் பொறிமுறை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுதலில் இருந்து தப்பி உள்ளனர். குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்படைந்த மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள், சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிரமங்கள், பிரதேச வாதம், அரசியல் கூட்டுக்கள் என்பன தடையாக ஆபிரிக்க நாடுகளில் அமைந்தமை கண்டறியப்பட்டு உள்ளது. ஆசியாக்கண்டத்திலும், சீனாவின் பட்டுப்பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் முதலீடாகவே இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளில் பாரிய இனப்படுகொலைகள் நிகழ்ந்து உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனம் மீண்டெழ முடியாதவாறு ஆபிரிக்காக் கண்டத்தில் நிகழ்வது போல் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. கடந்தகாலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு அப்பால் தற்போது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளே சிறுபான்மை இனத்தை அடையாளம் தெரியாது அழிக்கும். இலங்கை அரசு சீன அரசின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தில் தனது இன மேலாண்மையைக் காட்டுகின்றது. எனவே ஈழத்தமிழர் தமிழக மக்களுடனான போக்குவரத்து, பொருளாதாரம், கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதனாலேயே இலங்கையில் தமது இருப்பினைக் காத்துக்கொள்ள முடியும். சர்வதேச நீதி விசாரணை நியமங்கள் யாவும் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே அமையும். ஒரு வல்லரசு நிலைமாறு நீதி என்ற போர்வையிலும், மறு வல்லரசு நல்லிணக்கம் என்ற போர்வையிலும் தமது நலன்களைக் கவனிக்க இங்கு கடட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே தமது அரசியல் இருப்பிற்கான நிகழ்ச்சிநிரலில் செயற்படாது தமிழின இருப்பினை இலங்கையில் நிலைபெறச் செய்வதற்கான செயற்பாட்டில் தலைப்படல் வேண்டும். http://samakalam.com/ஆபிரிக்க-நாடுகளில்-நடைபெ/
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன் என்ற இனிக்கும் கரும்பு 🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂 வாலிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  3. வீரவணக்கம். மேலே உள்ள நினைவுக்குறிப்புக்கான படங்கள்
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  5. கல்லில் எரியும் நெருப்பு சேரன் https://maatram.org/?p=9073
  6. சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு அவர்களின் நினைவில்... லெப்.கேணல் வேணு “கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம்; பத்து ஆமி செத்துப் போனாங்களாம்” இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்து விடும். ஆனால் இதனுடைய பெறுமதி – இதன் பரிமாணம் – மிகப்பெரியது. இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்புகளில் – முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி – அடம்பன் – நீராவியடி – வஞ்சியன்குளம்….. என்ன தவறு நடந்தது? பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஒன்றுதான் மன்னாரை அதிரப்பண்ணிய வஞ்சியன் குளம் விபத்து. மன்னார்ப் பிராந்தியத் தளபதி லெப். கேணல் வேணு, மேஜர் குகன், மேஜர் சயந்தன், கப்டன் குட்டிமணி ஆகியோரை எம்மிடமிருந்து பறித்தெடுத்த சம்பவம் அது. பூநகரியிலிருந்து முள்ளிக்குளம் வரையிலான இந்தப் பிராந்தியத்திலுள்ள மக்கள் அனைவருக்குமே இவர்கள் நன்கு பரிச்சயமானவர்கள். ஆகையால் இவர்களின் இழப்பு இப்பிராந்தியத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிரொலித்தது. இச்சந்தர்ப்பத்தில் எம்மால் இழக்கப்பட்டவர்களுள் ஒருவரான கப்டன் குட்டிமணி பேசாலையைச் சேர்ந்தவன். 1988 ஆம் ஆண்டு இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் எம்முடன் இணைந்து கொண்டவன். பயிற்சி முடிந்ததும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்தான். கண்ணிவெடிகள் வைப்பதில் கைதேர்ந்தவன். இந்தக் காடும், வெளியும் எமக்கே சொந்தம் என்பதை மிதிவெடிகள் மூலம் இந்திய இராணுவத்தினருக்கு உணர்த்திக் காட்டியவன். சொந்தக் காலுடன் வந்த இந்திய இராணுவத்தை செயற்கைக் காலுடன் அனுப்பி வைத்தவன். மேஜர் குகன் – மேஜர் சயந்தன் இருவருமே 1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயக்கத்துடன் இணைந்து கொண்டவர்கள். இவர்களில் குகன் மன்னார்ப் பிராந்தியத்திற்கு அப்பாலும் அநேக போர்க்களங்களைக் கண்டவன். இந்திய இராணுவம் எமது மக்கள் மேல் போர் தொடுத்த போது அதை யாழ்ப்பாணத்தில் பல களங்களில் எதிர் கொண்டவன். முதன்முதல் இந்தியப் படையை ஆயுதங்களுடன் சரணடையச் செய்த தாக்குதலிலும் பங்குபற்றியவன். கொண்டச்சிஇ கஜூவத்தை, வஞ்சியன்குளம் என பல்வேறு இடங்களிலும் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியவன். ஒருமுறை இராணுவ நிலைகளை வேவு பார்க்கச் சென்ற போது இளைய தோழன் ஒருவனால் இவனது பிரத்தியேக ஆயுதம் இழக்கப்பட்டது. அந்தச் செய்தி மட்டும் தான் விசேட தளபதி சுபனைச் சந்தித்தது. அடிபட்ட புலியாக திரிந்த இவன் மிகவும் ஆபத்தான பகுதி ஒன்றில் இரவு நேரம் வந்து கொண்டிருந்த ஜூப் ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்து இவ்வண்டி எரிந்து கொண்டிருக்கையில் நாலுக்கு மேற்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றி அவற்றுடன் சென்று தான் விசேட தளபதியைச் சந்தித்தான். இதுதான் புலிகளுக்கேயுரிய பாரம்பரியம். இந்த வழிவழியாக வந்த சொத்து என்னிடமும் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியவன். உப்புக்குளத்தைச் சேர்ந்த மேஜர் சயந்தன் தளபதி வேணுவுடன் இணைந்து மருத்துவக் குழுவில் பணியாற்றியவன். அத்துடன் போர்க்களத்தில் பணியாற்றத் தகுதி