Everything posted by Justin
-
யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
இந்த "தொண்டர் நியமனம்" என்பது இலங்கை அரச சேவையில் காலம் காலமாக இருக்கும், தகுதிக்கு (merit) மதிப்பளிக்காமல் அரசியல் செல்வாக்கிற்கு மதிப்பளிக்கும் ஊழல் நிறைந்த முறை. ஆசிரியர் நியமனங்கள் சிறந்த உதாரணம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்காமல், பல்கலைப் பட்டதாரியாகவும் இல்லாமல், "தொண்டர் ஆசிரியர் நியமனம்" என்று நியமனமாகி நாலைந்து வருடங்கள் பணி செய்வார்கள். பின்னர் "பல வருடங்கள் பணி செய்து விட்டோம், அனுபவம் வந்து விட்டது, சான்றிதழ் ஏன் அவசியம்? நிரந்தரமாக்குங்கள்" என்று போராடுவர். வாக்குகளுக்காக யாராவது அரசியல்வாதியும் இவர்களை நிரந்தரமாக்க உதவுவார். இப்படி "சைட் கதவால்" நுழைந்தே நிரந்தர அரச தொழில் கிடைக்குமென்றால் , எவரும் படிக்கவோ, பயிற்சி பெறவோ போகாமல் இந்த இலகு வழியால் தான் வர முனைவர். இதையே தற்போது சுகாதார சேவையிலும் எதிர்பார்க்கின்றனர் போலும். உழைப்பவர்களுக்கும், சுய முன்னேற்றத்தை நாடுவோருக்கும் அநீதியான இந்த தொண்டர் நியமனங்களை இல்லாமல் செய்வது தான் பொருத்தமான செயல்! அரசியல்வாதிகள் மாற வேண்டுமென்று மக்கள் வாக்களிக்கும் காலத்தில், வாக்களிக்கும் மக்களின் பகுதியாக இருக்கும் இந்த அரச ஊழியர்களும் மாற வேண்டும். அது தான் அரகலய கேட்ட "சிஸ்ரம் சேஞ்" ஆக இருக்கும்.
-
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
உள்ளேன் ஐயா😂! ஓம், தேங்காய்ப் பாலை (அதுவும் அடர்த்தியான முதல் பாலை😎) எல்லாக் கறிக்குள்ளும் போட்டு அவித்ததால் இலங்கையில் மாரடைப்பும், மூளை இரத்த அடைப்பும் தான் முதல் இரு மரணக் காரணங்களாக வந்திருக்கின்றன👇. https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka ஆனால், தேங்காயை வேறெதற்கும் பாவிக்கலாமா? ஆம். தேங்காயில் இருக்கும் நிரம்பிய கொழுப்பு பாண்டலடையாது. எனவே, மருந்துகள் தயாரிக்க எண்ணை தேவையானால் தேங்காய்க் கொழுப்பு திறமான கரைப்பான். அழகுசாதனப் பொருட்கள் இதனால் தான் தேங்காய் எண்ணையில் தயாரிக்கப் படுகின்றன.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நீங்கள் அதிகம் பக்தி முத்திப் பேசுவதாக எனக்குப் படுகிறது. சில சமயங்களில் உங்கள் போன்றோரின் புலிகள் கால சம்பவங்களைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கையில், உண்மையிலேயே வடக்கு கிழக்கில் பிறந்து , அங்கேயே பல வருடங்கள் வசித்தவர்களுடன் தான் பேசுகிறோமா, அல்லது வடக்கு கிழக்கின் வர்ணமே தெரியாமல் சின்னத் திரையில் பார்த்து விட்டு புளகாங்கிதம் அடைந்தவர்களோடு பேசுகிறோமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. புலிகளின் கொள்கையாக கப்பம், கடத்தல், மிரட்டல், சுருட்டல் என்பன