Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. 🤣😂 அனைத்துலக நீதிமன்றிற்கு இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் போய், தவணையும் கொடுக்கப் பட்டு, எல்லாம் யாழில் பதியப் பட்டிருக்கிறது என்கிறீர்களா? இது எனக்கு மட்டுமல்ல, பல வாசகர்களுக்கு நியூஸ்😎! எப்ப இதெல்லாம் நடந்தது பெருமாள்? எந்த நாடு கொண்டு போனது மனுவை?
  2. இது பல ஆண்டுகளாக நடக்கிற "வேஸ்ற் வெற்று" உரையாடல். இதற்கு பதில்கள் சொல்வதை விட கேள்விகள் கேட்டால் கம் மென்று போய் விடுவினம், எங்களுக்கும் நேரம் மிச்சம்! பெருமாள் மேலே சொன்ன சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு சுமந்திரன் போட்டதல்ல, சுமந்திரனின் முறைப்பாட்டினால் பொலிஸ் போட்டதும் அல்ல! பொலிஸ் புலனாய்வுப் பிரிவு போட்ட கிரிமினல் வழக்கு. இதைச் சுமந்திரன் போட்டதாகச் சொன்ன பெருமாளிடம், அதற்குரிய கோர்ட், பொலிஸ் முறைப்பாட்டு ஆதாரத்தைத் தரும்படி 2 ஆண்டுகள் முன்பு கேட்டிருந்தேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் - ஆள் எதையும் தேடுவதில் கில்லாடி, ஆனால் கண்டு பிடிப்பதில் அவ்வளவு சிறப்பானவர் அல்ல😂!
  3. இந்தக் கிரிக்கெற் பார்க்கவும், கூட்டத்திற்குப் போகவும் பணம் பெற்றுக் கொண்டது பற்றி ஏதாவது செய்திகள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? அல்லது கடந்த காலத்தில் ஒரு தமிழ் தரப்பு அமைப்பு பணம் பெற்றுக் கொண்டு மகிந்தவை வெல்ல வைத்தார்கள் என்பது போல ஒரு வதந்தியா? அறிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்😎.
  4. இது பெயர்களை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட சாதாரண குழப்பத்தினால் விளைந்ததென ஊகிக்கிறேன். இறந்த தாயின் முழுப் பெயரைப் பாருங்கள்: Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake சிங்களப் பெயர்கள் பரிச்சயமில்லாத கனேடியர்கள், இது ஒரு பெயர் என்று புரிந்து கொள்ளக் கஷ்டப் படுவர்.
  5. இப்போது முடியும் இந்த வட அமெரிக்க குளிர் கால சீசனில், இன்புழுவன்சா வைரஸ் கொஞ்சம் கூடுதலாக ஆட்களைத் தாக்கியிருக்கிறது, பல இளம் வயதினருக்கு நுரையீரல் அழற்சி வந்திருக்கிறது. எனக்கு, post-viral cough என்ற தொண்டை அழற்சி ஒரு மாதம் வரை இருந்தது. உங்களுக்கும் இன்புழுவன்சா தான் படுத்தியிருக்கிறதென நினைக்கிறேன்.
  6. ஜப்பான் பல வருடங்களாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வுக்கு பெருமளவு நிதி வழங்கி வருகிறது. JICA திட்டங்கள் பலவும் வடக்கின் மருத்துவ மனைகளில் புதிய கட்டிடங்கள் கட்டவும், வாகனங்கள் வாங்கவும் பயன்பட்டிருக்கிறதென நினைக்கிறேன். இது ஜப்பான் பொருளாதார அபிவிருத்தி என்ற இன்னொரு திட்டத்தின் மூலம் வருவதாகத் தெரிகிறது.
  7. இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பது இன்னும் நாம் இனவாதச் சிங்களவர்களின் தரத்திற்கு இறங்கி விடவில்லையென்று நிரூபிக்கிறது.
