Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் 😂(நெடுக்கரிடம் இப்படி முன்வரக் காத்திருக்கும் அரசியல் ஆர்வமுள்ள, ஆனால் தடுக்கப் படும் அடுத்த தலைமுறை யார் எனக் கேட்டேன், பதில் கிடைக்கவில்லை. எனவே உங்களிடம் கேட்கிறேன்) மாவை வாரிசு அரசியல் செய்யும் சுய நல அரசியல் வாதி. சுமந்திரன் இப்படி இளையோரை அரசியலில் முன்னேற விடாமல் தடுத்த ஆதாரம், செய்திகள் எவையாவது உண்டா? மாறாக, அம்பிகா சற்குணநாதனை பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முகமாக வேட்பாளராக்க முயன்ற போது, அவரை இணையத்தில் பாலியல் ரீதியாகக் கூட திட்டி ஒதுங்க வைத்தது சுமந்திரனின் எதிராளிகள். இதற்கு நிறைய ஆதாரங்கள் யாழ் களத்திலேயே செய்திகளாக இருக்கின்றன. (இன்னொரு விடயம், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்குக் கொண்டு வந்த இளையவரான சாணக்கியனையும் "அவர் தமிழரல்ல, கிறிஸ்தவ மதம் மாறி" என்று திட்டியவர்கள் இந்த திரியில் நிற்கிறார்கள்!) எனவே, எப்படி சுமந்திரன் இளையோரைத் தடுக்கிறார் என விளக்குங்கள்!
  2. இதற்கான காரணத்தை கோசான் குறிப்பிட்ட நினைவு: "மத்திய கிழக்கின் பாரிஸ்" என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட லெபனான், பலஸ்தீன அகதிகளை ஏற்றுக் கொண்டது. அங்கே வேரூன்றி வாழ்ந்த பலஸ்தீன வழி மக்கள், இஸ்ரேல்/மேற்கு எதிர்ப்பு வன்முறையை ஆதரித்து ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் உருவாக வழி வகுத்தார்கள். இன்று லெபனானின் அரச இராணுவம் கூட ஹிஸ்புல்லாவின் பகுதிக்குள் செல்ல முடியாதளவு லெபனான் சீரழிந்து கிடக்கிறது. இந்த நிலையைக் கண்டு பயந்து தான் எகிப்து, ஜோர்தான், அமீரகம் ஆகிய எல்லா அரபு நாடுகளும் பலஸ்தீன மக்களை செற்றிலாக அனுமதிப்பதில்லை!
  3. பீற்றர் இளஞ்செழியன் சுமந்திரனின் ஆள் அல்லவா? அப்ப சுமந்திரனா பின்னால் இருப்பது? சும்மா சும்மா திட்டித் திரியும் பெருமாள் இப்போது எங்கே போனார்?
  4. நீங்கள் பார்க்காதது போலவே கட்டுரை எழுதியவரும் பார்த்திருக்க மாட்டார். பார்த்திருந்தால் வெறுமனே கட்டுரை எழுதி விட்டுப் பேசாமல் இருந்திருக்க மாட்டார் (அப்படியானால் வெறுமனே இருந்த வாக்குகளை சுமந்திரன் புள்ளடி போட்டார் என்கிறீர்களா? யாருக்கும் புள்ளடி போடாத வாக்குச் சீட்டுகள் செல்லுபடியற்றவையாக அல்லவா இருக்க வேண்டும்?) யாழ் களத்தில் அந்த நேரம் வந்த செய்திகளின் படி நடந்தவை இவை: சசிகலா ரவிராஜ் வென்று வருவதாக மிக முன்னதாகவே யாரோ தொலைபேசியில் உள்ளேயிருந்து சொன்னார்களாம், என்று அவரது மகள் முகநூலில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். எல்லா வாக்குகளும் எண்ணி முடிந்த பின்னர் அவர் வெல்லவில்லை என்று பெறுபேறு வருகிறது. மரணவீடு போல அவர் அங்கேயே குளறி அழுகிறார். அவர் மருமகன் கலையமுதன் அங்கே வந்த சுமந்திரனை ஏதோ சொல்லிய படி அணுக முற்பட்ட வேளையில் சுமந்திரனின் பாதுகாப்பிற்கு வந்த விசேட அதிரடிப் படையினால் நையப் புடைக்கப் படுகிறார். உடனே, "சுமந்திரன் சசிகலாவின் வாக்குகளை மாற்றி விட்டார்" என்று கதைகளைப் பரப்பி விட்டார்கள். அடுத்த நாள் காலை, சசிகலா மகளின் முகனூல் செய்தியும், யார் வாழ்த்தினார் என்ற தகவலும் காணாமல் போய் விடுகிறது. ஆனால், சுமந்திரன் எதிர் தரப்பினால், பல்வேறு வர்ணங்கள் பூசி அவர் வெற்றி போலியானது என்ற கதைகள் இன்றும் தொடர்கின்றது. "கறுப்பாய் சத்தி எடுத்தவன், காகம் காகமாய் சத்தி எடுத்தான்!" என்று திரிவானது போல!