படைத்த சாரதியுமாவான். நீண்ட காலம் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களே வியக்கும் வண்ணம் மருத்துவப் பணிகளை ஆற்றியவன். தம்பளையில் நிகழ்ந்த சண்டையில் காயமடைந்த போராளிகளைக் காப்பாற்றி வாகனத்தில் கொண்டு செல்லும் போது குண்டு வீச்சு விமானம் ஒன்று அந்த வாகனத்தைத் துரத்தித் துரத்திக் குண்டுகளைப் போட்டது. “எனது வேகத்திற்கேற்ப குண்டு வீசுவதற்கு இனிமேல் தான் நீங்கள் பழக வேண்டும்” என்ற செய்தியை உணர்த்தும் வகையில், மிகவேகமாக வாகனத்தைச் செலுத்தி வந்து அவர்களைக் காப்பாற்றியவன். “ஆட்காட்டி வெளி” இந்தப் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்திற்கு மூக்குச் சிவக்கும். பொதுவாக அடம்பனுக்கு அப்பாலுள்ள இடங்கள், அவர்கள் வரைபடத்திலும் உயர இருந்து விமானம் மூலமே பார்க்க வேண்டிய பகுதிகளாகும். இப்பகுதிகளுக்குள் கால் வைக்க முனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிங்கள இராணுவத்தினர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடியான தாக்குதல் நடக்கும். இங்கு தான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் உருவானான். 1984 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொண்ட இவன் மன்னார்த் தளபதியாக விளங்கிய லெப். கேணல் ராதாவின் பயிற்சி முகாமில் உருவாகியவன். மன்னார்த் தீவினுள் சிறீலங்கா இராணுவம் எமது இரு போராளிகளைச் சுட்ட போது மன்னார்க் கோட்டைக்குப் பக்கத்தில் லெப். கேணல் ராதாவின் தலைமையிலான அணி பதிலடி கொடுத்தது போல, 1988 ஆம் ஆண்டு அடம்பனில் எமது இரு போராளிகளைக் கைது செய்த சிறீலங்கா இராணுவம் இவர்களை இந்திய இராணுவத்திடம் கையளித்ததிற்கு பதிலடி கொடுக்கத் தீர்மானித்தான். அடம்பன் முகாமுக்கு மிகக் கிட்டிய தூரத்தில் ஜூப்பில் வந்த சிறீலங்காப் படை உயர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி இராணுவ ரீதியில் பதிலடி கொடுத்தான். பயிற்சி முகாமிலிருந்து வெளிவரும் போது இவன் ஒரு வைத்தியனாகவே வந்தான். விஞ்ஞானப் பிரிவில் அவன் கற்ற கல்வி மருத்துவப் பயிற்சிகளை அவன் பெற்றுக் கொள்வதற்கு பெரிதும் உதவியது. இவன் பங்கு கொண்ட முதற் தாக்குதல் மன்னார் மாவட்ட போராளிகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும். மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாகச் சென்றான். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்த வரை இவனே டாக்டர். ஆனாலும், இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் தனது முத்திரையைப் பதிக்க இவன் தவறவில்லை. 17. 01. 1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி லெப். கேணல் விக்ரரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவனும் ஒருவனாக இருந்தான். “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்ற நிலையில், ஓடிய இராணுவம் நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது. பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே மன்னார் – அடம்பன் போன்ற வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இவனோ இந்த நிலையை மாற்றி மக்களைத்தேடி மருத்துவம் செய்யும் மருத்துவனானான். ஆட்காட்டி வெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்குப் பாத்திரமானான். இரவு – பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ போராளிகளுக்கோ வேணுதான் டாக்டர். இக்காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானான் வேணு. அவர்களோடு அவன் பழகிய விதம் – மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பனதான், குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் இவன் மறைந்த போது உனக்குச் சொந்தங்கள் நிறைய உண்டு எனக் கூறிற்று. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள். 07. 11. 1989 அன்று வில்பத்துக் காட்டில் “பச்சைப் புலிகள்” எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலை இவன் முறியடித்த விதம் சாதனைக்குரியதாகும். பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் தனது தோழர்கள் 14 பேருடன் பயணமாகிக் கொண்டிருந்தான் இவன். அப்போது, மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள்மேல் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர் – பாதகமான நிலைகளில் போராளிகள். ஆனாலும் இவன் எதிர்த்தாக்குதல் தொடுத்தான். சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினான். அதனால், உயிரிழந்த தமது சகா ஒருவனைக்கூட விட்டு விட்டு சிறீலங்காப் படை தப்பியோடியது. உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி வந்தான் இவன். இத்தாக்குதலில் ஈடுபட்ட அணிக்குத் தலைவனும் இவனே. வைத்தியனும் இவனே. இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதி இவனை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது. இயக்கத்தின் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவன் இவன். 1991 ஆம் ஆண்டு இவன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு. அன்று அது ஒரு கொடிய நாள். ஏற்கெனவே மிகப்பெரிய வெற்றிகளையெல்லாம் (60 இராணுவத்தினர் பலியான சம்பவம் உட்பட) எமக்குத்தந்த வஞ்சியன் குளத்தில் எமக்கு ஒரு சோகம் காத்திருந்தது. சிறந்த தளபதி – திறமையான மருத்துவன் – மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான வேணுவை இழந்தோம். அவனுடன், மேஜர் சயந்தன், மேஜர் குகன், கப்டன் குட்டிமணி என்று நால்வரை – எங்கள் நான்கு கண்மணிகளை வெடிமருந்து விபத்தில் நாம் இழந்தோம். நினைவுப்பகிர்வு: சுரேஸ் விடுதலைப்புலிகள் இதழ் (மாசி – 1992). https://www.thaarakam.com/news/2efdf305-e084-40cb-b069-0d9f9bdad3cd