  8. பதிவிட்ட வைத்தியர், தன் தொழிலிலும் இதே அறிவலட்சியத்தோடு இருக்க மாட்டார் என நம்புவோம்😂. கீழே கனேடிய குடிவரவு தளத்தில் இருப்பதன் படி 2025 பெப்ரவரி வரை கனடாவை விட்டு வெளியேறாமலே வேலை அனுமதிக்கு, தொழில் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றிருக்கிறது: Ottawa, February 28, 2023—Foreign nationals who are in Canada as visitors and who receive a valid job offer will continue to be able to apply for and receive a work permit without having to leave the country. Visitors applying under this public policy who held a work permit within the last 12 months will also continue to be able to request interim work authorization to begin working for their new employer more quickly. Set to expire today, this COVID-era temporary public policy has been extended by 2 years, until February 28, 2025. https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/visit-to-work.html பி.கு: அறிவிப்பாளினியின் பேச்சு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஏற்ற இறக்கங்களோடு இருக்கிறது? இந்திய தொலைக்காட்சிகளைப் பின்பற்றுகிறார்களா?
  9. ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!
  10. ம்..இண்டைக்குத் தான் சுய ஆக்கங்கள் பக்கம் வந்து வாசிக்க ஆரம்பித்தால்..இப்படி ஒரு வயதுக்கு வந்தோருக்கான கதை போகிறது. இன்னும் முடிக்கவில்லை, மெதுவாகத் தொடர்கிறேன். மயில், பாம்பு எல்லாம் சதிராடுது😅..!
  11. ஓம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைத்து தண்ணீரைக் கூடக் குடிக்கலாம். Gatorade தான் குடிக்க வேண்டுமென்றில்லை. தேசிப்பழச்சாறும் நல்லது. முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.
  12. இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன். இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம். மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.
  13. பொது அறிவித்தல், மாநில அரசு அறிவித்தல்களில் தமிழைப் புறக்கணித்த உதாரணங்களைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் போக, தனியார் தயாரிப்பான மிளகாய் பொடி லேபலில் தான் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது, எனவே இதை தன் தீவிர ஆதரவாளர்களுக்கு தமிழுணர்வின் வெளிப்படுத்தலாகக் காட்டுகிறார். இது போன்ற பிரச்சாரங்களை "உணர்வுக்குத் தீனி போடும் அரசியல்- red meat politics" என்பர். செய்தியின் தலைப்பு, எடப்பாடியோடு டீல் போட பேச்சு நடப்பதாக. மிளகாய்ப் பொடி லேபலை ஒரு பக்கம் வைத்து விட்டு, எடப்பாடியின் அதிமுக இருந்த காலத்தில் தமிழ் மொழிக்கு என்ன நடந்தது, திமுக இருந்த காலத்தில் என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தால், மொழியை வியாபாரமாக்கியோர் யார் என்ற தெளிவு வரலாம்!
  14. நிச்சயமாக உத்தரவாதம் இல்லை. ஆனால், வயது குறைந்த பாவனையாளருக்கு யார் விற்கிறார்கள் என்று பார்த்தால் சட்ட விரோத விற்பனையாளர்கள் தான். இவர்களுக்கு இலாபம் இல்லாமல் அரசே சட்டத்திற்குட்படுத்தி பிசினசை எடுத்துக் கொண்டால், இவர்கள் வேறு எதையாவது விற்கப் போய் விடுவார்கள், எனவே பள்ளிகளுக்குள் கஞ்சா வருவது குறையலாம். இதை உறுதி செய்யும் தரவுகள் இன்னும் அமெரிக்காவில் இல்லை, ஆனால் தியரிப் படி இது சாத்தியம். கஞ்சாவை தினசரி எடுத்துக் கொண்டால் நிச்சயம் மூளையின் செல்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில், மூளையில் இருக்கும் உயிரியல் பாதைகளைத் தான் கஞ்சாவில் இருக்கும் cannabinoids பதார்த்தம் பாவித்து உச்சம் தருகிறது. வித்தியாசம் என்னவெனில், ஏனைய தீவிர போதைவஸ்துக்களான opioids போல overdose மரணங்கள் கஞ்சாவினால் நிகழ்வதில்லை, அடிமைப் படுத்தும் இயலுமையும் குறைவு. மற்றபடி எந்த போதையும் (அல்கஹோல், கஞ்சா, இணையம்..) வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பது உண்மை!
  15. இப்பெயர்களில் குழப்பம் இருக்கிறது: எலி என்பது Order Rodentia என்ற குடும்பத்தைக் குறிக்கிறது. சுண்டெலி தான் நாம் காணும் மிகச் சிறிய எலி (mouse , Mus musculus). இதற்கு மூஞ்சூறு என்றும் இலங்கையில் பெயர் இருக்கிறது. ஆனால், பெருச்சாளி என்றால் rat என்று தான் நினைக்கிறேன். வெள்ளெலியை mole என்பார்கள்.