  5. இவ்வளவு முக்கியமான செய்தி, முன்னர் கேள்விப் பட்டிராத ஒரு ஊடகத்தில் மட்டும் வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இது உண்மையா அல்லது வழமை போல மாட்டை விட்டு மரத்தைப் பற்றி எழுதும் நம் ரொய்லெற் ஊடகங்களின் இன்னொரு படையலா😂?
  6. இது புதிய செய்தியோ, ஆச்சரியமான தகவலோ அல்ல. "...Asked about the feasibility of Israel’s military goal to eliminate Hamas and disallow the terrorist group from having any governing say in Gaza, Griffiths responded “Hamas is not a terrorist group for us, as you know, it is a political movement. https://www.jpost.com/israel-hamas-war/article-787084 ஐ.நா சபை அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிடுவதில்லை. அந்த வேலை தனித் தனியான நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அரசிய அமைப்புகளுக்கும் உரிய பணி. ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என பட்டியலிட்டால், ஐ.நாவின் எந்த அமைப்பும் தங்கள் பணியைச் செய்ய முடியாது, இது ஒரு சட்டம் சார்ந்த விடயம் என்று நினைக்கிறேன். இதை வைத்துக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாத இயக்கமா இல்லையா என்று நாடுகள் தீர்மானிக்க மாட்டா!
  7. மாவையின் வாரிசு சசிகலா ரவிராஜின் மருமகன் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். 2020 தேர்தல் நேரம் "சுமந்திரன் வாக்கெண்ணும் நிலையத்தினுள் சென்று சசிகலாவுக்கு விழுந்த வாக்குகளை தன் பெயருக்கு மாற்றி கொண்டார்" என்று இங்கே "ட்ரம்ப் சின்ட்றோமினால்" பாதிக்கப் பட்ட உறவுகள் பறையடித்த போது கூட இந்த conflict of interest😂 பற்றி எதுவும் மூச்சு விடவில்லையென நினைக்கிறேன்! தமிழக அரசியல் கட்சிகள், வாரிசு அரசியலும் செய்து ஏதோ மக்களுக்கும் சில நன்மைகள் செய்து கொண்டிருக்கும் போது போட்டுத் தாக்கும் "ஊழல் எதிர்ப்பு நீதிமான்கள்" எல்லோரும் இங்கே கப்சிப்! #தொண்டையில முள்ளு😎
  8. தமன்னா வரமுன்னர் இலங்கை நல்லாத் தான் இருந்தது என்கிறீர்கள்?
  9. கருணா குழுவால் சுட்டுக் கொல்லப் பட்ட யோசப் எம்.பி போல வாழ வேண்டுமென்று ஒருவர் சொல்கிறார் பெருமாளாவது வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆளல்ல, அவரது ஆழம், யோசிப்பு எல்லோரும் அறிந்தது தான்! நீங்களோ அதற்கு சிரிப்புக் குறியும் போட்டு, கீழே இருக்கும் கருத்தை மிகவும் சாதாரணமாக எழுதியிருக்கிறீர்கள். எப்படி முடிகிறது ஒரு அரசியல் படுகொலையை நகைச்சுவையாக்க? பெரியோர், மூத்தோர் என்ற அடையாளத்தைத் தாங்கியிருக்கிறீர்கள், அதற்கேற்ப நிதானித்துக் கருத்தெழுதாமல் இப்படி இருக்கிறீர்கள்??