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா நினைவில்... லெப்.கேணல் அப்பையா ஐயாத்துரை இராசதுரை மானிப்பாய், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1933 வீரச்சாவு:24.12.1997 நிகழ்வு:வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா அரசின் கூலிப்படையினால் கடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவு 1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர். அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார். 1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார். 1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். ”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார். அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார். -எரிமலை இதழ் https://www.thaarakam.com/news/7733ee96-3697-4548-8b8c-e39c23ec282a
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  11. தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை. பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது. பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது. எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் வே. பிரபாகரன் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் https://www.thaarakam.com/news/79ea8c84-554d-464e-8faa-83dfc4f95bf5
  12. ரஞ்சித்துக்கும் சகாறா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
  13. தமிழீழம் எனும் உயரிய இலட்சியத்துடன், தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சகல உரிமையோடும் வாழவேண்டும் என்ற நோக்கத்திற்காக தம்மை ஒப்புக்கொடுத்து, அந்த இலட்சியத்திற்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
  14. மாவீரர் நாள்மரபாகி வந்த கதை November 25, 2020 வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன. அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்­வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்­துக்காக கொல்லப்­பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்­குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடு­மொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழி­வு­களை வர­லா­றா­கப் பதிவு செய்­வ­தில் காட்­டிய அக்­க­றையை விலா­வா­ரி­யாக விப­ரித்­தார். அத­னைப் போலவே ஈழ­நா­தம் காட்­டும் அக்­க ­றையை குறிப்­பி­டத்­தக்க விட­யம் எனப் பாராட்­டி­னார். இறுதி யுத்­தம் முடிந்து பதி­னோரு ஆண்­டு­கள் கழிந்து விட்­டன. இன்­ன­மும் இனப்­ப­டு­ கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமது உற­வு­கள் பற்­றிய பதி­வு­களை எம்­மி­னம் பூர­ணப்­ப­டுத்­த­ வில்லை. இறுதி நாட்­க­ளில் நடைபெற்ற வீரச்­சாவு விப­ரங்­கள் கூட முழு­மைப்­ப­டுத்­தப் ப­ட வில்லை. இந்த விட­யங்­க­ளில் யாரா­வது அக்­கறை காட்ட முனைந்­தால் தலை­யில் குட்டி அம­ர­ வைக்­கும் போக்­கி­னையே சிலர் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். வர­லாற்றை மாற்றி எழு­தும் பிர­கி­ரு­தி­கள் தமது கற்­ப­னை­களை ஓரிரு சம்­ப­வங்­க­ளில் சோடித்து இணை­யத்­த­ளங்­கள், முக­நூல்­க­ளில் உலாவ விடுகின்ற­னர். லூக்­காஸ் சாள்ஸ் அன்­ரனி என்ற இயற்­பெ­ய­ரைக்­கொண்ட மாவீ­ர­ருக்கு சீலன் எனப் பெயர் வைத்­த­வன் தானே என்­றும் தான் ஒரு மூத்த உறுப்­பி­னர் என்­றும் அண்மையில் ஒரு­வர் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.மூத்த உறுப்­பி­னர் என்று சொல்­வ­தற்கு அவர் தலை நரைக்­கும் வரை காத்­தி­ருந்­தார் போலும். வர­லாற்­றில் நடை­பெ­றும் திணிப்­புக்­கள் என்ற விட­யத்­தில் நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத் தான் இருக்­க­வேண்­டும். அந்த விட­யத்­தில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­கள் பற்­றி­யும் குறிப்­பிட்­டா­க­வேண்­டும். ஏனெ­னில் இன்­றைய நிலை­யில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளின் செயற்­பா­டு­கள்,முடி­வு­கள் தொடர்­பாக தீர்­மா­னிக்­கும் உரிமை தமக்கே உள்­ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது. விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத் தில் எரி­யூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்­ணர்) இரண்­டா­வது,மூன்­றா­வது மாவீ­ரர்­க­ளான லெப்.சீலன் மற்­றும் ஆனந்­தின் உட­லங்­கள் யாழ்.போத­னா வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எப்­ப­டியோ தக­வல் அறிந்த சீல­னின் தாயார் தனது மக­னின் உடலை தன்­னி­டமே கைய­ளிக்­க­வேண்­டு­மென பொலி­ஸா­ரி­டம் வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோளை பொலி­ஸார் நிரா­க­ரித்­த­னர். ஊர்­கா­வற்­து­றைப் பகு­தி­யி­லேயே பொலி­ஸா­ரால் இவ்­விரு உடல்­க­ளும் எரி­யூட்­டப்­பட்­டன. வரலாற்­றுச் சம­ரான 1983 ஜூலை திரு­நெல்­வே­லி­யில் வீரச்சாவெய்­திய லெப். செல்­லக்­கிளி அம்­மா­னின் வித்­து­ட­லைப் புலி­களே கொண்டு சென்­ற­னர். நீர்­வே­லிப் பகு­தி­யில் இவ் வித்து­டல் விதைக்­கப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்­தில் இவ் விட­யம் பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. சுவரொட்­டி­கள் மூலமே இவ்­வி­ட­யம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவ­ரது வீரச்­சா­வுச் சம்­ப­வ­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது . முதல் மாவீரர் சங்­கர் அன்­றைய கால­கட்­டத்­தில் இரு­வ­ரின் பாது­காப்­புக் கருதி சங்க­ரின் வீரச்­சாவை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ ரான நித்­தி­யா­ னந்­த­னை­யும், அவ­ரது துணை­வி­யார் நிர்­ம­லா­வை­ யும் கைது செய்ய இராணுவத்­தி­னர் யாழ். நாவ­லர் வீதி­யி­லுள்ள அவர்­க­ளது வீட்டுக்­குச் சென்­ற­னர். ”27.10 1982 அன்று இடம்­பெற்ற சாவ­கச்­சேரி பொலி­ஸ் நிலை­யத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த சீலன்,புலேந்­தி­ரன். ரகு (குண்­டப்பா) ஆகி­யோர் இவர்­க­ளது வீட்­டி­லேயே தங்­க­வைத்து சிகிச்­சை­ ய­ளிக்­கப்­பட்­ட­னர்” என்ற தக­வல் படை­யி­ன­ருக்­குக் கிடைத்­தி­ருந் தது. படை­யி­னர் இவர்க­ளது வீட்டை முற்­று­கை­ யி­டச் சென்ற போது அங்கிருந்த சங்­கர் அந்த முற்­று­கை­யி­லி­ருந்து தப்ப முயன்றார்.