  16. கஞ்சாவை மேற்கு நாடுகள் சட்ட பூர்வமாக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன: 1. கஞ்சாவில் இருக்கும் பதார்த்தங்கள் (THC etc.) அடிமைப் படுத்தும் வீரியம் (addiction) ஏனைய போதை வஸ்துக்களை விட மிகக் குறைவு. 2. கஞ்சாவினால் ஏற்படும் நீண்டகால உடலாரோக்கியப் பாதிப்பும் ஏனைய போதைகளோடு ஒப்பிடும் போது குறைவு. 3. சட்டங்களை மீறி இலகுவாக கஞ்சா விளைவிக்கப் பட்டு, தாராளமாகப் புளங்குகின்றது street drug வடிவில். இது கறுப்புச் சந்தை, வயது குறைந்தோர் கூட இதனால் நுகர வாய்ப்பிருக்கிறது. 4. இதையே அரச கட்டுப் பாட்டில் கொண்டு வந்து நுகர அனுமதித்தால், வயது குறைந்தோர் நுகராமல் கட்டுப் படுத்துவது இலகுவாக இருக்கும் (கறுப்புச் சந்தையின் மவுசு குறைந்தால்) 5. இவ்வளவு உப்புச் சப்பற்ற கஞ்சாவைக் கட்டுப் படுத்தும் முயற்சி, நிதி என்பன ஏனைய போதை வஸ்துக்களைக் கட்டுப் படுத்தப் பயன்படுத்தலாம்! overdose மரணங்களைத் தடுக்கலாம்!
  17. இதில் இருப்பவை எல்லாம் எலி அல்லவே? நியூ யோர்க்கில் பெருச்சாளி எனப்படும் rat தான் பிரபலம். ரயில் வண்டிக்குள் மாட்டுப் பட்டு ஓடித் திரிவது அணில் (squirrel), வாலைக் கவனியுங்கள்😂, அடர்த்தியான ரோமத்தோடு இருக்கிறது. சும்மா பல வீடியோக்களை ஒன்றாக்கி காசு பார்த்திருக்கிறார்கள், அல்லது அரசியல் வீடியோவோ தெரியாது! எலி வீட்டுக்குள் வராமல் இருக்க இரு இலகு வழிகள்: 1. வீட்டின் ஒவ்வொரு மூலையும் சுத்தமாக, உணவுப் பருக்கைகள் இல்லாமல் இருக்க வேண்டும். 2. வீட்டினுள் எலி நுழையக் கூடிய ஓட்டைகள் எல்லாம் அடைக்கப் பட வேண்டும். இவை இரண்டும் செய்தால், எலிக்கு ஒரு வீட்டில் எந்த பிசினசும் இருக்காது😂!
  18. மிளகாய்த்தூள் என்று இரண்டாம் வரியில் இருப்பது தான் பிரச்சினையாமா? 😂
  19. இந்தப் பறப்புப் பற்றி, அங்கே இருக்கும் உறவுகள் உங்களைப் போல காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்களா ? "அறம் சார் பணிவு-moral humility" என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விடயங்களைச் சுட்டிக் காட்டும் போது எந்த இடத்தில் இருந்து நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்ற புரிதலும், அதனால் தொனியில் அடக்கமும் வருவதையே அறம் சார் பணிவு என்கிறார்கள்.
  20. எல்லாம் பிஞ்சுக் குழந்தைகள். என்ன ஒரு மிருகத் தனமோ தெரியவில்லை! என்ன தான் நண்பர் வட்டத்தில் இருப்பவராக இருந்தாலும் வீட்டுக்குள் வசிக்க விடும் போது மிக அவதானம் தேவை எனக் காட்டும் ஒரு சோக உதாரணம் இது!
