Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. நல்ல விடயம். நிக்கி ஹேலி தேர்வாகியிருந்தால் நடுவில் இருக்கும் independent வாக்காளர்கள் பைடனை விட்டு நிக்கிக்கு அதிபர் தேர்தலில் வாக்களித்திருப்பர். ட்ரம்ப் பக்கம் இத்தகைய இளம் வாக்காளர்கள் வருவது கடினம். பைடன் அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.
  2. தவறான தகவல் புத்தன். இது தனியார் மருத்துவ மனை அல்ல. தொண்டு (charity) அடிப்படையில் இயங்கும் மிசனரி மருத்துவமனை. பணம் இருப்போர் போனால் நன்கொடை கொடுக்க வலியுறுத்துவர். பணம் இல்லாத நோயாளிகளிடம் பணம் அறவிடப் படுவதில்லை. இது அமெரிக்க மிஷன். கத்தோலிக்க திருச்சபையும் இதே போன்ற ஒரு மருத்துவ மனையை திருச்சிலுவை மருத்துவ மனை என்ற பெயரில் கொழும்புத் துறையில் நடத்தி வருகிறது. நன்கொடை கொடுக்கலாம், ஆனால் நோயாளிகளிடம் வலியுறுத்தி கட்டணம் வசூலிப்பதில்லை.
  3. உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!! உங்கள் முதல் கருத்து மேலே👆 உங்களோடான உரையாடல்கள் எல்லாம் சிறு பிள்ளையோடு பேசுவது போன்ற சிவிங்க நீட்டல்களாக மாறுவது என் தவறோ உங்கள் இயல்போ என்று புரியவில்லை😂. இதற்கு ஆதாரம் எங்கே? அமெரிக்கா கோட்டை விடவில்லையென்று எங்கே யார் சொன்னார்கள்? 2022 இல் ரேடாரில் ஜப்பானிய விமானங்களைக் கண்ட இராணுவ சிப்பாய் இறக்கும் வரை இதைப் பற்றிய பேச்சும் செய்திகளும் அமெரிக்காவில் தொடர்ந்து வந்திருக்கின்றன. எனவே, இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இப்ப நீங்கள் உங்கள் செய்தி மூலத்தைத் தாருங்கள். மீசையைப் பற்றி பிறகு யோசிப்பம்😎.
  4. இது போன்ற ஆய்வு முடிவுகள் இனத்தூய்மை ("பச்சைத் தமிழன்", "சிங்கள ரத்தம்") என்ற கற்பனைக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்போருக்கு கிச்சு கிச்சு மூட்டும்😎! எனவே, அதிகம் இவை பற்றிப் பேச வேண்டும். மறுவளமாக, கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆசியாவின் மேற்கில் இருந்து மத்தி வரையான பகுதியில் மக்கள் சமூகங்களிடையே நிகழ்ந்த கலப்பை (genetic admixture) இது போன்ற ஆய்வுகள் மீள மீள நிரூபிக்கின்றன. இந்தக் கலப்பிற்கு ஆதாரமான இன்னொரு சுவாரசியமான விடயம் இங்கே பகிரத் தக்கது. பசுப்பால் உட்பட, பால்களில் இருக்கும் பிரதான வெல்லம் லக்ரோசு. இந்த லக்ரோசை சமிக்கச் செய்யும் லக்ரேசு என்ற நொதியம்,மனிதன் உட்பட்ட பாலூட்டிகளில் பால் மறந்த பின்னர் செயல்படாமல் போய் விடும். ஆதிமனிதர்களில், வளர்ந்தவர்களில் லக்ரேசு இருக்கவில்லை என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், கடந்த 5000 வருடங்கள் முன்பு, சில மனித மூதாதைகள் கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்படிக் கால்நடை மேய்த்த சமூகங்களை "மேய்ச்சல் காரர்கள்-Pastoralists" என்று அழைப்பர். இந்த மேய்ச்சல் காரர்கள் மாட்டுப் பாலை உட்கொள்ள ஆரம்பித்த போது, அவர்களில் லக்ரேசு நொதியம் வளர்ந்தவர்களிலும் தொழிற்பட ஆரம்பித்தது. இது ஒரு கூர்ப்பியல் இசைவாக்கம். ஆனால், இப்படி வளர்ந்த மனிதர்களில் பாலைச் சமிக்கச் செய்யும் இயலுமை உலகம் பூராவும் சீராக பரவிக் காணப்படவில்லை. மேலே இணைத்திருக்கும் படத்தில் காட்டப் பட்டிருப்பது போல, இந்தியா, இலங்கை, கிழக்காசியா ஆகிய பகுதிகளில் லக்ரேசு நொதியம் வேலை செய்யும் (Lactase persistence) மனிதர்களின் வீதம் மிகக் குறைவு - இதனால் 60 முதல் 78% ஆன இலங்கை இந்தியர்களில் லக்ரோசு ஒத்துவராமை (Lactose intolerance) என்ற நிலை இருக்கிறது. இந்த எடுகோளின் படி பார்த்தால், பசுப்பால் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் தென்னாசியாவில் வேரூன்றி வளர்ந்த மண்ணின் மைந்தனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பசுப்பால் உங்களுக்கு ஒத்து வந்தால், மேற்காசியாவின் மேய்ச்சல் காரர்களின் வழியில் வந்த வந்தேறியாக நீங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்! (இந்தக் கடைசிப் பந்தி என்னுடைய வியாக்கியானம் மட்டுமே, ஆனால் கூர்ப்பு மாற்றங்கள் சிக்கலானவை என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்) படமூலம் நன்றியுடன்: https://ojs.lib.uwo.ca/index.php/wurjhns/article/download/5208/4353/9276
  5. உண்மையில், இணையத் தளங்களில் தரவுகளின் தரக்கட்டுப்பாட்டைப் பேண வழிகள், முன்மாதிரிகள் இருக்கின்றன. அப்படிப் பேணினால், வருமானம் குறையும் என்ற காரணம் தான், கூகிள் போன்ற தளங்கள் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். ஒரு உதாரணம்: விஞ்ஞானத் துறையில், தரவு மூலங்களாக விளங்கும் விஞ்ஞான சஞ்சிகைகளை (scientific journals) தரப்படுத்தியிருக்கிறார்கள். Impact factor, acceptance rate போன்ற குறிகாட்டிகள் மூலம் ஒரு விஞ்ஞானச் சஞ்சிகையின் நம்பகத் தன்மையை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கண்டறியக் கூடிய நிலை இருக்கிறது. இதே போல கூகிள் தகவல் மூலங்களை தரப்படுத்தலாம், பெரிய கடினமான பணியல்ல. கோவிட் பெருந்தொற்று காலத்தில், தற்காலிகமாக கோவிட்டைப் பற்றிய தேடல் விளவுகளை கூகிள் போன்ற தளங்கள் தரப்படுத்தியது நிகழ்ந்தது. தேடற்பொறியின் algorithm ஏனைய விடயங்களில் இத்தகைய தரப்படுத்தலை செய்தால், பெரும் இலாபமீட்ட முடியாது என்பதால் ஏனைய விடயங்களில் உதாசீனமாக இருக்கிறார்கள். உதாரணமாக மேலே, நாசிப் படைகளில் ஆரியரல்லாத மக்களும் இருந்தனர் என்பது எவ்வளவு பாரதூரமானதெனப் பாருங்கள். இதை விட சிறு சிறு விடயங்கள் கூட கூகிள் போன்ற தளங்களில் தரவுப் பிழைகளாக இருக்கின்றன. என்னுடைய நண்பர்கள் பலர், படித்து பெரிய வேலைகளில் இருப்போர், நாசிகள் "6 மில்லியன் யூதர்களை மட்டும் தான் கொன்றனர்" என இன்னும் நம்புகின்றனர் அப்பாவிகளாக. ஓரினச் சேர்க்கையாளர்கள், நாசி எதிர்ப்பு கிறிஸ்தவர்கள், விசேட தேவையுடைய ஜேர்மனியர்கள், றோமாக்கள் என மேலதிக 4 மில்லியன் பேரையும் நாசிகள் கொன்றார்கள் என்பது பலருக்குத் தெரியாது.
  6. "Garbage in, Garbage out" 😂 உயிரியல் மருத்துவ ஆய்வுலகில் நவீன அணுகுமுறைகளும் உபகரணங்களும் வந்து விட்டன. ஆனால் ஆய்வு முடிவுகளின் தரத்தை , தனி மனிதனின் சிந்தனையும் படைப்பாற்றலும் அதிகரிப்பது போல இந்த நவீன கருவிகள் பெரிதாக அதிகரிப்பதில்லை. இதன் காரணம், ஒரு உபகரணம் என்ன தான் நவீனமாக இருந்தாலும் "குப்பையைப் போட்டால் குப்பை தான் விளைவாக வரும்- garbage in, garbage out" கூகிள் உட்பட்ட இணையத் தரவுத் தளங்களில் கொட்டிக் கிடக்கும் போலித்தரவுகளைச் சுத்தம் செய்யாமல், அந்தப் போலித் தரவுகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை இயங்க வைத்தால் அது போலியாகத் தான் இருக்கும். இதை Artificial Intelligence என்பதை விட Artificial Ignorance என அழைக்கலாம்!