  10. கட்டுரையில் நிலாந்தனே சுட்டிக் காட்டியிருக்கிறார்: ஆயுதம் ஏந்தாத தமிழ் கட்சிகளில், ஒரே கொள்கை, ஆனால் மாறு பட்ட அணுகுமுறை என்று இருந்தோர் பலர் இருந்திருக்கிறார்கள், இத்தகைய அணுகுமுறையின் பல்வகைத் தன்மை தமிழருக்குப் புதிதல்ல. வாக்காளர்கள் அல்லது கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோரிடம் பல்வகைத் தன்மைக்கு ஆதரவில்லா விட்டால் உரிய அரசியல் தலைவர்கள் தாமாகவே பதவியிழந்து போய் விடுவர் - மக்கள் விரும்பும் தலைவர்கள் முன் வரலாம், தொடரலாம்! ஆனால், எங்கள் தீவிர தேசியர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தீவிர தேசியர்கள் கேட்பது இதையல்ல: "தாயகத்தில் மக்கள் உனக்கு வாக்குப் போட்டாலும் நமக்குப் பிடிக்கவில்லையானால் நீ விலகி விட வேணும்"😎. இதைத் தான் சுமந்திரனிடம் எதிர்பார்க்கிறார்கள்.
  11. டார்வினின் கூர்ப்புக் கோட்பாட்டைக் கற்காமல், புரியாமல் உயிரியல் துறையில் மேற்கொண்டு எதைப் படித்தாலும் சான்றிதழை வைத்து முதுகு சொறியலாம், அதை விட வேறெதுவும் உருப்படியாக உருவாக்க முடியாது. மேற்கு நாடுகளில் "படைப்புக் கொள்கை- creationism" என்பதை பாடத்திட்டத்தில் புகுத்த வலது சாரி கிறிஸ்தவர்கள் முயல்வது போலவே, இந்தியாவில் புராணங்களைப் போலி விஞ்ஞானமாகப் புகுத்த மோடி அணி முயல்கிறது என நினைக்கிறேன். இதன் முதல் படி தான் கூர்ப்பை அகற்றியமை. இனி "கௌவரவர்கள் தான் IVF இனைக் கண்டு பிடித்தார்கள்" என்ற ஜோக்கை பாடத்தில் இணைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்😂.
  12. இந்த ஆலோசனையில் பிரச்சினையிருக்கிறதே? Saturated fat எனப்படும் நிறைவுற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும், unsaturated fat எனப்படும் நிறைவுறா கொழுப்பை அன்றாடம் எடுக்கும் கலோரியில் 40% இனைப் பெற்றுக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் mono-unsaturated fat எனப்படும் நிறைவுறா கொழுப்பின் வகையை எங்கள் உணவுகளைப் பொரிக்க, வறுக்கப் பயன்படுத்தவும் முடியும்.
  13. ஐரோப்பாவின் அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கும், ஆசிய, அமெரிக்க கண்டத்தின் மீதான அவர்களின் ஆக்கிரமிப்பிற்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் வளங்களைக் கண்டு கொண்டதும் அவற்றை வியாபாரமாக்கியதும் உழைத்ததும் உண்மை, ஆனால் கீழைத்தேய நாடுகளில் எடுத்த வளங்களால் தான் இன்று ஐரோப்பா அல்லது வெள்ளையர்கள் வளமாக இருக்கிறார்கள் என்பது மிகையான கருத்து - தற்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் தேச பக்தியை வைத்து மக்களைத் திரட்ட முனையும் போலி வரலாற்று ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புத் தான் இந்த வியாக்கியானம் என நினைக்கிறேன்.