  21. சிறிலங்காவில் உங்கள் வளர்ச்சியும் கல்வியும் சிங்களவருக்கு வெள்ளையடித்தன என நினைக்கவில்லை. உங்கள் முன்னைய கருத்தும் (தூங்கில் தொங்கலாம்) அல்வையான் மேலே பூடகமாகச் சொல்லியிருக்கும் "உறவுகளின் நிர்வாணப் படத்தை விற்றுப் பிழைப்போர்" என்ற கருத்தும் நீங்கள் இருவரும் நீங்கள் வந்த பாதையையும், இருக்கும் நிலைமைகளையும் யோசிக்காமல் உணர்ச்சி மயமாகக் கருத்து வைப்பதாகக் காட்டுகிறது. கருத்து சுதந்திரம் என்ற வகையில் இவற்றைச் சொல்லலாம், ஆனால் moral humility என்றொன்று இருக்கிறதல்லவா? அதைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். புலிகளே யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏறிப் பறந்த இராணுவ ஹெலிகளில் யுத்தம் இல்லாத இந்த நாட்களில் சிறியோர் இளையோர் ஏறிப்பறப்பது அவ்வளவு கண்டனத்திற்குரியது என்கிறீர்களா?
  22. இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎? நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?
  23. அமெரிக்க ஜனாதிபதியை ஒலிம்பிக்கில் ஓடி பதக்கம் வெல்ல அல்லது திருக்குறள் மனனப் போட்டியில் வெல்ல அனுப்புவதானால் இவையெல்லாம் "முக்கிய பிரச்சினைகள்" தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்😂. ஆனால் இவையல்லவே அமெரிக்க அதிபரின் பணி? சக்கர நாற்காலியில் இருந்த றூஸ்வெல்ட், தீராத கீழ் முதுகு நோவில் இருந்த கெனடி, தொடர்ந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டவரான லிங்கன், இவர்களெல்லாம் அமெரிக்காவின் முக்கியமான காலகட்டங்களில் வெற்றிகரமாக நாட்டை வழி நடத்தியிருக்கிறார்கள். ஏனெனில், அதற்கேற்ப அமெரிக்க தலைமையும், அரச கட்டமைப்புகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகளையும், நிறுவனங்களையும், சட்டங்களையும் சிதைக்க முனையும் ட்ரம்பினால் தான் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பாதிப்புகள் இருக்கும். பைடனின் மறதியாலும், தடக்கி விழுகையாலும் நாட்டிற்கும், உலகிற்கும் பாதிப்புகள் இல்லை!
  24. உப ஜனாதிபதிக்காக நடுநிலை வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. ஏனெனில் உப ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் படி பெரிய பலம் கிடையாது. நிக்கி ஹேலிக்கு இன்னொரு வாய்ப்பு ஜனாதிபதி வேட்பாளராக வர இருக்கிறது, எனவே அதனாலும் அவர் ட்ரம்ப் அழைத்தாலும் போகப் போவதில்லை. இது என் ஊகம்!
  25. மேலே கருத்துக்களைப் பார்க்கையில் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போடும் அப்பாவிக் கோழிகள்"என்ற கோசானின் வாக்கியம் நினைவில் வருகிறது. ட்ரம்ப் வரக்கூடும். வந்தால், முன்னரை விட தீவிரமாக ஐரோப்பிய அமைப்புகளில் இருந்து அமெரிக்காவின் பங்களிப்பை வெட்டிக் கொள்வார். இதன் ஒரு அங்கமாக நேட்டோவில் அமெரிக்கப் பங்களிப்புக் குறைக்கப் படும். நேட்டோ இராணுவ ரீதியில் பலவீனமானால், அதனை பலப் படுத்தக் கூடிய ஒரு தலைமை நாடு இன்னும் ஐரோப்பாக் கண்டத்தில் இல்லை. புரின் உக்ரைனைத் தாண்டி பால்ரிக் நாடுகளையும் தட்டிப் பார்க்கக் கூடும். போலந்து, ஜேர்மனி கூட ஆக்கிரமிக்கப் படா விட்டாலும், மறைமுக அச்சுறுத்தல்களோடு போராட வேண்டிய நிலை வரலாம். ஆனால், இதெல்லாம் எங்கள் தமிழ் குடியேறிகளுக்குக் கவலை தரும் விடயங்களேயல்ல! ஆக மிஞ்சிப் போனால், இருக்கவே இருக்கிறது அமெரிக்கனின் Ramstein airbase தளமும், C-17 Globe Master உம்! ஒரு ஷொப்பிங் பையோடு போய் வரிசையில் நின்றால் ஏறிப் பறந்து இங்கால வந்து விடலாம்😂! பிறகு இங்க இருந்து "அமெரிக்க, ஏகாதிபத்திய, சுரண்டல் வாத..." என்று பொங்கி, உண்டு, உறங்கிக் கழிக்க வேண்டியது தான்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.