  7. https://arangamnews.com/?p=10517 சுமந்திரன் சொன்னதுதான் சரி என்பது உறுதியாகின்றதா? — கருணாகரன் — தமிழரசுக் கட்சியின் அதிகாரப் போட்டிகள் சந்திக்கு வந்தது மட்டுமல்ல, அதை நீதிமன்றம் வரையில் கொண்டு வந்து விட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகி விட்டன. ஒரு வழக்குக்கு எதிர்வரும் 2024 மார்ச் 05 இல் அடுத்த கட்ட விசாரணை என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது. இன்னொரு வழக்கு மார்ச் 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கட்சிக்கு இதெல்லாம் கசப்பான அனுபவம்தான். சோதனைதான். உள்ளே நெடுங்காலமாகச் சீழ்ப்பிடித்துக் குமைந்து கொண்டிருந்த விசயங்கள் இப்பொழுது வெளியே வந்துள்ளன. சீழ்ப்பிடித்திருந்தால் அது என்றாவது வெளியே வந்துதான் தீரும். குறுகிய நோக்கங்களும் பதவி ஆசையும் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. இது முடிவுக்கு வருவது கடினம். அப்படி இந்தத் துயர நிலை முடிவுக்கு வர வேண்டுமானால் கட்சியின் அரசியல் சிந்தனையும் செயற்பாடும் (உள்ளடக்கம்) மாற்றமடைய வேண்டும். அவ்வாறே அரசியற் பண்பாடும் உருவாக வேண்டும். இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை. தற்போதைய சிக்கல்களுக்கு யாப்பு மீறல், ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம். தலைவர், செயலாளர் தெரிவுக்குப் பிறகு எழுந்திருந்த சர்ச்சையின்போது இதைச் சுமந்திரன் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அது கூட மென்மையாகத்தான். ஏனென்றால் யாப்புக்கு முரணான முறையிலேயே தலைவர் தெரிவு நடந்தது. இருந்தும் அதில் சுமந்திரனும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்ற காரணத்தினால் யாப்பைப் பற்றிக் கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்தார் சுமந்திரன். அப்படி விமர்சித்தால் அதில் தன்னுடைய தவறுகளும் உட்படும் என்பதால் அதைத் தவிர்த்தார். பதிலாக நடந்த தெரிவுகளை தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால், யாப்பை மீறி எவரும் எதையும் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்றும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். அந்த அழுத்தம் இப்பொழுது வேலை செய்கிறது. முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின் போது தலைவர் தெரிவு உள்பட அனைத்துத் தெரிவுகளையும் மறுபடி நடத்துவதற்கு சிறிதரன் உள்பட முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வரை பொறுப்பானவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முக்கியமாக யாப்பு மீறல்களைப் பகிரங்கமாக ஏற்றுள்ளனர். இனி யாப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் நடந்தவை அனைத்தும் தவறு என்று பொருள். இந்தத் தவறுகளைச் சிறிதரன் – மாவை தரப்பு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளது. கட்சிக்குள்ளே இதைச் சுட்டிக்காட்டியபோது அதற்கு மதிப்பளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீர்ப்படுத்தியிருந்தால் இப்படியான தோல்வி நிலை ஏற்பட்டிருக்காது. இப்பொழுது சிறிதரன் கொண்டாடிய வெற்றி வடியத் தொடங்கி விட்டது. பதிலாக இதில் முதற்கட்டமாக சுமந்திரன் வெற்றியடைந்துள்ளார். அதாவது நீதி மன்றத்தீர்ப்புக்கு முன்னரே சுமந்திரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களும் வலியுறுத்துவதற்கு விரும்பிய விடயங்களும் நிறைவேறியுள்ளன. எல்லாவற்றுக்கும் நாம் யாப்பைப் பின்பற்றத் தேவையில்லை என்ற முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவும் மாவையின் ஆலோசனையைத் தொடர்ந்த சிறிதரன் தரப்பும் தலைகுனிந்துள்ளன. இப்பொழுது யாப்புப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் தமிழரசுக் கட்சியினருக்கும் அதன் அனுதாபிகளுக்கும் கொஞ்சமாவது நிகழ்ந்திருக்கும் என நம்பலாம். ஆகவே இனிமேல் அவர்கள் இதைக்குறித்து கொஞ்சமாவது எச்சரிக்கையோடு நடந்து கொள்வர். இல்லையென்றால் மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். பொறுப்பற்ற தனமாக, எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டிருக்கும் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா நீதிமன்றப்படியேறியே இதைப் படிக்க வேண்டிய நிலை வந்தது