  14. 5.7 முதல் 6.5 என்றால் நீரிழிவுக்கு முன்னான pre-diabetic நிலை, எனவே கவனம் தேவை! (மற்றையது முன்னிற்கும் (prostate) சுரப்பி பெரிதானாலும் இரவில் அடிக்கடி போக வேண்டியிருக்கும்)
  15. இந்திய கோமாதா துதி பாடும் ஊடகங்களில் வருகிற போலித் தகவல்களை நம்புகிறீர்கள் என ஊகிக்கிறேன். ஜேர்சி மாட்டின் பால், உள்ளூர் சிந்தி வழி மாட்டின் பாலை விட உள்ளடக்கத்தில் வேறல்ல - வித்தியாசம் பால் அளவில் தான் உள்ளூர் மாடு ஷொப்பிங், சுவரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, முதலீடு இல்லாமல் ஒரு லீற்றர் கறக்கும், ஜேர்சி புண்ணாக்கும் புல்லும் மெனக்கெட்டுப் போட்டால் 10 மடங்கு அதிகம் கறக்கும்! ஒரு கேள்வி: "பூண்டு" என்றால் என்ன? ஈழத் தமிழில் பூண்டு என்றால் களை என்று தான் அறிந்திருக்கிறேன்.
  16. தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு சாப்பிடலாம். விதைகளில் தான் ஒக்சலேற் இருக்கிறது. சின்ன வெங்காயத்திலும் ஒக்சலேற் இருக்கிறது (ஆனால், அதை நிறையச் சாப்பிடச் சொல்கிறது பதிவு), "முந்தானை முடிச்சு புகழ்" 😎முருங்கைக் காயிலும் ஒக்சலேற் இருக்கிறது. ஆனால், கல் உருவாக வெறுமனே ஒக்சலேற் அதிகரிப்பது மட்டும் போதாது, சிறு நீரில் கல்சியமும் அதிகரிக்க வேண்டும் - அப்படி அதிகரிக்காமல் தவிர்க்க மேலே இணையவன் சொன்ன வழிகள் தான் நிரூபணமான வழிகள்!
  17. மேலே இருப்பது போன்ற போலி, அரைவாசிப் போலி மருத்துவ தகவல்களை தனித்தனியாக மறுத்துரைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது இப்போது! ஆங்கில மூலத்திலும் health.com, medical news போன்ற வியாபாரத் தளங்கள் இது போன்ற அடிப்படையில்லாத நம்பிக்கைகளைப் பரப்புகின்றன.
  18. உங்களுடைய படபடப்பு தேவையற்ற ஒன்று. என்ன எழுதியிருக்கிறேன் என்று சரியாக வாசித்தீர்களா? ஒரு டசின் பேர் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கும் ஒரு நிகழ்வின் ஒன்றரை நிமிட பதிவை, ஐ.பி.சி. பாரிய ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருக்கிறது😎. ஏன் இத்தகைய செய்தித் திரிப்பு அவசியமாக இருக்கிறது எங்கள் தமிழ் சூழலில்? இது தான் நான் எழுதியது. நீங்களோ, நான் முகங்கள் தேடியதாக அச்சம் கொள்கிறீர்கள். ஒரு கருத்தின் பின் புலம் கூடப் புரியாமல் ஏன் அவசரப் பட்டு எழுதுகிறீர்கள்? என்ன மிரட்டலை விட்டேன் என்கிறீர்கள்? அப்படி, தனிப்பட்ட மிரட்டல் விட்டு விதி மீறல் செய்திருந்தால் அங்கேயே முறைப்பாடு செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இங்கே, அவதாரத்தின் பின் இருக்கும் ஆட்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் முயற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படி முயன்றது யார் தெரியுமா? "தீவிர தேசியத்தின் பால் நிற்கிறோம்" என்று சொல்லும் உறுப்பினர்கள் தான்! இங்கே நீங்கள் பயம் கொள்வது போல புலநாய்வு, ஆள்காட்டியென்று யாரும் மெனக்கெடுவதில்லை. எனவே, தேவையற்ற அலட்டலை விட்டு விட்டு கருத்துகளை அர்த்தமுள்ளதாக முன் வையுங்கள்!