இருக்கவில்லை. இதையே தான் அக்னியும் சொல்லியிருக்கிறார். ஆனால், அடிப்பொடிகளால் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. யாழில் இருக்கும், அங்கே வசித்த அனைவருக்கும் - அவர்கள் முட்டைக் கோதுக்குள் இழுத்துப் போர்த்திக் கொண்டு வசித்திருந்தால் ஒழிய- சில சம்பவங்கள் தெரிந்திருக்கும். இதெல்லாம் அப்போதிருந்த செய்தித் தாள்களில் கூட வந்திருக்காது, ( இருந்தவை எல்லாமே புலிகளின் செய்தித் தாள்கள் என்பதால்). இதை இங்கே அசாத்தின் தனிமனித சர்வாதிகாரத்தோடு ஒப்பிட்டது தான் தவறு. "இப்படி எதுவும் நடக்கவில்லை" என்று நீங்கள் சாதிப்பது புலிகள் மீதான பக்தியின் வெளிப்பாடு. எல்லாம் 100% வீதம் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையாமல் பாதுகாக்க முயலும் self-preservation மனநிலை. இது உங்கள் இஷ்டம், உரிமை. "நடந்தால் ஏன் பெயர் சொல்லி தண்டனை வழங்கத் தயங்குகிறார் அக்னி?" என்று கேட்பது இலங்கையில் இருக்கும் சட்ட ஒழுங்கு நிலை தெரியாத ஒரு அப்பாவி கோயிந்தனின் மனநிலை😂. இது உங்களிடம் இருப்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
இது போன்ற "ரொய்லெற் ஊடக" ஊகங்கள் உண்மையா என்பது முக்கியமான கேள்வி. எனக்கென்னவோ இது சுமந்திரன் வந்து விடுவார் என்று நினைக்கும் சகலவழிகளையும் ரூம் போட்டு யோசித்து அதை யூ ரியூப்பாக்கி விட்டு, "அப்பவே சொன்னேன் பார்த்தியா?" என்று கிறெடிற் தேடும் ரொய்லற் ஊடக உத்தியாகத் தான் படுகிறது😂. இது உண்மையாக இருந்தால் , சுமந்திரன் இதைச் செய்யக் கூடாது என்பது தான் என் அபிப்பிராயம், அவா.தன் நடவடிக்கைகளை சுதந்திரமாக ஒரு பா.உ/மக்கள் பிரதிநிதி என்ற கட்டுப் பாடுகள் இல்லாமல் செய்யக் கூடிய சுதந்திரத்தை சுமந்திரன் பயன்படுத்த வேண்டும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இது ஏன் உங்களுக்குப் புதிராக இருக்கிறதென விளங்கவில்லை😂. புலிகளுக்கே டிமிக்கி கொடுத்த ஒருவரை "இவர் தான்" என்று சுட்டிக் காட்டும் ஒருவர் ஊர் போய் பாதுகாப்பாகத் திரும்ப இலங்கை, அவுஸ், அமெரிக்கா போல இன்னும் வளர்ந்து விடவில்லை. ஆனாலும், அவர் ஒரு துப்பு தந்திருக்கிறார் என நினைக்கிறேன். மகளை அறிந்தால், தகப்பனை அறிவது கஷ்டமா ஐயா?
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
"ஆதாரம் தருவதால் நீண்டுவிடுகிறது" என்கிறீர்கள், மெனக்கெட்டு வாசித்த போதும் உங்கள் அபிப்பிராயங்கள் தான் இருக்கின்றன. நிச்சயமாக உங்களுக்கு ஆதாரம், தரவு, அபிப்பிராயம் ஆகிய சொற்கள் எதைக் குறிக்கின்றன என்பதில் குழப்பம் இருக்கின்றதென நினைக்கிறேன்.
-
கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? - ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து யாழுக்கு செல்கிறது விசேட குழு!