வரலாற்றின் சோகம். தமிழரசுக் கட்சிக்குள் துலக்கமாக இரண்டு தரப்புகள் (இரு அணிகள்) அதற்குள் உண்டென்று வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. ஒன்று சிவஞானம் சிறிதரன் – மாவை தரப்பு. அடுத்தது ஆபிரகாம் சுமந்திரன் தரப்பு. இது கட்சியின் விசுவாசிகளுக்கு கவலையளிப்பதே. ஆனால், இந்தக் கவலையைப் பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. இந்தக் கவலை யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடகங்களுக்கும் ஊடகப் பொறுப்பாளிகளுக்கும் உண்டு. அவர்களும் தங்களால் முடிந்தளவுக்குப் பாறைகளை உடைக்க முயற்சித்தனர். அதுவும் உரிய பயனைத் தரவில்லை. சம்மட்டிகள் உடைந்ததுதான் மிச்சம். இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த இரண்டு அணியும் ஒன்றிணையச் சாத்தியமுண்டா? அப்படியென்றால் அது எப்படியாக – எந்த அடிப்படையில் – அமையும்? அப்படி ஒன்றிணைய முடியவில்லையென்றால் அடுத்த கட்டம் என்ன? சுமந்திரன் தனியொரு தரப்பாகவும் சிறிதரன் தனியொரு தரப்பாகவும் இனியும் ஒரு கட்சிக்குள் நீடிக்க முடியாத நிலையில் சுமந்திரன் தனித்துச் செல்வாரா? அப்படியாயின் அவரை ஆதரித்தோரின் நிலை என்ன? அல்லது அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள தலைவர் தெரிவில் யாருக்கு வெற்றி வாய்ப்புண்டு? அதில் சுமந்திரன் வெற்றியடைந்தால் சிறிதரன் தரப்பின் கதியென்ன? சிறிதரன் வெற்றியடைந்தால் சுமந்திரனின் நிலை என்ன? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்துள்ளன. வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் அதற்கு வெளியே இரு அணிகளையும் இணைத்துச் சமரசம் செய்வதற்கு சில மதத்தலைவர்களும்(?) ஊடகப் பொறுப்பாளிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். அது எந்தளவுக்குச் சாத்தியங்களை உண்டாக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த முரண்பாடு தனியே யாப்பு மீறல், ஜனநாயக விரோதம், பதவிப் போட்டி என்பதற்கு அப்பால், அரசியல் நோக்கின் அடிப்படையிலானதுமாகும். சுமந்திரன் தரப்பின் அரசியல் அணுகுமுறை வேறு. சிறிதரன் தரப்பின் அரசியல் நிலைப்பாடும் அணுகுமுறையும் வேறு. அதுவே இங்கே அடிப்படையான முரண்பாடாகும். ஆகவே இதைச் சமரசத்துக்குட்படுத்துவது எளிதானதல்ல. தற்போது சில விட்டுக் கொடுப்புகள், நிபந்தனைகளின் அடிப்படையில் சமரசத்தை எட்டினாலும் எதிர்காலத்தில், அது உடைந்தே தீரும். அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள், ஆட் தேர்வுகள் போன்றவற்றில் நிச்சயமாக மீண்டும் முரண்பாடுகள் எழுந்தே தீரும். அவற்றை எளிதாகத் தீர்த்து விட முடியாது. ஏனென்றால் இந்தப் பிரச்சினை (முரண்பாடு) எழுந்தபோது சிறிதரன் தன்னுடைய வழமையான பாணியில் (அவருடைய விசேட குணவியல்பின்படி) சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்லாமல் வழக்கை எதிர்கொள்ளவே தீர்மானித்தார். அதாவது சவாலை எதிர்கொள்ள முடிவெடுத்தார். என்பதால்தான் “தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்” எனத் தன்னுடைய முகப்புத்தகத்தில் சிறிதரன் பதிவிட வேண்டியிருந்ததும். மேலும் இதற்காகவே அவர் கொடிகாமத்தில் கடந்த வாரம் தமிழ்த்தேசிய மாநாடு என்ற வகையில் தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டித் தன்னுடைய பலத்தைக் காட்ட முயற்சித்தார். இதில் கடும்போக்காளர்கள் ஒன்று திரண்டனர். இவர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் முஸ்டியை உயர்த்திக் காட்டினார்கள். சுமந்திரன் தோற்றுப் பின்னடைவதாக ஒரு தோற்றம் பொதுவெளியில் உருவாக்கப்பட்டது. இது கத்திக்குக் கத்தி. சவாலுக்குச் சவால் என்ற மாதிரியானது. ஆனால், அரசியலில் இத்தகைய அணுகுமுறை பயன்தராது. அதன் பயனையே இப்பொழுது அவர்கள் அறுவடை செய்கிறார்கள். ஏற்கனவே சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் தரப்பின் முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற தன்மையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதைந்தது. கிளிநொச்சி உட்பட பல இடங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை இயங்க விடாமல் அவற்றுக்கு முட்டுக்கை இட்டார் சிறிதரன். இறுதியில் தமிழரசுக் கட்சியே அந்த நிலைக்குள்ளாகியுள்ளது. ஆனாலும் அவர்கள் எதையும் பட்டறிந்து கொள்வதாக