படை­யி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் வயிற்­றில் காய­ம­டைந்த அவர் கைலா­ச­பிள்­ளை­யார் கோவி­ல­டிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்து கொண்டிருந்­தார் அப்­போது யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வ­னும் பின்­னா­ளில் 18 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஈழ­நா­தம் நாளி­த­ழின் பிர­தம ஆசி­ரி­ய­ராக விளங்­கி­ய­வ­ரு­மான பொ .ஜெய­ராஜ் . அவர் சங்­க­ரைக்­கண்­டார். ஏற்­க­னவே அறி­மு­க­மா­யி­ருந்த சங்­கரை தனது துவிச்­சக்­கர வண்­டி­ யில் ஏற்­றிக்­கொண்டு சென்­றார். யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிரே உள்ள குமா­ர­சாமி வீதியிலுள்ள 41 எண்­ணு­டைய வீட்­டுக் குக்­கொண்­டு­போ­னார். இந்­தப்­போ­ராட்­டத்­து­டன் சம்­பந்­த­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பலர் பழகி வந்த இந்த வீட்­டில் இருந்த ஏனை­யோ­ரு­டன் இணைந்து சங்கரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். அன்­றைய கால­கட்­டத்­தில் பொது வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறு­வது முடி­யாத விட­யம். எனவே மேல­திக சிகிச்­சைக்­காக சங்­கர் தமி­ழ­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். சிவ­கு­மார் என்­னும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட அன்­ரனே இவ­ரைத் தமி­ழ­கத்­துக்குக் கொண்டு சென்­றார். சங்­க­ருக்­காக உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தலை­வர் பொது­வாக எவ­ருமே நினைவு தப்பி வலி­யில் துடிக்­கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்­று­வ­துண்டு . ஆனால் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்ட அந்­தச் சம­யத்­தில் சங்­கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்­றி­னார். தலை­வர் சங்­க­ரின் மன­தில் எந்­த­ள­வுக்கு ஆழ­மாக உறைந்­தி­ருந்­தார் என்­ப­தற்கு இது­வோர் சிறந்த உதா­ர­ணம். தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக இது­வரை 36 ஆயு­தப்­போ­ராட்ட இயக்­கங்­கள் தோன்­றிய போதும் அதில் புலி­கள் மட்­டுமே வித்­தி­யா­ச­மா­கத் தெரிந்­தார்­கள் என்­றால் அதற்கு இது போன்ற உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­ட­லாம். வேறு எங்­கும் காண முடி­யாத விட­யம் இது . அந்­தப் பாசப்­பி­ணைப்பே வர­லாற்­றில் முதல் மாவீ­ர­னாக (விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின்) பெயர் பதித்த சங்­க­ரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் எண்­ணத்­தைக் தலை­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது மாவீ­ரர் நாள் அறி­விப்பு இதன் அடுத்­த­கட்­டம் தான் மாவீ­ரர் நாள் பற்­றிய அறி­விப்பு.இந்­திய இரா­ணுவம் செயற்பட்ட காலத்­தில் 1989 ம் ஆண்­டில் இந்த அறி­விப்பு மண­லாற்­றுக் காட்­டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்­திய தள­ப­தி­க­ளுக்­கும் தெரி­விக்­கப்­பட்­டது. முத­லாம் உல­கப்­போ­ரின்போது போர்க்­க­ளத்­தில் உயிர் நீத்த வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் முதன் முத­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்­கர் என்ற மூத்­த­போ­ராளி உரை­யா­ட­லொன்­றின்­போது தலை­வ­ரி­டம் குறிப்­பிட்­டார் (இவரே பின்­னா­ளில் விமா­னப் படை­யின் உரு­வாக்­கத்­தில் பெரும்பங்கு வகித்­த­து­டன் அதனை வழி­ந­டத்­தி­ய­வர். (இயற்­பெ­யர் வை.சொர்­ண­லிங்­கம்) இந்த பொப்பி மலர் உதா­ர­ணமே இலங்­கை­யில் ‘சூரி­ய­மல்’ எனப்­ப­டும் சூரி­ய­காந்தி இயக்­கத்­துக்கு வழி வ­குத்­தது. அந்­தப்­பொ­றியை சங்­கர் தட்­டியபோதே எங்­க­ளது தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஆகு­தி­யா­கிய போரா­ளி­க­ளுக்­கும் ஒரு நாளைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனை தலை­வர் மன­தில் உரு­வா­னது . அந்­த­வ­கை­யி­லேயே புலி­க­ளின் முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் (சத்­தி­ய­நா­தன் ) நினைவு நாளை மாவீ­ரர் நாளா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார் அவர். இது பற்றி குறிப்­பினை தேவர் அண்­ணா­வும் வெளி­யிட்­டி­ருந்­தார் . கிழக்­கில்…! மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை அமைத்­தி­ருந்­த­னர் .இந்­த­நி­லை­யில் அன்­றைய அம்­பாறை மாவட்டத் தள­ப­தி­யாக விளங்­கிய அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும் இன்­னொன்றை அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும் 05.11.1989 அன்று தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள். இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில் பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில் போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர். ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில் மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை. திரு­கோ­ண­ம­லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின் பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும் (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின் கைவ­சம் இருக்­க­வில்லை. நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட லெப்.