  19. மக்களுக்குத் தெரியாது என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? என் ஊகம், ஒரு வன்முறை மூலம் நிர்ப்பந்தம் ஏற்படுத்திய பின்னர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பிரச்சினையில் மாட்டுப் பட விரும்பா மக்கள் முன்வர மாட்டார்கள்! அதனால் தான் ஒரு 12 பேர் (யூரியூபில் தெளிவாக தலைகள் தெரிந்த போது எண்ணியது, மேலே சொன்னது போல் 20, 30 அல்ல!) கமெராவின் முன் வராமல் ஒருவர் பின் ஒருவராக மறைந்து நிற்கின்றனர். முன்னைய கருத்தில் நான் சொன்னது போலவே, தீவிர தேசியக் குரல்களின் பக்கமிருந்து மக்களை அந்நியப் படுத்தும் வேலை தான் இந்த தீ வைப்பு வன்முறை. இது உரிய ஆட்களுக்கு உறைக்கா விட்டால், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தனி நபர் தர்ணாக்களாக சுருங்கிப் போகும்!
  20. குளிரான கால நிலையிலும் ஒரு 20, 30 பேர் வந்திருக்கிறார்கள் - பாராட்டுக்குரியது! அதை "பாரிய ஆர்ப்பாட்டம்" என்று கனடா நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளதாக ஐ.பி.சி நக்கல் அடித்திருக்கிறது.
  21. கேஸ் பை கேஸ் ஆக யாரும் ஆலோசனை கொடுக்க முடியாது. ஒரு கொள்கையில் இருந்து ஒருவர் மாறுகிறார் என்பதற்காக ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விடுவது சட்ட ரீதியிலும் தவறு, அதே நேரம் கொள்கையையும் வளர்க்காது (மேலே சொல்லியிருக்கிறேன் ஏன் என்று). எனவே, இதைச் செய்தோர் சாதாரண றௌடிகள் அல்ல, முட்டாப் பீசு றௌடிகள் என்பது என் அபிப்பிராயம் - இவர்களுக்கு வழி காட்டல் சட்டத்திடமிருந்து மட்டும் தான் கிடைக்க முடியும், ஏனையோர் நேரம் செலழிப்பது வீண் வேலை. இந்த தாக்குதலில் தீ மூட்டல் சம்பந்தப் பட்டிருக்கிறதென நினைக்கிறேன். அது எப்படி எதிரே நிற்பவரை உணர்ச்சி மயப்பட்டுத் தாக்குவது போல ஆகும் என்கிறீர்கள்? மேற்கு நாட்டு சட்டங்களில், தீ முட்டலுக்கு கடுமையான தண்டனை ஏன் இருக்கிறது என நினைக்கிறீர்கள்? ஏனெனில், simple arson எனப்படும் சிறிய தீ மூட்டல் கூட ஒரு திட்டமிட்டு, நேரமெடுத்துச் செய்யும் செயல். எனவே, "உணர்ச்சி மயப்பட்ட சூழலில் செய்தது" என்று யாருக்கும் விளங்கப் படுத்தித் தப்ப இயலாது. ஆனால், தீ மூட்டல் மட்டுமல்ல. தமிழ் தேசியத்தின் பெயரால் "கொள்கைப் பற்றில் செய்கிறோம்" என்று செய்யும் மிரட்டல்கள், புகைக் குண்டெறிதல், கூட்டம், குழப்புதல் எல்லாமே தமிழ் தேசியத்திற்கு வைக்கிற ஆப்புத் தான்! இதை கண்டிக்காமல், தடவிக் கொடுக்கும் எவருக்கும் அந்த ஆப்பில் பங்கிருக்கிறதென நம்புகிறேன்!