இந்த எலிக்காய்ச்சல் நேரம் கட்டாக்காலி நாய்களால் உருவாகும் பொதுச்சுகாதாரக் கேடுகள் பற்றியும் பேச வேண்டும். கண்டியில் வளர்ப்பு நாய்களில் கூட 15 முதல் 20% நாய்களில் எலிக்காய்ச்சல் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்திருக்கின்றன. வளர்ப்பு நாய்களிலேயே இப்படியெனில், யாரும் வளர்க்காத கட்டாக்காலி நாய்களில் இந்த பக்ரீரியா மிக அதிகமாக இருக்கும் என ஊகிக்கிறேன். கண்டியில் நடந்த ஆய்வு இது👇: Insight into Canine Leptospirosis in Kandy Area, Sri Lanka: Sero-epidemiology and Environmental Contamination T.P.J. Athapattu1 et al. , *Corresponding author: ruchikaf@pdn.ac.lk Canine leptospirosis is a globally important zoonotic bacterial disease. Dogs act as the maintenance host for Leptospira interrogans serovar Canicola and incidental host for several other serovars. Chronic carriers are asymptomatic and excrete pathogenic leptospires in their urine intermittently resulting in environmental contamination and is a source of infection for humans. Several studies have confirmed the presence of leptospirosis in livestock, wildlife and peridomestic rats in Sri Lanka. Scanty information is available on the status of the disease in dogs or their potential role as a carrier of the etiological agent. Thus, the current study was aimed to understand the status of canine leptospirosis among owned dogs in Kandy area. Blood and urine samples were collected from 178 clinically healthy dogs brought to Government Veterinary Hospital, Peradeniya. Microscopic Agglutination Test (MAT) was carried out using the serum samples with a panel of 14 Leptospira strains belonging to 13 serogroups. The urine samples were used to collect pellets by ultracentrifugation. DNA in the pellets were extracted from 133 urine samples and were subjected to a PCR assay targeting the flaB gene specific to pathogenic leptospires. All PCR positive samples with leptospiral DNA were sequenced and a phylogenetic tree was constructed including 25 reference strains. Out of the 96 serum samples obtained from unvaccinated dogs, 15 (15.6%) were positive for MAT. The positive serogroups included Sejroe (11.5%), Canicola (2.1%), Icterohaemorrhagiae (1.0%), and Javanica (1.0%). Amongst the 82 serum samples obtained from properly vaccinated dogs, only one sample was positive for the serogroup Sejroe. Fourteen out of the 73 (19.2%) urine samples collected from unvaccinated dogs and 13 out of the 60 (21.7%) urine samples collected from properly vaccinated dogs were positive for DNA of pathogenic leptospires confirming the excretion of the organisms in their urine. DNA sequencing revealed that the positive animals were infected with L. interrogans, L.kmetyi, L. borgpetersenii and L.weilii which belong to Leptospira P1 subclade. A considerable proportion of vaccinated and unvaccinated dogs were infected with a variety of pathogenic leptospires. Both groups excreted pathogenic leptospires in urine posing a considerable public health risk.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
கணக்கு வாத்தியார்👍. சரி. ஆனால் குறிப்பிட்டது போல தண்ணீரைத் தடுக்கத் தான் பொலித்தீன் பாவனை என்றால் காவோலை பொலித்தீனுக்குக் கிட்டவும் வராது. இதை "innovation and sustainability" என்று விபரித்த வாதவூரானின் கருத்து ஆச்சரியம் தருகிறது. 4 பனையை வெட்டி காவோலை போட்டு வீதி போடுகிறார்கள் என வைப்போம். வீதி 1 வருடத்தில் மீள உடையும். திரும்பவும் 4 பனையை வெட்ட வேண்டி வருமே? இது antithesis of sustainability ஆக அல்லவா தெரிகிறது😂?
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
இதற்கு ஆதாரம் ஏதாவது....? சீமான் 2010 இல் "காட்சி" கொடுக்கும் வரை, புலிகள் எப்படி தமிழ்நாட்டில் ஆதரவுத் தளம் வைத்திருந்தார்கள்? ராஜீவ் கொல்லப் பட்ட பின்னரும், தமிழ்நாட்டில் இருந்து சிங்களவர்கள் நமக்குத் தராத பொருட்கள் சில கடல் மூலம் வந்து சேர்ந்ததை அங்கு வசித்தவர்கள் அறிவார்கள்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சரி, யூ ரர்ன் எடுத்து நான் அல்லாரைக்கே வருகிறேன்😂. நீங்கள் அவதாரில் "பை" போட்டிருக்கிறீர்கள். எந்திரி அல்லது பௌதீகவியலாளர் என ஊகிக்கிறேன்? பொலித்தீனின் வேலையை கவோலை செய்யாது என்று நான் சொன்னது சரி தானே சேர்? இதில் "வக்கிரம்" எங்கே இருக்கிறது?