ரிச்­சாட் (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும் மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின் வர­லாறு அமைந்­தது. வடக்­கில்..! கிளி­நொச்சி மாவட்­டத்­தின் நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­ளர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர். “வானம் பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர். (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அசம்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன. மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின் சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார். கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால், சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு. முதல் சுவ­ரொட்டி திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும் சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார். எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந்­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக …. (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு. அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள். ஒதுங்­கிய இரா­ணு­வம் புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர். புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­வோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ ருக்­காது. இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை. நிகழ்­வு­களை கார்த்­திக் மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். 1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது. மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன் நினைத்­தார். துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம் நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது . முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்­ளை­கள் வரட்­டும் என நினைத்­தார். அது­போல் வாழைத்­தோட்­டத்­தில் சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே? சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும். யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது. இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள். எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே?” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும்? புதைக்­க­லாமே?’’ இந்­தக் கேள்வி தான் வித்­து­டல்­க­ளைப் புதைக்­கும் வழக்­குக்கு அத்­தி­பா­ரம். அடுத்­த­தாக வீரச்­சா­வெய்­து­ப­வ­ரின் வீட்­டுக்கு சென்­ற­போது அங்­கும் பிரச்­சினை எழுந்­தது. ஏன் எங்­கள் பிள்­ளை­யைச் சுட­லை­யில் எரிக்­கா­மல் புதைக்க வேண்­டும்? என்று கேட்­ட­னர். நீங்­கள் மக­னின் நினைவு எழும் போதெல்­லாம் அந்த இடத்துக்­குச் சென்று கும்­பி­ட­லாம். அழ­லாம். பூப்­போ­ட­லாம் என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. வர­லாற்­றில் துயி­லு­மில்­லத்­தில் முதன் முத­லாக விதைக்­கப்­பட்­ட­வர் என்ற வர­லாறு சோலை என்ற மாவீ­ர­ருக்­குக் கிடைத்­தது. மாவீ­ரரை விதைக்­கு­முன் வாசிக்­கப்­ப­டும் வாச­கங்­க­ளை­யும் (மாவீ­ரர் பெயர் தவிர்த்­தது )புதுவை அண்­ணாவே எழு­தி­னார். மாவீ­ரர் பதி­வு­கள் இந்­தக்­கா­லப் பகு­தி­க­ளிலே மாவீ­ரர் பணி­மனை முழு அள­வில் செயற்­பட ஆரம்­பித்­தது. இந்­தி­யப் படை­யி­ன­ரின் வரு­கைக்கு முன்­னர் மாவீ­ரர்­க­ளின் விப­ரம் பேணப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் காலத்­தில் புதி­தாக இணைந்து கொண்­டோர் பற்­றிய விவ­ரம் தலை­மைக்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அந்­தக் காலத்­தி­லேயே இணைந்து அக்­கா­லப் பகு­தி­யி­லேயே சிலர் மாவீ­ர­ரா­கி­யும் இருந்­த­னர். எனவே இவ்­வா­றான விட­யங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி பகி­ரங்க அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது. இதற்கு பொன்.பூலோ­க­சிங்­கம் என்ற சட்­டத்­த­ர­ணி­யின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தது. அவர் நாள்­தோ­றும் தினக்­கு­றிப்பு (டயரி) எழு­தும் பழக்­க­மு­டை­ய­வர். பத்­தி­ரி­கை­க­ளில் வரும் மாவீ­ரர் இழப்பு, பொது­மக்­கள் இழப்பு (படையினர் மற்­றும் இன­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை) குறித்து அவர் எழு­திய குறிப்­பு­களே மாவீ­ரர் பட்­டி­யலை கணி­ச­மான அளவு சரி­யாக்க உத­விற்று. தாவ­டி­யில் தும்­புத் தொழிற்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விமா­னக் குண்­டு­ வீச்­சில் லூக்­காஸ் என்­ப­வர் மாவீ­ர­ரா­னார். ஆனால் இந்த மாவீ­ரர் பற்­றிய விவ­ரம் எவ­ருக்­கும் தெரி­யாது. நாவ­லப்­பிட்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று மட்­டுமே தெரி­யும். 1990 இல் ஈழ­நா­தம் நாளி­தழ் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது வீர­வ­ணக்க விளம்­ப­ரங்­கள் வெளி­வந்­தன. தங்­கள் பிள்­ளை­களை, உற­வு­களை, நட்­பு­களை நினை­வு­கூர வச­தி­யான சில­ரால் மட்­டுமே முடிந்­தது. அதே­சம்­ப­வங்­க­ளில் வீரச்­சா­வெய்­திய ஏனைய மாவீ­ரர்­களை எவ­ரும் நினை­வு­கூ­ர­வில்லை. இத­னைக் கண்­ணுற்ற ஒரு போராளி அப்­போ­தைய அர­சி­யல் தலை­மையை வகித்த மாத்­த­யா­வி­டம் இவ்­வி­ட­யம் பற்­றிக் குறிப்­பிட்­டார். நாளாந்­தம் அதே நாளில் வீரச்­சா­வெய்­தி­யோர் விவ­ரம் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்ற ஆதங்­கத்­தைத் தெரி­வித்­தார். வரு­டம் 365 நாளில் மட்­டு­மல்ல 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­வ­ரும் (லீப்­வ­ரு­டம் ) பெப்­ர­வரி 29 இல் கூட மாவீ­ரர் விவ­ரம் உண்டு என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இதற்­கென இயங்­கி­வந்த பணி­மனை இரண்டு மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யான பொன்.