  22. கட்டிடங்களை எரிப்பது மட்டுமல்ல வன்முறையின் வெளிப்பாடு. புலம் பெயர் அமைப்புகளின் சகியாத்தன்மை, வன்முறை ஆதரவுப் போக்கு என்பவற்றைக் காட்டும் சம்பவங்கள் சில ஐரோப்பாவிலும், குறைந்தது ஒரு தடவை அவுசிலும் நடந்திருக்கின்றன: 25 வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல! இப்படி வன்முறையை பூடகமாக ஆதரிப்பதன் விளைவுகள், சட்ட ரீதியாக இருக்கா விட்டாலும் சமூக ரீதியாக இருக்கும். இளையோர், வன்முறைப் போக்கு காரணமாக, தமிழ் தேசிய செயல்பாடுகளை விலக்கி வைத்து விடும் ஆபத்து இருக்கிறது. அடுத்த தலைமுறையை அன்னியப் படுத்தி விட்டால், சிங்களவர்கள் எதிர்பார்க்கும் விளைவை நாமே வெள்ளித் தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுத்து விடுவோம்!
  23. மன்னிப்பெல்லாம் எதற்கு? கவலையை விடுங்கள். தீர்ப்பில் இருப்பது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் சொல்வது போல காரமாக இருக்கிறதா என அறிய நான் ஒன்ராரியோ உயர் நீதிமன்றின் வலைத்தளத்தில் ஜனவரி மாத தீர்ப்புகளைத் தேடிப் பார்த்தேன். அந்தத் தேடலில், கார்த்திக் நந்தகுமார் என்ற பெயரோ, அய்யப்பன் சமாஜம் என்ற பெயரோ சிவில், கிரிமினல் வழக்கு பகுதிகளில் காணவில்லை. எனவே தான் கேட்டேன். என் ஊகம்: வழக்கு நடக்கும் அளவுக்கு இந்த முறைப்பாடு முன்னேறவில்லை. வழக்கு ஏற்றுக் கொள்ளப் படாமல் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. வழக்கு நடந்திருக்கா விட்டால் 75K பணம் செலுத்தும் உத்தரவும் கொடுக்கப் பட்டிருக்காதென ஊகிக்கிறேன்.
  24. ஜெமோவின் தீவிர இந்திய தேசியவாதத்துடன் உடன்பாடு இல்லை. ஆனால்,சிக்கலான, அரூபமான விடயங்களை தெளிவாக தமிழில் வடிக்கும் அவரின் எழுத்துத் திறன் அவருக்கேயுரித்தானது. இந்தத் தொடர் சிறந்த உதாரணம். இந்த "சேர்டிபிகேட்/படிப்பு சான்றிதழ் கொண்ட பாமரர்கள்" பலரை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அண்மையில் பொறியியலாளர்கள் சிலர் இருந்த குழுவில் விருந்தொன்றில் உரையாடிக் கொண்டிருந்தோம். நெட்பிளிக்ஸ் தொடர்கள், திரைப்படங்கள் பற்றிப் பேச்சுத் திரும்பியது. அதில் The Manifest என்ற ஒரு தொடர், காணாமல் போய் சில ஆண்டுகள் கடந்து திரும்பி வந்த ஒரு விமானத்தைப் பற்றியது - முற்றிலும் கற்பனைத் தொடர். "இப்படியான ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்தது, அமெரிக்க அரசு வெளியே வராமல் அமுக்கி விட்டது" என்று ஒரு பொறியியலாளர் உறுதியாக வாதிட்டார். யூ ரியூபில் யாரோ விட்ட வெடியை, பௌதீகவியலின் விதிகளைப் படித்து, பரீட்சை எழுதிப் பாஸ் செய்து, அமெரிக்காவில் பொறியியலாளராக இருக்கும் ஒருவர் நம்பியதை ஆச்சரியத்தோடு கடந்து சென்றேன். இது தான் இன்றைய நிலை😎!
  25. நீங்கள் குறிப்பிடும் வழக்கு விசாரிக்கப் பட்ட தகவல் எதையும் ஒன்ராரியோ உயர் நீதி மன்றின் பதிவுகளில் காணவில்லையே? அந்த தகவல் இருந்தால் இணைக்க முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.