இல்லை. வழக்கு முடிவுகளுக்குப் பிறகு புதிய தெரிவின் மூலம் எல்லாவற்றையும் சீர் செய்து விடலாம் என்று சிறிதரனோ மாவையோ ஏன் அந்தத் தரப்பிலுள்ள ஏனையோரே கருதலாம். அதொன்றும் அப்படி எளிதானதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இது கட்சிக்குள் நிலவுகின்ற வேறுபாடுகளின் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு, அணுகுமுறை, ஜனநாயக விழுமியத்தின் மீதான கரிசனை எனப் பல அடிப்படைகளுடன் தொடர்புடையது. சுமந்திரனோ மென்போக்கைக் கடைப்பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பவர். அதற்கமைய சிங்கள, முஸ்லிம், மலையத் தரப்புகளோடு உறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவர். சர்வதேச சமூகத்துடனும் அவர் கொண்டுள்ள உறவு இந்த அடிப்படையிலானதே. குறிப்பாக வெளியுலகத்தின் உளநிலையை (அரசியலை) புரிந்து கொண்டு அவற்றோடு உறவை ஏற்படுத்தியிருப்பவர். இதனை தலைவர் தெரிவின் பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியுப் நேர்காணலில் சுமந்திரனே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிதரன் இதற்கு மாறாக தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர். அவருடைய அரசியல் யுத்தத்துக்கு முந்தியது. 1970 களில் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரகடனப்படுத்திய சொல்லரசியல். அதற்கு எந்தச் செயற்பாட்டு வடிவமும் கிடையாது. எந்த அணுமுறையும் இல்லை. சமூகத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பில் வைத்திருக்கும் பேச்சே அதனுடைய அடிப்படை. இதற்கு ஏனைய சமூகங்களோடு ஊடாட வேண்டிய அவசியமில்லை. என்பதால்தான் அவர் தலைவர் தெரிவை அடுத்து கிளிநொச்சிக்குச் சென்று துயிலும் இல்லத்தில் தன்னை வெளிப்படுத்தியது. மட்டுமல்ல, யாப்பு, ஜனநாயக விழுமியம், அரசியற் பண்பாடு, புத்தாக்க உணர்வு என எதையும் பொருட்படுத்தாமல் அணிப் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது. இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அதன் நிமித்தமாகப் பரிகாரம் (மாற்றங்களை) செய்தால்தான் தமிழரசுக் கட்சி மீளுயிர்ப்படையும். இல்லையெனில் அது தன்னுடைய வழியை ஒடுக்கிக் கொள்ளும். அந்த வழியை வரலாற்றுக் காடு மூடிவிடும். கடந்த வாரங்களில் இருந்ததைப்போன்று இப்போதைய நிலை இல்லை. கட்சியில் போட்டியற்ற விதமாகத் தெரிவுகளை மேற்கொள்ளும் முடிவொன்று ஏற்படுமானால் ஓரளவுக்குச் சுமுக நிலை ஏற்படும். அப்படியென்றால் மறுபடியும் யார் தலைவர் என்ற கேள்வி எழும். சுமந்திரன் மறுபடியும் தலைமைத்துவத்தைக் கோருவாரா என்று தெரியவில்லை. ஆனால், சிறிதரன் தலைமைக்கான குறியை விட்டுவிடப்போவதில்லை. அவ்வாறே செயலாளர் குறித்த தேர்வும். அவற்றில் எத்தகைய உடன்பாடுகள் எட்டப்படப்போகின்றன என்பது கேள்வியே. குகதாசனும் எளிதில் விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கட்சியின் நலனைக் குறித்து எல்லோரும் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்றால் சிறிதரன் – சுமந்திரன் அணிகளுக்கு அப்பாலான ஒரு தலைமையையே தேர்வு செய்ய வேண்டும். அது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஆகவே வழக்குத் தீர்ப்புக் கிடைத்தாலும் நடைமுறையில் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையே தொடர்கிறது.
  8. இது தெரியாமலா கருத்து தெரிவித்தீர்கள்😂? யாப்புக்கு முரணாக செய்த தேர்வுகளை இடை நிறுத்த வேண்டுமென்று தானே? "பிரதிவாதிகள் கட்சி யாப்பை மீறினர்" இந்த வாக்கியத்தில் பயனிலை எதுவென்று கண்டு பிடியுங்கள்😎!
  9. யாப்பு மீறல் என்று தெரிந்தும் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களையும் தண்டிக்க வேண்டுமல்லவா? இங்கே சட்டம் எங்கே வருகிறது? கட்சி யாப்பு மீறல் என்றல்லவா வழக்கில் இருக்கிறது?
  10. இதைத் தான் நான் முதலே சுட்டிக் காட்டினேன். ஜப்பானிய விமானங்கள் ரேடாரில் வந்திருக்கிறது. கீழ் நிலை படையினன் மேலதிகாரிக்கு தெரியப் படுத்தியிருக்கிறார், மேலதிகாரி தவறான சமிக்ஞை என்று உதாசீனம் செய்திருக்கிறார். இதன் சுருக்கம் தான் மேலே சிவப்பில் இருக்கிறது. அப்ப, ஜப்பான் காரன் தாழப்பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினான் என்பது பொய் தானே? இப்ப யார் அவியல் வைத்திருப்பதாக புலனாகிறது உங்களுக்கு😂?