தியா­கம் அப்­பா­வின் பொறுப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்டு மாவீ­ரர் பணி­ம­னை­யு­டன் இணைக்­கப்­பட்­டது. (பின்­னர் இவர் மூன்று மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யா­னார். பள்­ள­ம­டு­வில் இவ­ரது மக­ளும் வீரச்­சா­வ­டைந்­தார்) பெய­ரில், திக­தி­யில், முக­வ­ரி­யில் என பல்­வேறு தவ­று­க­ளு­டன் இருந்த பட்­டி­யல்­கள் தியா­கம் அப்­பா­வின் முயற்­சி­யால் திருத்­தப்­பட்­டன. மாவீ­ரர் நிகழ்­வு­கள் பற்­றிய சுற்­று­நி­ரு­பங்­கள் இந்­தப் பணி­ம­னை­யி­னால் விடுக்­கப்­பட்­டன. இந்­தப்­ப­ணி­மனை கோரும் விவ­ரங்­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிராந்­தி­யத் தள­ப­தி­க­ளுக்­கும் தலை­வ­ரும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எந்­தெந்­தத் துயி­லு­மில்­லங்­க­ளில் யார் ,யார் விதைக்­கப்­பட்­டார்­கள், வித்­து­டல் கிடைக்­காத யார் யாருக்கு எங்­கெங்கு நினை­வுக்­கல் உள்­ளன போன்ற முழு விவ­ரங்­க­ளும் இந்­தப்­ப­ணி­ம­னை­யில் இருந்­தது.இதன் மூலம் மிக­வும் காத்­தி­ர­மான பணியை செய்­து­வந்­தார் பொன் தியா­கம் அப்பா. ‘‘தாயகக் கனவுடன்..” 1992 ஆம் ஆண்­டுக்­கான மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­கள் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் தலை­வர் தலை­மை­யில் நடந்­தது. அப்­போது மக­ளிர் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கிய ஜெயா ஒரு ஆலோ­ச­னையை முன்­வைத்­தார். மாவீ­ரர் பெற்­றோ­ரும் போரா­ளி­க­ளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­றார். உடனே தலை­வர் புது­வை­ யண்­ணா­ வைப் பார்க்க கையைப் பொத்தி பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டி­னார் புதுவையண்ணா. ஈழ­நா­தம், விடு­த­லைப் புலி­கள், சுதந்­தி­ரப் பறவை வெளி­வந்த மாவீ­ரர்­கள் பற்­றிய கட்­டு­ரை­களை தனி­யான நூல்­க­ளாக வெளி­யிட வேண்­டும் என்ற அறி­வ­னின் யோச­னை­யும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. துயி­லு­ மில்­லத்­துக்கு வரு­வோர் தமது பிள்­ளை­க­ளின் நினை­வாக வீடு­க­ளில் நாட்­டு­வ­தற்கு அவர்­க­ளின் கல்­ல­றை­கள் மற்­றும் நினை­வுக் கற்­க­ளுக்கு முன்­னால் தென்னை போன்ற பயன்­தரு மரங்­களை வைக்க வேண்­டும் என்று பொருண்­மிய மேம்­பாட்டு நிறு­வ­னத்­தி­ன­ரால் வைக்­கப்­பட்ட யோச­னை­யும் ஏற்­கப்­பட்­டது. இந்த யோசனை இன்று பல்­வேறு வகை­யி­லும் பின்­பற்­றப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­யம். ஜெயா­வின் கருத்தை உட­ன­டி­யாக செய­லாக்­கி­னார் புது­வை­யண்ணா. அது­தான் ‘‘தாய­கக் கன­வு­டன்’’ என்று ஆரம்­பிக்­கும் மாவீ­ரர் பாடல். மன­தைப் பிழி­யும் இப்­பா­டல் இன்­று­வரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னர், முன்­னாள் போரா­ளி­கள்­மற்­றும் தமிழ் மக்­கள் மன­தில் நிலைத்து நிற்­கி­றது. கண்­ணன் இசை­ய­மைக்க வர்­ண­ரா­மேஸ்­வ­ரன் குர­லில் ஒலித்த பாடல் இது. கோப்­பாய் துயி­லு­மில்­லத்­தில் தனக்­குப் பக்­கத்­தில் நின்று நேரில் அத­னைப் பாட­வேண்­டும் என்று அப்­போ­தைய அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ளர் தமிழ்ச் செல்­வன் வர்­ண­ரா­மேஸ்­வ­ர­னின் வேண்­டிக் கொண்­டார். ஒலி­பெ­ருக்­கி­யி­லும் இந்­தப்­பா­டல் இசை­யு­டன் ஒலித்­தது. முதன்­மு­த­லாக இவ்­வ­ரி­க­ளைக் கேட்ட மாவீ­ரர் குடும்­பத்­தி­னர் கதறி அழு­த­னர். இப்­பா­ட­லின் ஒலி­நா­டாவை ஒரு போரா­ளி­யி­டம் (கரும்­ப­றவை) வழங்­கிய புது­வை­யண்ணை முதன் வரி­க­ளைக் கேட்­கும்­போது உங்­க­ளுக்கு நினை­வில் வரும் சம்­ப­வங்­க­ளை­யும் கருத்­துக்­க­ளை­யும் எழு­தித் தாருங்­கள் என்­றார். அந்த விட­யம் வெளிச்­சம் இத­ழில் வெளி­வந்­தது. ஒரு மாவீ­ர­னின் தாயா­ரான மல­ரன்­னை­யும் அன்­றைய மாவீ­ரர் நாள் குறித்து கட்­டுரை எழு­தி­யி­ருந்­தார். மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்­சு­டரை தமிழ்ச்­செல்­வன் ஏற்­றி­னார்.1991 இல் இதனை மாத்­தயா ஏற்­றி­யி­ருந்­தார். மாவீ­ரர் பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது. ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது . தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயி­ரம் அள­வில் மாவீ­ரர்­க­ளின் விவ­ரம் கிடைத்­தன. இதன் பின்­னர் தர­வு­க­ளைப் பேணவோ வழங்­கவோ இய­லக் கூடிய நிலை­யில் சூழல் அமை­ய­வில்லை. https://www.meenagam.com/மாவீரர்-நாள்மரபாகி-வந்த/
  15. பழையவற்றில் இருந்து பாடங்களைப் படிக்காதவரை அவற்றை நினைவூட்டத்தான் வேண்டும். கடந்த 16 வருடங்களில் தமிழ் மக்களுக்குக் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்வைப் பெறவோ, பொருளாதர முன்னேற்றத்தை உருவாக்கவோ, அல்லது அவலவாழ்வில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ ஒரு உருப்படியான திட்டத்தையேனும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆனால் இவைகளை வைத்து கட்சி அரசியல் செய்து தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள். தமிழ்த்தேசியத்திற்கு எதிர்நிலையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியலில் இலாபம் அடைவதும் சிங்கள அரசும், சிங்கள முதலாளிகளும், சிங்கள படையினரும்தான். தமிழர்களுக்கு தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கப்படும்.