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஊழல்கள் வெளிவந்தால் நல்லது. ஆனால், அர்ச்சுனா இந்த ஊழல்களைச் சொன்னதால் அல்ல இந்த வழக்கு. கேதீஸ்வரன் மீது போதை வஸ்துக் குற்றம் சுமத்தியது போல சில விடயங்கள் சொல்லியிருக்கிறார். எனவே, வழக்கு இழுபட்டாலும் சத்தியமூர்த்திக்குப் பாதிப்பிருக்குமென நினைக்கவில்லை. இதனால் தான் சொல்வது, தேவையில்லாமல் வாய் வார்த்தையை சென்சேஷன் வேண்டுமென்பதற்காக விடக் கூடாது. அப்படி விடும் போது, அதை விட சென்சேஷனான பதிலை - இப்போது சத்தியமூர்த்தி செய்திருப்பது போல -வெளிவரவைத்து, உண்மையான ஊழல் எல்லாம் அமுங்கிவிடும். மொத்தத்தில், அர்ச்சுனா சத்தியமூர்த்திக்கு உதவி செய்திருக்கிறார். இப்படிப் பலருக்கு அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம்😂!
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
😂புலவர், நீங்கள் சிறு பையன் அல்ல! அதே புளித்துப் போன "பட்டி தொட்டி பிரபாகரன் பெயர்.." என்ற யூ ரீயூபர்களின் பல்லவியோடு வர. இந்தியா தாண்டியும் கூட தெரிந்த புலிகளையும், பிரபாகரனையும் பக்கத்தில் இருக்கும், ஒரே மொழி பேசும் மாநிலத்தின் மக்களுக்கு 2009 இற்குப் பிறகு சீமான் பிரபலமாக்கினார் என்பதை கேனையர்கள் நம்புவர் - யாழ் கள வாசகர்கள் கேனையர்கள் அல்ல!
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
😂கொஞ்சம் பொறுங்கோ. மணியை நீக்கும் போது என்ன காரணம் என்பது தான் கேள்வி. மணியை நீக்கிய பிறகு, பல வருடங்கள் கடந்து மணி என்ன செய்தாலும் "இந்தா பார், இது தான் நீக்கினோம்" என்பது பாபநாசம் படக் கதையல்லவா😂? இன்னும் உங்களிடம் விளக்கமோ, நியாயமான கேள்வி கூட இது விடயத்தில் இல்லை. பிறகெப்படி நீங்கள் தமிழரசையும் , சுமந்திரனையும் கேள்வி கேட்க moral standing இருக்கென்று நினைக்கிறீர்கள்?
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
அது தானே பல தடவை சொல்லியாயிற்று? சீமானும் கருணாநிதியும் ஒன்று தான்: சராசரி தமிழக அரசியல் வாதிகள். ஆழமாகப் பார்த்தால், ஈழவர் பிரச்சினையை வைத்து தன்னை வளர்ப்பதால் சீமான் கருணாநிதியை விட மோசமான சராசரி அரசியல்வாதி!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஓம், விளங்காது தான்! நம்புகிறேன்😂
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
புலவர், உங்கள் இந்த "பிடித்த தரப்பு எது செய்தாலும் ஓகே" என்று முரட்டு முட்டு கொடுக்கும் பண்பு விசித்திரமாக இருக்கிறது. இங்கே சீமானின் நடிப்பை ஆதரித்துக் கடந்து போகிறீர்கள். கஜேந்திரகுமார் மணியை "தேர்தல் வென்ற பின்னர் தூக்கி விட்டு" கஜேயைக் கொண்டு வந்ததைப் பற்றி, அதில் இருக்கும் உட்கட்சி ஜனநாயக மறுப்பை மௌனமாக ஆதரித்த படியே தமிழரசில் இருக்கும் ஜனநாயக மறுப்பைப் பற்றி காட்டமாக எழுதுவீர்கள்😂!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஒத்துக் கொள்கிறேன்! போலி மருத்துவம், போலி விஞ்ஞானம், போலிச் செய்திகளை மறுத்து எழுதுவது மிகவும் வக்கிரமான செயல்! அதே நேரம் சக உறவின் குடும்பத்தினுள் நிகழ்ந்த சொந்த சோக சம்பவங்களை பொது வெளியில் இழுத்து மனமுடைந்து விலக வைப்பது "உயர்ந்த மனிதர்களுக்கே உரிய பண்பு" இந்த "உயரத்தை" நான் தொட இயலாமல் தவிக்கிறேன் ஐயா😎!