  11. உண்மையாகவே புலிகளால் செய்யப் பட்ட ஒரு தவறைப் பற்றிப் பேசுகிறோம். அதைப் பேச வேண்டி வந்ததே நீலன் போல கொஞ்சமாவது செயல்படுகிற ஒரு தற்கால அரசியல் வாதியைக் கொல்ல வேண்டுமென்பது போன்ற கருத்துக்களை சிலர் சில திரிகளில் சொன்னதால் தான். இது வலிந்து யாரும் தொடங்கிய குற்றப் பத்திரிகை அல்ல, ஆனால் இதை இவ்வளவு நீட்டித்து "மூடனுக்கு அசிங்கம் அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்பது போல கொண்டு வந்ததே, இந்த வன்முறையை நியாயப் படுத்தும் தீவிர தேசியர்கள் தான். ஆனால், அதை மடை மாற்ற எல்லாவற்றையும் பேசுவர், நீலன் கொலை சரியா பிழையா என்பதைத் தவிர!அரசியல் கொலையை பற்றி மூச்சு விடாமல், ஒருவர் "character assassination" பற்றிப் பிளந்து கட்டியிருப்பதும் பெரிய நகைச்சுவை தான்! அதாவது புலிகள் அமைப்பு இதைச் செய்த போது கரெக்ரரில் கீறலே விழவில்லை, அதைச் சொல்லிக் காட்டினால் கரெக்ரர் கொல்லப் பட்டு விட்டது - நம் கையில ரத்தம்😂!
  12. எப்படி எழுதுவது😂? கிழக்கு திமோர் காரனும், குறிப்பிட்ட ஏனையோரும் தமக்குள் இருந்த தவறுகளை, கோணல்களைப் பேசினார்கள், திருத்த முயன்றார்கள். குறைந்த பட்சம், யாருடன் சார வேண்டுமென்ற தெளிவுடனாவது இருந்தார்கள். இதைப் போல இன்று கூட தமிழர்களிடையே துரோகிப் பட்டம் வாங்காமல் யாரும் செய்ய இயலுமா? இங்கே கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், வேற இடங்களில் பச்சைப் புள்ளி பெற கொமெடி எழுதிக் கொண்டிருப்பவரிடம் நீங்கள் இதைக் கேட்கிறீர்கள்?
  13. தமிழ் நாட்டு மீனவர்களும் சரி, இலங்கை மீனவர்களும் சரி சட்டத்தைக் கடைப் பிடிப்பதில் தான் பிரச்சினை. இதில் தமிழ் நாட்டு மீனவர்களால் எல்லை மீறல்கள் இடம் பெறுவது அதிகமாக இருப்பதன் காரணம், நீண்ட தூரம் சென்று மீன்பிடிக்கக் கூடிய சக்தி வாய்ந்த படகுகள் அவர்களிடம் இருக்கின்றன. இலங்கை மீனவர்களிடம் இத்தகைய படகுகள் குறைவு. எனவே, ஒரு பாரிய பல அசம நிலையில், இலங்கை மீனவர்களுக்கு அதிகம் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு. கனடாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையே கூட வட கிழக்கு எல்லைப் பகுதியில், நீர் எல்லைகள் அவ்வளவு வரையறுக்கப் படாத பிரதேசங்களில் மீன்பிடியில் பிணக்குகள் இருக்கின்றன. ஆனால், இது grey zones எனப்படும் வரையறை செய்யப் படாத பிரதேசங்கள் சம்பந்தப் பட்டது. இலங்கை, இந்திய எல்லையில் இத்தகைய grey zones - வரையறையற்ற பகுதிகள் இருக்கின்றனவா?
  14. ****** ஆனால், மரம் நடுகிற உங்கள் பணி பாராட்டுக்குரியது, வாழ்த்துக்கள்!
  15. ரிக் ரொக் சாதனைகளில் முதன்மையானது இப்படிப் பட்ட லூஸ் கூட்டங்களை ஆயிரக் கணக்கி உருவாக்கியது தான்😂! மற்றபடி, இது பார்வைக்காக ஒரு அரங்கேற்றப் பட்ட காட்சி. குட்டி யானை, 2 வயதுக்குள் இருக்கலாம், காப்பகத்தில் மரத்தில் கட்டப் பட்டிருக்கிறது. இப்படி கட்டப் பட்டிருக்கும் போது, இயற்கையாகவே தலையை ஆட்டியபடி தான் குட்டி யானைகள் நிற்கும். வளர்ந்த யானையாக இருந்திருந்தால் தும்பிக்கையால் தூக்கி, தரையில் எறிந்து விட்டு, முன்னங்காலால் ஒரு 1000 கிலோகிராம் நிறையோடு மிதித்திருக்கும்!