  16. தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக்தியாலும் அவர்களை வெல்ல முடியாது. மக்களின் அரசியல் வளர்ச்சியும், போராட்டம் பற்றிய விழிப்பும் மிகப் பெரிய பின்னணி சக்தியாக இடம்பெறுகின்றன. மக்களின் நேரடிப் பங்களிப்பு அதன் அடுத்த கட்டமாக அமைகிறது. அந்த நிலை வரும் போது மக்களும் போராளிகளும் ஒன்றாகி விடுகின்றார்கள். வியட்னாம் போரின் போது விவசாயிகள் ஒரு தோளில் கலப்பையையும் அடுத்த தோளில் துவக்கும் சுமந்த படி வயற்காட்டிற்குச் சென்றுள்ளார்கள். மக்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அவ் வேளையில் அவர்கள் போராட்டத்திலும் பங்களிப்புச் செய்தார்கள். எமது விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியாக எல்லைப் படையின் தோற்றத்தைக் கணிப்பிடலாம். எல்லைப் படையினருக்கு குடும்ப வாழ்வும் குடும்பப் பொறுப்பும் உண்டு. அவர்கள் பொது மக்களின் அங்கமாவர். ஏன்றாலும் அவர்களால் பார்வையாளர்களாகத் தூர நிற்க முடியவில்லை. தேவை உணர்ந்து எல்லைப் படையில் இணைந்தார்கள். தீரமுடன் போராடினார்கள். மாவீரானர்கள் தலைவன் கண்கலங்க ஒரு போர்வீரன் சாவானாகில் அந்தச் சாவைத் தேடிப் பெற வேண்டும் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. எல்லைப் படைவீரர்கள் இத் தகுதியைப் பெற்று விட்டார்கள். மனைவி, பிள்ளைகள், வாழ்க்கைப் பணி என்பவற்றை ஒரு புறம் வைத்து விட்டு அவர்கள் களமாட வந்தார்கள். தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எமது எல்லைப்படை மாவீரர்களில் பெண்களும் இருக்கிறார்கள். தமிழ் இருக்கும் வரை அவர்கள் புகழ் பாட்டாகவும் நூலாகவும் வெளிவரும். 1778 இல் நடந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் மொல்லி மெக்கோலி என்ற குடும்பப் பெண் பங்கு பற்றினாள். அவள் போராளியல்ல. பீரங்கிப் படையில் போராடிய கணவனுக்கு உதவ வந்தவள். ஒரு கட்டத்தில் அவளே பீரங்கியை இயக்கும் கட்டம் தோன்றியது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகி என்ற சிறப்பு இப் பெண்ணுக்கு உண்டு. ஒரு இனம் ஒரு தேசமாக எழுச்சி அடைவதற்கும் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்பதற்கும் மக்கள் சக்தி அடித்தளமாக அமைகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் போது சுதந்திரம் நிச்சயம் கிடத்தே தீரும். எல்லைப் படை மாவீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போக மாட்டாது. அவர்கள் பங்களிப்பு அளப் பெரியது. அவர்களுடைய வரலாற்றுப் பதிவை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம். முதல் எல்லைப்படை மாவீரர் முதல் பெண் எல்லைப்படை மாவீரர் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” -சூரியப்புதல்வர்கள் 2005 -https://www.thaarakam.com/news/efea3df5-6f1a-4fb0-a8c9-6883533fefd6
  17. எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27 தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம். இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள் கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21. https://www.thaarakam.com/news/21d1a2b6-e6eb-4851-9d47-2c5ead9ddf6e
  18. எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான். 1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான். 1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான். சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான். யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன். போர் ஓய்வு மீறல்…..! திருமதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருவாரப் போர் ஓய்விற்கு எதிராக சிறிலங்காப் படையினர் 17.11.1994 நெடுங்கேணியில் பதுங்கித் தாக்கியதில் எமது மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி வீரச்சாவை அடைந்தான். அவனது தலையை படையினர் கோரமாக வெட்டி எடுத்துச் சென்றனர். விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு வார கால போர் ஓய்வையும், இப்போர் ஓய்வு தொடர்பாக ‘விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்கம் அதற்குப் பிரதிகூலமாக நடந்துகொள்ளும். மோதல்கள் தவிர்க்கப்படுமானால் அது சம்பிரதாயபூர்வ போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேணல் அனுரத்த ரத்வத்த அறிவித்ததையும் உதாசீனப்படுத்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக நடாத்தப்பட்ட தாக்குதல் ஆறாவது போர் ஓய்வு மீறல் நடவடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் அதே பகுதியில் இரு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு அரசகரும மொழியினால் தூசிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைவிடவும் மட்டக்களப்பு அரிப்பு கடல் பகுதி, வடமராட்சிக் கடற்பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும் சாவகச்சேரியில் பயணிகள் பேருந்து உலங்குவானூர்தியிலிருந்து தாக்குதலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. நெடுங்கேணியில் வீரச்சாவெய்திய மூத்த தளபதி லெப்.கேணல் மல்லியின் தலையை வெட்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அதனைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். 1990க்குப் பின்னர் இவ்வாறான செயலில் இப்பகுதி இராணுவத்தினர் ஈடுபடுவது இரண்டாவது தடவையாக இருக்கின்றது. 1987இல் மன்னார் ஆட்காட்டி வெளியில் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்டரின் புதைகுழியைத் தோண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அவரது தலையையும் வெட்டியெடுத்துச் சென்றிருந்தனர். கொலைவெறியும், ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் செயல்கள் கட்டுமீறிச் செல்கின்ற வேளையில் எல்லாம் சிம்ம சொப்பனமாய் நின்ற அந்த வீரர்களின் பெயர்களைக் கேட்டாலே நடுங்குகின்றவர்களாய் இராணுவம் இருந்ததின் எதிர் விளைவுகளாய் அவர்களது இச் செயல்கள் அமைகின்றன. மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் இவ் இழி செயலுக்குரியவரின் கூடாரமாய் சிறிலங்கா இராணுவம் மாறிவருவதை இச்செயல்கள் காட்டுகின்றன. ஆர்த்தெழும் கடலென மக்கள்…..! இத் தாக்குதலில் வீரமரணமடைந்த மல்லிக்கும் அவருடன் வீரமரணமடைந்த வீரவேங்கை அருளப்பனுக்கும் அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்திற்கு மாவீரரின் பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஒலிபெருக்கி வாகனம் முன்செல்ல புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மாணவர்களின் ‘பாண்ட்’ வாத்திய இசையுடன் மாணவர்கள் தொடர அரச ஊழியர்கள், விடுதலைப் புலிகள், காவல்துறையினர் அனைவரும் அணிவகுத்துச் சென்றனர். வன்னி மாவட்ட அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் புவிதரன் – முல்லைக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் இசையருவன் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். மல்லியின் வீரச்சாவினால் புதுக்குடியிருப்பு சோகமாயிருந்தது. வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறந்தன. தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதுவரை காணாத அளவிற்கு பெருந்தொகையான மக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். வெளியீடு :-எரிமலை இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/5002f4cb-31a2-49e2-b653-ec7c64e51c50
  19. தமிழரசுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  20. நான் அலுவலக கணணியில் யாழைப் பார்ப்பது குறைவு. இடைக்கிடை login செய்யாமல் பார்க்கும்போதெல்லாம் term & conditions ஐ accept பண்ணச் சொல்லிக் கேட்கின்றது. Accept பண்ணாமல் உள்ளே போகமுடியாது. ஆனால் இப்படி பல blog களிலும், website களிலும் நடக்கின்றது. Mobile இல் Login பண்ணி உள்ளே வந்தால் ஒரு தடவைக்கு மேல் accept பண்ணச் சொல்லிக் கேட்பதில்லை.
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ஐயா!🎉🎉🎉
  22. பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.! தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம். உணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா? அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா?” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார். கதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று, ***** **** ****** எல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன். தலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன். ஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின் போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம் வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும். ஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.” உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி. தமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான். முக்கிய சந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும். ஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச் சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நா ஊறுபட்டுவிடக்கூடாது, கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான். எல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான். அடுத்த சுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டு விற்பன்னர்களுடன் களைகட்டும் போட்டி, இருள் சூழ்ந்த வேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்த பின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்து முடியும் போட்டி. தமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம் வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச் சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம் போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில் பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன். அதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை. அடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்ய வேண்டி வந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற் பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். யாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர் பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப் பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான். தென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்ற போதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது. தலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர். மூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான். இந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது. அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுக டிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம். ‘எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான். “தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே? காணவில்லையே? வின்சனுக்கு என்னவானது? அக்காவிற்கு, பிள்ளைகளுக்கு என்னவானது? நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள். ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார். அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன். வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை. இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது. இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர். தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள். சாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டு விடுவார்களா என்ன? போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும். இந்தியப் படையினரால் எமது தாய் நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதி விலக்காகவில்லை. எந்தவொரு யுத்த முனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீன சந்தை. 1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள்? ஏன் எம்மைக் கொல்கிறார்கள்? என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும். இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான். யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது. அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரிய சுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை. வடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சில நாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடை பேசியில் ஒரு செய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத் துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது. தினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறு தண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது. அப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்க வெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும். “சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம். கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும். தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல். இந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரத நிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான். மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாகபக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது. நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன். மிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர். அக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது. இதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனது தம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன். அவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறி குண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச் செயலிழக்கச் செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான். பதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர். தனது சகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான். நன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்ற அணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே. யாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள் வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது. ஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. தமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என. பூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரிய காயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின் உயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும். பல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம். எதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும். இந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச் செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம். தமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழி நடத்தலின் பெறுபேறே. தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும். அது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரக ஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது. பின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது நுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன? இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம். தமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர். கொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை. “இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம். சுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது. தமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர். கையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்து தெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது. உயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர். இந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு. தமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர். மக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர். இந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும். இவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது. யாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா? முழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது. ஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன். அதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்: எம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான். கடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு. மீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம். விரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக் காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான். போரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம். எமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்; ஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப் படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை. விடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும். இராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன். எம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம். விடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான். மறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும். ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது. எமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை. தலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான். தமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம். ஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும். தலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும். அதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும். தமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது. எங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம். எம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது. வாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும். தமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை. தமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான். நினைவுப்பகிர்வு:- ச.பொட்டு அம்மான் (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்) “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/5ad186a3-d2e9-4524-a085-bb802041e999
  23. முன்னைய பக்கம் கடைசிப் பக்கம். தமிழ் சிறி அண்ணா, + பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.