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அரட்டைக் கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் போது சரியான தகவல்கள் வாசகர்களுக்கு கிடைக்க உதவுமானால் எழுத வேண்டும். இது அப்படியான ஒரு சந்தர்ப்பம். பொலித்தீன் காவோலை வேறு பாடு பற்றி யோசிக்காமல் @வாதவூரான் இதை தன் வேலைத் தளத்திலும் அறிமுகம் செய்ய முயன்றார் அல்லவா? அவர் வேலைக்கு ஆப்பு வராமல் நீங்களும் நானும் உதவியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்😂. பி.கு: விஞ்ஞானம் பற்றிய குறைவான புரிதல் அல்லது விஞ்ஞான எதிர்ப்பு இருக்கும் எல்லா "அரட்டை" திரிகளிலும் நான் பதில் வைப்பேன், எனவே மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள்😎!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இந்த திரியில் என்ன எழுதினீர்கள் என்பதையே உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டியிருக்கிறதா😂? இது நீங்கள் எழுதியது: ஆலோசனை நானும் கொடுத்திருப்பதால் நானும் பதில் தரக் கடமை இருக்கிறது. பதிலுக்கு -அடிப்படை விடயத்தில் ஒரு கருத்தும் இல்லாமல்- நீங்கள் எழுதிய பதில் இது: இதையெல்லாம் எழுதும் போது "பதில் தராதீர்கள்" என்ற fine print போட்டு எழுதினீர்களா? உங்கள் அச்சத்தை நீங்கள் நிர்வாகத்திடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எழுதுவதற்கு கருத்து எதுவுமில்லாதவர்கள் சிவப்புப் புள்ளியைப் போட்டு சுயமாக இன்பங் (ஆத்ம திருப்தி😎) காண்பர். இது வரை நான் பயன் படுத்தியதில்லை!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அரசியலும் எந்திரவியல் எனப்படும் விஞ்ஞானமும் ஒன்றல்ல. அரசியல் என்பது மக்கள் சக்தி/மக்கள் எண்ணம். விஞ்ஞானம்/பௌதீகவியல் ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும், இலங்கையிலும் ஒன்று தான். வீதி அமைப்பில், பொலித்தீன் செய்யும் அதே தொழிலை காவோலை செய்யுமா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. இதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதை விடுத்து "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடுகிறேன்" என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். # ரைம் பாஸ்/நேர சங்ஹாரம்😂!
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
இது உளவள ஆலோசனையினால் தீர்க்க இயலாத பிரச்சினை. இது நடத்தைப் பாதிப்பு என்பதை விட நடத்தைக்குக் காரணமான மூளையில் இருக்கும் organic disorder இன் வெளிப்பாடு. இதை வைத்து யூ ரியூபர்களும் வாக்களித்த வினோத விரும்பிகளும் மகிழ்ச்சியடையாமல் அர்ச்சுனாவை சும்மா இருக்க விடுவதே தீர்வு.
-
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு
கோழிக்குஞ்சு தப்பி விட்டது, silver line! சீரியசாக, 10% ஆன ஆண்களில் விந்துகள் சுக்கிலப் பாய்மத்தில் (semen) அறவே இல்லாமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது விந்து உற்பத்தி குறைவாக இருப்பதால் இருக்கலாம் அல்லது விந்து உற்பத்தியானாலும், விந்தை வெளியே கொண்டு வரும் வழிகள் அடைபடுவதன் காரணமாக இருக்கலாம்.நவீன மருத்துவத்தில் இதைக் கண்டறிவதும், சரி செய்வதும் இலகு. விந்து எண்ணிக்கை குறைந்த ஆண்களில் பெரும்பான்மையானோரின் பிரச்சினை வரிகோஸ் நாளம் (Varicocele) என்ற விதைகளுக்கு வெளியே இருக்கும் பிரச்சினையாகத் தான் இருக்கிறது. கால்களில் இரத்த நாளங்கள் புடைத்திருப்பது போலவே, விதைகளுக்கு செல்லும் இரத்த நாளங்களும் புடைத்து, இரத்த ஓட்டம் குழம்பி, இதனால் விதை வெப்ப நிலை அதிகரிக்கும் - விந்து உற்பத்தி குறையும். இதற்கும் சிகிச்சை இருக்கிறது. அடி வயிற்றில் சிறிதாக வெட்டி, புடைத்திருக்கும் நாளத்தை வெட்டி முடுச்சுப் போட்டு விடுவர். இதையெல்லாம் மருத்துவர்கள் சொன்னாலும் கேக்காமல், மூலிகை மந்திரமென்று போவோர் உரிய விலையைக் கொடுக்கிறார்களென நினைக்கிறேன்.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