  16. ஒரு மனிதனுடைய பெறுமதி (value) என்பது அவனது குடும்பம் சார்ந்து இருக்கலாம், இனம் சார்ந்து இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி உலகம் சார்ந்தும் இருக்கலாம். இங்கே "இனத்திற்கு என்ன செய்தார் (கொல்லப் படாமலிருக்க என்ன செய்தார்?)" என்று நக்கலாகக் கேள்வி கேட்ட உறவுகளுக்காக கீழே இணைப்பு. https://hrp.law.harvard.edu/fellowships/visiting-fellowships/neelan-tiruchelvam-memorial-fellowship/ ஹார்வார்ட் சட்டக் கல்லூரியின் மனித உரிமைக் கழகம் இன்னும் நீலன் திருச்செல்வம் புலமைப் பரிசிலை அவர் நினைவாக வழங்கி வருகிறது. அந்த அமைப்பின் தளத்தில் இருக்கும் நீலன் பற்றிய விபரிப்பு: Neelan Tiruchelvam (1944-1999) was a Sri Lankan peace and human rights activist, lawyer, scholar and politician. Recognized nationally and internationally for his unyielding commitment to social justice and his efforts to end the Sri Lankan Civil War, Neelan Tiruchelvam was also a pioneering scholar of constitutional theory and minority rights. His illustrious career encompassed stations as Member of the Sri Lankan Parliament, Founding Director of the International Centre for Ethnic Studies, and Chair of the Council of Minority Rights Group International. One month before he was scheduled to join Harvard Law School as a Visiting Professor, Tiruchelvam was assassinated in Sri Lanka on July 29, 1999. During his life, Tiruchelvam had built deep connections with Harvard Law School, where he obtained his LL.M. in 1970 and completed his S.J.D. in 1973. He returned to Cambridge in 1986 as one of the first Visiting Fellows at the Human Rights Program (HRP), which had been created just two years before. While at HRP, Tiruchelvam delivered the Edward A. Smith Lecture about human rights in the context of ethnic conflict in Sri Lanka. On September 17, 1999, HRP organized a memorial service for Neelan Tiruchelvam at Harvard Law School. The memorial service proceedings are available on the HRP website.
  17. அமெரிக்காவின் மின்சார விநியோக வலைப்பின்னல், தொலை தொடர்பு போன்றவை உள்ளூர் நிறுவனங்களில் கைகளில் இருப்பது நல்லது. மருத்துவமனைகளின் தரவுகளைக் கூட பணயமாக ஹேக் செய்து திருடி வைத்துக் கொண்டு பணம் கறக்கும் ransomware கிரிமினல்கள் சீனா, வடகொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருக்கிறார்கள். அதிசயமான விடயம்: இந்த மூன்று நாடுகளிலும் தலைவருக்கெதிராக ஒரு வசனம் சொன்னாலே, தேடி வந்து பிடித்துப் போய் காணாமலாக்கி விடும் சட்ட இறுக்கம் இருக்கிறது. ஆனால், சைபர் கிருமினல்கள் சுந்ததிரமாக வாழ்வதும் இந்த நாடுகளில் தான். இது எதைக் காட்டுகிறது😂?
  18. மெட்வெடேவின் கூற்று, ரஷ்யா தற்போது பரப்பும் வரலாற்று மறுப்பு, திரிப்பு ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடு எனக் கருதுகிறேன். ரஷ்யாவின் பிறப்பிடம், தொட்டில் உக்ரைன் என்பது சரி. ஆனால், லெம்பேர்க் பிரதேசம் என்பது உக்ரைனின் கிழக்குப் பிரதேசங்கள் போலந்து, அவுஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆட்சிகளிடையே பந்தாடப் பட்ட போது இருந்த பெயர். அந்த 1900 இல் இருந்து 1991 வரையான பகுதியில் நிகழ்ந்தவை எல்லாம் "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" என்பது போல புரின் அணிக்கு மறந்து விட்டது😎. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது, இறுதி வரை மூன்று சோவியத் குடியரசுகள் ஒரு கூட்டமைப்பில் சேர்ந்து தொடர்வது பற்றி இறுதி வரைப் பேச்சு வார்த்தை நடத்தின: பெலாரஸ், உக்ரைன், கசாக்ஸ்தான், இவை தான் அந்த மூன்றும். இறுதியில், ஓரிரு நாட்களில் உக்ரைன் குடியரசின் மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளே பிரிந்து போக விரும்பி வாக்களித்த போது உக்ரைன் பிரிந்து போனது, ரஷ்யாவின் யெல்ட்சின் அதனை ஆதரித்தார். உக்ரைன் பிரிந்ததும், கசாக்ஸ்தான், பெலாரஸ் எனபனவும் பிரிந்து போக முடிவெடுத்தன. இதன் பின்னர், சோவியத்தின் கடன்களை யார் கட்டுவது, இந்த நாடுகளின் எல்லைகள், சோவியத் அணுவாயுதங்களை என்ன செய்வது ஆகிய விடயங்களில் பேச்சு வாரத்தைகளும், ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. ரஷ்ய சமஷ்டியின் யெல்ட்சின் இதிலெல்லாம் பங்காளியாக இருந்திருக்கிறார் (கொர்பச்சேவின் பதவி நிலை, சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் கலைக்கப் பட்டவுடன் சக்தியிழந்தைமையால் யெல்ட்சின் தான் ரஷ்யாவின் அதிகாரமிக்க தலைவராக இருந்தார்). இதையெல்லாம் வரலாற்று ஆவணங்களில் வாசித்தறிய பொறுமையில்லாத மக்களை, புரின் அணி நன்றாக ஏமாற்றுகிறார்கள்.
  19. இதை நீங்கள் உங்களுடைய தகவல் மூலத்தை இணைப்பதன் மூலமே நிரூபீக்கலாமென நினைக்கிறேன்? ஏன் தயக்கம்😎?
  20. என்ன மீண்டும் புதிய தியரியை வைத்து முதல் பக்கத்தில் இருந்து துவங்குவீங்கள் போல இருக்கு😂? ஐலண்ட் சொல்வது போல புலிகள் நடந்திருக்கா விட்டால் ஆனந்தராஜா, அமீர், யோகேஸ்வரன், நீலன் முதல் இறுதியாக இராஜதுரை வரை எப்படிக் கொலையானார்கள்?
  21. 🤣உண்மை வரலாறு? எது, வசி எழுதியதா?? ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். யாழுக்கு வெளியே , ஒரு 10 பேரைத் தெரிவு செய்து இந்த "உண்மை வரலாற்றை" ஒரு தடவை சொல்லிப் பாருங்கள். உங்களை எப்படிப் பார்வை பார்க்கிறார்கள் என்று குறித்துக் கொண்டு இங்கே வந்து சொல்லுங்கள். நீங்கள் கிட்டத் தட்ட ஒரு பிரம்மை (delusional) நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதுக்காக? ஒரு "மாசில்லாத அமைப்பாக புலிகள் இருந்தனர்" என்று காட்டும் ஒரு பயனற்ற முயற்சிக்காக. இந்தப் பிரம்மையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமென்கிறீர்கள்! அனேகமாக, புலிகளின் நல்ல பக்கத்தைக் கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை, இந்தப் பிரம்மையினால் ஏற்படப் போகிறது!
  22. சிரிப்பு நல்லது தான், அதற்காக நீங்கள் standup comedian ஆக நடந்து கொண்டிருப்பது இன்னொருவரின் மரணவீட்டில். இது உலகின் எந்த பண்பாட்டிலும் இல்லாத அருவருப்புத் தரும் ஒன்று! "ஒன்றாகப் பயணிப்போம்" என்று நேற்று அறிக்கை விட்ட விசுகர், உங்கள் கொமெடியை சீரியசாக மேற்கோள் காட்டியிருப்பதைக் கவனியுங்கள்😎! எனவே தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் deadpan comedy script ஐ! எங்களுக்கு சிரிப்பு, விசுகர் போன்றோருக்கு பிடித்துக் கொள்ள ஒரு கற்பனைக் கயிறு! ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!😂
  23. நானும் இதை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ன நடக்குமென்று. யாழ்ப்பாண பல்கலைக்கு, பரமேஸ்வரன் கோவிலில் தீபமேற்றி திருநீறு அணியாத ஒருவர் துணைவேந்தராக வர முடியாது. சில ஆண்டுகள் முன்பு, பேராசிரியர் சாம் தியாகலிங்கம் என்ற மிகத் திறமையான அமெரிக்காவின் ஹொப்கின்ஸ் பல்கலைப் பேராசிரியர் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த போது, "அவர் தன் திணைக்களத் தலைவரின் அத்தாட்சியைச் சமர்ப்பிக்கவில்லை" என்று விண்ணப்பத்தை நிராகரித்தார்களாம் -அமெரிக்கப் பல்கலையில் திணைக்களத் தலைவர் பதவியின் தன்மை பற்றித் தெரியாத பன்னாடைகள் தேர்வுக் குழுவில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி இது. இப்படி சக தமிழனுக்கே பாகுபாடு காட்டி ஆப்பு வைத்தால் சிங்களவன் வந்து ஆப்பு வைக்கும் போது ரசிக்கத் தான் முடிகிறது!
  24. ஒரு கைக்குழந்தைக்குத் தந்தை என்பதால், பிரபாகரனைக் கொல்ல முயன்றவரையே கொல்லாமல் மன்னித்து விட்டவர்கள், ஒரு தீர்வுத் திட்டத்திற்காக நீலனைக் கொன்றிருப்பார்களா என்று "ஒரு கதை" மூலம் கேட்கிறார்! உங்களுக்கு சிரிப்பூட்டினாலும் இனி இது தான் கதையாடல்-narrative😂: "புலிகள் இருந்த போதே அங்கே பல்வேறு குழுக்கள் தற்கொலைப் படையோடு சமகாலத்தில் இருந்திருக்கின்றன. அவை மொசாட், றோ, சி.ஐ.ஏ, கே.ஜி.பி (ஏன், பின் வீட்டு பொன்னம்மாக்கா ரீம்😎) என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்து கொலைகள் செய்திருக்கிறார்கள்! எல்லாம் அநியாயத்திற்கு புலிகள் தலையில் கட்டப் பட்டன! (விளங்குதா?? அவர்களும் இனி எந்த மூலையில் தான் போய் ஒழிப்பது, பாவம் விடுங்கோ!)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.