இதை ஒவ்வொரு முஸ்லிம் வெளியேற்ற நினைவுநாட்களின் போதும் செய்தாரென நினைக்கிறேன். இதை நினைத்தாலும் சொல்லாமல் மௌனமாக இருந்திருக்க வேண்டுமா? நடந்த சம்பவத்தை பிழை என்று சொல்லியிருக்கிறார். நியாயமான நிலைப்பாடாகத் தான் நான் பார்க்கிறேன். முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி என்னுடைய கருத்தும் இது தான். சுமந்திரன் லவ்வர்சின் இன்னொரு குற்றச் சாட்டு இவர் "இனப்படுகொலை இடம்பெறவில்லை" என்று சாதித்தார் என்பது. "இனப்படுகொலை நடந்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதை நிரூபிப்பதில் பாரிய சவால் இருக்கிறது - bar is high, செய்ய முடியாது" என்பதே சுமந்திரன் சொன்னது. இது எனக்குப் புரிகிறது. "அப்படியெல்லாம் எப்படிச் சொல்ல முடியும்?, நிரூபிக்கலாம்!" என்று கூறியவர்களுள் சிலர் - முன்னாள் நீதியரசர் விக்கி ஐயா, அமெரிக்காவில் வசிக்கும் (மேரிலாந்துப் பல்கலை?) கீதபொன்கலன், (வவுனியாவில் காணி உறுதியெழுதும்😎)பதில் நீதவான் பெண்மணி- இவர்களையெல்லாம் யாராவது சங்கிலியால் கட்டி வைத்து இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்காமல் தடுத்தார்களாமா😂? சுமந்திரன் களத்திற்கு வந்த இந்த 14 ஆண்டுகளில்குறைந்தது இந்த 3 பேரும், ஏனைய புலம் வாழ் சட்ட மேதைகளும் எத்தனை முயற்சிகள் ஹேக் நோக்கி முன்னெடுத்திருக்கிறார்களாம்? எங்களுக்குப் பின்னர் ஆரம்பித்த றோகிங்கியா மக்களே ICJ இல் ஒரு விண்ணப்பம் முன்னகர்த்தி விட்டார்கள். எங்கே இந்த சுமந்திரன் எதிர்ப்பு வெத்து வேட்டுகள் இப்போது?
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
பொலித்தீனுக்கும் காவோலைக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், உலகில் எங்கேயிருந்தும் ஆலோசனை கொடுக்கலாம். ஓவசியர் மார் எந்திரிகள் அல்ல.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
ஆம். இவை தான் காரணங்கள். ஆனால், இந்தக் காரணங்களிலும் சிலவற்றுடன் ஒத்துவர முடியவில்லை. புலிகளை சுமந்திரன் விமர்சித்தார் என்பது சரியான தகவலா தெரியவில்லை. நீங்கள் "ஆயுதப் போராட்டத்தால் தீர்வு வராது" என்று நம்பிய, நம்பும் ஒருவர். இதை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வது போல சுமந்திரனும் வெளிப்படையாகச் சொன்னார். அப்படிச் சுமந்திரன் சொல்வது பிரச்சினை என்பதன் அர்த்தம், "வாக்கு வாங்குவதற்காக அக்ரிங் கொடுக்க வேண்டும்" என்று சொல்வது போல படுகிறது. ஏற்கனவே செவாலியர் விருது வாங்கும் அளவிற்கு "நடிகமணிகளாக" இருக்கும் நபர்களால் தமிழ் தேசிய அரசியலும் (யாழ் களமும்😎) நிரம்பியிருக்கிறது. இன்னொரு நடிகன் தேவையா எமக்கு? ஒரு காரணம் தான் முக்கியமானது: ஏனைய "நடிகமணி" தமிழ் அரசியல்வாதிகள் போல பிரபாகரனையும், புலிகளையும் தூக்கித் தலையில் வைக்கவில்லை என்பதே அது. இதே தான் சம்பந்தரை வெறுக்கவும் காரணம். வடக்கு கிழக்கில் ஆமி ஊருக்குள் வரமுதலே, "என்னை ஆமி தேடுது" என்று வெளியேறி வந்து வெளிநாட்டில் தஞ்சம் பெற்ற ஆட்கள் ஊரில் தங்கி விட்ட அரசியல் வாதிகளை கரிச்சுக் கொட்டும் போது பெரும் கொமெடி பார்ப்பது போலத் தான் இருக்கும்😂.